செவ்வாய், 2 ஜனவரி, 2018

எது கலப்புத் திருமணம்

இன்று காலை ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அய்க்கோர்ட் ஜட்ஜ் கைலாசக் கவுண்டரின் மகளுக்கும் ராஜா சர்முத்தய்யா செட்டியாரின் தங்கை மகனுக்கும் (ப.சிதம்பரம்) நடைப்பெற்ற திருமணம் இதைக் கலப்புத் திருமணம் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை எது கலப்புத் திருமணம் என்றால் மனித ஜாதிக்கும் மிருகத்திற்கும் நடப்பதே கலப்புத் திருமணமாகும்.

ஓரே ஜாதி மனித ஜாதி என்பது மாத்திரமல்லாமல் மணமக்கள் இருவருமே சூத்திர ஜாதி நாலாஞ்சாதியைச் சார்ந்தவர்கள் என்பதோடு நாலாம் சாதி நடுத்தர சாதியாக இருப்பதைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாத சாதியைச் சார்ந்தவர்களாவார்கள். நான் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும் பார்ப்பானுக்கும் பார்ப்பனத்திற்கும் தாழ்த்தப்பட்ட ஆணுக்கும் இன்னும் இது போன்று பல சாதி கலப்புள்ள நூற்றுக்கணக்கான திருமணங்களைச் செய்து வைத்திருக்கின்றேன்.

ஜாதி என்பது ஒன்றுதான். இரண்டு பேர்களும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி பிள்ளைகள் தான். ஜாதியைக் காப்பாற்றத்தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் இராஜாஜி கூட தன் மகளைச் சூத்திரரான காந்தியின் மகனுக்குத் தான் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றார். காங்கிரசினல் காமராஜரும் அவருடைய கம்பெனியும் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் இராஜாஜியின் சீடர்கள்தான். இராஜாஜி அவர்கள் நம்மோடு தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடுவார் தன்னுடைய மகளைச் சூத்திரனான காந்தியின் மகனுக்குக் கொடுத்திருக்கிறார் என்றாலும் பிள்ளைகளை (பேரன்களை) யெல்லாம் பூணூல் மாட்டிப் பார்ப்பானாக்கி விட்டார்.

தேவதாசி வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ்.சுப்புலஷ்மியை ஜாதியைக் காப்பதற்கென்றே பத்திரிக்கை நடத்துகின்ற கல்கி பத்திரிகையின் அதிபர் சதாசிவம் என்ற பார்ப்பனர் திருமணம் செய்து கொண்டார். அவருக்குத்தான் இராஜாஜி முன்னோடும் பிள்ளையாக இருக்கிறார்.

இப்படி ஏராளமன பெரிய இடம் என்று சொல்லும்படியான இடங்களிலெல்லாம் நடைபெற்று இருக்கிறது. நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பிலேயே மாறுபட்ட ஜாதியைச் சார்ந்த பலரைத் திருமணம் செய்து வைத்திருக்கின்றேன். அதற்கெல்லாம் இராஜா சர் வந்து பாராட்டி இருக்கின்றார். இராஜா சர் எனக்கு ரொம்பவும் வேண்டியவர். நான் செய்கின்ற காரியங்களை எல்லாம் பாராட்டுபவர். எனது மதிப்பிற்குரியவர். பணத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே பெரும்தன்மை வாய்ந்த பெரியவர். அவர் அந்த சமுதாயத்தையே திருத்த வேண்டியவராவார். அவர் இத்திருமணத்திற்கு வராததன் மூலம் தனக்கக் கிடைத்தத் நல்ல வாய்ப்பையே இழந்து விட்டார் என்று தான் சொல்லுவேன்.

பார்ப்பானைத் தவிர ஜாதியைப்பற்றி பேசுகின்றவன் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொறுதத்வரை நான் பறையனாக இருப்பதை கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிட பறையனாக இருப்பதை பெருமையாகக் கருதுகின்றேன். எனக்கு பிள்ளை இல்லை - என்பது பற்றி ரொம்ப சந்தோசப்படுகின்றேன். ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணிமுத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்பாடு முன்பே சொல்லிவிடுவேன். இதுபோல தாழ்ந்த சாதி பையன்களைப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா அவர்கள் அப்படி கருதி இருப்பாரானால் அவர் முன்னேற்றக் கழகத்திலிருப்பதற்கே லாயக்கற்றவர்தான். அவர்களை பார்த்து பறையர் என்று சொல்லிவிட்டோம். அவர்களிலே வைப்பாட்டி மகன் இல்லை. நம்மில் தான் வைப்பாட்டி மகன் என்பது. தாழ்த்தப்பட்ட பெண் தானாகப் போனால் கூட பார்ப்பான் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

நாம் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் நாட்டில் இரண்டே ஜாதி தான் இருக்கிறது. ஒன்று பார்ப்பான் மற்றொன்று சூத்திரன் இதைத் தான் ஒழிக்க வேண்டும். ஒழியாமல் பாதுகாப்பதற்காகத் தான் பார்ப்பான் செட்டி முதலி நாயக்கர் கவுண்டன் படையாச்சி என்று நமக்குள் பல சாதிகளைப் பிரித்து அதில் ஒன்றுக்கொன்று நம்மை ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்திருக்கின்றான்.

நாங்கள் தமிழர்கள். சூத்திரர்கள் அல்லர். இந்துக்கள் அல்ல என்கிற உணர்ச்சி நம் மக்களுக்கு வர வேண்டும். இன்றையதினம் இந்த பேச்சு பேசியதற்கு அம்மையாரிடம் அய்யா மேயர் அவர்களிடமிருக்கிற அன்பைவிட அதிகமான அன்பு கொண்டிருக்கின்றேன். . அம்மையாரும் பெருமைமிகு மேயரும் ஓரே கட்சியைச் சேர்ந்தவர்கள். நமக்குள் இதெல்லாம் இருக்கக்கூடாது.

11-12-1968 அன்று சென்னை - அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 15-12-1968 -"பெரியார் களஞ்சியம்" தொகுதி 18- "ஜாதி-தீண்டாமை" பாகம்- 12 பக்கம் 73-81

- தரவு : கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத்தலைவர், திராவிடர் கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக