வியாழன், 31 அக்டோபர், 2019

தமிழ் முப்பால் மரபும்,வடமொழி நாற்பால் மரபும் - 20

டாக்டர் தி. முருகரத்தனம் உரை

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் தி. முருகரத்தனம் உரை வருமாறு.

செவ்வாய்க்கிழமை (22.10.2019) தொடர்ச்சி...

ஆதலால், தென்மொழி வடமொழி அடங்கிய இந்திய மரபில் முப்பால்மரபு 5, 6ஆம் நூற்றாண்டுவரையிலான காலத்திலும், அதன்பின் நாற்பால் மரபும், வழக்கிற்கு வந்தன எனத் தெளிவாகிறது. இவ்வாறு முப்பால் மரபு, நாற்பால் மரபாக மாறியது என அறியலாம். இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றமாக மட்டுமே இது தோன்றவில்லை. இந்திய மக்களின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்ட ஒரு பெரு மாற்றத்தின் விளைவே இது எனக் கொள்ளவேண்டும். அந்த மாற்றம் ஓர் அடிப்படையான மாற்றமாகும். இந்திய மக்கள் சிந்தனைப் போக்கினையும், வாழ்க்கைப் போக்கினையும் அதுமாற்றி அமைத்த மாற்றமாகவும் கருதலாம். இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.

7. நாற்பாலின் நோக்கம் :

அறம், பொருள், இன்பம் என முப்பால் மரபு வழங்கிய தொடக்கக் காலத்தில் முப்பொருள்களும் ஒரே சீரான சிறப்புப் பெற்றன; ஒரே சீரான அழுத்தம் பெற்றன. அதாவது வாழ்க்கைக்கு அறம் தேவை; அது போலவே பொருளும் தேவை; அதுபோலவே இன்பமும் தேவை. மூன்றுமே சீராகத் தேவைப்படும் என்பது அக்காலத்தின் கொள்கை. மக்கள் அறத்தின் வழி நடந்து பொருளை ஈட்டி இன்பம் துய்த்தலை வாழ்க்கையாகக் கொண்டனர் என இதனால் அறியலாம்.(1)

ஆனால், முப்பால் மரபோடு வீட்டுப்பால் சேர்க்கப்பட்ட போது நான்காவது பாலாகிய வீட்டுப்பாலே சிறந்தது என வும், மற்றவை அத்துணைச் சிறப்பு இல்லாதவை எனவும், வீட்டுப்பாலே குறிக்கோள் எனவும், மற்றவை மூன்றும் கருவிகள் எனவும் விளக்கங்கள் தரப்பட்டன. இதன்பொருள் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு உரிய அறம், பொருள், இன்பம் புறக்கணிக்கப்பட்ட மறுமைவாழ்வுக்குரிய வீடு போற்றப்பட்டது என்பதாகும். அதாவது சமூகக் கருத்தாக இருந்த முப்பால், சமயக் கருத்தாகக் கொள்ளத்தக்க நாற்பாலாக உற்ற மாற்றமே இது என்பதாகும். இந்த மாற்றமே மக்கள் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்ற மாகும். உலக விருப்பக் கொள்கையிலிருந்து உலக மறுப்புக் கொள்கைக்கு இந்திய மக்கள் வந்ததாகக் கொள்ள வேண்டும்.

இந்த மாற்றம் ஏற்பட்ட காலம். இந்து சமயம் தன் சாத்தி ரங்களாலும், காவியங்களாலும், தத்துவங்களாலும், வருணா சிரம தர்மம் எனும் சமூக அமைப்பாலும், உருவமும் உறுதி யும் பெற்ற காலம் ஆகும். அதாவது ஆரியப் பண்பாடு இந் திய நாட்டுப் பண்பாட்டின் பல கூறுகளையும் தன்மயமாக்கித் தன் மேன்மைக்கும் நலத்திற்கும் பயன்படுத்திக் கொண்ட காலமாகும்.

இக்காலத்தில் முப்பால் மரபு, பிராமணியமய மாக்கப்பட்ட அதாவது ஆரியமயமாக்கப்பட்ட வாழ்க்கைத் தத்துவமாக தரப்பட்டது. முப்பால் மரபில் இந்த உலக வாழ்க்கை வற்புறுத்திப் பேசப்பட்டது; சமய வாழ்க்கை சிறப்பாக இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய வரலாற்றுப் பேராசிரியர் பாசாம் போன்றவர்கள், 'அர்த்தமும், காமமும்' உலோகாயதக் கருத்துக்கள் கொண்டுள்ளன என எடுத்துக்காட்டுவதை கருத்தில் கொள்ளவேண்டும்(2) உலோகாயதத் தத்துவக் கருத்துக்களும் இவ்வுலக வாழ்வை வற்புறுத்தும் கருத்துக் களும் நீக்கப்பட்டு மறுவுலக வாழ்வை வற்புறுத்தும் சமயக் கருத்துக்கள் புகுத்தப்பட்டு, வகுக்கப்பட்ட மரபே நாற்பால் மரபாகும். பண்டை அறம் பொருள் இன்பங்களுக்கு அடிப் படையான, இவ்வுலகத்துக்கான கருத்துக்கள் ஆரியர் அல்லாத இந்திய மக்களுக்கும் குறிப்பாகத் திராவிட மக்க ளுக்கும் உரியவையாக இருந்திருக்கலாம். இந்திய நாட்டின் வாழ்க்கைக்குரிய எத்தனையோ தத்துவக் கருத்துக்களும், சமூகக் கருத்துக்களும், இலக்கிய மரபுகளும், கதைகளும் ஆரியமயமாக்கப்பட்டமை போன்றே இம்முப்பால் மரபும் ஆரிய மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையினையே வட மொழியில் நாம் காணுகின்றோம். தமிழகத்திலும் இது பரப்பப்பட்டது.

நாற்பால் மரபின் அடிப்படையான கருத்து. நான்காவ தான வீட்டுப்பாலே சிறந்ததாகும் என்பது, மற்ற மூன்று பால் களும் புறக்கணிக்கத்தக்கன என்பதும் ஆகும்.

“ஈதல்அறம்; தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;

காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு இட்டதே இன்பம்;

பரனை நினைத்து இம்மூன்றும் விட்டதே வீடு'

என்னும் அவ்வை பாட்டு இதனை எடுத்துக்காட்டும்.

ஆரிய மரபு இப்பெருமாற்றத்தினை-இவ்வடிப்படை மாற்றத்தினை, மெல்ல மெல்லச் செய்ததாகத் தெரிகிறது. முப்பால் மரபினை அது முற்றிலும் கைவிடவும் முடிய வில்லை. காரணம் அதன் பெருமை போற்றத்தக்கது. அதன் தேவை தவிர்க்க முடியாதது. ஆயினும் இம்முப்பால் மர பினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை! ஆகவே அது அதனை மாற்றி அமைத்தது; நான்காவது பாலே சிறந்தது எனக் காட்டும் அப்பணியினை நிறை வேற்றியது. முப்பாலினையே போற்றி முப்பால் எனவே பெயரிட்டு வள்ளுவர் செய்த திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகர் முப்பால்களையும் தாழ்த்தி இருப்பதைக் காணலாம். அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றினுள் ஏனைப்பொருளும் இன்பமும் போலாது அறன், இம்மை மறுமை வீடு என மூன்றையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து, இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாகிய பொருள் கூறுவான் எடுத்துக்கொண்டார், அப்பொருளைத் துணைக் காரணமாக உடைத்தாய் இம்மையே பயப்பதாய இன்பம் கூறுவான் எடுத்துக்கொண்டார் என்னும் பரிமேலழகரின் உரைக் கருத் துக்கள் ஆரிய மரபின் இயல்பினை எடுத்துப் பேசுகின்றன.

8. அய்யம்

முப்பால் மரபினை நாற்பால் மரபாகத் தன்மயமாக்கினும் ஆரிய மரபு எப்போதும் அய்யக கண்கொண்டே முப்பாலை நோக்கி வந்திருக்கின்றது. நான்கு பால்களிலும் எது சிறந்தது என்னும் வாதங்களில் அது புலனாகிறது.

மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் இது பற்றிப் பேசப் படும் ஓரிடம் குறிப்பிடத்தக்கது. பாரதப் போர் முடிவுற்றுப் பாண்டவர்கள் வெற்றி நிலை நாட்டியபோது எங்கும் பேர ழிவு இருப்பது தெரிந்தது. அசுவத்தாமன் பாண்டவர்களு டைய நண்பர்களை முறையில்லாத வகையில் கொன்று குவித்திருந்தான். இப்பேரழிவினைக் கண்டு பாண்டவர்கள் அய்வரும் கசிந்து கண்ணீர் மல்கினர். இந்த உலகில் எது தான் மேற்கொள்ள வேண்டிய குறிக்கோள் என்பது பற்றி அவர்கள் விதுரருடன் கூடி ஆராய்ந்தனர். அறமா, பொருளா, இன்பமா எது? விதுரர் அறமே சிறந்தது என அதற்குரிய காரணங்களைத் தந்து பேசினார். அர்ச்சுனன் பொருளேப் போற்றத்தக்க பொருள் எனப் பெரிதாக எடுத்துப் பேசினான். பீமன் இன்பமே சிறந்தது என விரித்துப் பேசினான். நகுலனும் சகாதேவனும் முப்பால்களுமே அளவுடன் மேற்கொள்ளத் தக்கவை எனப் பேசினர். தர்மர் மனநிறைவு பெறவில்லை. இங்கே அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பற்றி மட்டுமே விரிவாகப் பேசப்பட்டிருக் கின்றது. நான்காம் பாலைப் பற்றி பேச்சு இல்லை. (தி.மு. குறள்நெறி)

இக்கருத்துக்கள் முப்பால்பற்றி ஆரிய மரபு அய்யம் கொண்டிருந்தது என்பதையும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கியது என்பதனையும் தெளிவாகக் காட்டுகின்றன. ஆதலால் அதனுடன் நான்காம் பாலைச் சேர்த்து அதற்கு முதன்மை இடம் தந்து முப்பாலை அது இழிவுபடுத்தியது. அதாவது, இம்முப்பொருள்களையும் கருவிகளாக்கி வீட்டுப் பாலைக் குறிக்கோளாக வைத்தது. இதுவே வடமொழியாக் கத்தின் இறுதிப் பணியாயிற்று. மகாபாரதம் இன்றுள்ள நிலை யில் பிராமணியத்தால் தன் தேவைக்கேற்ப மாற்றி எழுதப் பட்டது என அறிஞர்கள் சுட்டுவதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.(3)

திருவள்ளுவரது நூலில் நாம் முப்பாலே காண்கின்றோம். அவர் முப்பாலில் எப்பால் சிறந்தது என எப்போதும் ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை. அவர் எதனையும் கருவியாக்கவில்லை. எதனையும் முடிவாக்கவில்லை. இந்த உலக வாழ்க்கைக்கு எல்லாமே தேவை என்பது அவர் கருத்து போலும். அவர் மரபே தமிழ் மரபு எனக் கொள் ளலாம். உலகச் சிந்தனையாளர் ஆல்பர்ட் ஷ்வைட்சர் இவ்வாறே கருதுகிறார்.(4)

இம்முப்பால் மரபு தமிழ் மரபு என்றே நாம் கொள்ளலாம். காரணம் இந்தியா முழுவதிலும் எல்லாக் காலங்களிலும் தோன்றிய நூல்களில் அறம் பொருள் இன்பம் எனும் மூன்றனையும் எடுத்து ஒரே ஆசிரியரால், ஒரே நூலால் செய்யப்பட்டது இத்தமிழ்த் திருக்குறளே. வடமொழியில் முப்பால் மரபு தொடக்கக் காலத்தில் (கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை) ஆங்காங்கே சுட்டப்பட்டிருந்தாலும் தர்ம சாத்திரங்களும், அர்த்த சாத்திரங்களும், காமசாத்திரங்களும் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்து இருந்தாலும் அவை அனைத்தையும் ஒன்றாகக் கண்டு விளக்கிய நூல் ஒன்றாயினும் அங்குத் தோன்றவில்லை. திருக்குறள் ஆசிரியர் முப்பாலைப் பற்றி எழுதுகின்றபோது முப்பாலும் வாழ்க் கைக்கு இன்றியமையாதவை எனப் பார்க்கும் ஒரு விரிந்த பார்வை அவரிடத்து அமைந்திருப்பதை நாம் காணலாம்.

வடமொழியில் இம்முழுப் பார்வை, குறைப் பிறவியா கவே அமைந்துள்ளது. அது முழுமை பெறவில்லை. தமிழ் மரபே முழுமைப் பெற்றது. ஆதலால் முப்பால் மரபுக்கு உரியவர்கள் தமிழர்களே எனலாம். தம் முப்பால் மரபினைத் தமிழர்கள் மறந்துவிட்டு, ஆரிய மொழி மயமாக்கப்பட்ட, நாற்பால் மரபினைத் தம் மரபாகப் போற்றி மயங்குகின்றனர். தமிழ் மக்கள் இனியேனும் மயக்கம் தெளிவீராக!

NOTES

(1)  ‘The Sutras lay equal stress on the three ends of  life, i.e. Dharma, Artha and Kama, but are absolutely Silent on Moksha’

- India of  Vedic Kalpa Sutras

- by Ramgopal, P. VIII.

‘A balanced outlook on life is recommended in the Sutras which lay equal stress on the three ends of life, i.e. righteous conduct (Dharma), acquisition of wordly objects (Artha) and their enjoyment (Kama)....

- Ibid. P. 482.

(2)          A.L. Basham, The Wonder That was India.

(3)          ‘The Mahabharata is frequently more secular than religions in tone; the work had its origin in lays composed to commemorate the deeds of a great warrior and may have been connected in some way with the royal sacrifice. Many of  the incidents go far back into the remote Vedic period. Transition from one story to another is often confused and awkward. These lays were later worked over by the priests, who expanded the meaning of the ballads, linked them together with prose narration, and interpolated treatises on ethical and theological problems. The major brahman modifications and additions probably date from about the second and first centuries B.C.

- Dre. Kmeier, Charles, Kingship and

Community in Early India, P. 131-132.

(4)          ‘So a natural and ethical world and life affirmation of this kind was present among the people of India at the beginning of our era although nothing of it can be found in Brahmanism, Buddhism and Bhagaved-Gita Hinduism. It gradually penetrates into Hindu through the great religious teachers who had sprung from the lower castes and lived among and felt with the people’.

- Schweitzer Albert, Indian Thought

and its Development, P. 201.

- விடுதலை நாளேடு, 24.10.19

தமிழ் முப்பால் மரபும்,வடமொழி நாற்பால் மரபும் - டாக்டர் தி. முருகரத்தனம் உரை

சமஸ்கிருதம் உலகின் ஒரே அறிவியல் மொழியாம்!

- புலவர் பா.வீரமணி -

இந்தியாவிலேயே சமஸ்கிருதம்தான் ஒரே அறிவியல் மொழி (இந்து, 12.8.2019) என்று கூற நாணி, உலகிலேயே என்று கூறியிருப்பதில் மத்திய மனித வள துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலின் அட வாடித்தனமும், சர்வதிகாரப்போக்கும் முண்டியடுத்து வெளிப்பட்டுள்ளது. இப்போது அவரது கூற்று எத்துணை உண்மை என்பதை இனி நோக்குவோம்.

சமஸ்கிருதத்தில் பரந்து விரிந்த புலமை கொண்ட வர் இராஜாராம் மோகன்ராய் ஆவர். அவர் பன் மொழி அறிஞர். உருது, அரபு, பாரசீகம் போன்ற மொழிகளையும் ஆழ்ந்து கற்றிருப்பதுடன், பவுத்தம், சமணம், இஸ்லாம், கிறித்துவம் போன்ற சமயங்களை யும் ஆழக்கற்றவர், வேதங்களையும், உபநிடதங்க ளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். சமஸ்கிருத்தை வேர் முதல் உச்சிவரை உணர்ந்தவர். சமஸ்கிருதம், பெரும் இலக்கியங்களையும், இதிகாசங் களையும் பெற்றிருந்தாலும், அதன் சமுதாயப் பயன் என்னவென்பதை அவர் அடையாளம் காட்டியிருப்பதுதான் மிக முக்கியமானது. அவர் காலத்தில் வங்காளத்தில், கிழக்கிந்தியக் கம்பெனி யார் சமஸ் கிருதப் பள்ளிகளைக் கூடுதலாகத் திறக்கத் திட்ட மிட்ட போது, கவர்னர் ஜெனரலாக இருந்த ஹாம் ஹெர்ஸட் பிரபுக்கு ஒரு கடிதத்தை 11.12.1823 அன்று அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் சமஸ்கிருதத் தைப் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிற கல்வியறிவைப் பரப்புவதற்கு இந்துப் பண்டிதர்களைக் கொண்டு சமஸ்கிருதப் பள்ளிகளை அரசினர் நிறுவி வருகின்றனர். இத்தகைய கல்விக் கூடம் இலக்கண நுட்பங் களையும் அப்பாலைத் தத்துவ வேறுபாடுகளையும் இளைஞர்களின் மனத் தில் பெருஞ்சுமையாக ஏற்றி வைக்குமே ஒழிய சமு தாயத்திற்கு எவ்வகையிலும் அவை பயன்படா. அப் பள்ளிகளில் பயிலும் மாணவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டவை எவையோ அவற்றை அறி வதுடன், கற்பனைக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் சிலருடைய பயனற்ற சொற்சிலம்பு வாதங்களையுமே தெரிந்துகொள்வர். இத்தகைய கல்வி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதே முறையில், இந்நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச் செய்வது பிரிட்டீஸ் சட்டமன்றத்தின் நோக்கமாக இருக்கு மானால், சமஸ்கிருதக் கல்விமுறையே அதற்குப் போதுமானதாகும். குடிமக்களுடைய கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக இருக்குமானால், அது மிகவும் முற்போக்கு இயல்பும், அறிவு நலமும், கனிந்த பயிற்சி முறையும் கொண்டதாக அமைய வேண்டும். அம்முறையில் கணக்கியல், இயற் கைத் தத்துவம், வேதியல், உடற்கூற்று இயல் முதலியவற்றோடு மற்றும் பயன்தரும் அறிவியல், கலைகளைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆதாரம் - இராஜாராம் மோகன்ராய் - எழுதியவர் - சவுமியேந்திரநாத் தாகூர் - 1972 - பக் - 41- சாகித்திய அகாதெமி

- நன்றி: 'முகம்' மாத இதழ், அக். 2019

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் தி. முருகரத்தனம் உரை வருமாறு.

1. உறுதிப் பொருள்கள் முதற்பொருள்கள் :

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவு இல் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு, அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன, என முப்பாலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் தன் உரையினைத் தொடங்குகிறார். அதாவது, உறுதிப் பொருள் கள் என்பன மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்; மக்கள் அடையவேண்டியவை; மக்கள் மேற்கொள்ள வேண்டி யவை; மக்கள் பின்பற்ற வேண்டியவை ஆகும். இவற்றை முதற்பொருள் எனவும், ஊதியம் எனவும், பண்டைக்காலத் தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டனர். ஊதியம் என்பதும் அறம் பொருள் இன்பங்களை எனப் புறநானூற்றுப் பழைய ஆசிரியர் ஓரிடத்தில் விளக்குகிறார். (காண்க: புறநா. 28). இவற்றை ஆங்கிலத்தில்,‘Human Ideals’ or ‘Human Values’ or ‘Human Aims’ or Ends of  Life’.... எனக் குறிப்பிடுவர். மக்கள் வாழ்க்கைக்கு உறுதியாகின்ற காரணத் தினால் அவை உறுதிப்பொருள்கள் என வழங்கப்பட்டன. இவ்வுறுதிப் பொருள்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் சிந்தனையிலும், செயலிலும் இடம்பெற்று இயங்கியும் இயக்கியும் வந்துள்ளன. இவ்விந்திய மக்கள் சமயங்கள், தத்துவங்கள், கலைகள் ஆகியவற்றிலும் இவை பரக்க இடம் பெற்றன. இவை வடமொழியில் புருஷார்த் தங்கள் என வழங்கப்படும். புருடர்களுக்கு அர்த்தமாவது, மக்கட்செல்வம் என்பது இதன் பொருளாம்.

2. தமிழில் முதற்பொருள்கள் :

தமிழ் இலக்கிய இலக்கணத் தொடக்கக் கால முதற் கொண்டு இவை பற்றிய கருத்துக்கள் தமிழரிடையே காணப்படுகின்றன. தொல்காப்பியரின் பொருளதிகாரத்தில்,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த அய்ந்தினை மருங்கின்

(தொல். களவு. 1)

எனவும்,

அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய

மும்முதற் பொருட்கும் உரிய என்ப

(தொல். செய்யுள் 411)

எனவும் கூறப்படுகின்றது. தொல்காப்பியம் இவற்றை மும்முதற் பொருள்கள் எனப் பொருள் பொதிந்த தொடரால் குறிப்பிடுகின்றது. புறநானூறு :

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

அறத்து வழிபடூஉம் தோற்றம் போல (புறம். 31)

எனவும்,

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெரும நின் செல்வம் (புறம், 28)

எனவும் கூறுகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பெருங்கதை,

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும்

(4:7:140) எனக் குறிப்பிடுகின்றது.

இம்மூன்று உறுதிப்பொருள்களையே வள்ளுவரின் முப்பால் எனும் நூல் விளக்கி வரைகின்றது.

இவற்றைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலம் முதலானவை இம்மும் முதற் பொருள்களைப்பற்றி பேசுகின்றன. இடைக்காலத்துக்கு முந்திய நூல்கள் தேவாரங்கள், திவ்வியப் பிரபந்தங்கள், நன்னூல் முதலான இலக்கியங்கள் ஆகியவையும் இவை பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றன.

3. வடமொழியில் முதற்பொருள்கள் :

இங்ஙனமே ஏறத்தாழ கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதற் கொண்டே வடமொழிச் சாத்திரங்களும், இலக்கியங்களும் இம்மும்முதற் பொருள்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகின்றன. இக்காலத்திற்குரிய கல்ப சூத்திரங்கள், மனுஸ்மிருதி, கவுடலீ யம், வாத்சாயனம், மகாபாரதம், இராமாயணம், காளிதாசர் நூல்கள் ஆகியவை இவ்வுறுதிப்பொருள்களைப் பற்றியும் பேசுகின்றன. இவற்றிற்கு முன்னால் தோன்றிய வேதங் களிலும், பிராமணங்களிலும், உபநிடதங்களிலும் இவ்வுறுதிப் பொருள்கள் பற்றிய கருத்துக்கள் இல்லை. கி.பி.யின் தொடக் கத்திலிருந்தே புருஷாத்தங்களைப் பற்றிய கருத்துக்கள் வடமொழியில் பரவலாகப் பேசப்பட்டன.

4. யாருக்கு உரியன?

ஆதலால் இவ்வுறுதிப் பொருள்-முதற்பொருள்கள்-பற்றிய கருத்துக்கள் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா முழுவதிலும் தோன்றிய பலமொழி இலக்கியங்களில் இடம்பெற்று வந்துள்ளமை தெளிவாகிறது. வடமொழி, தென்மொழி மரபுகளில் தொடக்கக் கால முதலே இக்கருத்துக்கள் இடம் பெற்றதால் இக்கருத்துக்களை வட மொழிக்குரியனவா? (அல்லது) தமிழ் மொழிக்குரியனவா? (அல்லது) ஆரியர்க்குரியனவா? (அல்லது) தமிழர்க்குரிய னவா? என வரையறுத்தல் கடினமாக உள்ளது. இக்கருத் துக்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவாக உரிய கருத்துக்கள் எனக் குறிப்பிடலாம் போலும். இக்கருத்துக் களைப் போன்றே ஆன்மாவைப் பற்றிய கருத்துக்களும், பல்பிறப்புக்களைப் பற்றிய கருத்துக்களும், கர்மா பற்றிய கருத்துக்களும் இந்திய மக்கள் அனைவர்க்கும் உரிய கருத் துக்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவர்கள் இவற்றை ‘National Stock’ எனக் குறிப்பிடுவர். (மாக்சு மூலர், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் முதலானோர் இவர்கள்.)

5. மும்முதற்பொருளின் காலம் :

தென்மொழி மரபும், வடமொழி மரபும் தம் தொடக் கக் காலத்தில் முப்பால் பற்றியே பேசுகின்றன. தமிழ் மரபு மும்முதற்பொருள் எனப் பேசுவது முன்னர் சுட்டிக் காட்டப்பட்டது. வடமொழியில் இது 'திரிவர்க்கம்' எனப் படுகிறது. தமிழ்மொழியில் இம்முப்பால் மரபினைத் தொல்காப்பியம், சங்கத்தொகை நூல்கள், இரட்டைக் காப்பியங்கள், பெருங்கதை ஆகியவற்றின் காலம் வரை யில் காணமுடிகிறது. வடமொழியில் கல்ப சாத்திரங்கள், மகாபாரதம், இராமாயணம், மனுஸ்மிருதி, கௌடல்யம், வாத்சாயனம், காளிதாசர் நூல்கள் ஆகியவற்றில் இம் முப்பால் மரபினையே காண முடிகிறது. ஒவ்வொரு மொழி மரபிலும் இக்காலம், தொடக்க முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை எனக் கொள்ளலாம்.

6. நாற்பால் மரபு தோன்றல் :

இக்காலத்திற்குப் பின்னர்த் தமிழில் தோன்றிய சமய இலக்கியங்களான தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான வற்றில் நாற்பால்மரபு பேசப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண் டினராகிய திருமங்கையாழ்வார்,

"......... ............. ........... ............ ............. ................. .............. அம்மறைதான்

மன்னும் அறப்பொரு ளின்பம்வீடு என்றுலகில்

நன்னெறி மேம்பட்டன நான் கன்றே

எனவும், ஏறத்தாழ அவர் காலத்தவராகிய மாணிக்கவாசகர்,

அருந்தவர்க்கு ஆழின்கீழ் அறம்முதலா நான்கினையும்

இருந்தவருக்கு அருளுவது

எனவும், கி.பி. 7 - ஆம் நூற்றினராகிய திருஞான சம்பந்தர்,

அழிந்தசிந்தை அந்தணாளர்க்கு அறம்பொருள் இன்பம்வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி...."

எனவும் நாற்பால் பற்றிப் பேசுதல் காணலாம்.

அதாவது, இந்தக் காலம்தொட்டு நாற்பால் மரபு. கல்வியின் பயனும் பண்புமாக அமைந்துவிட்டது. 12 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த் தண்டி ஆசிரியர், நாற் பொருள் பயக்கும் நடைநெறித்து ஆகி எனவும், நன்னூல் ஆசிரியர் அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயன் எனவும் குறிப்பிடும் நிலை தோன்றியது.

- வியாழக்கிழமை (24.10.2019) தொடரும்

- விடுதலை நாளேடு, 22.10.19

நமது பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை பேராசிரியர் தி.வை.சொக்கப்பா உரை - 18

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், தி. வை. சொக்கப்பா உரை வருமாறு.

15.10.2019 அன்றைய தொடர்ச்சி...

குமுகாயம்

தமிழகத்திற்கு வந்த ஆரிய மக்கள் சிறுபான்மையரெனினும் அவர்கள் தமிழர்களின் சமயத்துறையில் தோற்றுவித்த மயக்கமும் மாற்றமும் அவற்றால் ஏற்பட்ட தமிழரின் தாழ்வும் அவர்களின் சாதனையாகும். நமக்கு வேதனை தருவதாகும். தமிழ் மன்னர்களின் பேதைமை, மதப்பித்து, கொடைமடம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் பூதேவரென்றும், தங்கள் மொழி தேவமொழியெ னவும் சொல்லித் தங்கள் வலக்காரத்தாலும், வெண்ணி றத்தாலும் அவர்களை ஏமாற்றிவிட்டார்கள். அவர்களிடம் குருமார் (புரோகிதர்)களாகவும் அமைச்சர்களாகவும் அமர்ந் தனர். தங்களை மதித்த தமிழ் மன்னர்களைச் சத்திரியராக்கி வேள்விகளைச் செய்தால் மழை பெய்யும். அதனால் நாடுசெழிக்கும், குடிகள் நலம் பெறுவர், போரில் அரசருக்கு வெற்றிகிட்டும் என்றெல்லாம் நம்பிக்கையூட்டி மூவேந் தரையும் கொலை வேள்வியை மேற்கொள்ளச் செய்தனர். பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யானை செல்கெழுகுட்டுவன் போன் றோர் வேள்வி வழிபாட்டிற்கு பலியானவர்களில் சிலராவர். இவ்வழிபாட்டைத் திருவள்ளுவர் ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செருத்து உண்ணாமை நன்று எனக் கண்டித்தும் பேதைமையில் மூழ்கிவிட்ட வேந்தர்கள் தெளிவுபெறவில்லை. மூவேந்தரைப் பின்பற்றிய மக்களும் மடமையில் ஆழ்ந்தனர். இப்போது யாகங்கள் பெருமளவு வழக்கற்றுப் போயினும் தீ வளர்த்து எரியோம்பல் எனும் ஆரிய வழக்கு தமிழனுக்காயிற்று. சத்திரியர் ஆக ஆக்கப்பட்ட மன்னர்கள் வர்மன் என்ற பெயர் ஈற்றினைப் பெருமையாக ஏற்றனர். (மாறவர்மன்) தங்கள் கல்வெட்டு களை சமற்கிருதத்திலும், பின்னர் சமற்கிருதம் கலந்த தமிழி லும் எழுதச் செய்தார்கள். தமிழ் வணிகர் வைசியராகிப் பூணூல் அணியத் தொடங்கினார்கள். குப்தன் என்ற பெய ரீற்றையும் கொண்டனர். வேளாளர்களைச் சூத்திரராக்கி அடிமைப்படுத்தினார்கள்.

பழங்காலத்தில் மக்களைத் தொழில் வகையில் அந்த ணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்திருந்த பாகு பாட்டை மாற்றி நிறவேறுபாடு, பிறப்பு அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வர்ணங் களாக்கினார்கள். அப்பிரிவுகளுக்குத் தனித்தனியே தொழி லும், ஆசாரமும் கற்பித்து அவைமுறையே ஒன்றினுக்கு ஒன்று தாழ்ந்தவை எனவுமாக்கி இவ்வேறுபாடு இறைவன் படைப்பென நம்பச் செய்து இச்சாதிக் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டனர் பிராமணர்கள். இந்த குமுகாய அமைப்பில் தமிழர்கள் நிரந்தரமாய்த் தாழ்த்தப்பட்டார்கள். எத்தகைய கல்விச் சிறப்புப் பெற்றிருந்தாலும், குணக்குன் றானாலும், பட்டம் பதவி வகிக்கினும் சூத்திரர், மற்ற மூவர்ணத்தாருக்கு குற்றேவல் செய்யப் பிறந்தவர்களே.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்து வந்த மக்களைப் பல குலங்களாக்கி, பாழ்செய்யும் உட்பகையைப் புகுத்தி அவர்களைச் சின்னாபின்னப்படுத்தித் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டினர். இவ்வாறு ஏமாளி மக்கள் மீது ஏற்றங்கண்ட பிராமணர் கல்வித்துறையை தமக்கே உரியதாக்கிக் கொண்டு ஏனையரோடு கலந்து வாழாது தனித்தெருவில் வாழ்ந்து, இறப்பவருக்குத் தனிச் சுடலையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். பிராமணரல்லாதாரை அசுரர் எனக் குறிப்பிட்டனர். கொல்லேற டக்கல் முதலிய மறவினை செய்து மணத்தலை அசுர மணமாக்கினர். பாட்டியல் இலக்கணத்தில் பிராமணரைப்பாட வெண்பா, வேளாளரைப் பாட வஞ்சிப்பா எனவும் வகுத்தனர். பாட்டெழுதும் ஓலை நறுக்கின் அளவு பிராமணருக்கு 24 விரல், வேளாளர்க்கு அதில் பாதியென வரையறுத்திருந்தனர். எழுத்துகட்கும் பாக்கட்கும் தெய்வமும் குலமும் வகுக்கப்பட்டன. பிராம ணரை வணங்குமாறு காரிகிழார் வேண்டினார். தமிழரின் பொருளைப் பறிக்க பதினாறு தானங்கள் வகுக்கப்பட்டன.

ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து  (புறம்-367)

என்ற அவ்வையார் பாடலைக் காணலாம். திருத்தொண் டர்த்தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் எனப் பாடியுள்ளது மேற்கூறியவற்றை வலியுறுத்துகிறது.

பிறவிக் குலப் பிரிவினைத் திட்டம் இழிவான காரியங் களை ஒரு சாராருக்கு ஒதுக்கி அவற்றைச் செய்ததாலேயே தீண்டாதவர்களாக்கப் பட்டனர். அவர்களை ஊரின் புறத்தே வாழச் செய்ததன் பயனாய்த் தீண்டாமை, அணுகாமை, பாராமை வளர்ந்து மக்களினத்திற்கே மாசு ஏற்பட்டது.

நாவலம் பொழிலாக விளங்கிய நம் நாட்டிற்கு சம்புத் தீவம், பரதகண்டம், பாரத தேசம் என்றெல்லாம் பெயரிட் டனர். சேரநாடு பரசுராம சேத்திரமாயிற்று. குமரிநாடே இல்லை எனக்கூறி அந்நாடே மறைக்கப்பட்டது. அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றாசிரியன் கிருட்டிணை, காவேரி, வைகையாற்று வெளிகளிலிருந்து நாட்டு வரலாற் றைத் தொடங்காமல் கங்கைச் சமவெளியில் வேதகால ஆரிய வருகையிலிருந்து தொடங்கியதால் வரலாற்றேடுகள் இன்றளவில் திராவிடருக்கு உரிய இடம் அளிக்காமலேயே அமைந்துள்ளன. இந்திய வரலாற்றாசிரியனுக்குத் தன் னாட்டுப் பாவினின்று அயலார் ஊமையை எளிதில் பிரித்து எடுக்க இயலாதவாறு ஆரியம் மிக நன்றாய் வேரூன்றிவிட்டதெனப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அங்கலாய்க் கிறார்.

சமயம்

இலிங்க வணக்கம் செய்து வந்த திராவிடரை சிசினதேவர் (ஆண்குறியை வழிபடுவோர்) என இழித்தும் பழித்தும் வந்த ஆரியர்கள் தாங்கள் வணங்கி வந்த சிறு தெய்வங் களாகிய இயற்கைக் கடவுள்களை விடுத்து தமிழர் தெய்வங் களை ஏற்று வழிபடத் தொடங்கியதன் வாயிலாக அவர் களிடம் நல்லெண்ணத்தைப் பெற்று சமயத்துறையில் தாங்கள் விரும்பிய மாற்றங்களையெல்லாம் செய்து தங்களாதிக்கத்தை என்றுமே அசைக்க முடியாதவாறு நிலைபெறச் செய்து கொண்டார்கள். தமிழர் தெய்வங்களுக்கு வடமொழிப் பெயர்களிட்டு ஆரியத் தெய்வங்களாக்கிக் கொண்டனர். முத்தொழிலுக்கும் (படைத்தல், காத்தல், அழித் தல்) உரிய முழு முதற் கடவுளாகிய சிவனுக்கு கடைத் தொழிலைத் தந்து, பிரமனைப் படைத்து படைப்புத் தெய்வ மாக்கி திருமாலுக்குக் காக்கும் தொழிலை ஈந்து பிரமன், திருமால், சிவன் என்ற முத்திருமேனிகளைப் படைத்தார்கள். தமிழர்கள் பிரமனை ஏற்காததால் அத்தெய்வத்திற்குக் கோவிலும் கும்பிடும் இல்லாது போயிற்று திருமாலைக் குறிக்கும் விண்டு எனும் தென் சொல் விஷ்ணு என்ற வட சொல்லாய் மாறிற்று. முல்லை நிலத்து முகில் தெய்வமாகிய மாயோனே திருமாலாகும். சிவன், சங்கரன் என்றும், குறிஞ்சித் தெய்வமாகிய முருகன், பிராமணருக்கு நல்லவன் எனப் பொருள் தரும் சுப்பிரமணியன் என்றும் பெயரிடப்பட்டனர். தமிழ்த் தெய்வமாகிய காளியை ஆரியத் தெய்வமாய்க்காட்ட துர்க்கை, மகிடாசுரமர்த்தனி நிகம்பசூதனி எனப் பலப்பட பெயரிட்டு அதற்கேற்ப கதைகளையும் புனைந்தனர். அத்தகைய கதைகளே முப்பத்தாறு புராணங்களாகும். கந்த புராணத்திலில்லாத புளுகு எந்த புராணத்திலும் இல்லை என்ற பழமொழியே புராணங்களின் பொய்மையை விளக் கும். தசாவதாரக் கதைகள் திருமாலுக்குப் பல வடிவங்கள் தந்து பல்லாற்றல்களையும் கற்பித்தன. நஞ்சுண்டகதை, தாரூக வனக்கதைகளால் சிந்துவெளிக் கடவுளாக இருந்த சிவன் வேத ஆரியக் கடவுளானான். கறைமிடற்றோன், மாதொரு பாகன், தாயுமானவன், கயற்கண்ணி, பெருமாள் என்ற தமிழ்த் தொடர்கள் முறையே நீலகண்டன், அர்த்த நாரீசுவரன், மாதுருபூதம், மீனாட்சி, மகாவிஷ்ணு ஆயின. திருத்தலங்களும் சமற்கிருதப் பெயர்கள் பெற்றன. அண்ணாமலை, சிற்றம்பலம், திருவானைக்கா, கழுக்குன்றம், மறைக்காடு, முதுகுன்றம் ஆகியவை முறையே அருணா சலம், சிதம்பரம், சும்புகேசுவரம், பட்சி தீர்த்தம், வேதாரண் யம், விருத்தாசலம் என்று பெயர் மாற்றம் பெற்றன.

புராணக்கதைகளை நாடு முழுவதும் நாள்தோறும் மக் களிடையில் பரப்பி வந்தனர். வருகின்றனர். அக்கதைகளைக் கேட்பதே நல்வினையாய்க் கருதப்பட்டு பாமரரும் படித்த வரும் பகுத்தறிவை இழந்தனர்.

ஆரிய மதக்கொள்கைகளும் தமிழரின் சமயக் கருத்துக் களும் இணைந்த ஒன்றே இந்துமதமாகும். ஆதிசங்கரர் காலம் வரையில் ஆதியில் ஆரியமதம் வேதமதம் என்றும், பிறகு பிராமண மதமென்றும் வழங்கிவந்தன. அதன் பிறகே அது இந்து மதமாயிற்று. சிந்து ஆற்றின் பெயர் பாரசீகமொழியில் இந்துவாகத் திரிந்து அதுவே மக்களுக்கும் மதத்திற்கும் நாட்டுக்குமாயிற்று. தமிழர்கள் இந்துக்கள் ஆகியவுடன் பிறவி அடிப்படையில் வளர்ந்து வந்திருந்த நால்வர்ணக் கொள்கைப்படி பிராமணர்கள் உயர்த்தப்பட்டுத் தமிழர்கள் தாழ்த்தப்பட்டார்கள். அதன் பயனாகப் பிராமணர் கோவில் வழிபாடு செய்யும் தகுதிபெற்றனர். அத்தகுதியைத் தமிழர்கள் இழந்ததோடு கோவிலில் தெய்வங்களை நெருங்கவும் முடியாது போயிற்று. வழிபாட்டு மொழித் தகுதியைச் சமற்கிருதம் பெற்றதனால் தமிழ் தகுதியற்றுவிட்டது. இறை வழிபாட்டோடு, மற்ற மதச் சடங்குகளும் திருமணங்களும் பிராமணர்களே நடத்தி வைக்கும் உரிமை பெற்றனர். கோயில் நுழைவே பலருக்கு மறுக்கப்பட்டது. சைவ சமயம் மிகப் பழமையானது என சிந்துவெளி தாயித்துக்களை ஆராய்ந்த சர். ஜான் மார்ஷல் கருதினார். சிந்துவெளி மக்கள் லிங்க-யோனி வணக்கத் தையும் சிவவழிபாட்டையும் பின்பற்றினார்கள். யோகக் குறியாகக் கருதப்பட்ட சுவஸ்திகர்க்குறி சிவதாயித்துக்களில் காணப்படுகிறது. தமிழரின் அய்ந்தெழுத்து சிவபோற்றியே. தென்னாட்டுடைய சிவனே போற்றி என மாணிக்கவாசகர் திருவாசகப் போற்றித் திருவகவலில் வழுத்துகிறார். அவ் வைத்தெழுத்து சிவாய நம என்ற பஞ்சாட்சரமாக்கப்பட்டது கோவில் வழிபாட்டிலிருந்து தமிழரை விலக்க வடமொழி சிவாகமங்களை ஆக்கிக்கொண்டார்கள். தமிழர் சமயக் கருத்துக்களை விவரிக்கும் சைவ சித்தாந்த தத்துவங்களை நானே கடவுள் என்னும் வேதாந்தக் கொள்கைகளால் திரும்பியும் பார்க்காமல் செய்துவிட்டார்கள்.

நாட்டுப்பெயரையும், தெய்வங்களின் பெயர்களையும் நம்முடைய பல்துறை கருத்துக்களையும், நூல்கள், கலைகள் யாவற்றையும் சமற்கிருதச் சொற்களால் மறைத்தும் மாற்றி யும் நமது பண்பாட்டை ஆரிய மயமாக்கி தங்களுடைய தாக்கிக் கொண்டு, நம்மையும் உலகினையும் நம்பவைத்து விட்டார்கள். இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லாமிழந்தும், விழிப்பூட்டப் பெற்றும், விழித்தெழ மாட்டாமல் மடமையிலாழ்ந்தும் கிடக்கிறோம்.

- விடுதலை நாளேடு, 17.10.19

நமது பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், தி. வை. சொக்கப்பா உரை வருமாறு.

ஓர் இனத்தின் உயிர்மை அதன் பண்பாட்டினால் புலனா கிறது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத் தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது. மொழியால் இலக்கியமும், இலக்கிய வாயிலாகப் பண்பாடும், பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது, வளருகிறது, வேற்று மொழிக் கலப்பால், மற்ற மொழியை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்ட ஆதிக்கத்தால், அம்மொழி சிதைந்து தேய்ந்து, அதனால் அவ்விலக்கியம் மறைந்து, மறைக்கப் பட்டு, இலக்கியத்தின் வெளிப்பாடாகிய பண்பாடு குலைந்து, பண்பாட்டினை வளர்த்த இனம் மங்கிப் போகிறது. மூவாயிரமாண்டுகளுக்கு முன் இத்தகைய நிலை தமிழினத்திற்கும் பண்பாட்டிற்கும் உருவாகி ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்போம்.

கி.மு. ஆயிரத்து அய்நூறு ஆண்டளவில் காந்தார நாட்டிலிருந்து கைபர் கணவாய் வழியாக வந்து நம் நாட்டில் புகுந்த ஆரிய இனம் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தோடு போராடி அவர்களின் சிறந்த நாகரிக (சிந்துவெளி நாகரிக) வாழ்வை அழித்து பல பகுதிகளில் குடியேறிற்று. பேரினமாயிருந்த திராவிடர்களைக் கொன்று வெற்றி காண்பது எளிதானதல்லவெனக் கண்டு அவர்களோடு உறவாடி அடிமைப்படுத்தி ஆளமுற்பட்டது.

ஆரியரும் எழுத்துக் கலையும்

வேதங்களை இயற்றியவர்களுக்கு எழுத்துக் கலை தெரிந்திருந்தது என்பதற்கான சான்றோ ஆதாரமோ இல்லை என்று நாகரிக வரலாற்றின் ஆசிரியர் வில் டு ராண்டும், ஆரியர்கள் நாகரிக உலகோடு தொடர்பு கொள்வ தற்கு முன்பாக எழுத்துக் கலை அறியாதவர்கள் என உலக வரலாற்று ஆசிரியர் எச்.ஜி. வெல்சும் எழுதியுள்ளார்கள். பல்வேறு நாடுகளில் பரவிய ஆரியர்கள் அவர்கள் குடி யேறிய நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்களின் எழுத்துக் களையே பயன்படுத்தித் தங்கள் நெடுங்கணக்கை அமைத் துக் கொண்டார்கள் என அறியக் கிடக்கிறது. அநாசாஸ் எனத் தங்களால் எள்ளி நகையாடப்பட்ட திராவிடர்களின் எழுத்துக்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே தங்கள் எழுத்துக்களை அமைத்துக் கொண்டார்கள் என்று ஹீராஸ் பாதிரியார் கூறுகிறார். ஆரியர்களின் வேதங்கள் சுருதியாக எழுதாக்கிளவியாக இருந்து தலைமுறை தலை முறையாக செவி வழியாகவே நெடுங்காலம் நிலவி வந்த தற்கு அவர்கள் எழுதும் முறையை அறியாமையே காரணம் ஆகும். ஆரியருடைய முதனூலாகிய ரிக்கு வேதத்தில் பல தமிழ்ச் சொற்கள்-அணு, இராத்திரி, கணம், பழம், பூசனை போன்றவை-ஆளப்பட்டுள்ளன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உணவு உற்பத்திக்காக ஏர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்கொள்வது பாவம் என மனுநீதி மூலம் ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை அத்தொழி லில் ஈடுபடுத்தி ஏற்றம் கொண்டனர்; ஆக்கம் பெற்றனர். வேதமொழியும் வடநாட்டில் நிலவிய பிராகிருதமும் கலந்து உருவான சமற்கிருதக் கலவை மொழியைத் திராவிடர்கள் கற்க வேண்டியதாயிற்று. இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதனையே திராவிடர் மொழியில் ஆரிய மயமாக்கப்பட்டனர் எனக் குறிப்பிடுகிறார்.

அகத்தியரும் தமிழும்

ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க, ஆரிய முனிவரா கிய அகத்தியர் பொதியமலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும் இலக்கணமும் வகுத்தார் என்ற கதையைப் புனைந்து, தமிழர்களை இன்றளவில் நம்ப வைத்துள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப் பேயாகும். பல்வேறு காலங்களில்-நீண்ட இடைக்காலத்திற் கிடையில் - அவ்வையார் வாழ்ந்து பாடியதாக இலக்கியத்தில் காட்டப்படுவதுபோல், அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறு நாடுகளில் செயற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்கக்கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள் முச்சங்க வரலாறு-அவைகளின் காலக்குறிப்பு, புலவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்குமிடத்து-அறிவுக்குப் பொருந்தாது, உண்மைக்குப் புறம்பானது என்று மாற்றார் அறையும்போது அலமந்து போகிறார்கள்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மைச் சிறப்பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமி எழுத்தினின்றும் கிரந்த எழுத்தினின்றும் தோன்றியதென்றும் சாதித்தனர். தமிழ் நெடுங்கணக்கு பழைமையானது

சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்துக்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது பேராசிரியர் லாங்டன், டாக்டர் ஹண்டர், சர். அலெக்சாண்டர் ஆகியோரின் முடிபாகும். தமிழ்நாட்டுக் குகை எழுத்துக்களுக்கும் பிராமி எழுத்துகட்கும் நெருங்கிய தொடர்பைக் காணலாம். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் காலம் கி.மு. அய்ந்நூற்றுக்கு முந்தியது எனத் திட்டவட்டமாய் நிறுவி கி.மு. எழுநூறு என்று சொல்வதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் தந்துள்ளார்கள். அத்தகைய அரிய இலக்கியம் தோன்றுவ தற்குமுன் எத்தனையெத்தனை நூல்கள் இருந்திருக்க வேண்டும், அவற்றிற்கு எவ்வளவு காலத்திற்கு முன்பாகத் தமிழ் நெடுங்கணக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்திக்க மறுக்கலாமா?

தமிழ் இலக்கியம் ஆரிய மயமானது

தமிழர்களின் மறைநூல், மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக்கொண்டு, மூலநூல்களை அழித்துவிட்டு வடமொழியினின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தனபோலக் காட்டினார்கள் பிராமணர்கள் எனத் தாம் எழுதிய தமிழ் வரலாறு என்ற நூலில் (பக். 29-33) பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாரா யண சாஸ்திரியார்) எழுதுகிறார். தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில் பெயர்க்கப்பட்ட பின் அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின என்று தமிழர் வரலாறு என்ற தம் நூலில் ஞா.தேவநேயப் பாவாணர் விரிவாக விளக்கியுள்ளார்கள். இவ்வழிப்புப் பணியால் இந்திய நாகரிகம் பெருமளவு ஆரியருடையது எனவும், அதன் சிறு கூறே திராவிடரது என்றும் கருதுமாறு செய்யப்பட்டுவிட்டது. அகத்தியத்தை தமிழ் முதனூல் என்றனர். தொல்காப்பியத்தில் வேண்டாத சமற்கிருதச் சொற்களையும் ஆரியக் கருத்துக்களையும் புகுத்தினார்கள். திருவள்ளுவரைச் சீவல்லபர் என்ற ஆரியராக்கியத்தோடு, திருக்குறளின் அறத்துப்பால் வடமொழி தர்மசாத்திரத்தையும், பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும், காமத்துப்பால் காம சூத்திரத்தையும் தழுவின எனக் கூறவும் தலைப்பட்டனர். திருக்குறளுக்கு உரைவகுத்த தூய தமிழ்ப்பெயர் தாங்கிய பரிமேலழகர் தம்முடைய உரையில் ஆரியக் கருத்துக்களை வலிந்து புகுத்தித் தமிழர் கருத்துக்களை மறைத்துள்ளார்.

தமிழ் இலக்கிய மறைப்பு இடைக்காலத்திலும் தொடர்ந் தது. பெரிய புராணம் உபமன்யு பக்த விலாசத்தையும் திருவிளையாடல் புராணம் ஆலாசிய மான்மியத்தையும், சிவஞானபோதம் ரௌரவாகமத்தின் இறுதிப் பகுதியையும் முதனூலாய்க் கொண்ட வழிநூல்கள் என்றார்கள். மூவர் தேவாரப் பதிகங்களை தில்லையம்பலத்தில் மறைத்து சிதல் அரிக்கவிட்டார்கள் (திருமுறைகண்ட புராணத்தைக் காண்க) தமிழ் கருத்துக்களை சமற்கிருதச் சொற்களால் மூடிமறைத்து அவற்றைத் தங்களுடையதாகக் காட்டிக் கொள்ளவும் துணிந்து இறங்கினார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்பவை முறையே தர்மார்த்த காமமோட்சம் என்றதன் மொழிபெயர்ப்பு எனவும் முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதின் சொல்லாக்கமே எனவும் கூறினர். தமிழரின் அய்ந்தெழுத்து பஞ்சாட்சரமாயின. வெகுளி, மயக்கம், காமம் என்ற மும்மாசுகள் ஆணவம், மாயை, காமியம் எனக் குறிப்பிடப்பட்டன. மேலெழுந்த வகையாய்ப் பார்த்தால் சொல் மாற்றச் சூழ்ச்சி தெரியவராது. கருத்துக்கள் சொல்லால் விளக்கம் பெறுகின்றன. சொல்லில்லையேல் கருத்துமில்லையாகிறது. சொல்லால் மறைக்கப்பட்ட கருத்தின் சொந்தக்காரர் சொல்லுக்குரியவராகி விடுகிறார். வடமொழி இலக்கணத்தை வலிந்தும் நலிந்தும் தமிழுக்குப் பொருத்தி வீரசோழியம், பிரயோக விவேகம் முதலிய நூல்கள் எழுதப்பட்டன. தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இருபத்தாறு செய்யுளுறுப்புகள் ஆறாகக் குறைந்தன. சமற்கிருத ஆதிக்கத்தால் தென்னாடெங்கும் நிலவிய தமிழ்மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் முளைத்தெழுந்தன. வடமொழிக் கலப்பால் தமிழும் சமற் கிருதமும் சரிக்குச் சரி கலந்த மணிப்பவழ நடை இடைக் காலத்தில் வழங்கிற்று. சமற்கிருத ஊடுருவலால் நூற்றுக் கணக்கான தமிழ்ச் சொற்கள் வழக்கற்றுப் போயின. பா-கவிதை யாயிற்று; பாட்டு காதையாயிற்று. கழுவாய் (பிராயச் சித்தம்) சுடலை (மயானம்), திருச்சுற்று (பிராகாரம்), திரையல் (பீடா), பலகணி (சன்னல்), வலக்காரம் (தந்திரம்), முதுசெம் (பிதிரார்ஜிதம்), கூற்றுவன் (யமன்) முதலிய சொற்கள் (கவிப்புக் கோட்டிற்குள் இருக்கும் சமற்கிருதச் சொற்கள் நம்முடையதாகவும்) ஆதரிப்பாரின்றி அநாதையாகி விட்டன. சோறு, மிளகுநீர் போன்ற சில சொற்கள் இழிந்தன வாகக் கருதப்பட்டு உயர் மட்டத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்பட்டு விட்டன. (தேவநேயன் அவர்கள் தமிழ் வரலாற்றில் விரிவாய்க் காணலாம்).

கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவிலேயே தமிழ் பழிக்கப் பட்டது என்பதற்குச் சான்று வேண்டுமெனில் ஆரியநன்று, தமிழ்தீது எனக்குயக் கொண்டான் கூறியதை நக்கீரர் அங்கதம் பாடிக் கண்டித்துள்ளதை நினைவு கூரலாம். சமற்கிருதத்திற்கு முந்திய பழைமை உடைய தமிழைச் சமற்கிருதத்தோடு ஒத்த காலத்தது ஒத்த  பெருமையுடையது என்றாவது காட்டவேண்டுமென்பதற்காக சிவஞான முனி வர் எவ்வளவு முயன்றுள்ளார் என்பதை அவர் பாட் டொன்றால் அறியலாம்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளியதற்கு இணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேற்றம் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல் லேற்றுப் பாகர்... இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்

கலை

கலைத் துறையிலும் தங்கள் முன்னமையையும் முதன் மையையும் நிலைநாட்ட இசை, நாடகம், கணியம், மருத்து வம் முதலிய கலை, அறிவியல் இலக்கியமெல்லாம் சமற் கிருத மொழியில் பெயர்த்துக்கொண்டு, தமிழ் முதனூல் களையெல்லாம் அழித்துவிட்டனர். தமிழிசையைக் கருநாடக சங்கீதமென்றும் தமிழ் நடனத்தை பரதநாட்டியம் என்றும் கூறினர். நாடகத் தமிழ் நூலாகிய பரதம் என அடியார்க்கு நல்லார் குறித்துள்ளதைக்காணில் தமிழ் பரத நூல் மூலநூல் என்பது வெள்ளிடைமலை, தமிழ்ப் பண்களை மறைத்து இராகங்களெல்லாம் சமற்கிருதப் பெயர்களால் மக்களிடையில் வழங்குகின்றன. இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் இடம்பெற ஓர் இயக்கம் தேவைப்பட்டது. சித்தர் களின் மருத்துவத்தையும் மூலிகைகளையும் தமிழகத்திலிருந்து ஓட்டியேவிட்டார்கள்.

சங்ககாலத்தில் தமிழர்கள் நாளுக்குக்கும் (Star) கோளுக்கும் (Planet) வேறுபாடு அறிந்திருந்தார்கள், காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை என ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பிரித்திருந்தார்கள்.  சூரிய உதய, மறைவுக் காலங்கள் திங்கள்தோறும் மாறுபடுவதால் ஒரு நண்பகலிலிருந்து அடுத்த நண்பகல் வரை ஒருநாள் எனக் கணக்கிட்டனர். (பழந்தமிழ் நூல்களாகிய நற்றிணை யில் அரையிருள் நடுநாள், அகநானூற்றில் பானாட்கங்குலும் பகலும் என்றெல்லாம் பாடப்பட்டுள்ளன). தைத்திங்களிலி ருந்து ஆண்டுப் பிறப்பினைக் கொண்டாடினார்கள். (சித்தி ரையிலிருந்து அன்று) பிரபல - அட்சய என்ற முற்றிலும் சமஸ்கிருதத்திலான அறுபதாண்டு வட்டத்தைப் புகுத்தி ஒரு தொடராண்டுக் கணக்கில்லாமல் செய்துவிட்டனர். திங்களை மாதமெனவும், ஆண்டினை வருஷம் என்றும், காரிக்கிழமையை சனிக்கிழமையென்றும், கிழமையை வாரம் எனவும் பெயரிட்டார்கள்.

- வியாழக்கிழமை தொடரும்

- விடுதலை நாளேடு, 15.10.19

சனி, 26 அக்டோபர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

 நேயன்

அடுத்த 10ஆவது குற்றச்சாட்டும் தலித் சார்ந்ததாக இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து உரிய பதிலைத் தர விரும்புகிறோம்.

10.          தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஈ.வெ.ரா. இருந்ததில்லை.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?

1.            ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்ல முடியாது.

2.            ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.

3.            தங்க நகைகள் அணியக் கூடாது.

4.            மண்குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.

5.            ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6.            அடிமையாக இருக்க வேண்டும்.

7.            சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

8.            திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

9.            பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

10.          குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது.

11.          வண்டி ஏறிச் செல்லக் கூடாது.

12.          பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

13.          சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.

14.          பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.

15.          மேல் அங்கியோ, துண்டு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது.

16.          பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

17.          நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.

பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதி வைத்தனர்.

தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்று தலைப்பில் 24.11.1929 “குடிஅரசில்” எழுதினார்.

அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதினார்.

ஆதிதிராவிடர், தீயர், தீண்டாமை விலக்க மாநாடுகளை பெரியார் நடத்தினார்.

21.7.1929இல் சென்னையிலும், 25.8.1929இல் இராமநாதபுரத்திலும், 10.6.1930இல் திருநெல்வேலியிலும், 16.5.1931இல் சேலத்திலும், 7.6.1931இல் லால்குடியிலும், 5.7.1931இல் கோவையிலும், 4.7.1931இல் தஞ்சையிலும், 7.12.1931இல் கோவையிலும், 7.2.1932இல் லால்குடியிலும், 28.8.1932இல் அருப்புக்கோட்டையிலும், 7.8.1933இல் சென்னையிலும், 1.7.1938இல் சீர்காழியிலும், 7.3.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.5.1936இல் கொச்சியிலும், 2.9.1936இல் சேலத்திலும், 6.5.1937இல் சிதம்பரத்திலும், 4.7.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டனத் தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.

மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்ப்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.

ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும்  பழங்குடி மக்களும் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 9.2.1982இல் ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’, தலித்திய ஏடுகள் போன்றவற்றைப் படியுங்கள்.

பெரியார் பேசுகிறார்: “நானோ, திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை; இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாகக் கருதவேண்டாம். ஆதிதிராவிடன் - திராவிடன் என்கிற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.

இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன்: திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதைச் செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்று வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்கிற உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர, தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்று மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர்.

நான் மிக எதிர்பார்த்திருந்தேன் _ அவரின் ஒத்துழைப்பை - இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால், எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ  அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாள்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்ற நான் அஞ்சுகிறேன்.

எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?

என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இருக்கும் இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு.

                                                                      (‘விடுதலை’ 8.7.1947)

                                                                                       (தொடரும்)

உண்மை இதழ், 16 -31. 10 .19

சனி, 19 அக்டோபர், 2019

ஜஸ்டிஸ் கட்சி வேலை திட்டம்

10.02.1935, குடிஅரசிலிருந்து...




ஈ.வெ.ரா. தீர்மானம்


வாசகங்களைப் பொருத்தவரை சில திருத்தங்களைச் செய்ததோடு அத்திட் டங்களை மூன்று தலைகளாகப் பிரித்து, அதாவது, பொருளியல், சமுதாய இயல், அரசியல் என்பதாகப் பிரித்து அவைகள் தனித்தனி தலைப்பின் கீழ் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது,

பொருளியல்


1.  விவசாயிகளைக் கடன் தொல் லையில் இருந்து விடுவிக்கவும், மேலால் கடனால் கஷ்டப்படாமலிருக்கும் ஆன காரியங்களை கடனுக்காக பூமியை கடன்காரர் கைப்பற்றா திருக்கச் செய் வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதையெல்லாம் செய்ய வேண்டும்.,

2.  அநியாய வட்டி லேவா தேவிக்காரர்களால் விவசாயிகளுக்குக் கஷ்டம் நேரிடாமல் இருக்கும்படி கோவாப்ரேட்டிவ் பாங்கிகளையும், லேண்ட் மார்ட்டி கேஜ் (பூமி அடமான) பாங்கிகளையும் விஸ்தரிக்க வேண்டும். இந்தப் பாங்கிகளின் நிர்வாகம் சர்க்கார் அதிகாரி களாலேயே நடைபெறச் செய்ய வேண்டும்.

3.  விவகாரங்களைக் குறைப்பதற் காக முக்கியமாய் சொத்துக்கள் விஷ யத்தில் சர்க்காரே தெளிவான ரிக் கார்டுகள் வைக்க வேண்டும். இப் பொழுது அமலில் இருந்து வரும் நிமித்திய மாத்திரம் எழுதி வைக் கப்பட்டது என்கின்ற வாதத்தை சர்க் கார் கோர்ட்டுகளில் இனி செல்லு படியற்றதாக்க வேண்டும்.

4.  விவசாயக்காரர்கள் விளைவின் பலனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர், மத்திய வியாபாரிகள் ஆகிய வர்களை விலக்குதல் செய்து விளை பொருள் சாமான்களை வாங்குபவர் களுடன் நேரில் கலந்து கொள்ளத்தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாக செய்ய வேண்டும்.

5.  பொது ஜனங்களுடைய உப யோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி, தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட் ரிசிட்டி முதலியவைகளை சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படி செய்ய வேண்டும்.

6 .  இன்ஷுரன்ஸ் விஷயத்தில் சர்க் கார் உத்தியோகஸ்தர்களுக்குச் சர்க்கார் செய்து கொடுத் திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபீசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும் படியாகச் செய்ய வேண்டும்.

சமுதாய இயல்


1.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் எல்லா மக்களுக்கும் படிப்பு ஏற்படும்படி செய்துவிட வேண்டும்.

2.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மதுபானம் ஒழியும்படி சட்ட மூல மாகவே செய்ய வேண்டும்.

3.  தீண்டாமைக்குச் சட்டத்தி லாவது, அரசியல் நிர்வாகத்திலாவது இடமே இருக்கக் கூடாது.

4.  பெண்களுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஆண்களைப் போலவே உத்தியோகமும், பிரதிநிதித்துவமும் வகிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

5.  தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதோடு அவர்களுடைய சவுகரியங்களைத் தாராளமாய் கவனித்து அவற்றிக்குக் குறையாத வரும்படி கிடைக்கும்படி நிர்ணயப்படுத்திவிட வேண்டும்.

அரசியல்


1.  உத்தியோகங்களில் நமது மாகா ணத்தில் உள்ள எல்லா வகுப்பார் களையும், அவர்களது எண்ணிக்கை யையும் கவனித்து தக்கபடி பிரதிநிதித்துவமும், உத்தியோகமும் கிடைக் கும்படி செய்ய வேண்டும்.

2. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டி யதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும், இந்திய பொருளாதார நிலைமையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்.

3.  வரிப்பளுவை மக்களுக்குச் சமபாகமாக பங்கீடுவதற்கு நில வரு மானத்தையும், பொருள் சம்பாதனை யையும் பொருத்து வரி விதிப்பதில் ஒரு படிப்படியான விகிதாச்சார முறையை அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட குறைந்த வரும்படி உள்ளவர்கள் விஷயத்தில் நிலவரியையும் ரொக்க வருமான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

4.  முனிசிபாலிட்டி, லோக்கல் போர்டு, கோவாப்ரேட்டிவ் முதலிய  ஸ்தாபனங்களுக்கு இன்னும் அதிகமான வேலைகளைச் செய்ய சந்தர்ப்பம்  அளிக்கப்பட வேண்டும். அதன் நிர்வா கங்கள் ஸ்டேட் உத்தியோகஸ்தர் களாலேயே நடைபெற வேண்டும்.

5.  இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக்கொள்கையை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இந்தப்படியான வாசகங்களால் திருத்தி அமைக்கப்பட்டு தோழர்கள், ஆர்.கே.ஷண்முகம், சவுந்தர பாண்டியன் முதலிய சுயமரியாதை இயக்கத்

தலைவர்களுடையவும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடை

யவும், சம்மதத்தைப் பெற்று கட்சித் திட்டமாய் ஒப்புக் கொள்ள சிபார்சு செய்து நிர்வாக சபைக்கு வைக்கப்பட்டு விட்டது.

- விடுதலை நாளேடு 12 10 19

திங்கள், 14 அக்டோபர், 2019

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!”



சீன தேசத்துச் சன்-யாட்-சன் சென் என்பவரைப்பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம். அவருடைய குருவான கன்பூசியஸ் என்னும் பேரறிஞருடன், பெரியார் இராமசாமி அவர்களை. ஒப்பிடலாம்.

-சீனப் பேராசிரியர் சி.எஸ்.ஸி. (1939)

இந்தியாவில் - இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதா யப் புரட்சி தமிழ் நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட்சியைச் செய்தவர் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேரா சிரியர்களின் கருத்தாகும்.

- அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி

(‘ஆனந்தவிகடன், 16.7.1972)

“Periyar, the prophet of the New Age ;
the socrates of South East Asia ;
Father of the social reform movement;
and arch enemy of ignorance ;
Superstitions, meaningless
customs and ba seless manners.”


- UNESCO 27-6-1970

தந்தை பெரியார் மலர் - 1988

இதழாக்கம்:-  நூலகர் கோவிந்தன்


-   விடுதலை ஞாயிறு மலர், 28 .9 .19

முதன் முதலில்! - கம்யூனிச அறிக்கை



மார்க்ஸ், ஏங்கல்சு அறிக்கையை முதன்முதலில் வெளியிட்டவர் தந்தை  பெரியார். முதல் இதழ் ‘குடிஅரசு’ (4.10.1931).

இது தந்தை பெரியார் பொதுவுடை மைப் பூமியான ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே என்பதுதான் அடிக்கோடிட்டுச் சுட்டிக் காட்டத் தகுந்ததாகும். (தந்தை பெரியார் ரஷ்யாவிற்கு புறப்பட்ட நாள் - 13.12.1931).

1927ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநாட்டிலேயே பொதுவுடைமைக் கருத்துகளைப் பேசியவர் பெரியார்.

விருதுநகர் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசினார்: “தோழர்களே! எனது அய்ரோப்பிய யாத்திரை யிலோ, குறிப்பாக ரஷ்ய யாத்திரையிலோ நான் கற்றுக் கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் எனக்குக் காணப்படவில்லை . ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும், அக்கொள்கைகளால்தான் உலக விடுதலையும், சாந்தியும் சமாதானமும் அடையக் கூடும் என்றும் தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு அய்ரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்கிற முறையில் சொல்லும் சேதியாகும்.”

(குடிஅரசு’ 12.3.1933)

பார்ப்பான் மேல் ஜாதி, பறையன் கீழ் ஜாதி என்பதற்கு எது ஆதாரமோ அதுதான் இந்த ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்கிற பழக்கத்திற்கும், நடப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்றது என்று அதே விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் இங்கு ஜாதி (Caste) தான் வர்க்கமாக (Class) இருந்து வருகிறது. அந்தவகையில் பார்க்கப்போனால் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியா தைத் தத்துவம்தான் இந்நாட்டுக்கான பொதுவுடைமையாக இருக்கிறது என்பது யதார்த்தமாகும்.

நாம் யாரை விரோதித்தாலும், யாரை நேசித்தாலும் நமது கருத்து ஒன்றேயாகும். அதாவது படித்தவர்கள் என்றும், பணக்காரர்கள் என்றும் அரசாங்கத்தார் என்றும் சொல்லிக் கொண்டு ஏழைகளின் இரத்தத்தை எவரும் உறிஞ்சக் கூடாது என்பதேயாகும் என்று எளிதிற் புரியும் படியான சமதர்மத்தைப் போதித்துள்ளார்.

“ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலையை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே என் கொள்கை” (‘குடிஅரசு’ 10.5.1936).

இதற்கு மேல் எங்கிருக்கிறது பொதுவுடைமைச் சீலம்?

தந்தை பெரியார் ருசியா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த பிறகு, குழந்தைகளுக்கு அவர் பெயர் சூட்டிய விதம் இருக்கிறதே - அதற்கு யாரும் முன்மாதிரி கிடையாது. குழந்தைகளுக்கு ரஷ்யா என்றும், லெனின் என்றும், ஸ்டாலின் என்றும் பெயர் சூட்டி இந்நாட்டு மக்களிடத்தில் அந்தப் பொதுவுடைமைச் சிந்தனைக்கான வாயிலைத் திறந்து விட்ட விதம் மிகவும் வித்தியாசமானது.

கம்யூனிஸ்டுகள் ஆண்ட கேரள மாநிலத்தில், மகரஜோதி மோசடி சுரண்டல் பற்றி உண்மையான கருத்துத் தெரிவிக்கக்கூடத் தயாராக இல்லையே! பெரியாரியலின் வீச்சும், உரமும் எவ்வளவுத் தேவை என்பதை இது துல்லியமாக உணர்த்தவில்லையா?

- மயிலாடன்

(ஒற்றைப்பத்தி, தொகுதி -4)

- விடுதலை ஞாயிறு மலர், 28. 9 .19

வியாழன், 10 அக்டோபர், 2019

ஹிந்திப் புரட்டின் நோக்கம் - தமிழரை அடிமைப்படுத்துவதே! - 15

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


15.5.1938 அன்றைய


"குடி அரசு" எழுதுவதாவது:-


நம்நாட்டுப் பார்ப்பனீயமானது "தோலைக் கடித்து, துருத் தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது'' என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது.

பார்ப்பனீயப் போராட்டம்


தமிழ் மக்களில் எவருடைய ஆட்சேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லட்சியம் செய்யாமல் ஒரே அடியாய் சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்' என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத் தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித் தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன் புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்


தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால் தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோ கமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம் மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ் வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி


அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தா பனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டி யவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட் கின்றோம்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?


வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத் தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது. இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடு மையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?


மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளை யும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம். இனி அடுத்தாற்போல் தமிழன் என்ற காரணத் தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுது வோம். இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கிரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்ப தாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்.

காங்கிரஸ் தமிழர்கள் நிலை என்ன?


மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங் கிரஸ்தான்' என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறு வளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கிய தையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போ மானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக் காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும். ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரி விக்கவுமே இதை எழுதுகிறோம்.

தமிழன் செய்ய வேண்டியதென்ன?


தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும். ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதை யும் தாங்கள் யோசனை செய்வதற்கு முன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம் பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன் மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?


அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் சிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத் மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் - கட்டுப்பாடாகவும் - தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மை யாய் கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தமிழன் நிலைமை


தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந் தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு "மோட்சத்தில் இடம்'' தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அர்ப்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் "பாவத்துக்கு'' மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக ஆகிவிட்டான்.

- தொடரும்

- 'விடுதலை', 17.5.1938

- விடுதலை நாளேடு, 9. 10. 19