சுயமரியாதை உலகு

திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 மார்ச், 2025

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருப்பம் தரும் தீர்மானங்கள் – சேலம் மாநாடு(!944)


விடுதலை நாளேடு
Published January 30, 2025
கட்டுரை

 பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது. ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது தென் இந்திய நலஉரிமைக் கழகம் என்பதை திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்கிற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் பிரேரேபிக்கப்பட்டது. தோழர் டி.ஷண்முகம் அவர்கள் ஆமோதித்தார்.

இத்தீர்மானத்தைத் தோழர்கள் சி.ஜி.நெட்டோ; அ.கணேசசங்கரன், எ.வேணுகோபால் ஆகியவர்கள் விஷயாலோசனைக் கூட்டத்தில் அனுமதித்துவிட்டு ‘போதுமான கால நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை”யென்பதாக ஆட்சேபித் தார்கள். தலைவர் பெரியார் எழுந்திருந்து ‘ஜஸ்டிஸ்’ என்பது பத்திரிகையின் பெயர் என்றும், இக்கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாகவும், சேலத்தில் 20.11.43-ல் கூடிய நிர்வாகசபைக் கூட்டத்தில் (இவர்களும் கூடியிருந்த நிர்வாகசபைக் கூட்டத்திலே,) ஜஸ்டிஸ் கட்சி என்றிருப்பதை ‘திராவிடர் கழகம்’ என்பதாக மாற்ற வேண்டுமென மாகாண மாநாட்டுக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் மற்றும் பல சங்கங்கள் ஆதரித்திருப்பதாகவும் தென் இந்தியர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார். பின்னர் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. ஆயிரக்கணக்கான கைகள் உயரத் தூக்கின. ஆட்சேபிக்கிறவர்களை கைதூக்கும்படி கேட்கப்பட்ட போது, யாரும் கை தூக்கவேயில்லை! ஆட்சேபித்தவர்களும் சும்மா இருந்துவிட்டார்கள். எனவே தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் சமுதாய சீர்திருத்த சம்பந்தமான தீர்மானங்கள் தலைவரால் பிரேரேபிக்கப்பட்டு ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டன.

அதன் பின் தோழர் அண்ணாதுரை அவர்களின் தீர்மானம் பிரேரேபிக்கப்பட்டு ஒரு சிறு திருத்தத்துடன் நிறைவேறியது.
கடைசியாக ஜில்லா, தாலுகாக்களில் ஸ்தாபன அமைப்பு வேலைக்கு நான்கு பொறுப்பாளர்களை மாநாடு வேண்டிக் கொண்டதும் தலைவரால் முடிவுரை கூறப்பட்டது.
முடிவாக நகரப் பிரமுகரும் வரவேற்புக் கழக முதியவருமான ராவ்சாஹிப் துரைசாமி பிள்ளை அவர்கள், பெரியார், தோழர்கள் அண்ணாதுரை, பாண்டியன் முதலியவர்களுக்கும் வந்திருந்த பிரதிநிதிகளுக்கும் மாநாட்டை சிறப்புடன் கூட்டித் தந்த வரவேற்புக் கழகத் தலைவருக்கும், முனிசிபா லிட்டியாருக்கும் வந்தனோபசாரம் கூற மாநாடு இனிது முடிந்தது.
இனி பொது ஜனங்கள் செய்ய வேண்டிய வேலையை கவனிக்க வேண்டும். அங்கத்தினர்களைச் சேர்ப்பதும்,அமைப்புகளைப் புதுப்பிப்பதும் முக்கியமான வேலையாகும்.

கட்சி அரசியல் தீர்மானங்கள்
1. (அ) இந்த மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்று அழைக்கப்படும் இக்கட்சிக்கு உள்ள தென் இந்திய நலஉரிமைச் சங்கம் என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ Dravidian Association என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.
(ஆ) அதன் முக்கிய கொள்கைகளில் திராவிடநாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரே பிரிட்டிஷ் செக்கரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி ஸ்டேட் நாடாக பிரிக்கப்படவேண்டியது என்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப் பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) திராவிடர் கழகத்து அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் மேற்கண்ட திராவிட நாடு பிரிக்கப்பட்டு அமைக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

ஜாதிபேதம்
2. (அ) மக்கள் பிறவியினால் ஜாதி பேதம் கற்பிக்கப்பட்டிருப்பதையும், அவற்றுள் உயர்வு கற்பிக்கப்பட்டிருப்பதையும் இக்கழகம் மறுப்பதோடு, அவைகளை ஆதரிக்கிற போதிக்கிற, கொண்டு இருக்கிற மதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் காவியம் என்பவை முதலாகிய எவையையும் பொதுமக்களும் குறிப்பாக நம் கழகத்தவர்களும் பின்பற்றக் கூடாது என்று தீர்மானிப்பதோடு, அவை நம்மீது சுமத்தப்படாமல் இருக்கவேண்டிய காரியம் தீவிரமாய்ச் செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
(ஆ) மேலே கண்ட தன்மைகளை நீதியாகக் கொண்ட அரசியல் சட்டங்களையும் மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) வருணாசிரம தர்மம் என்கின்ற கொள்கையையும் அதன் பேரால் ஏற்படுத்தப்பட்ட பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பிரிவையும் இக்கழகம் ஒப்புக் கொள்ளுவதில்லை என்பதோடு, அக்கொள்கைகள் எந்த முறையில் இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டி யவை என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஈ) மனிதனை மனிதன் தீண்டாமை பார்க்காமை, ஒன்றாயிருந்து உண்ணாமை, தொழுகாமை முதலிய தன்மைகளை ஒழிக்க வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(உ) மக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப்பிரிவைக் காட்டும் சொற்களையும் மற்றும் குறிகளையும் விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

சமயம் கோவில் மடம்
3. (அ) கோவில்களில் பல கடவுள்கள் தன்மை யையும், கடவுளுக்கு உருவத் தன்மையையும் அதற்கு பெண்டுபிள்ளை, பல மனைவி, காதற்கிழத்தி தன்மையையும் அதற்கு திருமணம், ஒய்யாரம், உற்சவம், ஊர்வலம், சதுர்கச்சேரி, வாணவேடிக்கை முதலாகிய ஆடம்பரங்கள் செய்யப்படுவதையும் நிறுத்தப்படவேண்டும்.
(ஆ) தொழுகைக்கு பூசைக்கும் தரகன் இருப்பதும் தேங்காய், பழம், கற்பூர ஆரத்தி, நிவேதனம் (படைப்பு) முதலியவைகளுக்கு செலவிடுதலும் ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
(இ) நம் மடங்கள், மடாதிபதிகள் என்கின்ற தன்மைகள் மனித நாகரிகத்திற்கும், பகுத்தறிவிற்கும், சுயமரியாதைக்கும் பொருத்தமற்றதாக இருப்பதாலும், அவை இன்றைய நம் வாழ்விற்கும் லட்சியத்திற்கும் வேண்டாததாகவும், விரோதமானதாகவும் இருப்ப தாலும், அவைகளால் பெரிதும் ஒழுக்கமோ, உயர் குணமோ, அறிவு வளர்ச்சியோ, சமுதாய ஒற்றுமையோ ஏற்படுவதற்கு இல்லாமல் இருப்பதினாலும் அவற்றின் அடிப்படையை மாற்றி அவைகளை சமுதாய வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் ஒற்றுமைக்கும் பாடு படும் ஸ்தாபனங்களாக மாற்றவேண்டும்.
(ஈ) கோயில்களிலும், மடங்களிலும் ஏராளமான பொருளும் வருவாய்களும் இருப்பதால் அவை மக்களின் கல்வி, சுகாதாரம், வைத்தியம், விஞ்ஞானம், தொழிற்சாலை, இயந்திரசாலை, கண்காட்சி முதலிய காரியங்களுக்குப் பயன்படுத்தச் செய்யவேண்டும் என்பதாக இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

பெண்கள்
4. (அ) பெண்களுக்கு ஆண்களைப் போன்ற சொத்து உரிமையையும், இருவருக்கும் கல்யாண ரத்து உரிமையையும், கலப்பு மண உரிமையையும் அளித்து அவை சட்டமாக்கப்படவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஆ) விதவை மணம் ஆதரிக்கப்பட்டு பெருவாரியாக அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(இ) திருமணங்கள், பதிவுத் திருமணங்களாகவும், அல்லாவிட்டால் பார்ப்பனப் புரோகிதம், ஆடம்பரம், வீண் சடங்கு இல்லாததாகவும், அவசியமானால் ஒரு நாள், ஒரு விருந்துக்கு மேல் இல்லாமலும் நடத்தப் படவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

கல்வி
5. (அ) கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும் புலமைக்குமே தவிர, மதப்பிரசாரத்திற்காக அல்ல என்பது கல்வியின் அடிப்படைத் தத்துவமாக இருக்கவேண்டும்.
(ஆ) பகுத்தறிவுக்கு மாறானதும், மூட நம்பிக் கையை வளர்ப்பதுமான எந்த விஷயங்களும் கல்வியில் பாடமாகவோ, பாடப்புத்தகமாகவோ, கற்பிக்கப்போவதாகவோ இருக்கக்கூடாது.
(இ) கல்வி கற்பிக்கப்படுவது என்பதானது யாவ ருக்கும் பொதுவானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் பிற்பட்ட வகுப்பாருக்கும் முதல் உரிமை அளிப்பதாக இருக்கவேண்டும்.
(ஈ) சராசரி வாழ்க்கைத் தேவைக்கும் சாதாரண அறிவு தன்மைக்கும் மேற்பட்டதான கல்வி முறை பொதுக்கல்வியாக செய்யப்படாமல் எல்லா மக்களுக்கும் எண், எழுத்து, வாசிப்பு இருக்கும் படியான அளவு கல்வி, பொது இலவச கட்டாயக் கல்வி முறையாக இருக்கவேண்டும்.
(உ) அரசியல் நிர்வாகத் தேவைக்கு மேற்பட்ட கல்வியின் பொறுப்பையும், உயர்தரக் கல்வி என்று சொல்லப்படுவதின் பொறுப்பையும், சர்க்கார் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதோடு, பொது நிதியில் இருந்து அவைகளுக்கு செலவழிக்கவும் கூடாது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

விவசாயம்
6. (அ) விவசாய முறை
(ஆ) நீர் பாய்ச்சல் வசதி
(இ) தனிப்பட்ட மக்களுக்கு நில அடைப்பு (தர்க்காஸ்து)
ஆகிய இவைகளுக்கு ஒரு தனிப்பட்ட இலாகா ஏற்படுத்தி இவற்றை ஒரு தொழில் முறையாக நடத்தவேண்டும் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தொழிலாளி
7. தொழிலாளிகளுக்கு இலாபத்தில் பங்கும் அப்பங்கை முதலீட்டுப் பங்குடன் சேர்க்கப்படவும் வேண்டும்.
மற்றவை ஜஸ்டிஸ் கட்சிக்குப் பெரியார் அளித்த திட்டம் என்பவைகளை ஜஸ்டிஸ் கட்சி முன்பே ஒப்புக் கொண்டிருப்பதை இம்மாநாடு ஏற்றுக்கொள்கிறது.

ஒழுங்கு முறை
8. (அ) நம் கட்சிக்கு ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துக்கொள்ளத் தக்க பாதுகாப்பு இருக்க வேண்டியது அவசியம் என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஆ) அதற்கு ஏற்ற காரியங்கள் செய்ய தலைவரைக் கேட்டுக்கொள்கிறது.
(தொடரும்)

சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருப்பம் தரும் தீர்மானங்கள் – சேலம் மாநாடு (2)

Published January 31, 2025

சிறப்புக் கட்டுரை

நேற்றைய (30.1.2025) தொடர்ச்சி…
அண்ணாதுரை தீர்மானம்
“9. கால நிலையையும், உலக நிலையையும், சர்க்கார் நிலையையும், நம் மக்கள் தன்மையையும், இதுவரை நாம் கடந்து வந்ததன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் உண்டான பலனையும் மற்ற ஸ்தாபனங்களுக்கும், சர்க்காருக்கும் இருந்து வரும் நிலைமையும், அதனால் அவைகளுக்கு ஏற்பட்ட பலனையும் நன்றாக ஜாக்கிரதையாக ஆலோசித்துப் பார்த்தால் நம் சமுதாயத்தில் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கோரியும் நமது கட்சியின் பேரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்துவரும் போக்கை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக்கொண்டு போகப்பட்டுவிட்டோம்.

யுத்த நெருக்கடி
அதாவது, நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்கு தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங் களை எதிர்த்துப் போராடி சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவிசெய்து வந்ததும், குறிப்பாக சென்ற அய்ந்து வருஷ காலமாக நடந்துவரும் உலக யுத்தத்தில் உள்ள நெருக்கடியில் நேசநாடுகளின் வெற்றிக்குக் கேடு உண்டாகும்படியான நிலையில் நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்துவந்த பெருங்கிளர்ச்சிகளையும் நாசவேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும் நேசநாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரசாரம் முதலியவைகள் நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும் சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்கு பயன்பட்டு விட்டது.
இந்திய அரசியல் சமுக இயல் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சர்க்காரார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

நீதி நெறி
இந்திய மக்களின் அரசியல் சமுதாய இயல் சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதி நெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்துவந்தும், நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக்கூட சேர்த்துப் பேசும் விதத்தில்லாதாக அலட்சியப்படுத்தப்பட்டது.
மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ, இந்தியா மந்திரியாலோ பிரிட்டிஷ் முதல் மந்திரி யினாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப்பற்றி பலதடவை பேச ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிட கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டிருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட நிலைமை மாறி நம் கட்சிநிலை மதிக்கப்படவும் குறிப்பிடவும் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படவும், நம் கட்சி இனியும் கட்டுப்பாடும் உரமும் பெற்று உண்மையான தொண்டர்களைக் கொண்டு நாணயமாகவும் தீவிரமாயும் தொண்டாற்றி மதிப்புப் பெறவும் நல்ல வசதியும் சவுகரியமும் ஏற்படுவதற்கு நம் கட்சிக்கு அடியில்கண்ட திட்டம் உடனே அமலுக்குக் கொண்டு வரப்படவேண்டியது அவசியமும் அவசரமும் ஆன காரியமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

கவுரவப் பட்டங்கள்
அ. நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும் இனியும் வந்துசேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும் உடனே சர்க்காருக்கு வாபசு செய்துவிட வேண்டும்; இனி ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
ஆ. அதுபோலவே அவர்கள் யுத்தத்திற்கு ஆகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்கு ஆகவும், மத்திய சர்க்காராலோ, மாகாண சர்க்காராலோ எந்தவிதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும், அவைகளையெல்லாம் உடனே இராஜிநாமா செய்துவிட வேண்டியது.
(இ). தேர்தல் அல்லாமல் ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்துபோர்டு ஆகியவைகளின் தலைவர், உபதலைவர் அங்கத்தினர் ஆகிய பதவிகளில் சர்க்காரால் நியமனம் பெற்றே அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்தல் பெற்றோ இருக்கிறவர்கள் யாவரும் தங்கள் தங்கள் பதவிகளை உடனே இராஜிநாமா செய்துவிட வேண்டியது.

போட்டி இல்லை
(ஈ). சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவித மான தேர்தலுக்கும் கட்சி அங்கத்தினர்கள் நிற்கக் கூடாது.
“இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும் தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டமில்லை என்று கருதி கட்சியை விட்டு நீங்கிக்கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டிய வர்களாவார்கள்.”
இதை சங்க காரியதரிசி தோழர் சி.என்.அண்ணா துரை அவர்கள் பிரேரேபித்தார்.
கட்சியின் காரியக்கமிட்டி காரியதரிசி தோழர் ஊ. பு. அ. சவுந்தரபாண்டியன் அவர்கள் மனப்பூர்வ மாய் ஆமோதிப்பதாக கூறி ஒரு திருத்தம் கூறினார். திருத்தம் தலைவர் பெரியாராலும், அண்ணாதுரை யாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. திருத்தமாவது:
(உ) “இதையேற்று ஒரு வாரத்தில்” என்கின்ற பிரிவுக்கு பதிலாக ‘1945 மார்ச்சு 31 ஆம் தேதிக்குள்ளாக தமிழ்நாட்டில் 10000 அங்கத்தினர்களுக்குக் குறையாமல் அங்கத்தினர்களை சேர்த்து ஜில்லா தாலுகா சங்கங்களை இன்னும் அதிகமாக பலப்படுத்தி ஒழுங்குமுறை கண்டிப்புகள் ஏற்படுத்தி ஒரு தனி மாநாடு கூட்டி தெரிவித்து அன்று முதல் அமலுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்பதாகும்.
திருத்தப்பட்டபடி தீர்மானத்தை ஓட்டுக்குவிட தலைவர் எழுந்தார். மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகளால், ‘வாய்தா கூடாது இன்று முதலே அமலுக்கு வரவேண்டும்’ என்றும் ‘ஒரு வார வாய்தா போதும்’ என்றும்,

சமாதானம்
அதிகமான காலம் 3 மாதத்திற்குள் என்று இருந்தால்போதும் என்று சொல்லிக்கொண்டு நூற்றுக் கணக்கான பேர்கள் மேடைக்குவந்து பேச தலைவர் அனுமதி கேட்டும் ஆரவாரம் செய்வதுமூலம் திருத் தத்தை எதிர்த்தார்கள். பிறகு தலைவர் 2-3 பேர்களை மாத்திரம் பேச அனுமதித்தபின் திருத்தத்தை எதிர்த்தவர்களுக்கு சமாதானம் சொல்லும் முறையில் பேசியதாவது:
“தோழர்களே,
இத்தீர்மானத்திற்கு பலமான எதிர்ப்பு இருக்கும் என்று கருதினேன். இந்த 15000 பேர் கொண்ட கூட்டத்தில் ஒரு சிறு எதிர்ப்புகூட இல்லை என்று கண்டேன். இந்த நிலை உங்களுக்கு என்னை, ஒரு சலிப்படைய முடியாத தொண்டனாக ஆக்கிவிட்டது. இந்த தீர்மானத்தை நான் இன்றும் இனிமேலும் ஒரு நிமிடமாவது தலைமை வகிப்பதற்கும், தலைமை வகிக்காமல் தப்பித்துக்கொள்ளவும் காரணமாக வைத்திருந்தேன். அப்படி இருக்க இத்தீர்மானம் இன்று நம்மில் யாருக்கும் அதாவது திருத்தம் பிரேரேபித்த என் நண்பர் மதுரை ஜில்லா போர்டு பிரசிடெண்ட், பாண்டியனுக்கும் இங்கு வீற்றிருக்கும் நண்பர் செங்கல்பட்டு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தோழர் டி. சண்முகத்திற்கும் மற்றும் சில பதவி ஆளருக்கும்கூட அபிப்பிராய பேதம் இல்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.

ஆனால், கொஞ்சம் வாய்தா காலம் கேட்கப்படு கிறது. இது பாண்டியன் அவர்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானத்தைக் காப்பாற்றவல்ல. இப்பொழுதே விட்டுவிட அவர் தயாராய் இருக்கிறார். ஆனால், அவர் இத்திருத்த தீர்மானம் இங்கு கொண்டுவந்ததின் கருத்து பட்டம், பதவி ஆளர்களை வெளியில் அனுப்புவதற்கு ஆக அல்ல, அவர்களுடைய ஒத்துழைப்பை இன்னும் அதிகமாகப் பெறவும் பாமர மக்கள் ஆதரவை அதிகமாகப் பெறவும், சர்க்காரைத் திருத்தவும், நம் இயக்கத்தில் தன்னல மறுப்பு உணர்ச்சியும் நாணயமும் பெருகவும் ஆகவே கொண்டு வந்திருக்கிறோம். ஆதலால், சிறிது நாள் பொறுப்பதால் ஒன்றும் முழுகிப்போகாது. நாம் இத்தீர்மானத்தினால் 6 மாதகாலம் என்று அறுதியிட்டு வாய்தா கொடுக்கவில்லை. 6 மாதத்திற்கு உள்ளாக என்றுதான் போட்டிருக்கிறோம். 6 மாதத்திற்குள் என்பது ஒரு மாதத்திற்குள்ளாகவே என்றும் பொருள் கொள்ளலாம். நாளைக்கே ஆரம்பித்தாலும் இத்தீர்மானத்தின்படி குற்றமாகாது.

உழைப்பின் பலன்
ஆனால், இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிற நீங்களும் நானும் வெறும் வாய்ப் பேச்சாளர்களாயிருந்து சர்க்காரையும் பட்டதாரிகளையும் குறைகூறுகிறோம் என்று யாரும் கருதக்கூடாது. நமக்கு அதிகமாக நிபந்தனை இதில் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் ஜில்லா தாலுகா சங்கங்களை இத்தீர்மானங்களின்படி அமைக்க வேண்டும். ஜில்லாவுக்கு ஆயிரம் பேராவது அங்கத்தினர்கள் இதன்படி சேர்க்கப்படவேண்டும். தனி மாநாடு கூட்டி அதில் வெளிப்படுத்த வேண்டும் என்பது தவிர வேறு கஷ்டம் ஒன்றுமில்லை. தோழர் பாண்டியன் அவர்களோடு ஆலோசித்தேன். அவர் குறை கூறுபவர்களுக்கு வாய்ப்புக்காகவே இதைப் பிரேரேபிக்கிறேன் என்று சொன்னார். அது சரியென்றுபடுகிறது. என் தலைமையில் உங்களுக்கு இருக்கும் அன்பை இந்த சொற்ப நாள் வாய்தாவுக்கு அனுமதி கொடுப்பதின் மூலம் காட்டுங்கள். “இந்தச் சமயத்தில் தனிப்பட்ட முறையில் ஒன்றும் பேசக்கூடாது. எல்லோரையும் நண்பராகக் கருதுங்கள். நம்மை வைகிறவர்களையும் அவர்கள் விஷயத்தில் பரிதாபப்பட்டுக் கொண்டு நண்பராகக் கருதுங்கள். உழைப்பாளிகள் யார்? உழைப்பின் பலனை அனுபவிக்கிறவர்கள் யார்? என்பது இத்தீர்மானத்தின் செய்கையினால் விளங்கிவிடப் போகிறது” என்று கூறி ஓட்டுக்கு விட்டார்.
பெருத்த ஆரவாரத்தின் மீது ஆயிரக்கணக்கான கைகள் வெகுநேரம் தூக்கிய வண்ணமாக நின்று ஆதரவு அளித்தன.
ஆட்சேபிக்கிறவர்கள் கைதூக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஏகமனதாக…
6 மாத வாய்தா கூடாதென்று பேசிய இரண்டொருவர் கைதூக்கினர். அவர்களைப் பார்த்து தலைவர் இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பதிவு செய்ய நீங்கள் தயவுசெய்து அனுமதியளிக்கக் கூடாதா என்று கேட்டார். உடனே அவர்களும் கையை தொங்கப் போட்டுக் கொண்டார்கள். பிறகு தலைவர் ஆடசேபிக்கிறவர்கள் கை தூக்கலாம் என்றுசொல்லி இரண்டு தடவை நான்கு புறமும் திரும்பிப்பார்த்தார்.
திருத்தத்தின்படி தீர்மானம் ஏகமனதாக நிறை வேறியது. இதை தலைவர் சொன்னவுடன் சொல்ல முடியாத ஏராளமான கைத்தட்டலும், ஆரவாரமும் பெரியார் வாழ்க! கழகம் வாழ்க! திராவிடநாடு திராவிடருக்கே! என்கின்ற பேரொலியும் மக்களை இலக்கச் செய்துவிட்டது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:18 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: 1944, சேலம் மாநாடு, திராவிடர் கழகம், தீர்மானங்கள்

செவ்வாய், 12 ஜூலை, 2022

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியப் பேராளர் மாநாடு



  July 12, 2022 • Viduthalai

மலேசிய திராவிடர் கழகத்தின் 76ஆம் ஆண்டு மூவாண்டு தேசியப் பேராளர் மாநாடு கழகத்தின் தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை தலைமையில். மலேசியா,கோலாலம்பூர், கெராக்கான் மண்டபத்தில் 10.7.2022 அன்று காலை 10.00 மணிக்குத் தொடங்கி மாலை 4.00 மணி வரையில்  நடைபெற்றது.

 கழக தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை அவர்கள் சிறப்புரையில், 

1946ஆம் ஆண்டு அகில மலாயா தொடங்கப்பட்டது முதல் திராவிடர் கழக கொள்கைகளையும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச்  சிந்தனைகளையும் இந் நாட்டில் தொடர் பிரச்சாரமாக இன்று வரையில் செய்து வருகிறது. கழகத்தில் இளைஞர்களை அதிகம் இணைக்க ஆக்கப்பூர்வமான திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளதாக அவர் தமதுரையில் தெரிவித்தார். 

கழக மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த மலேசிய நாட்டின் மனிதவள துறையின் அமைச்சர் மாண்புமிகு டத்தோ சிறீ எம்.சரவணன் உரையில், 

நம் சமுதாய சுயமரியாதையை நம்மிடையே மேலோங்கச் செய்தது  தந்தை பெரியாரின் திராவிடர் கொள்கைதான். பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர் என்று பார்க்கக்கூடாது. மாறாக பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை சிந்தனையை மக்கள் மனதில் விதைப்பதுதான் அவரின் கொள்கையாகும். பெரியார் தன் துன்பங்களை மறைத்து சமுதாயத்திற்காக சேவையாற்றிய சிறந்த மனிதர். அவரை பற்றி இளைஞர்கள் தெரிந்திருப்பது அவசியம் என தமது சிறப்புரையில் கூறினார்.

 மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் 

1) பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக்கு   பொது விடுமுறை அரசாங்கம் வழங்கவேண்டும்

2) தமிழ்பள்ளியே நமது தேர்வாகவும், அதிகமான மாணவர்களை  தமிழ்பள்ளியில் சேர்க்க வேண்டும்

3) அடுத்த தலைமுறையினர் தெரிந்துக்கொள்ளும் வகையில் கழகத்தின் 76ஆண்டு வரலாற்று நூல் தொகுத்து வெளியிடுவது. 

4) கழகத்தில் அதிக அளவில் இளைஞர்களைச் சேர்பதற்காக தேசிய அளவில் இளைஞர் மகளிர் பயிற்சி பட்டறை வழங்குவது அனைத்து  பேராளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

2022 முதல் 2025ஆம் ஆண்டுக்கான மூவாண்டு பொறுப்பாளர் தேர்வினை வழக்குரைஞர் வ.வனராணி நடத்தி வைத்தார். 

தேர்வுப் பெற்றவர்கள்

1) தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை

2)தேசிய துணைத் தலைவர் சா.இரா.பாரதி

3)தேசிய உதவித் தலைவர் இரா.மனோகர்

4)தேசிய உதவித் தலைவர் வீ.இளங்கோவன்.

5)தேசியப் பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம்

6)தேசிய துணைப் பொதுச் செயலாளர் ச.நாகேந்திரன்

7)தேசியப் பொருளாளர் கு.கிருட்டிணன்

8)தேசிய அமைப்புச் செயலாளர் மு.இராதாகிருஷ்ணன்

9)தேசிய நிதிச் செயலாளர் இரா.காளிதாசன்

10)தேசிய இளைஞர் தலைவர் பா.சோமசம்பந்தனார்

11)தேசிய இளைஞர் செயலாளர் பா.விக்கினேஸ்பாபு

12)தேசிய மகளிர் தலைவி சு.குமுதா

13) தேசிய மகளிர் செயலாளனி க.சாந்தி

14) மத்தியச் செயலவை உறுப்பினர் த.பெருமாள்

15) மத்தியச் செயலவை உறுப்பினர் மு.குமார்

16) தேசியக் கணக்காய்வாளர் த.ராஜசேகரன்

17) தேசியக் கணக்காய்வாளர் ஞா.தமிழ்செல்வி.

இவர்கள் அனைவரும் போட்டியின்றி அனைத்து  பேராளர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்

மாநாட்டில் தேர்வுப் பெற்ற பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம்     கழகத்தின்   மாநாட்டை அதிகாரப்  பூர்வமாக திறந்து வைத்து மானியம் வழங்கிய மனிதவள அமைச்சர் டத்தோ சிறீ. எம். சரவணன் அவர்களுக்கும், ச.த. அண்ணாமலையின் தலைமையில் தேர்வுப் பெற்ற  பொறுப்பாளர்களுக்கும், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினருக்கும், திரளாக கலந்துக்கொண்ட பேரா ளர்களுக்கும், நாளிதழ்களுக்கும், மின்னியல் ஊடகங்களுக்கும், காவல்துறையினருக்கும்,  கழக நடவடிக்கைகளில் நெடுங் காலமாக  நம்முடன் பயணித்து வரும்  தமிழக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், அதேவேளையில் மாநாடு வெற்றி பெற எல்லா வகையிலும் துணைநின்ற   அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டி மாநாட்டை நிறைவு செய்தார். 

பெரியாரைப் பற்றி பேசாதவர் மனிதரே அல்லர்!

மலேசிய நாட்டு அமைச்சர் டத்தோசிறீ சரவணன்

பெரியார் கொள்கைகளைப் பற்றி அறிந்திருக்காமல் அதனை புறக்கணிப்பவர் களும் பகுத்தறி வாளர் பெரியாரைப் பற்றிப் 'பேசாத வர்களும் மனிதரே கிடையாது என மஇகாவின் துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோசிறீ எம். சரவணன் சூளுரைத்தார்.

பெரியாரைப் பற்றி பாட நூலில் வெளியானதை தொடர்ந்து பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நம் சமுதாய சுயமரியாதையை நம்மிடையே மேலோங்கச் செய்தது பெரியாரின் திராவிடர் கொள்கை தான். அவர் ஒன்றும் கடவுளை புறக்கணிப்பவர் அல்லர். மாறாக பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை சிந்தனையை மக்கள் மனதில் விதைப்பதுதான் அவரின் கொள்கை யாகும்.

அவரைப் பற்றித் தெரியாதவர் கள்தான் தேவையில்லாத கருத் துகளை பேசுவதுடன் அவர்களின் அந்த கருத்துகளை இளைஞர்கள் மனதிலும் விதைத்து வைக்கின்றனர்.

பெரியார் தன் துன்பங்களை மறைத்து சமுதாயத்திற்காக சேவையாற்றிய சிறந்த மனிதர். அவரைப் பற்றி இளைஞர்கள் தெரிந்திருப்பது அவசியம் என கெராக்கான் கட்சியின் தலைமையக மண்டபத்தில் நடைபெற்ற மலேசிய திராவிடர் கழகத்தின் 75 ஆம் மூவாண்டு தேசியப் பேராளர் மாநாட்டில் சிறப்புரையில் அவர் கூறினார்.

மலேசிய திராவிடர் கழகமும் மஇகா கட்சியும் பிரிக்கமுடியாத உறவாகும். மலேசிய மண்ணில் நம் சமுதாயத்திற்காக முதல் முதலாக தொடங்கப்பட்ட அமைப்புகளில் இவை இரண்டும் அடங்கும். சமூக சேவைக்காக மஇகா செயல்பட்ட வேளையில், சுயமரியாதையை காப்பதற்காக திராவிட கழகமும், இளைஞர்களின் வளர்ச்சிக்காக மணிமன்றமும் தொடங்கப்பட்டன என அவர் சொன்னார்

மேலும் நம் நாட்டில் ஜாதி என்ற வார்த்தை தற்போது தலையோங்கி யுள்ளது. இவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும். ஜாதி என்ற வார்த்தை நம்மிடையே பிளவை ஏற்படுத்தும்.

ஆகையால் இளைய தலை முறையினர் பெரியார் கொள்கையை தெரிந்து கொண்டு நம் சமுதாய நன்மைக்காக தேவையானவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே மலேசிய திராவிடர் கழகத்தின் தேவை களை என்னால் முடிந்தவரை நான் பூர்த்தி செய்வேன் என்றும் அடுத்த தலைமுறையினரை கழகத்தில் இணைப்பதற்கான திட்டங்களை கழகம் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் ஆலோ சனை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிடர் கழக பேராளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

(காளிதாசன் தியாகராஜன் - ஆர்.குணா)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:17 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆண்டு விழா, திராவிடர் கழகம், மலேசியா

புதன், 4 மார்ச், 2020

திராவிடர்கழகப்பெயர்மாற்றம்ஒரேநாளில்நிகழ்ந்தா?

வாலாசா வல்லவன்

திராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா?

தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற ஜஸ்டிஸ் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. ஒராண்ட காலமாகப் பல்வேறு மாநாடுகளில் விவாதிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

26-4-43 நண்பகல் 2 மணிக்குச் சேலம் தேவங்கர் பள்ளிக் கூடத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டம் பெரியார் தலைமையில் கூடியது.  அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் - 2

ஜஸ்டிஸ் கட்சிக்கு (S.I.L.F.) தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரைத் தென்னிந்திய திராவிடர் கழகம் என்றும்,  ஆங்கிலத்தில் South Indian Dravidan Fedrationஎன்றும் பெயர் திருத்தப்பட வேண்டும்.

தீர்மானம் - 4

இத்தீர்மானங்களைச் சேலத்தில் நடக்க போகும் கட்சி மாநாட்டில் உறுதிப்படுத்தி அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது. (குடி அரசு 4-12-43 பக்கம் 5)

ஜஸ்டிஸ் கட்சிக்கு அமைந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயர் இனித் தென் இந்திய திராவிடர் கழகம் என்பதாக அழைக்கப்பட வேண்டும் என்பதாகும்.  இந்தத் தீர்மானமும் ஒரு விதத்தில் திருவாரூர் மகாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்றே சொல்லலாம்.
(குடி அரசு 4-12-43 பக்கம் 11)

கோவையில் 19-11-43 அன்று அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்திற்குப் பெரியார் தலைமைத் தாங்கினார்.  அப்போது பெரியாருக்கு வாசித்தளித்த வரவேற்புத் தாளில் கோவை மாவட்ட திராவிட கழகத்தால் என்று அச்சிட்டிருந்தனர்.
(குடி அரசு 18-12-43 பக்கம் 4)

சேலம் நகரில் செவ்வாய்பேட்டை திராவிடர் கழகத்தின் முதலாவது ஆண்டுவிழா 16-1-44 முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது.  தொடக்கத்தில் சேலம் தோழர்கள் பெரியார் ஈ. வெ. ரா., அண்ணாதுரை, என்.அர்ச்தனன், ஐ. ச. கண்ணப்பர் ஆகியவர்களை இரட்டைக் குதிரை கோச்சு வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். (குடி அரசு 22-1-44 பக்கம் 6)

1943இலேயே இங்குத் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு முதலாமாண்டு விழாவும் நடைபெற்றுள்ளது.  புவனகிரி திராவிடர் கழக ஆரம்ப விழா 6-2-44 காலை 10.30 மணிக்கு சி. பி. சின்னராசு தலைமையில் நடைபெற்றது.  பெரியார் அவர்களுக்குத் திராவிடர் கழகத்தாரால் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கப்பட்டது.
(குடி அரசு 12-2-44 பக்கம் 5)

சென்னையில் நீதி கட்சியின் சென்னை மாவட்ட மாநாடு 13-2-44 அன்று தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவது தீர்மானம் கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானமாகும்.

1.  தென் இந்தியர் நல உரிமைச் சங்கம் என்பதைச் சென்னை மாகாண திராவிடர் கட்சி என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப்போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
(குடி அரசு 26-2-44 பக்கம் 14)

திருச்சி மாவட்ட நீதிக்கட்சி 15ஆவது மாநாட்டில் 20-2-44 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானம் பற்றியது ஆகும். அண்மையில் சேலத்தில் நடக்கவிருக்கும் நமது மாகாண மாநாட்டில் நமது கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு சிபாரிசு செய்கிறது.  (குடி அரசு 4-3-44 பக்கம் 4)

நாகையில் திராவிடர் கழகம் திறப்பு விழா 9-3-44 முற்பகல் 11.45 மணிக்கு நடைபெற்றது.  நாகை திராவிடர் கழகத்தாரால் பெரியாருக்கு நல்வரவேற்பிதழ் வாசித்து அளிக்கப்பட்டது.  சி. பி. சின்னராசு, எஸ். கே. சாமி ஆகியோர் உரையாற்றிய பின் டி. வி. சொக்கப்பா தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தைத் திறந்து வைத்தார்.
(குடி அரசு 18-3-44 பக்கம் 5)

11-3-44 அன்று திருச்சி பொன்மலையில் கற்கண்டார் கோட்டை திராவிடர் கழகத் திறப்பு விழாவும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.  பெரியாருக்கு 102 காலனாக்கள் பணமுடிப்பளித்தனர்.
(குடி அரசு 18-3-44 பக்ம் 10)

கோவை மாவட்ட திராவிட இளைஞர் மாநாடு

17-4-44 அன்று ஈரோடு சரஸ்வதி ஹால் என்னும் மண்டபத்தில் கோவை மாவட்ட முதலாவது திராவிட இளைஞர் மாநாடு தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெறும்.  க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.  அனைவரும் வருக.
(குடி அரசு 15-4-44 பக்கம் 5)

மேற்கண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று பெயர் மாற்றத் தீர்மானம் ஆகும்.  அண்மையில் நடக்கவிருக்கும் நீதி கட்சியின் மாகாண மாநாட்டில் அக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமென்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு வலியுறுத்துகிறது/

சேலத்தில் சூன் 18, 19 ஆகிய நாட்களில் நடைபெற்ற சேலம் மாவட்ட திராவிட இளைஞர் மாநாட்டு தீர்மானங்களில் முதன்மையானது.

1.  நீதி கட்சியையும், தன் மதிப்பியக்கத்தையும், ஒன்றுபடுத்தி திராவிடர் இயக்கமென்று பெயரிட்டு நிதியும், கழகங்களும், தினசரித்தாளும் அமைத்து ஆக்க வேலை செய்ய பெரியால் ஈ. வெ. ரா.வை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(குடி அரசு 8-7-44 பக்கம் 11)

11-7-44 அன்று தஞ்சையில் ஊ. ஆ. பூ. சௌந்தரபாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட திராவிடர் இளைஞர் மாநாடு நடைபெற்றது.  இம்மாநாட்டில் நீதிக் கட்சியையும் தன் மதிப்பியக்கத்தையும் ஒன்றுபடுத்தி திராவிடர் இயக்கம் என்று பெயரிட வேண்டும்மென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
(குடி அரசு 29-7-44 பக்கம் 2)

திராவிடர்களே சேலம் மாநாட்டிற்குச் செல்லுங்கள் என்ற தலையங்கம் எழுதப்பட்டது.  அத்தலையங்கத்தில் நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம், நமக்கு வேண்டியது திராவிட நாடு  என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
(குடி அரசு 12-8-44 பக்கம் 6)

20-8-44இல் நடத்த இருந்த சேலம் மாநாடு சரியான ஏற்பாடு செய்யப்படாததால் 27-8-44க்குத் தள்ளி வைக்கப்பட்டு நடைபெற்றது.

சேலம் மாநாட்டுக்கு வரும் தீர்மானங்கள் கட்சி அரசியல் தீர்மானங்கள்

1. (அ)  இந்த மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்னும் இக்கட்சிக்கு உள்ள தென்இந்தியர் நலஉரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடர் கழகம்  `னுசயஎனையை ஹளளடிஉயைவடி என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.
(குடி அரசு 26-8-44 பக்கம் 3)

சேலம் மாநாடு ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டதால் மாநாட்டிற்கு வரும் தீர்மானங்கள் முன் கூட்டியே குடி அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

27-8-44இல் நடைபெற்ற சேலம் மாநாடு சேலம் நகரையே உலுக்கியது.  ஊர்வலத்தில் 30,000 பேர், உயிருக்குத் துணிந்த வீரர்கள் 5,000 பேர், 40 குதிரைகள், 2 யானைகள், 4 சக்கர இரட்டைக் குதிரை சாரட்டில் தலைவர் ஊர்வலம் டஜன் கணக்கான கார்கள் பின் தொடர்ந்தன.  புதிய உடையுடனும் கொடியுடனும் 300 தொண்டர்கள், 5 ஜதை பாண்டு, 10 ஜதை மேளம், 100 தப்பட்டை, 40 கொம்புகள் பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடர்க்கே, திராவிடர் கழகம் ஓங்குக என்ற முழுக்கம் பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது.  ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்பதைத் திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் முன்மொழியப்பட்டது.  தோழர் டி. சண்முகம் அவர்கள் அமோதித்தார். இத்தீர்மானத்தைத் தோழர்கள் சி. ஜி. நெட்டோ, அ. கணேச சங்கரன், எ. வேணுகோபால் ஆகியவர்கள் விஷய ஆலோசனைக் கூட்டத்தில் அனுமதித்து விட்டுப் போதுமான கால நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என்பதாக ஆட்சேபித்தார்கள்.  தலைவர் பெரியார் எழுந்திருந்து ஜஸ்டிஸ் என்பது பத்திரிக்கையின் பெயர் என்றும், இக்கட்சியின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாகவும், சேலத்தில் 26-11-43 இல் கூடிய நிர்வாக சபை கூட்டத்தில் (இவர்களும் கூடியிருந்த நிர்வாகசபைக் கூட்டத்தில்) ஜஸ்டிஸ் கட்சி என்றிருப்பதை திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டுமென் மாகாண மாநாட்டுக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் மற்றும் பல சங்கங்கள் ஆதரித்திருப்பதாகவும் தென்னிந்தியர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார். பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  ஆயிரக்கணக்கான கைகள் உயரத்துக்கின.  ஆட்சேபிக்கிறவர்கள் கை துக்கும்படி கேட்கப்பட்ட போது யாரும் கை துக்கவே இல்லை. ஆட்சேபித்தவர்களும் சும்மா இருந்து விட்டார்கள், எனவே தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
(குடி அரசு 2-9-44 பக்கம் 3)

சேலம் மாநாடு பற்றிப் பெரியார் அறிக்கை

சேலம் மாநாட்டைப் பற்றி ஒரு சிலர் தாறுமாறான அறிக்கைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.  அவைகள் ஒன்றும் நேர்மையானவை அல்ல, பெரும்பாலான விஷயங்கள் உண்மையுமல்ல.  அந்த அறிக்கைகள் எனக்கு ஒன்றும் அனுப்பவுமில்லை.
மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சிக்கு தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்று, இருந்த பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது உண்மைதான், ஆனால் அத்தீர்மானம் பொதுக்கூட்டத்தில்  பிரேயித்து ஆமோதித்தவுடன் இதற்குப் போதிய நோட்டீஸ் இல்லை  என்று மாத்திரம் தோழர் நெட்டோ சொன்னார்.  அதை கணேசங்கரன் ஆதரித்தார்.  தலைவர் அதற்குச் சமாதானம் சொன்னார்.

சேலத்தில் 26-11-43ம் தேதியில் நடந்த ளு. ஐ. டு. கு நிர்வாகச் சபைக் கூட்டத்தில் பெயர் மாற்றம் நிறைவேற்றப்பட்டு அதைச் சேலத்தில் நடக்கும் மாகாண (இந்த) மாநாட்டுக்குச் சிபார்சு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.  அதில் தோழர்கள் நெட்டோ, இரத்தினம்பிள்ளை முதலியவர்களுக்கும் இருந்திருக்கிறார்கள்.  அதன் பின் சுமார் 20-க்கு மேற்பட்ட ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இது நிறைவேற்றப்பட்டு சேலம் மாநாட்டுக்குச் சிபார்சு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்த மாநாட்டிற்கும் இதுபற்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான தீர்மானங்கள் வந்திருக்கிறன்றன, அவை தோழர் நெட்டோ அவர்கள் வசமே இன்னமும் இருக்கின்றன.

அன்றியும் தென் இந்தியர் கழகம் என்பதும் திராவிடர் கழகம் என்பதும் ஆதியில் ஏற்படுத்தினவர்களின் கருத்தில் வித்தியாசம் கொண்டதல்ல, மக்களுக்கு இன எழுச்சியும், நாட்டு எழுச்சியும் ஏற்படுவதற்கும், திராவிட நாடு கேட்பதற்கும் ஊக்கம் அளிப்பதற்கும் ஆகவே அச்சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.

பிரதிநிதிகள் ஓட்டு ஓட்டு என்றார்கள், ஓட்டுக்கு விடப்பட்டது; ஏகமனதாய் நிறைவேறிற்று.  அப்போது தோழர் நெட்டோ அவர்களும் மற்றும் இப்போது அறிக்கை விடும் நண்பர்களும் இருந்தார்கள்.  எதிர்ப்புக்கு நெட்டோவாவது இதர நண்பர்களாகவது கை துக்கியோ, ஓட்டு கொடுக்கவில்லை; வேறு ஒருவரும் எதிர்ப்புக்கு ஓட்டு கொடுக்கவில்லை.  இதுதான் பெயர் மாற்றத் தீர்மானத்தினுடையவும் அதன் எதிர்ப்பினுடையவும் நடவடிக்கையாகும்.  நெட்டோ முதலியவர்களால் பத்திரிகைகளுக்கு வந்த சேதிகள் பின்னால் யோசித்துச் சொல்லப்படுபவைகளாகும்.

மாநாடு வெற்றியாக முடிந்து தலைவர் முடிவுரை ஆனாவுடன் ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை அவர்கள் வரவேற்புக் கழகச் சார்பில் தீர்மானங்களைப் புகழ்ந்து கூறித் தலைவருக்கும், தோழர் பாண்டியனுக்கும், வரவேற்புத் தலைவர், காரியதரிசி, ஆகியவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும், மாநாட்டுக் கொட்டகை உதவிய முனிசிபாலிட்டியாருக்கும் மற்றவர்களுக்கும் பெருத்த கைத்தட்டலிடையே நன்றி கூறினார்கள்.  மாநாடு எவ்வித ஒரு சிறு அபிப்பிராய பேதமோ மேற்கண்டதைக் தவிர ஒரு சிறு எதிர்ப்போ இல்லாமல் நடைபெற்றது.  தீர்மானங்கள்யாவும் ஏகமனதாய் நிறைவேறின.  இதற்குப் பத்திரிகை நிருபர்களும் சர்க்கார் ஊ. ஐ. னு. சுருக்கெழுத்தாளர்கள், ரிக்கார்டுகளும், அதிகாரிகளும், கட்சியாளர்களும், பிரதிநிகளும் சாட்சியாகும்.
ஈ. வெ. ராமசாமி
(குடி அரசு 2-9-44 பக்கம் 8)

குறும்புத்தனமான அறிக்கைகள்

சேலம் மாநாடு முடிந்த பிறகு பத்திரிக்கைகளில் சிலர் குறும்புத்தனமான அறிக்கைகள் விட்ட வண்ணம் இருக்கிறார்கள்.  நம் எதிரிகளான பார்ப்பனர் முதலிய பத்திரிகைக்காராகள் இந்த சமயத்தைத் தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக் கொண்டு அதற்கு விஷமத்தனமான பெரிய தலைப்புக் கொடுத்து அதிக விளம்பரம் செய்து வருகிறார்கள். நம் இயக்கம் செய்ய வேண்டிய வேலைகளும் அது அடைய வேண்டிய வெற்றிகளும் இந்த இரு கூட்டத்தினால் தடைப்பட்டு போய்விடாது என்கிற தைரியத்தாலேயே அவைகளை நாம் பிரமாதமாக லட்சியம் செய்வதில்லை என்பதோடு நம் உண்மைத் தோழர்களும் மதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அறிவோம்.......................

ஒரு சபைக்குப் பெயர் மாற்ற அச்சபை பொது மாநாட்டிற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுவது  அறிவுரையாகாதென்றே சொல்வோம்.

அடுத்த ஆட்சேபனை போதிய நோட்டீசு (அறிவிப்பு) இல்லை என்பது.  இது பரிகசிக்கத்தக்கதே யாகும்.

நோட்டீசு இல்லாமல் மாநாடுகளில் எத்தனையோ தீர்மானங்கள், எத்தனையோ மாகாண மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றாலும் அந்த முறையையோ, மாத்தியதையையோ இப் பேர் மாற்றத் தீர்மானத்திற்கு நாம் உரிமை பாராட்டவில்லை.

இத்தீர்மானமானது முறைப்படி சேலத்தில் 10 மாதங்களுக்கு மன் கூட்டப்பட்ட நிர்வாக சபைக் கூட்டத்தில் தோழர்கள் இரத்தினசாமி, நெட்டோ, அவர்கள் வீற்றிருந்த கூட்டத்தில் நெட்டோ அவர்களின் ஆதரிப்பின் பேரிலேயே தென் இந்திய நல  உரிமைச் சங்கம் என்பதை திராவிடர் கழகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்து இந்த தீர்மானத்தை மாகாண பொது மாநாட்டுக்கு இக்கமிட்டி சிபார்சு செய்கிறது என்று தீர்மானித்து இருப்பதோடு அப்படி கூட்டப்படும் மாநாட்டை சேலத்தில் நடத்த வேண்டும் என்றும் அந்த வினாடியிலேயே மாநாட்டை அழைத்தவர்கள் இதே தோழர்கள் இரத்தினம் பிள்ளையும் நெட்டோ அவர்களும் ஆவார்கள்.

அன்றியும் சேலம் நிர்வாக சபைக் கூட்டத்திற்கு பிறகு கூட்டப்பட்ட பல ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இவை மாத்திரமல்லாமல் 27-8-44 இல் நடந்த சேலம் மாநாட்டுக்குக் கூட மாநாட்டாரின் அறிக்கைப் படி இது சம்பந்தமாக பல ஸ்தாபனங்களிலிருந்தும், தனிப்பட்டவர்கள் இருந்தும் தீர்மானங்கள் வந்திருக்கின்றன.  இந்த 10 மாதகாலமாக  இவை பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.  இனி எந்த விதமான முன் அறிவுப்பு (நோட்டீசு) வேண்டுமென்று இவர்கள் கருதுகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

அன்றியும் விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்தின் போது இந்த ஆலோசனைக்காரர்கள் இருந்து இத்தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஒரு அதிருப்தியும் காட்டாமல் ஆதரவாளர்களாக இருந்து விட்டு, வேறு காரியங்களுக்காக இவர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கைத் தீர்மானம் நிறைவேறியவுடன் அத்தீர்மானம் தங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ள இடமிருக்கிறதென்று கருதி பயந்து போய் அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு தந்திரமாக இந்தச் சாக்கை ஒரு சிலர் உபயோகிக்க, பின்னால் யோசனை செய்து கண்டு பிடிக்கப்ப பட்டதல்லாமல் இதில் வேறு உண்மையோ, நியாயமோ, நாணயமோ என்ன இருக்க முடியும் என்று கேட்கிறோம்.
(குடி அரசு 9-9-44 பக்கம் 6, 7)

சேலம் மாநாட்டின் செயலாளராக இருந்தவர் நெட்டோ, சேலம் மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவராக இருந்தவர் இரத்தினம் என்பவர் இவர்கள் இருவரும் தான் திராவிடர் கழகம் என்பதற்குப் பதிலாக பழைய ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரே இருக்க வேண்டும்.  பெயர் மாற்றம் தேவையற்றது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கை விட்டவர்கள்.

சேலம் மாநாட்டில் பெரியாரின் தலைமையை மாற்ற வேண்டுமென்று செயல்பட்டவர் பாலசுப்பிரமணியம் ஆவார், அவரும் பின்னர் தன்பேச்சை பின் வாங்கிக் கொண்டார்.
கி. ஆ. பொ. விசுவநாதம் மாநாட்டுத் திறப்பாளர்.  அவர் பெரியாரைப் பற்றி கிண்டலும் கேலியுமாகச் சில வார்த்தைகள் பேச எதிரே இருந்தவர்கள் அவரை உட்காரும்படி முழுக்கமிட்டவுடன் பெரியரைப் புகழ்ந்து பேசிவிட்டுப் பெரியாரின் சர்வாதிகாரத் தன்மை தேவைதான் என்று கூறி முடித்துவிட்டார்.

அருகோபாலன் கூறுவது போல கி. ஆ. பெ. விசுவநாதம் எந்தத் தீர்மானமும் கொண்டு வரவில்லை (குடி அரசு 2-9-44 பக்கம் 2)

கி. ஆ. பெ. அவர்களைப் பற்றி 1984இல் எம்ஃபில் ஆய்வு செய்த மணிமேகலை என்பவர் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரிடம் நேர் காணல் செய்துள்ளார்.  சேலம் மாநாட்டைப் பற்றி அவரிடம் கேட்டு பதிவு செய்துள்ளதில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் பெயரைத் தமிழ் நாடு நீதிக்கட்சி என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டுமென்ற தமது  விருப்பத்தைத் தெரிவித்தார் என்று தான் பதிவு செய்துள்ளார்.
(முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், வ. மணிமேகலை பக்கம் 48)

சி. ஆ. பெ. விசுவநாதம் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகும்போது அதற்கான பல காரணங்கள் கூறியிருந்தார்.

ஜஸ்டிஸ் கட்சி எல்லோராலும் போற்றப்பட வேண்டுமானால் அடியிற்கண்ட வேலைத் திட்டத்தைப் போன்ற ஒரு முறையைக் கொண்டு கட்சியை பலம் பொருந்திய ஸ்பனமாக ஆக்குவதில் மூலம் தான் முடியும் என்ற எனது எண்ணத்தில் இன்றும் கூட மாறுதல் அடைய விரும்புவதில்லை என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு யோசனைகள் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பெயர் மாற்றம் பற்றியோ பெரியார் கன்னடர் என்பது பற்றியோ ஒருவர் கூட இல்லை.  கடிதத்தை முடிக்கும் போது கூட இவைகளை எனது ஆலோசனைகளாகக் கட்சியின் நலனுக்காகக் குறிப்பிட்டுள்ளேன்.  நான் சாதாரண அங்கத்தினன் என்ற முறையில் என்னால் இயன்ற உதவிகளையும் எக்காலத்திலும் செய்யக் காத்திருக்கின்றேன் என்பதை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
(மேற் கண்ட ஆய்வு நுல் பக்கம் 121-127)

மேற் கண்ட அறிக்கையின் மூலமும், சேலம் மாநாட்டில் அவர் கொண்டு வர நினைத்த தீர்மானம் தமிழ் நாடு நீதி கட்சி என்ற பெயரின் மூலம் அவர் பெரியாரைக் கன்னடர் என்று வெறுத்தார் என்பதற்கோ, தமிழர் கழகம் எனப் பெயர் மாற்ற முயன்றார் என்பதற்கோ எந்த வித சான்றும் இல்லை.  எனவே அருகோபாலனின் கற்றாகிய காலையில் தமிழர் கழகம் என்ற பெயரை மாலையில் பெரியார் மாற்றினார் என்பது சுத்தமான வடிக்கட்டின பொய் என்பது புலப்படும்.

அருகோ கூறும் இன்னொருவர் அண்ணல் தங்கோ, சுவாமிநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் அன்றைய வடஆர்க்காடு மாவட்டம்  (வேலுர் மாவட்டம்) குடியற்றம் பகுதியைச் சேர்ந்தவர்.  அவர் இந்திய தேசிய காங்கிரசில் தீவிரமாக வேலை செய்து வந்தவர். 1934இல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த போது அவரைத் தமது பகுதியில் பேச செய்வதற்கு முன் அனுமதி பெற்று குடியற்றம் பாலற்றங்கரையில் மிகப் பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.  இவருடைய வளர்ச்சியை விரும்பாத பார்ப்பன இராசாசி காந்தி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதபடி பாதையை மாற்றி அழைத்துச் சென்று விட்டார்.  இதனால் வெறுப்புற்ற சுவாமிநாதன், பார்ப்பன எதிர்ப்பியக்கமான சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.  வடஆர்க்காடு மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்தவர் சேலம் நீதிகட்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.  அவருடைய பெயர் அந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலிலோ, இதழ்களிலோ இல்லை.  இவர் கி. ஆ. பெ.வுடன் சேர்ந்து தமிழர் கழகம் எனப் பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார் என்பது அருகோவின் கற்பனையே ஆகும்.

சேலம் மாநாடு முடிந்த பிறகும் கி. ஆ. பெ. விசுவநாதம் நாங்கள் தான் உண்மையான  ஜஸ்டிஸ் கட்சி என்று கூறிக் கொண்டிருந்த பி. டி. இராசன், பாலசுப்பிரமணியம் குழுவில் நீதிக் கட்சியில் தான் இருந்தார்.

சில ஆண்டுகள் கழிந்த பின்போ அவர் 1947இல் தமிழர் கழகம் என்ற அமைப்பையும் தமிழ் நாடு என்ற இதழையும் நடத்தி வந்தார்.  அவர் 21-6-1959இல் நடத்திய திருச்சி வானொலி நிலையத்தில் எழுதப்பட்டிருந்த ஆகாசவாணி பெயர்ப் பலகையைத் தார்ப் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்திய போது பெரியார் சென்று அதில் கலந்து அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
(மேற் கண்ட நுல் பக்கம் 89)

எனவே தமிழர் என்ற பெயர் கொண்ட அமைப்பை எல்லாம் திராவிட இயக்கத்தினர் அழித்தனர் என்பதெல்லாம் வடிகட்டின பொய்யேயாகும்.

#திராவிடர்கழகப்பெயர்மாற்றம்ஒரேநாளில்நிகழ்ந்தா?
- வாலாசா வல்லவன் முகநூல் பதிவு
இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:42 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திராவிடர் கழகம், பெயர்

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

திராவிடர் கழகம்' பெயர் சூட்டியதன் காரணம்

திராவிடர் கழகம் என்பது இந்த நாட்டு மக்களது  கழகம். திராவிடர் என்று சொல்லுவதற்கு எவனும் ஒப்புக் கொள்ள மாட்டான். காங்கிரசுக் கட்சிக்காரனும், கம்யூனிஸ்ட் கட்சிக்காரனும், தமிழரசுக்காரனும், பார்ப்பானும், எவனும் ஒப்புக் கொள்ளமாட்டான். இந்தத் திராவிடர் கழகம் பார்ப்பானைச் சேர்க்காது. அவனும் இதில் வந்து சேர வரக்கூடுமாதலாலும், தென் இந்தியர் என்கிற தலைப்பில் தென்இந்தியாவில் வதியும் எல்லா மக்களுமே வரக்கூடுமாதலலும், இது தவிர்த்து தமிழர்கள் என்று அழைப்பதாயிருந்தாலும்  அந்த தலைப்பிலும் தமிழ்ப் பண்பில்லாத தமிழ்க் கலாச்சாரத்துக்கு வேறுபட்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள் எல்லோரும் புகுந்து கொள்ளக் கூடுமாதலாலும், மக்களை இனத்தின் பேராலேயே, கலாச்சாரத்தின் பேராலேயே ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதாக அனுபவத்தால் கண்டதாலும் பார்ப்பனரல்லாதார் கழகத்தை, ஜஸ்டிஸ் கட்சியைத்  திராவிடர் கழகம் என்கிற பெயரால் அழைக்க வேண்டி ஏற்பட்டது.

(விடுதலை, 3.5.1954)

- விடுதலை ஞாயிறு மலர், 31 .8 .19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:00 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திராவிடர் கழகம்

வரலாற்றுச் சுவடுகள்: ‘ஜஸ்டீஸ்’ கட்சி ‘திராவிடர் கழக’மான வரலாறு



நீதிக்கட்சி என்றாலே அது பட்டம் பதவி களைத் தேடி ஓடும் ஜரிகைத் தலைப் பாகைக்காரர்கள் கட்சி என்ற கறைபடர்ந்த வரலாற்றினை மாற்றியமைத்திட வேண்டு மெனத் தந்தை பெரியார் அவர்கள் விரும் பினார். தாம் விரும்பியபடி மாற்றி இன்று அதையே மகோன்னதமான இயக்கமாக வளர்த்துவிட்டார்.

ஆம்! 1944ஆம் ஆண்டிலே சேலம் நகரிலே நடைபெற்ற நமதியக்க மாநாட்டி னைத்தான் குறிப்பிடுகிறோம். அந்த மாநாட்டிலேதான் அய்யா அவர்கள் இந்த இயக்கத்திற்கு புது உருவங் கொடுத்து, புரட்சி இயக்கமாக மாற்றினார். அதுமட்டு மல்ல, ஜரிகைத் தலைப்பாகைக்குச் சமதை யாக ‘ சாமான்யர் ‘ அண்ணா அவர்களைத்’ திரா விடர் தளபதி’யாக ஆக்கி நாட்டுக்குத் தந்தார்.

சேலத்து நெட்டோ, பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டியன், மதுரை ராஜன், திருச்சி விசுவநாதம், பூவாளூர் பொன்னம்பலம் போன்றவர்களும் இன்னும் சிலரும் அய்யா அவர்களுக்கு எதிராகத் திரை மறைவிலே தங்கள் பணியினைத் துவக்கினார்கள். பதவிக்குப் போகக்கூடாது என்று பெரியார் அவர்கள் சொல்லிவந்த காரணத்தால் அத் தகைய திரைமறைவு வேலைக்காரர்களின் வலையிலே அண்ணா அவர்களும் விழுந்து விட்டார் என்று இயக்கத்தார் எல் லோரும் எண்ணும் அளவுக்கு அண்ணா அவர்களோடு, அவர்கள் உறவாடினார்கள். அந்த உறவினை ஊருக்கும் காட்டினார்கள். ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் மாநாட்டிற்கு முன்பாகவே ஈரோட்டிலே அய்யா அவர்களிடம், தமக்கும், சதிக்கூட் டத்தினருக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பதனைத் தெளிவுபடுத்திய தோடு, தம்மீது சாட்டப்படும் குற்றச்சாட் டினை மறுத்திடும் வகையில் பெரியார் அவர்களுடனேயே ஈரோட்டிலேயே தங்கி விட்டார். அந்தச் சந்தர்ப்பத்திலேதான் ஈரோட்டிலே. சரித்திரப் பிரசித்தி பெற்ற சேலம் மாநாட்டுத் தீர்மானங்களைப் பெரியார் அவர்கள் தயாரித்தார். நீதிக்கட்சி என்ற பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட வேண்டும் என்பதும், பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்திருக்கும் பட்டம், பதவி களை விட்டுவிட வேண்டும் என்பதும், தேர்தல்களில் நமதியக்கம் கலந்து கொள் ளக்கூடாது என்பதும் தான் பெரியார் அவர் கள் தயாரித்த அந்தத் தீர்மானங்கள்.

தீர்மானங்களைத் தயாரித்த பெரியார் அவர்கள் தம் பெயராலேயே அந்தத் தீர் மானங்களை மாநாட்டினில் கொண்டு வந் திருக்க முடியும். ஆனால், அந்தத் தீர்மானங் களை அறிஞர் அண்ணா அவர்கள் பெய ரால், ‘அண்ணாதுரை தீர்மானங்கள்’ என்ற பெயரிட்டு மாநாட்டில் கொண்டுவரச் செய் தார்.

அந்தத் தீர்மானங்களில் அமைக்கப் பட்டிருக்கும் வாசகங்களைப் படிப்பவர்கள் அனைவருக்கும் புரியும், அது அய்யா அவர்களால்தான் எழுதப்பட்டது என்பது. ஏனென்றால் அந்தத் தீர்மான வாசகங் களிலே அறிஞர் அண்ணா அவர்களின் அழகு தமிழைக் காண முடியாது! பெரியார் அவர்களின் ‘பாமரத் தமிழைத் தான் பார்க்கமுடியும்.

அதுமட்டுமல்ல, அறிஞர் அண்ணா அவர்கள் அய்யா அவர்களுடனேயே ஈரோட்டிலே தங்கிவிட்டதால், காஞ்சிபுரத்திலேயிருந்து வெளிவருகிற திராவிட நாடு’ இதழை ஈரோட்டிலேயே ‘குடி அரசு’ பத்திரிகை அச்சடிக்கப்படுகின்ற தமிழன் அச்சகத்தில் அச்சடித்து, ஈரோடு தோழர் சண்முகவேலாயுதம் அவர்கள் அந்தப் பிரதிகளை எடுத்துக் கொண்டு. காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து ஏஜண்டுகளுக்கும், சந்தாதாரர்களுக்கும் பத்திரிகையினை அனுப்பிவைத்தார். அந்த வாரத்துத் திரா விட நாட்டு இதழைப் பார்த்தால் விடுதலை, குடி அரசு இதழ்களில் பயன்படுத்தப்படும்.  லை, னை, ணா, றா போன்ற எழுத்துக்கள் இருக்கும். இந்தப்படி தம் தீர்மானங்களை’ அண்ணாதுரை தீர்மானங்கள்’ என்ற பெயரால் அய்யா அவர்கள் கொண்டுவந்து அண்ணா அவர்களை உயர்த்தியதோடு மட்டுமல்ல, இயக்கத்திற்குப் புது உருவம் கொடுத்த பெருமையினை அண்ணா அவர்களுக்கே விட்டு விட்டார்.

எனவே, பெரியார் தொண்டர்களாகிய நாம் அவர் காட்டிய வழிப்படி பதவியை விரும்பாமல் இருப்பதோடு, புகழையுங்கூட விரும்பாமல் வாழவேண்டும் என்ற உறுதி யினை அய்யா அவர்கள் பிறந்த நாளில் எடுத்துக்கொள்வோமாக.

- ஆதாரம்: "நீதிக்கட்சி 75ஆவது ஆண்டு (பவள விழா) மலர்

- விடுதலை ஞாயிறு மலர், 24. 8 .19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:51 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திராவிடர் கழகம்

கலகம் பறந்தது... கழகம் பிறந்தது




(சேலத்தில் 1944இல் நடை பெற்ற நீதிக் கட்சி மாநாடு இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் மட்டுமல்ல; பதவிப் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்ற பதவிப் பறிமுதல் தீர்மானமும் அம்மாநாட்டில் தான் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார் தலைமை யால்தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறி, தந்தை பெரியாரை தலைமையிடத்தி லிருந்து வீழ்த்த வேண்டும் என்று பதவிப் பிரியர் களும் சுயநலவாதிகளும் செய்த சூழ்ச்சிகள் - அவற்றைச் சுக்கல் சுக்கலாகத் தந்தை பெரியார் நொறுக்கி எறிந்து வீரநடை போட்டு வந்த மாட்சி களைச் சுருக்கமாக இக்கட்டுரை விளக்கும்.)



இலட்சிய நாட்டம் என்பது தந்தை பெரியாரின் இரத்த ஓட்டம். காங்கிரஸ் வாதியாக, கதர் மூட் டைத் தூக்கியாக அவர் இருந்திருக்கலாம். அதே நேரத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களை நெஞ்சில் கறையின்றி கைதட்டி ஆதரித்தவரும் அவரே. 1924 டிசம்பரில் திருவண்ணாமலையில் தமிழ் நாடு 30ஆவது காங்கிரஸ் மாநாடு. மாநாட் டின் தலைவர் தந்தை பெரியார்தான். அம் மாநாட்டில் அரிமா சிலிர்த்தது - சிங்கநாதம் எழுப்பியது.

‘’தென்னிந்தியாவில் ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமை குலையாதிருப்பினும் ஹிந்துக்க ளுக்குள் ஒற்றுமை குறைந்து வருவது உண்மை. முதலாவது பிராமணர்- பிராமண ரல்லாதார் நிலையைச் சிறிது சிந்திப்போம். ஒரு மதத்தைச் சேர்ந்த இவர்களுக்குள் வேற்றுமையுணர்வு தோன்றுவானேன்? வேற்றுமைக்கு அடிப்படையான காரணங் கள் இருத்தல் வேண்டும். அக்காரணங்களை உணர்ந்து ஒற்றுமைக்கு உழைக்க தேச பக்தர்கள் முயல வேண்டும்.

காங்கிரஸ்வாதியாக இருந்த டாக்டர். நாயர் திடீரென ஒரு கட்சியைத் தோன்று விக்கக் காரணங்களாய் நின்றவைகள் எவைகளோ அவைகள் இன்னும் நிற்கின் றனவா இல்லையா? என்பதை நேயர்கள் கவனிப்பார்களாக. அக்காரணங்கள் அழிந்து விட்டதாக எனக்குத் தோன்ற வில்லை. அவைகள் தமிழ்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும்வரை தமிழ் நாட்டில் பிராமணர் பிராமணரல்லாதார் ஒற்றுமை நிலவுவதலரிதே. தேச சேவையில் ஈடு பட்டுத் தமிழ்நாட்டுக் காங்கிரசில் காரியதரி சியாகவும் தலைவராகவும் இருந்து பெற்ற அனுபவத்தைக் கொண்டே நான் இங்கே பேசுகிறேன்’’. (‘நவசக்தி’ 21-11-1924).

காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கி கதர்ச் சட்டையும், கதர் வேட்டியும் அணிந்து கொண்டே தென்னிந்திய நல வுரிமைச் சங்கமாகிய நீதிக்கட்சி எடுத்து வைக்கும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையில் இருக்கும் நியாயத்தை நெடுங்குரலில் நிமிர்ந்து சொல்லுகிறார் என்றால் - அந்த நெஞ்சுக்கு நீதியின் பெயர்தான் பெரியார்! - கொள்கை உரத் துக்குப் பெயர்தான் பெரியார்!

சுயமரியாதை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த நிலையிலே 1935இல் ஜஸ்டிஸ் கட்சிக்கு அய்யா அவர்களால் அனுப்பப்பட்ட வேலைத்திட்டம், அக்கட்சி யால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீதிக்கட்சி யின் நிகரற்ற வைரத்தூணாம் பொப்பிலி அரசரின் பங்கு இதில் மிக முக்கியமாக இருந்தது.

ஜரிகைத் தொப்பிகளாய் அங்கவஸ்திர மடி கலையாத அரசியல்வாதிகளின் கூடார மாக இருந்த ஜஸ்டிஸ் கட்சிக்குள் புரட்சிப் பொறிக்கு அடிஎடுத்துக் கொடுத்தாகி விட்டது.

இந்தி எதிர்ப்புப் போராடத் தீயில் குதித்து சுரணையற்றுக் கிடந்த திராவிட மக்களிடத்திலே சுயமரியாதை நெருப்பைக் கிளப்பி சூடுபறக்கச் செய்தவரும் அவரே!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் கார ணமாக சிறைக் கோட்டம் சிரித்த முகத் துடன் அந்த சிறைக்கஞ்சாச் சிங்கத்தை வரவேற்றது.

சிறையிலோ பெரியார்! நீதிக்கட்சியின் 14ஆவது மாநில மாநாடு சென்னையில் கூடிற்று. அதுவரை பெரியார், நீதிக்கட்சி யின் சாதாரண உறுப்பினர்கூட அல்ல. ஆனாலும் அந்த மாநாடு (29-12-1938) சிறைப் பறவைப் பெரியாரை தன் கட்சியின் தலைவராத் தேர்ந்தெடுத்தது.

தலைமைக்காகவும் பதவிப் பெரு மைகளுக்காகவும் ‘எதையும் இழக்கத் தயாராக இருக்கும் இவ்வுலகில் தந்தை பெரியார் தப்பிப் பிறந்த விதிவிலக்கான மாமனிதர். பதவிகளைப் பவனிவரும் பல்லக்காகக் கருதுபவர் அல்ல பெரியார் - மாறாகப் பொறுப்புச்சுமை என்று கருதும் பொறுப்புமிக்கவர் அவர்

அதனால்தான் என்னவோ அந்தப் பொறுப்புகள் எல்லாம் அவரைத் தேடிச் சேர்ந்து ‘பதம் பெற்றன!

தந்தை பெரியாரிடத்திலே நீதிக்கட்சி வந்து விட்டது என்றால் ஜரிகை மேனி குலையாத அரசியலுக்கு இடம் இருக்க முடியுமா? பட்டம் பதவிப் பறவைகளுக்குப் பசுமை சோலையாகக் கட்சி அளிக்க முடியுமா?

வந்ததுதான் வந்தது 1944 வந்தது! சேலத்தில் நடைபெற்ற 16ஆவது மாநில மாநாடு, அதுவரை இருந்துவந்த மிட்டா மிராசுதார் - ஜமீன்தார் - ஜரிகைக் குல்லாக் கள் - பட்டம் பதவிவாலாக்கள் - இவர்க ளுக்கு இனி இயக்கத்தில் இடமில்லை என்பதை வரையறுக்கும் மாநாடாக வரலாற்றில் நிலைக்கும்படி செய்துவிட்டார் தந்தை பெரியார். பெரியாரிடம் இயக்கம் இடம்பெயர்ந்து சென்றுவிட்டது. இனி புரட்சிப் பூகம்பம்தான் - எப்படியும் பெரி யாரிடம் இருந்து இயக்கத்தை மீட்க வேண் டும் அல்லது பெரியாரை இயக்கத்தைவிட்டு அகற்ற வேண்டும் - இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று மாடிவீட்டு அரசி யல்வாதிகள் முடிவுகட்டினார்கள். 1940 ஆகஸ்டில் திருவாரூரில் கூடிய நீதிக்கட்சி யின் 15ஆவது மாநில மாநாட்டிலேயே முடிவுசெய்யப்பட்ட தீர்மானம் - அடுத்த மாநில மாநாடு சேலத்தில் என்று. ஆனாலும் மாநாட்டைச் சுலபத்தில் சேலத்தில் நடத்த முடியவில்லை. நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையிலும்கூட, மாநாட்டை நடத்தவிட வில்லை. 26.11.1943இல் சேலத்தில் நீதிக்கட்சி யின் நிர்வாகக்குழுக் கூட்டம் கூடியது. சேலத்தில் மாநில மாநாட்டை நடத்துவது என்றும் வரவேற்புக்குழுத் தலைவர் சேலம் சேர்மன் பி.இரத்தினசாமிபிள்ளை, செயலா ளர் சேலம்‘ வக்கீல் நெட்டே, எ.கணேசசங் கரன் என்றும் அறிவிக்கப்பட்டனர் என் றாலும் மாநாட்டை நடத்துவதற்கான அறி குறி இல்லை. இதற்கிடையில் மாநாட்டை மதுரையில் நடத்திவி டுகிறோம். அனுமதி தாருங்கள் என்று பட்டிவீரன்பட்டி சவுந்தர பாண்டியனார், தந்தை பெரியாரிடமே கேட்டார்கள். சேலம் மாநாட்டுக் குழுவின ரிடம் ‘என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் நடத்தப் போகிறீர்களா? இல்லை மதுரை யில் நடத்திக் கொள்ள அனுமதி கொடுக் கட்டுமா?’ என்று தந்தை பெரியார் சேலம் மாநாட்டு நிர்வாகிகளைக் கேட்ட போது, ‘இல்லை. இல்லை; நாங்கள் சேலத்தில் நடத்திவிடுகிறோம்‘ என்று உறுதி அளித் தார்கள். 10 நாள்வரை எதுவும் நடக்க வில்லை . மறுமுறையும் தந்தை பெரியார் சேலம் சென்றார். அப்பொழுது சில தோழர் கள் ‘ஒரு தேதியைக் குறிப்பிட்டு கமிட்டிப் போட்டு வரவேற்புக்குழு அமைத்துவிட லாம், யார் வந்தாலும் வராவிட்டாலும் நாம் நடத்தலாம்‘ என்று சொல்ல, அதையும் ஏற் றுக்கொண்டு தந்தை பெரியார் அப்படியே செய்தார்கள். அதன்படி 10.2.1944 அன்று தந்தை பெரியார் சேலம் சென்றார்கள். நூற் றுக்கணக்கான தோழர்கள் வந்திருந்தார் கள். ஆனாலும் வரவேற்புக் குழுத்தலைவ ரும், மாநாட்டுச் செயலாளர்களும் வர வில்லை  இரண்டு மணிநேரம் காத்திருந்து பார்த்துவிட்டு அவர்கள் வராததால் சேலம் குகை பிரபல வணிகர் ஜெகதீசன் அவர்கள் தலைமையில் மாநாட்டு நடவடிக்கையைத் துவக்குவது என்று முடிவுசெய்து மூன்று புதிய செயலாளர்களும் கூட்டத்தில் அறி விக்கப்பட்டார்கள். ரூபாய் 2000 வரை வசூலுக்கும் அக்கூட்டத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

நிலைமை வேறுவிதமாகப் போகிறது என்பதை உணர்ந்த முன்னாள் வரவேற்புக் குழுத் தலைவரும், செயலாளர்களும் அன்று இரவு 11 மணிக்கு தந்தை பெரியார் தங்கியிருந்த இடத்துக்கு வந்து, கூட்டத் துக்கு வராமல் போனதற்கு ஏதேதோ கார ணங்களைக் கூறி, தாங்களே பொறுப்பேற்று மாநாட்டை நடத்திக் கொடுப்பதாக மீண் டும் உறுதி கொடுத்தார்கள்.

மறுநாள் பத்திரிகைகளில் மாநாடு 20.8.1944 அன்று நடக்கும் என்றும் மாநாட் டுத் தலைவர் ஈ.வெ.ரா. என்றும் கொடி ஏற்றவும், மாநாட்டைத் திறந்துவைக்கவும் தோழர்கள் அண்ணாதுரை, டாக் டர் ஏ.கிருஷ்ணசாமி, குமாரராஜா, இராமச்சந்திர ரெட்டியார் ஆகியோர்கள் கேட்கப்பட்டி ருப்பதாகவும், செய்தி வந்தது, இரண்டு நாள் பொறுத்து கொடி யேற்றுபவர் சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம், திறந்து வைப்பவர். கி.ஆ.பெ.விசுவநாதம் என் றும் செய்தி வெளிவந்தது; மாநாட்டுத் தலைவர் பெயரும் போடப்படவில்லை. ஆர்.கே. சண்முகம் அல்லது சவுந்தரபாண்டியனார் (மாநாட்டுக்குத் தலைமை வகிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. மாநாட்டுத் தேதி மறுபடியும் மாற்றப்பட்டு 27.8.1944 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் இவற்றைப் பற்றி எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

இதற்கிடையே மாநாட்டு வரவேற்புக் குழு உறுப்பினர்கள் சிலரும், மாநாட்டுச் செலவுக்குப் பணம் பொறுப்பு ஏற்றுக் கொண்ட சிலரும் ஈரோடு சென்று தந்தை பெரியாரைச் சந்தித்து நிலைமைகளை நேரில் விளக்கிக் கூறினார்கள். ‘’மாநாட்டு நடைமுறை ஒழுங்காக இல்லை; கலகத் துக்குத் தயார் செய்கிறார்கள். மாநாட்டை நிறுத்திவிடட்டுமா? நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்கள். ‘’உங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை வேண்டாம். அவர்கள் இஷ்டப்படி நடத்திக் கொள் ளட்டும். எப்படியாவது மாநாடு நடக்க வேண்டும். நீங்கள் ஒப்புக்கொண்டது போல் பணம் கொடுத்து விடுங்கள். என் னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் அவர்களிடத் தில் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

அதன்பிறகு வேறு வழியின்றி தந்தை பெரியார் அவர்களையே மாநாட்டின் தலை வராகவும், கொடியேற்ற பி.பாலசுப்ரமணி யம், திறந்துவைக்க கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரையும் பத்திரிகைகளில் விளம் பரப்படுத்திவிட்டார்கள்.

மாநாட்டுத் தலைவராகத் தந்தை பெரியார் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் முறைப்படி மாநாட்டு வரவேற்புக்குழு சார்பாகத் தந்தை பெரியார் அவர்களுக்கு அழைப்பு இல்லை, ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாசஞ்சர் இரயிலில் தந்தை பெரியார் சேலம் வந்து சேர்ந்தார்கள்.

27.8.1944 அன்று காலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் மாநாட்டுத் தலைவர் பெரியார் அவர்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து புறப்படாமல், சவுந்தரபாண் டியன் அவர்கள் தங்கி இருந்த இடத்திலி ருந்து புறப்படுவது என்று ஏற்பாடு செய் திருந்தார்கள். (சண்டே அப்சர்வர் ஏட்டில் மறுநாள் இதை வைத்து மாநாட்டுத் தலை வரை மட்டம் தட்டும் பாணியில் செய்தி வெளி யிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

கட்சித் தோழர்களுக்குப் பெரும்பாலும் நடை பெற்றுவரும் சூதுவாதுகள், சூழ்ச்சி கள் எல்லாம் தெரியவே செய்தன. இரட் டைக் குதிரை பூட்டிய, பெரியதொரு கோச் வண்டியில் தந்தை பெரியார், சவுந்தரபாண் டியனார், வரவேற்புக்குழுத் தலைவர் சேலம் ரத்தினசாமிபிள்ளை ஆகியோர் மேடையில் அமர்த்தப்பட்டனர். மாநாட் டுத் திறப்பாளர் கி.ஆ.பெ.யும், கொடி ஏற்று பவர் பி.பாலசுப்பிரமணியமும் அவ்வண்டி யில் உட்கார வைக்கப்பட்ட பொழுது, கட்சித் தோழர்களும் பொது மக்களும் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். தந்தை பெரி யார் அவர்கள் தலையிட்டு அமைதிப்படுத் தினார்கள். ஊர்வலத் துவக்கத்திலேயே 20 ஆயிரம் மக்கள் பெருந்திரளாகக் கூடிவிட் டனர்.

5 ஜோடி பாண்டு செட்டு, 10 ஜோடி மேளம், 100 ஜோடி தப்பட்டை, 40 கொம்பு கள், தொண்டர் கள் பவனிவந்த 40 குதிரை கள், 2 யானைகள் புடைசூழ ஊர்வலம் காலை 10.30 மணிக்கு போர்ப்படை போலப் புறப்பட்டது. கடைவீதிக்கு ஊர்வலம் வந்த போது கூட்டம் இருமடங்காகிப் பிரவாகித் தது) பெண்கள் ஆயிரக்கணக்கில் அணி வகுத்து சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட திராவிட சுயமரியா தைத் தோழர்களின் முழக்கம் தனித்தன்மை யோடு காணப்பட்டது. ‘’பெரியாரே எங்கள் தலைவர்! சூழ்ச்சியாவும் வீழ்ச்சி அடைக!’’ என்று அச்சிடப்பட்ட துண்டறிக்கைகள் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன)

‘’பெரியார் வாழ்க!


‘திராவிடர் கழகம் ஓங்குக!’


‘பாண்டியன் வாழ்க!’


‘துரோகிகள் ஒழிக!’’


‘சதிகாரர்கள் ஒழிக!’’ என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. ஊர்வலம் 11.30 மணிக்கு மாநாட்டுக் கொட்டகையை அடைந்தது. மாநாட்டுப் பந்தலுக்குள் எல்லோரும் நுழைய முடியாதபடி மாநாட்டு நுழைவு வாயிலில் கூர்க்காக்கள் நிறுத்தப் பட்டு இருந்தனர்.

பிரதிநிதி டிக்கெட் வேண்டுமென்றால் ஒவ்வொரு பிரதிநிதியும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவ்விண்ணப் பத்தின் மீது டிக் கெட்ட கொடுக்க யோசிக் கப்படும் என்றும் என்னென்ன ஏற்பாடுகள். எல்லாமே சூழ்ச்சியுடன் பின்னப்பட்டு இருந்தன. இதன் நோக்கம் தங்கள் ஆதரவா ளர்களே பெரும்பாலும் மாநாட்டுப் பந்த லுக்குள் இருக்கவேண்டும் என்பதாகும்.

இதனால் பெரும் கலவரம் மூண்டு விட்டது. நிலைமை கட்டுக்கு அடங்க வில்லை. சவுந்தரபாண்டியன் தமக்கு உதவு வார் என்று மனப்பால் குடித்திருந்த மாநாட்டு நிர்வாகிகள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர். பாண்டியனார் மாநாட்டு நிர்வாகிகளின் போக்கைக் கண்டித்து விட்டார்.

கட்சித் தோழர்களின் கட்டுக்கடங்காத கோப அனலைத் தாங்க முடியாத மாநாட்டு நிர்வாகிகள் தோல்வியால் சுருண்டனர். கூர்க்காக்கள் விரட்டப் பட்டனர். வழக்கம் போல பிரதிநிதிகள் டிக்கெட்டுகள் வழங்கப் பட்டன.

மாநாடு துவங்கியது. சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம் கழகக் கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவ்வளவுதான்! கட்சித் தொண்டர்கள் ஆவேசமாகப் பொங்கி எழுந்தனர். கடுமையான கண்டன சொற்களை வீசினர். வரவேற்புக் குழுத்தலைவர் சமாதானப் படுத்திப் பேசினார். கடைசியில் தந்தை பெரியார் கை அமர்த்தியதும் ஆணைக்குக் கட்டுப்பட்டு மக்கட்கடல் அடங்கியது.

பி.பா. அவர்களின் ஆங்கிலப் பேச்சின் முடிவில் க.அன்பழகன் (இன்றைய திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர்) தமிழில் மொழி பெயர்த்தார். பி.பா.வின் பேச்சு முழு வதும் சரணாகதிப் படலமாகவே இருந்தது.

‘’பெரியார் தமிழ்நாட்டின் கார்ல்மார்க்ஸ் நானாவது ஈ.வெ.ரா.வை எதிர்ப்பதாவது!’’ என்கிற தோரணையில் அவர் பேச்சு அமைந்தது. அதன்பின் மாநாட்டுத் திறப்பா ளர் கி.ஆ.பெ. எழுந்தார். மீண்டும் கூட்டத் தில் அமளி - சத்தம். அய்யாவின் கை அசைவிலது மீண்டும் அடங்கியது. கி.ஆ. பெ.யும் பி.பா.பாணியில் பேசினார். பெரி யார் சர்வாதிகாரியாகக்கூட இருப்பதை ஆதரிப்பவன் நான் என்று பேச ஆரம்பித்து விட்டார். ஜாடை மாடையாக சில கிண்டல் சொற்களைப் பேசியபோது, கூட்டத்தில் பலர் எழுந்தே எச்சரித்தனர். உடனே பெரியாருக்குப் புகழ்மாலை தொடுக்கத் துவங்கிவிட்டார். வரவேற்புக்குழுத் தலை வரின் பேச்சும் அதே பாணியில்.

மாநாட்டில் பேசிய திருவத்திபுரம்‘ சண்முகம் அவர்கள், இங்கு பேசியவர்கள் பேசியபடி நடந்து கொள்ள வேண்டும்; மேடையோடு இது இருந்துவிடக் கூடாது, வீடுவரை இருக்கவேண்டும் என்று எச்சரித் தார். மாநாட்டில் தோழர்கள் நெட்டோ, சவுந்தரபாண்டியனார், ராவ் சாகிப் துரை சாமி பிள்ளை, கணேசசங்கரன் ஆகியோ ரும் உரை ஆற்றினார்கள்.

தந்தை பெரியார் மாநாட்டுத் தலைமை உரை ஆற்ற முன்வந்தார்கள். மக்கள் மத்தியில் ஆனந்த வெள்ளம் - உணர்ச்சி யின் கொந்தளிப்பு! மக்களின் உணர்ச்சி கண்டு தந்தை பெரியார் நெகிழ்ந்தார். கலங்காத கண்களும் ‘கலங்கின - ஆம், அது மகிழ்ச்சி கண்ணீர். மக்கள் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து நீரூற்றாய்க் கிளர்ந்த கண்ணீர்!

‘’தோழர்களே! - அந்த ஒரு வார்த்தை தான் வந்தது! மக்கள் மெயம்மறந்தனர். அடுத்து ‘’என் அருமை இளைஞர்களே!” - என்ற சொற்கள்.

‘’பெரியார் வாழ்க!” ‘’பெரியாரே எங்கள் தலைவர்!’’ ‘’சூழ்ச்சியாளர் ஒழிக! “சுயநல வாதிகள் ஒழிக! ‘’சமய சஞ்சீவிகள் ஒழிக!

என்று உணர்ச்சி எரிமலை வெடித்து அனல் குழம்பைக்கக்கியது.

‘’அமைதி! அமைதி!! என்று சொல்லிக் கை அமர்த்தினார். தலைவரின் சொல் கேட்டு தங்களை அமைதிப்படுத்திக் கொண்டனர். எனது அன்பான பாண்டியன் (சவுந்தரபாண்டியனார்) அவர்களே! - இது தந்தை பெரியாரின் அடுத்த அன்புச் சொல்! அவ்வளவுதான். பாண்டியனாரின் கண்கள் தாரை தாரையாக நீரை வடித்தன.

‘தந்தை சொல் மிக்கதோர் மந்திர மில்லை’ என்று எதற்கோ சொல்லி இருக் கலாம். தந்தை பெரியாரின் சொல்லுக்குத் தான் அந்த ஆற்றல்!

தந்தை பெரியார் அவர்களிடத்தில் மக்கள் வைத்திருந்த அந்த அன்பு பாசம் பிணைப்பு என்ப தும், மரியாதை - பற்றுதல் என்பதும் உலக வரலாறு கண்டிராத ஒன்றாகும். எந்த சபையில் அவர் அமர்ந் தாலும் அவர் ராஜாதி ராஜாதான்!

மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்த தற்குப் பிறகும் பொறாமைக்காரர்களின் தந்திரம் அடங்கவில்லை. குறும்புத்தன மான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். தோழர்கள் பி.இரத்தினசாமி, சி.ஜி. நெட்டோ , ஏ.கணேசசங்கரன் ஆகியோர் கையொப்பமிட்டு பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தனர். வந்தனோபசாரம் இல்லாததால் மாநாடு ஒத்திவைத் ததாக அர்த்தம் என்றெல்லாம் அந்த அறிக்கை யில் கூறி இருந்தனர். உண்மை என்ன வென்றால் இராவ் சாகிப் எஸ்.துரைசாமி பிள்ளை வந்தனோபசாரம் சொன்னார் என்பதுதான் உண்மை என்று, இவர்களது அறிக்கைக்கு மறுப்பாக எஸ்.வி. லிங்கம் 2.9.1944 நாளிட்ட ‘குடிஅரசில் சேலம் மாநாடும் எதிரிகளின் கையாளும் என்ற தலைப்பில் அறிக்கை யொன்றை வெளி யிட்டார்.

சென்னையில் புதுக் கட்சி கூட்டம்

சென்னையில் 17.9.1944 அன்று அதிருப் தியாளர்கள் 20, 30 பேர் பி.இராமச்சந்திர ரெட்டி தலைமையில் கூடினார்கள். கூட்டத் திற்காக வந்தவர்களையும் உள்ளே அனு மதிக்கவில்லை . ‘’யாவரும் வரவேண்டும்‘’ என்று விளம்பரப்படுத்தி இருக்கி றீர்களே என்று அவர்கள் திருப்பிக் கேட்டதற்கு, அத்தகைய நோட்டீஸ்களைத் தாங்கள் அடிக்கவே இல்லை என்று சத்தியம்‘ செய்து விட்டார்கள்.

சேலம் தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் கமிட்டியைக் கட்டுப்படுத்தாது என்றும், பெரியார் ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சி உறுப்பினரே இல்லையென்றும், ஒரு மாநாடு கூட்டிக் கட்சிக்குப் புதுத் தலைவரைத் தேர்ந் தெடுக்க வேண்டும் என்றும், அதுவரை பி.இராமச்சந்திர ரெட்டியார் அவர்களே தலைவராக இருந்து நடத்த வேண்டும் என் றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் திரு.இராமச்சந்திர ரெட்டியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை பெரியாரைப் பற்றி ஏ.பி.பாத்ரோ குறை கூறியதற்கும் அவர் மறுப்புத் தெரிவித்து, ஈ.வெ.ரா.விடம் எனக்கு அதிக மதிப்பு உண்டு; இக்கட்சியைத் துவக்கி நடத்திய டாக்டர் நாயர், சர்.தியாகராயர் பனகலரசர், பொப்பிலி அரசர் ஆகியவர்களைப் போலவே பெரியார் அவர்களையும் மதிக் கிறேன். அவர் செய்த நன்மைகள் மறக்க முடியாததாகும் என்று கூறிவிட்டார்.

சோறு போட்டு உதை வாங்கிய கதை

அதோடு சும்மா இருக்கக் கூடாதா? டாக்டர் அம்பேத்கர் சென்னை வந்தார். இந்த மாஜிகட்சிக்காரர்கள் அம்பேத்கர் அவர்களை அழைத்து ஒரு விருந்து கொடுத்து, அவரின் அங்கீகாரத்தைப் பெற்று நடமாடவேண்டும் என்று திட்டம் வகுத்தனர். அதன்படி விருந்தில் கலந்து கொண்டுவிட்டு சேலம் மாநாட்டையும், அதன் தீர்மானங்களையும் புகழ்ந்துவிட்டு தலைவரைக் குறைகூறுவது நல்ல காரிய மல்ல; அது கூடாது, என்று புத்திமதி கூறி விருந்து ஏற்பாடு செய்தவர்களுக்கு சவுக் கடி கொடுத்துவிட்டு விடைபெற்றுச் சென் றார் அண்ணல் அம்பேத்கர்..

இந்தச் செய்தியை “சோறு போட்டு உதை வாங்கிய கதை” என்று தலைப்பிட்டு ‘குடிஅரசு’ (30.9.1944, பக். 3, 4) வெளி யிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை சென்னையில், தந்தை பெரி யார் இல்லத்தில் சந்தித்து, சேலம் மாநாட்டு முடிவுகளைப் பெரிதும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

- (ஆதாரம்: ‘குடிஅரசு’ 30-9-1944, பக்.5)

- விடுதலை ஞாயிறு மலர், 24 .8 .2019

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:44 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சேலம், திராவிடர் கழகம்
பழைய இடுகைகள் முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வைக்கம் வீரர்

வைக்கம் வீரர்
வைக்கம் நூற்றாண்டு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (16)
    • ▼  டிசம்பர் (1)
      • நீதிக் கட்சியை மக்கள் இயக்கமாக்கிய பெரியார்!-கோவி....
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ►  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (11)
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)

சிறப்புடைய இடுகை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

    Viduthalai     March 30, 2023     தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு என்னென்ன திட்டங்கள்? வைக்கம் போராட்டம் தொ...

பின்பற்றுபவர்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Translate

லேபிள்கள்

  • - துரை.சந்திரசேகரன்
  • 100 நாட்கள்
  • 1944
  • அஞ்சல் தலை
  • அஞ்சா நெஞ்சன்
  • அடிக்கல்
  • அண்ணா
  • அதியமான்
  • அதிரடி க.அன்பழகன்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோத்தி தாசர்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அரசாணை
  • அரசியல் சட்டம்
  • அருஞ்செயல்
  • அருணன்
  • அழகிரி
  • அறப்போர்
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறிவுக்கரசு
  • அனைத்து ஜாதியினர்
  • ஆங்கிலேய அதிகாரி
  • ஆங்கிலேயர்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆண்டு விழா
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆர்கே சண்முகம்
  • ஆலய நுழைவு
  • ஆலயப் பிரவேசம்
  • ஆலயப் போராட்டம்
  • ஆலயம்
  • ஆறக்கட்டளை
  • ஆனந்த விகடன்
  • இசை
  • இதழ்கள்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியர்
  • இந்து
  • இயக்கம்
  • இரங்கலுரை
  • இரஞ்சித்
  • இரட்டை மலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்!
  • இரயில்
  • இரயில்வே
  • இராமச்சந்திரன்
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலங்கை
  • இலண்டன்
  • இழிவு
  • இழிவு நீக்கம்
  • இளைஞரணி
  • இறுதி முழக்கம்
  • ஈரோடு
  • ஈவேரா பெரியார்
  • ஈழம்
  • உடைப்பு
  • உண்மைகள்
  • உணவகம்
  • உணவு விடுதி
  • உத்தரவு
  • உபநிஷத்
  • உரிமை
  • உரை
  • உரை சுருக்கம்
  • உரையாடல்
  • உஸ்மான்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை தங்கம்
  • எண்ணெய்
  • எதிர்நீச்சல்கள்
  • எம்.ஆர்.ராதா
  • எரிப்பு
  • எல்லா ஜாதியாரும்
  • எழுத்தாளர்
  • எழுதிய பெருமக்கள்
  • எளிமை
  • ஏ.பி. ஜனார்த்தனம்
  • ஏடுகள்
  • ஒடியா
  • ஒப்பற்ற தலைமை
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓட்டப் படம்
  • கடலூர்
  • கடவுள் மறுப்பு
  • கண்ணதாசன்
  • கண்ணம்மா
  • கண்ணம்மாள்
  • கணக்கு
  • கம்யூனிசம்
  • கருப்பர்
  • கல்பாத்தி
  • கல்வி
  • கலப்புமணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கருணானந்தம்
  • கவிஞர் கலி. பூங்குன்றன்
  • கழகம்
  • கள்ளுக்கடை
  • கன்னட மொழி
  • கன்னடம்
  • காணொலி
  • காமராசர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கீழ்வெண்மணி
  • கீழ்ஜாதி
  • குடந்தை மாணவர்
  • குடிஅரசு
  • குடிஅரசு இதழ்
  • குடிஅரசு ஏடு
  • குடியரசு
  • குமுதம்
  • குழந்தை
  • குழந்தைகள் இல்லம்
  • குற்றப் பரம்பரை
  • குறிப்புகள்
  • கூட்டம்
  • கேரள முதலமைச்சர்
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கைது
  • கொடும்பாவி
  • கொடுமை
  • கொள்கை
  • கொள்கைகள்
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோவில்
  • கோவில் நுழைவு
  • கோவில் பிரவேசம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கீதம்
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்டம்
  • சத்தியவாணி முத்து
  • சமயம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாயம்
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சவுந்தரபாண்டியன்
  • சாதனை
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாதிவெறி
  • சாலை
  • சாலை நுழைவு
  • சிகிச்சை
  • சிங்கப்பூர்
  • சித்த மருத்துவம்
  • சிலை திறப்பு
  • சிவக்கொழுந்து
  • சிறந்த நூல்
  • சிறை
  • சீர்திருத்தத் திருமணம்
  • சுசீந்திரம்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை சங்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைஇயக்கம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுவரெழுத்து சுப்பையா
  • சுவரொட்டி
  • சூத்திரர்கள்
  • செங்கல்பட்டு
  • செருப்பு
  • சென்னை
  • சேரன்மாதேவி
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சைவம்
  • சொத்துரிமை
  • டார்பிடோ
  • டி..எம்.நாயர்
  • டிரஸ்ட் வழக்கு
  • டில்லி
  • டெக்கான் கிரானிக்கல்
  • த இந்து
  • தஞ்சை
  • தடியடி
  • தடை ஆணை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் விருது
  • தம்மம்பட்டி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் திசை
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்நாடு
  • தமிழகம்
  • தமிழர்
  • தமிழர் உரிமை
  • தமிழர் தலைவர்
  • தமிழில் பாட்டு
  • தமிழில் வழிபாடு
  • தலைமை
  • தலைவர்
  • தவமணிராசன்
  • தளபதி ராஜ்
  • தன் நிலை
  • தனித் தமிழ்நாடு
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டங்கள்
  • திடீர் பிள்ளையார்
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் நகர்
  • திராவிடக் கொள்கை
  • திராவிடம்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் தளபதி
  • திராவிடர் திருநாள்
  • திரு
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருநாவுக்கரசு
  • திருமணம்
  • திருவாங்கூர்
  • திருவிதாங்கூர்
  • தில்லி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துண்டு
  • துணிவு
  • தெரியுமா
  • தெருவில் நடக்க தடை
  • தேர்தல்
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொண்டு
  • தொல்.திருமாவளவன்
  • தோல்சீலை
  • தோள் சீலைப் போராட்டம்
  • தோள்சீலை போராட்டம்
  • நக்கீரன்
  • நங்கேலி
  • நடக்க தடை
  • நடக்கத் தடை
  • நன்னன்
  • நாகம்மை
  • நாகம்மையார்
  • நாடகம்
  • நான்
  • நிகழ்ச்சி
  • நியமனம்
  • நிலவுரிமை
  • நீட் ஒழிப்பு
  • நீதிக் கட்சி
  • நீதிக்கட்சி
  • நீர் தொட்டி
  • நூல்
  • நூல் ஆய்வு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெடும்பயணம்
  • நேர் கானல்
  • நேர்காணல்
  • பகுத்தறிவு
  • பகுத்தறிவுப் போராளி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பட்டங்கள்
  • பட்டம்
  • பட்டுக்கோட்டைஅழகிரி
  • படிப்பு
  • பதவி
  • பதிலடி
  • பதிவு
  • பரிசு
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பவழவிழா மாநாடு
  • பழ.அதியமான்
  • பள்ளிக்கூடம்
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னீர்செல்வம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனியக் கொடுமை
  • பார்ப்பனியம்
  • பார்ப்பான்
  • பாரதியார் நூல்கள்
  • பாராட்டு
  • பாலக்காடு
  • பாவலர்
  • பாவாணர்
  • பிபிசி
  • பிபிசிஆனந்தி
  • பிரச்சாரம்
  • பிராமணாள் கஃபே
  • பிள்ளையார்
  • பிள்ளையார் சிலை உடைப்பு
  • பிறந்த நாள்
  • புத்தம்
  • புதிரை வண்ணார்
  • புரட்டி இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலய புரட்டு
  • புரட்டு இமாலய பொருட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு -17
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புரட்டு இமாலாயப் புரட்டு
  • பெண்கள்
  • பெண்கள் மாநாடு
  • பெண்ணுரிமை
  • பெயர்
  • பெரியார்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் திருமணம்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பட்டம்
  • பெரியார் புகழ்
  • பெரியார் பேருரையாளர்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மறைவு
  • பெரியார் விருது
  • பெரியார்- மணியம்மையார்
  • பெரியாரில் பெரியார்
  • பெரும் பயணம்
  • பொதுக்குழு
  • பொறுப்பாளர்
  • போர்
  • போர்வாள்
  • போராட்ட பங்களிப்பு
  • போராட்டம்
  • போஜனப்பிரியா
  • மகளிர்
  • மகாதேவர்
  • மஞ்சை வசந்தன்
  • மஞ்சைவசந்தன்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மதம்
  • மதிப்பீடு
  • மதிப்புறு முனைவர் பட்டம்
  • மநு
  • மயிலாடன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறியல்
  • மறைவு
  • மன்றம்
  • மனுதர்மம்
  • மாதவன்(நாயர்)
  • மாநாடு
  • மாநில கல்லூரி
  • மாநிலக் கல்லூரி
  • மாற்றம்
  • மீனாட்சி அம்மன்
  • மு.க.ஸ்டாலின்
  • முகப்பு அட்டை அமைப்பு
  • முசுலீம்
  • முதல் சுயமரியாதைத் திருமணம்
  • முதல்வர்
  • முரசொலி
  • முரளி கபே
  • முலை வரி
  • முலைவரி
  • மூவலூர் இராமாமிருதம்
  • யுனஸ்கோ விருது
  • யூனியன் வங்கி
  • ரயில்வே ஸ்டேஜன்
  • ராமநாதபுரம்
  • ராமாயணம்
  • ராவண காவியம்
  • ராஜகோபாலாச்சாரியார்
  • ரிவோல்ட்
  • வ. உ. சி
  • வ.உ.சி
  • வரலாறு
  • வனிதாமதில்
  • வார ஏடு
  • விகடன்
  • விடுதலை
  • விடுதி
  • விருத்தாசலம்
  • விருது
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீரர்
  • வீரர்கள்
  • வெற்றி
  • வெற்றி விழா
  • வேன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைத்தியநாத அய்யர்
  • வைத்தியநாதன்
  • ஜப்பான்
  • ஜஸ்டிஸ் கட்சி
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி திமிர்
  • ஜூனியர் விகடன்
  • ஜெயவர்த்தனா

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (16)
    • ▼  டிசம்பர் (1)
      • நீதிக் கட்சியை மக்கள் இயக்கமாக்கிய பெரியார்!-கோவி....
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ►  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (11)
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.