திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூலை, 2024

தமிழர் உரிமையை திராவிடத்தால் இழந்தோமா?

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : தமிழர் உரிமையை திராவிடத்தால் இழந்தோமா?

மே 16 - ஜுன் 15, 2020

நேயன்

 இன்றைக்குப் பெங்களூரிலும், கர்நாடகத்தின் பல பகுதிகளிலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் தமிழர்கள் இலட்சக் கணக்கில் வாழ்கிறார்கள், அதேபோல் அவர்களும் தமிழகத்தில் லட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இன்றைக்குப் பொறியியல் படித்த தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் பெங்களூரில்தான் வேலை பார்க்கின்றனர்.

ஆனால், எந்த ஆரியப் பார்ப்பனர் நிறுவனத்திலாவது அவர்களைத் தவிர வேறு யாருக்காவது வேலை தந்திருக்கிறார்களா? பெரியார் ஆரிய எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிய காலத்தில், அவர்களின் ஆதிக்கமும், கொடுமையும், நம் மக்களை இழிவுபடுத்தியதும், தாழ்த்தியதும், உயர வரவிடாமல் நசுக்கியதும், நம் திறமைகளைப் பல நூற்றாண்டுகளாய் ஒடுக்கியதும் கொஞ்சம் நஞ்சமா? பழைய வரலாற்றை, நடப்புகளை திருப்பிப் பார்த்தால் உணர்வுள்ள தமிழனின் இரத்தம் கொதிக்குமே!

உண்மை இப்படியிருக்க தமிழன் எதிர்த்துப் போராட வேண்டியது ஆரியப் பார்ப்பனர்களைத்தானேயன்றி மலையாளிகளையோ, கன்னடர்களையோ, தெலுங்கர்களையோ அல்ல. நமக்கும் அண்டை திராவிட மாநிலத்தவர்களுக்கும் உள்ள சிக்கல்கள் உரிமை சார்ந்தவை. பங்காளிச் சண்டை போன்றது. ஒரு வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பி அடித்துக் கொள்ள வில்லையா? கொலைகூடச் செய்வதில்லையா? அப்படித்தான் இது.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கக் கூடாது என்று அடம் பிடித்தனர். அமைதியான புரிந்துணர்வு பேச்சின் மூலம் சிலை திறக்கப்பட்டது.

இப்படி காவிரி நீர்ச் சிக்கலானாலும், முல்லைப் பெரியாறு ஆனாலும், பாலாறு சிக்கலானாலும் ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்து உரிமைப்படி, நீதிப்படி தீர்வு தர வேண்டும். இதுவே சரியான வழிமுறை.

இதற்காக நாம் அவர்களுடன் மோத வேண்டும் என்று குணா போன்றோர் உசுப்புவது, உண்மை எதிரிகளான  ஆரியப் பார்ப்பனர்களை ஒதுக்கிவிட்டு, நம் இனத்தவர்களுக்குள் மோத விடுவதும் அதற்கு வழிகாட்டும் செயலாகும்; தமிழர்களுக்குச் செய்யும் பச்சைத்  துரோகமாகும்.

ஆகவே, பெரியார் அன்றைக்கு ஆரியப் பார்ப்பனர்களை எதிரியாகக் கொண்டு, இனப்போர் செய்ததும், அவர்கள் ஆதிக்கத்தைத் தகர்த்து நம்மை தட்டி எழுப்பி உயர்த்தியதும் சரியான அணுகுமுறையாகும்.

தெற்காசியா முழுமைக்கும் உரிமையுடையவர்கள் தமிழர்கள். அந்தத் தமிழர்களுடன் அயலவர் கலந்தபோது அவர்கள் மொழியும் தமிழுடன் கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்றவையாக தமிழ் மாறி, மொழியால் தமிழர்கள் பிரிந்து கன்னடர், தெலுங்கர், மலையாளி என ஆயினும் அவர்கள் யார்? தமிழ் இனமக்கள் அல்லவா? ஆக, தமிழ் இன மக்கள் மொழியால் பிரிந்தாலும் இனத்தால் தமிழ் இனம் என்பதால் அவர்களை இரத்த உறவோடு சேர்த்துக்கொண்டதுதான் மெய்ம்மைக் கோட்பாடாகும். மாறாக, தமிழ் பேசுகின்றவர்கள் என்கின்ற அடிப்படையில், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்ற அடிப்படையில், தமிழர்களை மொழி அடிப்படையில் அணிசேர்க்கும்போது தமிழர் அல்லாதாரும், ஆரியர்களும் அக்கோர்வையில் வருகின்றனர். எனவே, மொழி அடிப்படையில் தமிழ் மண்ணில் செய்யப்படும் பாகுபாடு உண்மைக்கும், உறவுக்கும் மாறான பொய்மைக் கோட்பாடாகும்.

மேலை நாடுகளின் மக்கள் பகுப்பு மொழி அடிப்படையில் நிகழ்த்தப்பட்டபோது, அங்கு மொழியே இனத்திற்கு அடிப்படை ஆயிற்று. இங்கு ஓர் இனம் பல மொழியைப் பேசும் நிலை இருப்பதால் மொழி அடிப்படையில் இனப்பகுப்பு இயலாமல் போனது. இந்த இயல்பறிந்தே தந்தை பெரியார் திராவிடம் என்ற சொல் மூலம், இன அடிப்படையில் அணி சேர்த்தார்.

தெற்காசியப் பகுதிக்கு ஒட்டுமொத்த உரிமையுடைய தமிழினம் சிதைந்ததற்கும், தாழ்ந்ததற்கும், வீழ்ந்ததற்கும் ஆரியர் வருகையும் சமஸ்கிருத கலப்பும் அல்லவா காரணம்? இதை மொழியியலும், மாந்தவியலும் அய்யத்திற்கு இடமின்றி ஆதாரத்தோடு உறுதி செய்கின்றனவே. ஆரியருக்கு அடுத்து அரேபியர், மங்கோலியர், பாரசீகர் என்று பலரும் ஊடுருவியதன் விளைவல்லவா தமிழினம் கலந்து, சிதைந்து போகவும், தமிழில் பிற மொழி கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என மாறவும் காரணம்.

இளங்கோ காலத்தில் மலையாளம் இல்லையே! அது சுத்த தமிழ் பேசிய சேர நாடல்லவா? சமஸ்கிருத கலப்பும், ஆரிய ஆதிக்கமும்தானே மலையாளம் உருவாகக் காரணம்? திராவிடமா காரணம்? திராவிடம் என்பது அப்போது இல்லையே!

பெரியார் காலச் சூழலுக்கும், இந்தியாவில் நிகழ்ந்த அரசியல், சமூக மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னுடைய அணுகுமுறைகளை மாற்றி வழி நடத்தினார். அதில் ஏற்படுவது மாறுபாடுகள், வேறுபாடுகள், முரண்பாடுகள் அல்ல. அவை பரிணாம வளர்ச்சிப் போக்குகள். அந்த அடிப்படையில்தான் அவர் சூழலுக்கேற்ப முதலில் திராவிட நாடு கோரிக்கையை எடுத்தார். அதன்பின், தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்.

மொழியடிப்படையில் மாநிலப் பிரிவுகள் என்றவுடன், சென்னை இராஜ்யம் என்பதை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றவும் செய்யவேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை வைத்தவர் பெரியார் என்பதை குணா எதிரிகள் குற்றஞ் சாட்டுவது மோசடியல்லவா? பெரியார் அப்போது கூறியவற்றைப் பாருங்கள்.

“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டைவிட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புகூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் (எதிர்ப்பிற்கும்) இடமில்லாத தமிழகத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்ட தமிழன் ஆனாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்கமாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

இதைத் திருத்த, தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டெல்லி, சட்டசபை, கீழ் மேல் சபை அங்கத்தினர்களையும் மிக மிக வணக்கத்துடன் இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்…’’ என்று 1955ஆம் ஆண்டே உரிமைக் குரலை உணர்வு பொங்க எழுப்பிய உன்னத தலைவர் பெரியார்.

-‘விடுதலை’ அறிக்கை, 11.10.1955

இதைவிட தமிழ் உணர்வுடன், தமிழர் பற்றுடன் வேறு என்ன கூறமுடியும். மேற்கண்ட பெரியாரின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் அவர் எவ்வளவு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் இந்தக் கருத்தை, இக்கோரிக்கையை வைத்துள்ளார் என்பது எவருக்கும் விளங்கும்.

மொழிவழி மாநிலம் வந்தபின் இனி இந்தியாவில் பிரிவினை கோரிக்கை நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார்.

உண்மை இப்படியிருக்க அவர் தமிழர் தேசிய மெய்ம்மையை மறைக்க திராவிடப் பொய்மையைத் திணித்தார் என்பது உள்நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டு ஆகும்.

அவர், தமிழர் நாடு என்ற தமிழ்த் தேசிய உணர்வை மறைக்க விரும்பியிருந்தால், தமிழ்நாடு என்று பெயர் வேண்டி அவ்வளவு உருக்கமாக வேண்டுகோள் வைப்பாரா? தமிழ்நாடு தமிழனுக்கே என்ற முழக்கத்தை முதன்முதலில் வைத்திருப்பாரா?

தந்தை பெரியார் ஊட்டிய விழிப்பும், உணர்வும் பரவியதன் விளைவே இன்று தமிழ்த் தேசியம் பேசும் எழுச்சி எழுந்ததற்குக் காரணம்.

எனவே, இனப்பகை எது, உரிமைச் சிக்கல் எது என்பதற்கான வேறுபாடு அறிந்து தமிழர்கள் செயல்பட வேண்டும். பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இல்லாத தமிழ்த் தேசியம் யாருக்குப் பயன்படும்? இதை எதிரிகள் சிந்திக்க வேண்டும். ஆனால், இவற்றைக் கருத்தில் கொள்ளாது எதிரிகள்  குற்றஞ்சாட்டுவது அறியாமையில் அல்ல, ஆரியத்தின் மீதுள்ள பற்றுதலால். எனவே, இவர்களிடமும் இவர்கள் பரப்பும் கருத்துக்களை ஏற்பதிலும் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது ஆரியத்திற்கே ஆதாயம் தரும்! தமிழர்க்கு அழிவு தரும்!

(தொடரும்…)

வியாழன், 2 செப்டம்பர், 2021

திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்காட்டு!


திராவிடம் வென்றது - வரலாறு அதை பதிவு செய்கின்றது!

நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்!

‘கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

திருச்சி, ஆக.17 திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துக்காட்டு! திராவிடம் வென்றது - வரலாறு அதை பதிவு செய்கின்றது! நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

‘கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சிக்குப் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்று நூறு நாள்கள் (14.8.2021) ஆனதையொட்டி -  11.8.2021 அன்று திருச்சியில் ‘கலைஞர் செய்திகள்' தொலைக் காட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியாக தன்னுடைய ஆட்சி அமையாமல், எல்லா மக்களுக்கும் உரிய ஆட்சி - தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபொழுது, ‘‘அனைவருக்கும் அனைத்தும் - எல்லாருக்கும் எல்லாமும்'' என்ற சமூகநீதி அடிப்படையில், இந்த இயக்கமும், திட்டங்களும் அமையும் என்று சொன்னதற்கேற்ப, நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சியே தன்னுடைய ஆட்சி என்று சொன்னார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இது நீதிக்கட்சியினுடைய ஆட்சிதான் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய

உரிமைகளை மீட்கின்ற ஆட்சி!

அந்த ஆட்சி மட்டுமல்ல, அந்த தத்துவங்களுடைய மாட்சி - அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்க ளுடைய உரிமைகளை மீட்கின்ற மீட்சி என்கின்ற அளவில், அவருடைய ஆட்சி அமைந்த நூறு நாள் களில், எண்ணற்ற சாதனைகளை அவர் புரிந்திருக்கிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்துப் போடுகையில், பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று சொன்னபொழுது, இன்றுவரையில், அந்த மகளிர் அடைகின்ற மகிழ்ச்சி எல்லையற்ற மகிழ்ச் சியாக இருக்கிறது. காரணம், அன்றாடம் கூலித் தொழி லுக்குச் செல்லுகின்ற நேரத்தில், அன்றாடம் சம்பாதிக் கின்ற எங்களுடைய பணம், பெரும்பகுதி போக்கு வரத்திற்கே செலவாகிறது. அந்தப் பணம் இப்பொழுது மிச்சப்படுகின்றது என்று அவர்கள் மகிழ்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு அது ஒரு சிறப்பான வாய்ப்பாக இருக்கிறது என்று நன்றி செலுத்துகிறார்கள்.

கரோனா நிவாரண நிதி -

14 மளிகைப் பொருள்கள் வழங்கினார்

அதுபோலவே, தொடர்ச்சியாக சொல்லவேண்டு மானால், அரசு கஜானா - கருவூலம் காலியாக இருப் பதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், திராவிட முன் னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கரோனா நிதி ரூ.4000 வழங்கப்படும் என்பதை - ஒவ்வொரு குடும்பத்திற்கும், 2000 ரூபாய் - 2000 ரூபாய் என்று தனித்தனியாகப் பிரித்துக் கொடுத்து - பணப் புழக்கம் இருந்தால்தான் அவர்களுக்கு மற்ற வாய்ப்புகள் ஏற்படும் என்று சொல்லி வழங்கியதோடு மட்டுமல்லாமல், குடும்பத்திற்குத் தேவையான 14 மளிகைப் பொருள்களை வழங்கி, பசியற்ற வாழ்க்கைக்கு வாய்ப்பேற்படுத்தினார்.

அதேநேரத்தில், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்படும் பொழுதெல்லாம், கலைஞரைப் போல, பேரறிஞர் அண்ணாவைப் போல, பெரியார் பாதையில் நின்று, மிகப்பெரிய அளவிற்கு, நீதிமன்றம்வரை சென்று, அதிலே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.

நீதிபதி ஏ.கே.இராஜன்  தலைமையில் குழு!

அதுபோலவே, நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்வது - உடனடியாக ஒரு மாநில அரசின் முடிவில் மட்டுமில்லை. அது ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடு தான் நடைபெறவேண்டும். நீட் தேர்விலிருந்து விதி விலக்கு வேண்டும் என்றால், அதற்குரிய காரண, காரி யங்களை இதற்கு முன் இருந்த மாநில அரசு தெளிவாக எடுத்து வைக்கவில்லை. அந்த குறை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு சிறந்த குழுவை - நீதிபதி ஏ.கே.இராஜன்  அவர்களுடைய தலைமையில் அமைத்து, ஒரே மாதத்தில் அக்குழுவின் அறிக்கையை வாங்கி, மேல்நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறார்.

இதுவரை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, நீட் தேர்விற்கு வெறும் 6 ஆயிரம் பேர்தான் விண்ணப்பித் திருக்கிறார்கள் என்று சொல்வதிலிருந்தே, அது எத்தகைய கொடுமையானது என்ற நிலை இருக்கின்ற பொழுது - அவர்கள் நம்புவது இந்த அரசைத்தான்.

அதுபோலவே, முழுக்க முழுக்க பண்பாட்டுத் துறையில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக, ஒரு சிறப்பான சூழலை இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ன செய்யும் என்பதற்கு அடையாளமாகச் செய்திருக்கிறார்கள்!

தமிழ்ப் படைப்பாளிகளுக்கு - சிறப்பான இலக்கிய வித்தகர்களுக்கு - இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத அளவிற்கு - தமிழ் இலக்கிய படைப்பாளிகளான கி.இரா. போன்றவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்து அவரு டைய இறுதி நிகழ்ச்சியை சிறப்பாக செய்தார். தமிழ்ப் பண்பாட்டுக் களத்திலே, திராவிடம் என்ன செய்யும் என்பதற்கு அடையாளமாக அதை செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் - மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு - இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு - இது விவசாய நாடு - விவசாயிகளுடைய கடன்கள் தள்ளுபடி செய்வ தோடு மட்டுமல்லாமல்  - அவர்களுக்கென்றே தனி வரவு - செலவுத் திட்டத்தைக் கொடுத்து, அதன்மூலமாக இன்னும் விரிவாக அவர்களுடைய உரிமைகளையும், வாய்ப்புகளையும் அதிகப்படுத்தவேண்டும் என்பதற் கான இத்திட்டம் - இது ஒரு சிறப்பான திட்டமாகும்.

நிதியமைச்சரின் வெளிப்படையான

வெள்ளை அறிக்கை!

கடந்த 10 ஆண்டுகளில் எப்படிப்பட்ட சூழல் இருந்தது என்பதை ஒளிவு மறைவில்லாமல், நம்முடைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுடைய தலைமையில், இரண்டு நாள்களுக்கு முன்பு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த கடன் 5.30 கோடி ரூபாய் உள்ளது. இதுவரை என்றுமில்லாத அளவிற்கு, பிறக்கின்ற குழந்தையின் தலையில்கூட லட்சக்கணக்கான ரூபாய் கடன் உள்ளது.

இதுதான் இன்றைய நிலைமை, ஆனால், இதிலிருந்து மீளுவோம், தைரியமாக இருங்கள், சிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்டு 5 ஆண்டுகால ஆட்சியில் இதிலிருந்து மீண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு, இப்படி சொல்வதின்மூலமாக நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கமாட்டோம்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதை யைத்தான் என்னால் கொடுக்க முடிந்ததே தவிர, அவரு டைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடிய வில்லையே என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வருந்தினார்களே, அந்த முள்ளை அகற்றக் கூடிய அளவிற்கு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற முறையில், ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பிற்கு மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவோம் என்று ஏற்படுத் தியிருக்கிறார்கள் - அதில் அக்கறை காட்டுகிறார்கள்.

எல்லா துறைகளிலும் சிறப்பான முதலமைச்சர்

அன்னை தமிழில் அர்ச்சனை எல்லா இடங்களிலும் என்று சொல்லி, இதுவரை தமிழ் மொழிக்கு இல்லாத ஏற்றத்தை, கோவில்களில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை வெறும் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல - உரிமைப் பிரச்சினை. ஆகவே, அதிலேகூட எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய அளவிற்கு, பண்பாட்டுத் துறையாக இருந்தாலும், பக்தித் துறையாக இருந்தாலும், பாதுகாப்பாக மக்கள் வாழவேண்டும் என்கிற துறையாக இருந்தாலும், எல்லா துறைகளிலும் சிறப்பான முத்திரை பதித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

நாட்டு மக்களைப்பற்றியே கவலைப்பட்டார்!

அதுமட்டுல்ல, கரோனா தொற்றை தடுக்கவேண்டும் என்பதற்காக அல்லும் பகலுமாக முதலமைச்சர் உழைத்த உழைப்பு - ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி பற்றாக்குறைகளையெல்லாம் எதிர்கொண்டு, எல்லா இடங்களுக்கும் சென்று, கரோனா நோயாளிகளின் மருத்துவப் பிரிவுக்கே சென்று, அவர்களுக்கு நம்பிக் கையை ஏற்படுத்தி, தன்னைப்பற்றி கவலைப்படாமல், நாட்டு மக்களைப்பற்றியே கவலைப்பட்டு - எடுத்துக் காட்டாக செயல்பட்டார்.

சாதனை சரித்திர வீரர் -

தளபதி ஸ்டாலின் அவர்கள்

ஆட்சி அமைத்து நூறு நாள்கள் நிறைவடைவதற்கு முன்பாகவே, இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்ற சாதனை சரித்திர வீரர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். திராவிடம் வெல்லும் - திராவிடம் வென்றது! எல்லோ ருடைய நம்பிக்கையையும் நியாயப்படுத்தும் - பலமாகக் கட்டமைக்கும்.

திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு!

அரசு கஜானா காலியாக இருக்கும்பொழுது ஆட்சிப் பொறுப்பேற்று, துணிச்சலாக செயல்பட்டு, மக்களோடு மக்களாக இருந்து - சிறப்பாக செயல்பட்டு - அடக்க மாகவும், ஆழமாகவும் - அதிகாரம் என்பதையும், ஆட்சி சிம்மாசனம் என்பதையும் பெரிதாக நினைக் காமல், மக்களுடைய உணர்வைப்பற்றியே சிந்தித்து செயலாற்றிய - இணையற்ற தோழராக அவர்கள் தன்னை ஆக்கிக் கொண்டது - அதுதான் எடுத்துக் காட்டான முதலமைச்சர் என்பதற்கான நிலை.

திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொன்னார் - அந்தத் திராவிடப் பாரம்பரிய முதலமைச்சர் எப்படி செயலாற்றுவார் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு.

இதன்மூலமாக, எல்லோரிடத்தையும் அவர் தாண்டி நிற்கிறார்கள் - எல்லோரையும்விட உயர்ந்து நிற்கி றார்கள்.

நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் -

ஓர் அறிமுகம்!

கலைஞருடைய செயல்திறன் உலகறிந்த ஒன்று. ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை'' என்பதைப்போல, அதையும் தாண்டி நிற்கக்கூடிய அளவிற்கு, சிறப்பான சாதனை செய்கின்றவருடைய ஆட்சி - நூறு நாள்கள் என்பது ஒரு தொடக்கம் - ஓர் அறிமுகம்.

இதற்குப் பின்னால்தான், ஏராளமான செயல்கள் சிறப்பாக நடைபெறவிருக்கின்றன. எனவே, நூறு நாள்கள் ஆட்சி தொடரட்டும் - அதேநேரத்தில், பல ஆண்டுகளாக இருக்கின்ற அநீதிகள் மாளட்டும் -

அதை செய்வதற்குரிய ஒரு போர் வீரராகவும், கடமையில் கண்ணும் கருத்துமாகவும் இருக்கின்ற அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

மக்களின் வாழ்த்துகள்! உலகின் வாழ்த்துகள்!!

திராவிடம் வென்றது -

வரலாறு பதிவு செய்கின்றது!

எல்லாப் பகுதிகளில் உள்ள எல்லா மக்களும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பொதுக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, அவரைப் பாராட்டுவது, எங்களுக் கெல்லாம் பெருமிதமாக  இருக்கிறது.

திராவிடம் வெல்லும் என்று சொல்லும் - அந்த சொல் இப்போது உண்மை என்கிற அளவிற்கு, திராவிடம் வென்றது - வரலாறு பதிவு செய்கின்றது!

வாழ்க முதலமைச்சர் -

வளர்க அவரது ஆட்சியின் சாதனை!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

செவ்வாய், 19 மே, 2020

திராவிடத்தால் எழுந்தோம் தெரியுமா!

*உங்களுக்கு தெரியுமா?*

*தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் உள்ளே அவரை அனுமதிக்கவில்லை.

*சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது* என்று அவர் நடத்திய *மஞ்சரி* பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.

*1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும்,சத்திரங்களிலும்தான் பல  பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.சேர்த்துக்கொண்ட சில பள்ளிகளும் அவர்களை தனி வரிசையில் உட்காரவைத்தன.

*சூத்திரர் மற்றும் பஞ்சமர்களின் நிழல்கூட தங்கள்மீது படக்கூடாது*என்பதால் வைக்கம் வீதிகளில் அவர்கள் நடக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை.

*சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்* என்று சட்டம் இருந்தது.

*பிராமணர்கள் எந்த குற்றமிழைத்தாலும் அவர்களை தண்டிக்கக்கூடாது* என்று சட்டமிருந்தது.

*பெண்களை தேவதாசிகளாக கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும்* என்று சட்டமிருந்தது.

*நான்கு வருண கோட்பாட்டை கொண்டதுதான் இந்தியா.பிராமணர்களே பிறப்பால் உயர்ந்தவர்கள்.மற்ற வருணத்தார் பிராமணர்களை தெய்வமாக வணங்கி நடக்கவேண்டும்* என்று கோல்வால்கர் எழுதினார்.

*திருமணம் என்றால் என்ன என்று தெரியாத சிறுமிகளுக்கும் திருமணம் நடந்தது.பச்சிளம் வயதில் கணவனை இழந்த சிறுமிகளுக்கு மொட்டையடித்து முக்காடு போட்டு வீட்டின் மூலையில் முடக்கி வைத்தனர்*.

*சேரன்மாதேவியில் ஒரு குருகுலப் பள்ளி இருந்தது.அங்கு பிராமண மாணவர்களுக்கு செம்புக்குடத்திலும் சூத்திர மாணவர்களுக்கு மண் குடத்திலும் குடி தண்ணீர் வைக்கப்பட்டது.அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி அவர்களின் மகனும் அந்த குருகுலத்தில் படித்தான். மண் குடத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால்
தாகத்திற்காக  பிராமண மாணவர்களுக்கு வைத்திருந்த செப்பு குடத்திலிருந்த தண்ணீரை குடித்துவிட்டான்.
அதற்காக அவன் தண்டிக்கப்பட்டு,படிப்பும் பாதியில் நின்றுபோனது.

*சுதந்திரம் பெற்ற பின்பும் ரயில்வே கேண்டின்களில் பிராமணரகளுக்கு தனி அறை இருந்தது.

*1937-ல் நீடாமங்கத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பந்தியில் சரிசமமாக சாப்பிட உட்கார்ந்த தாழ்த்தப்பட வகுப்பினரை மரத்தில் கட்டிவைத்து உதைத்து மொட்டையடித்து அவமானப்படுத்தினார்கள்*

*இதெல்லாம் எதற்கு?* என்று கேட்கிறீர்களா?

*இப்போது அந்த பழைய கொடுமைகளும்,
அநீதியும் இருக்கிறதா என்று யோசித்து பாருங்கள்*

இந்த  கொடுமைகளை ஒழித்து  நமக்கு  உரிமைகளை பெற்றுத்  தந்த  தலைவர்  தான் 
*தந்தைபெரியார்*
- கட்செவி பதிவிலிருந்து..19.5.2019