திங்கள், 23 மே, 2022

கி.வீரமணிக்கு வழங்கப்பட்ட விருது - பட்டம்

“பகுத்தறிவுப் போராளிக்கு!” நம் வணக்கம்

கவிஞர் கலி.பூங்குன்றன்

(கட்டுரையின் ஒரு பகுதி)

 பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் உலக திராவிடர் மகளிர் மாநாடு  காணொலி மூலம் நமது அருமைத் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவருக்குப் “பகுத்தறிவுப் போராளி” என்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தது.  (12.12.2021)

இதற்கு முன்பும் பல விருதுகள் இவரைத் தேடி வந்ததுண்டு.

இனமானப் பேரொளி” இது நாகையில் பெண்கள் மாநாட்டில் அளிக்கப்பட்டது (1993).

பாரத் ஜோதி” என்ற விருதைக் கொடுத்து பாராட்டியதுபுதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் (2000 ஆண்டு). “பேரறிவாளர்” விருதினை வழங்கியது மியான்மர் சுயமரியாதை இயக்கம்.

ஆக்ஸ்போர்டு தமிழ் விருது” வழங்கிக் குதூகலித்ததுஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கம்.  பெரியார் ஒளி” வழங்கியது கழகத்தின் மூன்றாவது துப்பாக்கியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2010 ஆம் ஆண்டு)

கோவை கே.ஜி.அறக்கட்டளை “ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்” என்ற விருது வழங்கிப் பாராட்டியது.

வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கியது சென்னை லயோலா கல்லூரி.

கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (2003ஆம் ஆண்டு).

கருத்துக்கனல்” என்ற விருது வழங்கி பெருமைப் பெற்றது மலேசிய திராவிடர் கழகம்.

2009 ஆம் ஆண்டிற்கான “கலைஞர் விருதினை” வழங்கிக் கவுரவித்தது ‘முரசொலி’ அறக்கட்டளை (2009 ஆம் ஆண்டு)

காஞ்சியில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில் “தந்தை பெரியார் விருது” வழங்கி உச்சி மோந்தது (2009).

தந்தை பெரியார் சமூகநீதி விருது” வழங்கி கவுரவித்தது தமிழ்நாடு அரசு (1996ஆம் ஆண்டு).

மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது அமெரிக்க மனித நேய அமைப்பு (Humanist Association)  வாசிங்டன் (22.9.2019).

தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்பட்டது (1.2.1998). அதில் உருவானதுதான் திராவிடர் கழக அறக்கட்டளை (DK Trust).

புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி - அது பெரியார் அறக்கட்டளைக்குச் சென்றது.

இவற்றை எல்லாம் அணி அணியாகப் பெற்ற - அறிஞர் அண்ணாவால் 11 வயதில் “திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தர்” என்று வருணிக்கப்பட்ட - ஆசிரியர் என்றாலே வீரமணி என்று உலகமறிந்த பெருமகனார் ஒவ்வொரு முறையும் என்ன சொன்னார்?

இந்த விருதுகள் எல்லாம் என் ஆசானுக்குஅறிவுலகத் தந்தை அய்யாவுக்கு அளிக்கப்பட்டது என்று சொன்னது மேம்போக்கான சொற்கள் அல்லஅவரின் ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவர்கள் இதனை அறிவார்கள்.

வெள்ளி, 20 மே, 2022

“மணியம்மா இல்லை என்றால் அய்யாவைப் பறிகொடுத்திருப்போம்!” அறிஞர் அண்ணா நெகிழ்ச்சி


அன்னை .வெ.ரா.மணியம்மையாரைப் போலவாழ்வில் அனைத்தையும் எதிர்கொண்டுஎதிர்த்தவர் மனங்களையும் வென்றவா இருக்க முடியாதுதிராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.உருவானதற்கு பெரியார் - மணியம்மையார் திருமணம் காரமணமல்ல என்பதற்கு பல சான்றுகள் உண்டுஇனமான பேராசிரியர் .அன்பழகன் அவர்களே பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் அரசியல் பாதைக்குச் செல்லும் எண்ணமே தி.மு.தோன்றக் காரணம் என்று கூறியதுண்டுஇதோஅய்யாவிடமும் அண்ணாகலைஞரிடமும் மாறாத பற்றுக் கொண்டவரும்அவர்களுடன் நெருங்கிப் பழகியவருருமான கவிஞர்  கருணாநந்தம் அவர்கள் தம் “அண்ணா சில நினைவுகள்” நூலில் “வியப்பு - வியப்பிலும் வியப்பு” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்அன்னை மணியம்மையார் பற்றிய அறிஞர் அண்ணாவின் நெகிழ்வான நன்றியுணர்வு எத்தகையது என்பதை விளக்குகின்றனஇக்காட்சிகள்... நேரில் கண்டவரின் மிகையில்லாத காட்சியாக!

அண்ணா அமெரிக்காவில் அறுவை சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னரும் அரசுப் பணிகளைக் கவனித்து வந்தார்ஒரு நாள் 'விடுதலைஆசிரியர் என் நண்பர் வீரமணியும்நாகரசம்பட்டி நண்பர் என்எஸ்சம்பந்தமும் அண்ணாவைக் காண வீட்டுக்கு வந்தனர். ''உக்காருப்பா!'' என்றார் அண்ணா . வீரமணி உட்கார்ந்தார்....

..."என்ன வீரமணிஅய்யா எப்படியிருக்கார்இந்த டூர் (tour) போடும்போது கொஞ்சம் பாத்துப் போடுங்கப்பாமொதல் நாள் திருநெல்வேலிமறுநாள் தருமபுரிண்ணு எவ்வளவு ! அதிலேயும்எங்கே போனாலும் அங்கங்கே நம்ம தோழர்கள் இருக்காங்கஅவுங்க வீடுகளிலேயே சூடாபத்தியமா சாப்பிடணும்இப்ப தருமபுரி மாவட்டத்திலே எங்கே கூட்டம்னாலும்நம்ம சம்பந்தம் வீட்லெதான் சாப்பாடுன்னு வச்சிக்கணும்நான் அய்யாவோட சேர்ந்தப்போஇப்ப எனக்கு என்ன வயசோ (60) அந்த வயக அய்யாவுக்குஅப்பவே வயிற்றுக் கோளாறுபேதியாகும்பொருட்படுத்தமாட்டாருஅப்ப நல்ல சாப்பாட்டுக்கு வழியில்லேஅப்பவே அய்யா இறந்து போயிருப்பாருஆனா மணியம்மை வந்த பிறகுதான் அவருக்கு இதிலே ஒரு திருப்பம்அவுங்கஅய்யாவை நல்லா கவனிச்சிட்டாங்கஅவுங்க இல்லேண்ணா நாம அய்யாவை எப்பவோ பறிகொடுத்துட்டுப் பரிதவிச்சிருப்போம்இவ்வளவு தாள் உயிரோட பாத்திருக்கவே முடியாதுஅய்யா எவ்வளவு நாள் இன்னும் வாழ்றாரோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லதுபாத்துக்குங்க -'' என்று முடிக்கும்போது அவர் குரல் கரகரத்ததுஉணர்ச்சி மீதுறநாக்குழறியதுஎதிரிலிருந்த இருவரும் உடனே எழுந்துமேலும் அண்ணாவுக்குத் தொந்தரவு தரவேண்டாமென எண்ணிவிடைபெற்றனர்.

'புதிய அன்னிபெசன்ட் புறப்படுகிறார்என்று 1949இல் மணியம்மையாரை வர்ணித்த அண்ணா இவர்தானா என்றுஅவர்கள் இருவரும் கருதிவியந்து கொண்டே சென்றிருப்பார்கள் என நான் எண்ணிச் சிந்தனையில் மூழ்கினேன்.

கல்வெட்டுச் சாசனமாய்ப் பொறித்துவைக்கத்தக்க ஒரு கடிதத்தை அண்ணா நியூயார்க் மருத்துவ மனையினின்று பெரியாருக்கு எழுதினாரேஅதன் இறுதிப்பகுதியில் என்ன சொன்னார்.

"தங்கள் பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறதுபுதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறதுநான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்தச் சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லைஅதுவும் நமது நாட்டில்ஆகவே சலிப்போ கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லைஎன் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும்அன்பு வணக்கங்கள்.

                                                                                                     தங்கள் அன்புள்ள

அண்ணாதுரை.

நியூயார்க்    

10.10.1968          

நம்முடைய இயக்கத்தை வெறும் பயனையும் பதவியையும் எதிர்பார்க்கும் அரசியல் குழுவாக அமைக்காமல்பற்று பாசம் அன்பு அரவணைப்பு - இவற்றினடிப்படையில் அமைத்தார்களேஇயக்கத் தலைவர்களை வேறு யார் அய்யா என்றும் அண்ணா என்றும் வாஞ்சையுடன் அழைக்க முடியும்அதனால்தானே பதினெட்டாண்டு இடைவெளிக்குபின் ஒரு முதலமைச்சர் தானே வலிந்து சென்று தன் தந்தையைக் கண்டார்ராஜாஜி வருத்தப்படுவாரே என்றார் ஒருவர்சென்னை வந்த பின்பு பார்க்கக்கூ!டாதாதிருச்சிக்குச் சென்று பார்க்க அப்படி என்ன அவசரம் என்றார் வேறொருவர். "என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரே அவர்தான்முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால்அது மனிதப் பண்பே ஆகாதுஎன்று சொல்லிவிட்டார் அண்ணன்.

அவர் என்னுடைய தலைவர் நானும் அவரும் பிரிகிற போதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன்இன்றும் அவரையே தலைவராகக் கொண்டு தான் பணியாற்றி வருகிறேன்'' என்றார் திருச்சியில். 'தமிழ்நாட்டின் முதல் பேராசிரியரே பெரியார்தான்அவருடைய கல்லூரியில் பயின்றுவந்த மாணவர்கள் என்பது ஒன்றுதான் எங்களுக்கு உள்ள பெரிய தகுதிஎன்று காஞ்சித் தலைவரே நாகரசம்பட்டியில் கூறினார். "தமிழகத்திற்கும்தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும்இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம்பெரியார் செய்திருக்கின்ற அரிய பெரிய காரியங்கள்ஆற்றியிருகிற அருந்தொண்டுகள்ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள்ஓட விட்டிருக்கின்ற அறிவுப்புனல்உலகம் என்றுமே கண்டதில்லை . இனியும் காணப் போவதில்லைஇந்தியாவின் தேசியமொழி இந்திதான் என்று சொன்னவுடன் தேசியம் என்பது மகா புரட்டுஇந்தியா என்கிறீர்களே அது மிகப்பெரிய கற்பனைஅவையிரண்டையும் உடைத்தெறிவதுதான் என்வேலைஎன்றாரே பெரியார்இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள்ஆங்கிலத்தில்Putting Centuries into Capsules)  என்பார்களே அதுபோலஎன்றார் அண்ணா .

பெரியாரின் கருத்துகளுக்கு சட்டவடிவம் தருவதற்காகத்தான் பதவியில் இருப்போம்எனத் திட்டவட்டமாகக் கூறித்தான்சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட சம்மதம் தந்தார் அண்ணா.

அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்ததுமணியம்மையாரை அவர் திருமணம் செய்து கொண்டதால்தான் என்ற கருத்தை நான் எப்போதும் மறுப்பவன்இதற்குச் சான்றாக அரூரில் 12.7.1968 அன்று அண்ணா பேசியதை நினைவு கூர்வோம். "என்னுடைய நண்பர்கள் எல்லாம் நான் பிரிந்து சென்றுவிட்டேன் என்று குறிப்பிட்டார்கள்இருக்க வேண்டிய கடினமான நாளில் இருந்தேன்பிரிந்தேன் என்பதுகூடத் தவறுஇந்த நாட்டு அரசியலைநமக்கு நேர்மாறான கருத்து உடையவர்களிடம் கொடுத்துவிட்டுஅவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காகஅரசியலில் நுழைந்துஅதனைக் கைப்பற்றியும் இருக்கின்றேன். "

30.8.68 அன்று தர்மபுரியில் பெரியார் சிலை திறப்பு விழாஇதற்குத் தேதி கேட்பதற்காக முன்பு ஒரு நாள் சம்பந்தம்அண்ணாவிடம் வந்து சென்றார்இப்போது அண்ணாவுக்கும் உடல் நலமில்லைஅய்யாவுக்கும் உடல்நிலை சரியில்லைஅதனால் ஒத்திவைத்திருக்கின்றோம் என்று சொல்வதற்காக விடுதலை வீரமணியுடன் சம்பந்தம் வந்திருந்தார்அவர் களிடத்தில் "அண்ணா அய்யாவும் அடிக்கடி ஹைக்கோர்ட் ஜட்ஜ் நியமனம் சம்பந்தமா நிறைய எழுதறார்ஏதாவது செய்யணும்நீதிபதிகள் யாரார்எப்ப ரிட்டையர் ஆகுறாங்கமற்ற  எல்லாம் எனக்கு வேணுமேவீரமணி?" என்றார் அண்ணா . இதோபத்து நிமிஷத்திலே போயி டைப் அடிச்சி குடுத்தனுப்புறேங்க'' எனப் புறப்பட்டார்கள் இருவரும்என் பெயரைக் கவர்மேல் எழுதிநேராக என்னிடம்  தரச்சொல்லுங்க!'' என்றார் அண்ணாஅதென்னத்துக்குங்க அவ்வளவு பயம்நாங்களே கொண்டு வருகிறோம்'' எனச் சென்றவர்கள் அரைமணியில் உண்மையாகவே கையில்  செய்த தாளுடன் திரும்பி வந்தார்கள்!

விடுதலையில் இவ்வளவு particulars readyயா வச்சிருக்கீங்களா?''

இல்லீங்கஅய்யாவோட டயரியில் இருந்து எழுதிக்கிட்டு வந்தேன்என்கிறார் சம்பந்தம்.

"அடெஅய்யாவோட டயரியிலே இல்லாத விஷயமே ஒண்ணும் இருக்காது போலிருக்கே?'' என வியக்கிறார் அண்ணா !

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே - என்ற புறநானூற்று வரிகள் என் நினைவில் நிழலாடின.”

(நூல்: 'அண்ணா சில நினைவுகள்'

கவிஞர் கருணானந்தம்

ஞாயிறு, 8 மே, 2022

* கோயில் நுழைவு போராட்டம் 8-7-39-மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் வைத்தியநாத அய்யர் நடத்திய நாடகத்தின் கதை.


* இந்த காலகட்டம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி நடந்து,அதில் நடராசன் தாலமுத்து மரணமடைந்தனர்.

* தலைவர் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

* ஆண்களும் பெண்களும்,குழந்தைகளும் கூட சிறைக் கொட்டடியில்.
* ஆச்சாரியார் ஆட்சி மீது கடுமையான அதிருப்தியின் உச்சம்.
* இந்தக் காலகட்டத்தில்தான் குள்ளநரி வைத்தியநாத அய்யரைக் கொண்டு நடத்தப்பட்டதே இந்த நாடகம்.
* காட்சிக்குள் செல்வோமா?
* கனஜோராய் விளம்பரம் படுத்தப்பட்டது வைத்தியநாத அய்யரின் கோயில் நுழைவுப்
* போராட்டம் என்று.
* கோயிலின் நடை திறக்கப்படாத நேரத்தில்
* அதற்கு முன்பாகவே சின்ன ஏற்பாட்டை குள்ளநரி வைத்தியநாத அய்யர் செய்து கொண்டார்.
* நிர்வாக அதிகாரியாக இருந்த நீதிக்கட்சியின் அனுதாபி S.R.நாயுடு ,வைத்திய நாத அய்யருக்கு உதவினார்.இவரின் ஏற்பாட்டில்

* ஒரு பட்டர் பூஜை செய்வதற்காக உள்ளே நின்றார்.
* காலை 8-45-மணி
* இவர்கள் திமுதிமுவென்று கதவின் அருகில் போய் நின்றவுடன்- பயந்து விடாதீர்கள்
* பஞ்சமர் 5-பேர்+1 நாடார்(அன்றைக்கு நாடார்களுக்கு ஆலய பிரவேச உரிமை இல்லை)மொத்தம் ஆறு பேர்கள்.
* கதவு திறந்தது;பதிகம் பாடி அல்ல; உள்ளே இருந்த பட்டரின் புண்ணியத்தால்
* திருக்குளத்தில் நீராடி பூஜை புனஸ்காரங்கள் முடிந்து வெளியேறினார்கள்.

* பட்டருக்கு தெரியாது இவர்கள் பஞ்சமர்கள்,
* நாடார் என்று.
* வெளி உலகுக்கும் இப்படி சம்பவம் நடைபெற்றது யாருக்கும் தெரியாது.
* அன்றைக்கு இருந்த சட்டப்படி கோயில் அறங்காவலர் அனுமதியில்லாமல் இந்துக்களின் எந்த பிரிவினரும் கோயிலுக்குள் நுழைய விடுவது கிரிமினல் குற்றம்.
* இந்தச் சட்டப்படி வைத்தியநாத அய்யர் வகையறாக்கள் மீதும் நிர்வாக அதிகாரிகள் மீதும்
* கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
* இந்த இடத்தில் ஒருமுக்கியமான பிளாஷ் பிளாக்.
* இந்த நாடக சம்பவம் நடந்தது-8-7-39-
* இதற்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன் ஶ்ரீமான் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் பிரதமர்.
* அன்றைக்கு ஆதி திராவிடத் தலைவர் எம்.சி.
* இராசா-15-8-38-அன்று சட்ட மன்றத்தில்
* ஆலய நுழைவு மசோதாவை கொண்டு வந்தார்.
* விடுவாரா குல்லூகபட்டர்.கங்கணம் கட்டி தோற்கடித்தார்.ஆதரவு-24-எதிர்ப்பு-130-
* மற்றுமொரு வரலாற்று சோகம் என்னவெனில் காங்கிரஸின் ஆதி திராவிட அமைச்சரும்
* மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்.
* பின் ஏன் வைத்தியாத அய்யரை கொண்டு இந்த நாடகம்?
* நாங்கள் தான் ஆலய பிரவேச உரிமைக்கு போராடினோம்!என்று வரலாற்றில் பதிந்து கொள்ளத்தான்?
* சுயமரியாதை இயக்கம் நடத்திய 1927-1928-களில் உண்மையாக நடத்திய ஆலய நுழைவு போராட்டத்தை இருட்டடிக்கத்தான்.

* இராசகோபாலாச்சாரிக்கு ஆதரவாக  நின்று கிரிமினல் வழக்கில் சிக்கிக் கொண்ட வைத்திய நாத அய்யர் வகையறாக்களை காப்பாற்ற வேண்டாமா?என்ன!

* பிரிட்டிஷ் கவர்னரை சந்தித்து-1935-இல் கவர்னருக்கு அரசியல் சட்டம் வழங்கியிருந்த சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழைந்தால்,அதற்காக அர்ச்சகர்கள்,அதிகாரிகள்,தர்மகர்த்தாக்கள் இவர்கள் மீது வழக்கு தொடர்வதை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

* வைத்தியநாத அய்யரையும் அர்ச்சகரையும் எஸ்.ஆர்.நாயுடுவையும் காப்பாற்ற வந்த சட்டமே ஒழிய ,ஆலய பிரவேச உரிமை சட்டம் அல்ல.

- [ ] ஆலய நுழைவு மசோதாவை, சட்டமன்றத்தில் தோற்கடித்தவர்களுக்கு.                வரலாற்றில்-போராடியவர்கள் பட்டம்.

- [ ] அன்றைக்கு பேப்பரும் பேனாவும் அவாள் கையில்.ஒரு பொய்யை தெரிந்தே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அது வரலாறு ஆகி விடுகிறதே!

- [ ] உண்மையான ஆலய நுழைவுப் போராட்டத்தை துவங்கியவர்கள்-நாடார் குல பெருமக்கள்-அது19ஆம் நூற்றாண்டின் இறுதியில்.

- [ ] இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டத்தை பெரும் திரளான மக்களுடன்,நடத்தியது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.

- [ ] காண்போம்.அடுத்தடுத்த பதிவுகளில்
- [ ] முடிவுரையை எழுதாமல் விட்டு விட்டேனே?
- [ ] பின் எப்போது ஆலய கதவுகள் எல்லோருக்கும் திறந்தன.

- [ ] 1947-இல் ஓமந்ததூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின் பிரதமராக வந்த காலகட்டத்தில்
-பன்னீர்செல்வம் முகநூல் பக்கம்