சுயமரியாதை இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயமரியாதை இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 மே, 2024

சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

வரலாறு : சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்
2022 செப்டம்பர் 16 -30 2022 வரலாற்றுச் சுவடு

5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
1. மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். ஒரு நாட்டின் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எவரும் எவருக்கும் தாழக் கூடாது. எவரும் எவரையும் தாழ்த்தவும் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும்.
2. மனிதனுக்கு மனிதன், பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு எதுவும் கிடையாது. பிறப்பில் வேறுபாடுகள் கற்பித்து, உயர்வு_தாழ்வு என்ற நிலைகளை ஏற்படுத்தியது, ஆதிக்க உணர்வு கொண்ட மோசடிக்காரர்களும், பித்தலாட்டக் காரர்களும் இடைக்காலங்களில் செய்த வேலையே ஆகும்.
3. மனிதனும் மனிதனும் ஒருவரோடு ஒருவர் அன்போடும், பண்போடும், உறவோடும், உரிமையோடும், நட்போடும், ஆதரவோடும், அரவணைப்போடும் பழகுவதற்கு ஏற்ற மனிதத் தன்மை உடையவர்களேயல்லாமல், தீண்டாமை, பாராமை, சேர்க்காமை, மதிக்காமை போன்றவற்றால், ஒருவரையொருவர் புறக்கணிப்-பதற்கும், தள்ளி வைப்பதற்கும் இடமேயில்லை.
4. மனிதர்களுக்குள்ளாகவே, அவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் கொள்கைக் கோட்-பாடு, சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சமயங்களும், ஜாதிகளும் வேரோடு களைந்தெறியப்பட வேண்டும்.
5. மனிதனை முட்டாளாக ஆக்குவதற்கும், முரடனாக ஆக்குவதற்கும், வெறியனாக ஆக்கு-வதற்கும், பைத்தியக்காரனாக ஆக்குவதற்கும், ஆதிக்கக்-காரனாக ஆக்குவதற்கும், ஆணவக்-காரனாக ஆக்குவதற்கும் பயன்படுத்தப்படும் கடவுள், மதம், ஜாதி, சாத்திரம், புராணம், இதிகாசம், வேதம், மோட்சம், நரகம், பேய், பூதம், பிசாசு, பில்லி சூன்யம், ஜோதிடம், குறி, மந்திரம், பூசை, யாகம் சடங்கு, பண்டிகை போன்ற கற்பனைக் கூறுபாடுகள் அனைத்தும், அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.
6. மனிதனின் சிந்தனை அறிவுத்திறன், செயலாற்றல் திறன், சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் பாங்கு, தகுதி, திறமை போன்றவற்றையெல்லாம் கெடுத்து, அவனை முழு முட்டாளாக்கக் காரணமாக இருக்கும் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம், பஜனை பாடுதல், செபம் செய்தல், வழிபாடு நடத்துதல், சடங்குகளைக் கடைப்பிடித்தல் போன்றவை, மனித சமுதாயத்தை விட்டு அறவே அகற்றப்பட வேண்டும்.
7. உலகில், நல்லது -_ தீயது, உயர்ந்தது -_ தாழ்ந்தது, சிறந்தது -_ சிறுமையது, பலன் அளிப்பது -_ பலன் அளிக்காதது, உதவுவது -_ உதவாதது, ஆக்குவது -_ அழிப்பது, மதிக்க வேண்டியது -_ மதிக்க வேண்டாதது எவை எவை என்று பகுத்தறிந்து பார்த்து, பயன்படும் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் துணிவு மட்டும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏற்பட வேண்டும்.
8. தன்மான உணர்ச்சி, உரிமையுணர்வு, விடுதலை வேட்கை, சிந்திக்கும் ஆற்றல், செய்து முடிக்கும் தன்மை ஆகியவற்றைக் கட்டிக் காக்கும் தகைமை ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும்.
9. எதிர்காலம் அறிவியலுக்கு உரிய-தேயல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல; மனிதனுக்கு உரியதே அல்லாமல் கடவுளுக்கு உரியது அல்ல என்ற நிலை ஏற்பட வேண்டும்.
10. பகுத்தறிவு நெறியில் நின்று, பண்பாட்டுத் தன்மையோடு, தன்மானவுணர்வு கொண்டு சமுதாயத்தைச் சீர்படுத்தவும், செம்மைப் படுத்தவும் ஒவ்வொருவரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும்.
11. பகுத்தறிவுணர்வோடு எதையும் சிந்தித்து, பகுத்தறிவுணர்வோடு எதையும் சொல்லி, பகுத்தறிவுணர்வோடு எதையும் செயலாற்ற மக்களனைவரும் தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
12. நல்லறிவு, நல்லாற்றல், உயர் உண்மை, நல்ல உழைப்பு, நல்ல நோக்கம், நாணயம், நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம், இயற்கைப் போக்கு ஆகியவற்றிற்கு மதிப்பு அளித்துப் பாடுபடவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கொள்கை விளக்கம் செய்தார்.

திங்கள், 27 மே, 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ஓர் அரிமா நோக்கு-1


பிற இதழிலிருந்து… 

விடுதலை நாளேடு,
Published May 21, 2024

சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா தொடங்கிவிட்டது. அந்த இயக்கம் எந்த நாளில் தோற்றுவிக்கப்பட்டது என்கிற வினாவுக்கு எம்மைப் பொறுத்தவரை பெரியாரின் குடிஅரசு வாரஏடு தொடங் கப்பட்ட நாளான 2.05.1925அய் தான் சொல்வோம். ஓர் ஏடு இயக்கமாக முடியும் என்பதற்குப் பெரியதொரு எடுத்துக்காட்டு குடி அரசு ஏட்டின் பணிகளே ஆகும். அந்த ஏட்டிற்கும் இது நூற்றாண்டு விழாத் தொடக்கம். குடிஅரசு ஏடு 05.11.1949 ஆம் தேதியிட்ட இதழோடு நிறுத்தப்பட்டுவிட்டது. சுமார் கால் நூற்றாண்டு காலம் நடந்த குடிஅரசு ஏடு பல விவாதங்களை நடத்தி இருக்கிறது. எண்ணற்ற சாதனைகளைப் புரிந்து இருக் கிறது. அதாவது சுய மரியாதை இயக்கம் அவற்றை நிகழ்த்தி இருக்கிறது.

தந்தை பெரியார் பொறுப்பில் தொடங்கிய குடிஅரசு ஏடு மட்டுமல்லாமல் சிறிது காலம் நீதிக்கட்சியின் திராவிடன் ஏட்டையும் அவர் பொறுப்பேற்று நடத் தினார். இதோடு அவர் புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு, ஜஸ்டிசைட், விடுதலை போன்றவற்றையும் நடத்தினார். இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் எரியீட்டிகளே ஆகும். இந்த ஒவ்வொரு ஏட்டின் தோற்றத் திற்குப் பின்னும் சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகள் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.

சுயமரியாதை இயக்கத் தொடக்கத்தைப்பற்றி பெரியார் அதன் தொடக்க ஆண்டைக் குறிப்பிடாமல், “சமுதாய தொண்டு செய்கிற ஸ்தாபனத்திற்குச் சுய மரியாதை இயக்கம் என்று ஏன் பெயர் வைக்க வேண்டி வந்தது என்றால் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் மனமாற்றத் தன் மையை எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காக முதலில்,‘Self Respect Propaganda Institution’ என்று ஆங்கிலப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது” என் கிறார். அவர் ஆற்றிய 15.03.1970 திருச்சி சொற்பொழிவில் இக்கருத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.
சிலர் பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறிய நாளையும் சென்னை மாகாண 10ஆவது பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டின் தீர்மானம் நிறைவேறிய நாளையும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளாகச் சொல்வர். நாம் (கட்டுரையாளர்) இதனையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் தொடங்கிய குடிஅரசு ஏட்டின் முதல் தலையங்கத்திலேயே ‘சுயமரியாதை’ வற்புறுத்தப்படுவதால் நாம் அதனையே சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளாகக் கொள் கின்றோம். அவ்வளவே.

சுயமரியாதை இயக்கம் சமய சீர்த்திருத்த இயக்கம் போல் தோன்றி, தன்னை அதன் அடுத்த கட்டத்தில் நாத்திக இயக்கமாய் அது பிரகடனப்படுத்திக் கொண் டது. இந்தப் பிரகடனத்தை வெளியிட தந்தை பெரியார் 47 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். இதற்காக யாரும் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. பெரியார் சிந்தனை வளர்ச்சியின் போக்கும் அதன் ஈவும் அது. இதை விளக்கினால், ‘சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’ எனும் பெரியார் முழக்கத்தின் உட்பொருளை அறிய லாம். சுயமரியாதைக் கொள்கையைப் பயின்றால் அதனை உணரலாம்.

சுயமரியாதை இயக்கம் இன்றும் திராவிடர் கழகமாக மாபெரும் நிறுவனமாக இயங்கி வருகிறது. இதற்கு இரண்டு கட்டங்கள் உண்டு. முதற்கட்டம் 1925-1944; இரண்டாவது கட்டம் 1944க்குப் பிறகு-அதாவது இன்று வரை, ‘சுயமரியாதை இயக்கம்’ திராவிடர் கழகமாகி விட்டது. ஆனால் ‘சுயமரியாதை’ எனும் சொல்லின் மீது ‘காதலாகி கசிந்துருகிய’வர் பெரியார். ஆகையினால் அவர் ‘The Periyar Self – Respect Propaganda Institution – Tiruchirapalli’  எனும் பெயரில் 1952 இல் அந்நிறுவனத்தை பதிவு செய்து இருக்கிறார். எனவே சுயமரியாதை இயக்கம் சட்டப்படியான பதிவி லும் இருக்கிறது.

சுயமரியாதை இயக்கம் பதிவு குறித்து ஒரு முன்னு ரையே எழுதும் அளவுக்குச் செய்திகள் உண்டு. இந் நிறுவனத்தின் பெயரால்தான் ஏராளமான கொள்கை விளக்க ஏடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந் நிறுவனத்தின் சார்பாகவும் தற்போது கூட்டங்கள், கருத் தரங்குகள், ஆய்வுரைகள், மாநாடுகள் என நடத்தினால் அந்தப்பெயர் இன்னும் விளங்கி வருவதை மக்க ளுக்குஉணர்த்தலாம் என்பது எமது எண்ணம். ‘சுய மரியாதை இயக்கம்’ என்கிற பெயரால், எமக்குத் தெரிய சில சிந்தனையாளர்களால் இருமுறை இவ்வமைப்பு தோற்றுவிக்கப்பட்டு செயல்படாமல் ஆகிவிட்டது என்பதையும் இச்சமயத்தில் நினைவுகூருவது தவறா காது.

இந்திய பூபாகத்தில் எத்தனையோ சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு இருக்கின்றன. அவை செயல்பட்டும் இருக்கின்றன. இன்று அவை இல்லை. அவற்றுள் சில ஆவணங்களாகவும் வெறுங் கட்டடங்களாகவும், அலுவலகமாகவும், அமைப்புகள் இருந்ததற்கான அடையாளங்களாகவும் இருந்து வருகின்றன. விசாரித்து அறிய வேண்டியவைகளாகவும் உள்ளன. ஆனால் சுயமரியாதை இயக்கம் என்கிற நிறுவனம்-அமைப்பு-ஸ்தாபனம் அவை போன்றதன்று. கொள்கையில், இயங்குவதிலும் அமைப்பில் பெரிதும் மற்ற சீர்த்திருத்த நிறுவனங்களிலிருந்து அடிப்படை அம்சங்களிலேயே சுயமரியாதை இயக்கம் வேறுபாடு உடையதாகும். இதைப் போன்றதொரு அமைப்பை, மற்றொன்றைக் காட்ட முடியாது என்றே நாம் சொல்ல வருகின்றோம்.

சுயமரியாதை இயக்கத்தின் முதற் கட்டத்தில் (1925-1944) அதன் பணிகள் தமிழ்நாட்டை மட்டுமன்று – இந்தியாவையே புரட்டிப்போட்டது. 1935 வரை அதன் வேகம்-பணி அனைத்துத் துறையிலும் ஊடுருவியது. பெரியாரின் குடிஅரசு காந்தியாரையும் காங்கிரசையும் 1927 வரை ஆதரித்தது. பிறகு ஆதரவை முழுமையாக நிறுத்திக் கொண்டது. காந்தியாரையும் காங்கிரசையும் சுயமரியாதை இயக்கம் கடுமையாக விமர்சனம் செய்தது.
நீதிக்கட்சியை அதன் ஒற்றை வரி அரசியல் முழக் கத்திற்காகவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காகவும் சுயமரியாதை இயக்கம் ஆதரித்தது. அந்தக் கட்சி 1926லேயே காணாமல் போயிருக்கும். அது இருக்க வேண்டியதன் அவசியத்தை சுயமரியாதை இயக்கம் தனது வழிகாட்டுதல்கள் மூலம் நீதிக்கட்சியைக் காத்து நின்றது. அதன் தலைவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் தாலுக்கா, மாவட்ட, மாகாண மாநாடுகளில் பங்கேற்ற னர். உரையாற்றினர். நீதிக்கட்சியும் சுய மரியாதை இயக்கமும் ஒரே அமைப்போ என்று நினைக்கும்படி இருந்தது. ஆனால் அவை இரண்டும் ஒரே அமைப்பு கள்- இல்லை, வெவ்வேறானவை.

1892க்கும் 1925க்கும் இடைப்பட்டட காலத்தில் சென்னை மாகாணத்தில் நிரம்ப ஜாதி சங்கங்கள் தோன்றின. இவற்றின் வளர்ச்சி நீடித்தது. சுயமரியாதை இயக்கக் காலத்தில் இந்த அமைப்புகள், மேலும் வளர்ந் தன. இவ்வமைப்பினர் சுயமரியாதை இயக்கத்தினரை குறிப்பாகப் பெரியாரைப் பேச அழைத்தனர். அந்தந்த வகுப்புக்குரிய தேவைகள் அதிகமாயின. பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் பேசுகிறபோது அவர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை எடுத்துக் கூறி வகுப்பை முன்னேற்றக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். பார்ப்பனரல்லாத அனைத்து வகுப்புக் கூட்டங்கள், மாநாடுகளில் பங்கு வகித்த பெரியார் குடிஅரசிலும் இவற்றைப் பற்றி எழுதினார்.

செய்திகளையும் கருத்துகளையும் வெளியிட்டார். இந்த அமைப்புகள் எல்லாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தைக் குடிஅரசின் தலையங்கத்தின் மூலம் வலியுறுத்தினார்.
பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், தாழ்த்தப்பட் டோர் எனும் பகுப்பைத் திராவிட இயக்கம் உருவாக்க வில்லை. முதலில் இது எங்குத் தொடங்குகிறது என்றால், 1870-1871 ஆண்டு கல்வித் துறை அறிக்கையில் இந்த பகுப்புகள் இடம் பெறத் தொடங்குகின்றன. பார்ப்பனர் கள் ஏனைய இந்துக்கள்(Brahmins.other Hindus). என்றும் 1873-1874இல் பார்ப்பனர்கள் இந்துக்கள் அற்ற (Brahmins, Hindu not Brahmins) என்றும் இடம்பெற்றுள்ளன. இத்தொடர்களின் தாக்கத்தினால் ‘The Madura Country’ எனும் நூலை எழுதிய ஜே.எச்.நெல்சன் அந்த, நூலில் ‘Non-Brahmin’ என்று பார்ப்பனர் அல்லாத மக்களை எழுதினார்.

இது பயன்பாட்டிற்கு வந்தது. இது பிரிட்டிஷ் அரசின் நிர்வாக வசதிக்கும் பார்ப்பனர் அல்லாத வகுப்பாரை ஒன்று திரட்டவும் அரசுக்கும் அமைப்புகளுக்கும் உதவியாயிற்று. மேலும் பார்ப்பனர் வளர்ச்சி மற்ற வகுப்பாரிலிருந்து தனித்தும் ஆளுமை மிக்கதாயும் பிறப்பின் வழி சமூகத்தின் அத்தனை நலன்களை அவர்கள் மட்டுமே அனுபவிக்க உரியவர்கள் என்ற நிலையை மிக அப்பட்டமாக வெளிப்படுத்தின. அப்போது இந்த ‘Non- Brahmin’ என்கிற பார்ப்பனர் அல்லாதார் எனும் சொல் பார்ப்பனர் தவிர்த்த இதர வகுப்பாரை ஒருங்கிணைக்கப் பயன்பட்டது. சுயமரி யாதை இயக்கம் இச்சொல்லைப் பயன்படுத்தி மக்களை முன்னேற்றக் கூடிய வகையில் மாபெரும் தூண்டு கோலாய் இருந்தது.

வட இந்தியாவில் இந்து-முஸ்லிம் வேறுபாடுதான் அரசியலாக இருந்தது. இன்றும் அதே நிலை அங்கே தொடருகிறது. தென்னிந்தியாவில் பார்ப்பனர்-பார்ப் பனர் அல்லாதார் என்பது அரசியலாக இருந்தது. அதற்குக் காரணம் மக்களின் வாழ்நிலைதான்! காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் அதற்கு எதிராக நீதிக்கட்சியை கொள்கை வழி ஆதரித்தார். சுயமரி யாதை இயக்கத்தை ‘மிக வலுவாக’ எதிர் நிறுத்தினார். அரசியலில் அறிவுரை வழங்குவதிலும் போராட்ட வழியிலும் முன்னின்ற சுயமரியாதை இயக்கத்தை மக்களும் அரசியல் வாணர்களும் பெரிதும் கவனிக்கத் தொடங்கினர்.
சுயமரியாதை இயக்கம் சமூகத்தின் எல்லாத் துறை யினரையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்துமதம், அதன் வர்ணாசிரமம், அதற்கும் மேலான பார்ப்பனரின் ஆதிக்கம் குறித்து காந்தியாரிடம் கலந்துரையாடல் நடத்தினார் பெரியார். அதனால் அவர் நிறைவடையவில்லை. ஆகவே அவர் தம்மை ‘அழிவு வேலைக்காரன்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். சுயமரியாதை இயக்கத்தைக் கருவியாக்கிக் கொண்டார். களத்தில் இறங்கினார். பார்ப்பனரின் சமூக மேலாண்மையை அப்புறப்படுத்த சுயமரியாதை இயக்கம் பணியாற்றியது. ஆகவே அது பார்ப்பனர் அல்லாதாரின் திருமணங்களில் புரோகிதரை நீக்கிய முறையை அறிமுகப்படுத்தியது. குழந்தைக்குப் பெயர் சூட்டுதல் முதல் மரணம் வரை சுயமரியாதை இயக்கம் ஒரு வழிகட்டுதலை வழங்கியது.

கடவுள், மதம், வேதங்கள், ஸ்மிருதிகள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை மிகக் கடுமையாக விமர் சனம் செய்தது சுயமரியாதை இயக்கம். அவை பார்ப் பனர் அல்லாதாரை அடிமையாக வைத்து இருக்கிறது. சுயசிந்தனை இல்லாமல் ஆக்கியிருக்கிறது என்பதை எடுத்துரைத்தது.
மேலும் பார்ப்பனர் அல்லாதார் ஜாதிப்பெயரைப் போட்டுக் கொள்ளவோ பயன்படுத்தவோ கூடாது. வீட்டு விழாக்களுக்கோ திருமணங்களுக்கோ பார்ப் பனப் புரோகிதர்களை அழைக்கக் கூடாது. தாழ்த்தப் பட்டோருக்குச் சமநிலை வழங்குங்கள், அவர்களைக் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதியுங்கள், எல்லா மக்களையும் சாலைகள், கிணறுகள், குளங்கள் ஆகிய வற்றைப் பயன்படுத்த அனுமதியுங்கள் எனச் சுயமரியாதை இயக்கம் குரலெழுப்பியது. அதற்காகப் போராட்டங்களை நடத்தியது.

இதுவன்றி, பஞ்சாங்கம், சோதிடம், இராகுகாலம், எமகண்டம், சகுனம், சடங்கு, பல்லி பலன், விளக்கு வைத்துப் பார்த்தல், வெற்றிலையில் மையிட்டு கணித் தல், பில்லி, சூன்னியம், ஆவேசங் கொண்டு ஆடிக் குறிச் சொல்வது, குச்சி கொண்டு கரம் பார்த்துக் குறி சொல்வது, சடங்குக்காய் மொட்டைப் போடுதல், மீசை எடுத்தல், கணவரை இழந்த பெண்களை சம்பிரதாயம் எனும் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாக்குதல், மணிக்கட்டில் விதவிதமான கயிறு கட்டுதல், ஜாதியை வெளிப்படுத்த கயிறு கட்டிக் கொள்ளுதல், மந்திரம் சொல்வது-அதன் மூலம் ஏமாற்றுவது என இப்படிச் சமூகத்தில் என்னென்ன அவலங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் பட்டியலிட்டது சுயமரியாதை இயக்கம்.

இதன் மூலம் ஒரு பய உணர்வே வாழ்க் கையில் கிளப்பிவிடப்படுகிறது-ஏமாற்றுக்காரர்கள் பிழைப்ப தற் கான வழிகளே இவை. இவற்றைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனச் சுயமரி யாதை இயக்கம் அவர்களை நெறிப்படுத்தியது.
1928-ஆம் ஆண்டிலிருந்து சுயமரியாதைத் திரு மணங்கள் நடைபெறுகின்றன. இதற்கு நல்ல வர வேற்புக் கிடைத்தது. திருமணங்கள் மற்றும் நீத்தார் வழிபாடுகள் நிகழ்ச்சிகளில் புரோகிதர்கள் நீக்கப் பட்டனர். திருச்சியில் தமிழ்நாடு புரோகிதர் மறுப்புக் கழகம் உருவாக்கப்பட்டது. புதியதோர் சுயமரியாதை உலகம் காண பெரியார் 1927-1928இல் மநு ஸ்மிருதியைக் கொளுத்தினார்.

1942-1944லிலும் இது தொடர்ந்தது. சுயமரியாதைத் திருமணங்கள் குறித்து ‘மெட்ராஸ் மெயில்,’
“சுயமரியாதை இயக்கம் பார்ப்பனர் அல்லாதாரை விழிப்படையைச் செய்து இருக்கிறது. சுயமரியாதை எழுச்சிக் கொள்ளச் செய்துவிட்டது. பார்ப்பனச் சகோதரர்களைப் போலவே அவர்களையும் சமமாக எண்ண வைத்துள்ளது என்பதை எங்கும் காண முடிகிறது. திருமணங்களையும் சடங்குகளையும் பார்ப்பனர்களின் உதவியின்றி பார்ப்பனர் அல்லாதாரைக் கொண்டே செய்து கொள்ளும் நிலையைச் சுயமரியாதை இயக்கம் உருவாக்கிவிட்டது.”
என்று குறிப்பிட்டு இருக்கிறது. இவை 28.12.1926, 02.07.1928, 13.05.1940 எனத் தேதியிட்ட மெயில் நாளேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எந்தத் தலைவர்கள் வீட்டுத் திருமண நிகழ்வைச் சுட்டிக்காட்டி இதை மெட்ராஸ் மெயில் குறிப்பிடுகிறது என்பதுதான் முக்கியம்.

– நன்றி: முரசொலி, 20.5.2024

புதன், 15 மே, 2024

சுயமரியாதை இயக்கம் தோற்றமும், வளர்ச்சியும்



விடுதலை நாளேடு
Published April 25, 2024

கவிஞர் கலி.பூங்குன்றன்

“மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடைய வும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடுகின்றது. இவற்றிற்கு எதிராகவும், தடை யாகவும் இருக்கும் எதையும் அடி யோடு ஒழிக்கத் தைரியம் கொள்கிறது”
(குடிஅரசு’ 20.9.1931)
தன்மான இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று வரலாற்றில் நின்ற இந்த இயக்கத்தின் ஆணி வேர் எதை நோக்கி? அதை ஈட்ட அது எதையும் சந்திக்கவும், தடைகளைத் தகர்க்கவும் தோள் தூக்கி எழுதுவது என்று ‘தீர்மானித்துவிட்டது.
அந்தத் தடைகள் (1) கடவுள், (2) மதம், (3) சாஸ்திரம் (4) காந்தி (5) பார்ப்பான் வடிவங்களாலும், சிந்தனை ஓட்டத்தாலும் ஆணி வேர்வரை இங்கு பதிந்துள்ளன என்பதை அறுதியிட்டுத் தெரிந்து கொண்ட தந்தை பெரியார் இவை அய்ந்தும் ஒழிக என்கிற முழக்கத்தோடு தன் மான இயக்கத்தைத் துவக்கினார்.

‘இந்த அய்ந்தும் சமுதாயத்தில் எவ்வளவுப் பலமாக வேரூன்றி நின்றன – எந்த மக்களுக்காகப் பாடுபடப் போகிறோமோ, எந்த மக்களின் நன் மைக்காக இவற்றை எதிர்க்கப் போகிறோமோ அந்த மக்களே தம் பணிக்கு எதிர்ப்பாக முரட்டுத் தனத்துடன் கிளம்புவார்கள் – அந்த அளவுக்கு அந்த மக்களின் சிந்தனை சீழ் பிடித்துப் போயிருக் கிறது; அவர்களின் மூளைக்கு இந்தப் பிற்போக்குச் சக்திகள் விலங்கிட்டு விட்டன என்பதை உணர்ந்த நிலையில்தான் யாரும் செய்ய முன் வராத பணியைத் தந்தை பெரியார் அவர்கள் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்ய தானே முன் வந்தார்.

அதனால்தான் தம் மக்களாலேயே கடும் எதிர்ப்பும், கொடும் தொல்லைகளும் மூர்க்கப் புயலாகக் கிளம்பியபோதும், அது இயல்பானது தான் என்று எடுத்துக் கொண்டார்களே தவிர, அவர்களை வெறுக்கவோ, வீண் வம்பு – தும்பு களில் ஈடுபடவோ எண்ணினார்கள் இல்லை. அவர்களின் மயக்கத்தை, மதியீனத்தை மாற்றுவது தான் அதற்குச் சரியான மா மருந்து என்று எண்ணி அறிவுத் துறையில் தன் பணியைத் துவக்கினார்கள்.
‘சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போது கூட நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், நம்பியுமேதான் இக்காரியத் தில் இறங்கினோம். இவ்விஷயத் தில் நமக்குள்ள உறுதிதான் இவ்வியக்கத்துக்குச் சொத்தும், அஸ்திவாரமுமேயொழிய வேறு ஒன்றுமில்லை” (‘குடிஅரசு’ 10.2.1930) என்று கூறுகிறார். இதில் உள்ள துணிவும், தீர்க்கமும் தீயில் அழுக்கு இல்லை என்பதுபோன்ற தெளிவைத் தீர்க்கமாக வெளிப் படுத்துகின்றன.
கடைசி மூச்சு அடங்கும்வரை இந்தத் தூய்மையை, தன்மையை தந்தை பெரியாரிடம் காணலாம்.
இந்தச் சுயமரியாதை உணர்வு என்பது சின்னஞ் சிறு வயதிலேயே தந்தை பெரியாரைப் பற்றிக் கொண்டதுதான்! அந்த உணர்வின் ஊட்டமே, பிற்காலத்தில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலுமே ஒளிவிட்டது! எந்தச் சுற்றுச் சார்பும் அவரைப் பலி கொள்ளவில்லை.

தாம் எடுத்துக் கொண்ட பணி எத்தகையது என்பதை 1933-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறுகிறார்:
மனித சமூகத்திற்கு தீங்கை இழைத்து வரும் விஷயம் கடவுள் சொன்னதானாலும், மதம் சொன்னதானாலும் அல்லது கடவுளும், மதமும், அரசாங்கமும் சொன்னதானாலும் அவைகளை அழிக்கத் தைரியம் கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் வெகு காலமாகவே முன்னோர் காலந்தொட்டு மதச் சீர்திருத்தவாதிகளாகவும், கடவுள் சீர்திருத்த வாதிகளாகவும், ஒழுக்கச் சீர் திருத்தவாதிகளாகவும், அரசு சீர்திருத்தவாதிகளா கவும் இருந்து பார்த்தாய் விட்டது. நமது முன் னோர்கள் காலம்தொட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் சீர்திருத்தவாதிகளாய் இருந்தும் பார்த்தாய் விட்டது. எந்தத் துறையில் சீர்திருத்த மடைந்திருக்கிறோம்? ஏழை “சீர் திருத்தமடைந்து” நாளுக்கு நாள் பட்டினியும், நோயும், இழிவும் அடைந்து கொண்டே போகிறான். பணக்காரனும், சோம்பேறியும் சீர்திருத்தமடைந்து, நாளுக்கு நாள் பெரும் பணக்காரனாகி, பிரபுவாகி, ஜமீனாகி, ராஜா வாகி, தலைமுறை தலைமுறை ஜமீனும், ராஜாவு மாய் ஆகிக் கொண்டே போகிறான்.

சீர்திருத்தத்தின் பலனைக் காண்பதற்கு இன்னும் வேறு என்ன உதாரணம் வேண்டும்? ஆகவே, ஏழைத் தன்மை, பணக்காரத் தன்மை என்கின்ற இரண்டு தன்மை யும் உலகில் இருக்கக் கூடாது என்று அவைகளை அடி யோடு அழிப்பது நல்ல வேலையா? அல்லது அத்தன்மைகள் எந்த ரூபத்திலாவது என்றும் இருக்கும்படி சீர்திருத்தம் செய்வது நல்ல வேலையா? என்று யோசித்துப் பாருங்கள். அழிவு வேலைக்கு எதிர்ப்புதான் சீர்திருத்த வேலை என்பது. தீமைகளுக்கு காவல்தான் சீர்திருத்தம் என்பது. ஆகவே, தீமைகளை அழிக்க வேண்டு மானால் அவற்றின் காவல்களையும், காப்பு களையும் முதலில் நிர்த் தூளியாக்க வேண்டும்.
அரசனையானாலும், மதத்தையானாலும், கடவுளையானாலும் நாம் எதிர்ப்பதும், அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம் இவை தீமைக்கு காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவைகளிடம் நமக்கு பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதால் அல்ல. ஏழ்மைக் கஷ்டமில்லாமலும், பணக்கார கொடுமை இல்லாமலும், பார்ப்பன உயர் ஜாதி இல்லாமலும் – பறையன் தாழ்ந்த ஜாதியல்லாமலும் – முதலாளி ஆதிக்கமில்லாமலும் – கூலி அடிமைத் தன்மை இல்லாமலுமிருப்பதற்கு ஆதாரமான மதம், கடவுள், அரசன், சட்டம், நீதி, தர்மம் ஆகிய வைகளை நாம் அழிப்பதில்லை. அவைகளைப்பற்றி நமக்கு கவலையேயில்லை.

இவர்கள் விஷயத்தில் நாம் மதத்துரோகியோ, கடவுள் துரோகியோ, ராஜத் துரோகியோ, சட்டம் மறுக்கவோ, அதர்மக்கா ரனாகவோ இருக்க நாம் சிறிதும் விரும்பவில்லை.
ஏழை – பணக்காரத் தன்மையையும், கீழ்-மேல் ஜாதியையும், முதலாளி, அடிமையையும் கொண்ட தான நிலைமைகள் நடைபெற ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன், தர்மம், சட்டம் ஒழிந்தே ஆக வேண்டும். ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன் என்பவைகள் மாத்திரமல்ல இவைகளை அனுமதித்துக் கொண்டிருக்கும் அரசாங்கமும், நீதி, ஒழுக்கம், பழக்கம், வழக்கம் முதலியன என்பவைகளையும், நாங்கள் அழித்தே தீருவோம். ராஜத் துரோகி, கடவுள் துரோகி, மதத் துரோகி பூச்சாண்டிகள் இனி சுயமரியாதைக்காரர்களிடம் செல்லாது.

சுயமரியாதைக்காரர்களிடம் மாத்திரமல்ல, வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே அவை களுக்கு இடமில்லாமல் போகப்போகின்றது. இதுகால வரையும் கஷ்டப்படும் மக்கள் தங்கள் தலை விதியின்மீதும், கடவுள் மீதும் பழி போட்டுக் கொண்டு தலைவிதியை மாற்றவும், கடவுள் தயவு பெறவும் என்று மேலும் மேலும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்து வந்தார்கள். ஆனால், இப்போது சுயமரியாதைக் காரர்களால் – நாத்திகர் களால் – கடவுள், மதத் துரோகிகளால் ஜனங்கள் உண்மையை உணர்ந்துகொண்டார்கள். இவைகள் சோம்பேறிகளும், பணக்கார முதலாளிகளும் செய்யும் சூழ்ச்சியும், பித்தலாட்டமுமே யொழிய வேறல்ல என்று கடவுளும், மதமும் இந்தப் பித்தலாட்டக்காரர் கற்பனைகளேதவிர வேறு யில்லை என்றும் உணர்ந்து கொண்டார்கள். நன்றாய் உணர்ந்து கொண்டார்கள். இப்பொழுது இவைகளை எப்படி ஒழிப்பது? என்பதில்தான் கவலையாய் இருக்கிறார்கள்.

வேகமாய்ப் போக வேண்டி – போவதற்குத் தயாராய் இருக்கிற மோட்டார்காருக்கு முன்னால் பனை மரத்தைக் கொண்டுவந்து போட்டதுபோல், இன்று கடவுளும், மதமும், அரசாங்கமும் குறுக்கே கொண்டு வந்து போடப்பட்டு இருக்கின்றன. இவை வெகு நாளைய கடவுளாய் இருந்தாலென்ன? அவதாரப் புருடர்களால் உண்டாக்கப்பட்ட மதமாய் இருந்தாலென்ன? சட்டப்படி அமைக்கப் பட்ட அரசாங்கமாய் இருந்தா லென்ன? ஒழிய வேண்டும் என்று முடிவுக்கு வந்தபின் அவை தானாக ஏற்பட்டால் என்ன? சட்டப்படி ஏற்பட்டால் என்ன? சும்மா ஏற்பட்டால் என்ன? ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதானே முக்கிய விஷயம்.

(‘குடிஅரசு’ – 5.2.1933)

91 ஆண்டுகளுக்குமுன் அய்யா அவர்களால் அளிக்கப்பட்ட இந்தப் பிரகடனம் – இன்றைய தினம் உலக மானுடத்தையே தழுவிக் கொள் ளும் அளவுக்கு அது உயர்ந்து நிற்கிறது! அது தேவைப் பட்டு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
தந்தை பெரியார் அமைப்பு ரீதியாகப் பணி யாற்றத் தொடங்கியது காங்கிரசில்தான் என்றாலும், வைதீகம் தலைவிரித்து நின்ற அந்த அமைப்பில் இருந்தேகூட தனக்கென்று இருந்த உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறியதே கிடையாது.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் வலியுறுத்தி வந்த வகுப்புரிமையைக் காங்கிரசில் இருந்து கொண்டே ஆதரித்து முழக்கமிட்டு வந்தார்.

1922 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற 28 ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டி லேயே இராமாயணத்தையும், மனுதர்ம சாஸ்திரத் தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றார். காங் கிரசின் அன்றைய நிலை – மக்கள் சமுதாயத் தின் போக்கு அந்தக் காலகட்டத்தில் எந்தத் திசையில், இருந்திருக்கும் என்பதை எண் ணினால், தந்தை பெரியாரின் அந்தக் கர்ச்சனை எவ்வளவுப் பெரிய புரட்சியானதாக இருந்திருக்க முடியும்?
வைக்கம் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி, அதனை வெற்றி முகட்டுக்குக் கொண்டு சென்றதேகூட – தந்தை பெரியார் காங்கிரசில் இருந்த கால கட்டத்தில் தான்! அதுபோலவே சேரன்மாதேவியில் குருகுலம் என்ற பெயரால் வருணாசிரமக் கொடியேற்றப்பட்டபோது, போர்க்கொடி தூக்கி, அதற்கொரு முடிவை ஏற்படுத்தியதும் காங்கிரசில் இருந்தபோதுதான்!

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவிப்ப தற்கு முன்னரேயே தந்தை பெரியார் அவர்களை அந்தக் கொள்கைகள் ஆட் கொண்டிருந்தன என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகளாகும்.
காங்கிரசுக்கு அவரை இழுத்தது கூட வெறும் அரசியல் கொள்கையல்ல; தீண்டாமை ஒழிப்புப் போன்ற காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களே!

காங்கிரசை விட்டு அவர் வெளியேற நேர்ந் ததும் சமூகநீதிக் கொள்கைக்காகத்தான். தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவராக, செயலாளராக தன் மனைவி நாகம்மையார் உள்பட அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த அந்தக் கால கட் டத்தில், வைக்கம் வீரர் என்று வரலாறு மகுடம் சூட்டி உச்சி மோந்த அந்தத் தருணத்தில், செல்வாக்கு, புகழ் என்பவை உச்சக்கட்டமாக இருந்த நேரத்தில், தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்றால், கொள்கைக்கு முன் அவை எல்லாம் குப்புறத் தள்ளப்பட வேண்டி யவை என்கிற இலட்சிய நோக்குத்தான்! மனித சுபாவத்தில் சாதாரணமாக இதனை எவரிடமும் எதிர்பார்க் கவே முடியாது! அதனால்தான் உலகி லேயே யாருக்கும் கிடைக்காத “பெரியார்” என்ற பட்டம் அவர்களுக்குக் கிடைத்தது என்றே நினைக்கத் தோன்றுகிறது!
‘குடிஅரசு’ என்ற இதழை – போர்வாளை தந்தை பெரியார் துவக்கியதேகூட காங்கிரசில் இருந்தபோதுதான் (2.5.1925) அது செய்த மகத்தான புரட்சியை மண்ணும், மலையும் உள்ளவரை மக்கள் சமுத்திரம் மறந்துவிடாது.
‘குடிஅரசு’ இதழ் மக்களிடையே ஏற்படுத்திய புரட்சி மகத்தானது. தந்தை பெரியார் கையில் சுழன்ற போராயுதமாக அது மின்னியது!
ஜாதி, மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம், மூடநம்பிக்கைகள், பெண்ணடிமை இவற்றைச் சக்கைச் சக்கையாகக் கழித்தது.

சிந்தனையாளர் மா. சிங்காரவேலர், சுவாமி கைவல்யம், சந்திரசேகர பாவலர் என்ற படை வரிசை இருந்தது. அவர்களின் எழுத்தாணிகள் எதிரிகளின் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டன!
தந்தை பெரியாரின் அந்தக் கைவாள் மலேசிய மண்ணிலும் கால் பதித்தது. அது சென்ற இடங்களில் எல்லாம் விவாதப் புயலைத் தட்டி எழுப்பியது! தேநீர்க் கடைகளிலும், முடி திருத்தும் நிலையங் களிலும், திருமண வீடுகளிலும், கருமாதித் துறைகளிலும் கூட விவாதத் தலைப்பின் மய்யப் புள்ளியாக ‘குடிஅரசு’ தான் நிமிர்ந்திருந்தது.
சமுதாயத்தின் அவலங்களையெல்லாம் சற்றும் மறைக்காமல் பிறந்த மேனியாக வெளிப்படுத்தியது!
எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூற முடியும். 1936 மே மாதம் 25-ஆம் நாளிட்ட (பக்கம் 10) ‘குடிஅரசு’ ஒரு தக வலைக் கூறுகிறது.

சென்னை ஜார்ஜ் டவுனிலும், மவுண்ட் ரோட்டிலும் பஞ்சமர்களும், நாய்களும், பெரு வியாதியஸ்தர்களும் பிரவேசிக்கக் கூடாது உணவு விடுதிகளில். சில இடங்களில் மகமதியர்களும் பிரவேசிக்கக் கூடாது; மேட்டுப் பாளையம் ரயில்வே ஓட்டலில் பிராமணர்க்கு என்றும், சூத்திரர்க்கு என்றும் போர்டு போட்டு இருந்தது. சென்னை நகரம் முழுவதும் “வீடு காலி – பிராமணர்க்கு மாத்திரம்” என்று இருந்தது என்கிற தகவலை ‘குடிஅரசு’ வெளியிட்டி ருந்தது.
* 1935-இல் கும்பகோணம் நகராட்சியில் அக்கிர காரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது -அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானம் போட்ட தையும் ‘குடிஅரசு’ தெரிவிக்கிறது. (6.10.1935)
* உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களை ஜாதியைக் காரணம் காட்டி கீழே உட்கார வைத்தார்கள் (‘குடிஅரசு’ 27.1.1929)
திருப்புவனம் ஆவியூர் பெரிய கருப்பக்குடும்பன் என்னும் தாழ்த்தப்பட்ட தோழர் – அவர் தொழில் குப்பை வாருதல்; குப்பை வண்டியின். மேலே உட்கார்ந்து வந்தார் என்பதற்காக உயர் ஜாதிக்காரர்கள் அத்தோழரைக் கீழே தள்ளி அடித்தார்கள். தோழரின் பயிர் பச்சைகளை ஆடு, மாடுகளை விட்டு மேய்த்தார்கள். வீட்டிற் கும் தீ வைத்தார்கள் (‘குடிஅரசு’ 24.11.1929)
பல்லாவரம் கொளத்துமேட்டு வீதிவாசியான ஆதி திராவிடக் கிறித்தவர் அந்தோணிராஜ் அக்கிரகாரத்தில் குடியிருந்த பார்ப்பன ஆசிரி யரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, அதே வீதி ரெங்கசாமி அய்யர், பார்ப்பனத் தெருவுக்குள் எப்படி நுழையலாம் என்று கூறி செருப்பாலேயே அடித்திருக்கிறார். (‘குடிஅரசு’ 3.5.1936)
இதுபோன்ற எத்தனை எத்தனையோ சமூகக் கொடுமைகளை ‘குடிஅரசு’ என்னும் தன்மான இயக்கப் போர்வாள் தட்டிக் கேட்டுக் குரலும் கொடுத்திருக்கிறது.
தன்மான இயக்கத்தின் இத்தகைய பணிகளால், ஆட்சி பீடத்தில் இருந்த நீதிக் கட்சி பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்குச் சட்ட வடிவம் அளித்து வந்தது. மக்கள் மன்றத்தில் தந்தை பெரியாரின் தன்மான இயக்கமும் ஆட்சி மன்றத்தில் பார்ப்பனரல்லா தார் இயக்கமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் உண்மையிலேயே – இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்டன.

தாழ்த்தப்பட்டோர் பொது வீதிகளில் நடத் தல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுத்தல், பள்ளிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்குக் கட்டாய இடம், ஆதி திராவிடர் தோழர்களைப் பயணம் செய்ய அனுமதிக்காத பேருந்து களுக்கு உரிமம் ரத்து, வகுப்புரிமைச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் இன்னோரன்ன முற் போக்குத் திட்டங்களும், சட்டங்களும் தமிழ் மண்ணிலே’ அரங்கேறி – புது மறுமலர்ச்சிக்கு வித்திட்டன.

தந்தை பெரியாரின் பிரச்சாரமும், ‘குடிஅரசின்’ எழுத்துகளும் சாதாரண மக்கள் மத்தியிலேகூட புதுத் தெம்பையும், புது நம்பிக் கையையும் ஊட்டின. கைகள் இருப்பது சதா வேலை செய்வதற்கும், முதுகு இருப்பது ஆண்களின் அடியைக் குனிந்து வாங்கிக் கொள்வதற்குமே பெண்களுக்கு உள்ளது என்பதை ஒரு தர்மமாகவே பேசப்பட்ட காலம் அது. ஆகா, பத்தினியென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று அதனைப் பெண்களே போற்றவும் செய்வார்கள்.
இந்த அடக்கு முறைகளை ஏற்பதைத் தவிர வேறுவழியே இல்லை என்றிருந்த கால கட்டத்தில் சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும், ‘குடிஅரசு’ம் அவர்களுக்குச் சரணாலயங்களாக இருந்திருக்கின்றன.
“மணமகன் தேவை” என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ இதழில் (12.3.1929 பக்கம் 1) வெளிவந்த ஒரு விளம்பரம் கண்களைக் குளமாக்கும். இதோ அந்த விளம்பரம்!

மணமகன் தேவை
நான் ஒரு ஆதிதிராவிடப் பெண் – வயது 22. என் பெயர் சின்னராமாயி. என் ஊர் திண்டுக்கல் தாலுகாவில் வத்திலைத் தோப்பம்பட்டி கிராமம் கோவில்பட்டி எனக்கு சுமார் 3 வருஷத்திற்கு முன் ‘சிலுவத்தூரில் என் தாய் மாமனுக்கு கல்யாணம் ஆயிற்று. அவருக்கு முதலில் இரண்டு பெண் ஜாதிகள் உண்டு. அவர் 50 வயதானவர். அவரை மணக்க நான் எவ்வளவோ மறுத்தும் பயன்படாமல் போய்விட்டதால் அவருடன் வாழ இஷ்டமில்லாமல் தாய்வீட்டில் வாழ்ந்து வந்தேன். இப்போது என்னை எப்படியாவது எங்கிருந்து கொண்டாவது வேறு யாருக் காவது ஒரு குழந்தையைப் பெற்றுத் தங்களுக்குக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியோ போகும்படி தாய் வீட்டாரும், புருஷன் வீட்டாரும் சொல்லுகிறார்கள். இதன் மத்தியில் என்னை விபசார முறையில் பெண்டாள பல பேர் பலவித துன்பத்துக்குள்ளாக்கினார்கள், சிலவற்றில் என்வீட்டாரும் உடந்தையாயும் இருந்தார்கள். இவை ஒன்றுக்கும் இதுவரை இசையாத நான் இப்போது சுயமரியாதை கொள்கைப்படி வேறு யாரையாவது கல் யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று கருதி யாருக்கும் தெரியாமல் ஈரோட்டிற்கு வந்து தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சத்திரத்தில் வசிக்கிறேன். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. வீட்டுவேலை, தோட்ட வேலை செய்ய சக்தியும், அனுபவமும் உண்டு. நல்ல குணமும் சுயமரியாதை கொள்கையும் உடைய வாலிபர் ஒருவர் யாராயிருந்தாலும் அவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தத் தயாராய் இருக்கிறேன். ஆகையால் என்னை மணக்க இஷ்டமுள்ளவர்கள் உடனே கீழ்க்கண்ட விலாசத்துக்கு தெரியப் படுத்த கோருகிறேன்.

தற்குறி
சின்னராமாயம்மாள்

விலாசம்:
சின்னராமாயி,
Clo ‘குடிஅரசு’ ஈரோடு

(‘குடிஅரசு’ 12.3.1929)

இது அந்தக் கால நிலவரத்தைக் காட்டும் நிலைக் கண்ணாடி மட்டுமல்ல; தந்தை’ பெரியாரின் ‘குடிஅரசு’ குருகுலம் எதற்கெல்லாம் அரணாகச் செயல்பட்டது என்பதை விளக்கும் ஆவணமும் ஆகும்.
இது ஒரு தனி நபர் பிரச்சினை என்றால், ஒரு கிராம மக்களே சுயமரியாதை இயக்கத்தை நோக்கி அபயம் கேட்கும் ஒரு தகவலை ‘குடிஅரசு’ தெரிவிக்கிறது.
இதோ அந்தக் குரல்!

எங்களின் கதி இதே கதிதானா?
சுயமரியாதை வீரர்காள், எங்களைக் காப்பாற்ற வந்த பெரியீர்காள்!
ராமநாதபுரம் ஜில்லா, திருவாடானைப் போஸ்டு, அஞ்சுகோட்டை கிராமவாசிகளாகிய தாழ்த்தப்பட்ட நாங்கள் படும்பாட்டை கவனித்தும் இன்னும் உங்களுக்கு மனம் வரவில்லையோ! எங்கள் தலைமைக்காரர்களாகிய பத்திரிகை படிக்கத் தெரியாத தலைமைக் காரர்கள் அவர்கள் நினைத்ததே சட் டமென வைத்துக் கொண்டு எங்களைப் படுத்தும் கொடுமைகளை சொல்லவும் வேண்டுமோ! ஏதோ எங்கள் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த பொருள்களைக்கூட நாங்கள் அனுபவிக்க முடியாமல் மலாய் நாடு சென்று ஒழிந்து கிடக்கின்றோமே! தாய் நாடு திரும்ப பயமாயிருக்கிறதே, அப்படி ஒருவர் இருவர் (தலை மயிர் கிராப் வைத்துள்ளவர், அல்லது கொஞ்சம் பணம் உள்ளவர்) திரும்பினாலும் அவர் அங்கு பனை மரத்தில் கட்டப்பட்டு வாங்கும் சவுக்கடி எங்களை மலாய் நாட்டை தாய் நாடாய் வைத்துக் கொள்ள செய்து விடுகிறதே! இதைக் கவனிப் பதற்கொருவருமில்லையே. இவைகள் இத்துடனிருக்க காருண்யம் நிறைந்த கவர்ன்மெண்டாரால் பொட்டக் கோட்டை என்னும் ஊரில் ஒரு இலவசப் பாடசாலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் நடக்கும் கொடு மைகளையாவது அக்கிராம கல்வி இலாகா ஆபீசர் கவனிப்பதாக தெரியவில்லை. ஆகையால், சுயமரி யாதை வீரர்காள்! எங்களின் கதி இதே கதி தானா அல்லது நாங்கள் எங்கள் தாய் நாட்டை அடைந்து எங்களுடைய ஆஸ்திகளை அனுபவிக்கும்படியாய், (எங்களைக் காப்பாற்ற வந்தவர்களா கிய) நீங்கள் எங்களுக்கு விமோசனம் அளிப்பீர்களா?

இங்ஙனம்,
“பயந்தோடி”
(‘குடிஅரசு’ 26.4.1931)

 

‘குடிஅரசு’க்கு வாழ்த்து!

போர் முகத்தில் அணிவகுக்க இன்றழைத்தாய்! பொதுவுடைமை முரசறையக் கோலெடுத்தாய்! ஓர் முகத்தில் சந்தோசம் ஒன்றில் வாட்டம் உண்டாக்கும் அரசியலை விழி நெறித்தே ஊர் முகத்தில் நிற்காதே என முழக்க ஒன்பதாம் ஆண்டிலேயே உயர்ந்தாய்!
இந்நாள் பார் முகத்தைச் சமப்படுத்த ஓகோகோ கோ பறந்தேறுகின்றாய் நீ வாழி நன்றே!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
‘குடிஅரசு’ இதழின் 9-ஆம் ஆண்டையொட்டி
வந்த பாடல்
(ஆதாரம்: குடிஅரசு’ 30.4.1933)

நான் எதனால் வாலிபன்?

காலஞ்சென்ற நடராசன், பன்னீர் செல்வம், மணி ஆகிய மூன்று தோழர்களும் இந்தத் தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அம் மூவரும் இயக்கத்திற்கும், எனக்கும் நிரம்ப வேண்டியவர்கள். மணி உண்மையான நண்ப ராய், துணைவராய் இருந்தவர். அவரைப்போல என் சொந்த நலனைப்பற்றி கவலை எடுத்துக் கொண்டவர்களை இன்றும் ஒருவரையுங் காண முடியவில்லை. இயக்கத்தின் உறுதியான தொண்டராய், அவர்தம் உயிர்போகும் வரை யிலும் என்னைப் பற்றித்தான் பேசி இருக்கிறார். என்னுடன் பல சமயங்களில் அவர் சுற்றுப் பிரயாணம் செய்திருக்கிறார். அக்காலங்களி லெல்லாம் அவர் தமக்கு ஒரு வீடென்றும், குடும்பமென்றும், ஊரென்றும் இருப்பதாக நினைத்ததுகூட இல்லை. அவற்றைப் பற்றி பேச நேர்ந்தாலும், எவ்வளவு சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டுமோ அவ்வளவு சுருக்கமாக முடித்துக்கொள்ளுவார்.
மணி இறக்கும்போது நாற்பது ஆண்டுக ளுக்கு மேற்பட்ட வயதினராயினும் வாலிபரா கவே இருந்தாரென்பது என் கருத்து. நான் ஒருவரை வாலிபரென்று சொல்வது அன்னாரு டைய வயதைப் பொறுத்து அல்ல. என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபன் என்று கருதிக் கொண்டிருக்கின்றேன். இறுதிவரை வாலிபனா கவே இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது.
ஆனால், மணி, பொறுப்பு இல்லாத என்னைப்போன்ற தனி ஆள் என்று நினைத்து விடாதீர்கள். அவருக்கு மனைவி, மக்கள் உண்டு. பல தொல்லைகள் உண்டு. என்றாலும் அவற்றைப்பற்றிக் கவலை இல்லாமல் வாலிப ராகவே அவர் விளங்கி வந்ததானது, அவரின்றி வோறோர் உண்மைத் தொண்டரால்’ அவர் மறைவுக்குப் பின் இன்றுவரை இருக்கமுடியாத தாக ஆகிவிட்டது.

தந்தை பெரியார்
(“குடிஅரசு” – 18.3.1844)

புதன், 21 செப்டம்பர், 2022

சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

வரலாறு : சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்

2022 செப்டம்பர் 16 -30 வரலாற்றுச் சுவடு, உண்மை இதழ் 

5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

1. மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். ஒரு நாட்டின் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எவரும் எவருக்கும் தாழக் கூடாது. எவரும் எவரையும் தாழ்த்தவும் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும்.


2. மனிதனுக்கு மனிதன், பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு எதுவும் கிடையாது. பிறப்பில் வேறுபாடுகள் கற்பித்து, உயர்வு_தாழ்வு என்ற நிலைகளை ஏற்படுத்தியது, ஆதிக்க உணர்வு கொண்ட மோசடிக்காரர்களும், பித்தலாட்டக் காரர்களும் இடைக்காலங்களில் செய்த வேலையே ஆகும்.

3. மனிதனும் மனிதனும் ஒருவரோடு ஒருவர் அன்போடும், பண்போடும், உறவோடும், உரிமையோடும், நட்போடும், ஆதரவோடும், அரவணைப்போடும் பழகுவதற்கு ஏற்ற மனிதத் தன்மை உடையவர்களேயல்லாமல், தீண்டாமை, பாராமை, சேர்க்காமை, மதிக்காமை போன்றவற்றால், ஒருவரையொருவர் புறக்கணிப்-பதற்கும், தள்ளி வைப்பதற்கும் இடமேயில்லை.

4. மனிதர்களுக்குள்ளாகவே, அவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் கொள்கைக் கோட்-பாடு, சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சமயங்களும், ஜாதிகளும் வேரோடு களைந்தெறியப்பட வேண்டும்.

5. மனிதனை முட்டாளாக ஆக்குவதற்கும், முரடனாக ஆக்குவதற்கும், வெறியனாக ஆக்கு-வதற்கும், பைத்தியக்காரனாக ஆக்குவதற்கும், ஆதிக்கக்-காரனாக ஆக்குவதற்கும், ஆணவக்-காரனாக ஆக்குவதற்கும் பயன்படுத்தப்படும் கடவுள், மதம், ஜாதி, சாத்திரம், புராணம், இதிகாசம், வேதம், மோட்சம், நரகம், பேய், பூதம், பிசாசு, பில்லி சூன்யம், ஜோதிடம், குறி, மந்திரம், பூசை, யாகம் சடங்கு, பண்டிகை போன்ற கற்பனைக் கூறுபாடுகள் அனைத்தும், அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.

6. மனிதனின் சிந்தனை அறிவுத்திறன், செயலாற்றல் திறன், சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் பாங்கு, தகுதி, திறமை போன்றவற்றையெல்லாம் கெடுத்து, அவனை முழு முட்டாளாக்கக் காரணமாக இருக்கும் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம், பஜனை பாடுதல், செபம் செய்தல், வழிபாடு நடத்துதல், சடங்குகளைக் கடைப்பிடித்தல் போன்றவை, மனித சமுதாயத்தை விட்டு அறவே அகற்றப்பட வேண்டும்.

7. உலகில், நல்லது -_ தீயது, உயர்ந்தது -_ தாழ்ந்தது, சிறந்தது -_ சிறுமையது, பலன் அளிப்பது -_ பலன் அளிக்காதது, உதவுவது -_ உதவாதது, ஆக்குவது -_ அழிப்பது, மதிக்க வேண்டியது -_ மதிக்க வேண்டாதது எவை எவை என்று பகுத்தறிந்து பார்த்து, பயன்படும் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் துணிவு மட்டும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏற்பட வேண்டும்.

8. தன்மான உணர்ச்சி, உரிமையுணர்வு, விடுதலை வேட்கை, சிந்திக்கும் ஆற்றல், செய்து முடிக்கும் தன்மை ஆகியவற்றைக் கட்டிக் காக்கும் தகைமை ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும்.

9. எதிர்காலம் அறிவியலுக்கு உரிய-தேயல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல; மனிதனுக்கு உரியதே அல்லாமல் கடவுளுக்கு உரியது அல்ல என்ற நிலை ஏற்பட வேண்டும்.

10. பகுத்தறிவு நெறியில் நின்று, பண்பாட்டுத் தன்மையோடு, தன்மானவுணர்வு கொண்டு சமுதாயத்தைச் சீர்படுத்தவும், செம்மைப் படுத்தவும் ஒவ்வொருவரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும்.

11. பகுத்தறிவுணர்வோடு எதையும் சிந்தித்து, பகுத்தறிவுணர்வோடு எதையும் சொல்லி, பகுத்தறிவுணர்வோடு எதையும் செயலாற்ற மக்களனைவரும் தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

12. நல்லறிவு, நல்லாற்றல், உயர் உண்மை, நல்ல உழைப்பு, நல்ல நோக்கம், நாணயம், நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம், இயற்கைப் போக்கு ஆகியவற்றிற்கு மதிப்பு அளித்துப் பாடுபடவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கொள்கை விளக்கம் செய்தார்.

புதன், 23 டிசம்பர், 2020

வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்!

ஞாயிறு, 8 நவம்பர், 2020

சுயமரியாதை இயக்கத்தின் சாதனை என்ன?


பார்ப்பனர்களே இன்று இடஒதுக்கீடு கேட்கிறார்களே!

மனித குலத்தை ஒன்றாக்கும் இயக்கம் சுயமரியாதை இயக்கம்

மதுரை - வேன் அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் பேருரை

மதுரை, பிப். 17- இடஒதுக்கீட்டை எதிர்த்த பார்ப்பனர்களை, இடஒதுக்கீடு கேட்க வைத்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

4.2.2017 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற சுய மரியாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டு விழா - தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கக் கொள்கை களைப் பரப்புவதற்கு உதவக்கூடிய பரப்புரை பயண ஊர்தி வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஏண்டா, பட்டினி கிடக்கும்பொழுது எல்லோருக்கும் சோறு போடுவதுதான் முக்கியம்

பெரியார்தான் சொல்வார், ‘‘ஏண்டா, பட்டினி கிடக்கும் பொழுது எல்லோருக்கும் சோறு போடுவதுதான் முக்கியமே தவிர, அதில் தகுதி - திறமையை நீ பார்க்கலாமா? முதலில் எல்லோருடைய பட்டினியையும் தீர்க்கவேண்டும்’’ என்பார்.

அந்த அடிப்படையில், எங்களுடைய இனம் - கல்வி மறுக்கப்பட்ட இனம் - ஆண்டாண்டு காலமாக.

உலகத்திலேயே பார்ப்பனக் கொடுமைக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டு என்றால், பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாக சொன்னார்,

எந்த நாட்டிலும், உலகத்திலுள்ள எவ்வளவு பெரிய காட்டுமிராண்டி நாட்டிலும்கூட, கருப்பர்கள் ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று சொன்ன நாட் டிலே கூட, அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது கிடையாது. ஆனால், கல்வியை கொடுக்காதே என்று சொன்ன ஒரு மதம் இருக்கிறது என்று சொன்னால், அது ஆரிய - சனாதன - பார்ப்பன இந்து மதம் என்பதைத்தவிர வேறு கிடையாது. எனவே, அதனை அறவே தூக்கி எறிய வேண்டும் என்று சொன்னார். எனவேதான், சுயமரியாதை இயக்கம் பிறந்தது.

சுயமரியாதை என்றால், மனிதனுக்கு மட்டும்தான் - மாட்டுக்குக் கிடையாது

சுயமரியாதை இயக்கத்தின் சாதனை என்ன? ஏன் பெரியாருக்குக் கவலை? சுயமரியாதை என்றால், மனிதனுக்கு மட்டும்தான். மாட்டுக்குக் கிடையாது, விலங்குகளுக்குக் கிடையாது. மாடு கூட நமக்கு சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது என்பதுதான் ஏறு தழுவுதலில் நாம் பெற்றிருக்கின்ற வெற்றி. மனிதர்கள் மறந்ததை மாடு நினை வூட்டியிருக்கிறது. அதற்கு முன்னால், பல மாடுகள் வேறிடத்தில் போயிருக்கின்றன. ஆனால், இந்த ஏறுதழுவுதல் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமாக இன்றைக்கு வந் திருக்கிறது என்றால், அதற்கு அடிப்படை சுயமரியாதை.

அலங்காநல்லூரில், அவனியாபுரத்தில்  ஏறுதழுவுதல் என்ற எங்களுடைய புராதன, கலாச்சார பண்பாட்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்துவதற்கு எதற்கு டில்லியிடம் அனுமதி வாங்குவது? நாம் இன்னும் அடிமைகள் என்பதைத் தவிர வேறு என்ன அதற்கு உதாரணம். அதனைப் போக்கு என்று சொல்வதுதான் தோழர்களே சுயமரியாதை! சுயமரியாதை!! என்றால், அது கசப்பு மருந்தல்ல.

சுயமரியாதைதான் உங்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பு. தன்னுடைய சொந்தத் தாயைக்கூட, அவள் விதவை, எனவே முன்னாலே வராதே - நான் திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்லி, உன் மதம் சொல்கிறது என்பதற்காக, தன்னுடைய சொந்தத் தாய், தன்னை ஆளாக்கிய தாய், தன்னை வளர்த்த தாய், தன்னை உருவாக்கிய தாய் - அந்தத் தாயைக்கூட கிட்டே வராதே என்று சொல்லக்கூடிய மதம் இருக்கிறதே - அந்த மதத்தைத் தூக்கி வங்காள விரிகுடா கடலில் எறி என்று சொல்வதுதான் சுயமரியாதை இயக்கம்.

தனிப்பட்ட பார்ப்பனர்களை வெறுப்பதா சுயமரியாதை இயக்கம்?

சுயமரியாதை இயக்கம் என்பது சாதாரணமா? தனிப்பட்ட பார்ப்பனர்களை வெறுப்பதா சுயமரியாதை இயக்கம்? சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறான்? திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறான்? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறான். தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும், திராவிடத்தால் யாராவது வீழ்ந்தார்களா? என்னுடைய சகோதரர் சென்னை பெரியார் திடலில் முழங்கினார். திராவிடத்தால் ஒருபோதும் வீழ்ந்த தில்லை, எழுந்தோம்! எழுந்தோம்!! எழுந்தோம்!!! என்று தெளிவாகச் சொன்னார்.

அந்த வகையில், சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்திருக்கிறது? இதே மதுரையில், ஒரு வைத்தியநாதய்யர் நினைத்தால், அவர் அந்தக் காரியத்தைச் செய்துவிட முடியும் என்கிற அளவிற்கு, பந்தலைக் கொளுத்தி, கருப்புச் சட்டையே இருக்கக்கூடாது, சுருட்டி வைத்துக்கொண்டு ஓடுங்கள் என்று சொல்லி, அவதூறுகளைப் பரப்பினார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், இந்தக் கொள்கை தோற்றுவிட்டதா? இந்தக் கொள்கை விரட்டியடிக்கப்பட்டதா? இந்த மதுரை மாநகரில், தந்தை பெரியார் அவர்களைக் கொண்டு வந்து வைத்து, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் திறந்து வைத்த சிலை, கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது, அதனை யாராவது மறுக்க முடியுமா? நினைத்துப் பார்க்கவேண்டாமா?

விஞ்ஞானம் ஒருபோதும் தோற்றதில்லை

மதுரை சுயமரியாதை வீரர் முன்னாள் மேயர் முத்து அவர்கள் - அவர்கள் எல்லாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். எதற்காக இதனைச் சொல்கிறோம் நண் பர்களே! இந்த இயக்கம் ஒருபோதும் தோற்காது - காரணம் என்னவென்றால், விஞ்ஞானம் ஒருபோதும் தோற்றதில்லை. விஞ்ஞானத்தின் முன்னால் மற்றவைகள்தான் மண்டியிட்டு இருக்கின்றன.

வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி - மகளிர் எல்லாம் கூடி - மனுதர்மத்தில் பெண்கள் எவ்வளவு கொச்சைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் - கீதையில் எப்படி பெண்களைப் பாவ யோனி என்று சொல்லியிருக்கிறது என்பதை - சுயமரியாதை உணர்வு காரணமாக, அதனை எரித்துக் கொளுத்திக் காட்ட முன்வந்திருக்கிறார்கள் என்றால், இப்பொழுது வராத சுயமரி யாதை வேறு எப்பொழுது வருவது? நினைத்துப் பார்க்கவேண்டாமா?

மீண்டும் இந்தப் பழைய கதை திறக்கப்படவேண்டும் என்பதற்காகத்தானே முயலுகிறார்கள்.

‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?’’

சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி சொல்கின்ற நேரத்தில், பெரியார் சொன்னார்,

‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?’’ என்று பெரியார் அவர்கள் சொல்லுகின்ற நேரத்தில்,

‘‘இன்றைக்கு நான் ஒரு சிறு கூட்டத்தை எதிர்த்துப் போராடக் கூடியதாக இந்த இயக்கம் தோன்றும். ஆனால், இது ஒரு சிறு கூட்டத்தை எதிர்த்துப் போராடக்கூடிய இயக் கமல்ல. உலகளாவிய மனிதநேய தத்துவத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய ஒரு அற்புதமான தத்துவம்’’ என்பதை தந்தை பெரியார் சொன்னார். எப்பொழுது? 1929 ஆம் ஆண்டு சுய மரியாதை மாகாண மாநாட்டினை செங்கல்பட்டில் அவர்கள் கூட்டுவதற்கு முன்பாகவே அவர் இதனை சொன்னார்கள். இப்படி எத்தனையோ சொல்ல முடியும்.

கழக மகளிரணியினர்

மனுதர்மத்தை கொளுத்த உள்ளனர்

எனவேதான், நாம் தாயோடு பிறக்கவில்லையா? நம் முடைய பிள்ளைகள் பெண்கள் இல்லையா? நம்முடைய சகோதரிகள் பெண்கள் இல்லையா? மகளிரே முன்வந்து தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் - முக்கியமான இடங் களில் - பெண்களைக் கொச்சைப்படுத்தக்கூடிய மனுதர் மத்தை கொளுத்த உள்ளனர். ஆகா! ஊகோ!! என்று யாராவது அதனை எதிர்த்துக் கிளம்பினால், அதனை நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்பதுதான் மிகமிக முக்கியமானது.

பார்ப்பனர்களின் நிலை என்ன? தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசு இயக்கத்தில் இருந்தபொழுது, திண்டுக்கல் பெரியகுளத்தில், பெரியார் அவர்கள் மதியம் சாப்பிட்ட இலையை மடித்து வைத்திருந்து, எறும்புகள் எல்லாம் ஊறக்கூடிய நிலையிலிருந்து, இரவு சாப்பாட்டிற்கும் அதே இலையில் சாப்பாடு போட்டார்கள் என்று அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்.

இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம்! சுயமரியாதை இயக்கத்தினுடைய 90 சாதனைகளில் ஒன்றிரண்டை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன், நேரத்தின் நெருக்கடி காரணத் தினால்.

காந்தியார் 1926 ஆம் ஆண்டிற்கு முன்பு சென்னைக்கு வருகிறார். மயிலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டில் தங்குகிறார். பிரபல அட்வகேட் ஜெனரல், பிரபல வக்கீல், காங்கிரசு தேசிய தலைவர்.

பிறகு 1927 ஆம் ஆண்டிலும் காந்தியார் அங்கு வந்து தங்குகிறார். அப்பொழுது இந்த இடைவெளியில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன? காந்தியாரும் - பன்னீர் செல்வமும், அதேபோல, நம்முடைய கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த உமாமகேசுவர பிள்ளை போன்றவர்களும் சந்தித்து, அய்யா தமிழ்நாட்டில், பார்ப்பனர் - பார்ப்பனரல் லாதார் பிரச்சினை உச்சக்கட்டமாக இருக்கிறதே, நீங்கள் பெரியாரை அழைத்துப் பேசவேண்டாமா? சமாதானம் செய்ய வேண்டாமா? இந்தப் பிரச்சினையை பெரியார் தீர்க்கவேண்டும் என்று விரும்புகிறாரே, என்று அய்யாவின் சார்பில் காந்தியாரிடம் சொல்கிறார்கள்.

அதற்கு காந்தியார் என்ன சொல்கிறார் தெரியுமா? யாருக்காவது சந்தேகம் இருந்தால், காந்தி நிலையம் வெளியிட் டிருக்கிற, ‘‘தமிழ்நாட்டில் காந்தி’’ என்கிற நூல் ஆயிரம் பக்கம் இருக்கின்ற நூலில் இருக்கிறது, அதனை பாருங்கள்.

காந்தியினுடைய சுயமரியாதையை மீட்ட இயக்கம் - சுயமரியாதை இயக்கம்

காந்தியார் சொல்கிறார்,

‘‘இல்லை, இல்லை, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இப்பொழுது குறைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டிற்கு முன்பு நான் இங்கு வந்தபொழுது, சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் நான் உட்கார வைக்கப்பட்டேன். வீட்டின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இன்றைக்கு அப்படியில்லை, என்னுடைய மனைவி சீனிவாச அய்யங்கார் வீட்டு சமையலறை வரையில் செல்கிறார்; நானும் உள்ளே செல்கிறேன்’’ என்றார்.

சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி

அதற்கு என்ன காரணம்? சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி; சீனிவாச அய்யங்கார்களுக்கே மிரட்சி. அதனால் ஏற்பட்டது மிகப்பெரிய வாய்ப்பு. ஆகவேதான், இனிமேலும் காந்தியாரை திண்ணையில் உட்கார வைத்தால், நம்மை தோலை உரித்துவிடுவார்கள், வருணாசிரமத்தினுடைய உருவம் தெரிந்துவிடும் என்று.

காந்திக்கே வழி தந்த இயக்கம் - காந்தியினுடைய சுயமரியாதையை மீட்ட இயக்கம் - பெரியாருடைய இயக்கம் - சுயமரியாதை இயக்கம். அதுமட்டுமா நண்பர்களே! திராவிடர் இயக்கம் - தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மனிதர்கள் இல்லையா? எங்கள் உடன்பிறப்புகள் இல்லையா? அவர்கள் இல்லாவிட்டால், உங்களுடைய வாழ்வு நாறிவிடாதா?

இன்னுங்கேட்டால், நகர சுத்தித் தொழிலாளர்கள் என்று சொல்கிறீர்களே, அவர்கள் மட்டும் வேலை நிறுத்தம் செய்து விட்டால், உங்களுடைய யோக்கியதை என்னாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். வேறு நாடாக இருந்தால், அவர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். திராவிடர் கழகமும் - அந்தத் துப்புரவுத் தொழி லாளிகளும் ஒன்றுதான். நாங்களும் சமுதாயத்தினுடைய துப்புரவுத் தொழி லாளிகள்தான். எது இழிவு என்று ஒதுங்கிப் போகிறார்களோ, அந்த இடத்தில் நாற்றத்தைப் பார்க்காமல் பணி செய்கிறவர்கள் நாங்கள்.

தெருவில் நடக்கக் கூட உரிமையில்லை என்று சொன்ன வர்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத் தந்தது எந்த இயக்கம்? திராவிடர் இயக்கம். பனகல் அரசர். அதேபோல, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் சொன்ன நேரத்தில், அதற்கு உத்தரவு போட்டது - அரசாங்க ஆணை போட்டது நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் - திராவிடத்தால்தான் தெருவில் நடக்கக் கூடாது என்று சொல்லப்பட்ட ஒரு சமுதாயம் நடக்கக் கூடிய உரிமையைப் பெற்றது.

ஜாதி ஆணவத்தினுடைய முதுகெலும்பை முறிப்பதுதான் எங்களுடைய முற்றான பணி

ஆனால், இன்னமும் ஜாதி ஆணவம் அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைதூக்குகின்றன. பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வதற்குக்கூட அனுமதிக்கக் கூடாத ஜாதி ஆணவத்தினுடைய முதுகெலும்பை முறிப்பது தான் எங்களுடைய முற்றான பணி. இன்னமும் எங்களுக்குப் பணி இருக்கிறது. நாங்கள் முழு வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்கவில்லை. கடைசி மூடநம்பிக்கைக்காரன், கடைசி ஜாதி வெறியன், கடைசி ஆதிக்கவாதி இருக்கின்ற வரையில், சுயமரியாதை இயக்கத்திற்கு வேலை உண்டு, வேலை உண்டு!

அதுமட்டுமல்ல நண்பர்களே, மிகப்பெரிய சமுதாயம் - நான் ஜாதியைக் குறித்து சொல்லுகிறேன் என்று நினைக்கா தீர்கள். ஆனால், சமுதாயத்தில் இருக்கின்ற இன்றைய சூழல்கள்பற்றிதான் தெரியுமே தவிர, பழைய நிலைமைகள் பற்றி தெரியாது. இன்றைய தார் சாலையில் பயணம் செய்து தான் இன்றைய இளைஞர்களுக்குப் பழக்கமே தவிர, பழைய கரடு முரடான சாலைகளைப்பற்றி அவர்களுக்குத் தெரியாது. அதேபோன்றுதான் இந்த இயக்கத்தின் பணிகளும்.

‘மதுரை அரசியல்’ என்கிற தலைப்பில்...

நண்பர்களே, கடந்த சில நாள்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மணவிழாவில் ஒரு நண்பர் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்.

‘மதுரை அரசியல்’ என்கிற தலைப்பில், பா.திருமலை என்பவர் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில்,

கோவில் நுழைவுகளைப்பற்றி சொல்லும்பொழுது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திறப்பு விழாவிற்கு முன்பாக, இதனை ஏற்கெனவே செய்தது சுயமரியாதை இயக்கம். பல இடங்களில், ஈரோட்டில், திருவண்ணாமலையில், கன்னியா குமரிக்குச் செல்கின்ற வழியில் இருக்கக்கூடிய சுசீந்திரத்தில் என்று வரிசையாக பல செய்திகளை அந்த நூலில் சொல்லியிருக்கிறார்.

அதில் மிக முக்கியமான ஒரு தகவல்:

நம்முடைய நாட்டில் நீண்ட காலமாக, மிகப்பெரிய ஒரு சமுதாயத்தை -  உழைக்கக்கூடிய சமுதாயத்தை - திருட்டுப் பட்டம் கட்டி அவர்களுக்கு ரேகைப் பதிவு சட்டம் என்று வைத்திருந்தார்கள்.

உழைக்கின்ற ஒரு சமுதாயத்தை தெருவில் நடக்கக்கூடாது என்றார்கள்; இன்னொரு சமுதாய மக்களைப் பார்த்து, நீங்கள் குற்றப்பரம்பரை - காவல் நிலையத்தில் கைரேகையைப் பதிவு செய்யவேண்டும் என்றனர். ஏனென்றால், அவர்களுக்குக் கையெழுத்துப் போடத் தெரியாது.

நண்பர்களே, அந்த ரேகைப் பதிவு சட்டம் - இந்த மாவட் டத்தில் இருக்கக்கூடிய பெருங்காமநல்லூரில் எப்படிப்பட்ட போராட்டம் நடந்தது என்று இந்த நூலில் அவர் எழுதி யிருக்கிறார்.

அப்படி எழுதிவிட்டு, கடைசியாக அவர் என்ன சொல்கிறார் தெரியுமா நண்பர்களே,

பொப்பிலி அரசர் என்ற ராமகிருஷ்ண ரங்காராவ்

மிகப்பெரிய அளவிற்கு அந்தக் காலத்தில் இந்தக் குற்றப்பரம்பரை சட்டத்தைத் தூக்கி எறியக் கூடிய வாய்ப்பு எப்படி நடந்தது  என்பதற்கு உதாரணம், மற்ற விவரங்கள் அந்த நூலில் உள்ளது. நேரத்தின் நெருக்கடியின் காரணமாக சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய சாதனை என்ன? அவ்வியக்கத்தின் 90 ஆண்டுகால சாதனை எப்படி மக்கள் தழுவியதாக நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

1934 மே 12, 13 ஆகிய தேதிகளில், அதிராமத்தில் நடந்த மாநாட்டுத் தீர்மானப்படி, ஆப்ப நாட்டு மறவர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி, அரசை சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது.

அதன் தலைவர் வரதராஜூலு நாயுடு, உறுப்பினர்களாக முத்துராமலிங்கத் தேவர், நவநீதகிருஷ்ண தேவர், பிள்ளை யார்குலம் பெருமாள் தேவர், சசிவர்ண தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அந்தக் குழு நீதிக்கட்சி அரசிடம் மனு அளித்தது.

அப்பொழுது நீதிக்கட்சியின் முதல்வராக இருந்தவர் பொப்பிலி அரசர்.  அவரிடம் அந்தக் குழு மனு அளித்தது.

மனு அளித்த உடனேயே, அந்தப் பிரிவு மக்களை பட்டிய லிலிருந்து நீக்கியது நீதிக்கட்சி அரசு.

இதுபோன்ற ஒரு சாதனை செய்த அரசு திராவிடர் இயக்க அரசு - பொப்பிலி அரசர் என்ற ராமகிருஷ்ண ரங்காராவ் முதலமைச்சராக இருந்தார்.

அதுமட்டுமல்ல, அதனுடைய தொடர்ச்சி அறவே 'கிரிமினல் டிரைப்ஸ் ஆக்ட்' என்ற சட்டம் நீக்கப்பட்டது. குற்றப்பரம்பரை என்கிற வார்த்தை நீக்கப்பட்டது. சீரமைப்பு திட்டம் என்பதைக் கொண்டு வந்தது நீதிக்கட்சி.

மனித குலத்தை ஒன்றாக்கிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்

ஆனால், அதையெல்லாம்விட இந்த செய்தியைப் பாருங்கள்,

1947 ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த - சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான பி.சுப்ப ராயன் அவர்கள்தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநரிடம் சமர்ப்பித்து, அவரின் ஒப்புதலுக்குப்பின், 1947 ஜூன் 5 ஆம் நாளில் இந்த சட்டத்தை ஒழித்தார்.

ஒவ்வொரு சமுதாயத்தையும் பிரித்து, பிரித்து எங்களுக்குள்ளேயே மிகப்பெரிய போராட்டத்தை, ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தில், மனித குலத்தை ஒன்றாக்கிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய சாதனை - இன்றைக்குப் பார்ப்பனர்களே ஒப்புக்கொண்டார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது; கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். திடீரென்று ஒரு வியப்பான நிகழ்வு. பெரியார் திடலுக்கு எல்லோரும் வருவார்கள்; அவர்களை நாம் வரவேற்பது வழக்கம். எஸ்.வி.சேகர் என்கிற ஒரு நண்பர் வந்தார். அவரை வரவேற்றோம்.

அவர், உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். என்னை பிராமணர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றார்.

அப்படியா, வாழ்த்துகள்! மிகவும் மகிழ்ச்சி என்றேன்.

எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன் என்றார் அவர்.

உடனே நான், முதலமைச்சரை அல்லவா நீங்கள் பார்க்க வேண்டும்; என்னிடம் வந்து கேட்கிறீர்களே? என்றேன்.

முதலமைச்சர் கலைஞர் அவர்களைப் பார்த்துதான் கேட்டோம்; நாங்கள் மாநாடு நடத்தி, எங்களுக்கு ஏழு சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் கேட்டோம். கலைஞர் அவர்கள், ‘‘நான் செய்கிறேன், அதற்கு முன்பாக வீரமணியை சந்தித்துவிட்டு வாருங்கள்’’ என்றார். அதற்காகத்தான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றார் எஸ்.வி.சேகர்.

பெரியாருடைய வெற்றிகளில்

தலைசிறந்த வெற்றி

நான் சொன்னேன், ‘‘மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் பாருங்கள், அதுதான் பெரியாருடைய வெற்றிகளில் தலைசிறந்த வெற்றியாகும். உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித மறுப்பும் கிடையாது. நீங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறீர்களோ, அத்தனை சதவிகிதம் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சுயமரியாதை இயக்கம்.

ஆகவே, அது சரியானதுதான். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஏற்கெனவே வகுப்புவாரி உரிமையில் உங்களுக்கு 16 சதவிகிதம் கொடுத்திருந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கூட அவ்வளவு சதவிகிதம் கொடுக்கவில்லை என்றேன்.

அப்படியா? எனக்குத் தெரியாது என்றார்.

அந்தப் 16 சதவிகிதத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தது நீங்கள்தான் என்றேன்.

அப்படியா? எங்கள் ஆட்களே அதனை கெடுத்தார்களா? என்றார்.

உங்கள் ஆட்கள்தான் கெடுத்தார்கள். அதற்குப் பிறகுதான் 69 சதவிகிதம் வந்திருக்கிறது. இதனையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

மனித தர்மத்திற்கும்,

அவர்களுக்கும் சம்பந்தமில்லை

கடந்த ஜனவரி மாதத்தில் வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள். துக்ளக் இதழில் ஆசிரியர் மாறியிருக்கலாம்; ஆனால், அந்தப் புத்தி மட்டும் மாறாவே மாறாது என்று இன்றைக்கு அவர்கள் எல்லா துறைகளிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவறில்லை. அது அவர்களின் தர்மம். மனுதர்மத்திற்காகவே இருக்கக் கூடியவர்கள்; மனித தர்மத்திற்கும், அவர்களுக்கும் சம்பந்தமில்லை.

அறிமுகம், வெப்சைட்

ஙிக்ஷீணீலீனீவீஸீ யீஷீக்ஷீ ஷிஷீநீவீமீtஹ்.நீஷீனீ ரீக்ஷீமீணீt நீஷீஸீtக்ஷீவீதீutஷீக்ஷீs

என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

தன் தியாகத்தால் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்கள்; தன் திறமையால் தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்தியவர்கள் என்று சொல்லி, இன்றைக்கு தமிழ்நாடு அரசு வேலையில், நம் பங்களிப்பு ஜீரோ சதவிகிதத்திற்கு அருகில் இருக்கிறது.

எனவே, 10 இல் ஒரு குடும்பம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, தன் அடையாளத்தை இழக்கிறது. எனவே, டெக்னிக்கல் கூலிகளாக நொறுங்கி விட்டோமா என்று கூறி, அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற நிலைப்பாடு என்னவாக இருக்க முடியும்?

இன்றைய நிலை! அதிலேயும் ஆபத்து வந்துவிட்டதே என்கிறார்.

ஆகவே, நண்பர்களே! பார்ப்பனர்கள் எந்த இடத்தில் பெரியார் தொடங்கினாரோ, அந்த இடத்தில் வெற்றி பெற்று இருக்கிறோமா? இல்லையா? என்பதற்கு இது ஒப்புதல் வாக்குமூலம்.

அவர்களே, ஒப்புதல் வாக்குமூலத்தினைக் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அனைவருடைய

கடமை! கடமை!! கடமை!!!

எனவே, இந்த இயக்கம், இந்தப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். ஏராளமான அளவிற்கு சமுதாயப் பணி இருக்கிறது. மத்தியில் மதவாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை களையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபொழுது, திராவிடத்தினுடைய அடிப்படை கொள்கைகள் என்று சொன்னால், இங்கே சொன்னாரே, பெரியாரியம் என்றால் என்ன? சகோதரர் விளக்கிவிட்டார். ஆகவே, அப்படிப்பட்ட அந்தப் பெரியாரியம், மனிதநேயம், சுயமரியாதை இயக்கம் - அதனைத் தூக்கிப் பிடிக்கவேண்டியது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அனைவருடைய கடமை! கடமை!! கடமை!!! என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன், வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை இயக்கம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 


தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள்

திராவிட இயக்கவுணர்வுடன்

பட்டுப் போகாமல் பாதுகாக்கும் திராவிடர் கழகம்

எந்தக் காலத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம், எந்தக் காலத்திலும் விடுதலை சிறுத்தைகள், எந்தக் காலத்திலும் திராவிட இயக்க உணர்வுகள்  - அது பட்டுப்போகாமல் பார்க்கவேண்டிய பொறுப்பு இந்தத் தாய்க்கழகத்திற்கு உண்டு! உண்டு!! உண்டு!!!

ஆகவே, அதனை அடிப்படையாகக் கொண்டுதான், மிகத்தெளிவாக இந்தக் கருத்தைச் சொல்கிறோம்.

மதவாதப் பாம்புகள் அவ்வப்பொழுது சீறிக் கொண்டிருக்கின்றன. அவ்வப்பொழுது புற்றிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள் கையாகக் கிளம்புகிறது; சமஸ்கிருதமாகக் கிளம்புகிறது, ஏன்? நீட் நுழைவுத் தேர்வாகக் கிளம்புகிறது. நுழைவுத் தேர்வை நாம் எதிர்த்த நேரத்தில், நாங்கள் அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறோம்.  நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி என்று சொல்லி, தேர்வு வாரியத்தை நாங்கள் எல்லாத் துறைகளிலும் கொண்டு வருகிறோம் என் கிறார்கள். இதுபற்றி  இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நாங்கள் தீர்மானம் போட்டிருக்கிறோம்.

சென்சஸ் மக்கள் தொகைக் கணக்குப்படி, ஆறரை கோடி பேர் பள்ளிக்கூடத்தையே பார்க்காதவர்கள்; பள்ளிக்கூடத்தையே பார்க்காத ஒரு சமுதாயத்தில், இவன் தகுதி தேர்வு நடத்துகிறானாம்? அது என்ன தகுதி தேர்வு?

- விடுதலை நாளேடு.17.2.17