வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பெரியார் வகித்த பதவிகள்

என் பதவிகள்!

70 ஆண்டு உலக அனுபவம், 30 ஆண்டு வியாபார அனுபவம்; 1915, 16, 17, 18, 19 வரை ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஈரோடு வியாபாரச் சங்கத் தலைவன், தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினனாக இருந்தவன், அய்ந்து ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன்மென்டாரால் நியமிக்கப்பட்டவன், ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி; ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி, பிறகு தலைவர், 1914 ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி, 10 ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட், ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடென்ட், பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென், ஜில்லா போர்டு மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி, பிளேக் கமிட்டி செக்ரட்டரி, கோவை ஜில்லா இரண்டாவது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10 ஆண்டு, பிறகு 1929 வரை வைஸ்பிரசிடென்ட், பிரசிடென்ட், 1918 ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசி கன்ட்ரோலில் கவர்ன்மென்டாரின் நிர்வாகி, அதாவது, அரிசி கன்ட்ரோலில் கவர்ன்மென்டாருக்கு வரும் அரிசி வாகன்களின் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20 டன் வீதம் எனக்கே கொடுத்து, மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக்கும்படி ஜில்லா கலெக்டர் கேட்டுக் கொள்ளும் டிஸ்டிரிபியூட்டிங் ஆஃபீசர், கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி, தலைவர், காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளராக இருந்ததோடு, அய்ந்து வருடம் தலைவராக இருந்த போது, எனக்குச் செயலாளராக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கே.சந்தானம், எஸ்.ராமநாதன், கே.எம். தங்க பெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள். இவை ஒரு புறமிருக்க, 1940, 1942 இல் 2 வைஸ்ராய்கள், 2 கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். ராஜாஜியும் வேண்டினார். நான் மறுத்துவிட்டேன்.

(யார் துரோகிகள்-  கையெழுத்துப்  பிரதி  - பெரியார் தஞ்சை சொற்பொழிவு 14.10.1956)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக