ஞாயிறு, 8 நவம்பர், 2020

வைத்தியநாத அய்யர்


பொய்களையும், புரட்டுகளை யும் புனைந்து கொட்டுவதில் முதல் பரிசைத் தட்டிப் பறிக்கக் கூடியது ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்.’

28.4.2017 நாளிட்ட அவ்விதழில் (பக்கம் 7) ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

‘‘ஈ.வெ.ராமசாமி வைக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார் என்று தம்பட்டம் அடிப்பவர்கள், மதுரை வைத்திய நாத அய்யர் நடத்திய ஆலயப் பிரவேசத்தை மறைத்து விட்டார் கள்.வைத்தியநாத அய்யர்மது ரையின் ஒரு புகழ்பெற்ற வழக்கு ரைஞர். அரிஜனங்கள் இவரைத் தங்கள் தந்தை போல எண்ணிப் போற்றிவந்தனர்’’என்றுஎழுது கிறது ஆர்.எஸ்.எஸ்.சின் ‘விஜய பாரதம்.’

ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஈ.வெ.ராமசாமிவைக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார் என்று தம்பட்டம் அடிக்கிறோமாம். இந்தக் கூட்டம் எத்தகைய அறிவு நாணயமற்ற கூட்டம் என்பதற்கு இந்த வாசகங்களே போதுமானது.

வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று, ‘‘வைக்கம் வீரர்’’ஆனதுஎன்பதுவரலாற் றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. இதனைத்தம்பட்டம்அடித்துச் சொல்லவேண்டிய அவசிய மில்லை. அந்த வரலாற்று உண் மையைக்கூட ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் நேர்மை இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திடம் அறவேயில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?

மதுரை வைத்தியநாத அய்யர் மதுரையில் ஆலயப் பிரவேசம் நடத்தியதை மறைத்துவிட்டார்கள் என்று எழுதுகிறது.

இந்த மதுரை ஆலயப் பிர வேசம்பற்றி ராஜாஜி என்ன கூறு கிறார் என்பது முக்கியமானது.

மதுரை மீனாட்சிக் கோவி லில் 8.7.1939 சனிக்கிழமை தாழ்த் தப்பட்டவர்களுக்குத் திறந்து விடப்பட்டது. ஆதிதிராவிடர்கள் அன்று காலை 8.50 மணிக்கு அக்கோவிலுனுள் நுழைந்தார்கள். அந்த நிகழ்ச்சியைப்பற்றி மதுரை யில் பேசிய மாண்புமிகு (கனம்) சி.இராசகோபாலாச்சாரியார்:

‘‘இந்த வெற்றி காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்தவெற்றியுமல்ல;இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றி யாகும். ஏனெனில், இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ்காரர்களும்,சுயமரியா தைக்காரர்களும்இன்னும்இதரர் களும் சேவை செய்திருக்கின்றனர்’’ என்று குறிப்பிட்டார் (‘சுதேசமித் திரன்’ 31.7.1939, ‘விடுதலை’ 1.8.1939).

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாத அய்யர் மட்டும் தனியாகப்போராடிவெற்றிபெற் றதுபோல சித்தரிப்பது சரியானது தானா?

இன்னொரு மிகமிக முக்கிய மான உண்மை உண்டு. இதே மதுரை வைத்தியநாத அய்யர் 1922 இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின்போது எப்படி நடந்துகொண்டார் - அதைப்பற்றி தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பு நூல் - 2 ஆம் தொகுதியில் (பக்கம் 274) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘‘திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூடிய போது, நாடார் முதலியோர் கோவில் நுழைவைப்பற்றி இராம சாமி நாயக்கரால் ஒரு தீர்மானங் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக் கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவார். பின்னே காங்கிரஸ் ஆட்சியில் மதுரையில் தீண்டாமையைப் போக்க முயன்றவர் வைத்தியநாத அய்யர் என்று கேட்டு மகிழ்வெய் தினேன். சீர்திருத்த முன்னணிக்குத் தூற்றலும், பின்னணிக்குப் போற் றலும் நிகழ்தல் இயல்பு போலும்!’’

1922 இல் ஆலயப் பிரவேசத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் 1939 இல் மனம் மாறினார் என்றால், அதற்கும் காரணம் சுயமரியாதை இயக்கம்தானே!

- மயிலாடன்

-விடுதலை நாளேடு,28.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக