சுயமரியாதை உலகு

சனி, 18 மார்ச், 2023

கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயண நாட்களும், நிகழ்ச்சிகளும்!


      March 18, 2023 • Viduthalai


90 ஆம் வயதில் 1.1.2022 முதல் சுற்றுப்பயண நாள்கள்

1. பொதுக்கூட்டங்கள் - 75

2. மாநாடு -  9

3. ஆர்ப்பாட்டங்கள் - 4

4. காணொலி நிகழ்ச்சி - 19

5. அறிக்கைகள் - 514

6. சுயமரியாதை திருமணங்கள் - 15

7. கலந்துரையாடல் கூட்டம் - 17

8. பொது நிகழ்ச்சிகள் - 46

பரப்புரை தொடர் பயணங்கள்

1. நாகர்கோவில்முதல் சென்னை வரை

(3.4.2022 முதல் 25.4.2022 வரை)

நோக்கம்: 

1. மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம்

2. நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு

21 நாட்கள்

38 பொதுக்கூட்டங்கள்.

2. ஈரோடு முதல் கடலூர் வரை

(3.2.2023 முதல் 10.3.2023)

நோக்கம்: 

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை

தொடர் பயணம்

30 நாட்கள்

55 பொதுக்கூட்டங்கள்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:45 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், கி.வீரமணி, நிகழ்ச்சி

ஞாயிறு, 12 மார்ச், 2023

முதல் பெரியார் சமூகநீதி விருது


   March 06, 2021 • Viduthalai

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழக அரசின் - தந்தை பெரியார் சமூகநீதி விருது வழங்கும் விழா - (26.2.1996) கலை வாணர் அரங்கில் எழுச்சியுடனும், உணர்ச்சி யுடனும் நடந்தது.

மாலை 4:00 மணியிலிருந்து - அரங்கத் துக்குள் பார்வையாளர்கள் வரத் துவங்கினர். தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கழகப் பொறுப் பாளர்களும் தோழர்களும் நிகழ்ச்சியில் பங் கேற்க வந்திருந்தனர். மாலை 5:30 மணிக்கு அரங்கம் முழுவதும் இருக்கைகள் நிரம்பி வழிந்து. தரையிலும் பார்வையாளர்கள் அமர்ந்துவிட்டனர்.

ஊசிபோட்டால் கேட்கக் கூடிய அள வுக்கு அமைதியான சூழலில் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்த நாதஸ்வர இசை நிகழ்ச் சியின் துவக்கத்துக்காக பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட விழா மேடையில் - தந்தை பெரியார், தமிழக முதல்வர் படத்துடன் ‘தந்தை பெரியார் சமூகநீதி விருது’ 1995 விருது வழங்கும் விழா என்ற வாசகங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. மேடையின் இரு பக்கச் சுவர் களிலும் தந்தை பெரியாரின் ஒளிச்சுடர் வடி வமைக்கப்பட்டிருந்தது.

தலைவர்கள் மேடைக்கு வந்து அமர்வதற்கு முன்பு - பெண் அறிவிப்பாளர் அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் பெரியார் சமூகநீதி விருதை - முதன் முதலாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி பெறுகிறார் என்று அறிவித்த போது - கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு - அரசு செய்துள்ள சாதனைகளை அறிவிப்பாளர் பட்டியலிட்டுக் கூறினார். 6:10 மணிக்கு தமிழக முதல்வர், கழகப் பொதுச் செயலாளர், அமைச்சர்கள் எஸ்டி. சோமசுந் தரம், லாரன்ஸ், பேரவைத் தலைவர் சேடப் பட்டி முத்தையா, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளர் எம்.தங்கதுரை ஆகியோர் பலத்த கரவொலிக்கிடையே மேடைக்கு வந்து அமர்ந்தனர்

கழகப் பொதுச்செயலாளர் நன்றி தெரி விக்கும் வகையில் மலர்க் கொத்துக்களை முதலில் முதல்வருக்கு வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் லாரன்ஸ் வரவேற்புரையாற்ற, தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் வாழ்த் துரை வழங்கிய பின் விருது. வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுச்செயலாளருக்கு தமிழக முதல் வர் பொன்னாடை போர்த்தி 5 பவுன் மதிப் புள்ள மெடலை அணிவித்தார். ‘பெரியார் சமூகநீதி விருது’ என்ற வாசகம் பொறிக்கப் பட்ட பட்டயக் கேடயத்தையும் தந்தை பெரியார், தமிழக முதல்வர் படம் பொறிக் கப்பட்ட வெள்ளித் தட்டை நினைவுப் பரிசாகவும் - பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார்.  அப்போது சரியாக நேரம் 6:45 மணி: விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து முதலமைச்சர் பேசினார். பொதுச் செயலாளரின் லட்சியப் பிடிப்பை யும் விளம்பரம் விரும்பாத தொண்டையும் முதலில் மனம் திறந்து தனது உரையில் குறிப்பிட்டபோது அரங்கமே கரவொலி யால் அதிர்ந்தது.

ஏற்புரை நிகழ்த்த வந்த பொதுச் செயலா ளர் உரையைத் துவக்குவதற்கு முன் - முதல்வருக்கு பிறந்த நாள் பரிசு ஒன்றை வழங்கினார். 4000 அறிவியல் சொற்களுக்கு சரியான தமிழ் சொற்களைக் கொண்ட தமிழ் அறிவியல் அகராதியைக் கொண்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒன்றை பொதுச் செயலாளர் வழங்கினார். சென்னையில் உள்ள பெரியார் கணினி ஆய்வுக் கல்விய கமும் - வல்லத்தில் உள்ள பெரியார்” நூற் றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கும் இணைந்து இதைத் தயாரித்திருந்தது.

முதலமைச்சர் தனது பிறந்த நாள் விழா வில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு விடுத்த வேண்டுகோளைப் பாராட்டி பொதுச்செயலாளர் - இந்தப் பரிசை வழங்கி தனது ஏற்புரையைத் தொடங்கினார்.

சமூக நீதிக் கொள்கையில் பெரியார் இயக்கம் செய்துவரும் தொண்டைப் பாராட்டி - இந்த விருதை முதல்வர் வழங்கி யிருப்பதைக் குறிப்பிட்ட பொதுச் செயலா ளர் - முதல்வர் இயக்கத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்ததுடன் ஒருபோதும் சமூகநீதிக் கொள்கைக்குத் துரோகம் செய்யமாட்டோம் என்று உறுதி அளித்துப் பேசினார்.

எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் - கருப்பு மெழுகுவத்திகளாகச் செயல்பட்டு வரும் லட்சோப லட்சம் கருஞ்சட்டைத் தோழர்களின் தொண்டுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமே இந்த விருது என்று பொதுச் செயலாளர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத் தியாகி களுக்கு சுதந்திரப் போராட்டத் தியாகிக ளுக்கு வழங்குவது போல் ஓய்வூதியம் தொகையை உயர்த்த வேண்டும். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற வர்களை அரசாங்கம் அங்கீகரித்து கவுர விக்கவேண்டும் என்கிற இரண்டு கோரிக் கையையும் முதலமைச்சரிடம் பொதுச் செயலாளர் வைத்தார்.

காவல்துறையில் தகுதியான விண்ணப் பதாரர்கள் இல்லை என்று கூறி - தாழ்த்தப் பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கக் கூடாது என்று கூறி விதிகளை மாற்றி தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இடங் களை வழங்க வேண்டும் என ஆணை யிட்ட முதல்வரை பொதுச்செயலாளர் பாராட்டினார்.

பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அவை நிகழ்ச்சியில் முதல்வர் வெளியிட்ட இத்தகவலை சுட்டிக்காட்டிய போது மேடையிலிருந்த பொதுச்செயலா ளரிடம் முதல்வர் - இது பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினார்.

1938இல் தந்தை பெரியாருக்கு பெண் கள்தாம் பெரியார் பட்டத்தை அளித்தனர். இப்போது பெண் முதலமைச்சர் மூலமா கவே - பெரியார் விருது தரப்படுகிறது என் பதைச் சுட்டிக்காட்டிய பொதுச்செயலாளர். ‘முன்னோக்கிச் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெண்களுக்குத்தான் உண்டு’ என்று குறிப்பிட்டபோது முதலமைச்சர் கைதட்டி வரவேற்றார்.

- ‘உண்மை ‘ - மார்ச் 16-31, 1996

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:07 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

 

கழகத் துணைத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது!
     January 17, 2023 • Viduthalai

தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோஅன்பரசன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் (அரசு விழா, சென்னை வள்ளுவர் கோட்டம், - 16.1.2023)

 பெரியார் விருதினைப் பெற்றுக்கொண்டவுடன், அடையாறு சென்று ஆசிரியர் அவர்களைச் சந்தித்தார் கழகத் துணைத் தலைவர்.  ஆசிரியர் அவர்கள் கழகத் துணைத் தலைவருக்கும், அவரது வாழ்விணையர் சி.வெற்றிச்செல்விக்கும் இணைந்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா வீரமணி, தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி ராமஜெயம் ஆகியோர்.

  தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்பட்டது!   
       January 17, 2023 • Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது, தங்கப்பதக்கம், காசோலை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார்!

சென்னை. ஜன. 17 திராவிடர் கழக துணைத் தலைவருக்கு தந்தை பெரியார் விருதை தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 16-01-2023 அன்று காலை 8:30 மணிக்கு நடைபெற்றது. குறித்த நேரத்தில் முதலமைச்சர் வருகை தந்தார். இந்நிகழ்வில் 2022 ஆம் ஆண்டுக்கான 10 ஆன்றோர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இவ்விருதானது தகுதி உரை, பொன்னாடை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றைக் கொண்டது. 

தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. நிகழ்வில் மாண்புமிகுவாளர்களான இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை பெருநகர மேயர் ஆர். பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக இவர்களுக்கு நிகழ்ச்சியின் சார்பில் வள்ளுவர் சிலை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழறிஞர்கள் பதின்மருக்கு விருதுகள்!

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தந்தை பெரியார் விருது, இரணியன் நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது, எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது உபயதுல்லா அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு பெருந் தலைவர் காமராஜர் விருது, ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது, வாலாசா வல்லவன் அவர்களுக்கு பாரதிதாசன் விருது, நாமக்கல் பொ.வேல்சாமி அவர்களுக்கு திரு.வி.க. விருது, கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, முனைவர் இரா.மதிவாணன் அவர்களுக்கு தேவநேயப் பாவாணர் விருது உள்ளிட்ட 10 விருதுகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

தந்தை பெரியார் விருது!

”2022 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பாடுபடுகிறவர்களை சிறப்பிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கவிமாமணி பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்; தந்தை பெரியார் தன்மானப் பேரவையை உருவாக்கியவர்; தந்தை பெரியாரின் கொள்கைகான சமூக நீதி, ஜாதி மறுப்பு, சுயமரியாதை, பெண் உரிமைகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் 60 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறார்கள். இந்த அரிய பணிகளைப் பாராட்டி சிறப்பிக்கிறது தமிழ்நாடு அரசு” என்ற தகுதியுரை வாசிக்கப்பட, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மேடையேறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களால் பொன்னாடை, தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு, தகுதியுரை ரூ.5 லட்சத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டன.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி!

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் 5 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி சிறப்பிக்கப் பட்டது. நீலகிரியைச் சேர்ந்த இண்டியா பிராஜக்ட் பார் அனிமல் அண்ட் ரிசர்ச் தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த அனிமல் கேர் ஃபர்ஸ்ட் தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் அனிமல் ரெஸ்கியூ சொசைட்டி தொண்டு நிறுவனம், பிரித்திவி அனிமல் வெல்பேர் சொசைட்டி தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த வைரவா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் என கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக முதல் முறையாக மொத்தம் 5 தொண்டு நிறுவனங்களுக்கு முதல் தவணையாக 2, 13, 77,250 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை இயக்குநர் அரசு இணைச் செயலாளர் நன்றி கூறினார்.

இறுதியில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விருது பெற்ற அறிஞர் பெருமக்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.

 கவிஞரை உச்சி முகர்ந்த ஆசிரியர்!

தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் திட்டத்தில் ஒரு மாறுதல் செய்து தனது வீட்டில் விடுவதற்கு  முன் அடையாறு சென்று தமிழர் தலைவரை காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் உடனே சம்மதித்தனர். அவ்வாறே அடையாறு ஆசிரியர் இல்லம் சென்று தான் பெற்ற விருதைக்காட்டி நெகிழ்ந்தார் கவிஞர். ஆசிரியர் தானே பெற்றது போல மகிழ்ந்து, துணைத் தலைவர், வெற்றிச்செல்வி இருவருக்கும் ஒருசேர ஆடையணிவித்து மரியாதை செய்தார். பின்னர் வழங்கப்பட்ட தகுதியுரையை ஊன்றிப்படித்து மகிழ்ந்தார். அப்போது ஆசிரியரை சந்திக்க வருகை தந்திருந்த வி.ஜி.பி சந்தோசம் அவர்கள், கவிஞ ருக்கும், வெற்றிச் செல்விக்கும் ஒருசேர ஆடையணிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். உடன்: கி. ராகுலன், முனைவர் சுடரொளி, காரல் ஆகியோர் இருந்தனர்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, மாணவரணியின் மாநிலப் பொறுப்பாளர் செ.பெ.தொண்டறம், தென்சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, சரவண ராஜேந்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், வை. கலையரசன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன், பெரியார் மாணாக்கன், ஆவடி தோழர்கள் வஜ்ரவேல், ஆ.வெ.நடராஜன், பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் கோபால், பார்த்திபன், வெற்றி, துணைத் தலைவர் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விருதாளர்கள், அன்னார்களது குடும்பத்தினர் ஆகி யோருக்கு காலைச் சிற்றுண்டியாக பொங்கல், வடை வழங்கப்பட்டது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:54 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிஞர், தந்தை பெரியார் விருது

தமிழர் தலைவருக்கு ''சமூகநீதிப் போராளி'' விருது!

 

      January 09, 2023 • Viduthalai

சென்னை, ஜன.9 யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் சங்கத்தின் தலைவர் கோ. கருணாநிதி உட்பட, சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் வருகை தந்திருந்தனர்.

30 ஆம் ஆண்டு தொடக்க விழா!

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆண்டு தொடக்க நாள் விழா தியாகராயர் நகரில், தியாகராயர் சாலையில் உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதி யின் முதல் மாடியில், 8.1.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.  

சிறப்பிக்கப்பட்ட தலைவர்கள்!

முன்னதாக குழல் (புல்லாங்குழல்) குமரனின் இன்னிசை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் தொடங்கியது. தொடக்கத்தில் ஆசிரியருக்கு சிறப்பு செய்யப் பட்டது. அதைத்தொடர்ந்து மேனாள் மாநிலங்களவை உறுப் பினர் டி.கே.எஸ். இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பின ரும் மூத்த வழக்குரைஞருமான வில்சன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன், துணைப் பொது மேலாளர்  ஜி.முருகன் (சென்னை மண்டலம்), சென்னை தெற்கு மண்டலத் தலைவர் செழியன், சென்னை வடக்கு பிராந்திய தலைவர் பிரபு,  ஆகியோருக்கு பயனாடை போர்த்தி, மரக்கன்று, நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 

சமூகநீதிப் பயணத்தின் அடுத்த கட்டம்!

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசும் படலம் தொடங்கியது. சென்னை வடக்குப்பிராந்தியத் தலைவர் பிரபு, யூனியன் வங்கி தெற்கு பிராந்தியத் தலைவர் செழியன், சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் முருகன், மூத்த வழக்குரைஞர் வில்சன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி சங்கத்தின் வரலாற்றை தந்தை பெரியார், ஆசிரியர் ஆகியோரின் சமூகநீதிப் போராட்டங்களையும் இணைத்து விவரித்தார். தொடர்ந்து சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வாழ்த்துரையோடு சமூகநீதிப் பயணம் செல்ல வேண்டிய பாதை குறித்தும் பேசினார். நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ், இளங்கோவன் நாடாளு மன்றத்தில் சமூகநீதி தொடர்பாக தான் பேசியதை சுட்டிக் காட்டி பேசி, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் எடுத்துரைத்து அமர்ந்தார்.

தமிழர் தலைவருக்கு, 

''சமூக நீதிப் போராளி விருது”

நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் ஆசிரியருக்கு சிறப்பு விருதை அமைப்பின் தலைவர் கோ. கருணாநிதி அறிவித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று முன்னதாக சங்கத்தின் துவக்க கால உறுப்பினர்கள் இணைந்து ஆசிரி யருக்கு பூங்கொத்து வழங்கினர். அத்தோடு மண்டல செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் இணைந்து பயனாடையணிவித்து சிறப்பித்தனர். அதன்பிறகு தந்தை பெரியாருக்கு 1938 இல் பெண்கள் இணைந்து மேடையில் “பெரியார்” என்ற பட்டத்தை வழங்கியது போல என்று குறிப்பிட்ட கோ. கருணாநிதி பெண் நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார். அதேபோலவே பெண்கள் இணைந்து ”சமூகநீதிப் போராளி” எனும் விருதை, பலத்த கைதட்டல் களுக்கிடையே தமிழர் தலைவருக்கு வழங்கினர். விருதுக் கான குறிப்பை பலத்த கரவொலிக்கிடையே சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி வாசித்தார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை!

விழா நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில், எதிர்பாராமல் வழங்கப்பட்ட விருதுக்கு நன்றி தெரிவித்தார். தான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியதை இந்த விருது சுட்டிக் காட்டுவதாக கூறிவிட்டு, நிகழ்ச்சியில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களில் சமூகம் சார்ந்த தீர்மானங்களை குறிப்பிட்டு பேசினார். அதையொட்டி, பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க உத்தரவிட்டதை நினைவுபடுத்தினார். கிரிமிலேயரை அமல்படுத்தியது அர சமைப்புச் சட்டவிரோதம் என்பதை காரணத்தோடு எடுத்துரைத்து தனது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் சற்றும் சளைக்காமல் பயனாடையணிவித்து மரியாதை செய்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்தோர்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞர் சு. குமார தேவன் கழகத் தோழர் திருச்சி ராஜூ, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சோ. சுரேஷ், கமலேஷ், சமூகநீதி கண்காணிப்புக் குழு மற்றும் யூனியன் வங்கி  அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, அய்.சி.எப்., மக்கள் கணக்கெடுப்பு துறை, சி.பி.சி.எல்., கனரக தொழிற்சாலை, ஆவடி ஆகிய நிறுவன ஓபிசி நல சங்க நிர்வாகிகள்,  வங்கி யின் அதிகாரிகள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நல சங்க உறுப்பினர்கள், குறிப்பாக பெண்கள், நல சங்கத்தை 1994 இல் துவக்கிய தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:47 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், விருது

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

 

    January 17, 2023 • Viduthalai

 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து 

என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்!

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர்  நலச் சங்கத்தின் 

30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

சென்னை, ஜன.17 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘சமூகநீதிப் போராளி’’ விருது வழங்கும் விழா

கடந்த 8.1.2023 அன்று தியாகராயர் நகரில், உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதியில், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா - யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது  வழங்கும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடிய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க  விழா விற்குத் தலைமையேற்றுள்ள தோழர்க கருணாநிதி, தொடக்கத்திலிருந்து சிறப்பாகப் போராடி, வாதாடி யதால், பிறகு ஒரு நல்ல அளவிற்கு அது கட்டுக் கோப்பான ஓர் அமைப்பாக வளர்ந்து இருக்கிறது. அது மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஓர் அமைப்பாக இருக்கிறது என்றால், அது முதல் வரிசையில், முதலிடத்தில் இருக்கக்கூடிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சார்ந்த பெருமைக்குரிய எங்களுடைய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கமாகும். 

முதலாவது ஆண்டு விழாவிலும் - 30 ஆவது ஆண்டுவிழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு

எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அளவிற்கு இதை ஆக்கிய பெருமை அருமைத் தோழர் கருணாநிதி (இவ்வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற) அவர்களையும், அவருக்கு ஒத்துழைப்புத் தரக்கூடிய உங்களைப் போன்ற ஓர் அருமையான, தோழர்களையும் சேர்ந்த தாகும். அவருக்கு நல்ல வகையில் ஆதரவு தரக் கூடியவர்கள் - ஒருங்கிணைந்து ஒரு நல்ல கூட்டுக் குடும்பம் - நல்ல சிறப்பான முறையில் இருப்பதைப்போல, எடுத்துக்காட்டான ஓர் அமைப்பாக இது திகழ்கின்றது. இந்த அமைப்பின் 30 ஆம் ஆண்டு விழாவில், - முதலாவது ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு, 30 ஆவது ஆண்டுவிழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருப்பது - அதை எனக்கு அளித் திருப்பதற்காக நானும் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஏனென்றால், நிறைய வங்கிகளில் எனக்குக் கணக்கு கிடையாது. வங்கித் தோழர்களை இப்படிப்போன்ற விழாவில்தான் பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதிலும் இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்ன வென்றால், இந்த அருமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதின்மூலம் முதலில் அனைவருக்கும் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மகிழ்ச்சி கலந்த வணக்கம்.

சமூகநீதிக்காகப் போராடக் கூடிய களப் பணியாளர்கள்

வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் பொதுச் செயலாளர் சிவா நடராசன் அவர்களே, 

தலைமையேற்று இருக்கக்கூடிய தோழர் கருணாநிதி அவர்கள், இங்கே மட்டுமல்ல, எல்லா வங்கிகளிலும் சரி, இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கன ஓர் அமைப்பு, ஒடுக்கப்பட்டவர்களுடைய அமைப்பு எது வாக இருந்தாலும், அவற்றில் பங்கெடுத்து, சமூகநீதிக் காகப் போராடக் கூடிய களப் பணியாளர், களத்திலே இருக்கக்கூடியவர் நல்ல அளவிற்குக் கொள்கையாளர் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பணியாற்றிவருபவர். தமிழ்நாடு அரசே அவருடைய தொண்டை மதித்த கார ணத்தினால்தான், இன்றைக்குத் தமிழ்நாடு அரசினுடைய மிகப்பெரிய ஒரு பொறுப்பில், சமூகநீதி கண்காணிப்புக் குழுவில் இருக்கக்கூடிய அளவிற்குக் கருணாநிதி இடம்பெற்றிருக்கின்றார் என்றால், அது அவருக்கு மட்டும் பெருமையல்ல; இந்த வங்கிக்கே பெருமை - இந்த வங்கியினுடைய அமைப்பிற்கே பெருமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் தமிழ்நாட்டினுடய சிறப்பை அவருக்குத் தேடித் தந்திருக்கின்றீர்கள்.

அதற்கு அடித்தளம் இந்த அமைப்பு. இந்த அமைப் பினுடைய அருமைத் தலைவர் அவர்களே,

ஏனைய அருமைத் தோழர்களே, ‘விடுதலை’யின் நிர்வாக ஆசிரியரும், திராவிடர் கழகத் துணைத் தலை வருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

மற்றும் அருமை நண்பர்களே, உங்கள் எல்லோருக் கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டப் பசி தீரவில்லை!

நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள்; வயிற்றுப் பசி உங்களுக்கு; ஆனால், இந்த நாட்டில் போராட்டத்தின் பலன் இன்னமும் எதுவும் கிடைக்கவில்லையே, என்று ‘அந்தப் பசி’ தீராத அளவில் இருக்கக்கூடிய - அந்தப் பசிக்கு உணவு கிடைக்காதா? என்பதற்காக நாங்கள் ஒரு பக்கத்திலே போராடிக் கொண்டிருக்கின்ற காரணத் தினால், நாம் எல்லோரும் சேர்ந்து போராடிக் கொண் டிருக்கின்ற காரணத்தினாலும் - வயிற்றுப் பசியைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு - இந்த போராட்டப் பசி தீருவதற்கு, பசி ஆறுவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி நாம் யோசிப்பதற்காகத்தான் - இந்த விழா!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலில் உரையைத் தொடங்குவதற்குமுன் என்னுடைய அன்பான நன்றியை மிகுந்த பணிவன்போடு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பால், நட்புறவால் என்னை  திணற வைத்துவிட்டீர்கள்

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை; 90 வயது என்பதை எனக்கு நினைவூட்டி - எனக்கு வயதாகிவிட்டதை எனக்கு அடிக்கடி நினைவூட்டி - அதற்காக தனி சிறப்பு செய்தீர்கள். இங்கே ஒவ்வொருவரும் உங்களுடைய அன்பால், நட்புறவால் என்னை  திணற வைத்து விட்டீர்கள்; அதற்காக என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக, இவையெல்லாம் எங்களுக்கு மிகவும் புதுமையானது, எதிர்பாராதது. இதுவரை நாங்கள் இங்கே கொடுத்ததுபோன்று ‘பொக்கே’ வாங்கியதில்லை. கல்லடி யையும், சொல்லடியையும்தான் இதுவரையில் வாங்கியிருக்கின்றோம். 

இங்கே வரும்பொழுது எனக்கே கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றியது; நாம் வேறொரு உலகத்தில் இருக்கின்றோமா என்று சொல்லக்கூடிய அளவில், அதிலும் அறிவார்ந்த ஓர் அரங்கத்தில், இப்படிப்பட்ட தோழர்கள், இருபால் தோழர்கள்,  தோழர்களிடமிருந்தும் வாழ்த்துப் பெற்றிருக்கின்றோம்.

நீங்கள் என்னை கொஞ்சம்  தட்டிக் கொடுக்கிறீர்கள்

அதைவிட மகிழ்ச்சி என்னவென்றால், வங்கியில் சமூகநீதி செயல்பட்டது; அந்த சமூகநீதி செயல்படுவதற்கு இன்னும் தீவிரமாக களத்தில் இறங்கக்கூடிய உறுதிப்பாடு, ஈடுபாடு இந்த இரண்டுமே பெற்றிருக்கக் கூடியவர்களிட மிருந்து பாராட்டை நான் பெறுகிறேன் என்று சொல்லும் பொழுது, இன்னும் அதிகமாக வேலை செய்; உங்களிட மிருந்து இன்னும் அதிகமான பணியை எதிர்பார்க்கிறோம் என்று சொல்வதற்கு, நீங்கள் என்னை கொஞ்சம் தட்டிக் கொடுக்கிறீர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.

அதைவிட எனக்கு இன்னொரு மகிழ்ச்சி - வங்கி களில் பணியாற்றும் மகளிர் தோழர்கள் அனைவரும் சேர்ந்து மேடைக்கு வந்தார்கள்; இவ்வளவு மகளிர் வங்கியில் பணியாற்றுவதே பெரியாருக்குக் கிடைத்த வெற்றி - சமூகநீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! பூரிப்படைகிறோம்.

மிகப்பெரிய சமூகப் புரட்சி - ரத்தம் சிந்தாதப் புரட்சி- ஆயுதம் ஏந்தாத புரட்சி

பிற்படுத்தப்பட்டோரில், ஆண்களே முன்னேறாத நிலையில், பெண்களே படிக்கக் கூடாது என்று இருந்த காலத்தில், ‘சரசுவதி’ என்று பெயர் வைத்திருக்கின்ற பாட்டிக்குக்கூட எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால், ‘பேத்தி சரசுவதி’ இன்றைக்கு வங்கி அதிகாரியாக, மற்ற மற்ற துறைகளிலும் இருக்கிறார்கள் என்று சொன்னால், இது மிகப்பெரிய சமூகப் புரட்சி - ரத்தம் சிந்தாதப் புரட்சி- ஆயுதம் ஏந்தாத புரட்சி. எப்படி ஏற்பட்டது?

அதேநேரத்தில், திராவிட இயக்கம் இந்த நாட்டில் அரும்பாடுபட்டு உருவாக்கிய இது ஓர் அற்புதமான சிறப்பான புரட்சியாகும்.

அந்த வகையில், நீங்கள் எனக்கு இங்கே கொடுத்த பட்டயத்தைவிட மிக முக்கியம் - இத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள்; இத்தனை மகளிர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வங்கியிலே பணிபுரிகிறார்கள்; அதி காரிகளாக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது, இதைவிட பெரிய பரிசு, இதைவிட மிகப்பெரிய சிறப்பு எங்களுக்கு வேறு கிடையாது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து, இந்த எண்ணிக்கை பெருகவேண்டும்.

நம்முடைய உரிமைகளை நாம் பெறுவதற்காகக் கேட்டுக்கொள்கிறோம்

அதேபோல, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகள் பெறப்படவேண்டும்; மற்றவர்களுடைய உரிமைகளை நாம் பறிப்பதற்காக இதை நாம் கேட்கவில்லை; நம் முடைய உரிமைகளை நாம் பெறுவதற்காகக் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனென்றால், சமூகநீதியினுடைய தத்துவத்தை பலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதான் சமூகநீதியே தவிர, மற்றவர்களுக்குக் கிடையாது என்று சொல்வது அல்ல.

ஆனால், அனைவருக்கும் அனைத்தும் கூடாது எல்லாம் எங்களுக்கே என்று சொல்வதுதான் சமூக அநீதி.

அந்த சமூக அநீதியை எதிர்த்து நிற்பதுதான் சமூகநீதி. எப்பொழுதுமே அநீதி நடக்கும்பொழுதுதான், நீதி கேட்கவேண்டிய அவசியமே வரும்.

அந்த வகையில்தான், நீதி கேட்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இங்கே 30 ஆம் ஆண்டு விழாவில், அவர் சொன்னதுபோன்று, ஓர் அமைப்பை 30 ஆண்டு கள் கட்டி காத்து, மேலே மேலே அது வளர்ந்துகொண்டே செல்வது என்பது மிகுந்த உற்சாகத்தைத் தரக்கூடிய ஒன்றாகும்.

தீர்மானங்கள் மிக முக்கியமானவை

இங்கே நிறைவேற்றப்பட்டு இருக்கக் கூடிய தீர் மானங்கள் மிக முக்கியமானவையாகும். ஏழு தீர்மானங் கள் பொதுவானவை;  வங்கி நிர்வாகத்திற்குக் கோரிக் கைகளை 6 தீர்மானங்களாக வைத்திருக்கிறீர்கள். 

வங்கி நிர்வாகக் கோரிக்கைகள் உங்களைப் பொறுத்து தெளிவாக வந்திருக்கிறது என்றாலும், எல் லோருக்கும் தேவை - நாட்டிற்கே தேவையானதை ஏழு கோரிக்கையாக வைத்திருக்கிறீர்கள்.

(தொடரும்)

சமூகநீதி - நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம்!
   January 18, 2023 • Viduthalai

 யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர்  நலச் சங்கத்தின் 

30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

சென்னை, ஜன.18 சமூகநீதி - நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘சமூகநீதிப் போராளி’’ விருது 

வழங்கும் விழா

கடந்த 8.1.2023 அன்று தியாகராயர் நகரில், உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதியில், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா - யூனியன் வங்கி பிற் படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது  வழங்கும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அதில், 

1. எல்.அய்.சி.  வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கிடும் கொள் கையைக் கைவிடுக.

2. ஜாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு தொடங்கிட வேண்டும்.

3. பீகாரில் இதைக் கேட்டு, கேட்டு, அனைத்துக் கட்சியினரும்,  பிரதமர் உள்பட பலரைப் பார்த்தும்கூட, அதை செய்யவில்லை என்கிற காரணத்தினால்,  மற்றவர் களிடம் நாம் கேட்பதைவிட, மக்கள் இருப்பது மாநிலத்தில்தானே, அதற்கு நாமே வழிகாட்டுவோம் என்று சொல்லி, இன்றைக்கு நிதிஷ்குமார் அவர்கள் ஜாதி வாரிக் கணக்கெடுப்பைத் தொடங்கியிருக்கும் சூழ்நிலை, இந்தியா முழுவதும் வந்தால், அதிசயமில்லை. அதைப் பற்றி இங்கே உங்களுக்குத் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்கள்.

4. அதேபோல, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக, அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் வரவேண்டும்.

5. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கிட,  உரிய சட்டம் தேவை.

6. ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 102, 105 அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினை - கிரிமீலேயர் முறையை முற்றிலும் நீக்கவேண்டும்.

இந்த சட்டம் நிறைவேறியவுடனே, இப்பொழுது இருக்கிற நிலைமை என்னவென்றால்,  கிரிமீலேயர் தானாகவே அது நீக்கப்பட்டுவிட்டது என்று சொல்வது தான் சட்டப்படி சரியான நிலையாகும்..

கிரிமீலேயரை நடைமுறைப்படுத்துவது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்

அதனை போதிய அளவிற்குப் பலரது கவனத்திற்குக் கொண்டு போகவில்லை. அதற்கு முன்பு, இந்தத் திருத் தம் வந்த பிறகு, கிரிமீலேயரை நடைமுறைப்படுத்துவது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்.

அதை கூடுமானவரையில், இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்திற்குக்கூட எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால், ஏற்கெனவே இருந்த சட்டத்தில் என்னென்ன இருந்ததோ அவை அத்தனையும் இருக் கிறது. இதற்கென்று தனியே விவாதம் செய்யவேண்டிய அளவிற்கு, அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வாய்ப்பு இருக்கிறது.

எங்கே நீதி இருக்கிறது? 

எங்கே விளக்கம் இருக்கிறது? 

அப்படி இருந்தாலும், அதில் தெளிவில்லாத கார ணத்தினால்தான், கிரீமிலேயர் முறை என்பது அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்ற சட்டத்திற்கு முரண்பாடு. தானாகவே அது போய்விட்டது. ஆனாலும், அதை இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால், எங்கே நீதி இருக்கிறது? எங்கே விளக்கம் இருக்கிறது? யாரைப் பற்றியும் நடந்துகொண்டிருக் கின்றார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

அதற்கு அடுத்தபடியாக நண்பர்களே, தற்பொழுது மத்திய பணியாளர்கள் நலத் துறையில், 6.10.2017 தேதி யிட்ட ஆணை  வங்கி உள்ளிட்ட, பொதுத் துறை நிறுவ னங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு எதிராக இருப்பதால், அந்த ஆணையை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்பது மிக முக்கியமானது.

வங்கிப் பணியாளர்கள் தேர்வுக் கழகம் - பொதுத் துறை நிறுவனங்களில் பணியாளர் தேர்வு மற்றும் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. ஆணையத்தில் நடக்கும் தேர்வுகள் - தமிழ் உள்பட - அனைத்துத் தேசிய மொழிகளிலும் நடத்தப்படவேண்டும்.

நன்றாக நீங்கள் கவனியுங்கள், ‘‘அனைத்துத் தேசிய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படவேண்டும்’’ என்று.

தேசிய மொழி என்று தனியே எந்த மொழிக்கும் ஹிந்தி உள்பட தகுதி கிடையாது

அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் இருக்கக்கூடிய மொழிகள் 22 -ம், தேசிய மொழிகள்தான். தனியே எந்த மொழிக்கும் ஹிந்தி உள்பட தேசிய மொழி தகுதி கிடையாது - அரசமைப்புச் சட்டப்படி.

நிறைய பேர் அரசமைப்புச் சட்டத்தையே சரியாகப் படித்ததில்லை; சில நீதிபதிகள் போன்றவர்களேகூட சரியாகப் படிப்பதில்லை.

முதலில் 14 மொழிகள் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மொழிகளை அதிகப்படுத்தி, 22 மொழி களாக ஆக்கியிருக்கிறார்கள்.

நண்பர்களே, இதில் மிகத் தெளிவாக இருக்கிறது - தலைப்பு என்னவென்றால், மொழிகள் என்பதுதான்.

மொழிகள் என்று மொத்தமாகப் போட்டால், 22 மொழிகளிலும் போட்டால், அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதற்கும் மொழி என்று பெயர். அதன்படி அவை அங்கீகரிக்கப்பட்டு  தேசிய மொழிகள் என்றால், 22 மொழிகளும் தேசிய மொழிகள்தான்.

ஆகவேதான், ‘‘ஆட்சி மொழி’’ (Official Language)  என்பது வேறு; ‘‘தேசிய மொழி’’ (National Language )என்பது வேறு.

இதைவிட இன்னொரு மகிழ்ச்சி - 30 ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு சிறப்பு இந்த அமைப்பிற்கு உண்டு.

பிற்படுத்தப்பட்டோர் சங்கங்கள் உள்ள வங்கிகள் எவ்வளவு? தேசிய மயமாக்கப்பட்ட, நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை எனக்குத் தெரிந்த வரையில் 12. 

அந்த 12 வங்கிகளில், இதுபோன்ற அமைப்பு இருக்கிறதா? பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு என்று சொல்லக் கூடிய அமைப்பு எத்தனை வங்கியில் இருக்கிறது?

எனக்கு முன்பாக உரையாற்றிய டி.கே.எஸ். இளங் கோவன் மிக அருமையாகச் சொன்னார்.

ஒரு சட்டம் இயற்றினால், ஓர் அமைப்பை உரு வாக்கினால், அவை எல்லோருக்கும் பொருந்தவேண்டும் என்று சொன்னார்.

நம் மக்களுக்குத் தம் உரிமைபற்றிய  தெளிவு இன்னமும் வரவில்லை. நாம் சட்ட விரோதமாக நடக்க வில்லை.

விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்

அனுமதி கொடுத்ததில், யூனியன் வங்கியை நாம் பாராட்டவேண்டும். வங்கி அதிகாரிகள், மற்றவர்கள் இதனை ஏற்றுக்கொண்டு, கருணாநிதி போன்றவர்கள், உங்களைப் போன்றவர்கள் முன்னால் நின்று, அதைக் கட்டிக் காத்து - ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக் கிறார்கள்.

யூனியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியா, எஸ்.பி.அய். அளவிற்கு வந்திருக்கிறது.

தகுதிக்குமேலே பிற்படுத்தப்பட்டோர் வங்கி அமைப்பு என்பது இன்னமும் வரவில்லையானாலும், அந்த அளவிற்கு, இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள்.

யார் வந்திருக்கிறார்கள்?

நாளைக்குத் தனியார் மயமானால், தனியார்த் துறையில் இப்பொழுது இட ஒதுக்கீடு இல்லை. பல பொதுத் துறை அமைப்புகள் கார்ப்பரேட் முதலாளி களுக்குப் பிரித்துப் பிரித்து விற்கப்படுகிறது என்றெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். அதைவிட மிக முக்கிமானது என்னவென்று சொன்னால், இட ஒதுக்கீடு என்பதை ஒழிக்கவேண்டும். அப்படி ஒழித்துவிட்டால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற எதுவுமே இருக்காது.

தனியார்த் துறையில் எப்படி இட ஒதுக்கீடு முடியும்? என்று கேட்கவேண்டிய அவசியமில்லை. அதற்கொரு நல்ல பதிலை நம்முடைய தோழர் டி.கே.எஸ்.இளங் கோவன் அவர்கள் கூறினார்கள்.

ஒரு சட்டம் இயற்றினால், அந்த சட்டம் எல்லோ ருக்கும்தான் பொருத்தமாக இருக்கவேண்டுமே தவிர, அந்தச் சட்டம் ‘தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயாக இருக்கக்கூடாது’ என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

ஆனால், இதில் அலட்சியமாக இருக்கின்ற காரணத் தினால்தான், பல நேரங்களில் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது.

வங்கிகளே தனியார் மயம் 

ஆகிவிடக் கூடிய ஆபத்து

எனவே, இங்கேயே முதலில் ஏற்பாடு செய்வதற்குள், வங்கிகளே தனியார் மயம் ஆகிவிடக் கூடிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஏனென்றால், எங்கே இதுபோன்ற விழிப்புணர்வு வந்துவிடுமோ என்பதுதான் அதனுடைய அடிப் படையாகும்.

தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்வதற்கோ அல்லது தனியார்த் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொடுக்காதே என்று சொல்வதற்கோ, அப்படி கொடுத்தால், ‘‘தகுதி போய்விடும்’’; ‘‘திறமை போய்விடும்’’ என்று சொல்வதற்கோ இடமில்லை.

வளர்ந்த நாடு என்று அமெரிக்காவைத்தானே சொல்கிறீர்கள்? இன்றைக்கும் எடுத்துக்காட்டுகிறார்கள்; அங்கேதானே நோபல் பரிசு வாங்கியவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

பேராசிரியர் சுப.வீ. அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னதுபோல, ஒவ்வொரு நாட்டிற்கும் இட ஒதுக்கீடு பல துறைகளிலும் இருக்கிறது.

தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு கட்டாயம் இருக்கவேண்டும். அந்த சட்டத்தை அவர்கள் மீற முடியாது.  பொதுத் துறை அலுவலகத்தை விற்றால், எத்தனை பேர் இருக்கிறார்கள்; அங்கே இருக்கின்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் அத்தனை பேரும், தனித் தனியே இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறவர் களாக இருக்கிறார்கள்.

ஆகவே, அங்கே நிர்வாகம் கெட்டுப் போய்விட்டது என்று யாரும் சொல்ல முடியாது.

தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது

எனவே, தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது; அப்படி கொடுத்ததால், ‘தகுதி திறமை’ போய்விட்டது என்றும் சொல்ல முடியாது.

ஆகவே, தனியார்த் துறைக்கு இட ஒதுக்கீடு பொருந்தாதது என்றும் சொல்ல முடியாது என்று, எல்லா வகையிலும், எல்லா கோணத்திலும் இங்கே பதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆகவேதான், அடுத்தபடியாக இந்தப் போராட் டங்களை வலிமைப்படுத்தவேண்டிய கட்டாயம், அவசியம் இருக்கிறது.

இன்னொரு நகை முரண்பாடு இங்கே இருக்கிறது. அது என்னவென்றால், மற்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சிறு பான்மையினர் கேட்பார்கள். ஆனால், நம்முடைய நாட்டில் பெரும்பான்மையோர்தான் (அதாவது 85 விழுக்காடு உள்ளவர்கள்) எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்; இதுதான் மிகவும் விசித்திரமானது!

அரசமைப்புச் சட்ட பீடிகையில்...

அதைவிட இன்னொரு விசித்திரம் என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தில் எல்லோருக்கும் சொல்லக் கூடியது - அதில் உள்ள ‘பிரியாம்பிள்’ (றிக்ஷீமீணீனீதீறீமீ) என்று சொல்லக்கூடிய பீடிகையிலேயே மிகத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பது,

Justice, Social, Economic and Political  என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

எனவே, சமூகநீதிக்குத்தான் முதலிடம்.

ஆனால், முதலிடம் என்று சொல்லக்கூடிய சமூகநீதி போராடி, போராடி கொஞ்சம் கொஞ்சமாக, சொட்டு சொட்டாக வரக்கூடிய சொட்டுநீர்ப் பாசனம் போன்று இருக்கிறது. அவ்வளவுதான் - இங்கே உரிமைகள் தாராளமாக வரக்கூடிய சூழ்நிலை இல்லை.

யூனியன் வங்கி மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது

காரணம், நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. அந்த விழிப்புணர்வுக்கு யூனியன் வங்கி மற்ற வர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது என்பதில் மிகப்பெரிய பெருமையாகும்.

ஏனென்றால், நீங்கள் சரியான நேரத்தில், தெளிவான முடிவெடுத்து, வழிகாட்டக்கூடிய அளவிற்கு இதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.

இது எல்லா இடங்களிலும் பரவவேண்டும் என்று சொல்லும்பொழுது, எங்களைப் போன்றவர்கள் உங் களுக்கு என்றைக்கும் துணை நிற்கக் கூடியவர்களாக இருப்போம்.

பொதுவாக இங்கே நல்ல  அதிகாரிகள் இருக்கின்ற காரணத்தினாலும், இதில் இருக்கின்ற நியாயங்கள் நம் பக்கம் இருக்கின்ற காரணத்தினாலும், நீங்கள் வைக்கின்ற கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறக் கூடிய வாய்ப்பு கள் இருக்கின்றன.

ஆனால், பொதுவான கோரிக்கைகள் என்பது இருக்கிறதே, அதில் அரசியல் சாயம் கலந்து பூசிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், அவை அவ்வளவு சீக்கிரம் வராது.

வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடவேண்டும்; போராடவேண்டிய நேரத்தில் போராடவேண்டும்!

வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடலாம்; வாதாடி னாலும்   அது இனிமேல் பலன்தராது என்ற நிலை உருவானால், போராட வேண்டிய கட்டத்திற்கு நாம் செல்லுகிறோம்; நிச்சயம் போராட்டம்தான் அதற்குப் பதிலாக இருக்கும்.

அந்த வகையில், நீங்கள் உங்கள் உத்தியோகங்களில் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள். அறவழி ஆதரவு தாருங்கள்; எங்களைப் போன்றவர்கள் அதற்காகவே இருக்கின்றோம்; எனவே, அந்தப் பணியை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம்.

எனவே, நாம் இணைந்து பல்வேறு பகுதிகளில் - வெளியில் கருத்துகளை உருவாக்குவோம், வீதிகளில் போராடுவதற்கு நாங்கள் இருக்கிறோம். நீதிக்குப் போராட நீங்கள் இருங்கள்.

சமூகநீதியை வென்றிடவேண்டும்!

எல்லோரும் இணைந்து சமூகநீதியை வென்றிட வேண்டும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டியதுதான் மிக முக்கியமானதாகும்- 30  ஆவது ஆண்டில் எடுக்கக் கூடிய முடிவுகள் - உறுதிகள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:34 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: யூனியன் வங்கி, விருது

செவ்வாய், 7 மார்ச், 2023

தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

 

      March 07, 2023 • Viduthalai

*     சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு

* சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக்கின்றன!

* சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்!

* அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி!

தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாடுவோம்!

நாகர்கோவில், மார்ச் 7 சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு; சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக் கின்றன! சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்! அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி! தமிழ் நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும்  என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.03.2023) நாகர்கோவில் மாவட்டத்தில் நடைபெற்ற தோள்சீலை போராட்டம் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:

தோள்சீலை போராட்டம் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நிறைவுரையாற்ற அமர்ந்திருக்கக் கூடிய மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் சகாவு பினராயி விஜயன் அவர்களே,

எனக்கு முன்னால் உரையாற்றி அமர்ந்துள்ள மாண்பு மிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் அவர்களே, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, 

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர்  என்னுடைய பாசமிகு சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர்  மதிப்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்னுடைய பாசமிகு சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்  வீரபாண்டியன் அவர்களே, பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் அவர்களே,

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் நண்பர் மகேஷ் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் அருமை சகோ தரர் விஜய் வசந்த் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் அவர்களே, ராஜேஷ்குமார் அவர்களே, 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் அவர்களே, 

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தோழமைக் கட்சிகளைச் சார்ந் திருக்கக்கூடிய தோழர்களே, தோழமைக்கட்சி நிர்வாகி களே, அய்யாவழி சொந்தங்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். 

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாகப் பதிவாகி இருக்கக்கூடிய தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மிகுந்த பெருமைப்படு கிறேன், மகிழ்ச்சியடைகிறேன், வாய்ப்பினை தந்திருக்கக் கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

மனமார்ந்த பாராட்டுகள், நன்றி!

சனாதன ஜாதியப் பாகுபாட்டிற்கு எதிராக சமூக நீதிக்கு வித்திட்ட போராட்டத்திற்கு தோள் சீலைப் போராட்டம் என்ற அடைமொழியைக் கொடுத்து, அதனுடைய 200 ஆவது ஆண்டு விழாவை ஒரு சிறப்பான மாபெரும் பொதுக்கூட்டமாக இன்றைய தினம்  எழுச்சியுடன், ஏற்றத்துடன் ஏற்பாடு செய்திருக்கக் கூடிய ஒருங்கிணைப்புக் குழுவினர் அனைவருக்கும் என்னுடையது மனமார்ந்த பாராட்டுகளை, நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எத்தகைய இழிநிலை இந்த நாட்டில் 200 ஆண்டு களுக்கு முன்னால் இருந்தது? என்பதையும் - வீரமிக்க போராட்டத்தின் காரணமாக அந்த இழிநிலை எவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டது என்பதையும் - இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  நடத்தப் பட வேண்டும்.

இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளா தாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங் களைத் தொட்டுவிட்டது. 

இப்படிப்பட்ட உயரத்தில்தான் அய்ம்பது ஆண்டு களுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை. இப்படிப்பட்ட உயரத்தில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை.

எப்படி இருந்த நாம் - 

இப்போது இப்படி உயர்ந்திருக்கிறோம்!

ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிக்குள்ளும் அனைவரும் போக முடியாது. பஞ்சமர்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே வரக்கூடாது என்று போர்டு மாட்டி இருப்பார்கள். நாடகக் கொட்டகைகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ரயில் நிலையங்களில் உயர் ஜாதியினர் சாப்பிடத் தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வர்ணத்துக்கும் தனித்தனியாக பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தார்கள். 

80 வயதைக் கடந்த பெரியவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்குத்தான் தமிழ்ச் சமு தாயத்தில் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நடந் திருக்கக்கூடிய மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம் - இப்போது இப்படி உயர்ந்திருக்கிறோம் என்பது தெரியும். 

அப்படிப்பட்ட கால மாற்றத்தை உணர்த்துகின்ற விழாவாக இந்த தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழா அமைந்திருக்கிறது. 

ஈராயிரம் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து நின்றது தமிழ்ச் சமுதாயம்!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாக - தமிழ்ச் சமுதாயமானது ஈராயிரம் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண் பாட்டால் செழித்து நின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழினத்தினுடைய பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது

நேற்றைய தினம் கீழடியில் அருங்காட்சியகத்தை நான் திறந்து வைத்தேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் தலைசிறந்த நாகரிகமான வைகைக் கரை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டான இடம் கீழடி. உலகம் நாகரிகம் அடை வதற்கு முன்னதாகவே ஆடை அணிந்து வாழ்ந்தது மட்டுமல்ல, அணிகலன்களும் அணிந்து வாழ்ந்து வந்திருக்கக்கூடிய இனம்தான் நம்முடைய தமிழினம். அதனைத்தான் நமக்கு கீழடி காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழினத்தினுடைய பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது.

சூத்திரர்களையும், பெண்களையும் 

இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு

மதத்தின் பேரால் - ஜாதியின் பேரால் - சாத்திர சம் பிரதாயங்களின் பேரால் - புராணங்களின் பேரால் - மனிதரை மனிதர் பாகுபடுத்திவிட்டார்கள். ஆணுக்குப் பெண் அடிமை என்றாக்கி விட்டார்கள். சூத்திரர்களை யும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. தீண்டாமையை 'புனிதம்' ஆக்கினார்கள். மனி தனுக்கு மனிதன் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது - நேரில் வரக்கூடாது - படிக்கக் கூடாது என்று ஆக் கினார்கள். பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று ஆக்கி னார்கள்.

சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக்கின்றன!

இதற்கு எதிராக அருட்பிரகாச வள்ளலாரும், அய்யா வைகுண்டரும், அயோத்திதாச பண்டிதரும், பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியாரும் நடத்திய சீர்திருத்த இயக் கங்கள்தான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு தலைநிமிர வைத்திருக்கின்றன.  பக்தி வேறு - பாகுபாடு வேறு என் பதை உணர்த்தியவர்கள் இந்தத் தலைவர்கள்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடியது அதிகமாக இருந்தது. 

ஒடுக்கப்பட்ட மக்கள்,

* குடை எடுத்துச் செல்லக் கூடாது.

* செருப்பு அணியக் கூடாது

* பசு வளர்க்கக் கூடாது.

* வீட்டுக்கு ஓடு போடக் கூடாது.

* ஒரு மாடிக்கு மேல் கட்டக் கூடாது

* முரட்டுத் துணிதான் அணிய வேண்டும் - என்றெல்லாம் இருந்தது.

'முலைவரி' என்ற வரியையே போட்டார்கள்!

இந்தத் திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமு தாயத்துப் பெண்கள் அனுபவித்த துன்ப துயரம் என்பது மற்ற பகுதிகளில் இல்லாதது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், மார்பில் சேலை போடக் கூடாது என்பதைப் போன்ற இழிநிலை வேறு எங்கும் இல்லை. இதனை மீறி சேலை போட்டுக் கொள்ள முயற்சித்த பெண்கள் தாக்கப்பட்டார்கள். சித்ரவதை செய்யப்பட் டார்கள். இதை விடக் கொடூரமாக 'முலைவரி' என்ற வரியையே போட்டிருக்கிறார்கள். 

இதைவிட அநியாயம் இருக்க முடியுமா?

அப்படி வரிகட்டாத காரணத்தால் தனது மார்பையே அறுத்து எறிந்தாள் ஒரு பெண். அதுதான் 'முலைச்சிப் பறம்பு' வழிபாட்டுத் தலமாக இன்றும் இருக்கிறது.

முலைவரிக்கு எதிராக 1822 ஆம் ஆண்டு போராட் டம் தொடங்கியது. அய்ம்பது ஆண்டு காலம் இந்த மண்ணிலே வீரம்மிக்க போராட்டங்கள் நடந்தது.

சீர்திருத்த கிறித்துவ இயக்கத்தினர் இந்த போராட் டத்திற்குத் துணையாக இருந்தார்கள்.

புதிய வழியை உருவாக்கிய 

அய்யா வைகுண்டர்

அய்யாவழி என்ற புதிய வழியை உருவாக்கிய அய்யா வைகுண்டர் இந்தப் போராட்டத்திற்குத் துணை யாக இருந்தார். திறந்த மார்போடு பெண்கள் இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து பரப்புரை செய்தார் அய்யா வைகுண்டர் அவர்கள். பொதுக்கிணறுகள் உருவாக்கினார். சிதறிக் கிடந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் அனைத்துத் துன்பங்களும் ஒழியும் என்று தூண்டியவர் அய்யா வைகுண்டர் அவர்கள். அன்புக்கொடி என்ற மதப் பிரிவையே உரு வாக்கினார். அடித்தள மக்கள் அனைவருக்கும் தலைப் பாகை கட்டி விட்டார். பெண்கள் இடுப்பில் குடம் எடுக் கக் கூடாது என்று அந்தக் காலத்தில் தடை இருந்தது. அதை உடைத்து இடுப்பில் தண்ணீர்க்குடம் கொண்டு வரக் கட்டளையிட்டவர் அய்யா வைகுண்டர் அவர்கள்.

'தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம்' என்று சொன்னவர் அவர். இதன் விளைவாகத்தான் 1859 ஆம் ஆண்டு உத்தரம் திருநாள் அரசர் உத்தரவு போட்டார். தோள்சீலை அணியலாம் என்ற உரிமை அதன்பிறகுதான் கிடைத்தது.

இந்த வெற்றிக்குக் காரணமான,

* அய்யா வைகுண்டர்

* கர்னல் மன்றோ

* பீட் பாதிரியார்

* ரிங்கல் தவுபே பாதிரியார் - ஆகியோர் நம் அனை வராலும் வணங்கத் தக்கக்கூடியவர்கள். நமது நன்றிக் குரியவர்கள்.

இப்படி எத்தனையோ படிகளைத் தாண்டித்தான் இப்போது இருக்கும் உயரத்தை நாம் பெற்றுள்ளோம். 

இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக - பொருளாதார ரீதியாக எத்தனையோ கெடுதல்களை பிரிட்டிஷ் ஆட்சி செய்திருந்தாலும் சமூகரீதியாக பல்வேறு சீர்திருத்தச் சட்டங்களையும் உருவாக்கிக் கொடுத்ததை மறுப்பதற் கில்லை.

* மனிதர்களை அடிமைகளாக விற்க தடை

* பெண் குழந்தைகளைக் கொல்லுதல் கொலைக்கும் சமமானது என  அறிவிப்பு.

* உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு.

* அனைத்து ஜாதியினரும் ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம், 

*  நகைகள் அணியலாம் என்ற உத்தரவு.

* நரபலிக்குத் தடை

* வேலைவாய்ப்பில் ஜாதிப் பாகுபாடு கூடாது.

* சட்டம் அனைவருக்கும் பொது.

* அனைவருக்கும் கல்வி

* கைம்பெண்கள் மறுமணம் செய்யலாம்

* சிறுமிகள் திருமணத்துக்கு தடை.

* திருமண வயது மசோதா.

* ஆதிதிராவிடர் நிலம் மற்றும் சொத்து வாங்குவதைத் தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வகுப்புவாரி உரிமையை வழங்கிய

நீதிக்கட்சியின் சாதனைகள்!

இப்படி எத்தனையோ சமூக சீர்திருத்தங்கள் பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சியானது இதனை முழுமையாகச் செய்து காட்டியது.

வகுப்புவாரி உரிமையை 1922 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி.

அனைவருக்கும் கல்வி என்பதை கட்டாயம் ஆக்க நீதிக்கட்சி அரசு 9.03.1923 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டது.

எந்த சமூகத்தைச் சேர்ந்தவரையாவது பாகுபாடு பார்த்து கல்விச் சாலைக்குள் அனுமதிக்க மறுத்தால், அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்பதை நீக்கியது.

நாட்டிலேயே முன்னோடியாக பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது.

பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்ற ழைக்கக்கூடிய அரசாணை போடப்பட்டது.

சாணார் என்பதை நீக்கி நாடார் என அரசாணை போடப்பட்டது.

பட்டியலின மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டது.

குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயி லுக்குப் பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க வில்லை என்றால், பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப் படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அவர்கள்.

பள்ளிச்சாலைகளை அனைவருக்கும் திறந்து விட்டது நீதிக்கட்சி ஆட்சி.

இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களை அதிகள வில் திறந்தவர்தான் பெருந்தலைவர் காமராசர் அவர் கள். அதனால்தான் அவரை 'பச்சைத்தமிழன்' என்று புகழ்ந்தார் தந்தை பெரியார் அவர்கள். அதைத் தொடர்ந்து வந்த பேரறிஞர் அண்ணா அவர்களும், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் கல்விக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார்கள். கல்லூரிக் கல்வியை ஊக்குவித்தார்கள்.

அனைத்து சமூக மக்களையும் சமூக, 

அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே 'திராவிட மாடல்' ஆட்சி!

இன்றைய 'திராவிட மாடல்' அரசானது உயர்கல்விக்கு, ஆராய்ச்சிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வரு கிறது. அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. 

நம்மை ஏன் இன்றைக்கு சிலர் எதிர்க்கிறார்கள்? இந்தக் காரணங்களுக்காகத்தான். காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை இவர்கள் உயர்த்து கிறார்களே என்பதால்தான் எதிர்க்கிறார்கள். 

வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டிய பெண் ணுக்கு இலவசப் பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்களே என்ற காரணத்தால்தான் எதிர்க் கிறார்கள்.

படிக்க வரும் பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்களே என்பதால்தான் எதிர்க்கிறார்கள்.

சமூகநீதிதான் நமது 

திராவிட இயக்கத்தினுடைய 

முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்!

மற்றவர்கள், அதாவது நாம் எல்லாரும் முன்னேறுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அனைவரையும் நாம் முன்னேற்றுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நம்மை எதிர்க்கிறார்கள். இதைப்பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள் ஆகும்.

தமிழ்நாடு - கேரள அரசு சார்பில் 

வைக்கம் நூற்றாண்டு விழா!

காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டு வைக்கத்துக்குப் போய் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத்தைத் தொடங்கி, அதில் அனைவரும் கைதான பிறகு - இந்தப் போராட்டம் நின்று விடக் கூடாது என்ற நோக்கத்தோடு, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று போராடி னார். மனைவி நாகம்மையாரையும் அழைத்து வந்தார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.

''அந்தப் போராட்டம்தான் எனக்கு ஊக்கமளித்த போராட்டம்'' என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம்.

கேரளாவில் இருந்து வந்திருக்கக்கூடிய  முதல மைச்சர், நம்முடைய மரியாதைக்குரிய மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும் இங்கு வந்திருக்கிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானாக எதுவும் மாறிவிடவில்லை.  நமது தலைவர்களால் - நமது முன்னோடிகளால்- அவர்களது போராட்டங்களால் - தியாகங்களால்தான் அனைத்தும் மாறி இருக்கின்றன.

சமூக அழுக்குகளை சட்டத்தாலும் மாற்றவேண்டும். மனமாற்றத்தாலும் மாற்ற வேண்டும். அரசுகள் சட்டம் போட வேண்டும். சீர்திருத்த எண்ணம் கொண்டவர்கள் இது போன்ற விழாக்களின் மூலமாக மனமாற்றங்களை உருவாக்க வேண்டும்.

நமது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்வோம்

ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் மொத்த மாகத் துடைத்துவிட முடியாதுதான். ஆனாலும் நமது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்வோம்.

'தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' - என்ற அய்யா வைகுண்டரின் முழக்கத்தை எந்நாளும் எதிரொலிப்போம்! எதிரொலிப்போம்! எதிரொலிப்போம்! என்று உங்கள் அனைவரிடத்தில் நான் என்னுடைய உறுதிமொழியாக ஏற்று, வாய்ப்பு தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:10 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆண்டு விழா, தோள்சீலை போராட்டம், மு.க.ஸ்டாலின்

ஞாயிறு, 5 மார்ச், 2023

பெரியார் குடும்பத்துப் பெண்கள்தான்!

 

    February 04, 2023 • Viduthalai

1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி! வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கு பெற 5 பெண்கள் வந்தனர். நாகம்மையார் (பெரியார் துணைவியார்), எஸ்.ஆர்.கண்ணம்மாள் (பெரியாரின் தங்கை), திருமதி நாயுடு, திருமதி சாண்ணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றனர். தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்கு தலைமை தாங்கியவர் பெரியாரின் துணைவியார், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து; தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. எல்லோரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று நாகம்மையார் கூறினார்.

மீனவர்கள் மீன் கூடையைத் தூக்கிக் கொண்டு போகக் கூட இங்கே அனுமதிக்கும்போது, மனிதர்கள் நடமாட ஏன் அனுமதி மறுக்க வேண்டும் என்று பெரியாரின் சகோதரி கேட்டார். தடையை மீற வந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து பல மணி நேரம் அதே இடத்திலே இருந்தனர்.

இறுதியாக பிச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார். “பெண்கள் என்பதற்காக தனிச் சலுகை எதுவும் காட்ட வேண்டாம்; ஆண்களை எப்படிநடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் சர்மாவுக்கு உத்தரவிட்டார்.

- மலையாள தினசரி கேரள கவுமதி 1924 மே மாதம் 23ஆம் தேதி வெளியிட்ட செய்தி.

(குறிப்பு: கிளர்ச்சியில் பங்கு கொண்ட பெண்களை எப்படி நடத்துவது என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருப்பதன் மூலம், இந்தக் கிளர்ச்சியில் முதலில் பங்கு பெற்றவர்கள் தந்தை பெரியார் குடும்பத்து பெண்கள்தான் என்பது விளங்குகிறது.)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:03 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கண்ணம்மாள், நாகம்மையார், வைக்கம்

தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் - அய்யா வழி



   March 05, 2023 • Viduthalai

சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் ஜாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல் வன்கொடுமை நிகழ்த்தும்போது, அவைகளை எதிர்த்துப் போராடிப் புதுச் சமூக விழுமியங்களையும், அறங்களையும் வென்றெடுக்கும் போராளிகளைச் சமூகமே உருவாக்குகிறது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் கேரளத்திலும் கேரளத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த இன்றைய தமிழ்நாட்டின் குமரி மாவட்டப் பகுதியிலும் மக்களுக்கான மாபெரும் போராளிகள் உருவானார்கள். அவர்கள் அய்யன்காளி, நாராயண குரு மற்றும் வைகுண்ட சாமி என்னும் முத்துக்குட்டி சாமிகள். இவர்களில் காலத்தால் மூத்த, மிகப் பெரிய விழுப்புண்கள் பெற்ற சமூகப் போராளியான வைகுண்டரை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1050 ஜாதிகள்

அக்காலங்களில் கேரளம், 1050 ஜாதிகள் கொண்டதாக, பார்ப்பனர்களிடையே உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரிகளின் ஜாதிய ஆட்சிக் கூடாரமாக இருந்தது. நம்பூதிரிகளும், நாயர்களும், வெள்ளாளர்களும் கூட்டுச் சேர்ந்து மிகக் குரூரமான முறையில் மனுதர்ம நடைமுறைகளை அமல்படுத்தி, யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஜாதி வன்கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அன்றைய கேரளத்தைப் ‘பைத்தியக்காரர்களின் கூடாரம்’ என்றார் விவேகானந்தர்.

எந்த ஜாதியாக இருந்தாலும் மீன் மாமிசம் சாப்பிடுபவர்கள் தாழ்ந்த ஜாதி. மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் மிகவும் தாழ்ந்த ஜாதி. நாடார்களும் ஈழவர்களும்  தாழ்ந்த ஜாதி. புலையர்கள் தாழ்ந்த ஜாதி யிலும் தாழ்ந்த ஜாதி. அவர்கள் அடிமைகளாவே நடத்தப்பட்டார்கள். பெண்கள் மாதவிலக்குக் காரணமாகத் தாழ்ந்தார்கள்.

நம்பூதிரிகளை நாயர்கள் நெருங்கலாம். தொடக்கூடாது. நம்பூதிரிகளிடம் இருந்து நாடார், ஈழவர் போன்றோர் முப்பத்தாறு அடி தள்ளியும், புலையர் போன்றோர் தொண்ணூறு அடி தள்ளியும் நிற்க வேண் டும். நாயரிடம் இருந்து நாடார், ஈழவர்கள் பன்னிரண்டு அடி தள்ளியும், புலையர் போன்றோர் அறுபத்து நான்கு அடி தள்ளியும் நிற்கவேண்டும். இப்படியே 1050 ஜாதிகளுக்கும் தூரக் கணக்குகள் இருந்தன. தீட்டுத் தூரத்தை மீறுபவர்கள், நாயர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

கேரள அரசர்கள் மக்களிடம் வசூலித்த வரியைப்போல, உலகின் வேறு எந்த நாட்டிலும் வசூலிக்கப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக நாடார்களும் ஈழவர்களும் இந்த வரிவிதிப்பால் மிகவும் துன்பத்துக்கு ஆளானார்கள்.

வரிக்குமேல் வரி

சுமார், நூற்றுக்கும் மேற்பட்ட வரிகளை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது. உயிரோடு இருக்கும் 16 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தலைவரி செலுத்த வேண்டும். செத்தவர்களுக்கும் வரி. சொத்து மதிப்பில் 40 சதவிகிம் வரி. நாடார்கள் தங்கள் வீட்டுக்கும், வீட்டுக்கு ஓலை போட்டாலும் வரி. புல் அறுக்கிறவர்களும், சுமை தூக்குபவர்களும் வரி செலுத்த வேண்டி இருந்தது. பனை ஏறுகிறவன், அவன் ஏறும் ஏணிக்கு வரி; பனை ஏறும்போது அவன் காலில் இட்டுக் கொள்ளும் தளை நாருக்கும் வரி; நிலத்தைத் தரிசாகப் போட்டாலும் வரி. பெண்களுக்கு முலை வளர்ந்தால் முலை வரி, தாலிக்குத் தாலி வரி. சிலவகை ஆடைகள் அணிகள் அணிய, குடைபிடிக்க, பல்லக்கில் போக வரி. மீசை வளர்த்தால் கூட வரி  உண்டு. கல்யாணத்துக்கும் வரி. கருமாதிக் கும் வரி.

எல்லாவற்றுக்கும் மேலான கொடுமை, நாடார் மற்றும் ஈழவர் பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதிக்கப்பட வில்லை. அது ஒரு மரியாதைச் சின்னமாகக் கருதப்பட்டது. நம்பூதிரி பெண்கள் இறைவனுக்கு முன்னால், மார்பைத் திறந்து போட்டார்கள். நாயர் பெண்கள், தமக்கு மேலே உள்ளோர், நம்பூதிரிகள், அரசு அதிகார மய்யத்தினர்கள் முன் மார்பைத் திறந்து போட வேண்டும். நாடார், ஈழவர் முதலான தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்த பெண்கள் எப்போதுமே எவர் முன்பும் மார்பை மூட முடியாமல் இருந்தது. அவர்கள் இடுப்புக்குக் கீழே, முட்டிக்கு மேலே மட்டும் ஏதேனும் சாக்கு மாதிரியான ஆடை (முண்டு) அணிந்து கொள்ளலாம். குடத்தை இடுப்பில் சுமக்கக் கூடாது. தலையில்தான் சுமக்க வேண்டும். மொத்தத்தில் நாய், மாடுகள், பன்றிகளுக்குச் சுதந்திரம் இருந்த அளவுக்குக்கூட தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்ட மக்களுக்கு இல்லை.

இவ்வளவு தாழக் கிடப்பாரைக் கை தூக்கி விடக் காலம் இருபெரும் சக்திகளை உருவாக்கித் தந்தது. ஒன்று சீர்த்திருத்தக் கிறிஸ்தவம். மற்றது, வைகுண்ட சாமியின் தோற்றமும் தொண்டும்.

1810-க்குப் பிறகு திருவிதாங்கூர் (கேரளா) அரசு, கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது. அது ஆங்கில, அய்ரோப்பிய கிறிஸ்தவச் சமயப் பாதிரியார்களின் வருகைக்கு நல்ல வழியாக அமைந்தது. குறிப்பாக இந்தப் பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு சீர்திருத்தக் கிறிஸ்தவம் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். முறையான, ஜாதி அடிப்படையில் அல்லாத நீதிமன்றங்களையும், தாழ்த்தப்பட்டவர்க்கும் பெண்களுக்கும் இடம் கொடுத்த கல்விக் கூடங்களையும் இந்தக் கிறிஸ்தவர்களே முதல் முறையாக இந்தப் பகுதியில் அமைத்தார்கள்.

 வைகுண்டரின் தோற்றம்

இந்தச் சூழலில்தான் வைகுண்டர் தோன்றுகிறார்.

வைகுண்ட சாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரிக்கு அருகே உள்ள சாஸ்தான் கோவில்விளை (அதன் இன்றைய பெயர் சாமித்தோப்பு) என்ற ஊரில் 1809-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, பொன்னு நாடார் - வெயிலம்மை தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இந்த ஆண்டில் மயிலாடியில் சீர்த்திருத்த கிறிஸ்தவ சமயம் வேர்விட்டது. வைகுண்ட சாமிக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அக்காலத்தில் இப்படியான இரட்டைப் பெயர்கள் வைக்க நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே பள்ளிக்கூடத்தில் அவருக்கு முத்துக்குட்டி என்று வைக்கப்பட்டது. வைகுண்ட சாமி, தன் வாழ்க்கை முறையினூடகவே, சமூக வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொண்டு வந்தார். தென் திருவிதாங்கூரின் இந்த நாகர்கோவில் குமரிப் பகுதி ஏடுகள் நிறைந்த மாவட்டம். மாலையானால் மக்கள் ஏடு படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். வைகுண்டர் ஏடும் எழுத்தும் கற்றார். தாமரைக் குளம் கிறிஸ்தவப் பள்ளியிலும் அவர் கற்றிருக்கிறார். கிறிஸ்தவ விவிலியத் தில் (பைபிள்) அவருக்கு நிறைந்த ஞானம் இருந்தது. இளமையிலேயே சீர்திருத்த மனோபாவம் அவரிடம் இருந்தது.    

அந்தக் காலத்தில் பொதுக் கிணற்றில் எல்லா ஜாதியாரும் நீர் அருந்த முடியாது. வைகுண்டர் ஒரு சமூகப்புரட்சி செய்தார். அவரே ஒரு கிணறு வெட்டி பள்ளு பறை என்று சொல்லப்பட்ட அனைத்து ஜாதியாரையும் அந்த முந்திரிக் கிணற்றில் குளிக்கவும் குடிக்கவும் செய்தார். இதன் மூலம் ஜாதி ஒடுக்கு முறைக்கு ஆக்கபூர்வமான ஒரு புதிய மறுப்பைத் தந்தார்.

கல்விப் பணியிலும் தீவிரமான கவனம் செலுத்தினார் வைகுண்டர். தன் சீடர்களைக் கொண்டு பல நிழல் தாங்கல்களை ஏற்படுத்தினார். நிழல்தாங்கல்கள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும், இரவில் சமூகக் கூடங்களாகவும், இராப் பள்ளிக் கூடங்களாகவும் செயல்பட்டன. வழிப்பாட்டு மன்றமாகவும் அவை செயல்பட்டன. வைகுண்டர், ஹிந்து மதத்தில் இல்லாத கூட்டு வழிபாட்டு முறையை ஜாதி பேதமின்றி உருவாக்கிக் தந்தார். அன்புவழி, சமயம் முதல்முதலாகக் கூட்டு வழிபாட்டு முறையை எல்லாத் தாழ்த்தப்பட்ட வகுப்பார்க்கும் உரிய முறையை ஏற்படுத்தியது.

தலைப்பாகை

அக்காலத்தில் அடிமைச் சின்னமாக, நாடார்கள் உள்ளிட்டு தாழ்த்தப்பட்ட ஜாதியார் எவரும், தலைப்பாகை அணியக் கூடாது. வைகுண்டர், ‘நீ யாருக்கும் அடிமை இல்லை. தலைப்பாகையைக் கட்டு’ என்றார். தலைப்பாகை கட்டிக் கொண்டே கோயிலுக்குள் பிரவேசம் செய்ய வேண்டும் என்றார். இன்னும், வைகுண்டர் உருவாக்கிய பதிகளில் (கோயில்களில்) அந்த நிலைமையே நீடிக்கிறது. தலைப் பாகையோடுதான் உள்ளே நுழைய வேண்டும்.

பெருந்தெய்வக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர்க்கு நுழைவுரிமை இல்லை, அக்காலங்களில். இன்றும்கூட பல கோயில்களில் அப்படித்தான். ஆகவே, வைகுண்டர் தாமே பல பதிகளைக் கட்டினார். அவர் வாழ்நாளில் ஏழு பதிகளையும், ஏழு நிழல் பதிகளையும் கட்டி இருக்கிறார்.

வைகுண்டர் உருவாக்கிய கோயில்களில் சிலைகள் இல்லை. மாறாகக் கருவறையில், கண்ணாடியும், கண்ணாடி முன் ஒரு விளக்குச் சுடரையும் வைத்தார். கண்ணாடியினுள் தெரியும் நீயே கடவுள். உனக்குள் சுடரும் ஒளியே கடவுள். உருவ வழிபாட்டுக்கு மாற்றான ஒளி வழிபாட்டை மக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஞானி வைகுண்டர் என்றால் தவறு இல்லை. ஒளி ஜாதி மதம் இனம் கடந்த இயற்கை. சூரியன் போல எல்லோருக்கும் மேலே இருந்து எல்லோருக்கும் சமமாக ஒளியைத் தருவது. சமத்துவமே இயற்கை அல்லது கடவுள்.

கோயிலுக்குள் ஆரவாரத்தை மறுத்தார் வைகுண்டர். ‘காணிக்கை போடாதீங்கோ, காவடிகள் தூக்காதீங்கோ' என்றார் அவர்.

வைகுண்டரின் புகழும் தத்துவங்களும் திருவிதாங்கூர் அரசனை அச்சம் கொள்ள வைத்தன. அவன், அவரைச் சிறைபிடிக்க நினைத்தான்...

மேலாடைக்குத் தடை

கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த ஹிந்து நாடாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் ஜாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 ஜாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் ஜாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் ஜாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஜாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிறிஸ்தவப் பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.

போராட்டத்திற்கான காரணம்

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜென்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றான்டுகளில் ஆரியப் பிராமணர்களினதும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் ஜாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல்ஜாதி ஹிந்து என்றும், கீழ்ஜாதி ஹிந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்த தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு. உயர்ந்த ஜாதி ஹிந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்க கூடாது, அதேப் போன்று ஜாதி வரிசையின் அடிப்படையில் கீழ் ஜாதி ஹிந்து பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ் உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுப்பாடு

திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் ஜாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு அனைத்து ஜாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப்போராட் டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைப்பெற்றது.

முதல் போராட்டம்

சீர்திருத்தக் கிறிஸ்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறிஸ்தவ பெண்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனால் கிறிஸ்தவ பெண்கள் தங்கள் மார்பகங்களை துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் ஜாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ஆம் ஆண்டு கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் அய்யர் என்ற அய்ரோப்பிய மறைப்பணியாளர் ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இந்நிகழ்வுகளைப் பற்றி விரிவாக கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேய தளபதி கார்னல் நேவால் பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரனைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டப் போராட்டம்

மிக அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827ஆம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறிஸ்தவப் பெண்கள் உயர்ஜாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. இதனால் கிறிஸ்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட அய்ரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் ஜாதி பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர் களைப் பின்பற்றி ஹிந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி (வைகுண்டர்) போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மூன்றாம் கட்டப் போராட்டம்

1858ஆம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 

நெய்யாற்றின்கரையில் தொடங்கியப் போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அய்ரோப்பிய மறைபரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30, 1859 ஆம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறிஸ்தவ நாடார்களுக்கும் உயர் ஜாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. ஹிந்து நாடார்களும் கிறிஸ்தவர்களுடன் இதில் கைகோர்த்து கொண்டனர்.

உடை உடுத்த உரிமை

இப்போராட்டத்தின் விளைவாகவும் ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் ஜாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமைகளை மற்ற கீழ் ஜாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறிஸ்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.

வைகுண்ட சாமிகள்

மயிலாடன்

வைகுண்டசாமிகள் என்பவர் குமரியில், அன்று பெரிதும் ஒடுக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களின் தன்மானத்திற்காகப் போர்க்கொடி தூக்கிய பெருமகனார் ஆவார்.

கன்னியாகுமரிக்கு அருகில் பூவண்டன்தோப்பு எனும் கிராமத்தில் நாடார் சமூகத்தில் பிறந்தவர் (1809)

முடிசூடும் பெருமாள் என்று பெயரிடப்பட்டார். தாழ்ந்த ஜாதியினருக்கு இத்தகு மேன்மை தாங்கிய பெயரைச் சூட்டக்கூடாது என்பதுதானே மனுதர்மம்? மன்னர்ஆட்சி தடுத்தது. விளைவு புதுப்பெயர் முத்துக் குட்டி.

அன்றைய தினம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மரம் ஏறும் மக்கள் சாணார் என்று அழைக்கப்பட்டனர். உரிமைகள் அறவே மறுக்கப்பட்ட பரிதாபத்துக்குரியவர்களாக அவர்கள் ஒடுக்கப்பட் டனர். நம்பூதிரிப் பார்ப்பான் எதிரே வந்தால் அவர்கள் 36 அடிதூரம் விலகி நிற்க வேண்டும். நாயரிடமிருந்து 12 அடி தூரம் ஒதுங்க வேண்டும். பொதுவீதிகளில், சாலைகளில் நடக்க உரிமையில்லை. பெண்கள் ரவிக்கை (தோள் சேலை) அணிந்திடத் தடை!.

மன்னர் ஆட்சி மனுதர்ம ஆட்சியாகச் சீறியது. இந்த நிலையில் தான் வைகுண்ட சாமிகள் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட முத்துக்குட்டி சமத்துவ சங்கம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

அவர் ஆன்மிகக் குடைக்குள்ளேயே சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தார். அதே நேரத்தில் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காணிக்கை கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது என்றார். மாந்திரீகர்களிடம் மதி மயங்காதீர் என்று எச்சரித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளில் உணவருந்துமாறு தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

காவி நிறத்தில் வெள்ளைத் தீபச் சுடரைத் தாங்கிய கொடியை அறிமுகப்படுத்தினார். ஒரு வகையில் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சாயலை இவரிடம் காண முடியும்.

மன்னரையும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத் துணிந்த அவர் 110 நாள்கள் கொடுஞ்சிறையையும் அனுபவிக்க நேர்ந்தது.

இன்றைய நிலை என்ன தெரியுமா? சென்னை மணலியில் அவருக்குக் கோயில் கட்டி கோபுரங்கள் எழுப்பி, தேர்த் திருப் பணியையும் நடத்தியுள்ளனர்.

எந்த உருவ வழிபாடு கூடாது என்றாரோ, அந்த உருவ வழிபாட்டை, அவரையே கடவுளாக்கி நடத்துகின்றனரே.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்று தந்தை பெரியார் சிலைகளின்கீழ் கடவுள் மறுப்பு பொறிப்பதன் முக்கியத்துவம் புரிகிறதா?


“விடுதலை”  20-4-2010  


இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:54 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தோள் சீலைப் போராட்டம்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வைக்கம் வீரர்

வைக்கம் வீரர்
வைக்கம் நூற்றாண்டு

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (14)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ▼  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ▼  மார்ச் (8)
      • கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர்...
      • முதல் பெரியார் சமூகநீதி விருது
      • தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி...
      • தமிழர் தலைவருக்கு ''சமூகநீதிப் போராளி'' விருது!
      • யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் ...
      • தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்ச...
      • பெரியார் குடும்பத்துப் பெண்கள்தான்!
      • தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்...
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (11)
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)

சிறப்புடைய இடுகை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

    Viduthalai     March 30, 2023     தமிழ்நாடு, தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு என்னென்ன திட்டங்கள்? வைக்கம் போராட்டம் தொ...

பின்பற்றுபவர்கள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Translate

லேபிள்கள்

  • - துரை.சந்திரசேகரன்
  • 100 நாட்கள்
  • 1944
  • அஞ்சல் தலை
  • அஞ்சா நெஞ்சன்
  • அடிக்கல்
  • அண்ணா
  • அதியமான்
  • அதிரடி க.அன்பழகன்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ரோப்பிய பயணம்
  • அயோத்தி தாசர்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அரசாணை
  • அரசியல் சட்டம்
  • அருஞ்செயல்
  • அருணன்
  • அழகிரி
  • அறப்போர்
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிவிப்பு
  • அறிவுக்கரசு
  • அனைத்து ஜாதியினர்
  • ஆங்கிலேய அதிகாரி
  • ஆங்கிலேயர்
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆண்டு விழா
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிதிராவிடர்
  • ஆர்கே சண்முகம்
  • ஆலய நுழைவு
  • ஆலயப் பிரவேசம்
  • ஆலயப் போராட்டம்
  • ஆலயம்
  • ஆறக்கட்டளை
  • ஆனந்த விகடன்
  • இசை
  • இதழ்கள்
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தியர்
  • இந்து
  • இயக்கம்
  • இரங்கலுரை
  • இரஞ்சித்
  • இரட்டை மலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இரட்டைமலை சீனிவாசன்!
  • இரயில்
  • இரயில்வே
  • இராமச்சந்திரன்
  • இராஜாஜி
  • இலக்கணம்
  • இலங்கை
  • இலண்டன்
  • இழிவு
  • இழிவு நீக்கம்
  • இளைஞரணி
  • இறுதி முழக்கம்
  • ஈரோடு
  • ஈவேரா பெரியார்
  • ஈழம்
  • உடைப்பு
  • உண்மைகள்
  • உணவகம்
  • உணவு விடுதி
  • உத்தரவு
  • உபநிஷத்
  • உரிமை
  • உரை
  • உரை சுருக்கம்
  • உரையாடல்
  • உஸ்மான்
  • எச்சரிக்கை
  • எடைக்கு எடை தங்கம்
  • எண்ணெய்
  • எதிர்நீச்சல்கள்
  • எம்.ஆர்.ராதா
  • எரிப்பு
  • எல்லா ஜாதியாரும்
  • எழுத்தாளர்
  • எழுதிய பெருமக்கள்
  • எளிமை
  • ஏ.பி. ஜனார்த்தனம்
  • ஏடுகள்
  • ஒடியா
  • ஒப்பற்ற தலைமை
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓட்டப் படம்
  • கடலூர்
  • கடவுள் மறுப்பு
  • கண்ணதாசன்
  • கண்ணம்மா
  • கண்ணம்மாள்
  • கணக்கு
  • கம்யூனிசம்
  • கருப்பர்
  • கல்பாத்தி
  • கல்வி
  • கலப்புமணம்
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கருணானந்தம்
  • கவிஞர் கலி. பூங்குன்றன்
  • கழகம்
  • கள்ளுக்கடை
  • கன்னட மொழி
  • கன்னடம்
  • காணொலி
  • காமராசர்
  • கி. வீரமணி
  • கி.வீரமணி
  • கீழ்வெண்மணி
  • கீழ்ஜாதி
  • குடந்தை மாணவர்
  • குடிஅரசு
  • குடிஅரசு இதழ்
  • குடிஅரசு ஏடு
  • குடியரசு
  • குமுதம்
  • குழந்தை
  • குழந்தைகள் இல்லம்
  • குற்றப் பரம்பரை
  • குறிப்புகள்
  • கூட்டம்
  • கேரள முதலமைச்சர்
  • கேரளா
  • கேள்வி பதில்
  • கைது
  • கொடும்பாவி
  • கொடுமை
  • கொள்கை
  • கொள்கைகள்
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோவில்
  • கோவில் நுழைவு
  • கோவில் பிரவேசம்
  • சங்ககாலம்
  • சங்கம்
  • சங்கீதம்
  • சங்கொலி
  • சட்ட எரிப்பு
  • சட்டம்
  • சத்தியவாணி முத்து
  • சமயம்
  • சமஸ்கிருதம்
  • சமுதாயம்
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சவுந்தரபாண்டியன்
  • சாதனை
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாதிவெறி
  • சாலை
  • சாலை நுழைவு
  • சிகிச்சை
  • சிங்கப்பூர்
  • சித்த மருத்துவம்
  • சிலை திறப்பு
  • சிவக்கொழுந்து
  • சிறந்த நூல்
  • சிறை
  • சீர்திருத்தத் திருமணம்
  • சுசீந்திரம்
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை சங்கம்
  • சுயமரியாதை திருமணம்
  • சுயமரியாதைஇயக்கம்
  • சுயமரியாதைத் திருமணம்
  • சுவரெழுத்து சுப்பையா
  • சுவரொட்டி
  • சூத்திரர்கள்
  • செங்கல்பட்டு
  • செருப்பு
  • சென்னை
  • சேரன்மாதேவி
  • சேலம்
  • சேலம் மாநாடு
  • சைவம்
  • சொத்துரிமை
  • டார்பிடோ
  • டி..எம்.நாயர்
  • டிரஸ்ட் வழக்கு
  • டில்லி
  • டெக்கான் கிரானிக்கல்
  • த இந்து
  • தஞ்சை
  • தடியடி
  • தடை ஆணை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் விருது
  • தம்மம்பட்டி
  • தமிழ்
  • தமிழ் இந்து
  • தமிழ் திசை
  • தமிழ்த் தொண்டு
  • தமிழ்நாடு
  • தமிழகம்
  • தமிழர்
  • தமிழர் உரிமை
  • தமிழர் தலைவர்
  • தமிழில் பாட்டு
  • தமிழில் வழிபாடு
  • தலைமை
  • தலைவர்
  • தவமணிராசன்
  • தளபதி ராஜ்
  • தன் நிலை
  • தனித் தமிழ்நாடு
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திட்டங்கள்
  • திடீர் பிள்ளையார்
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் நகர்
  • திராவிடக் கொள்கை
  • திராவிடம்
  • திராவிடர் இயக்கம்
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் தளபதி
  • திராவிடர் திருநாள்
  • திரு
  • திருக்குறள்
  • திருச்சி
  • திருநாவுக்கரசு
  • திருமணம்
  • திருவாங்கூர்
  • திருவிதாங்கூர்
  • தில்லி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துக்ளக்
  • துண்டு
  • துணிவு
  • தெரியுமா
  • தெருவில் நடக்க தடை
  • தேர்தல்
  • தேவதாசி
  • தேவாரம்
  • தொண்டு
  • தொல்.திருமாவளவன்
  • தோல்சீலை
  • தோள் சீலைப் போராட்டம்
  • தோள்சீலை போராட்டம்
  • நக்கீரன்
  • நங்கேலி
  • நடக்க தடை
  • நடக்கத் தடை
  • நன்னன்
  • நாகம்மை
  • நாகம்மையார்
  • நாடகம்
  • நான்
  • நிகழ்ச்சி
  • நியமனம்
  • நிலவுரிமை
  • நீட் ஒழிப்பு
  • நீதிக்கட்சி
  • நீர் தொட்டி
  • நூல்
  • நூல் ஆய்வு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு விழா
  • நெடும்பயணம்
  • நேர் கானல்
  • நேர்காணல்
  • பகுத்தறிவு
  • பகுத்தறிவுப் போராளி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பட்டங்கள்
  • பட்டம்
  • பட்டுக்கோட்டைஅழகிரி
  • படிப்பு
  • பதவி
  • பதிலடி
  • பதிவு
  • பரிசு
  • பல்கலைக்கழகம்
  • பல்லக்கு
  • பவழவிழா மாநாடு
  • பழ.அதியமான்
  • பள்ளிக்கூடம்
  • பன்னாட்டு அமைப்பு
  • பன்னீர்செல்வம்
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பனர்
  • பார்ப்பனியக் கொடுமை
  • பார்ப்பனியம்
  • பார்ப்பான்
  • பாரதியார் நூல்கள்
  • பாராட்டு
  • பாலக்காடு
  • பாவலர்
  • பாவாணர்
  • பிபிசி
  • பிபிசிஆனந்தி
  • பிரச்சாரம்
  • பிராமணாள் கஃபே
  • பிள்ளையார்
  • பிள்ளையார் சிலை உடைப்பு
  • பிறந்த நாள்
  • புத்தம்
  • புதிரை வண்ணார்
  • புரட்டி இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலய புரட்டு
  • புரட்டு இமாலய பொருட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு
  • புரட்டு இமாலயப் புரட்டு -17
  • புரட்டு இமாலயப்புரட்டு
  • புரட்டு இமாலாயப் புரட்டு
  • பெண்கள்
  • பெண்கள் மாநாடு
  • பெண்ணுரிமை
  • பெயர்
  • பெரியார்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் திருமணம்
  • பெரியார் நினைவு நாள்
  • பெரியார் நூல்கள்
  • பெரியார் பட்டம்
  • பெரியார் புகழ்
  • பெரியார் பேருரையாளர்
  • பெரியார் மய்யம்
  • பெரியார் மறைவு
  • பெரியார் விருது
  • பெரியார்- மணியம்மையார்
  • பெரியாரில் பெரியார்
  • பெரும் பயணம்
  • பொதுக்குழு
  • பொறுப்பாளர்
  • போர்
  • போர்வாள்
  • போராட்ட பங்களிப்பு
  • போராட்டம்
  • போஜனப்பிரியா
  • மகளிர்
  • மகாதேவர்
  • மஞ்சை வசந்தன்
  • மஞ்சைவசந்தன்
  • மணியம்மை
  • மணியம்மையார்
  • மதம்
  • மதிப்பீடு
  • மதிப்புறு முனைவர் பட்டம்
  • மநு
  • மயிலாடன்
  • மலேசியா
  • மலையாளம்
  • மறியல்
  • மறைவு
  • மன்றம்
  • மனுதர்மம்
  • மாதவன்(நாயர்)
  • மாநாடு
  • மாநில கல்லூரி
  • மாநிலக் கல்லூரி
  • மாற்றம்
  • மீனாட்சி அம்மன்
  • மு.க.ஸ்டாலின்
  • முகப்பு அட்டை அமைப்பு
  • முசுலீம்
  • முதல் சுயமரியாதைத் திருமணம்
  • முதல்வர்
  • முரசொலி
  • முரளி கபே
  • முலை வரி
  • முலைவரி
  • மூவலூர் இராமாமிருதம்
  • யுனஸ்கோ விருது
  • யூனியன் வங்கி
  • ரயில்வே ஸ்டேஜன்
  • ராமநாதபுரம்
  • ராமாயணம்
  • ராவண காவியம்
  • ராஜகோபாலாச்சாரியார்
  • ரிவோல்ட்
  • வ. உ. சி
  • வ.உ.சி
  • வரலாறு
  • வனிதாமதில்
  • வார ஏடு
  • விகடன்
  • விடுதலை
  • விடுதி
  • விருத்தாசலம்
  • விருது
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீரர்
  • வீரர்கள்
  • வெற்றி
  • வெற்றி விழா
  • வேன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைத்தியநாத அய்யர்
  • வைத்தியநாதன்
  • ஜப்பான்
  • ஜஸ்டிஸ் கட்சி
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி திமிர்
  • ஜூனியர் விகடன்
  • ஜெயவர்த்தனா

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (14)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (4)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2024 (72)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (16)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (3)
  • ▼  2023 (45)
    • ►  டிசம்பர் (14)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (6)
    • ▼  மார்ச் (8)
      • கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர்...
      • முதல் பெரியார் சமூகநீதி விருது
      • தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி...
      • தமிழர் தலைவருக்கு ''சமூகநீதிப் போராளி'' விருது!
      • யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் ...
      • தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்ச...
      • பெரியார் குடும்பத்துப் பெண்கள்தான்!
      • தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்...
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (21)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (11)
  • ►  2021 (49)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (24)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2020 (99)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (10)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (19)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (13)
  • ►  2019 (169)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  ஆகஸ்ட் (17)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (27)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  ஜனவரி (14)
  • ►  2018 (143)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (21)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (69)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (12)
  • ►  2016 (58)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (30)
    • ►  அக்டோபர் (12)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.