இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

இயக்கம் போட்ட எதிர்நீச்சல்கள்

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! இயக்கம் போட்ட எதிர்நீச்சல்கள்

வ்விடுதலை நாளேடு
கட்டுரை

[ஆரியத்தின் ஆணவப்பிடியாலும் மூடநம்பிக்கையின் முற்றுகையாலும் சிதைக்கப்பட்ட திராவிட இனத்திற்குப் புதுவாழ்வு தந்திட புறப்பட்ட நமது இயக்கம் பிறந்தநாள் தொட்டு பீடுநடை எடுத்துவைக்கும் இன்றைய நாள்வரை அது சந்தித்த அடக்குமுறைகள், ஆட்சியாளர்கள் அதன்மீது ஏவிய சட்டத்தின் தீய நாக்குகள் ஏராளம்! ஏராளம்!! அத்துனையும் எடுத்துரைத்தால் அது ஒரு நூலாகவே முடிந்துவிடும- இங்கு ஒரு சில மட்டும் எடுத்துக்காட்டிற்காக வைக்கப்படுகிறது.)

கருஞ்சட்டையும் தடை உத்தரவும்
பெரியார் ஈ.வெ. ரா. அறிக்கை
கருஞ்சட்டை பற்றி சர்க்காரின் தடை யுத்தரவு சம்பந்தமாகப் பெரியார் ஈ வெ. ராம்சாமி அடியிற் கண்ட அறிக்கையை விடுத்துள்ளார்.
‘நம் இயக்கத்தில், திராவிடர் கழகத்தில் உள்ளோருக்கு கருஞ்சட்டை அணிய வேண்டுமென்று வேண்டுகோள் விட்ட தானது, திராவிட சமுதாயத்துக்கு இருந்து வரும் சமுதாய இழிவு நீக்கிக்கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்கு ஆகும். இதைக் கழக அங்கத் தினர் பலரும் மற்றும் சில திராவிடர்களும் ஆணும் பெண்ணும் ஆதரித்து அணிந்து வருகிறார்கள்.

இந்தப்படியாக, கருஞ்சட்டை அணி பவர்களுக்கு எந்தவித நிபந்தனையோ, எந்த வித ரிஜிஸ்டரோ, சேனை போன்ற உடையோ, யூனிபாரமோ, அணிவகுப்போ, ஆயுதமோ மற்றும் இவை போன்ற ஓர் சேனைக்கோ, படைக்கோ, உள்ள பயிற்சிகளோ மேற்கொண்டது கிடையாது.
இருப்பினும் சென்னை அரசாங்கம் இதை ஒரு அமைப்பாகக் கருதிச் சட்ட விரோதமாக்கியிருக்கின்றது என்ற போதிலும், நான் திராவிடப் பொது மக்களுக்கு அடிக்கடி தெரிவித்து வருவது போல் இது விஷயத்தில் நம் கழக அங்கத்தினரும் திராவிடப் பொது மக்களும் பொறுமையைக் கையாண்டு சாந்தமும், சமாதானமுமாய் நடந்துவர வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். இதற்கு மாறாக எங்காவது பயிற்சி அணிவகுப்பு இருக்குமானால் அதைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும் என்பதைத் தவிர, இந்த உத்தரவினால் நமக்குள் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாகக் கருத வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.’
ஈ.வெ. ராமசாமி – சென்னை, 4-3-1948.
“திராவிட நாடு ” (அண்ணா) 7-3-1948 தலையங்கம்

தடை உத்தரவு
திராவிடப் பெருங்குடி மக்கள் பல காலமாகச் சமுதாயத் துறையில் மிகவும் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் முறையில், திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எல்லாரும் கருப்புச் சட்டை அணிந்துகொள்ள வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் ரிெயார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன் பேரில் இப்போது சில காலமாகத் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பலர், தங்கள் குறைபாட்டைத் தெரிவிக்கும் முறையில் கருப்புச் சட்டை அணியும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதனை, இப்போது சர்க்கார் ‘சட்ட விரோத ஸ்தாபனம்’ என்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கருப்புச் சட்டைக்கென ஒரு தனி ஸ்தாபனமே கிடையாது. திராவிடர் கழகத் திட்டங்களிலும் கருப்புச் சட்டை அணிவதை ஒரு ஸ்தாபனமாகக் கொள்ள வேண்டுமென்ற விதியும் கிடையாது. திராவிடர்கள் தங்களுக்குள்ள குறைகளைத் தெரிவிக்கும் முறையில், கருப்புச் சட்டை அணிவதை ஒரு அடையாளமாகக் கொள்ள வேண்டுமென்பதே அதன் நோக்கமாகும்.
கருப்புச் சட்டை அணிபவர்களுக்கென ஒரு தனிப் பயிற்சி முகாமோ. படை அணி வகுப்போ, ஆயுதம் தாங்கும் முறையோ, பலாத்கார முறைகளைக் கையாள வேண்டு மென்ற திட்டமோ எதுவும் கிடையாது.
திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் கருப்புச் சட்டை போட்டுக்கொள்ள வேண்டுமென்று, பெரியார் அவர்கள் எப் போது சொன்னாரோ, அன்றே சர்க்காருக்கும் இது சம்பந்தமாக எல்லாம் தெரிந்தே இருக்கும். ஆனால், இவ்வளவு காலமும் சர்க்கார் அது சம்பந்தமான நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல், இப்போது திடீரென்று கருப்புச் சட்டைப்படை என்பதாக ஒரு ‘ஸ்தாபனம்’ இருப்பதாகவும், அது, சட்ட விரோதமானதென்றும் கருதும்படியான நிலைமை ஏற்படக் காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஒரு சமுதாயம். தனக்குள்ள குறைகளைக் தெரிவிக்கக் கூடாதென்ற முறையில் ஒரு சர்க்கார் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாயின், அதனை ஜனநாயக அடிப்படையைக் கொண்ட சர்க்கார் என்று எப்படி கூற முடியும்? ஒரு சமுதாயம், தன்னுடைய குறைகளை எடுத்துக்காட்டி, அவைகளை நிவர்த்தி செய்து கொள்வது கூடத் தவறு என்பதைத் தானே சர்க்காரின் இந்த தடை உத்தரவு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இல்லையேல், எந்தவிதமான பலாத்காரச் செயலை யும் அடிப்படையாகக் கொள்ளாத கருப்புச் சட்டையினர்மீது சர்க்கார் நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?
கருப்புச் சட்டை அணிவது என்பது ஒரு ஒழுங்கு முறை; அதாவது தாங்கள் திராவிடர்கள், தங்களுடைய குறைகள் போக்கப்படவேண்டும், அவை போக்கப் படும் வரையில் துக்க அறிகுறியாகக் கருப்புச் சட்டை அணிந்துகொள்ள வேண்டுமென் பதைத் தவிர, கருப்புச் சட்டை அணிவதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றா லும், இதனை சர்க்கார் – ‘ஒரு சட்ட விரோத மான ஸ்தாபனம்’ என்று கருதக்கூடிய அளவுக்குக் கருப்புச் சட்டை அணிவதைப் பற்றிச் சர்க்கார் தெரிந்திருக்கிறதென்றால். யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு, இந்தக் காரியத்தைச் சர்க்கார் செய்திருக்கிற தென்று பொருள்படுமேயன்றி, உண்மை யாகவே சர்க்கார் கருப்புச் சட்டையைத் திராவிடர்கள் ஏன் அணிய முற்பட்டனர் என்பதனை அறியவோ, அல்லது அதன் அமைப்பு முறை எப்படி, என்னென்ன காரணங்களுக்காக அந்த முறை ஏற்பட்டதென்பதைத் தெரிந்து அதன்படி இந்தத் தடை உத்தரவை விடுத்துள்ளதென்று கூறவோ முடியாது.

பெரியார் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கருப்புச் சட்டை அணிவதன் காரணத்தை வெளிப்படை யாகக் கூறியுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணத்தையே, சுருப்புச் சட்டையைத் திராவிடர்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்று சொன்ன காலத்திலும் பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.
ஒரு பெரும் பொறுப்பைத் தன் மீது போட்டுக் கொண்டு, அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள ஒரு சர்க்கார் விஷய விளக்கம் இல்லாத முறையில் எதேச்சதிகார மனப்பான்மையோடு காரியங்களைச் செய்வது, பொது மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் இழப்பதற்கு அடிகோலுவதாகவே முடியும்.
எனவே, சர்க்காரின் இந்தப் போக்கைக் கண்டு, திராவிடர்கள் தங்கள் பொறுப்பை மறந்து, அமைதி குறைவுக்கும் கிளர்ச்சிக்கும் இடமளிக்காமல், தங்களுடைய பெரு தன்மையைக் காட்டிக்கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள்ளுகின்றோம்.

பெரியார் வீடும், “குடி அரசு” ஆபீசும்
சோதனை யிடப்பட்டது
3-3-1948 இரவு ஈரோட்டில், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் அவர்கள் – வீட்டைப் போலீசார் சோதனையிட்டுச் சில புகைப் படங்களை எடுத்துச் சென்ற தோடு, “குடிஅரசு” ஆபீசையும் சோதனை போட்டுச் சில பைல்களையும் எடுத்துச் சென்றனர்.
காஞ்சிபுரத்தில் சோதனை
3-3-1948இல் பெரிய காஞ்சிபுரம் திராவிடர் கழகத் தலைவர் தோழர் வி. கண்ணப்பர் அவர்களையும், தோழர் C.V.M.அண்ணாமலை அவர்களையும், உள்ளூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், சப்-இன்ஸ்பெக்டரும் சில கான்ஸ்டேபிள்களுடன் சந்தித்து, நகரிலுள்ள திராவிடர் கழகங்களைச் சோதனையிட்டு, கருப்புச் சட்டை சம்பந்த மான ரிக்கார்டுகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டுமென்று கேட்டார்கள். அவர்கள் ஆட்சேபனையில்லை என்று கூறவே, புத்தேரித் தெருவிலுள்ள திராவிடர் கழகத்தையும், பிள்ளையார்பாளையத்திலுள்ள திராவிடர் கழகத்தையும், சின்ன காஞ்சிபுரம் திராவிடர் மறுமலர்ச்சி கழகத்தையும் சோதனையிட்டுக் கருப்புச் சட்டைகளையும், கழக ரசீதுப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.
திராவிடர் ஆராய்ச்சிக்
கழகத்தில் சோதனை
சின்னக் காஞ்சிபுரத்திலுள்ள திராவிடர் ஆராய்ச்சிக் கழகமும் சோதனையிடப் பட்டு, கழக மினிட் புத்தகத்தைத் தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பா அவர்களிடமிருந்து வாங்கிச் சென்றனர்.
கருஞ்சட்டைக்குச் சர்க்கார் தடை உத்தரவு
பல இடங்களில் சோதனை
(7-8-1948 திராவிட நாடு)
2-3-1948இல் சென்னை சர்க்கார், இம் மாகாணத்திலுள்ள கருஞ்சட்டை ஸ்தாபனத்தையும், ராஷ்ட்ரிய சேவாதளத்தையும் தடை விதித்து, கிரிமினல் சட்ட திருத்தத் தின் 16ஆவது பிரிவின்கீழ் அறிக்கை விட்டுள்ளனர்.
நகரில் சோதனை
சென்னை சுங்குராமச் செட்டித் தெரு 6ஆம் எண்ணுள்ள கட்டிடத்தில் இருக்கும் “திராவிடன்” பத்திரிகாலயத்தைப் போலீசார் 2-3-1948 மாலை 4-30 மணிக்கு சோதனையிட்டு, சில கடிதங்களையும், “திராவிடன் ” பத்திரிகைப் பைலையும் எடுத்துச் சென்றனர்.
பார்க் டவுன், பொம்மு செட்டித் தெருவிலுள்ள தோழர் C.D.T.அரசு அவர் கள் வீட்டையும், வண்ணாரப்பேட்டை மாடசாமி நாடார் தெருவில் இருக்கும் தோழர் K.அண்ணாமலை அவர்கள் வீட்டையும், வட சென்னைத் திராவிடர் கழகத்தையும்,மயிலாப்பூர், பிராடீஸ் தெருவிலுள்ள தோழர் M.K.தங்கவேலர் அவர்களுடைய வீட்டையும். பெரிய மெட்டு ஏகாம்பர குமரகுரு தெருவிலுள்ள தோழர் K.ஆரியசங்காரன் அவர்கள் வீட்டை யும், சைதாப்பேட்டை, கூத்தாடும் பிள்ளை யார் கோயில் தெருவிலுள்ள திராவிட இளைஞர் கழகத்தையும் போலீசார் சோதனையிட்டு, சுருப்புச் சட்டைகளையும்,கழக மினிட் புத்தகங்களையும் எடுத் துச் சென்றனர்.
கோவில்பட்டியில்
2.-8- 1948இல் காலை 4 மணிக்கு D.S.P. அவர்களும், சர்க்கின் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டேபிள்களும் கோவில்பட்டியி லுள்ள திராவிடர் கழகர் செயலாளர் தோழர் S. அருணாசலம் வீட்டையும், தோழர் வள்ளமுத்து பால்ராஜ் வீட்டையும் சோதனை செய்து, திராவிட கழக சம்பந்தமான புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.
மதுரையில்
3-3-1948இல் மதுரையிலுள்ள திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சோதனை செய்ததோடு, தோழர்கள் செந்தியப்பன், எஸ் முத்து, எஸ். பழனிவேலு, கே.எஸ். இராசமான், எம். எஸ். இராமய்யா, ஆ. சங்காய்யா. தங்கராஜ். ல.வ.கிருஷ்ணன் ஆகியோரைப் போலீஸ் அழைத்துச் சென்று, கருப்புச் சட்டை சம்பந்தமாக விசாரித்த பின்னர் விட்டு விட்டனர் என்று தெரிகிறது.
திருச்சியில்
2-3-1948 இரவு. திருச்சியிலுள்ள ஜில்லாத் திராவிடர் கழகக் காரியதரிசி தோழர் எஸ். பிரான்ஸிஸ் வீட்டை ரிசர்வ் போலீசார் சோதனையிட்டு. கருப்புச் சட்டைகளும், அங்கத்தினர்கள் சேர்க்கும் பாரங்களையும் எடுத்துச் சென்றனர்.
பொன்மலையில்
2-3-1948இல் இரவு 12-மணிக்கு பொன் மலைத் திராவிடர் வாலிப கழக அங்கத்தினர் தோழர் கைலாசம் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர்.
சேலத்தில்
3-3-1948இல் சேலம் D. S. P. அவர்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டையிலுள்ள சுய மரியாதைச் சங்கத்திற்கு வந்து, கருப்புச் சட்டை சம்பந்தமான ரிக்கார்டுகள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை யிட்டதில், அது சம்பந்தமாக ஒன்றுமே இல்லையென்று ரிப்போர்ட் எழுதிக் கொண்டு போய் விட்டனர்.
அரிசிப்பாளையத்தில்
3-3-1948இல் சேலம் அரிசிப்பாளையத்திலுள்ள திராவிடர் கழகத்தைச் சோதனையிட்ட போலீசார், அங்கு எந்தவிதமான ரிக்கார்டுகளும் கிடைக்கவில்லையென்று ரிப்போர்ட் எழுதிக்கொண்டு போய் விட்டனர்.
விருதுநகரில்
3-3-1948இல் விருதுநகரிலுள்ள தோழர்கள் ஏ. வி. பி. ஆசைத்தம்பி. என். ராமசாமி. வி. ஏ. எம். வெள்ளையப்பன், பி. இரத்ன சாமி ஆகியோர்களின் வீடுகளைச் சோதனையிட்டதில், தோழர்கள் ஆசைத் தம்பி. இராமசாமி ஆகியோர் வீடுகளி லிருந்து மட்டும் சில கடிதங்களைக் கைப் பற்றிச் சென்றனர்.
கடலூரில்
3-3-1948இல் கடலூர் ஓ.டி. யிலுள்ள பகுத்தறிவுக் கழகத்தைச் சோதனையிட்ட போலீசார், கழகத் தலைவர் தோழர் எம்.கே. வேலு அவர்கள் பெயரையும், செயலாளர் தோழர் பி. ஏ. இளங்கோ அவர் கள் பெயரையும் குறித்துக்கொண்டு சென்றனர் .
வேலூரில்
4-3-1948இல் வேலூரிலுள்ள தோழர்
வி.திருநாவுக்கரசு அவர்கள் வீட்டைப் போலீசார் சோதனையிட்டு, சில கருப்புச் சட்டைகளை எடுத்துச் சென்றதோடு, தோழர் சி.பி. சின்னராசு அவர்கள் வீட் டையும் சோதனையிட்டு, கருப்புச்சட்டை யையும், “தீப்பொறி” பத்திரிகையையும் எடுத்துச் சென்றனர்.
செங்கற்பட்டில்
4-3-1948 செங்கற்பட்டிலுள்ள தோழர் எம்.சின்னையாஅவர்கள் வீட்டை போலீசார் சோதனையிட்டு, அங்கு எதுவும் கிடைக்காமல் போகவே, பிறகு தமிழர் உணவு விடுதியிலுள்ள ஒரு அறையைச் சோதனையிட்டதில், ஒரு கருப்புச் சட்டையையும் சில புத்தகங்களையும்’ எடுத்துச் சென்றனர்.
சோழவந்தானில்
4-3-1948இல் சோழவந்தானிலுள்ள தோழர் T. ஆவுடையப்பன் அவர்கள் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஆலந்தூரில்
4-3-1948இல் ஆலந்தூரிலுள்ள திரா விடர் கழகச் செயலாளர் தோழர் எம். கண்ணப்பன் அவர்கள் வீட்டைச் சோதனையிட்டதில், போலீசார், கருப்புச் சட்டைகளையும் கழகக் கொடிகளையும் சந்தாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.
துறையூரில்
3-3-1948இல் துறையூரில் தோழர்கள் தூ.வி. நாராயணன் அவர்கள் வீட்டையும், டி. எம். பாலசுந்தரம் வீட்டையும், கு.கிருஷ்ணசாமி வீட்டையும், டி.ஆர். வீரண்ணன் வீட்டையும் சோதனையிட் டனர்.
திருப்பூரில்
3-3-1948இல் திருப்பூர்த் திராவிடர் கழகத்தைப் போலீசார் சோதனையிட்டு, அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று எழுதிக்கொண்டு போய் விட்டனர்.
திண்டிவனத்தில்
4-3-1948 திண்டிவனத்திலுள்ள திராவிடர் கழகத்தையும், தோழர்கள் அப் பாண்டகாதன், பழனி ஆகியவர்கள் வீடுகளையும், சோதனையிட்டு கழக சம்பந்தமான புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.
வாணியம்பாடியில்
போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தனது பரிவாரத்துடன் வாணியம்பாடி ‘திராவிடர்கழகம் கட்டிடத்தில் சோதனை செய்தார். அவ்விடமிருந்து யாதொன்றும் பறிமுதல் செய்யப்பட வில்லை. அதன் பிறகு மாலை 5 மணிக்கு தோழர் சி.கோவிந்தராஜன் வீட்டில் சோதனை போடப்பட்டதில் ஒன்றும் வில்லை. கிடைக்க
விழுப்புரத்தில்
விழுப்புரம் டாக்டர் தியாகராசன் வீடு – போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மூவர், போலீஸ் கான்ஸ்டேபிள் சிலருடன் சோதனை இடப்பட்டது. கழக சம்பந்தமான ரசீதுகள், சில கடிதங்கள், மாநாட்டு சம்பந்தமான குறிப்புகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். 1-15 மணி நேரம் சோதனையிட்டார்கள். நடராசன் வீடு சோதனை இடப்பட்டது; ஒன்றும் கிடைக்கவில்லை.
ப.நடராசன் வீடும் சோதனையிடப்பட்டது.
இராசிபுரத்தில்
3-3-1948 இரவு சுமார் 7 மணிக்கு இராசிபுரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், ‘பெரியார் மாளிகை” என்ற வீட்டுக்கு வந்து இயக்க கமிட்டி உறுப்பினர்கள் யார் யார் என்பதை விசாரித்துச் சென்றார்.
சேலம் குகையில்
சேலம் – குகை திராவிடர் கழகத்தை 3-3-1948இல் சேலம் நகர போலீஸ் அதிகாரி கள் சோதனையிட்டனர். இயக்க புத்தகங் களும் பத்திரிகைகளும் மட்டும் இருந்தன. ஒன்றும் எடுத்துக்கொண்டு போகப்பட வில்லை.
தர்மபுரியில்
தருமபுரி நகர திராவிடர் கழக தலைவர் திரு.
பி.பொன்னுசாமி வீட்டையும், அச்ச கத்தையும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
திராவிடர் கழக மினிட் புத்தகத்தையும் சில கழக மீட்டிங் விளம்பரத் துண்டு களையும் எடுத்துச் சென்றனர்.
சிதம்பரத்தில்
4-3-1948 காலை 8-மணிக்கு சிதம்பரம் திராவிடர் கழகத்தை சோதனை செய்வ தாய் போலீசார் ‘டவுன் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எம்.கே.சுந்தரம் வீட்டையும், பக்கத்தில் 4 மைலில் உள்ள சாலியந் தோப்பு கிராமத்தில் சிதம்பரம் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கு. கிருஷ்ணசாமி வீட்டையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதிய சகாக்களுடன் வந்து சோதனைபோட்டு, விசாரித்துச் சென்றார்கள். யாதொரு ஆட்சேபகரமான பொருளும் கிடைக்கவில்லை.


செவ்வாய், 2 ஜூன், 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 16

June 2, 2020 • Viduthalai • 
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

இந்திப் பெயர் அழிப்பு போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாதப் போக்கை உணர்ந்த பெரியார் உத்தியை மாற்றிக் காட்டினார். 1955 ஆகஸ்டு 1 அன்று இந்திய தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இப்போது அரசாங்கத்திற்கு வந்தது சிக்கல். ஏற்கெனவே பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் போராட்டத் திற்குப் பெயர் கொடுத்திருந்தார்கள். அவர்களைக் கைது செய்து வழக்குப் போட வேண்டும் அல்லது மொழி விஷ யத்தில் அரசாங்கம் இறங்கி வர வேண்டும். காமராஜரை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தார் பெரியார். தனது ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க தமிழகத்தில் இந்தி இனி தேர்வுக்குரிய பாடமாக இருக்காது என்று அறிவித்தார் முதல்வர் காமராஜர். அதாவது இந்தி படிப்பார்கள் மாணவர்கள், ஆனால் பரீட்சை எழுத மாட்டார்கள். 1967 வரை இந்த நிலை இருந்தது, அண்ணா முதல்வரானதும் அதுவும் ஒழிந்தது. இப்படி பிராமணியத்தின் மொழிக் கொள்கைக்குத் தமிழகத்தில்தான் சரியான அடி கிடைத்தது.
ராமன்படம் எரிப்புப் போராட்டம்
1956ல் ராமன் படத்தை எரித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் பெரியார். ராவணன் கொடும்பாவியை வடக்கே எரிப்பார்கள். இவர் போட்டியாக ராமன் படத்தை எரித்தார். ராவணனை சகல கேடுகளின் பிம்ப மாக ஆக்கி, அவனது எரிப்பை நியாயமான செயலாகப் பொதுப் புத்தியில் ஏற்றி வைத்திருந்தார்கள் பிராமணிய வாதிகள். இவரோ அதை மாற்றப் பார்த்தார். பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி சொல்லி வைத்து நிலை நிறுத்தப்பட்ட விஷயத்தை இவர் சிதைக்க முனைந்தார். வால்மீகி ராமாயணத்திலிருந்து ராமனின் உண்மை முகத்தை வெளிப்படுத்தப் பார்த்தார். இதே ஆண்டில் அவர் பேசிய பேச்சு இது
“ராமாயணம் அவரவர் ஜாதிகளையும் பிரிவுகளையும் தானே காட்டுகிறது? ஒரு இடத்தில் அனுமார் ராமன் காலில் விழுகிறான். ராமன் அனுமானைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். நீயோ ஒரு பிராமணன், நான் ஷத்திரியன். என் கால்களில் நீ வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன் என்று கூறுகிறான். ராமன் அயோத்தியிலிருந்த காட்டுக்குப் புறப்படும் சமயம் ‘என் பணத்தையும் சொத்துக்களையும், என்னிடத்தில் இப்பொழுது இருக்கும் மாடுகளையும் கொண்டு வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன்’ என்பதாகச் சொல்கிறான். சீதை ‘என் நகைகள் முழுவதையும் கொண்டு வாருங்கள். பிராமணனுக்குக் கொடுத்துவிட்டுப் போனால் புண்ணியம்‘ என்பதாகச் சொல்லுகிறாள். சூர்ப்பனகை ‘என்னைத் திருமணம் செய்து கொள்’ என்று கேட்கும்பொழுது ‘நீ ஒரு ஜாதி, நான் ஒரு ஜாதி. எப்படித் திருமணம் செய்து கொள்வது? என்று கூறுகிறான். ஒரு இடத்தில் தாடகை மகனை லட்சுமணன் கொன்றுவிட்டு ராமனிடம் இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். அதற்கு ராமன் ‘சூத்திரனைத்தானே கொன்றாய்? அதனால் பாவமில்லை, கவலையை விடு’ என்று கூறுகிறான். சம்பூகன் ஒரு சூத்திரன். தவம் செய்ய உரிமையில்லை என்று ராமன் கூறி கண்டங்கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணா சிரம தர்மம் தாண்டவமாடுகிறது. இப்படி இருக்கும் ராமா ணயத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன தப்பு?”
ராமன் பெயரைச் சொல்லி பின்னாளில் பிராமணிய வாதிகள் மிகப்பெரிய கலவரங்களை உருவாக்கி, அரசி யல் ஆதாயம் அடைந்ததை நினைக்கும் போது அந்தப் புனித பிம்பத்தை உடைக்க தன்னால் முடிந்த அளவுக்குப் பெரியார் முயன்றது வரலாற்றில் குறிக்கத் தக்கது. இத்தகைய துணிச்சலான செயலை இந்தியாவில் வேறு யாரும் அவரது காலத்தில் செய்ததாகத் தெரியவில்லை.
“பிராமணாள் ஹோட்டல்” ஒழிப்பு
அந்த நாளில் ஹோட்டல் என்றாலே பிராமணர்களால் பிராமணர்களுக்காக நடத்தப்படுபவையாகவே இருந் தன. பெயரும் “பிராமணாள் ஹோட்டல்” என்பதாகவே இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு சட்டபூர்வமாகத் தீண் டாமை ஒழிக்கப் பட்டிருந்தாலும், சகல ஜாதியினருக்கும் உணவு விற்போம் என்று சொல்லி கடை நடத்த உரிமம் பெற்றிருந்தாலும் பெயர் என்னவோ “பிராமணாள் ஹோட்டல் ”தான்! இது வெளிப்படையான பிராமணிய மாக இருந்தது. இப்படி பெயர் இருக்கக் கூடாது, அதை நீக்க வேண்டும் என்று சொல்லி 1957ல் மறியல் போராட்டம் நடத்தினார் பெரியார். இங்கே மாமிச உணவு கிடைக்காது, மரக்கறி உணவே கிடைக்கும் என்பதைச் சுட்டவே இந்தப் பெயர் என்றார்கள் ராஜாஜி உள்ளிட்ட பிராமணிய வாதிகள். அப்படியென்றால் மரக்கறி உணவுக் கடை என்றே போடலாமே என்று பதில் அறிக்கை விடுத்தார் பெரியார். அந்த அறிக்கையில் (9-5-1957 விடுதலை) இப்படிக் குறிப்பிட்டார். “இப்போது இங்கு உரிமை பற்றிய தகராறு இல்லை, சொல்லைப் பற்றிய தகராறுதான் இருக்கிறது. அந்தச் சொல் மற்றவர்களை (திராவிடரை) இழிவு படுத்துவதாக இருக்கிறது என்று சொன்னால் ஏன் அதை மாற்றிவிடக் கூடாது என்றுதான் கேட்கிறேன்? இதற்காக ஏன் தகராறு நடக்க வேண்டும்? இந்தத் தகராறை விஷமத்தனம் என்று கூறுவதானால் இதை எதிர்ப்பதை அயோக்கியத்தனம் என்றுதானே கூற வேண்டும்? ஓட்டல் முதலாளிகளும், பார்ப்பனப் பத்திரி கைகளும் பிராமணாள் என்று போட்டுக் கொள்ளத் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதாக ஒரு வார்த் தையும் சொல்லவில்லை, ஒரு குறிப்பும் காட்டவில்லை. அதனால் அதை எடுத்துவிடச் சொல்லுவது சட்ட விரோ தமோ, உரிமை விரோதமோ ஆவதில்லை”.
இதுவும் வெற்றிகரமாக முடிந்த ஒரு போராட்டமாகும். தமிழ்நாட்டில் அநேகமாக அனைத்து “பிராமணாள் ஹோட்டல்களும்” விரைவில் மறைந்தன, அதாவது அந்தப் பெயர் மறைந்தது. சென்னை திருவல்லிக் கேணியில் ஒரு ஹோட்டல் முதலாளி மட்டும் மிகப் பிடி வாதமாக இருந்தார். அங்கு விடாமல் தி.க.வினர் பன் னாட்கள் மறியல் செய்து, கைதானார்கள். முதலில் மறியல் செய்தது பெரியார். சுமார் 1500 பேர் வரைக் கைதாகி மாதக்கணக்கில் சிறைத்தண்டனை பெற்றார்கள்.
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம்
ஜாதிக்குப் பாதுகாப்பளிக்கும் இந்திய அரசியல மைப்புச் சட்டப் பகுதியை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நவம்பர் 26ல் எரிப்பது என்று முடிவு செய்தார் பெரியார். 1957 நவம்பர் 26ல் நடைபெற்ற இந்த எரிப்புப் போராட் டத்தில் சுமார் பத்தாயிரம் தி.க.வினர் பங்கு கொண்டார்கள். அதில் 2884 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு மாதக்கணக்கு முதல் ஆண்டுக்கணக்கு வரை தண்டனை தரப்பட்டது. சிறையிலே இருவர் உயிர் இழந்தனர், நோயுடன் விடுதலையாகி சில நாட்களிலேயே 20 பேர் மாண்டார்கள். நீண்டகாலத் தண்டனை பெற்றதால் வாழ் வில் பலர் நலிவுற்றார்கள். ஜாதி ஒழிப்புக்காக இப்படியொரு போராட்டம் நடத்தி, இத்தனை பேர் சிறையில் வாடியது இதுவே இந்தியாவில் முதல் நிகழ்வாக இருக்கலாம்.
“இந்த அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு தந்திருக்கிறான். அடிப்படை உரிமைகள் என்ற பகுதியில் அவனவன் ஜாதிப்படி வாழ, ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ள, ஜாதியை நிலைக்க வைக்க அரசாங்கம் பாது காப்பளிக்கிறது. இந்தச் சட்டத்தை ஏற்படுத்தியவன் காங்கிரஸ்காரன்தான். அதுவும் நமக்கெல்லாம் வோட் வராததற்கு முன்னே ....... இந்திய அரசமைப்புச் சட்டக்குழு உறுப்பினர்கள் - 1) அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (பார்ப்பனர்) 2) டி.டி. கிருஷ்ணமாச்சாரி (பார்ப்பனர்) 3) என். கோபாலசாமி அய்யங்கார் (பார்ப்பனர்) 4). கே.எம். முன்ஷி (பார்ப்பனர்) 5) டாக்டர் அம்பேத்கர் (ஆதி திராவிடர்) 6) முகமது சாலுல்லா (முஸ்லிம்)... ‘சூத்திரர்’ என்று கூறப்படுகின்ற மக்களின் பிரதிநிதிகள் அறவே இல்லாமல், 6 பேர்களில் 4 பேர் பார்ப்பனர்களாகவே கொண்டு மற்றும் இரு இனத்தின் பிரதிநிதிகளுக்கும்கூட விலை கொடுத்துவிட்டு செய்து கொண்டதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்“
அப்படியெல்லாம் அந்த இரு இனங்களுக்கு கூடுதல் சகாயம் தரப்படவில்லை என்பதை அறிவோம். ஆனால் சூத்திரர்களுக்கு - பிற்படுத்தப்பட்டோருக்கு - துரோகம் இழைக்கப்பட்டது என்பது உண்மைதான். திருத்தியமைக் கப்பட்ட நகல் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியது இந்த ஆறு பேர்தான், அதில் நால்வர் பிராமணர்கள் என்பது உண்மைதான். ஆனால், அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலோடுதான் இது சட்டமானது. இதில் “அடிப்படை உரிமைகள்” எனும் பகுதியில் இந்தியக் குடிமக்களுக்கு மத உரிமை தரப்பட்டுள்ளது என்பதையும், சரத்து 26இல் ஒவ்வொரு மதப் பிரிவும் “தனது மத விவகாரங்களைப் பொறுத்தவரை தானே நிர்வகித்துக் கொள்ளலாம்“ என்று கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிவோம். இது சகல மதங்களுக்கும் பொருந்தக் கூடியது. சிக்கல் எதில் வந்தது என்றால் இந்து மதத்தைப் பொறுத்தவரை அதன் ஓர் அம்சமாகச் சாதியத்தை நீதி மன்றங்கள் ஏற்றது. அப்படித்தான் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பதை அவை அங்கீகரித்து வந்தன. இதை மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது அல்லது உரிய விளக்கங்கள் தர வேண்டியிருந்தது. இதன்பால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த எரிப்புப் போராட்டத்தை நடத்தினார் பெரியார்.
.- தொடரும்

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 15

May 31, 2020 • Viduthalai • 
பிராமணியத்திற்கு இரட்டை அடி. ராஜாஜி பதவி இழந்தார்,  வருணாசிரமக் கல்வி முறை ஒழிந்தது

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

   1951 - 52   1952 - 53   (ஆச்சாரியார் மெடிக்கல் கல்லூரிகள்      உத்தரவுப்படி)
பார்ப்பனர்   -   63  -  104 
ஜாதி இந்துக்கள்  -   130  -  56
மற்றவர்கள்   -   125 -  158
எஞ்சினியரிங் கல்லூரிகள் 
பார்ப்பனர்  -   85 - 177
ஜாதி இந்துக்கள்   -  138  -  50
மற்றவர்கள்   -  370 -  37
“அதாவது பார்ப்பனர்கள் 48%. இதற்கு முந்திய ராஜியத்தில் பார்ப்பனருக்கு 23% தான் கிடைத்தது. பார்ப்பனர் 100க்கு 3 பேர்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கட்டும்‘’
உயர் கல்வித்துறையில் இப்படி வருணாசிரமத்தைத் திட்டமிட்டு புகுத்திய ராஜாஜிதான் தொடக்கக் கல்வி யிலும் கை வைத்திருந்தார். அதுமட்டுமல்ல இடைநிலைக் கல்வியிலும் திருகுதாளம் செய்திருந்தார். “விடுதலை” யில் (10.6.53) வந்த ஒரு செய்தி அந்த உண்மையைச் சொன்னது.
“எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 31 என்று அறிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டில் 100க்கு 42 ஆக இருந்தது. இந்த ஆண் டில் குறைந்ததற்குக் காரணம் என்ன? சென்ற ஆண்டில் ‘செலக்ஷன்’ என்ற பன்னாடை முறை இல்லை. ஆனால் இந்த ஆண்டில் உயர்திரு ஆச்சாரியார் அவர்களின் அக்கிரகார லீலைகளில் ஒன்றாக இந்த வடிகட்டும் முறை புகுத்தப்பட்டது”.
பன்வாடை என்றால் வடிகட்டும் துணி, அதைக் கொண்டு வடிகட்டி பலரையும் தூக்கி எறிந்து விடுவார்கள், அதனால்தான் இந்த ‘செலக்ஷன்’ முறைக்கு இந்தப் பெயர் சொல்லி அழைத்தது இந்த எடு, பள்ளியில் சேருகிற சகலரையும் பரீட்சை எழுத அனுமதிப்பதில்லை இந்த முறை. இடையிலேயே எதோவொரு அளவுகோலை வைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள், இப்படிப் பலரது வாழ்வும் பாழாக்கப்பட்டது. இப்படித்தான் பள்ளி யில் சேர்ந்தவர்களில் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கைக் குறைந்து போனது. இப்படியாகப் பல வகைகளிலும் சூத்திரர்கள் - பஞ்சமர்களின் கல்வியைப் பாழாக்குகிற வேலையில் இறங்கியிருந்தது ராஜாஜி சர்க்கார், சுதந்திர இந்தியாவில் பிராமணரல்லாதாரின் கல்வி உரிமையை வெட்டுகிற பல கட்டாரிகளைக் கண்டு பிடித்து வீசினார் பக்கா பிராமணியவாதியாகிய ராஜாஜி.
முடிவில் அடிமரத்தில் வெட்டரிவாளை வீசினார். 1953 ஜூன் 18  முதல் குலக்கல்வித் திட்டத்தை நடை முறைப் படுத்தியே விட்டார். முதலில் மைனர் பஞ்சாயத்துப் பிரதேசங்களுக்குத்தான் இந்தக் கல்வி முறை என்று சொல்லி வந்தவர், இப்போது மேஜர் பஞ்சாயத்துப் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றார். ஆக, கிராமப் பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் இந்தக் கல்வி முறை! இதிலேயே ஓரவஞ்சனை தெரிந்தது. நகர்ப்புறத்தாருக்கு ஒருவகைக் கல்வி, கிராமப்புறத்தாருக்கு வேறுவகைக் கல்வி! நகரத்திலுள்ள பள்ளிப் பிள்ளைகள் 6 மணி நேரம் தினம் படிப்பார்கள், கிராமத்திலுள்ள பள்ளிப் பிள்ளைகள் 3 மணி நேரம் மட்டுமே படிப்பார்கள்! இதென்ன கொடுமை? கல்லூரி அனுமதியிலும், படிப்பிலும் கிராமத் துப் பிள்ளைகளால் நகரத்துப் பிள்ளைக ளோடு எப்படிப் போட்டி போட முடியும்? நகரத்து உயர்சாதி மாணவர்களே முன்னேறிக் கொண்டு போவார்கள். பச்சையான பிராம ணியம் ராஜாஜியின் இச்சையாக வெளிப்பட்டது.
குலக்கல்வித் திட்டம் ஒழிந்தது
இப்படிப்பட்ட சூழலில்தான் ஜூலை 14 அன்று சட்டசபை முன்பு மறியல் போராட்டம் நடத்தியது தி.க. “விடுதலை” ஆசிரியர் குருசாமி, வ. வீராசாமி எம்.பி., 6 பெண்கள் உள்ளிட்ட 80 பேர் கைதானார்கள். ஆயிரக் கணக்கானோர் அங்கு திரண்டு நின்று இவர்களுக்கு ஆத ரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து ராஜாஜி வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது தி.மு.க. அதற்கும் முன்னதாக அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட் டார்கள். அந்தச் செய்தியையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது “விடுதலை”.
தி.மு.க. வின் மும்முனைப் போராட்டத்தில் தூத்துக் குடியில் போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் 9 பேர் அநியாயமாகப் பலியானார்கள். 50 பேர்க ளுக்கு மேல் படுகாயம் பட்டார்கள். பல நூறு பேர் கைதா னார்கள். இதையும் ஆவேசத்தோடு வெளியிட்டது. “விடு தலை” என்பது மட்டுமல்லாது, இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்து பெரியார் வலுவான அறிக்கையும் வெளியிட்டார். தி.க.விலிருந்து தி.மு.க. பிரிந்து போனதிலிருந்து இரு அமைப்புகளுக்கும் இடையே இயல்பாகவே மிகுந்த கசப்புணர்வு இருந்தது. ஆனால் குலக்கல்வி எதிர்ப்பு எனும் பொது விஷயத்தில் பெரியார் தி.மு.க.வின் போராட்டத்தையும் உற்சாகத்தோடு ஆதரித்தார் என்பது குறிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஜூலை 24அய் கண்டன நாளாகக் கடைப்பிடித்தார் பெரியார். அன்று சென்னை கடற்கரை யில் பெரியார் முழங்கினார். அவரது பேச்சைக் கேட்க லட்சம்பேர் கொண்ட ஊர்வலம் நடைபோட்டது என் கிறது “விடுதலை” (25-7-53). குலக்கல்வித் திட்டம் வாபஸ் பெறப்படும் வரைப் போராட்டம் ஓயாது என்றார் அந்தச் சமூகப் போராளி.
மெய்யாலும் ஜூலை 20 முதல் தமிழகத்தின் பல ஊர்களிலும் பல பள்ளிகள் முன்பு மறியல் கிளர்ச்சி நடை பெற்றது. இதற்கு மாணவச்சிறார்களும் ஒத்துழைத்தார்கள். நூற்றுக்கணக்கான தி.க.வினர் சிறையில் அடைக்கப் பட்டார்கள். சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டது என்றது “விடுதலை” (28-7-53).
இப்படிப்பட்ட பின்புலத்தில்தான் குலக்கல்வித் திட்டத்தைக் கைவிடக் கோரும் தீர்மானம் சட்டசபையில் முன்மொழியப்பட்டது. முன் மொழிந்தவர் கம்யூனிஸ்டு கேபி. கோபாலன். இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 138 வாக்குகளும், எதிராக 138 வாக்குகளும் பதிவாயின; சமநிலை. சபாநாயகர் சிவஷண்முகம்பிள்ளை தீர்மானத் திற்கு எதிராக வாக்களித்து அதைத் தோற்கடித்தார். அப்படியும் விடவில்லை எதிர்க் கட்சியினர். இன்னொரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். அது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்து, நிபுணர்கள் குழுவின் பரிசீலனைக்கு விடுமாறு கூறியது. இது காங்கிரசிலிருந்த அதிருப்தியாளர் களுக்கும் வசதியாக இருந்தது. ஆகவே தீர்மானத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும், பாதகமாக 137 வாக்குகளும் விழுந்து தீர்மானம் நிறைவேறிவிட்டது.
அரசுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி கோரியது. இதற்கு முதலமைச் சரின் பதில் என்ன தெரியுமா? “அது ஒரு சிபாரிசுதானே தவிர வேறல்ல” என்று சொன்னார். இது சர்வாதிகாரப் போக்கு என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் நாகிரெட்டி, கல்யாணசுந்தரம், கே.பி. கோபாலன் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டார்கள்.
இந்தக் கட்டத்தில் - 1953 அக்டோபர் 1இல் தமிழகத்திலிருந்து ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தது. இனி ஆங்கிலம் தெரிந்தவர்தான் சென்னை மாநிலத்திற்கு முதல்வராக இருக்க வேண்டும் எனும் தேவையில்லாமல் போனது. மொழிவழி மாநிலம் அந்நியமொழி தெரியாத வரும் ஆட்சிக்கட்டில் ஏறும் வாய்ப்பை உருவாக்கியது. தமிழ்நாடு காங்கிரசுக்குள் காமராஜர் ஆதரவு கோஷ்டியினர் தீவிரமாகக் களம் இறங்கினார்கள். குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு அதற்கு ஏதுவாக இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மத்தியில் காமராஜருக்கு ஆதரவு பெரு கியது. தான் பதவி விலகுவதாக 1954 ஜனவரியிலேயே கூறினார் ராஜாஜி, அப்படியாகவே மார்ச்சில் விலகவும் செய்தார். ஏப்ரலில் முதல்வராகிப் போனார் காமராஜர். அடுத்த மாதமே குலக்கல்வித் திட்டம் ரத்துசெய்யப்பட்டது. பெரியாருக்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது; பிராமணியத்திற்கு இது இரட்டை அடி. ஒருபுறம் ராஜாஜி பதவி இழந்தார், மறுபுறம் வருணாசிரமக் கல்வி முறை ஒழிந்தது.
இந்தித் திணிப்புக்கும் அடி
இதற்கிடையில் 1952 ஆகஸ்டு 1, 1953 ஆகஸ்டு 1ல் ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்தைத் தார் கொண்டு அழிக்கும் கிளர்ச்சியை நடத்தி யிருந்தார் பெரியார். அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி இந்தப் போராட்டம் பலம் பெறக் கூடாது என்று கிளர்ச்சியாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கா மல் இருந்தார். 1954 ஆகஸ்டு 1 வந்தது. இப்போது காமரா ஜர் முதல்வர். இவரும் இது விஷயத்தில் ராஜாஜியின் வழி நடந்தார். இந்தி எதிர்ப்பு தீக்கனல் தமிழ்நாட்டில்தான் அணையாமல் காக்கப்பட்டு வந்தது. இது சங்பரிவாரத்தின் - அதன் அரசியல் பிரிவான ஜனசங்கத்தின் - ஏக இந்தி மொழிக் கொள்கைக்கு நேர் எதிரான நிலைபாடு என் பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
- தொடரும்

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 14


May 30, 2020 • Viduthalai •
'கணபதி ஒழிக', 'உருவ வழிபாடு ஒழிக' என லட்சம் குரல்கள் முழக்கம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

பிள்ளையார் பிறப்பு பற்றிய புராண ஆபாசங்களை எல்லாம் சுட்டிக்காட்டிய பெரியாரின் ஏடு ஒரு முக்கிய மான, நியாயமான வாதத்தை வலுவாக முன்வைத்தது - “வடநாட்டில் இராவணனுக்கு கொடும்பாவி கட்டி இழுத்து நெருப்பு வைத்துக் கொளுத்தவில்லையா? தென்னாட்டில் சூரன் திருவிழாவில் சூரன் பொம்மைத் தலையை வெட்டி வெட்டித் தெருவில் வீழ்த்திக் கொண்டே போவதில்லையா? இராவணனும் சூரபத் மனும் யார்? மற்றும் சமணர்களைக் கழுவேற்றுகிற உற்சவத்தில் சமணர் உருவை ஆசனத்தில் கழுவேற்றித் தெருவில் தொங்கவிடவில்லையா?
சமணர்கள் யார்? சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் சூர்ப்பநகையின் இளநீருக்கும் பெரிதான முலையை இலக்குவன் இரம்பத்தைக் கொண்டு அறுப் பதாக 6 அடி உருவம் பூஜை செய்யப்படுவதில்லையா? சூர்ப்பநகை யார்? இந்தக் கணபதியே தன் தம்பி சுப்பிரமணியம் ஒரு அந்நியப் பெண்ணைப் பலாத்காரம் செய்ய, அவள் தப்பி ஓட அவளை விரட்டிப் பிடித்து ஒப்பவைக்க யானை உருவெடுத்துப் போய் விரட்டிப் பலாத்காரமாய்ப் படிய வைக்கவில்லையா? அந்த வள்ளி யார்? இவையெல்லாம் பொய்யானால் இந்த பொம் மையும் கடவுள் என்பது பொய்யாகட்டுமே. இவை யெல்லாம் மெய்யானால் மெய்யாகவே இந்தக் கணபதி கடவுள் ஒழிந்து மண்ணோடு மண் ஆகட்டுமே”.
அரக்கர்கள்- அசுரர்கள் எனப்பட்டவர்கள் பிராம ணிய மதத்தை- வாழ்வுமுறையை எதிர்த்தவர்கள் என் பதை அறிவோம். தங்களை எதிர்த்தவர்களை அன்று வதம் செய்ததை இன்றும் நினைவுபடுத்திக் கொண் டாடுகிறார்கள் பிராமணியவாதிகள். அப்படி அவர்கள் கொண்டாடும்போது அவர்களது தலைவர்களை, அந்த உருவங்களை உடைத்து நாம் ஏன் கொண்டாடக் கூடாது என்பதுதான் பெரியாரின் வாதமாகும். தர்க்கரீதியாகச் சரிதான். ஆனால், பிராமணியம் இடைப்பட்ட காலத்தில் தங்களது எதிரிகளை அநீதிகளின் மொத்த உருவமாகவும், தங்கள் தலைவர்களை கடவுளின் அவதாரங்களாகவும் சித்தரித்து, அப்படியாகவே மக்கள் மனதில் நிலைநிறுத்தி விட்டது. அதனால்தான் ராவணன், சூரபத்மன், சமணர் கள், சூர்ப்பநகை ஆகியோரைச் சிதைக்கும் போது வெகுமக்கள் ரசிப்பதும், ராமன், சுப்பிரமணியன், கணபதி ஆகியோரைக் கடவுளர்களாகத் துதிப்பதும் நடக்கிறது. இந்தச் சூழலில் பிள்ளையார் பொம்மை உடைப்பு என்பது ஓர் அதிரடி வைத்தியமாகவே இருந்தது. ராஜாஜி மந்திரிசபை நடந்ததும், அதன் சில அடாவடித்தனங்களுமே இதற்கான புறவியல் நியாயங்களைத் தந்து வெகுமக்களை பரபரப்பாகப் பேச வைத்தது. அதேநேரத்தில் வைதீகர்கள் சிலர் பதிலடித் தாக்குதலிலும் இறங்கினார்கள்.
மே 27 அன்று சென்னையில் “ஹிந்து” அலுவலகம் துவங்கி “சுதேசிமித்திரன்” அலுவலகம் வரை ஆயிரத் துக்கும் குறையாத பிள்ளையார் சிலைகள் உடைக்கப் பட்டன. இதற்குத் தலைமை தாங்கியவர் “விடுதலை” ஆசிரியர் குருசாமி. இப்படித் தமிழகத்தின் பல ஊர்க ளிலும் இந்த உடைப்புப் போராட்டம் நடந்தது. திருச்சியில் அதை நடத்தித் தந்தவர் பெரியார். இதை “விடுதலை” ஏடு (28-5-53)
இப்படி வருணிக்கிறது- “15,000 க்கு மேற்பட்டோரைக் கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. லட்சம் பேர்களுக்கு மேற்பட்ட மாபெரும் கூட்டம் கணபதி ஒழிக’, உருவ வழிபாடு ஒழிக’ என லட்சம் குரல்கள் முழக்கம் செய்தன. பெரியார் விளக்கவுரை ஆற்றினார். அது - நாம் என்னமோ சாமி இல்லை என்று சொல்லுகிறோம் என்பதாகப் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் கூறுகிறேன், திராவிட கழகத்தார் என்றைக்காவது சாமி இல்லை என்று சொல்லியிருக்கிறார்களா? அல்ல. சாமி, கடவுள் இல்லை என்று கருதுகிறவர்கள்தான் கழகத்திலே அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படும் என்றா சொல்லியிருக்கிறோம், இல்லையே. திராவிட கழகத்தவர் ஏதாவது சொல்லுவார்கள் என்றால் எது சாமி?’ என்று கேட்பார்கள். நீ சொல்லுகிறாயே குழவிக் கட்டை நீ காட்டுகிறாயே குழவிக் கல் இதுவா சாமி? என்று கேட்கிறோம் இவைகள் சாமிகள் அல்ல வெறும் களிமண், வெறும் கல் என்று கூறுகிறோம். மற்ற மதத்தவர்களுக்குக் கடவுள் இல்லையா? இருக்கிறது. அவர்கள் எல்லாம் ஒரு கடவுளை வணங்குகிறார்கள். இங்கு மட்டும் பல கடவுள் களை வைத்துக் கொண்டிருக்கிறோம் பிள்ளையார் உடைப்பு என்பதனால் இருக்கிற 1000 கடவுள்களுக்கு மேற்கொண்டு இனியாவது புதுக் கடவுள்கள் தோன்றாமல் இருக்கட்டுமே’’
அந்த 1953இல் எல்லாம் பெரியார் கடவுள் மறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிராமணிய எதிர்ப்பை முன்னிறுத்தியே பிள்ளையாரை உடைத்தார். கணிசமான வெகுமக்களின் ஆதரவு இந்தப் போராட்டத்திற்கு கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். தனது கைத் தடியால் பிள்ளையார் உருவங்களைப் பெரியார் உடைத்த போது அங்கு பெரும் கிளர்ச்சி அலை ஏற்பட்டது.
பிராமணியவாதிகளுக்கு பெருங் கோபம் எழுந்தது. அவர்கள் சில இடங்களில் பெரியாரின் படத்தை - கொடும்பாவியைக் கொளுத்தினார்கள். திருச்சியில் பெரியார் வீட்டைக் கொளுத்தவும் முயன்றார்கள். ஆங் காங்கே தி.க.வினர் கடுந்தாக்குதலுக்கு ஆளானார்கள். “என்படத்தைக் கொளுத்தியதாலேயே நான் செத்தா போய்விடுவேன்? கொளுத்தட்டுமே, இன்னும் வேண்டு மானால் அந்தக் காரியத்துக்கு நானே பணம் தருகிறேன்” என்றார் பெரியார்.
குலக்கல்வி அமுலாக்கம் தீவிரம் இதற்கிடையில் குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்துவதில் தீவிரமாக இருந் தார் ராஜாஜி. காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ ரையோ, தனது கல்வி மந்திரியையோ, காங்கிரஸ் எம். எல்.ஏ க்களையோ அவர் கலந்து கொள்ளவில்லை. தானடித்த மூப்பாக இது விஷயத்தில் செயல்படத் துவங்கினார். கேட்டால் இப்படி பதில் சொன்னார்- “இந்தக் கல்வி முறையைப் புகுத்தியதற்கு நானே பொறுப் பாளி, யாரையும் நான் கேட்கவில்லை. ஏனென்றால் சங்கரரும், ராமானுஜரும் யாரையும் கேட்டு எந்தக் காரியத்தையும் செய்ததில்லை. கேட்க ஆரம்பித்தால் நாலு யுகமானாலும் செய்ய முடியாது” (விடுதலை 31-5-53). பிராமணியத்தின் அகந்தையை இதில் தெளிவாகக் காணலாம். ஜனநாயக காலத்திலும் ராஜாக்கள் காலத்து நடைமுறையைப் பின்பற்ற மாகாண முதல்வர் நினைத் தார்.
ஏற்கெனவே தொழிற்கல்வியில் பிராமணர்களுக்கு ஏற்றம் தந்து, பிராமணரல்லாதாருக்குத் துரோகம் செய்கிற வேலையைச் செய்திருந்தது ராஜாஜி அரசு. இது பற்றிய சில விபரங்களை வெளியிட்டு “விடுதலை” (6653) முக்கிய மானதொரு தலையங்கத்தை எழுதியது “கம்யூனல் ஜிஓ என்ற வகுப்புரிமை முறையானது அல்லாடிஇனத்தினால் அரசியல் சட்டம் மூலமாகவும், பிறகு நீதிமன்றத்தின் மூலமாகவும் தூக்கிவிடப்பட்டவுடனே இங்கிருந்த திரா விட காங்கிரஸ் மந்திரிகள் ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். எஞ்சினியரிங் - மெடிக்கல் எனும் இருவிதத் தொழிற் கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பொறுக்கி எடுக்கும் போது நேர்முக உரையாடல் (பேட்டி தேர்வுக்கு 150 மார்க் என்று கொண்டு மாணவர்கள் இன்டர்வகுப்பில் வாங்கு கின்ற மார்க்கை இந்த மார்க்குடன் கூட்டி வகுத்துச் சராசரி கண்டுபிடித்து அதன் மூலம் பொறுக்கியெடுத்தனர். ஜாதி வெறியரான ஆச்சாரியார் முதலமைச்சராக வந்ததும் தமிழரின் உயர்தரத் தொழிற்கல்விக்குத் தூக்குப் போட்டு விட்டார். அதாவது மேற்கண்ட பேட்டி (Interview) மார்க்கை 150லிருந்து 50 ஆகக் குறைத்துவிட்டார்’.
சென்னை மாகாணத்திலிருந்த வகுப்புரிமை அர சாணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன வுடன் பிராமணரல்லாதார் நலனைக் காப்பாற்ற நேர் காணல் முறைக்கு அதிக மதிப்பெண் கொடுத்து அந்தப் பகுதி மாணவர்களுக்கு ஓரளவு நியாயம் வழங்கியது மாகாண அரசு. ராஜாஜி மந்திரிசபை அமைத்ததும் அதிலும் கை வைத்தார். அந்த மதிப்பெண்ணை அதிரடி யாய்க் குறைத்தார். இதன் விளைவு என்னவென்றால் பிராமணப் பிள்ளைகளுக்கு கூடுதல் இடங்களும், பிராம ணரல்லாதார் பிள்ளைகளுக்கு குறைந்த இடங்களும் கிடைத்தன. அந்த விபரத்தையும் கொடுத்தது தலை யங்கம். அது -
- தொடரும்

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 13


May 29, 2020 • Viduthalai • 
சமூக சீர்திருத்தத் துறையில் பெரியாரின் வெற்றிகள் பலப்பல

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'


சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணை இருந்த போதே மிக உயர்ந்த பதவிகளில் பிராமணர்களே இருந்தார்கள். மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 2.7 சத வீதமே. ஆனால், “விடுதலை” (14-4-51) சுட்டிக் காட்டியது” சீப் இஞ்சினியர்கள் 3 பேர், மூவரும் பார்ப் பனர்கள். சூப்பிரடென்டிங் இஞ்சினியர்கள் 9 பேர், ஒன்பது பேரும் பார்ப்பனர்கள், எக்சிகியுடிவ் இஞ்சினியர் கள் 45 பேர், அதில் 33 பேர் பார்ப்பனர்கள்”. அரசு நிர் வாகத்தின் முக்கிய பதவிகளில் மட்டுமல்ல தொழில் நுட்பக் கல்வியிலும் பிராமணர்களே ஆளுகை செலுத் தினார்கள் என்பதையும் இது புரிய வைக்கிறது.
முன்சிப் பதவி கேட்டு ஒருவர் வழக்குத் தொடுத்தாரே அந்த நீதித்துறையில் கூட இப்போதும் உயர் மட்டத்தில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். “விடுதலை” (174-51) எடுத்துக் காட்டியது - “சென்னை அய்கோர்ட் 14 ஜட்ஜுகளில் 7 பேர் பார்ப்பனர்கள்”
அரசியலமைப்புச் சட்டத்திற்கு திருத்தம்
இப்படி கருத்தளவிலும் செயலளவிலும் பெரியாரின் தி.க. ஒரு விடாப்பிடியான போராட்டத்தை நடத்திய காரணத்தால்தான் மாகாண, மத்திய அரசுகள் காரியத்தில் இறங்கின. 1951 ஏப்ரலில் மத்திய அரசுக்கு சென்னை சர்க்கார் எழுதிய கடிதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அதே மாதத்தில் வகுப்புவாரி அரசாணையை ஆதரித்தும், அதைக் காக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரி யும் சென்னை மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதற்குப் பிறகுதான் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்ட நடவடிக்கையில் இறங்கினார் பிரதமர் நேரு.
“பிற்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்வது வகுப்புவாத நோக்கமாகாது, சட்ட நுணுக்கச் சிக்கலைத் தீர்க்கத்தான் திருத்த மசோதாக்கள் - பிரதமர் நேரு விளக்கம்“ என்கிற செய்தி 19.5.51 தேதியிட்ட “விடுதலை” யில் இடம் பெற்றது. தங்களது எண்ணிக்கைக்கு பல மடங்கு அதிகமாக கல்வி, வேலைவாய்ப்பில் உயர் சாதி யினர் இடம் பெறுவது வகுப்புவாதம் இல்லை, இந்த அநீதியைப் போக்க இடஒதுக்கீடு செய்வதுதான் வகுப்பு வாதம்! - இப்படித்தான் அன்று பிராமணியம் வாதம் செய் தது. இந்தப் பொல்லாத்தனத்தை பிராமணர் குலத்தில் பிறந்த பிரதமர் நேருவே நிராகரித்தது சமூக நீதி சக்திகளுக்கு - குறிப்பாக பெரியாருக்கு - கிடைத்த ஒரு மகத்தான வெற்றி.
சமூக சீர்திருத்தத் துறையில் பெரியாரின் வெற்றிகள் பலப்பல. அவற்றில் எல்லாம் தலையாயது இந்த அரசி யலமைப்புச் சட்டத் திருத்தத்தை இந்திய மக்களுக்குப் பெற்றுத் தந்தது. இது முழு தேசத்திற்கும் கிடைத்த பரிசு. இந்தத் திருத்தத்திற்குப் பிறகுதான் சென்னை மாகாண வகுப்புரிமை அரசாணை தப்பியது என்பது மட்டுமல்லாது பிற மாகாணங்களிலும் அத்தகைய ஆணைகள் தப்பின அல்லது அவை பிறப்பிக்கப்பட்டன. முடிவில் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் மத்திய அரசிலேயே அது அமுலானது. இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது இந்தத் திருத்தம்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி 1952இல் நடந்த தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. நரியைப் பரியாக்கியது போலச் சிறுபான்மையைப் பெரும்பான்மையாக்க தந்திரசாலி ராஜாஜியை முதல்வ ராக்குவது என்று முடிவு செய்தார்கள். தேர்தலில் நிற்காது ஒதுங்கியிருந்த அவரை மேலவை உறுப்பினராக்கி முதல் வர் நாற்காலியில் உட்கார வைத்தார்கள். “கொல்லைப்புற வழியில் பதவியைப் பிடித்தவர்” எனும் அவப் பெயருக்கு ஆளானார் ராஜாஜி.
அதுமட்டுமல்ல, இந்தியாவின் மிக உயர்ந்த பதவி யாகிய கவர்னர் ஜெனரல் பதவியையே அனுபவித்தவர் ஒரு மாகாணத்தின் முதல்வர் பதவியில் உட்காரக் கூச்சமில்லாமல் சம்மதித்தார். பலித்தவரை லாபம் என நினைக்கிற பிராமணியவாதிகள் இதையெல்லாம் பார்ப்ப தில்லை. கலெக்டர் பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்ற வர் கர்ணம் வேலையை ஒப்புக் கொண்டது போல இருக் கிறது என்று நயம்படக் கேலி செய்தார் பெரியார். இது பற்றியெல்லாம் கவலைப்படாது பிறகட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்து சிறுபான்மையைப் பெரும்பான்மை யாக்கி கனஜோராய் ஆட்சி நடத்தி வந்தார் ராஜாஜி. எத்தகைய ஆட்சி?
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்
1953 கல்வியாண்டு துவங்குகிற வேளையில் ஒரு புதுவித ஆரம்பக் கல்வி பற்றிப் பேச ஆரம்பித்தார் ராஜாஜி. இதன்படி இதுவரை ஆறு மணி நேரமாக இருந்த பள்ளி நேரம் மூன்று மணி நேரமாகக் குறைக்கப்படும். மீதி மூன்று மணி நேரம் பிள்ளைகள் அப்பன் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இப்படிக் கூறியது - “சங்கீதம், உடற்பயிற்சி, இயற்கை, கைத்தொழில் முதலிய பாடங்களைச் சொல்லித் தர வேண்டியதில்லை. பள்ளியில் பயிலாத காலங்களில் காலையிலோ மாலையிலோ பிள்ளைகள் தங்கள் பெற் றோர் ஈடுபடும் பயிர்த் தொழிலிலோ அல்லது கைத் தொழிலிலோ ஈடுபட வேண்டும். எல்லாப் பெண்களும் தத்தம் வீட்டு வேலையிலோ, வீட்டார் செய்யும் வேலையிலோ ஈடுபட வேண்டும்”.
சுற்றறிக்கையின் இந்த வாசகங்கள் “விடுதலை” (5-5-1953) தலையங்கத்தில் உள்ளன. சென்னை மாகாண யாதவ மாணவர் மாநாட்டில் விவசாய மந்திரி டாக்டர் கன்னகவுடா பேசிய பேச்சும் அதில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளது. அது - “இளையவர்களாகிய நீங்கள் படிப்பு முடிந்தவுடன் உத்தியோக வேட்டையாடுவதைக் கைவிட்டு நவீன முறைப்படி பால் பண்ணைகள் நடத்தி அதிகமாகப் பால் உற்பத்தி செய்ய வேண்டும். கிராமப் பிள்ளைகள் காலையில் கல்வியும் மாலையில் அவரவர் குலத் தொழிலும் செய்ய வேண்டும் என்ற ராஜாஜி அவர் களின் புதிய கல்வித் திட்டத்தை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்”.
யாதவ மாணவர்களிடம் போய் பால்பண்ணை நடத்தச் சொன்னார் மந்திரி! உத்தியோக வேட்டையை உயர்சாதிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள்! சூத்திரர் களும் பஞ்சமர்களும் அவரவர் குலத்தொழிலைப் பார்த் தால்தான் சுதந்திர இந்தியாவிலும் உயர் சாதியினர் சொகு சான அரசாங்க உத்தியோகங்கள் பெறமுடியும் என்பதே பிராமணியத்தின் கணக்காக இருந்தது. இதற்கு “புதிய ஆரம்பக் கல்வித்திட்டம்“ என்பது ராஜாஜி அரசாங்கம் கொடுத்திருந்த பெயர். ஆனால், அது உண்மையில் குலக் கல்வித் திட்டமே என்பது மந்திரியின் பேச்சிலிருந்தே நிச்சயமானது. இப்படியாக அது அப்போதே “குலக்கல்வித் திட்டம்“ எனும் பொருத்தமான நாமகரணத்தைப் பெற்றது.
இந்தத் திட்டத்தால் மாணவர் சேர்க்கை இரு மடங் காகும், இது ஷிப்ட் சிஸ்டமே என்பது போல நியாயப் படுத்தினார் ராஜாஜி. பள்ளிகளை அதிகமாகத் துவக்கி, புதிய ஆசிரியர்களை நியமித்து ஆரம்பக் கல்வியைப் பரவலாக்குவதற்குப் பதிலாக இப்படியொரு குறுக்கு வழி காட்டினார். 5 வயதிலிருந்து 11 வயது வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களின் படிப்பு நேரத்தைப் பாதியாகக் குறைத்தால் மீதி நேரத்தில் என்ன செய் வார்கள்? சின்னஞ்சிறுவர்கள் அவர்கள், விளையாட்டுப் புத்தி இருக்கும், விளையாட்டில்தான் அந்த நேரத்தைச் செலவழிப்பார்கள். இதற்கு ராஜாஜி காட்டிய மாற்று வழிதான் சிறுவர்கள் அவரவர் குலத் தொழிலைச் செய்ய வேண்டும் என்றது. இதைவிடக் கொடுமை  சிறுமிகள் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்றது. பெண்கள் என்றால் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கு எனும் பிராம ணியக் கோட்பாடு அரசாங்க உத்தரவாகவே வெளிப் பட்டது.
பிள்ளையார் உடைப்பு போராட்டம்
இப்படி ராஜாஜி அரசு குலக்கல்வித் திட்டத்தை அமுலாக்கும் வேலையில் இறங்கியிருந்த காலத்தில்தான் பெரியார் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். புத்தர் பிறந்த தினமாகிய மே 27அய் விடுமுறை நாளாக அப்போதுதான் சர்க்கார் அறிவித்திருந்தது. இந்த தினத்தை தனது போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்தார் பெரியார். இது பற்றிய பெரியார் அறிக்கை இப்படிக் குமுறியது - “சூத்திரர்களுக்கு கல்வித் துறையில் ஒரு அளவுக்குப் பெரிய கிளர்ச்சி மீது சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டது. . . அடிப்படைக் கல்வி என்னும் பேரால் தகப்பன் தொழிலை, பரம்பரைத் தொழிலைப் படிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது”. (விடுதலை 6-5-53)
ராஜாஜி அரசின் குலக்கல்வித் திட்ட அறிவிப்புப் பின்னணியில் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் உத்வேகம் பெற்றிருந்தது. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த தினமும் அர்த்தமுள்ளதாக இருந்தது. நாத்திகத்தை முன்னிறுத்தி அவர் பிள்ளையாரை உடைக்கவில்லை. புத்த மதத்திற்கு பிராமணிய மதம் மோசம் என்றே விஷயத்தை முன்வைத்தார். இந்த அளவுக்கு பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். “புத்த ஜெயந்தி கொண் டாட (கணபதி) பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்” என்றது “விடுதலை” ஏடு.
- தொடரும்

வியாழன், 28 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 12

May 28, 2020 • Viduthalai • 

பெரியார் தலைமையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற ஊர்வலம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

1950 ஆகஸ்டு - 1951 மே காலத்திய “விடுதலை” யைப் படித்தால் இதற்காக நடந்த போராட்டங்களையும், இதற் கான வலுவான வாதங்களை அது விடாது சொல்லி வந்த தையும் அறிய முடிகிறது. சேலத்திலே ஊர்வலம், அண் ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு, நெல்லைக் கல்லூரி மாணவர்கள் தீர்மானம், விருதைக் கல்லூரி ஆதரவு, காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி ஸ்டிரைக், குடந்தை சர்க்கார் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் என்று இந்தப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டது. இதற்கெல்லாம் முத் தாய்ப்பானது 1950 ஆகஸ்டு 14இல் சென்னையில் நடை பெற்ற எழுச்சிகரமான ஊர்வலம். அன்று “வகுப்புவாரி உரிமை நாள்’’ கடைப்பிடிக்கப்பட்டது.

20 ஆயிரம் பேர் பங்கு கொண்ட இந்த ஊர்வலத்தைப் பெரியார் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். இதுபற்றிய “விடுதலை”யின் (14-8-50) வர்ணனை- “எல்லா கட்சி களும் தங்கள் தங்கள் கட்சிக் கொடிகளுடன் கலந்து கொண்டனர். திராவிடர் கழகக் கொடி, முன்னேற்றக் கழகக் கொடி, தொழிலாளர்கள் கட்சிக்கொடி, கம்யூனிஸ்ட் கட்சிக் கொடி, தமிழ்க் கொடி, ஜஸ்டிஸ் கொடி ஆகிய கொடிகளுடன் உரிமை முழக்கமிட்டுக் கொண்டு சென்றனர்”. சகல எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இந்தப் போராட்டத்திற்கு இருந்தது. ஏன் காங்கிரசாரும் இதில் கலந்து கொண்டார்கள்.

ஊர்வலத்தின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசிய பேச்சு இது. “ஊர்வலம் நடத்த வேண்டு மென்று நான் கேட்டுக் கொண்டேன். அதற்கு சகல கட்சி யாரும் ஒத்துக் கொண்டு இன்றைய தினம் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ்காரர்கள் பலரும் நம்முடைய ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் தங்கள் கையிலே காங்கிரஸ் கொடி ஏந்தி வரவில்லை. இந்து மகாசபைக்காரர்கள் என்போர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வகுப்புவாரி உரிமைக்கு எதிரிகள். ஆனால், அவர்களும் அக்கொள்கைக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சியே பேச்சளவில் வகுப்புவாரிக் கொள்கையை ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறார்கள். காங்கிரஸ்காரர்களையம் சேர்த்துக் கொள்வது என்பதோடு மாத்திரமல்லாமல் கம்யூனிஸ்ட் முதலியவர்களையும் நம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். வகுப்புவாரி உரிமைக் கிளர்ச்சியில் அவர்களுக்கும் மாறுபட்ட அபிப்பிராயம் இருக்க முடியாது”

இந்து மகாசபை என்பது பிராமணிய சபை என்பதை யும், அவர்கள் இடஒதுக்கீட்டின் பரமவைரிகள் என்பதை யும், ஆனால் ஊரை ஏமாற்ற அவர்களும் அதை ஒப்புக் கொள்வதாய் நடிக்க வேண்டி வந்ததையும் பெரியார் பளிச்சென்று சொன்னது குறிக்கத்தக்கது. அன்று முதல் இன்றுவரை இது விஷயத்தில் இந்துத்துவாவாதிகள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இடஒதுக்கீட்டை முடிந்த அளவு தடுக்கப் பார்ப்பார்கள், முடியாத பட்சத்தில் தாங்களும் ஆதரிப்பதாக வாய்ப்பந்தல் போடுவார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

இத்தகைய எழுச்சிகரமான சூழலில்தான் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதென்று சென்னை சர்க்கார் முடிவு செய்தது. எனினும், இயக்கத்தை தளர்த்தி விடவில்லை பெரியார். இது போன்ற விஷயங்களில் நீதிபதிகளை நம்புவதைவிட மக்களை நம்புவது உத்தமம் என்று அவர் தெளிவாக இருந்தார். 1950 டிசம்பர் 3இல் திருச்சியில் “வகுப்புவாரி உரிமைப்போர் மாநாடு” நடை பெற்றது. மாநாட்டின் தலைவர் எம்ரத்னசாமி. இவர் யாரென்றால் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் முன்னாள் தலைவர், வகுப்புவாரிப்படி உத்தியோகங்களைத் தர முடி யாததற்குக் காரணம் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப் பட்டோரும் தொழில் நுட்பக் கல்வியைப் பெறாததே என்று சுட்டிக்காட்டினார். அதற்காக அந்தக் கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்றார். அப்படித்தான் அங்கும் அது வந்தது. அதற்கு இப்போது ஆபத்து என்றதும் அவரும் பொங்கி எழுந்தார். “டில்லி மூலவர்களுக்கு எட்டுமாறு கிளர்ச்சி நடத்துங்கள்’’ என்றார் தனது தலைமை உரையில், பெரியாரோ “எல்லாப் பதவிகளிலும் நமக்குரிய விகிதப் பங்கை பெற்றே தீருவோம்“ என்று முரசறைந்தார்.

ஒவ்வொரு மாதம் 14ஆம் தேதியையும் வகுப்புரிமை நாளாகக் கடைப்பிடித்தது தி.க. “விடுதலை” ஏட்டில் அதுபற்றிய பெட்டிச் செய்தி வந்து கொண்டேயிருந்தது.

வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அந்த பிராமண மாணவர்களுக்காக அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வாதாடினார். இந்த மனிதர் அரசியல் நிர்ணய சபையி லிருந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் களில் ஒருவர் என்பதை அறிவோம். வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு அங்கே பாதுகாப்புத் தரப்படவில்லை என்பதை அவர் நன்கு அறிவார். எனவே, வலுவாக வாதாடினார் வகுப்புரிமைக்கு எதிராக. இதற்கிடையில் முனிசிப் வேலைக்கு மனுச் செய்திருந்த பி. வெங்கட்ராமன் என்பவர் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தார். அதையும் பரிசீலித்தது உச்ச நீதிமன்றம். முடிவில் குண்டைத் தூக்கிப் போட்டது. கல்வி, வேலைவாய்ப்பு இரண்டிலும் சென்னை மாகாணத்தின் வகுப்புரிமை அரசாணை செல்லாது என்று உற்சாகமாக அறிவித்தது.

1951 மார்ச் 27ஆம் தேதியிட்ட “விடுதலை” தந்த செய்தி இது - “கம்யூனல் ஜி.ஓ. இந்திய அரசியல் விதிக்கு முரணா னது. 1950 ஜனவரிக்கு முன் அது நியாயமானதாக இருக் கலாம். ஆனால் இன்று பொருந்தாது. சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அறிவிப்பு. அக்ரகாரத்தின் அமோகத் தீர்ப்பு”.

அதே நாளைய “விடுதலை”யின் தலையங்கம் இப்படிக் குமுறியது - “கொலை! கொலை! வகுப்புரிமை படுகொலை! படிப்பு - பதவி இரண்டிலும் அக்ரகாரம் உச்சநிலைக்கு போகப் போகிறது. மீண்டும் நம்மவர்கள் பழைய நிலைக்கே வரப்போகின்றனர். மத்திய சர்க்கார் பணிமனைகளைப் போலவே இனி மாகாண சர்க்கார் பணிமனைகளும் ஆகப் போகின்றன. சர்க்கார் ஊழியர், மாணவர் இந்த இரு சாராரும் இறுதித் துணிவுடன் இனி இறங்க வேண்டிய கட்டம் நெருங்கி விட்டது. நமது சந்ததிகளின் கதியை விரைவிலே முடிவு கட்டியாக வேண்டும்“

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே மத்திய அரசில் வகுப்புவாரி இடஒதுக்கீடு இல்லை. அங்கே உயர் சாதியினரே - குறிப்பாக பிராமணர்களே - நிறைந்திருந் தார்கள். சென்னை மாகாணத்தில் தான் இட ஒதுக்கீடு காரணமாக பிராமணரல்லா தாரும் இடம் பெற்றிருந்தார் கள். இப்போது அதற்கும் ஆபத்து என்றால் டில்லியைப் போலவே சென்னையும் ஆகிப் போகும் என்று சரியா கவே எச்சரித்தது “விடுதலை”.

தி.க.களத்திலும் இறங்கியது. வகுப்புவாரி உரிமை பெற தமிழ் நாடெங்கும் மந்திரிகளுக்கு கருப்புக்கொடி பிடிக்கப் படும் என்றும், மந்திரிகளின் ராஜினாமா வற்புறுத்தப்படும் என்றும் ஏப்ரல் துவக்கத்தில் அறிவித்தது அதன் மத்திய நிர்வாகக் குழு. அன்றைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராஜாவுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. ஏப்ரல் 22ஆம் நாள் “காங்கிரஸ் ஒழிப்பு நாளாக” அனுஷ் டிக்கப்படும் என்று அறிக்கை விட்டார் பெரியார். மாவட் டம் தோறும் வகுப்புரிமை மாநாடு நடத்தப்படும் என்றும் கூறினார்.

இப்படி விடாமல் போராட்டங்கள் நடத்தியது மட்டு மல்லாது, வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமையின் நியாயத்தையும் தனது பத்திரிகை மூலம் சொல்லி வந்தார் பெரியார். வகுப்புரிமையை அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் கோஷ்டியார் தங்களுக்குள்ள பத்திரிகை பலத் தைக் கொண்டு எதிர்த்து வந்தபோது “விடுதலை” (7.8.50) எழுதியது- “1941இல் தென்னிந்திய மக்கள் எண்ணிக்கை விபரம் வருமாறு: பிராமணர் 2.7%, ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிராமணரல்லாதார் 84%, முஸ்லிம்கள் 7.8%, கிறிஸ்தவர் 3.7%. இந்த வருஷம் இன்ஜினியரிங், வைத்தி யக் கல்லூரிகளில் கீழ்க்கண்டவாறு ஸ்தானங்கள் பகிர்ந்த ளிக்கப்பட்டன: பிராமணர் 20%, பிராமணரல்லாதார் 58%, கிறிஸ்தவர் 8%, முஸ்லிம் 7%, ஹரிஜன் 7%. வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமைப்படி ஹரிஜனங்களுக்கு இன்னும் அதிகமான சதவிகிதம் கிடைத்திருக்க வேண்டும். அதற் குத் தோதாக ஹரிஜன மாணவர்கள் இல்லையாதலால் காலி ஸ்தானங்களைப் பெரும்பாலும் பிராமணப் பிள்ளை களுக்கே தந்திருக்கிறார்கள்” வகுப்புவாரி உரிமை அரசாணை நடைமுறையில் இருந்த போதே இந்த கதி என்றால் . அதுவும் ஒழிந்தால் என்னாகும் என்று கேட்டது “விடுதலை” ஏடு. இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் பிராமணியவாதிகளால்?

- தொடரும்


தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 11

May 27, 2020 • Viduthalai •

வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைக்கு ஆபத்து

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

சமூக சீர்திருத்தம் - பெரியார்

முஸ்லிம் லீக் கேட்ட பாகிஸ்தான் கிடைத்து, பெரியார் கேட்ட திராவிடஸ்தான் கிடைக்காத நிலையில் இந்துஸ் தானுக்கு சுதந்திரம் கிடைத்தது. அன்றைய சென்னை மாகாணத்தை “திராவிட நாடு” என அழைத்து பிரிவினை கேட்டார் பெரியார். அது காரிய சாத்தியமற்றதாக இருந்தது. மாகாணத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் எனும் மொழிவழிப்பட்ட தேசிய இன உணர்வுதான் இருந்ததேயொழிய “திராவிட இனம்“ எனும் வழிப்பட்ட உணர்வு இல்லை. பிராமணரல்லா தாரைத்தான் திராவிடர்கள் என அழைத்து வந்தார் பெரியார். அப்படிப் பார்த்தால் அவர்கள் இந்தியா முழுக்க இருந்தார்கள். அவர்களுக்காகச் சென்னை மாகாணத்தை மட்டும் தனி நாடாகக் கேட்டது அர்த்தமற்றதாக இருந்தது. பிராமணியத்தை எதிர்க்க இந்தியா முழுவதிலுமிருந்த பிராமணரல்லாதாரைத் திரட்ட முனைவதும், அதற்கு அச்சாரமாகச் சென்னை மாகாணத்தில் அந்தப் பணியைச் செய்வதுமே காலப் பொருத்தமுடையதாக இருந்தது. இந்திய ஒற்றுமையோ, இந்திய சுதந்திரமோ இதற்கு இடையூறாக இல்லை. பெரியாரோ இந்திய சுதந்திரத்தை வரவேற்கவில்லை .

திராவிடர் கழகத்தின் நிர்வாகக்குழுத் தலைவர் தி.பொ. வேதாசலம் 1947 ஜூலை 25 அன்று வெளியிட்ட அறிக்கையில் வரவிருக்கிற சுதந்திர நாள் “திராவிட மக்களுக்கு ஒரு துன்ப நாளாகும்“ என்று குறிப்பிட்டார். ஆகஸ்டு 6 அன்று பெரியாரே வெளியிட்ட அறிக்கையில் “சுதந்திரத் திருநாள் என்னும் ஆரியர் - பனியா ஏமாற்றுத் திருவிழாவில் நாம் கலந்து கொள்ளவில்லை என்கிறோம்“ என்றார்.

இது கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணாவுக்கு ஏற்புடையதாக இல்லை. பெரியாரின் நிலைபாட்டை எதிர்த்து ஆகஸ்டு 10 அன்று விரிவான அறிக்கை வெளியிட்டார். காங்கிரசுக்கு மாற்றான ஓர் அரசியல் கட்சியாக தி.க.வை மாற்ற வேண்டும் என்கிற நினைப்பில் இருந்தார் அண்ணா . சமூகத் தளத்திலும், அறிவுத் தளத்திலும் இயங்குவதையே பெரியார் பெரிதும் நம்பியிருக்க, இவரோ அரசியல் தளத்திற்கு இதைக் கொண்டு செல்ல விரும்பினார், அதற்கான சில சமரசங் களுக்கும் தயாராக இருந்தார். தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் இடையிலான இந்த அடிப்படை முரண்பாடே 1949இல் தி.க. உடைந்து திராவிட முன் னேற்றக் கழகம் உதயமாவதற்கு காரணமாய் அமைந்தது. பெரியார்- மணியம்மை திருமணத்தை அதற்கு மிக லாவகமாகப் பயன்படுத்திக் கொண்டார் அண்ணா.

1949 செப்டம்பரில் தி.மு.க. பிறந்த போது தாய்க் கழ கத்திற்கும் இதற்கும் இடையே புகைச்சலும், கோபதாபங் களும் இருந்தன. 1967இல் தி.மு.க சென்னை மாநில ஆட்சியைப் பிடிக்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆர்.எஸ்.எஸ். கூட சமூகத் தளத்தில் இயங்குவதையே பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், அரசியல் தளத்தைப் புறக்கணிக்கவில்லை . 1957ல் ஜனசங்கம் என்கிற கட்சியை உருவாக்கி அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதை அறிவோம். அத்தகையதொரு உத்தியை ஏனோ பெரியார் கடைப்பிடிக்கவில்லை.

காங்கிரசை எதிர்த்து நீதிக்கட்சியைப் பயன்படுத்தி யவர், பின்னர் அதை திராவிடர் கழகம் என்று மாற்றியவர் அதை சமூக இயக்கமாக மட்டுமே நடத்த முயன்றதில் உள்ளார்ந்த முரண் இருந்தது. இதைச் சுமூகமாகத் தீர்த்திருக்கலாம்ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடித்த அந்த உத்தியில். அதைச் செய்யத் தவறிய வேளையில் அண்ணா அறுவைச் சிகிச்சை மூலம் அதைச் செய்ய வேண்டி வந்தது. அதனால் ஏற்பட்ட கோபதாபம் வெகு காலம் நீடித்தது என்பது மட்டுமல்ல, தி.மு.க. வானது தி.க.வின் கட்டுப்பாட்டிற்குள் வராமலே போனது.

ஆக, சென்னை மாகாணத்தில் தி.க என்றும், தி.மு.க என்றும் இரு அமைப்புகள் இயங்கத் துவங்கின. ஆரம்பத் தில் தி.மு.க.வும் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டது. திராவிட இயக்கம் என்ற பெயரில் பிராமணியத்தின் மீது இருமுனைத் தாக்குதல் பிறந்தது.

வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணைக்கு ஆபத்து

இந்தக் கட்டத்தில்தான் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. ஜாதி எதிர்ப்பு நோக்கில் அங்கு எழுதி வைக்கப்பட்ட சில சரத்துகளை சென்னை மாகா ணத்திலிருந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பயன்படுத்த முனைந்தார்கள் பிராமணியவாதிகள். கல்வி நிறுவனங் களிலும், அரசுப் பணிகளிலும் சாதி வேறுபாடின்றி சேர்க்கப்படுவார்கள் என இருப்பதைச் சுட்டிக்காட்டி வகுப்பு வாரி இட ஒதுக்கீடு ஆணை அரசியலமைப்புச் சட்டப்படி விரோதமானது என்று புறப்பட்டார்கள்.

சென்னை மாகாணத்தில் மருத்துவக் கல்லூரியில் 330 இடங்களும், பொறியியல் கல்லூரியில் 395 இடங்களும் இருந்தன. அன்று இந்தப் படிப்புகள் எவ்வளவு அரிதா னவை என்பது விளங்கும். இவை இங்கிருந்த வகுப்புவாரி அரசாணைக்கு ஏற்ப ஒதுக்கப்பட்டன. இதனால் தங்க ளுக்கு இடம் கிடைக்காமல் போனது என்று மருத்துவப் படிப்புக்கு மனுப்போட்ட செண்பகம் துரைச்சாமி, பொறியியல் படிப்புக்கு மனுப்போட்ட சி.ஆர். சீனிவாசன் என்கிற பிராமண மாணவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

இதன் மீது 1950 ஜூலையில் தீர்ப்புத் தந்த நீதிபதிகள் “பிரஸ்தாப வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு வகுப்பு துவேஷத்தை வளர்க்கக் கூடியதாய் இருக்கிறது. தனிப்பட்டோரின் உரிமைகளில் சர்க்கார் தலையிட்டு ஏதாவது செய்யாமலிருக்க வேண்டும் என்றே அரசியல மைப்பை வகுத்தவர்கள் அதற்குப் போதுமான பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள்” என்று கூறி வகுப்புவாரி ஆணையை ரத்து செய்துவிட்டார்கள். இங்கு காலங்கால மாய் சாதிய ஒடுக்குமுறை நிலவுவது வகுப்பு துவேஷம் இல்லையாம், அதை முறியடிக்க சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தந்ததுதான் வகுப்பு துவேஷத்தை வளர்க்கு மாம்! இப்படிக் கோணல் புத்தியோடு தீர்ப்புத் தந்தார்கள், அப்படித் தரும் வகையில்தான் அரசியலமைப்புச் சட்டமும் இருந்தது.

இந்தத் தீர்ப்பு கண்டு பெரியார் கிளர்ந்தெழுந்தார். பிளவால் துவண்டு போயிருந்த அவரது கழகத்தை மீண்டும் தூக்கிநிறுத்த  பிராமணியவாதிகளே மறைமுக மாக உதவி செய்தது போலானது. இப்படியொரு வழக்கும், இப்படியொரு தீர்ப்பும் அவரது இயக்கத்திற்குள் புதிய ஆக்ரோஷத்தை ஊட்டியது. 1950 ஆகஸ்டு 2ஆம் தேதியிட்ட “விடுதலை” தலையங்கம் பேசியது “கம்யூனல் ஜி.ஒ. மீண்டும் உயிர் பெற வேண்டுமென்றால் மூன்று வழிகள்தாம் உண்டு - 1) மாகாண மந்திரிகளும் சட்டசபை உறுப்பினர்களும் பதவியை விட்டு விலகி அரசியல் நெருக்கடியை உண்டாக்க வேண்டும். 2) வயது வந்தோர் வாக்குரிமை பெறாத நிலையில், ஏதோ ஒரு கும்பலினால் வகுக்கப்பட்ட இந்த அரசியல் திட்டத்தைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும். 3) கம்யூனல் ஜி.ஓ. வுக்காகவும் நம் நாட்டிற்கேற்ற தனி அரசியலை வகுத்துக் கொள்வதற்காகவும் எல்லாத் திராவிட மக்களும் ஒன்று சேர்ந்து பெருங்கிளர்ச்சி செய்தாக வேண்டும். இந்த மூன்றில் எதைக் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்று செய்யலாம்? ஆணிவேர் அறுபட்ட மரமாகி விட்டது நம் திராவிட சமுதாயம். இனி சல்லிவேர் தான் பாக்கி. அதுவும் அறுக்கப்படலாம். அதன்பின் நம் கதி என்ன? வர்ணாசிரம முறைப்படி அவனவன் பார்க்க வேண்டியதுதானா? பார்ப்பனர் மட்டும் தங்கள் வர்ணத் திற்கேற்ற தொழிலை விட்டு நம்மை அடக்கியாளும் தொழில்களில் ஈடுபட வேண்டியதுதானா? திராவிடப் பொதுமக்களைக் கேட்கிறோம். விரைவில் முடிவு செய்யுங்கள்”

இத்தகைய ஆவேசமான, அர்த்தபாவமிக்கத் தலையங்கத்திற்கு முன்பாகவே இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சென்னையில் மாணவர் போராட்டம் வெடித் தது. ஆகஸ்டு 1 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள், திரு வல்லிக்கேணி கடற்கரைக்கு நீண்ட ஊர்வலமாகச் சென்ற வர்கள், அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அரசாங்கத்தைக் கோரி னார்கள். அதிலும் வெற்றி இல்லையென்றால் அரசியல மைப்புச் சட்டத்தையே திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். முடிவில் அதுதான் நடந்தது என்பது வரலாறு. ஆனால், அதற்காக பெரியாரும் அவரது தி.க.வும் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், நடத்திய போராட்டங்களும் இந்திய சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்.

 

- தொடரும்

திங்கள், 25 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 10


May 25, 2020 • Viduthalai • 

சைவர்களை மிரட்டிய பெரிய புராண எதிர்ப்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

“இந்த விடுதலை விழாக் கொண்டாட்டத்தைக் கொண்டாடும்படி நானே ஓர் அறிக்கைவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்காகப் பல ஏற்பாடுகளும் செய்து வந்தேன். ஆனால், ஜனாப் ஜின்னா அவர்கள் முந்தி விட்டார்கள்” என்று குறிப்பிட்டார். ராஜாஜி மந்திரி சபை வழிந்ததில் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைந்ததில் நியாயம் உண்டு என்றார் பெரியார். இதற்கு உதாரணமாக “வந்தே மாதரம்“ பிரச்சனையை எடுத்துச் சொன்னார். அது - “காங்கிரஸ் பதவிக்கு வந்தவுடன் எதற்காக ‘வந்தே மாதரப்’ பாட்டைப் பாட வேண்டும்? ஒரு மதஸ்தர்களின் மனத்தைப் புண்படும்படி செய்யும் என்று தோழர்கள் லால்ஜானும், அமீத்கானும் ஆட்சேபித்தால் அவர்களை வெளியில் போகும்படி சொன்னது எவ்வளவு ஆணவ மான செயல் என்பதைப் பாருங்கள்! வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட ‘ஆனந்த மடம்‘ என்ற புத்தகத்தில் முஸ்லிம்களை எவ் வளவு இழிவாகவும் கேவலமாகவும் எழுதி இருக்கிறார் என்பதைப் பாருங்கள். அந்தப் புத்தகத்தில் முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்தும் படியான பல பாகங்கள் இருக் கின்றதுடன், முஸ்லிம்களைத் தாடிக்காரப் பன்றிகள் என் றும், அவர்களைக் கண்ட விடங்களில் எல்லாம் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்களை சட்ட சபையில் பாட வேண்டாம் என்று கூறினால், சட்ட சபையைவிட்டு வெளியில் போகும்படி கூறினால் அவர் கள் சும்மா இருப்பார்களா? நான் கேட்கிறேன் - இன்று சைவர்களில் ஒருவர் விஷ்ணு மதத்தையும் புராணத் தையும் விஷ்ணு கடவுளையும் பற்றி இழிவாகப் புத்தகம் எழுதினால் விஷ்ணு பக்தர்கள் சும்மா இருப்பார்களா? அதே போல் சைவ மதத்தையும் புராணத்தையும் கட வுளையும் பற்றி - புராணங்களில் உள்ளது போல் கூட - வைணவர்கள் எழுதினால் சைவர்கள் சும்மா இருப் பார்களா?”

இந்த அளவுக்கு முஸ்லிம்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முஸ்லிம் அல்லாத வேறு ஒரு தலைவர் அன்று தமிழகத்தில் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல இந்தப் பேச்சின் ஊடே “வந்தே மாதரம்” விவகாரத்தில் சென்னை மாகாண சட்டசபையில் முஸ் லிம் உறுப்பினர்களை வெளியே போகும்படிச் சொன் னதும் தெரிய வருகிறது.

அதுபோல வேறு சில செய்திகளும் நமக்குத் தெரி கிறது. அவை - “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப் பட்ட மக்கள் ஆகியவர்களுக்கு இருந்துவந்த சில உப காரச் சம்பளத்தில் கையை வைத்துக் குறைத்து விட் டார்கள். ஆரம்பப் பள்ளிக் கூடங்களை எல்லாம் மூடி விட்டார்கள். இதையெல்லாம் கேட்டால் முதல் மந்திரி யார் ‘வாய்க்கால் கரைகளில் அட்டைகளில் எழுதிப் படித் துக் கொள்ளும்படி’ கூறுதி. இது அரசியல் கொள்கையா, பார்ப்பனீயக் கொள்கையன் தமிழ்நாட்டில் ‘உயர்திரு’ ‘திருவாளர்’ போன்ற தமிழ்ப் பதங்கள் வைத்து அழைத்து வந்ததை நீக்கிவிட்டு ஆரியப் பதமாகிய ‘ஸ்ரீ’ என்ற பதத்தை உபயோகிக்கும்படி உத்தரவிட்டார்கள். இப்படி இவர்கள் செய்தது அரசியல் வேலையா, பார்ப்பன மத வேலையா என்று கேட்கிறேன். ‘விஸ்வப் பிராமணர் கள்’ என்றிருந்தால் இவர்களுக்கு குத்துகின்றதா? குடை கின்றதா? அதை எடுத்து ‘விஸ்வகர்ம’ என்று போட வேண்டும் என்று உத்தரவிட்டார். இது அரசியலா? பார்ப் பனீயமா? இப்படியொரு ஆட்சி நடந்தால் அது தொலைந்தது என்று கேள்விப்பட்டதும் கொண்டா டாமல் என்ன செய்வார்கள்?’’

இப்படியாகப் பெரியார் அன்று உருவாக்கிய இந்து - முஸ்லிம் ஒற்றுமை வெகு ஆதாரமான சமூகக் கூறாகத் தமிழகத்தில் இருந்தது. வட இந்தியா போல இங்கே மதக் கலவரங்களை அவ்வளவு எளிதில் பிராமணியவாதிகளால் உருவாக்க முடியாமல் இருந்ததற்கு இதுவொரு முக்கிய மான காரணமாகும். முஸ்லிம்களோடு பெரியார் கொண் டிருந்த நல்லுறவின் நீட்சியாகத்தான் பம்பாயில் 1940 ஜனவரியில் லீக் தலைவர் ஜின்னாவோடு அவரது சந்திப்பு நடந்தது. அப்போது அம்பேத்கரும் உடனிருந் தார். இந்த மூவரின் கலந்துரையாடல் பிற்காலத்தில் பிராம ணரல்லாதர் - முஸ்லிம்கள் - தாழ்த்தப்பட்ட மக்களின் உறவு வலுவடையக் காரணமாக இருந்தது. குறிப்பாகப் பெரியார் - அம்பேத்கர் உறவு கடைசிவரை மிக நெருக்க மாக இருந்தது. இதுவெல்லாம் பிராமணியத்திற்கு உள் ளார்ந்த எரிச்சலையும் ஆத்திரத்தையும் தந்தது..

திராவிடநாடு தீர்மானம்

தனது பம்பாய் மற்றும் வடநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய பெரியார் நீதிக்கட்சியின் மாகாண மாநாட்டு வேலைகளில் இறங் கினார். இப்போது சுயமரியாதை இயக்கம் என்று தனியாக இல்லை. அவர்கள் எல்லாம் நீதிக்கட்சியில் இருந்தார்கள். நீதிக்கட்சி இப்போது பெரியாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது. அதனுடைய 15வது மாகாண மாநாடு திருவாரூரில் 1940 ஆகஸ்டில் நடைபெற்றது. இங்குதான் புகழ்பெற்ற திராவிட நாடு தீர்மானம் நிறைவேறியது. “திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்தியா மந்திரியின் நேர்ப்பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று அந்தத் தீர்மானம் கோரியது. இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் பி. பாலசுப்பிரமணியம், வழி மொழிந்தவர் அண்ணா . இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து அண்ணா மாநாட்டில் நீண்டதொரு சொற்பொழிவு ஆற்றினார்.

பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சனையானது சாதியப் பிரச்சனையாகவும், வாழ்க்கை நடப்பாகவும், எவருக்கும் எளிதில் புரியத்தக்கதாகவும் இருந்தது. “திராவிடர்கள்” என்பது இனப் பிரச்சனையாகவும், வரலாறு சம்பந்தப்பட்டதாகவும், அறிவுஜீவிகளின் விவ காரமாகவும் இருந்தது. இதுவரை பெரியாரின் இயக்க மானது பிராமணிய எதிர்ப்பு எனும் சமூகநீதிப் போராட்ட இயக்கமாக இருந்தது. இப்போது தனிநாடு கேட்கும் அரசியல் கட்சியாகிப் போனது. அப்போதுதான் முஸ்லிம் லீக் பாகிஸ்தான் கேட்கத் துவங்கியிருந்தது. இவர்கள் திராவிடஸ்தான் கேட்க ஆரம்பித்தார்கள். குடிமைச் சமூகத்தில் - கருத்தியல் தளத்தில் - இயங்குவதையே பெரிதும் விரும்பிய பெரியார் இப்போது ஒரு பிரிவினை கேட்கும் அரசியல் கட்சியின் தலைவராகிப் போனார். இப்போது திராவிட நாடு கோரிக்கையின் நியாயத்தை விளக்குவதில் நேரத்தைச் செலவிட வேண்டி வந்தது. அது இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதாக இருந்தது. தென் னகத்தைப் பொறுத்தவரை எழுந்திருந்தது மொழிவாரி மாநிலத்திற்கான தேசிய உணர்வு தானேதவிர, ஆரிய-திராவிட இனவாரி தனிநாட்டு உணர்வு அல்ல. இல்லாத ஒன்றுக்காய் பிரயாசைப்பட்டார் பெரியார். பிராமணியம் உள்ளூரச் சிரித்திருக்கும்.

சைவர்களை மிரட்டிய

பெரிய புராண எதிர்ப்பு

இதன்பொருள் கருத்தியல் தளத்தில் இயங்குவதைப் பெரியார் கைவிட்டுவிட்டார் என்பதல்ல. அதையும் செய்தே வந்தார். ஆனால் முக்கியத்துவம் இப்போது திரா விட நாடு கோரிக்கைக்கு என்றாகிப் போனது. அதற்கு அக்கம்பக்கமாக இதிகாச எதிர்ப்பு தொடர்ந்தது. கூடவே பெரிய புராணம் எதிர்ப்பும் கந்த புராண எதிர்ப்பும் நடந்தது. இது இந்தி எதிர்ப்பில் பெரியாரோடு இருந்த சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் போன்றோரை அந்நியப்படுத்தியது. அவர்கள் “தமிழருக்கென்று மதம் உண்டு, அது சைவ வைணவமுமே” என்று சொல்லத் துவங்கினார்கள்.

(தொடரும்)

ஞாயிறு, 24 மே, 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 9


May 24, 2020 • Viduthalai • மற்றவை

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல வகுப்பாரின் ஆதரவு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர்களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...

- ஆசிரியர், 'விடுதலை'

 

தமிழறிஞர்களின் ஆதரவு மட்டுமல்ல, பல வகுப்பா ரின் ஆதரவும் இந்தி எதிர்ப்புக்கு இருந்தது. முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னா, தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்கள் இரட்டை மலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்றோரின் ஆதரவைப் பெற்றார் பெரியார். 1938 மே மாதத்தில் திருச்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. சோம சுந்தர பாரதியார் தலைமையில் 112 உறுப்பினர்களைக் கொண்ட “சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர்கள் சங்கம்“ அமைக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த டி.பி. வேதாச்சலம் தலைமையில், “சென்னை மாகாணத் தமிழர் மகாசபை’’ என்பது இருந்தது. இந்த இரண்டு அமைப்புகளும் சேர்ந்து ஒரு பெரும் இயக்கத் திற்கு திட்டமிட்டன. இதற்கான தலைவர்கள் குழுவில் சோமசுந்தர பாரதியார், தவே. உமாமகேசுவரம் பிள்ளை, சவுந்திரபாண்டியன், கி.ஆ.பெ. விசுவநாதம், கே.எம். பாலசுப்பிரமணியன், பெரியார் ஆகியோர் இருந்தார்கள். பல ஊர்களிலிருந்தும் சென்னையை நோக்கிப் பயணங்கள் நடந்தன. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டே மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ராஜாஜி வீட்டு முன்பு தொடர்மறியல் நடைபெற்றது. காங்கிரஸ் எதிர்த்து வந்த பிரிட்டீஷாரின் கொடூரமான சட்டங்களை இப் போது காங்கிரஸ் ஆட்சி இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர் கள் மீது பிரயோகித்தது. பிராமணியம் தனது நிலையைக் காக்க எதுவும் செய்யும் என்பது மீண்டும் நிரூபணமானது. எனினும் போராட்டம் சலிக்காமல் நடந்தது. செப்டம்பரில் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கூட்டத்திற்கு வந்ததாக “குடி அரசு” தெரிவித்தது. இதில் பங்கு கொண்டவர்களில் மறைமலையடிகள், கே.வி. ரெட்டி நாயுடு, பெரியார், சோமசுந்தர பாரதியார், பி.டி. ராஜன், மீனாம்பாள் சிவராஜ், மவுலான மவுல்வி ஷர்புதீன், பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார், ரெவரண்ட் அருள் தங்கையா, திருப்பூர் முகைய்தீன், அ. பொன்னம் பலனார், டாக்டர் தர்மாம்பாள் போன்றோரும் இருந் தார்கள் பிராமணியத்தின் மொழிக் கொள்கைக்கு எதிராக முதன்முதலாக தலைவர்களது ஒரு விரிந்த அணிவகுப்பும், பிரம்மாண்டமான வெகு மக்கள் திரளும் நடந்தது. தென் னகத்தைப் பொறுத்தவரை இப்படியொரு இயக்கத்தைப் பிராமணியம் இதுவரை சந்தித்ததில்லை.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த இந்தக் காலத்தில் சென்னையில் “தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு” நவம்பரில் நடைபெற்றது. இங்கும், அதற்கு முன்பும் பெரியார் பேசிய பேச்சுக்களுக்காக அவருக்கு ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார் பெரியார். அப்படிச் சிறை யில் இருந்த போதுதான் நீதிக்கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடிமைச் சமுதாயத்தில் இயங்கு வதையே பெரிதும் விரும்பிய அவர் ஓர் அரசியல் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு இயக்கம் அத்தகைய சூழலை உருவாக் கியது. டிசம்பரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் பெரியாரின் தலைமை உரை படிக்கப்பட்டது.

இந்தக் கட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் சிறையிலிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எல். நடராஜன் 1939 ஜனவரியில் மரணமடைந்தார்; முதல் களப்பலியானார். நாடார் வகுப்பைச் சார்ந்த தாளமுத்து இதுபோல மார்ச்சில் காலமானார். சிறையில் வாடிய பெரியாரின் உடல்நிலையும் மோசமானது. அவரை விடுதலை செய்யச் சொல்லியும் பொதுக்கூட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்தன. நிலைமை மோசமாவதை அறிந்த ராஜாஜி அரசாங்கம் அவரை மே மாதம் விடுதலை செய்தது. ஆனால் கட்டாய இந்தியை வாபஸ் வாங்கவில்லை. அது இரண்டாம் உலகப்போரின் காரண மாக ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா செய்த பிறகே - ஆங்கிலேய கவர்னர் ஆட்சியாலேயே - வாபஸ் பெறப் பட்ட து.

மொழிப் பிரச்சினையில் பிராமணிய நோக்கு

மொழிப் பிரச்சினையில் பிராமணிய நோக்கு காங் கிரஸ் தலைவர்களுக்கு இருந்ததை சத்தியமூர்த்தி அய்யரின் 1939 ஜூலை பேச்சு உணர்த்தியது. அது - “என் கைக்கு அதிகாரம் வந்தால், நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை (இந்தி மட்டுமில்லாமல்) சமஸ்கிருதத் தையும் கட்டாயமாகப் படிக்கும்படி செய்வேன். சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனையை ஏற்படுத்தி விடுவேன். காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தியாவில் ராம ராஜ்யம் ஏற்பட்டுவிட வேண்டும் என்று மிக ஆவலாய் இருக்கிறேன். ராமராஜ்யம் என்பது வர்ணச்சிரம முறைப் படி ஒவ்வொருவனும் அவனவன் ஜாதி தர்மப்படி நடந்து கொள்ள வேண்டியதுதான். ராமர் காலத்தில் இந்த வர்ணாச்சிரம முறைப்படியே, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் எனப் பிரிக்கப்பட்டு அவனவனுக்கு சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மங்களை அவனவன் செய்து கொண்டு திருப்தியாய் இருந்தான். அதனால் யார் மீதும் வருத்தப்படவில்லை.’’ எத்தகைய வர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தார்கள் என்பதை இது நன்கு புரிய வைக்கிறது. நல்ல வேளையாக இந்த மனிதர் கைக்கு அதிகாரம் வரவில்லை. ஆனால் இவரைப் போன்றவர்கள் நாணயமாகத் தங்களின் உள் ளக்கிடக்கையை வெளிப்படுத்தியதால் பிராமணிய எதிர்ப்பு இயக்கம் சென்னை மாகாணத்தில் கிளர்ந்தெழுந்தது!

தமிழகத்தின் வரலாற்றில் பிராமணியம் செய்த மிகப் பெரும் தவறாக இந்தித் திணிப்பு இருந்தது. சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் - மத எதிர்ப்பானது அதற்கு ஒரு தீவிர முகத்தைத் தந்தாலும் அதன் மக்கள் தளத்தை அக லப்படுத்தவில்லை. ஆனால், இந்தி எதிர்ப்பு இயக்கமோ அதற்கு ஒரு போராட்ட முகத்தைத் தந்ததோடு அல்லாமல் அதன் மக்கள் தளத்தை விரிவுபடுத்தியது. பின்னாளில் திராவிட இயக்கம் ஒரு பெருந்திரள் இயக்கமானதற்கான வலுவான அடித்தளம் இந்த மொழிப் போராட்டத்தில் உருவானது. அது பிராமணியத்திற்கு மிகப் பெரும் சவாலாக எழுந்தது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக.....

இந்தக் காலத்தில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்ததில் சுயமரியாதை இயக்கத்திற்கு தனித்த பங்கு இருந்தது. இது பிராமணியத்தின் நோக்கிற்கு நேர் எதிரானது. அவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை வளரவிடாமல் செய்ய முஸ்லிம்கள் மீது இந்துக்களை ஏவிவிடப் பார்த்தார்கள். பெரியாரின் இயக்கமோ சமூக நீதியை வென்றெடுக்க பிராமணரல்லாதார் - முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க முனைந்தது. முஸ்லிம்களின் வகுப்புவாரிக் கோரிக்கையை அதரித்தார், அது நடை முறைக்கு வந்தபோது வரவேற்றார் பெரியார். 1930 சைமன் குழு அறிக்கை வெளிவந்தபோது அதில் “7.5 கோடி மகமதியருக்கு வகுப்புரிமை. தாழ்த்தப்பட்டோருக்கு வகுப்புரிமை - இது போதுமானதல்ல. 10,000 இந்துக்க ளுக்கு ஒரு பிரதிநிதி என்றால் 1,00,000 தாழ்த்தப்பட்டவர் களுக்கு ஒரு பிரதிநிதி என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. எனினும் தாழ்த்தப்பட்டோருக்கு வகுப்புரிமை என்பது கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பெண் களுக்கு மொத்த இடங்களில் 5 முதல் 10 வரை தரப்பட்டுள் ளது. இது போதுமானதல்ல. எனினும் அவர்களது உரிமை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டி அதை வரவேற்றார். இதில் முஸ்லிம்களுக்கு வகுப்புரிமை தரப்பட்டதை முதலில் சொல்லி வரவேற்றிருப்பதை நோக்க வேண்டும்.

சென்னை மாகாணத்தில் ராஜாஜி மந்திரிசபை அமைந்த ஒரு மாதத்திலேயே இந்தியைத் திணித்தது என்றால், இரண்டு மாதத்திலேயே “வந்தே மாதரம்“ பாடலைச் சட்டசபையில் பாட வேண்டும் என்று விதித் தது. இது எப்படி முஸ்லிம்களுக்கு மதரீதியில் சிக்கலானது என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம். இதைப் புரிந்திருந்த பெரியார் அரசாங்கத்தைக் கண்டித்தார். “விடுதலை” ஏடும் கண்டித்தது. “வந்தே மாதரம்“ பாடலை எதிர்த்து 1938 மார்ச் 5 முதல் சத்தியாக்கிரகம் இருக்கப் போவதாக எஸ்.எஸ். பாமினி சாயுபு என்பவர் அறிக்கை விடுத்தார். உடனே ராஜாஜி அரசாங்கம் பின்வாங்கியது, அது சட்டசபையில் பாடப்படுவது நிறுத்தப்பட்டது.

1937-39ல் மாகாணங்களில் நடந்த காங்கிரஸ் அரசாங் கங்கள் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்ததைக் கண்டு வந்தோம். அவை ராஜினாமா செய்தபோது அதை வரவேற்றுக் கொண்டாடும்படி அறிக்கை விடுத்தார் முஸ்லிம் லீக்கின் ஜின்னா. ராஜாஜியின் அடக்குமுறை அரசாங்கம் ஒழிந்ததில் பெரியாரின் இயக்கமும் மகிழ நிறைய காரணங்கள் இருந்தன. குறிப்பாக இந்தித் திணிப்பு. ஆகவே அந்த ஆண்டு டிசம்பரில் ஈரோட்டில் அதற்காக நடந்த கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசினார்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 24.5.20