புதன், 30 மே, 2018

உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்

07.10.1928 - குடிஅரசிலிருந்து...

சுயமரியாதை இயக்கம் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள். இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உலகத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின் றார்கள். இந்த இயக்கத்தினால்தான் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டை விடுதலை அடையச் செய்தும் வருகின்றார்கள். ஆனால் இது கஷ்டப்படவும், நஷ்டப் படவும் துணிந்தவர் களாலும், உண்மை வீரம் உடைய வர்களாலும் மாத்திரம் ஆரம்பிக்கக்கூடிய காரியமானதால் சுயநலத்திற்காக பொதுநல சேவையில் ஈடுபட்டிருப்பதாக வேஷம் போடுகின் றவர்கள் இக்காரியத்தைச் செய்ய முடியாததுடன் வேறொருவர் செய்வது என்பதையும் அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் மக்களுக்கு உண்மையான காரியத்தில் கவலை ஏற்பட்டு அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டால் போலி களுக்கு இடமில்லாமல் போவதுடன் அவர்களது வாழ்க் கைக்கே ஆபத்தாய் முடிந்து விடும். ஆதலால் அப்படிப் பட்டவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்க வேண்டிய வர்களாகி விடுகின்றார்கள். எனவே எவ்வளவு தான் சுய நலமிகளால் இவ்வியக்கம் தாக்கப்பட்டாலும், ஒழிக்க எவ்வளவு தான் சூழ்ச்சி முறைகள் கையாளப்பட்டாலும் அந்த முயற்சிகள் சூரியனை கைகொண்டு மறைத்து உலகத்திற்கு வெளிச்சம் இல்லாமல் செய்து விடலாம் என்கின்ற முட்டாள் தனமான முயற்சிக்கு சமானமாக முடியுமே அல்லாமல் வேறல்ல,

சுயமரியாதை இயக்கம் இப்போது ஒவ்வொரு நாட்டிலும் வீறு கொண்டுஎழுந்து தாண்டவமாடுகின்றது. பம்பாய் மாகாணத்தில் கொஞ்சகாலமாக பெருத்த கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அதாவது சென்ற இரண்டு வருசத்திற்கு முன்பே அங்கு புரோகிதக் கொடுமையை ஒழிக்க சட்ட சபைக்குப் பல தீர்மானங்கள் வந்தன. ஜாதித்திமிரை ஒழிக்க பூனாவில் பெருத்த கிளர்ச்சிகள் நடந்து பல கேசுகளும் ஏற்பட்டு பல பெரியார்களும் சிறை சென்றனர். பம்பாயில் சென்ற வருஷத்தில் பாதிரிமார் களையும் முல்லாக்களையும் குருமார்களையும் ஒழிக்க வேண்டும் என்று வாலிப மகாநாடுகளில் பேசினார்கள். மற்றும் ஜாதித் திமிர் கொண்டவர்களுக்கு வண்ணார், நாவிதர் என்பவர்கள் தங்கள் தொழிலைச் செய்வதில்லை என்று தீர்மானித்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடங்களில் பிள்ளைகள் எல்லோரும் அதாவது எல்லா வகுப்புக்காரர் களும் ஒரே பாத்திரத் தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண் டார்கள்.

மத்திய மாகாணத்தில் கோவிலுக்குள் இந்துக்கள் என்பவர்களில் உள்ள எல்லா வகுப்பாரும் போகலாம் என்று தீர்மானித்து அந்தப்படியே சில இடங்களில் நடந்து வருகின்றார்கள்.

கல்கத்தாவில் மகமதிய மாணவர்கள் தாடி வளர்ப்பதை மத சம்பந்தத்தில், இருந்து பிரித்து விட வேண்டு மென்று பலாத்கார சண்டை போட்டுக் கொண் டார்கள். சமீப காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர்கள் தங்களுடைய மத ஆரம்பகாலம் முதல் வெகு முக்கியமானதாகக் கருதி வந்த காரியங்களில் ஒன்றாகிய க்ஷவரம் செய்து கொள்ளக் கூடாது, தலைமயிரைக் கத்தரிக்கக் கூடாது என்கின்ற கொள்கையை அடியோடு மாற்றி தலைமயிர் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கடைசியாக கல்கத்தாவில் நம் நாட்டு சுயமரியாதை இயக்கத்தைப் போலவே - ஏன் இதைவிட அதிவேகமாகவும் என்று கூட சொல்லும்படியான - ஒரு பெரிய இயக்கத்தை ஆரம்பித்து விட்டார்கள். அதன் கொள்கைகள் நமது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைவிட வேகமுள்ளதாய்க் காணப்படுகின்றன. அதாவது,

ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பது,

மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது,

குருமார்கள், ஆச்சாரியார்கள், புரோகிதர்கள் முதலிய வர்களின் ஆதிக்கங்களை ஒழித்து பகுத்தறிவை விளக்குவது, பெண்கள் அடிமையை ஒழித்தும் ஜாதிக்கட்டுப்பாட்டை ஒழித்தும் கலப்பு விவாகம் முதலி யவைகளை ஆதரிப்பது, முதலாளிகளின் ஆதிக் கத்தை ஒழித்து தொழிலாளர் களுக்கு உரிமை அளிப்பது,

மிராசுதாரர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விவசாயிகளுக்கு உரிமை அளிப்பது.

பொது வாழ்வில் ஏழை பணக்காரன் என்கின்ற பாகுபாட்டையும் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற வித்தியாசத்தையும் ஒழித்து யாவருக்கும் சமத்துவத்தை அளிப்பது.

இவ்வளவும் போதாமல் நாட்டின் சொத்துக்களை எல் லோருக்கும் சரிசமமாய்ப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின் றார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் அதன் தலைவர் திரு சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் இவற்றை நிறைவேற்ற அரசியல் சங்கங்களிலிருந்து பிரிந்து தனியாய் நின்று முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டதுடன் இவைகள்தான் உண்மையான விடுதலைக்கு மார்க்கம் என்று சொல்லி இவ்வியக்கத்திற்கு உண்மையான பூரண விடுதலை இயக்கம் என்று பெயரும் கொடுத்திருக்கின்றார்.

வெகு சீக்கிரத்தில் இதன் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுமாம். இதைப் பார்த்தவர்கள் நமது சுயமரியாதை இயக்கத்தை மிதவாக இயக்கம் என்றுதான் சொல்லுவார்கள். இப்படி இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தை மிக மோசமான இயக்கம் என்றும் மிக வேகமான இயக்கம் என்றும் சொல்லுவதுடன் நம் மீது பழி சுமத்துகின்றவர்களுக்கும் குறையில்லை. மத விஷயங்களில் கல்கத்தா இயக்கத்தை விட வேகமாக ஆப்கானிஸ் தானமும் துருக்கியும் போய்க் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததேயாகும். அதாவது ஆப்கன் அமீர் அவர்கள் தன் சீர்திருத்தக் கட்டளைக்கு விரோதமாய் பேசுகின்றவர்களை யெல்லாம் மாஜி கவர்னர் உள்பட மௌல்விகள் உள்பட சிறையில் எல்லோரையும் அடைக்கின்றார்.

துருக்கியோ அரசாங்கத்திற்கும் மதத்திற்கும் சம்பந்த மில்லை என்று விளம்பரப்படுத்தி விட்டது.

ருஷியாவோ வைதீக கொள்கைகளை உடையவர்களை யெல்லாம் கைது செய்து வருகின்றது. அதாவது சமீபத்தில் அங்கு சூரியனையும் சந்திரனையும் தெய்வமாக வணங்குபவர்களையெல்லாம் போலிசார் கைது செய்து வருகின்றார்கள்.

இதே ருஷியாவில் கொஞ்ச காலத்திற்கு முன்பு பள்ளிக்கூடங்களில் மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பிள்ளைகளுக்கு கற்பிக்கக் கூடாது என்று உபாத்தியாயர்களுக்கு உத்திரவு போட்டது எல்லோருக்கும் ஞாபகம் இருக்க லாம். அதுமாத்திரமல்லாமல் அங்குள்ள கோவில்களை இடித்ததும் ஞாபக மிருக்கலாம்.

நமது நாட்டைச் சுற்றியுள்ள இடங்களில் இவ்வளவு காரியங்கள் நடக்கின்ற போது நமது நாட்டில் இன்னமும் புராணக் காரரும், புரோகிதர்களும், பூசாரிகளும் பொதுநலத்தின் பேரால் வாழ்வை நடத்தும் வயிற்றுப் பிழைப்புக்காரர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். என்றால் நம் நாட்டு வாலிபர்களுக்கு கண்ணும் காதும் இருக்கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கிய மானதுமான ஜாதியொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்ததேயாம். நம் நாட்டில் சமுதாயச்

சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரச்சார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டு மானால் இராமாயணம் முதலில் ஒழிக்கப்படல் வேண்டும். - தந்தைபெரியார்

- விடுதலை நாளேடு, 19.5.18

செவ்வாய், 15 மே, 2018

நகர மன்றத்தில் பெரியார் ஆணை

#பெரியார்யார்

27-6-1919 அன்று பெரியார் ஈரோடு நகர மன்றத்தில் இயற்றிய இரண்டு முக்கியத் தீர்மானங்கள்
1. #பஞ்சமர் பிள்ளைகளை நகராட்சி பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது.
2.
  #கொங்கபற தெரு என்பதை வள்ளுவர் தெரு என பெயர் மாற்றம் செய்தல்.

வெள்ளி, 4 மே, 2018

தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது ஏன்? அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸை ஆதரித்தவரா?

தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது ஏன்?


அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸை ஆதரித்தவரா?


இணைய தளத்தில் வினாக்களுக்கு விடையளித்தார் தமிழர் தலைவர்




நியூயார்க், ஏப்.30 அண்ணல் அம்பேத்கரை பி.ஜே.பி. சொந் தம் கொண்டாடுவது ஏன்? உள்ளிட்ட வினாக்களுக்கு விடையளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

15.4.2018 அன்று சிங்கப்பூரிலிருந்து பல்வழி அழைப்பு (Tele Conference) வழியாக பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் இணைய தளத்தினை தொடங்கி வைத்து, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் சொற்பொழிவாற்றிய  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார்.

நேற்றைய கேள்வி - பதில் தொடர்ச்சி வருமாறு:

தனியார் துறையில் பதவி நியமனங்கள்பற்றிய தகவல்கள்...

கேள்வி:தென்னாப்பிரிக்காவில்தனியார்துறை யில், ஒவ்வொரு ஆண்டும், பதவி நியமனங்களைப் பற்றிய தகவல்களை அரசுக்கு அனுப்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்தியா விலோ, தமிழகத்திலோ அரசு துறைகளில் இட ஒதுக்கீடு இருக்கிறது; தனியார் துறையில் இதுபோன்ற பதவி நியமனங்களைப்பற்றிய தகவல் களை அரசுக்கு அனுப்புகிறார்களா? அது எந்த அளவிற்குப் பயன் அளிக்கும்?

வெங்கி

தமிழர் தலைவர்: தனியார் துறையில் இந்தியாவில் இட ஒதுக்கீடு கிடையாது, அது உண்மை. அதேநேரத்தில், பொதுத் துறையில், இட ஒதுக்கீடு நம்முடைய இயக்கம் பாடுபட்டதின் காரணமாக, மண்டல் கமிசன் வந்த பிறகு, அதற்கு முன் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், 22.5 என்பதை மத்திய அரசாங்கங்களுக்குக் கொடுத்தார். இன்னும் பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு சரியாக இல்லை.

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்கிற ஒரு பூச்சாண்டியை உச்சநீதிமன்றம் காட்டியதினால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 52 சதவிகிதத்தைப் பரிந் துரை செய்த மண்டல் அவர்கள், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப் பட்டவர்களுடைய உரிமைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை முன் வைத்து, 23 சதவிகிதத்தை 50 சதவிகிதத்திலிருந்து கழித்தால், 27 சதவிகிதம் என்று சொல்லித்தான்,

காலங்காலமாக அடித்தளத்தில் இருப்பவர்கள் மேலே வரவேண்டும் என்கிற வாய்ப்பை வைத்துதான், இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் போட்டியல்ல என்கிற கருத்தை வைத்து 27 சதவிகிதம் என்று அவர் பரிந்துரை செய்தார்.

அதையே செயல்படுத்த மத்திய அரசு விரும்பாதபோது, போராடித்தான், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தபோது அமல்படுத்தினார்.

அப்படி வாங்கக்கூடிய அந்தக் காலகட்டத்தில், அதை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றால், 23 சதவிகிதம், எஸ்.சி., எஸ்.டி. என்று சொல்லக்கூடிய மக்களுக்குக் கொடுப்பதில்லை. பி.சி., ஓ.பி.சி., எம்.பி.சி. என்று சொல்லக்கூடிய மக்களுக்கும் 27 சதவிகிதம் சட்டத்தில் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இல்லை.

ஒரு திடுக்கிடும் செய்தி என்னவென்றால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டபொழுது, அந்த 27 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த பல ஆண்டுகளாக வெறும் 14 சதவிகிதம்கூட அமல்படுத்தப்படவில்லை என்பது ஒரு பக்கம். இது  வருத்தமான, சோகமான ஒரு படம்.

இன்னொரு பக்கத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் இந்த இட ஒதுக்கீடு வந்ததினால்தான், வங்கிகள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்ற அயலகப் பணிகள் இவை அத்தனைத் துறையிலும் இட ஒதுக்கீட்டை ஒடுக்கப் பட்ட சமுதாயத்தினர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றனர்.

அதையும் சரியாக அவர்கள் செய்யக்கூடிய வாய்ப் பில்லை. வங்கிகளில், மிகவும் சாமர்த்தியமாக, தனியார் மயம், பொதுத் துறையில் இருக்கக்கூடிய உதாரணமாக நெய்வேலி, அதேபோன்று திருவெறும்பூரில் இருக்கக்கூடிய பெல் தொழிற்சாலைகளில், இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது.  27 சதவிகித இட ஒதுக்கீடு வந்தவுடன், இதை ஒழிப்பதற்காக மிகவும் சாமர்த்தியமாக, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, தனிப்பட்ட முதலாளிகளுக்கும் அதை உடைமையாக்குவது என்பது ஒரு கண்ணோட்டம். இன்னொரு நோக்கம் சமூகநீதியை ஒழிப்பது.

அதை தனியார் மயமாக்கிவிட்டால், இந்தியாவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது. இந்தத் தகவல் களை நாங்கள் முதன்முதலாக எடுத்துச் சொன்னோம். தனியார் துறைகளில் ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்றோம். அமெரிக்காவில், Affirmative Action என்று எல்லா இடங்களிலும் பார்த்து நடைமுறைப்படுத்தப்படுகிறதா? இல்லையா? அதனால் என்ன திறமை குறைந்து போய்விட்டது என்பதை எடுத்துச் சொல்லி போராடிக் கொண் டிருக்கின்றோம்.

ஆகவே, தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது கட்டாயம் வரவேண்டும். ஏனென்று சொன்னால்,

தனியார் துறை நிறுவனங்களை நடத்துவதற்கு உரிமம் பெறவேண்டும். தனியாருக்கு வங்கிகளில் கடன் கொடுக் கிறார்கள்; ஏமாற்றிவிட்டு எத்தனை பேர் போனார்கள் என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும். அதெல்லாம் மக்களுடைய வரிப்பணம். அப்படியிருக்கும்பொழுது அந்தத் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகிறோம்.

நீங்கள் சொல்லியதுபோன்று, தென்னாப்பிரிக்காவில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு உண்டு. ஒரு அருமையான தகவலைச் சொன்னீர்கள், இது பல பேருக்குத் தெரியாத தகவல். நம்மைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு தகவல்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது; எத்தனை சதவிகிதம் அமல்படுத்தியிருக்கிறார்கள் என்பதை கண்காணிக்கவேண்டும். அதுபோன்று செய்வதற்கு போதுமான அளவிற்கு அமைப்புகள் கிடையாது. பீகார் மாநிலத்தில், லாலு பிரசாத்  சில சட்டங்களைக் கொண்டு வந்தார். எத்தனை சதவிகிதம் நிரப்பியிருக்கிறார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த சதவிகிதத்தை நிரப்பலாம் என்று சொன்னதைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

காலியாக இருக்கும் இடத்தை யாருக்குக் கொடுக் கிறார்கள் என்றால், முன்னேறிய ஜாதிக்காரனுக்கே திறந்த போட்டியின்மூலம் கொடுத்துவிடுகிறார்கள். பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால், 23 சதவிகிதத்தை உயர்ஜாதிக்காரர்களுக்கே கொடுத்து விடுகிறார்கள். இதை எதிர்த்து நாங்கள் போராடினோம்.

எனவேதான், நீங்கள் சொன்ன யோசனை மிக முக்கியம். அடுத்தடுத்து வரக்கூடிய அரசில், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்வது எதற்கு என்றால், பொதுத் துறைகளை தனியார் மயமாக்கினால்கூட இட ஒதுக்கீட்டை நாம் காப்பாற்றி விடலாம்.

இப்பொழுது தனியார் துறையில் இருக்கின்ற வங்கி களில் உயர்ஜாதிக்காரர்களின் ஆதிக்கம்தான் இருக்கிறது. இப்பொழுது இந்தியாவில்  வங்கிகளில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியிருக்கிறார்கள். அந்த வங்கியின் உயரதிகாரிகளை கைது செய்து விசாரிக்கிறது சி.பி.அய். அத்தனை வங்கி உயரதிகாரிகளில் ஒரு தாழ்த்தப் பட்டவர் கிடையாது; ஒரு பிற்படுத்தப்பட்டவர் கிடையாது. அனைவரும் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு இன்றைக்குக் குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.

இதிலிருந்து என்ன தெரிந்துகொள்ள வேண்டியது என்றால், தகுதி, திறமை என்பது தாழ்த்தப்பட்டவர், பிற் படுத்தப்பட்டவர் கைகளில் போனால் கெட்டுப் போய்விடும் என்று சொன்னது தவறு. உயர்ஜாதிக்காரர்கள் இருந்தபோதே ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வரவேண்டும் என்பதுதான் சமூகநீதி. அதைக் கண்காணிக்கக் கூடிய அமைப்புகளை உருவாக்கவேண்டும் என்பது மிக முக்கியம். ஆகவே, உங்களுடைய யோசனைக்கு நன்றி.

அதேபோன்று, அடுத்து வரக்கூடிய அரசுக்கு இதை செயல் திட்டமாகவே இதனை வலியுறுத்துவோம். ஏற் கெனவே இதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். கண் காணிக்கவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் கண்காணிப்பு குழு இருக்கவேண்டும். வாட்ச் டாக் கமிட்டி என்பதே அதற்குப் பெயர். ஆகவே அந்த முறையை தாராளமாக செய்யலாம்.

சமூகநீதியை உண்மையிலேயே நூற்றுக்கு நூறு நிறைவேற்றப்படவேண்டும், செயல்படுத்தப்படவேண்டும் என்றால், இதுபோன்று சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு, நடைமுறை கண்காணிப்பு இருந்தால்தான், நாம் உண்மையான பலனை அனுபவிக்க முடியும். இல்லையானால், அது எழுத்தில் இருக்கும், சட்டத்தில் இருக்கும். நடைமுறையில் நமக்குக் கிடைக்காது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது.

அம்பேத்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆதரித்துப் பேசினாரா?

கேள்வி: பெரியார் நாத்திகக் கருத்தைப் பேசி, நாட்டார் தெய்வ வழிபாட்டையெல்லாம் ஒழித்து விட்டார் என்று நிறைய பேர் சொல்லிக் கொண் டிருக்கிறார்கள். அதிலிருக்கின்ற ஜாதியைப்பற்றி ஏன் அவர்கள் பேசமாட்டேன் என்கிறார்கள்; அவர்களுக்கு எப்படி அதைப் புரிய வைப்பது?

இரண்டாவது கேள்வி, இப்பொழுது வாட்ஸ் அப்பிலும், முகநூலிலும் அம்பேத்கரைப்பற்றி ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆதரித்துப் பேசினார்; அது தீண்டாமையை ஒழிக்கிறது என்று பேசினார். சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டார் என்ற செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான உண்மைத் தன்மையை, அதற்கு எதிர்வினையை நாம் எப்படி ஆற்றுவது?

கனிமொழி, நியூஜெர்சி

தமிழர் தலைவர்: சாதாரணமாக கிராமங்களில் இருக்கக்கூடிய நாட்டார் வழக்கில் என்று சொல்லி, அதற்கு ஒரு பெரிய பண்பாடு இருக்கிறது என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஏனென்று கேட்டால், அங்கேயும் கீழ்ஜாதிக்காரன்தான் வருகிறான். அந்தக் கோவிலில் பார்ப்பானை அனுமதிக்கிறார்களா? கிராமத்துப் பூசாரிகள் இருக்கிறார்கள் என்கிறார்கள். அதில்கூட மற்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடையாது. எனவே, அதனைத் தெளிவுபடுத்தவேண்டும்.

இதையெல்லாம் வைத்து நம்மை கேவலப்படுத்து வதற்காகத்தான் வருகிறார்கள்; இதை நீங்கள் நம்பவேண்டாம்; நம்முடைய மக்களை ஏமாற்றுவதற்காக செய்ததுதான். ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுகிறவன் வரத் தான் செய்வான்.

இப்பொழுது புதுப்புது சாமியார்கள் வருவதுபோல, கார்ப்பரேட் சாமியார்களாக, அய்-டெக் சாமியார்கள் வரு கிறார்கள். இதனை எடுத்து நாம் சொல்லவேண்டியது அவசியம்.

கிராமங்களில் ஜாதிப் பஞ்சாயத்து, ஜாதி நல சங்கம், கோவிலை கட்டுவது என்பதெல்லாம் பிற்காலத்தில் வந்தது. அதில் யார் யார் வீரனாக இருந்தார்களோ, அவர்களை யெல்லாம் கடவுளாக்கிவிட்டார்கள். கடவுளாக்கியவுடன், சாராயம் கேட்கிறது, சுருட்டு கேட்கிறது என்றாக்கினார்கள். அதை எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்.

அம்பேத்கர்அவர்களைப்பொறுத்தவரையில்,வேதம், மனுஸ்மிருதி, இவையெல்லாம் சமஸ்கிருதத்தில் இருந் தது என்பதால், சமஸ்கிருதத்தைப் படித்து, அதை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு பண்டிதரிடம் கேட்டார்.

அவர், நீ கீழ்ஜாதிக்காரன், சமஸ்கிருதத்தைப் படிக்கக் கூடாது என்றார்.

பிறகு அம்பேத்கர் அவர்கள், ஒரு பார்ப்பனரல்லாத சமஸ்கிருதப் பண்டிதரிடம்தான் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டார். அவர் எதற்காக சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டார் என்றால், அதில் இருக்கின்ற புரட்டுகள், பேதங்கள், நேரிடையாக அந்த மொழியின்மூலமாக அதைப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார்.

இன்றைக்கு சமஸ்கிருத பாரதி என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உருவாக்கி இருக்கிறார்கள், எல்லோரும் சமஸ்கிருதம் படியுங்கள் என்று. ஏனென்றால்,  சமஸ்கிருதம் படிப்பதற்கு ஆள்கள் யாரும் கிடையாது. பார்ப்பனர்களேகூட சமஸ்கிருதம் படிப்பதற்குத் தயாராக இல்லை.

வடநாட்டில் சமஸ்கிருதத்தைப்பற்றி பேசுகிறவர்கள், தென்னாட்டில் சமஸ்கிருதத்தில் பதில் சொல்லவில்லை என்றால், அவர்களால் பதில் சொல்ல முடியாது. சமஸ்கிருதம் மந்திரம் தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்று கேள்வி கேட்டால், அவர்களுக்கே தெரியாது. ஆங்கிலம் படித்து, அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ மிகப்பெரிய அளவில் வசதியாக கார்ப்பரேட் முதலாளியாக உட்கார்ந்துகொண்டுதான், அம்பானி, அதானி, டாடா, பிர்லாவுக்கு ஏஜெண்டாக இருக்கக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள்.

அம்பேத்கர் அவர்கள் சமஸ்கிருதத்தை ஆய்வு செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அதனை கற்றார்.

தமிழில் சில வார்த்தைகளை கற்றுக்கொண்டு, அவர்கள் எழுதினார்கள் என்றால், அவர்கள் உடனே தமிழைப் போற்றி சொல்வார்கள் என்று சொல்ல முடியாது.

அடுத்ததாக, அம்பேத்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆதரித்துப் பேசினார் என்பதற்கு எந்த ஆதாரமும் தேதி வாரியாகவோ, எழுத்து மூலமாகவோ கிடையாது. இது திட்டமிட்ட கோயபல்ஸ் பிரச்சாரம். அதை ஏற்கெனவே ராம்குனியானி என்பவர், மிக அழகாக ஆர்.எஸ்.எஸ்.சினுடைய புரட்டுகளை எழுதக்கூடியவர். அதை இவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ஏதோ ஒரு வெள்ள நிவாரணம் போன்ற நிகழ்வுகளில் யாராவது ஏதாவது செய்தால், அதை மனிதநேயம், மனித சேவை என்று பாராட்டுவோம். அப்படி சொல்வதினாலேயே அந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம் கிடையாது.

ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கை இந்துராஷ்டிரம். அவர்கள் தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்று சொல் வார்கள்; ஆனால், ஜாதியை ஒழிக்கவேண்டும் என்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. வேரை அழிக்காமல், மரத்தை கீழே தள்ள முடியாது.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் மனநிலையை பாதிக்குமா?

கேள்வி: நூறாண்டு காலம் அம்பேத்கர் - பெரியார் பயணத்திற்குப் பிறகும், பட்டியல் இன மக்களை தலித் அல்லது பட்டியல் இனம் என்று சொல்லாமல், திரும்பத்திரும்பதாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்டசொல் லாடலைப் பயன்படுத்துவது அவர்களுடைய மன நிலையை பாதிக்குமா? இதை நாம் தவிர்க்க முடியுமா?

தமிழர் தலைவர்: மனநிலையை உருவாக்குவதற்குத்தான் அந்தச் சொல்லே. தயவு செய்து அந்தச் சொல்லை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். தாழ்ந்தவர்கள் என்று சொல்லவில்லை. பின்தங்கியவர்கள் என்று சொல்லவில்லை. பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்றுதான் சொல்கிறோம். தாழ்த்தப்பட்டவர் என்றால், வேண்டுமென்றே சமமாக இருந்தவர்களை கீழே பிடித்து தள்ளிவிட்டார்கள். எப்பொழுது நீ மேலே வருவது என்று கேட்பதற்காகத்தான் அந்தச் சொல்லாட்சி.

ஆகவேதான், Depressed and Downtrodden  என்ற வார்த்தை வந்தால்தான், நாம் எழுந்து நிற்கிறோம். ஆங்கிலத்தில் எப்படி இருக்கிறதோ, தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வது. தாழ்ந்தவர்கள் என்ற சொல்லை யாராவது சொன்னால், அந்த சொல் கண்டிக்கப்படக்கூடியது.

அதேபோன்று, பின்தங்கியவர்கள், பிற்பட்டவர்கள் என்று சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்துவார்கள்; அதனை நாங்கள் திருத்தியிருக்கிறோம். எனவே, அந்த சொல்லைக் கேட்கும்பொழுதே உணர்ச்சி வரவேண்டும், சுயமரியாதைவரவேண்டும்,கோபம்வரவேண்டும் என்பதற் காகத்தான் அந்தச் சொல். அவர்களுடைய எழுச்சிக்காகத் தான் அந்த சொல்லே தவிர, அவர்களுடைய மனநிலை பாதிக்கவேண்டிய அவசியமே இல்லை. மன எழுச்சியை உண்டாக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சொல்.

பெரியார் அவர்கள் பாடுபட்டு நமக்கான உரிமையை வாங்கிக் கொடுத்தார் என்று நினைக்கக்கூட தயங்குகிறார்களே!

கேள்வி:இங்கேவந்திருக்கின்ற80 சதவிகி தத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட வர்கள்தான். எல்லோரும் நன்றாக சம்பாதிக் கின்றோம், நல்ல பதவியில் இருக்கிறோம். ஆனால், இவர்கள் எல்லாம், பெரியார் இவ்வளவு தூரம் பாடுபட்டு நமக்கான உரிமையை வாங்கிக் கொடுத்தார் என்று நினைக்கக்கூட தயங்குகிறார்கள். வெளியில் சொல்வதற்கும் தயங்குகிறார்கள். நாம் சொன் னால்கூட, காதில் வாங்காததுபோல் இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது, இதனை நாங்கள் எப்படி எதிர்கொள்வது?

டாக்டர் சரோஜா இளங்கோவன்

தமிழர் தலைவர்: தந்தை பெரியார் அவர்கள் இதனை நீண்ட நாள்களுக்கு முன்பே உணர்ந்து, தத்துவமாகவே சொல்லி இருக்கிறார்.

என்னுடைய பணிகள் மானம் பாராட்டாத பணி. நன்றியை எதிர்பார்க்காத பணி.

நன்றியை எதிர்பார்க்கக்கூடாது. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நீண்ட காலமாக அடித்தளத்தில் இருந்து விட்டார்கள். அவர்கள் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

ஆகவே, நன்றியை எதிர்பார்க்காமல் பணியாற்றுவதுதான் நம்முடைய பணி.

எப்படி மழை தானாகப் பெய்கிறது; காற்று எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. யாராவது நன்றி சொல்வார்கள் என்றோ, விமர்சனத்தைப்பற்றியோ கவலைப்படுகிறதா?

அதுபோல, பெரியாருடைய தொண்டு. அவர் ஒரு காலத்தில், உணர்ந்தால்  என்ன? உணராவிட்டால் என்ன? அதற்கு ஒரு உதாரணம் சொன்னார், நான் தண்ணீர்ப் பந்தல் வைக்கிறேன். கோடையில், தாகத்தோடு வருகின்றவன், தண்ணீர்ப் பந்தலைப் பார்த்தவுடன், தண்ணீரைக் குடிக் கிறான். குடித்து முடித்தவுடன், இந்தப் பந்தலை யார் போட்டது; தண்ணீர் பானையை யார் வைத்தது என்று நன்றி சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்களா? கிடையவே கிடையாது.

பாலத்தில் செல்கின்றோமே, அந்தப் பாலத்தை யார் கட்டியவர்கள் என்று நினைக்கிறோமா? அல்லது சாப்பாடு சாப்பிடுகிறோமே, சாப்பிடும்பொழுது, எந்த உழவன் சேற்றில் காலை வைத்து உழைத்திருக்கிறானோ, அவன் இல்லாவிட்டால், இந்தச் சோறு கிடைத்திருக்குமா? என்று யாராவது நினைக்கிறோமா?

 

இல்லாத கடவுளுக்கு, காக்காவுக்கு சோறு உருண்டை வைக்கிறார்களே தவிர, உழைத்தவனுக்கு எதுவும் செய்வது கிடையாது.

ஆகவேதான், இந்தப் பணியை செய்யும்பொழுது, மன திடத்துடன், நன்றி எதிர்பார்க்காது, மானம் பாராது, எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாது நம்முடைய பணியை, லட்சியப் பயணத்தைத் தொடரவேண்டும். இது பெரியா ருடைய சிந்தனை - பெரியாருடைய அறிவுரை.

ஆகவே, இதைப் பார்த்தால், நமக்கு விரக்தி வந்துவிடும். பெரியாருக்கு என்றைக்காவது விரக்தி வந்திருக்கிறதா?

நன்றி காட்டுவது என்பது தமிழனுக்கு நஞ்சு என்று சொன்னார் தந்தை பெரியார்.

தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு திராவிடர் கழகம் இல்லை என்றால் வந்திருக்குமா?

இந்தியாவிலேயே 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

அதுமட்டுமல்ல, இதில் கை வைக்க முடியாத அளவிற்கு 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பு. அதுவும் பெரியாருக்குப் பின்னால், திராவிடர் கழகம் இதனை செய்தது.

இன்றைக்கு எல்லோரும் அதனை அனுபவிக்கிறார்கள். எத்தனை பேர் இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு யாரால் வந்தது என்று நினைக்கிறார்களா? இவர்களால்தான் நம்முடைய பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைத்தது என்று நினைக்கிறார்களா? என்றால், கிடையவே கிடையாது.

நன்றியை எதிர்பார்த்தால், நம்முடைய பணிகளை நாம் மேற்கொள்ள முடியாது. விரக்தி வரும், சங்கடம் வரும்.

பெரியார் அப்படி நினைத்திருந்தால், நமக்கெல்லாம் புது வாழ்வு, புரட்சி வாழ்வு கிடைத்திருக்குமா? கிடைத்திருக்காது.

பெரியார் அவர்கள் தத்துவத்தில் எவ்வளவு சிறந்தவர் என்றால்,

1933 ஆம் ஆண்டு குடிஅரசுவில் எழுதினார்.

நன்றி காட்டுவது என்பது பயனடைந்தவர்கள் செய்யவேண்டிய காரியமே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று. எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமே ஆகும்.

இதுதான் பெரியாருடைய தத்துவம். இதை மனதில் வைத்துக்கொண்டு, நம்முடைய பயணத்தைத் தொடர வேண்டும்.

எதிர்பார்ப்பும் வேண்டாம்; ஏமாற்றமும் வேண்டாம்!

ஆகவே, அதைப்பற்றி கவலைப்படாமல், நம்முடைய பணியை முடிந்தளவிற்கு செய்யவேண்டும். எல்லா மக்களும் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்த்தால், நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். எதிர்பார்ப்பும் வேண்டாம்; ஏமாற்றமும் வேண்டாம். நம்முடைய பணியை அடக்கமாக, உறுதியாக தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தோழர்களின் கேள்வி களுக்குப் பதிலளித்தார்.

சூழ்ச்சிகளையெல்லாம் தகர்க்கின்ற வகையில்...

மிக்கநன்றி அய்யா!

இன்றைக்கு அம்பேத்கரையும், பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்தக்கூடிய அந்தச் சூழ்நிலைகள் இருக்கிறது. ஆனால், அந்த சூழ்ச்சிகளையெல்லாம் தகர்க்கின்ற வகையில் உங்களுடைய உரை இன்று அமைந்திருந்தது.

அவர்களுடைய போராட்டங்கள், அவர்கள் இரு வருக்கும் இடையிலான ஒற்றுமைகள், போராட்டக் களத்தில் அவர்கள் எப்படி ஒற்றுமையோடு செயல்பட்டார்கள் என்ற செய்திகளையெல்லாம் தொகுத்துக் கூறினீர்கள். தோழர் களின் கேள்விகளுக்கும் மிக அருமையான பதில்களைத் தந்தீர்கள்.

பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக உங்களுக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எத்தனை பேர் நம் பின்னால் வருகிறார்கள் என்று நினைக்காதீர்கள்!

பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தை ஓராண்டல்ல, பல நூறாண்டு தொடர்ந்து சிறப்பாக நடத்துங்கள். ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்துங்கள்.

முதலில் பெரியார், தன்னந்தனியராக என்னையே நம்பி இப்பெரும் பணியேற்றேன் என்றுதான் சொன்னார். ஆகவே, நீங்கள் எத்தனை பேர் நம் பின்னால் வருகிறார்கள் என்று நினைக்காதீர்கள். இன்றைக்குக் குறைவாக இருந்தாலும், அது பின்னாளில் விரிவாகும். இந்தத் தத்துவம்தான் எதிர்காலத்தில் உலகத்தை ஆளப்போகிற தத்துவம். காரணம், அவர்கள் எல்லாம் தெய்வீகப் பிறவிகள் அல்ல; அவர்கள் எல்லாம் அவதாரங்கள் அல்ல. மாறாக, மாமனிதர்கள்.

பெரியாரையும், அம்பேத்கரையும் புறக்கணிக்க முடியாது

மனிதத்தை மனித சமுதாயத்தில் உருவாக்கவேண்டும். மனிதர்கள், மனிதர்களாக இல்லை. மாக்களாக இருக்கிறார்கள் என்பதை மாற்றிக் காட்டவேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் அந்தப் புரட்சியாளர்கள். அவர்களுடைய கொள்கைகள் வென்றே தீரும்!

எப்படி அறிவியலை, விஞ்ஞானத்தைப் புறக்கணிக்க முடியாதோ அப்படித்தான் பெரியாரையும், அம்பேத்கரையும் புறக்கணிக்க முடியாது.

தொடர்ந்து பணியாற்றுக! தொல்லைகளை சந்திக்க, மனம் தளராமல் செய்க! தொடர்ந்து செய்க! வெற்றி பெறுக!

நன்றி வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 30.4.18