சனி, 19 அக்டோபர், 2019

ஜஸ்டிஸ் கட்சி வேலை திட்டம்

10.02.1935, குடிஅரசிலிருந்து...




ஈ.வெ.ரா. தீர்மானம்


வாசகங்களைப் பொருத்தவரை சில திருத்தங்களைச் செய்ததோடு அத்திட் டங்களை மூன்று தலைகளாகப் பிரித்து, அதாவது, பொருளியல், சமுதாய இயல், அரசியல் என்பதாகப் பிரித்து அவைகள் தனித்தனி தலைப்பின் கீழ் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது,

பொருளியல்


1.  விவசாயிகளைக் கடன் தொல் லையில் இருந்து விடுவிக்கவும், மேலால் கடனால் கஷ்டப்படாமலிருக்கும் ஆன காரியங்களை கடனுக்காக பூமியை கடன்காரர் கைப்பற்றா திருக்கச் செய் வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதையெல்லாம் செய்ய வேண்டும்.,

2.  அநியாய வட்டி லேவா தேவிக்காரர்களால் விவசாயிகளுக்குக் கஷ்டம் நேரிடாமல் இருக்கும்படி கோவாப்ரேட்டிவ் பாங்கிகளையும், லேண்ட் மார்ட்டி கேஜ் (பூமி அடமான) பாங்கிகளையும் விஸ்தரிக்க வேண்டும். இந்தப் பாங்கிகளின் நிர்வாகம் சர்க்கார் அதிகாரி களாலேயே நடைபெறச் செய்ய வேண்டும்.

3.  விவகாரங்களைக் குறைப்பதற் காக முக்கியமாய் சொத்துக்கள் விஷ யத்தில் சர்க்காரே தெளிவான ரிக் கார்டுகள் வைக்க வேண்டும். இப் பொழுது அமலில் இருந்து வரும் நிமித்திய மாத்திரம் எழுதி வைக் கப்பட்டது என்கின்ற வாதத்தை சர்க் கார் கோர்ட்டுகளில் இனி செல்லு படியற்றதாக்க வேண்டும்.

4.  விவசாயக்காரர்கள் விளைவின் பலனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர், மத்திய வியாபாரிகள் ஆகிய வர்களை விலக்குதல் செய்து விளை பொருள் சாமான்களை வாங்குபவர் களுடன் நேரில் கலந்து கொள்ளத்தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாக செய்ய வேண்டும்.

5.  பொது ஜனங்களுடைய உப யோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி, தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட் ரிசிட்டி முதலியவைகளை சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படி செய்ய வேண்டும்.

6 .  இன்ஷுரன்ஸ் விஷயத்தில் சர்க் கார் உத்தியோகஸ்தர்களுக்குச் சர்க்கார் செய்து கொடுத் திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபீசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும் படியாகச் செய்ய வேண்டும்.

சமுதாய இயல்


1.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் எல்லா மக்களுக்கும் படிப்பு ஏற்படும்படி செய்துவிட வேண்டும்.

2.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மதுபானம் ஒழியும்படி சட்ட மூல மாகவே செய்ய வேண்டும்.

3.  தீண்டாமைக்குச் சட்டத்தி லாவது, அரசியல் நிர்வாகத்திலாவது இடமே இருக்கக் கூடாது.

4.  பெண்களுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஆண்களைப் போலவே உத்தியோகமும், பிரதிநிதித்துவமும் வகிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

5.  தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதோடு அவர்களுடைய சவுகரியங்களைத் தாராளமாய் கவனித்து அவற்றிக்குக் குறையாத வரும்படி கிடைக்கும்படி நிர்ணயப்படுத்திவிட வேண்டும்.

அரசியல்


1.  உத்தியோகங்களில் நமது மாகா ணத்தில் உள்ள எல்லா வகுப்பார் களையும், அவர்களது எண்ணிக்கை யையும் கவனித்து தக்கபடி பிரதிநிதித்துவமும், உத்தியோகமும் கிடைக் கும்படி செய்ய வேண்டும்.

2. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டி யதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும், இந்திய பொருளாதார நிலைமையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்.

3.  வரிப்பளுவை மக்களுக்குச் சமபாகமாக பங்கீடுவதற்கு நில வரு மானத்தையும், பொருள் சம்பாதனை யையும் பொருத்து வரி விதிப்பதில் ஒரு படிப்படியான விகிதாச்சார முறையை அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட குறைந்த வரும்படி உள்ளவர்கள் விஷயத்தில் நிலவரியையும் ரொக்க வருமான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

4.  முனிசிபாலிட்டி, லோக்கல் போர்டு, கோவாப்ரேட்டிவ் முதலிய  ஸ்தாபனங்களுக்கு இன்னும் அதிகமான வேலைகளைச் செய்ய சந்தர்ப்பம்  அளிக்கப்பட வேண்டும். அதன் நிர்வா கங்கள் ஸ்டேட் உத்தியோகஸ்தர் களாலேயே நடைபெற வேண்டும்.

5.  இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக்கொள்கையை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இந்தப்படியான வாசகங்களால் திருத்தி அமைக்கப்பட்டு தோழர்கள், ஆர்.கே.ஷண்முகம், சவுந்தர பாண்டியன் முதலிய சுயமரியாதை இயக்கத்

தலைவர்களுடையவும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடை

யவும், சம்மதத்தைப் பெற்று கட்சித் திட்டமாய் ஒப்புக் கொள்ள சிபார்சு செய்து நிர்வாக சபைக்கு வைக்கப்பட்டு விட்டது.

- விடுதலை நாளேடு 12 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக