வியாழன், 3 அக்டோபர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 14

1.10.2019 அன்றைய தொடர்ச்சி...


புராண விஷம்


இவைகளை எல்லாம் நீங்கள் ஊன்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மனதில் பல தலைமுறைகளாகப் படிந்துவிட்ட களிம்பை - புராண விஷயத்தை நீக்கிக் கொள்ளாவிடில் நாம் எவ்வகையிலும் வாழமுடியாது. வேத மத புராணக் கடவுள்கள் பற்றிய ஆபாசக் கருத் துக்களை மனத்திலிருந்து அகற்றினாலன்றி சிறிதும் முன்னேற்றமடைய முடியாது. இவைகளே நமது வாழ்வுக்கு வளப்பமாக முடியாது. நம் பெண்களுக்கும் அறிவு - பகுத்தறிவு ஏற்பட வேண்டும். கடவுள், தேவங் களினால் நமக்கு இதுவரை ஏற்பட்ட நன்மைதான் ஒரு துளியேனும் என்ன? துன்பங்கள், தாழ்வுகள் தவிர வேறென்ன கண்டோம்?

விபசாரம் - மோசடி - கொள்ளை


விபசாரம், மோசடி, கொள்ளை இவைகளைத்தானே வேதங்களும், மதங்களும் கடவுள்களும் போதிக் கின்றன. ஒரு அங்குலமாவது, இவைகளைக் கொண்டு நாம் முன்னேற முடிந்ததா? ஏமாற்று வேஷம் போட்டுப் பிழைக்கலாம். ஏமாற்றுவேஷம் வெளிப்படின் உதை படலாம் என்பது தவிர வேறெந்த வகையிலாவது முன்னேற்றத்துக்காக நாம் கண்ட மார்க்கமென்ன? திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பகுத்தறிவுவாதி கள் என்று சொல்லிக் கொள்ளுவோரில் பெரும்பாலோர் இன்னும் வேஷதாரிகளாகத்தானே இருந்து வருகிறார் கள்? யாரும் காணாதபோது விபூதி பூசுவது, வெளியே வரும்போது அழித்து விடுவது, உருவக்கோவில்களுக் குச் செல்லுதல், திருவிழா, பண்டிகை கொண்டாடுதல் இவைகளை இன்னும் அனுஷ்டித்து வருகிறார்கள் என்றால் மற்றவர்கள் சங்கதியை நாம் எப்படிக் குறை கூற முடியும்? இதற்கு நிவாரண வழிதான் என்ன?

பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை தப்பினாலும் தப்பலாம்; வேதம், மதம் கடவுள் ஆகிய இந்தப் பாம்பு களின் பிடிப்பில் விழுந்தால் தப்ப முடிவதில்லையே!

உலக அறிஞர்கள் ஏன் உலக அறிஞர்கள், நிபுணர் கள் என்று படிப்புக் காரணமாக, அறிவுத் திறமை காரணமாகப் பாராட்டப்படும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், ஏ.ராமசாமி முதலியார், ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் இவர்களால் இந்தப் பிடிப்புகளில் இருந்து இம்மியும் விலக முடியவில்லையே! திராவிடர் கழக அனுதாபிகள் எனப்படும் இவர்களது போக்குகளும், புத்தியுமே இப்படி என்றால் சாதாரணமாக இருப்பவர் களைப்பற்றி என்ன சொல்லமுடியும்? நம்முன் கற்ற வர்கள் எனப்படுவோர்க்குத் தேர்தல் என்றால், எதை விட்டுக்கொடுத்தேனும் கொள்கை, மனசாட்சி, நேர்மை இவைகளில் எதைப்பற்றியும் கவலைப்படாது, எப்படி யாவது தேர்தலைச் சமாளித்தாக வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்றாகவேண்டும் என்றுதானே தோன்று கிறது? நல்லதொரு சமுதாயம் அநியாயமாக, வீணாகக் கெட்டுப்போகிறதே என்று யார் கவலைப்படுகிறார்கள்?

