தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜனவரி, 2019

ஏன் பிராமணீயத்தை எதிர்க்கின்றோம்

*தினமணியில் வந்த கட்டுரை இது. ஏன் பிராமணீயத்தை எதிர்க்கின்றோம்..*👇

ஆதிமூலம் ஆதிமனிதன்...

ஆரியர்களை விட ஆங்கிலேயர்கள் குறைந்த அயோக்கியர்களே...

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பிராமணர்கள் !
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?

800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.

ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் *இந்து மனு தர்ம* சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..?

அவை என்னவென்று பார்ப்போம்...

பிராமணன் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது.

சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை  வெளியிடப்பட்டது.

1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்
(இந்து மனு சட்டம் VII 374, 375),

ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும். 
(இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது....!!

சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும்.
அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பிராமணன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த
இந்து சட்டத்தை 1835 ஆண்டு Lord
மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற
ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.

1835 ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.

1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால் "ஜோதிராவ் புலே"வுக்கு கல்வி கிடைத்திருக்காது,
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது,
அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது,

இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை, அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

சூத்திர பஞ்சமனின் அடிமை சங்கிலியை உடைத்த பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுவோம்.

(ஆதாரம்:தினமணி 25-2-2007)

புதன், 4 ஜூலை, 2018

அதே குடந்தையில்தான்... (ஆலய நுழைவு)

82 ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் நடந்த ஒரு செய்தியினை தினமணி' வெளியிட்டு இருந்தது.

அந்தச் செய்தி இதோ:

5.9.1936 சனிக்கிழமை குடந்தை ஆலயத்தில் பஜனைக் கோஷ்டி ஹரிஜனங்களா? உள்ளே பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

(நமது செய்தியாளர்)


கும்பகோணம் செப்.4 நேற்று இரவு இந்நகர் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி கோயிலில் சுமார் 15 பேர் பஜனை செய்துகொண்டு மேலண்டை கோபுர வாசல் வழியாய் உள்ளே வந்தார்கள். இவர்களைக் கண்டவுடன், அங்கிருந்த வைதீக இந்துக்கள் பயந்து, அவர்களை அணுகி, நீங்கள் யாரென்று கேட்கவே, தாங்கள் நீலகிரி வாசியென்றும், ஆலயப் பிரவேச உரிமை உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் சொல்ல, நிச்சயமாய் அவர்கள் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவரும் இந்நகரில் தெரிந்துகொள்ள முடியாததால், உள்ளே போக அவர்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டது. அதற்குமேல் அவர் கள் வெளியேறி விட்டார்கள். ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயத்திலும் இப்படியே தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.''

(தினமணி', 6.9.1995)

82 ஆண்டுகளுக்குமுன் இது நடந்திருக்கலாம். இன்று மட்டும் என்ன வாழ்கிறது? கும்பகோணத்தில் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர அர்ச் சர்களாக மற்றவர்களால் வர முடிகிறதா?

ஜாதி இழிவையும், தீண்டா மைக்கொடுமையையும்ஒழிக் கும் போரில் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டு வரலாற்றின் உச்சியில் நின்று ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.

பொது வீதிகளில் நடக் கும் உரிமை, உயர்ஜாதி பார்ப் பனர்கள் உணவு விடுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் உட் கார்ந்து உண்ணும் உரிமை என்று எழுத ஆரம்பித்தால், பட்டியல் அடங்காது.

குஷ்டரோகிகளும், நாய் களும், பறையர்களும் உள்ளே நுழையக்கூடாது என்று சென்னை மவுண்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் விளம்பரப் போர்டே வைக்கப்பட்ட ஒரு காலகட்டம் இருந்ததுண்டு. இரயில்வே உணவு விடுதியில் பிராமணாள்-சூத்திராள்என்ற பேதம்இருந்தது.அவைஎல் லாம் அய்யாவின் அருந்தொண் டால் அடித்து நொறுக்கப்பட்டது.

தனது இறுதிப் போராட்ட மாக - இன இழிவு ஒழிப்புப் போராட்டமாக அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டப் பதாகையைக் கையில் ஏந்தி வீதிக்கு வந்தார் வைக்கம் வீரர் தந்தை பெரியார்.

தந்தையே, உங்கள் தனயன் (கலைஞர்) ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது, நீங்கள் போராடவேண்டுமா? ஆணையிடுங்கள் நிறைவேற்றி முடிக்கிறேன்' என்று கூறி, இரு முறை சட்டங்கள் இயற்றியும், ஆரிய - வைதீகக் கும்பல் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி தடை செய்தது என்றாலும், அதில் இப்பொழுது நாம் வெற்றி பெற்றும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை நிலை தான் இன்றுவரை!

இதற்கும் ஒரு முடிவு காண் போம். 1936 இல் குடந்தையில் நிகழ்ந்த இழிவுக்கு குடந்தை மாநாட்டில் முடிவு காண்போம் - வாரீர்! வாரீர்!!

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 4.7.18