கோவில் பிரவேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவில் பிரவேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 மார்ச், 2025

சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவு

 

பெரியார் வெற்றி

விடுதலை நாளேடு
வரலாற்றுச் சுவடுகள்

தீண்டாதார் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு திரு. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 12 வருஷங்களுக்கு முன் வைக்கத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போர், சில வாரங்களுக்கு முன் சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவினால் அரைவாசி வெற்றி பெற்றது. சென்ற வியாழனன்று திருவிதாங்கூரிலுள்ள சர்க்கார் ஆலயங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட ஹிந்துக்கள் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்துள்ள உத்தரவினால் பூராவும் வெற்றி பெற்று விட்டது. கேரளம் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று கூறினார் காலஞ் சென்ற விவேகாநந்தர். அத்தகைய கேரளத்தில் ஒரு பகுதி திருவிதாங்கூர்.அது இதுவரை வைதீகக் கோட்டையாகவே இருந்து வந்தது. இம்மாதம் 12ஆம் தேதியோடு திருவிதாங்கூரிலே வைதீகம் ஒழிந்துவிட்டது; பகுத்தறிவு வெற்றி பெற்று விட்டது. ஹிந்து சமயம் வளர வேண்டுமென்று விரும்புவோரும், சீர்திருத்தக்காரர்களும், திருவிதாங்கூர் மகாராஜாவை வாழ்த்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனைய ஹிந்து சமஸ்தானங்களும் திருவிதாங்கூரைப் பின்பற்றுமானால் ‘ஹிந்து’ மத்தத்தைப் பிடித்திருக்கும் தீண்டாமைக் கறை ஒழிந்துவிடும் என்பது நிச்சயம்.

– ‘விடுதலை’ – 11.11.1936

ஞாயிறு, 2 மார்ச், 2025

தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்

 

விடுதலை நாளேடு

25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்ற னர். பிறகு அக் கூட்டம் கோவிலின் உட் பிரகாரத்தைச் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு பிரசாதங்கள் பெற்று, போன வீதி வழியாகவே வீடு திரும்பினர்.

குறுக்கீடு

ஆனால், எலட்டூர் கோவில் பிரவேசத்தின் போது அங்குள்ள முக்கியமான சில பார்ப்பனர்கள் குறுக் கிட்டனர். அவ்விஷயம் போலீசாருக்கு எட்டிற்று. உடனே அவ்வூர் இன்ஸ்பெக்டர் சில ஜவான்களோடு அவ்விடத்தையுற்றதும் ஹரிஜனங்கள் யாதொரு தடை யுமின்றி பார்ப்பனர் தெரு வழியே சென்று கோவிலைய டைந்தனர். அதற்கு மேல் அசம்பாவிதமாக யாதொன் றும் நடைபெறவில்லை.

பிறகு, அன்று மாலை சில பள்ளர்கள் கடவுள் வணக் கத்திற்காக குலசேகரநாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்கள் அம்மன் சந்நிதித் தெரு வழியே சென்று கோவிலின் முக்கிய வாயில் வழியாக உட் சென்று கட வுளை வணங்கி, பிரசாதம் பெற்று சென்ற வழியாகவே யாதொரு தடையுமின்றித் திரும்பினர்.

செங்கோட்டை சரித்திரத்தில்

இராஜ பிரகடனத்தின் பேரில் அம்மன் சந்நிதித்தெரு வழியாக தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டது செங்கோட்டை சரித்திரத்தில் இதுதான் முதல் தடவை என்று சந்தேகமின்றிக் கூறலாம்.

கற்பூரம் ஏற்றப்பட்ட தாம்பாளத்தை ஜாதி மத வேற்றுமை பாராது பூசாரி கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டுமென்று இலஞ்சிகுமரர் கோவிலின் கோவிலதி காரிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கடைசியாக சில ஹரிஜனங்கள் பாண்டு வாத்தியங்களுடன் சந்நிதித்தெரு வழியாக பெருமாள் கோவிலுக்குச் சென்று பிரசாதம் பெற்று வெளிப் போந்தனர். அப்போது சில பார்ப்பனர்கள் தடைசெய்ய முயன்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதியு டன் இருந்ததால், விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.

– ‘விடுதலை’ 16.12.1936

செவ்வாய், 15 அக்டோபர், 2024

தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்

 

விடுதலை நாளேடு

25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்ற னர். பிறகு அக் கூட்டம் கோவிலின் உட் பிரகாரத்தைச் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு பிரசாதங்கள் பெற்று, போன வீதி வழியாகவே வீடு திரும்பினர்.
ஆனால், எலட்டூர் கோவில் பிரவேசத்தின் போது அங்குள்ள முக்கியமான சில பார்ப்பனர்கள் குறுக் கிட்டனர். அவ்விஷயம் போலீசாருக்கு எட்டிற்று. உடனே அவ்வூர் இன்ஸ்பெக்டர் சில ஜவான்களோடு அவ்விடத்தையுற்றதும் ஹரிஜனங்கள் யாதொரு தடை யுமின்றி பார்ப்பனர் தெரு வழியே சென்று கோவிலைய டைந்தனர். அதற்கு மேல் அசம்பாவிதமாக யாதொன் றும் நடைபெறவில்லை.

பிறகு, அன்று மாலை சில பள்ளர்கள் கடவுள் வணக் கத்திற்காக குலசேகரநாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்கள் அம்மன் சந்நிதித் தெரு வழியே சென்று கோவிலின் முக்கிய வாயில் வழியாக உட் சென்று கட வுளை வணங்கி, பிரசாதம் பெற்று சென்ற வழியாகவே யாதொரு தடையுமின்றித் திரும்பினர்.

இராஜ பிரகடனத்தின் பேரில் அம்மன் சந்நிதித்தெரு வழியாக தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட்டது செங்கோட்டை சரித்திரத்தில் இதுதான் முதல் தடவை என்று சந்தேகமின்றிக் கூறலாம்.

கற்பூரம் ஏற்றப்பட்ட தாம்பாளத்தை ஜாதி மத வேற்றுமை பாராது பூசாரி கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டுமென்று இலஞ்சிகுமரர் கோவிலின் கோவிலதி காரிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை கடைசியாக சில ஹரிஜனங்கள் பாண்டு வாத்தியங்களுடன் சந்நிதித்தெரு வழியாக பெருமாள் கோவிலுக்குச் சென்று பிரசாதம் பெற்று வெளிப் போந்தனர். அப்போது சில பார்ப்பனர்கள் தடைசெய்ய முயன்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதியு டன் இருந்ததால், விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.

– ‘விடுதலை’ 16.12.1936