மாற்ற வேண்டும்


இவைகள் எல்லாம் அதாவது வேதம், மதம், புராண, கடவுள் பற்றிய, நமது பழங்கால முதற்கொண்டு இருந்து வரும் மனப்பான்மை, அடிமைப்புத்தி மாற்றமடைய வேண்டும்; இவைகள் தானே இலக்கியம், நாடகம், சினிமா முதலிய எல்லாத் துறைகளிலும் புகுந்து பெரும் இடையூறாக இருந்து வருகின்றன? ஆகவேதான், மாற்றம் வேண்டும் இல்லையேல் முன்னேற்றத்திற்கு மார்க்கம் இல்லை என்று கூறுகிறேன்.

மற்றபடி, எனக்கு வேறு யாருடனும் விரோதமே கிடையாது. வேதம், மதம், புராணம், கடவுள்கள் இவைகளினால் என் மக்கள் நாசமாகி வருகிறார்கள், இழிவுபடுத்தப்படுகிறார்கள், அடிமைப் படுத்தப்படு கிறார்கள், சுரண்டப்படுகிறார்கள் என்று கூறுகிறேன். இவ்விதம் நான் சொல்லுவதும் அதற்காக ஏதோ என்னால் முடிந்த அளவு செயலாற்றுவதும், செயலாற்ற மக்களிடை பிரசாரம் செய்து தூண்டிவிடுவதும் பிடிக்க வில்லையானால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சொல்லட்டுமே ஒரே வார்த்தை ஆரிய வேதம், மதம், புராணம், கடவுள்கள் இவைகளுக்கும் திராவிட மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று. அதைவிடுத்து பிரசாரத்தின் மீது காய்வார்க ளேயானால், இனியும் நாம் சும்மா இருப்பதில் பய னில்லை. மாதம் ஒருபடி முன்னேற்றம் கண்டோம் என்ற முறையில், மாதமொரு பண்டிகை திருவிழா என்றிருப்பதுபோல் மாதம்தோறும் ஏதேனும் ஒரு புராணத்தை எரித்தல், விக்கிரகத்தை உடைத்தல் முதலிய நடவடிக்கைகளில் இறங்கியே ஆகவேண்டும். நம்மீது புகுத்தப்பட்ட புராண நூல்களை எரிப்பதாலும், விக்கிரகங்களை உடைப்பதாலும் புராணங்கள் அனைத்தும் அழிந்துவிடும். விக்கிரகங்கள் கூண்டோடு மறைந்துவிடும் என்று நான் கூற வரவில்லை. இதைப் பார்த்த மக்களுக்கு, ஏன் எரிக்கிறார்கள்? ஏன் உடைக் கிறார்கள் என்ற கேள்விகள் பிறக்கும். அதுசமயம் புராணக் கடவுள்களின் ஆபாசங்களை எடுத்துரைத்து, இவைதானா எங்களுக்கு வழிபாட்டு நூல்களும், கடவுள்களும் என்போம் - விமோசனம் பிறக்காது போகுமா பார்ப்போம்.

தோழர்களே! நான் இதுவரை சொன்னதில் ஏதாவது, சிறிதாவது நியாயம் உண்மை இருக்கிறது என்று உங் களுக்குத் தோன்றினால், உங்கள் வீட்டில் மாட்டி யிருக்கும் கடவுள்களின் உருவப்படத்தை எடுத்து எறி யுங்கள்! நெற்றியில் சாம்பல் மண் இடாதீர்கள்! உருவக் கடவுள் உள்ள கோவில்களுக்குச் செல்லாதீர்கள்! துரோ கம், வஞ்சகம் செய்யாதீர்கள்! உண்மை பேசுங்கள்! மக்களை ஏய்க்காதீர்கள்! அதுதான் கடவுள் தொண்டு!.

- தொடரும்

- விடுதலை நாளேடு, 3 .10. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக