ஞாயிறு, 12 மார்ச், 2023

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

 

 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து 

என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்!

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர்  நலச் சங்கத்தின் 

30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

சென்னை, ஜன.17 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘சமூகநீதிப் போராளி’’ விருது வழங்கும் விழா

கடந்த 8.1.2023 அன்று தியாகராயர் நகரில், உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதியில், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா - யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது  வழங்கும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடிய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க  விழா விற்குத் தலைமையேற்றுள்ள தோழர்க கருணாநிதி, தொடக்கத்திலிருந்து சிறப்பாகப் போராடி, வாதாடி யதால், பிறகு ஒரு நல்ல அளவிற்கு அது கட்டுக் கோப்பான ஓர் அமைப்பாக வளர்ந்து இருக்கிறது. அது மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஓர் அமைப்பாக இருக்கிறது என்றால், அது முதல் வரிசையில், முதலிடத்தில் இருக்கக்கூடிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சார்ந்த பெருமைக்குரிய எங்களுடைய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கமாகும். 

முதலாவது ஆண்டு விழாவிலும் - 30 ஆவது ஆண்டுவிழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு

எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அளவிற்கு இதை ஆக்கிய பெருமை அருமைத் தோழர் கருணாநிதி (இவ்வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற) அவர்களையும், அவருக்கு ஒத்துழைப்புத் தரக்கூடிய உங்களைப் போன்ற ஓர் அருமையான, தோழர்களையும் சேர்ந்த தாகும். அவருக்கு நல்ல வகையில் ஆதரவு தரக் கூடியவர்கள் - ஒருங்கிணைந்து ஒரு நல்ல கூட்டுக் குடும்பம் - நல்ல சிறப்பான முறையில் இருப்பதைப்போல, எடுத்துக்காட்டான ஓர் அமைப்பாக இது திகழ்கின்றது. இந்த அமைப்பின் 30 ஆம் ஆண்டு விழாவில், - முதலாவது ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு, 30 ஆவது ஆண்டுவிழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருப்பது - அதை எனக்கு அளித் திருப்பதற்காக நானும் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஏனென்றால், நிறைய வங்கிகளில் எனக்குக் கணக்கு கிடையாது. வங்கித் தோழர்களை இப்படிப்போன்ற விழாவில்தான் பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதிலும் இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்ன வென்றால், இந்த அருமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதின்மூலம் முதலில் அனைவருக்கும் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மகிழ்ச்சி கலந்த வணக்கம்.

சமூகநீதிக்காகப் போராடக் கூடிய களப் பணியாளர்கள்

வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் பொதுச் செயலாளர் சிவா நடராசன் அவர்களே, 

தலைமையேற்று இருக்கக்கூடிய தோழர் கருணாநிதி அவர்கள், இங்கே மட்டுமல்ல, எல்லா வங்கிகளிலும் சரி, இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கன ஓர் அமைப்பு, ஒடுக்கப்பட்டவர்களுடைய அமைப்பு எது வாக இருந்தாலும், அவற்றில் பங்கெடுத்து, சமூகநீதிக் காகப் போராடக் கூடிய களப் பணியாளர், களத்திலே இருக்கக்கூடியவர் நல்ல அளவிற்குக் கொள்கையாளர் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பணியாற்றிவருபவர். தமிழ்நாடு அரசே அவருடைய தொண்டை மதித்த கார ணத்தினால்தான், இன்றைக்குத் தமிழ்நாடு அரசினுடைய மிகப்பெரிய ஒரு பொறுப்பில், சமூகநீதி கண்காணிப்புக் குழுவில் இருக்கக்கூடிய அளவிற்குக் கருணாநிதி இடம்பெற்றிருக்கின்றார் என்றால், அது அவருக்கு மட்டும் பெருமையல்ல; இந்த வங்கிக்கே பெருமை - இந்த வங்கியினுடைய அமைப்பிற்கே பெருமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் தமிழ்நாட்டினுடய சிறப்பை அவருக்குத் தேடித் தந்திருக்கின்றீர்கள்.

அதற்கு அடித்தளம் இந்த அமைப்பு. இந்த அமைப் பினுடைய அருமைத் தலைவர் அவர்களே,

ஏனைய அருமைத் தோழர்களே, ‘விடுதலை’யின் நிர்வாக ஆசிரியரும், திராவிடர் கழகத் துணைத் தலை வருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

மற்றும் அருமை நண்பர்களே, உங்கள் எல்லோருக் கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டப் பசி தீரவில்லை!

நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள்; வயிற்றுப் பசி உங்களுக்கு; ஆனால், இந்த நாட்டில் போராட்டத்தின் பலன் இன்னமும் எதுவும் கிடைக்கவில்லையே, என்று ‘அந்தப் பசி’ தீராத அளவில் இருக்கக்கூடிய - அந்தப் பசிக்கு உணவு கிடைக்காதா? என்பதற்காக நாங்கள் ஒரு பக்கத்திலே போராடிக் கொண்டிருக்கின்ற காரணத் தினால், நாம் எல்லோரும் சேர்ந்து போராடிக் கொண் டிருக்கின்ற காரணத்தினாலும் - வயிற்றுப் பசியைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு - இந்த போராட்டப் பசி தீருவதற்கு, பசி ஆறுவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி நாம் யோசிப்பதற்காகத்தான் - இந்த விழா!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலில் உரையைத் தொடங்குவதற்குமுன் என்னுடைய அன்பான நன்றியை மிகுந்த பணிவன்போடு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பால், நட்புறவால் என்னை  திணற வைத்துவிட்டீர்கள்

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை; 90 வயது என்பதை எனக்கு நினைவூட்டி - எனக்கு வயதாகிவிட்டதை எனக்கு அடிக்கடி நினைவூட்டி - அதற்காக தனி சிறப்பு செய்தீர்கள். இங்கே ஒவ்வொருவரும் உங்களுடைய அன்பால், நட்புறவால் என்னை  திணற வைத்து விட்டீர்கள்; அதற்காக என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக, இவையெல்லாம் எங்களுக்கு மிகவும் புதுமையானது, எதிர்பாராதது. இதுவரை நாங்கள் இங்கே கொடுத்ததுபோன்று ‘பொக்கே’ வாங்கியதில்லை. கல்லடி யையும், சொல்லடியையும்தான் இதுவரையில் வாங்கியிருக்கின்றோம். 

இங்கே வரும்பொழுது எனக்கே கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றியது; நாம் வேறொரு உலகத்தில் இருக்கின்றோமா என்று சொல்லக்கூடிய அளவில், அதிலும் அறிவார்ந்த ஓர் அரங்கத்தில், இப்படிப்பட்ட தோழர்கள், இருபால் தோழர்கள்,  தோழர்களிடமிருந்தும் வாழ்த்துப் பெற்றிருக்கின்றோம்.

நீங்கள் என்னை கொஞ்சம்  தட்டிக் கொடுக்கிறீர்கள்

அதைவிட மகிழ்ச்சி என்னவென்றால், வங்கியில் சமூகநீதி செயல்பட்டது; அந்த சமூகநீதி செயல்படுவதற்கு இன்னும் தீவிரமாக களத்தில் இறங்கக்கூடிய உறுதிப்பாடு, ஈடுபாடு இந்த இரண்டுமே பெற்றிருக்கக் கூடியவர்களிட மிருந்து பாராட்டை நான் பெறுகிறேன் என்று சொல்லும் பொழுது, இன்னும் அதிகமாக வேலை செய்; உங்களிட மிருந்து இன்னும் அதிகமான பணியை எதிர்பார்க்கிறோம் என்று சொல்வதற்கு, நீங்கள் என்னை கொஞ்சம் தட்டிக் கொடுக்கிறீர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.

அதைவிட எனக்கு இன்னொரு மகிழ்ச்சி - வங்கி களில் பணியாற்றும் மகளிர் தோழர்கள் அனைவரும் சேர்ந்து மேடைக்கு வந்தார்கள்; இவ்வளவு மகளிர் வங்கியில் பணியாற்றுவதே பெரியாருக்குக் கிடைத்த வெற்றி - சமூகநீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! பூரிப்படைகிறோம்.

மிகப்பெரிய சமூகப் புரட்சி - ரத்தம் சிந்தாதப் புரட்சி- ஆயுதம் ஏந்தாத புரட்சி

பிற்படுத்தப்பட்டோரில், ஆண்களே முன்னேறாத நிலையில், பெண்களே படிக்கக் கூடாது என்று இருந்த காலத்தில், ‘சரசுவதி’ என்று பெயர் வைத்திருக்கின்ற பாட்டிக்குக்கூட எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால், ‘பேத்தி சரசுவதி’ இன்றைக்கு வங்கி அதிகாரியாக, மற்ற மற்ற துறைகளிலும் இருக்கிறார்கள் என்று சொன்னால், இது மிகப்பெரிய சமூகப் புரட்சி - ரத்தம் சிந்தாதப் புரட்சி- ஆயுதம் ஏந்தாத புரட்சி. எப்படி ஏற்பட்டது?

அதேநேரத்தில், திராவிட இயக்கம் இந்த நாட்டில் அரும்பாடுபட்டு உருவாக்கிய இது ஓர் அற்புதமான சிறப்பான புரட்சியாகும்.

அந்த வகையில், நீங்கள் எனக்கு இங்கே கொடுத்த பட்டயத்தைவிட மிக முக்கியம் - இத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள்; இத்தனை மகளிர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வங்கியிலே பணிபுரிகிறார்கள்; அதி காரிகளாக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது, இதைவிட பெரிய பரிசு, இதைவிட மிகப்பெரிய சிறப்பு எங்களுக்கு வேறு கிடையாது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து, இந்த எண்ணிக்கை பெருகவேண்டும்.

நம்முடைய உரிமைகளை நாம் பெறுவதற்காகக் கேட்டுக்கொள்கிறோம்

அதேபோல, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகள் பெறப்படவேண்டும்; மற்றவர்களுடைய உரிமைகளை நாம் பறிப்பதற்காக இதை நாம் கேட்கவில்லை; நம் முடைய உரிமைகளை நாம் பெறுவதற்காகக் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனென்றால், சமூகநீதியினுடைய தத்துவத்தை பலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதான் சமூகநீதியே தவிர, மற்றவர்களுக்குக் கிடையாது என்று சொல்வது அல்ல.

ஆனால், அனைவருக்கும் அனைத்தும் கூடாது எல்லாம் எங்களுக்கே என்று சொல்வதுதான் சமூக அநீதி.

அந்த சமூக அநீதியை எதிர்த்து நிற்பதுதான் சமூகநீதி. எப்பொழுதுமே அநீதி நடக்கும்பொழுதுதான், நீதி கேட்கவேண்டிய அவசியமே வரும்.

அந்த வகையில்தான், நீதி கேட்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இங்கே 30 ஆம் ஆண்டு விழாவில், அவர் சொன்னதுபோன்று, ஓர் அமைப்பை 30 ஆண்டு கள் கட்டி காத்து, மேலே மேலே அது வளர்ந்துகொண்டே செல்வது என்பது மிகுந்த உற்சாகத்தைத் தரக்கூடிய ஒன்றாகும்.

தீர்மானங்கள் மிக முக்கியமானவை

இங்கே நிறைவேற்றப்பட்டு இருக்கக் கூடிய தீர் மானங்கள் மிக முக்கியமானவையாகும். ஏழு தீர்மானங் கள் பொதுவானவை;  வங்கி நிர்வாகத்திற்குக் கோரிக் கைகளை 6 தீர்மானங்களாக வைத்திருக்கிறீர்கள். 

வங்கி நிர்வாகக் கோரிக்கைகள் உங்களைப் பொறுத்து தெளிவாக வந்திருக்கிறது என்றாலும், எல் லோருக்கும் தேவை - நாட்டிற்கே தேவையானதை ஏழு கோரிக்கையாக வைத்திருக்கிறீர்கள்.

(தொடரும்)

சமூகநீதி - நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம்!

 யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர்  நலச் சங்கத்தின் 

30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

சென்னை, ஜன.18 சமூகநீதி - நீதிக்காக நீங்கள் போராடுங்கள்; வீதியில் நின்று நாங்கள் போராடுகிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘சமூகநீதிப் போராளி’’ விருது 

வழங்கும் விழா

கடந்த 8.1.2023 அன்று தியாகராயர் நகரில், உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதியில், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா - யூனியன் வங்கி பிற் படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது  வழங்கும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அதில், 

1. எல்.அய்.சி.  வங்கிகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கிடும் கொள் கையைக் கைவிடுக.

2. ஜாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு தொடங்கிட வேண்டும்.

3. பீகாரில் இதைக் கேட்டு, கேட்டு, அனைத்துக் கட்சியினரும்,  பிரதமர் உள்பட பலரைப் பார்த்தும்கூட, அதை செய்யவில்லை என்கிற காரணத்தினால்,  மற்றவர் களிடம் நாம் கேட்பதைவிட, மக்கள் இருப்பது மாநிலத்தில்தானே, அதற்கு நாமே வழிகாட்டுவோம் என்று சொல்லி, இன்றைக்கு நிதிஷ்குமார் அவர்கள் ஜாதி வாரிக் கணக்கெடுப்பைத் தொடங்கியிருக்கும் சூழ்நிலை, இந்தியா முழுவதும் வந்தால், அதிசயமில்லை. அதைப் பற்றி இங்கே உங்களுக்குத் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்கள்.

4. அதேபோல, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக, அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் வரவேண்டும்.

5. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்கிட,  உரிய சட்டம் தேவை.

6. ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 102, 105 அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினை - கிரிமீலேயர் முறையை முற்றிலும் நீக்கவேண்டும்.

இந்த சட்டம் நிறைவேறியவுடனே, இப்பொழுது இருக்கிற நிலைமை என்னவென்றால்,  கிரிமீலேயர் தானாகவே அது நீக்கப்பட்டுவிட்டது என்று சொல்வது தான் சட்டப்படி சரியான நிலையாகும்..

கிரிமீலேயரை நடைமுறைப்படுத்துவது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்

அதனை போதிய அளவிற்குப் பலரது கவனத்திற்குக் கொண்டு போகவில்லை. அதற்கு முன்பு, இந்தத் திருத் தம் வந்த பிறகு, கிரிமீலேயரை நடைமுறைப்படுத்துவது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும்.

அதை கூடுமானவரையில், இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்திற்குக்கூட எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனென்றால், ஏற்கெனவே இருந்த சட்டத்தில் என்னென்ன இருந்ததோ அவை அத்தனையும் இருக் கிறது. இதற்கென்று தனியே விவாதம் செய்யவேண்டிய அளவிற்கு, அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வாய்ப்பு இருக்கிறது.

எங்கே நீதி இருக்கிறது? 

எங்கே விளக்கம் இருக்கிறது? 

அப்படி இருந்தாலும், அதில் தெளிவில்லாத கார ணத்தினால்தான், கிரீமிலேயர் முறை என்பது அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்ற சட்டத்திற்கு முரண்பாடு. தானாகவே அது போய்விட்டது. ஆனாலும், அதை இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால், எங்கே நீதி இருக்கிறது? எங்கே விளக்கம் இருக்கிறது? யாரைப் பற்றியும் நடந்துகொண்டிருக் கின்றார்கள் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

அதற்கு அடுத்தபடியாக நண்பர்களே, தற்பொழுது மத்திய பணியாளர்கள் நலத் துறையில், 6.10.2017 தேதி யிட்ட ஆணை  வங்கி உள்ளிட்ட, பொதுத் துறை நிறுவ னங்களில் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு எதிராக இருப்பதால், அந்த ஆணையை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என்பது மிக முக்கியமானது.

வங்கிப் பணியாளர்கள் தேர்வுக் கழகம் - பொதுத் துறை நிறுவனங்களில் பணியாளர் தேர்வு மற்றும் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. ஆணையத்தில் நடக்கும் தேர்வுகள் - தமிழ் உள்பட - அனைத்துத் தேசிய மொழிகளிலும் நடத்தப்படவேண்டும்.

நன்றாக நீங்கள் கவனியுங்கள், ‘‘அனைத்துத் தேசிய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படவேண்டும்’’ என்று.

தேசிய மொழி என்று தனியே எந்த மொழிக்கும் ஹிந்தி உள்பட தகுதி கிடையாது

அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் இருக்கக்கூடிய மொழிகள் 22 -ம், தேசிய மொழிகள்தான். தனியே எந்த மொழிக்கும் ஹிந்தி உள்பட தேசிய மொழி தகுதி கிடையாது - அரசமைப்புச் சட்டப்படி.

நிறைய பேர் அரசமைப்புச் சட்டத்தையே சரியாகப் படித்ததில்லை; சில நீதிபதிகள் போன்றவர்களேகூட சரியாகப் படிப்பதில்லை.

முதலில் 14 மொழிகள் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மொழிகளை அதிகப்படுத்தி, 22 மொழி களாக ஆக்கியிருக்கிறார்கள்.

நண்பர்களே, இதில் மிகத் தெளிவாக இருக்கிறது - தலைப்பு என்னவென்றால், மொழிகள் என்பதுதான்.

மொழிகள் என்று மொத்தமாகப் போட்டால், 22 மொழிகளிலும் போட்டால், அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதற்கும் மொழி என்று பெயர். அதன்படி அவை அங்கீகரிக்கப்பட்டு  தேசிய மொழிகள் என்றால், 22 மொழிகளும் தேசிய மொழிகள்தான்.

ஆகவேதான், ‘‘ஆட்சி மொழி’’ (Official Language)  என்பது வேறு; ‘‘தேசிய மொழி’’ (National Language )என்பது வேறு.

இதைவிட இன்னொரு மகிழ்ச்சி - 30 ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு சிறப்பு இந்த அமைப்பிற்கு உண்டு.

பிற்படுத்தப்பட்டோர் சங்கங்கள் உள்ள வங்கிகள் எவ்வளவு? தேசிய மயமாக்கப்பட்ட, நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை எனக்குத் தெரிந்த வரையில் 12. 

அந்த 12 வங்கிகளில், இதுபோன்ற அமைப்பு இருக்கிறதா? பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு என்று சொல்லக் கூடிய அமைப்பு எத்தனை வங்கியில் இருக்கிறது?

எனக்கு முன்பாக உரையாற்றிய டி.கே.எஸ். இளங் கோவன் மிக அருமையாகச் சொன்னார்.

ஒரு சட்டம் இயற்றினால், ஓர் அமைப்பை உரு வாக்கினால், அவை எல்லோருக்கும் பொருந்தவேண்டும் என்று சொன்னார்.

நம் மக்களுக்குத் தம் உரிமைபற்றிய  தெளிவு இன்னமும் வரவில்லை. நாம் சட்ட விரோதமாக நடக்க வில்லை.

விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்

அனுமதி கொடுத்ததில், யூனியன் வங்கியை நாம் பாராட்டவேண்டும். வங்கி அதிகாரிகள், மற்றவர்கள் இதனை ஏற்றுக்கொண்டு, கருணாநிதி போன்றவர்கள், உங்களைப் போன்றவர்கள் முன்னால் நின்று, அதைக் கட்டிக் காத்து - ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக் கிறார்கள்.

யூனியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ரிசர்வ் பாங்க் ஆஃப் இண்டியா, எஸ்.பி.அய். அளவிற்கு வந்திருக்கிறது.

தகுதிக்குமேலே பிற்படுத்தப்பட்டோர் வங்கி அமைப்பு என்பது இன்னமும் வரவில்லையானாலும், அந்த அளவிற்கு, இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள்.

யார் வந்திருக்கிறார்கள்?

நாளைக்குத் தனியார் மயமானால், தனியார்த் துறையில் இப்பொழுது இட ஒதுக்கீடு இல்லை. பல பொதுத் துறை அமைப்புகள் கார்ப்பரேட் முதலாளி களுக்குப் பிரித்துப் பிரித்து விற்கப்படுகிறது என்றெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள். அதைவிட மிக முக்கிமானது என்னவென்று சொன்னால், இட ஒதுக்கீடு என்பதை ஒழிக்கவேண்டும். அப்படி ஒழித்துவிட்டால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற எதுவுமே இருக்காது.

தனியார்த் துறையில் எப்படி இட ஒதுக்கீடு முடியும்? என்று கேட்கவேண்டிய அவசியமில்லை. அதற்கொரு நல்ல பதிலை நம்முடைய தோழர் டி.கே.எஸ்.இளங் கோவன் அவர்கள் கூறினார்கள்.

ஒரு சட்டம் இயற்றினால், அந்த சட்டம் எல்லோ ருக்கும்தான் பொருத்தமாக இருக்கவேண்டுமே தவிர, அந்தச் சட்டம் ‘தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயாக இருக்கக்கூடாது’ என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

ஆனால், இதில் அலட்சியமாக இருக்கின்ற காரணத் தினால்தான், பல நேரங்களில் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது.

வங்கிகளே தனியார் மயம் 

ஆகிவிடக் கூடிய ஆபத்து

எனவே, இங்கேயே முதலில் ஏற்பாடு செய்வதற்குள், வங்கிகளே தனியார் மயம் ஆகிவிடக் கூடிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஏனென்றால், எங்கே இதுபோன்ற விழிப்புணர்வு வந்துவிடுமோ என்பதுதான் அதனுடைய அடிப் படையாகும்.

தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்வதற்கோ அல்லது தனியார்த் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொடுக்காதே என்று சொல்வதற்கோ, அப்படி கொடுத்தால், ‘‘தகுதி போய்விடும்’’; ‘‘திறமை போய்விடும்’’ என்று சொல்வதற்கோ இடமில்லை.

வளர்ந்த நாடு என்று அமெரிக்காவைத்தானே சொல்கிறீர்கள்? இன்றைக்கும் எடுத்துக்காட்டுகிறார்கள்; அங்கேதானே நோபல் பரிசு வாங்கியவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

பேராசிரியர் சுப.வீ. அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னதுபோல, ஒவ்வொரு நாட்டிற்கும் இட ஒதுக்கீடு பல துறைகளிலும் இருக்கிறது.

தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு கட்டாயம் இருக்கவேண்டும். அந்த சட்டத்தை அவர்கள் மீற முடியாது.  பொதுத் துறை அலுவலகத்தை விற்றால், எத்தனை பேர் இருக்கிறார்கள்; அங்கே இருக்கின்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் அத்தனை பேரும், தனித் தனியே இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறவர் களாக இருக்கிறார்கள்.

ஆகவே, அங்கே நிர்வாகம் கெட்டுப் போய்விட்டது என்று யாரும் சொல்ல முடியாது.

தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது

எனவே, தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது; அப்படி கொடுத்ததால், ‘தகுதி திறமை’ போய்விட்டது என்றும் சொல்ல முடியாது.

ஆகவே, தனியார்த் துறைக்கு இட ஒதுக்கீடு பொருந்தாதது என்றும் சொல்ல முடியாது என்று, எல்லா வகையிலும், எல்லா கோணத்திலும் இங்கே பதில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆகவேதான், அடுத்தபடியாக இந்தப் போராட் டங்களை வலிமைப்படுத்தவேண்டிய கட்டாயம், அவசியம் இருக்கிறது.

இன்னொரு நகை முரண்பாடு இங்கே இருக்கிறது. அது என்னவென்றால், மற்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சிறு பான்மையினர் கேட்பார்கள். ஆனால், நம்முடைய நாட்டில் பெரும்பான்மையோர்தான் (அதாவது 85 விழுக்காடு உள்ளவர்கள்) எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்; இதுதான் மிகவும் விசித்திரமானது!

அரசமைப்புச் சட்ட பீடிகையில்...

அதைவிட இன்னொரு விசித்திரம் என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தில் எல்லோருக்கும் சொல்லக் கூடியது - அதில் உள்ள ‘பிரியாம்பிள்’ (றிக்ஷீமீணீனீதீறீமீ) என்று சொல்லக்கூடிய பீடிகையிலேயே மிகத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பது,

Justice, Social, Economic and Political  என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

எனவே, சமூகநீதிக்குத்தான் முதலிடம்.

ஆனால், முதலிடம் என்று சொல்லக்கூடிய சமூகநீதி போராடி, போராடி கொஞ்சம் கொஞ்சமாக, சொட்டு சொட்டாக வரக்கூடிய சொட்டுநீர்ப் பாசனம் போன்று இருக்கிறது. அவ்வளவுதான் - இங்கே உரிமைகள் தாராளமாக வரக்கூடிய சூழ்நிலை இல்லை.

யூனியன் வங்கி மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது

காரணம், நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. அந்த விழிப்புணர்வுக்கு யூனியன் வங்கி மற்ற வர்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது என்பதில் மிகப்பெரிய பெருமையாகும்.

ஏனென்றால், நீங்கள் சரியான நேரத்தில், தெளிவான முடிவெடுத்து, வழிகாட்டக்கூடிய அளவிற்கு இதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.

இது எல்லா இடங்களிலும் பரவவேண்டும் என்று சொல்லும்பொழுது, எங்களைப் போன்றவர்கள் உங் களுக்கு என்றைக்கும் துணை நிற்கக் கூடியவர்களாக இருப்போம்.

பொதுவாக இங்கே நல்ல  அதிகாரிகள் இருக்கின்ற காரணத்தினாலும், இதில் இருக்கின்ற நியாயங்கள் நம் பக்கம் இருக்கின்ற காரணத்தினாலும், நீங்கள் வைக்கின்ற கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறக் கூடிய வாய்ப்பு கள் இருக்கின்றன.

ஆனால், பொதுவான கோரிக்கைகள் என்பது இருக்கிறதே, அதில் அரசியல் சாயம் கலந்து பூசிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், அவை அவ்வளவு சீக்கிரம் வராது.

வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடவேண்டும்; போராடவேண்டிய நேரத்தில் போராடவேண்டும்!

வாதாட வேண்டிய நேரத்தில் வாதாடலாம்; வாதாடி னாலும்   அது இனிமேல் பலன்தராது என்ற நிலை உருவானால், போராட வேண்டிய கட்டத்திற்கு நாம் செல்லுகிறோம்; நிச்சயம் போராட்டம்தான் அதற்குப் பதிலாக இருக்கும்.

அந்த வகையில், நீங்கள் உங்கள் உத்தியோகங்களில் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள். அறவழி ஆதரவு தாருங்கள்; எங்களைப் போன்றவர்கள் அதற்காகவே இருக்கின்றோம்; எனவே, அந்தப் பணியை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம்.

எனவே, நாம் இணைந்து பல்வேறு பகுதிகளில் - வெளியில் கருத்துகளை உருவாக்குவோம், வீதிகளில் போராடுவதற்கு நாங்கள் இருக்கிறோம். நீதிக்குப் போராட நீங்கள் இருங்கள்.

சமூகநீதியை வென்றிடவேண்டும்!

எல்லோரும் இணைந்து சமூகநீதியை வென்றிட வேண்டும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டியதுதான் மிக முக்கியமானதாகும்- 30  ஆவது ஆண்டில் எடுக்கக் கூடிய முடிவுகள் - உறுதிகள்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

செவ்வாய், 7 மார்ச், 2023

தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

 

*     சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு

* சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக்கின்றன!

* சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்!

* அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி!

தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாடுவோம்!

நாகர்கோவில், மார்ச் 7 சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு; சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக் கின்றன! சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்! அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி! தமிழ் நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும்  என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.03.2023) நாகர்கோவில் மாவட்டத்தில் நடைபெற்ற தோள்சீலை போராட்டம் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:

தோள்சீலை போராட்டம் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நிறைவுரையாற்ற அமர்ந்திருக்கக் கூடிய மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் சகாவு பினராயி விஜயன் அவர்களே,

எனக்கு முன்னால் உரையாற்றி அமர்ந்துள்ள மாண்பு மிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் அவர்களே, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, 

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர்  என்னுடைய பாசமிகு சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர்  மதிப்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்னுடைய பாசமிகு சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்  வீரபாண்டியன் அவர்களே, பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் அவர்களே,

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் நண்பர் மகேஷ் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் அருமை சகோ தரர் விஜய் வசந்த் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் அவர்களே, ராஜேஷ்குமார் அவர்களே, 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் அவர்களே, 

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தோழமைக் கட்சிகளைச் சார்ந் திருக்கக்கூடிய தோழர்களே, தோழமைக்கட்சி நிர்வாகி களே, அய்யாவழி சொந்தங்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். 

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாகப் பதிவாகி இருக்கக்கூடிய தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மிகுந்த பெருமைப்படு கிறேன், மகிழ்ச்சியடைகிறேன், வாய்ப்பினை தந்திருக்கக் கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

மனமார்ந்த பாராட்டுகள், நன்றி!

சனாதன ஜாதியப் பாகுபாட்டிற்கு எதிராக சமூக நீதிக்கு வித்திட்ட போராட்டத்திற்கு தோள் சீலைப் போராட்டம் என்ற அடைமொழியைக் கொடுத்து, அதனுடைய 200 ஆவது ஆண்டு விழாவை ஒரு சிறப்பான மாபெரும் பொதுக்கூட்டமாக இன்றைய தினம்  எழுச்சியுடன், ஏற்றத்துடன் ஏற்பாடு செய்திருக்கக் கூடிய ஒருங்கிணைப்புக் குழுவினர் அனைவருக்கும் என்னுடையது மனமார்ந்த பாராட்டுகளை, நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எத்தகைய இழிநிலை இந்த நாட்டில் 200 ஆண்டு களுக்கு முன்னால் இருந்தது? என்பதையும் - வீரமிக்க போராட்டத்தின் காரணமாக அந்த இழிநிலை எவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டது என்பதையும் - இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  நடத்தப் பட வேண்டும்.

இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளா தாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங் களைத் தொட்டுவிட்டது. 

இப்படிப்பட்ட உயரத்தில்தான் அய்ம்பது ஆண்டு களுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை. இப்படிப்பட்ட உயரத்தில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை.

எப்படி இருந்த நாம் - 

இப்போது இப்படி உயர்ந்திருக்கிறோம்!

ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிக்குள்ளும் அனைவரும் போக முடியாது. பஞ்சமர்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே வரக்கூடாது என்று போர்டு மாட்டி இருப்பார்கள். நாடகக் கொட்டகைகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ரயில் நிலையங்களில் உயர் ஜாதியினர் சாப்பிடத் தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வர்ணத்துக்கும் தனித்தனியாக பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தார்கள். 

80 வயதைக் கடந்த பெரியவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்குத்தான் தமிழ்ச் சமு தாயத்தில் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நடந் திருக்கக்கூடிய மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம் - இப்போது இப்படி உயர்ந்திருக்கிறோம் என்பது தெரியும். 

அப்படிப்பட்ட கால மாற்றத்தை உணர்த்துகின்ற விழாவாக இந்த தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழா அமைந்திருக்கிறது. 

ஈராயிரம் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து நின்றது தமிழ்ச் சமுதாயம்!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாக - தமிழ்ச் சமுதாயமானது ஈராயிரம் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண் பாட்டால் செழித்து நின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழினத்தினுடைய பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது

நேற்றைய தினம் கீழடியில் அருங்காட்சியகத்தை நான் திறந்து வைத்தேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் தலைசிறந்த நாகரிகமான வைகைக் கரை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டான இடம் கீழடி. உலகம் நாகரிகம் அடை வதற்கு முன்னதாகவே ஆடை அணிந்து வாழ்ந்தது மட்டுமல்ல, அணிகலன்களும் அணிந்து வாழ்ந்து வந்திருக்கக்கூடிய இனம்தான் நம்முடைய தமிழினம். அதனைத்தான் நமக்கு கீழடி காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழினத்தினுடைய பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது.

சூத்திரர்களையும், பெண்களையும் 

இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு

மதத்தின் பேரால் - ஜாதியின் பேரால் - சாத்திர சம் பிரதாயங்களின் பேரால் - புராணங்களின் பேரால் - மனிதரை மனிதர் பாகுபடுத்திவிட்டார்கள். ஆணுக்குப் பெண் அடிமை என்றாக்கி விட்டார்கள். சூத்திரர்களை யும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. தீண்டாமையை 'புனிதம்' ஆக்கினார்கள். மனி தனுக்கு மனிதன் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது - நேரில் வரக்கூடாது - படிக்கக் கூடாது என்று ஆக் கினார்கள். பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று ஆக்கி னார்கள்.

சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக்கின்றன!

இதற்கு எதிராக அருட்பிரகாச வள்ளலாரும், அய்யா வைகுண்டரும், அயோத்திதாச பண்டிதரும், பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியாரும் நடத்திய சீர்திருத்த இயக் கங்கள்தான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு தலைநிமிர வைத்திருக்கின்றன.  பக்தி வேறு - பாகுபாடு வேறு என் பதை உணர்த்தியவர்கள் இந்தத் தலைவர்கள்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடியது அதிகமாக இருந்தது. 

ஒடுக்கப்பட்ட மக்கள்,

* குடை எடுத்துச் செல்லக் கூடாது.

* செருப்பு அணியக் கூடாது

* பசு வளர்க்கக் கூடாது.

* வீட்டுக்கு ஓடு போடக் கூடாது.

* ஒரு மாடிக்கு மேல் கட்டக் கூடாது

* முரட்டுத் துணிதான் அணிய வேண்டும் - என்றெல்லாம் இருந்தது.

'முலைவரி' என்ற வரியையே போட்டார்கள்!

இந்தத் திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமு தாயத்துப் பெண்கள் அனுபவித்த துன்ப துயரம் என்பது மற்ற பகுதிகளில் இல்லாதது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், மார்பில் சேலை போடக் கூடாது என்பதைப் போன்ற இழிநிலை வேறு எங்கும் இல்லை. இதனை மீறி சேலை போட்டுக் கொள்ள முயற்சித்த பெண்கள் தாக்கப்பட்டார்கள். சித்ரவதை செய்யப்பட் டார்கள். இதை விடக் கொடூரமாக 'முலைவரி' என்ற வரியையே போட்டிருக்கிறார்கள். 

இதைவிட அநியாயம் இருக்க முடியுமா?

அப்படி வரிகட்டாத காரணத்தால் தனது மார்பையே அறுத்து எறிந்தாள் ஒரு பெண். அதுதான் 'முலைச்சிப் பறம்பு' வழிபாட்டுத் தலமாக இன்றும் இருக்கிறது.

முலைவரிக்கு எதிராக 1822 ஆம் ஆண்டு போராட் டம் தொடங்கியது. அய்ம்பது ஆண்டு காலம் இந்த மண்ணிலே வீரம்மிக்க போராட்டங்கள் நடந்தது.

சீர்திருத்த கிறித்துவ இயக்கத்தினர் இந்த போராட் டத்திற்குத் துணையாக இருந்தார்கள்.

புதிய வழியை உருவாக்கிய 

அய்யா வைகுண்டர்

அய்யாவழி என்ற புதிய வழியை உருவாக்கிய அய்யா வைகுண்டர் இந்தப் போராட்டத்திற்குத் துணை யாக இருந்தார். திறந்த மார்போடு பெண்கள் இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து பரப்புரை செய்தார் அய்யா வைகுண்டர் அவர்கள். பொதுக்கிணறுகள் உருவாக்கினார். சிதறிக் கிடந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் அனைத்துத் துன்பங்களும் ஒழியும் என்று தூண்டியவர் அய்யா வைகுண்டர் அவர்கள். அன்புக்கொடி என்ற மதப் பிரிவையே உரு வாக்கினார். அடித்தள மக்கள் அனைவருக்கும் தலைப் பாகை கட்டி விட்டார். பெண்கள் இடுப்பில் குடம் எடுக் கக் கூடாது என்று அந்தக் காலத்தில் தடை இருந்தது. அதை உடைத்து இடுப்பில் தண்ணீர்க்குடம் கொண்டு வரக் கட்டளையிட்டவர் அய்யா வைகுண்டர் அவர்கள்.

'தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம்' என்று சொன்னவர் அவர். இதன் விளைவாகத்தான் 1859 ஆம் ஆண்டு உத்தரம் திருநாள் அரசர் உத்தரவு போட்டார். தோள்சீலை அணியலாம் என்ற உரிமை அதன்பிறகுதான் கிடைத்தது.

இந்த வெற்றிக்குக் காரணமான,

* அய்யா வைகுண்டர்

* கர்னல் மன்றோ

* பீட் பாதிரியார்

* ரிங்கல் தவுபே பாதிரியார் - ஆகியோர் நம் அனை வராலும் வணங்கத் தக்கக்கூடியவர்கள். நமது நன்றிக் குரியவர்கள்.

இப்படி எத்தனையோ படிகளைத் தாண்டித்தான் இப்போது இருக்கும் உயரத்தை நாம் பெற்றுள்ளோம். 

இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக - பொருளாதார ரீதியாக எத்தனையோ கெடுதல்களை பிரிட்டிஷ் ஆட்சி செய்திருந்தாலும் சமூகரீதியாக பல்வேறு சீர்திருத்தச் சட்டங்களையும் உருவாக்கிக் கொடுத்ததை மறுப்பதற் கில்லை.

* மனிதர்களை அடிமைகளாக விற்க தடை

* பெண் குழந்தைகளைக் கொல்லுதல் கொலைக்கும் சமமானது என  அறிவிப்பு.

* உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு.

* அனைத்து ஜாதியினரும் ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம், 

*  நகைகள் அணியலாம் என்ற உத்தரவு.

* நரபலிக்குத் தடை

* வேலைவாய்ப்பில் ஜாதிப் பாகுபாடு கூடாது.

* சட்டம் அனைவருக்கும் பொது.

* அனைவருக்கும் கல்வி

* கைம்பெண்கள் மறுமணம் செய்யலாம்

* சிறுமிகள் திருமணத்துக்கு தடை.

* திருமண வயது மசோதா.

* ஆதிதிராவிடர் நிலம் மற்றும் சொத்து வாங்குவதைத் தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வகுப்புவாரி உரிமையை வழங்கிய

நீதிக்கட்சியின் சாதனைகள்!

இப்படி எத்தனையோ சமூக சீர்திருத்தங்கள் பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சியானது இதனை முழுமையாகச் செய்து காட்டியது.

வகுப்புவாரி உரிமையை 1922 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி.

அனைவருக்கும் கல்வி என்பதை கட்டாயம் ஆக்க நீதிக்கட்சி அரசு 9.03.1923 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டது.

எந்த சமூகத்தைச் சேர்ந்தவரையாவது பாகுபாடு பார்த்து கல்விச் சாலைக்குள் அனுமதிக்க மறுத்தால், அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்பதை நீக்கியது.

நாட்டிலேயே முன்னோடியாக பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது.

பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்ற ழைக்கக்கூடிய அரசாணை போடப்பட்டது.

சாணார் என்பதை நீக்கி நாடார் என அரசாணை போடப்பட்டது.

பட்டியலின மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டது.

குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயி லுக்குப் பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க வில்லை என்றால், பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப் படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அவர்கள்.

பள்ளிச்சாலைகளை அனைவருக்கும் திறந்து விட்டது நீதிக்கட்சி ஆட்சி.

இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களை அதிகள வில் திறந்தவர்தான் பெருந்தலைவர் காமராசர் அவர் கள். அதனால்தான் அவரை 'பச்சைத்தமிழன்' என்று புகழ்ந்தார் தந்தை பெரியார் அவர்கள். அதைத் தொடர்ந்து வந்த பேரறிஞர் அண்ணா அவர்களும், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் கல்விக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார்கள். கல்லூரிக் கல்வியை ஊக்குவித்தார்கள்.

அனைத்து சமூக மக்களையும் சமூக, 

அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே 'திராவிட மாடல்' ஆட்சி!

இன்றைய 'திராவிட மாடல்' அரசானது உயர்கல்விக்கு, ஆராய்ச்சிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வரு கிறது. அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. 

நம்மை ஏன் இன்றைக்கு சிலர் எதிர்க்கிறார்கள்? இந்தக் காரணங்களுக்காகத்தான். காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை இவர்கள் உயர்த்து கிறார்களே என்பதால்தான் எதிர்க்கிறார்கள். 

வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டிய பெண் ணுக்கு இலவசப் பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்களே என்ற காரணத்தால்தான் எதிர்க் கிறார்கள்.

படிக்க வரும் பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்களே என்பதால்தான் எதிர்க்கிறார்கள்.

சமூகநீதிதான் நமது 

திராவிட இயக்கத்தினுடைய 

முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்!

மற்றவர்கள், அதாவது நாம் எல்லாரும் முன்னேறுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அனைவரையும் நாம் முன்னேற்றுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நம்மை எதிர்க்கிறார்கள். இதைப்பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள் ஆகும்.

தமிழ்நாடு - கேரள அரசு சார்பில் 

வைக்கம் நூற்றாண்டு விழா!

காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டு வைக்கத்துக்குப் போய் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத்தைத் தொடங்கி, அதில் அனைவரும் கைதான பிறகு - இந்தப் போராட்டம் நின்று விடக் கூடாது என்ற நோக்கத்தோடு, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று போராடி னார். மனைவி நாகம்மையாரையும் அழைத்து வந்தார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.

''அந்தப் போராட்டம்தான் எனக்கு ஊக்கமளித்த போராட்டம்'' என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம்.

கேரளாவில் இருந்து வந்திருக்கக்கூடிய  முதல மைச்சர், நம்முடைய மரியாதைக்குரிய மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும் இங்கு வந்திருக்கிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானாக எதுவும் மாறிவிடவில்லை.  நமது தலைவர்களால் - நமது முன்னோடிகளால்- அவர்களது போராட்டங்களால் - தியாகங்களால்தான் அனைத்தும் மாறி இருக்கின்றன.

சமூக அழுக்குகளை சட்டத்தாலும் மாற்றவேண்டும். மனமாற்றத்தாலும் மாற்ற வேண்டும். அரசுகள் சட்டம் போட வேண்டும். சீர்திருத்த எண்ணம் கொண்டவர்கள் இது போன்ற விழாக்களின் மூலமாக மனமாற்றங்களை உருவாக்க வேண்டும்.

நமது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்வோம்

ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் மொத்த மாகத் துடைத்துவிட முடியாதுதான். ஆனாலும் நமது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்வோம்.

'தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' - என்ற அய்யா வைகுண்டரின் முழக்கத்தை எந்நாளும் எதிரொலிப்போம்! எதிரொலிப்போம்! எதிரொலிப்போம்! என்று உங்கள் அனைவரிடத்தில் நான் என்னுடைய உறுதிமொழியாக ஏற்று, வாய்ப்பு தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

ஞாயிறு, 5 மார்ச், 2023

பெரியார் குடும்பத்துப் பெண்கள்தான்!

 

1924ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி! வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கு பெற 5 பெண்கள் வந்தனர். நாகம்மையார் (பெரியார் துணைவியார்), எஸ்.ஆர்.கண்ணம்மாள் (பெரியாரின் தங்கை), திருமதி நாயுடு, திருமதி சாண்ணார், திருமதி தாணுமலைப் பெருமாள் பிள்ளை ஆகியோர் தடையை மீறி சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றனர். தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றனர். தடையை அகற்ற முயன்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் சர்மா, பெரியாரின் துணைவியாரிடம் நீங்கள் எந்த ஜாதி என்று கேட்டார். இந்தப் போராட்ட அணிக்கு தலைமை தாங்கியவர் பெரியாரின் துணைவியார், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் “எங்களில் யார் எந்த ஜாதி என்று பார்த்து; தாழ்த்தப்பட்ட ஜாதியினரை மட்டும் அறிந்து அனுமதி மறுக்கலாம் என்று பார்க்கிறீர்களா? நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. எல்லோரும் இந்த வீதியில் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று நாகம்மையார் கூறினார்.

மீனவர்கள் மீன் கூடையைத் தூக்கிக் கொண்டு போகக் கூட இங்கே அனுமதிக்கும்போது, மனிதர்கள் நடமாட ஏன் அனுமதி மறுக்க வேண்டும் என்று பெரியாரின் சகோதரி கேட்டார். தடையை மீற வந்த பெண்கள் அந்த இடத்தை விட்டு அகல மறுத்து பல மணி நேரம் அதே இடத்திலே இருந்தனர்.

இறுதியாக பிச்சு அய்யங்கார் என்ற போலீஸ் கமிஷனர் வந்தார். “பெண்கள் என்பதற்காக தனிச் சலுகை எதுவும் காட்ட வேண்டாம்; ஆண்களை எப்படிநடத்துவீர்களோ அப்படியே இவர்களையும் நடத்துங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் சர்மாவுக்கு உத்தரவிட்டார்.

- மலையாள தினசரி கேரள கவுமதி 1924 மே மாதம் 23ஆம் தேதி வெளியிட்ட செய்தி.

(குறிப்பு: கிளர்ச்சியில் பங்கு கொண்ட பெண்களை எப்படி நடத்துவது என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருப்பதன் மூலம், இந்தக் கிளர்ச்சியில் முதலில் பங்கு பெற்றவர்கள் தந்தை பெரியார் குடும்பத்து பெண்கள்தான் என்பது விளங்குகிறது.)

தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் - அய்யா வழி

புதன், 1 பிப்ரவரி, 2023

அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவருக்கு அளிப்பு

வியாழன், 8 டிசம்பர், 2022

மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலை


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மலேசிய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையினை, மலேசியா திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் மகன் கே.ஆர்.ஆர்.அன்பழகன் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் 

கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 6.12.2022).


ஞாயிறு, 6 நவம்பர், 2022

தோளில் துண்டுபோடும் புரட்சி

சிவக்கொழுந்து தோளில் உள்ள துண்டை எடுக்காதே !'' - அஞ்சாநெஞ்சன் அழகிரி.(சுயமரியாதைக்கான போரில் திராவிடர் இயக்கம் வரலாற்றில் செய்த சாதனைகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.)

1923-ஆம் ஆண்டில் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்பற்றி முடிவெடுக்க தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கானாடு காத்தானில் சுயமரியாதை இயக்க வீரர் வை.சு. சண்முகம் இல்லத்தில் கூடியிருந்தனர்.அன்று அந்தவூரில் ஒரு செட்டியார் வீட்டுத் திருமணம் - திருமண ஊர்வலத்தில் அந்தக் காலத்தில் பேர் பெற்ற நாதசுர வித்வானான சிவக்கொழுந்துவின் நாதசுர இசை இடம் பெற்றிருந்தது. 
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் கே.வி. அழகிரிசாமியும் அப்பொழுது அங்கே வந்திருந்தார். அழகிரியோ பெரும் இசைப் பிரியர். திருமண ஊர்வலத்தில் நிகழ்ந்த நாதசுர இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.நாதசுரவித்வான் இடுப்பில் ஜரிகைக்கரை பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, வியர்வையைத் துடைப்பதற்காக தோளில் துண்டு ஒன்றைப் போட்டு இருந்தார். (நாதசுரம் வாசிப்பது என்பது எளிதானதல்ல - மூச்சை அடக்க வேண்டும் - அதனால்தான் பார்ப்பனர்கள் இந்தக் கலையின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை)அந்த நேரத்தில் நாட்டுக் கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்த வாலிபன் ஒருவன் நாதசுர வித்வான் சிவக்கொழுந்து அவர்களின் எதிரே வந்து, `தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும். மரியாதை இல்லாமல் துண்டைத் தோளில் போட்டுக் கொள்ளக் கூடாது! என்று ஆணவமாக அரற்றினார்.நாதசுர மேதை சிவக்கொழுந்து அவர்களோ மிகவும் அடக்கமாக `அய்யா இது ஒன்றும் அங்கவஸ்திரம் அல்ல - நாதசுரம் வாசிக்கும் பொழுது அதிகமாக வியர்க்கும், அதைத் துடைத்துக் கொள்ளத்தான் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியபிறகும் அந்த ஆசாமி விடுவதாகயில்லை.
.
அந்தக் கூட்டத்தில் இருந்த சுயமரியாதை வீரர் அழகிரி அவர்கள், `சிவக்கொழுந்து துண்டை எடுக்காதே! நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்! என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.இந்தத் தகவலை வை.சு. வீட்டில் இருந்த தந்தை பெரியாரிடம் ஓடிப் போய்த் தெரிவித்தார் பட்டுக்கோட்டை அழகிரி.
.
தந்தை பெரியார் அவர்களும் அழகிரிக்குப் பச்சைக் கொடி காட்டினார். `விடாதே, துண்டை எடுக்காமல் வாசிக்கச் சொல்; கல்யாண வீட்டார் அனுமதிக்கா விட்டால், அவரை இங்கே அழைத்து வாருங்கள்; வாசிக்கச் சொல்லி அவருக்கு உள்ள பணத்தை நாம் கொடுத்து விடலாம்! என்றார். அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குக் கேட்க வா வேண்டும் - சிட்டாகப் பறந்து அந்த இடத்திற்குச் சென்று மீண்டும் ஓங்கித் தன்மானக் குரல் கொடுத்தார்.திருமண வீட்டார், பெரியார் இருந்த இடத்திற்கே வந்து கெஞ்சினார்கள். ஜாதி. திமிரில் நீங்கள் நடந்துத் கொள்வதற்கெல் லாம் நாங்கள் பணிந்து போக வேண்டுமா? நாங்கள் சிவக் கொழுந்தை அழைத்துக் கொள்கிறோம். 
நாதசுரம் இல்லாமல் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று கறாராகக் கூறி விட்டார் தந்தை பெரியார்.மேள தாளம் இல்லாமல் கல்யாண ஊர்வலம் செல்லுவது கவுரவக் குறைவு என்று கருதிய திருமண வீட்டார், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிவக்கொழுந்து துண்டைத் தோளில் அணிந்து கொண்டுதான் நாதசுரம் வாசிப்பார். விருப்பம் உள்ளவர்கள் இருங்கள்! பிடிக்காதவர்கள் சென்று விடுங்கள் என்று கூறி விட்டனர்.
வித்துவான் சிவக்கொழுந்து துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்.

(கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய "திராவிட இயக்கத்தின் திருவிழா" கட்டுரையிலிருந்து ...விடுதலை 24-2-2008)