செவ்வாய், 2 ஜூன், 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 14


May 30, 2020 • Viduthalai •
'கணபதி ஒழிக', 'உருவ வழிபாடு ஒழிக' என லட்சம் குரல்கள் முழக்கம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

பிள்ளையார் பிறப்பு பற்றிய புராண ஆபாசங்களை எல்லாம் சுட்டிக்காட்டிய பெரியாரின் ஏடு ஒரு முக்கிய மான, நியாயமான வாதத்தை வலுவாக முன்வைத்தது - “வடநாட்டில் இராவணனுக்கு கொடும்பாவி கட்டி இழுத்து நெருப்பு வைத்துக் கொளுத்தவில்லையா? தென்னாட்டில் சூரன் திருவிழாவில் சூரன் பொம்மைத் தலையை வெட்டி வெட்டித் தெருவில் வீழ்த்திக் கொண்டே போவதில்லையா? இராவணனும் சூரபத் மனும் யார்? மற்றும் சமணர்களைக் கழுவேற்றுகிற உற்சவத்தில் சமணர் உருவை ஆசனத்தில் கழுவேற்றித் தெருவில் தொங்கவிடவில்லையா?
சமணர்கள் யார்? சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் சூர்ப்பநகையின் இளநீருக்கும் பெரிதான முலையை இலக்குவன் இரம்பத்தைக் கொண்டு அறுப் பதாக 6 அடி உருவம் பூஜை செய்யப்படுவதில்லையா? சூர்ப்பநகை யார்? இந்தக் கணபதியே தன் தம்பி சுப்பிரமணியம் ஒரு அந்நியப் பெண்ணைப் பலாத்காரம் செய்ய, அவள் தப்பி ஓட அவளை விரட்டிப் பிடித்து ஒப்பவைக்க யானை உருவெடுத்துப் போய் விரட்டிப் பலாத்காரமாய்ப் படிய வைக்கவில்லையா? அந்த வள்ளி யார்? இவையெல்லாம் பொய்யானால் இந்த பொம் மையும் கடவுள் என்பது பொய்யாகட்டுமே. இவை யெல்லாம் மெய்யானால் மெய்யாகவே இந்தக் கணபதி கடவுள் ஒழிந்து மண்ணோடு மண் ஆகட்டுமே”.
அரக்கர்கள்- அசுரர்கள் எனப்பட்டவர்கள் பிராம ணிய மதத்தை- வாழ்வுமுறையை எதிர்த்தவர்கள் என் பதை அறிவோம். தங்களை எதிர்த்தவர்களை அன்று வதம் செய்ததை இன்றும் நினைவுபடுத்திக் கொண் டாடுகிறார்கள் பிராமணியவாதிகள். அப்படி அவர்கள் கொண்டாடும்போது அவர்களது தலைவர்களை, அந்த உருவங்களை உடைத்து நாம் ஏன் கொண்டாடக் கூடாது என்பதுதான் பெரியாரின் வாதமாகும். தர்க்கரீதியாகச் சரிதான். ஆனால், பிராமணியம் இடைப்பட்ட காலத்தில் தங்களது எதிரிகளை அநீதிகளின் மொத்த உருவமாகவும், தங்கள் தலைவர்களை கடவுளின் அவதாரங்களாகவும் சித்தரித்து, அப்படியாகவே மக்கள் மனதில் நிலைநிறுத்தி விட்டது. அதனால்தான் ராவணன், சூரபத்மன், சமணர் கள், சூர்ப்பநகை ஆகியோரைச் சிதைக்கும் போது வெகுமக்கள் ரசிப்பதும், ராமன், சுப்பிரமணியன், கணபதி ஆகியோரைக் கடவுளர்களாகத் துதிப்பதும் நடக்கிறது. இந்தச் சூழலில் பிள்ளையார் பொம்மை உடைப்பு என்பது ஓர் அதிரடி வைத்தியமாகவே இருந்தது. ராஜாஜி மந்திரிசபை நடந்ததும், அதன் சில அடாவடித்தனங்களுமே இதற்கான புறவியல் நியாயங்களைத் தந்து வெகுமக்களை பரபரப்பாகப் பேச வைத்தது. அதேநேரத்தில் வைதீகர்கள் சிலர் பதிலடித் தாக்குதலிலும் இறங்கினார்கள்.
மே 27 அன்று சென்னையில் “ஹிந்து” அலுவலகம் துவங்கி “சுதேசிமித்திரன்” அலுவலகம் வரை ஆயிரத் துக்கும் குறையாத பிள்ளையார் சிலைகள் உடைக்கப் பட்டன. இதற்குத் தலைமை தாங்கியவர் “விடுதலை” ஆசிரியர் குருசாமி. இப்படித் தமிழகத்தின் பல ஊர்க ளிலும் இந்த உடைப்புப் போராட்டம் நடந்தது. திருச்சியில் அதை நடத்தித் தந்தவர் பெரியார். இதை “விடுதலை” ஏடு (28-5-53)
இப்படி வருணிக்கிறது- “15,000 க்கு மேற்பட்டோரைக் கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. லட்சம் பேர்களுக்கு மேற்பட்ட மாபெரும் கூட்டம் கணபதி ஒழிக’, உருவ வழிபாடு ஒழிக’ என லட்சம் குரல்கள் முழக்கம் செய்தன. பெரியார் விளக்கவுரை ஆற்றினார். அது - நாம் என்னமோ சாமி இல்லை என்று சொல்லுகிறோம் என்பதாகப் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் கூறுகிறேன், திராவிட கழகத்தார் என்றைக்காவது சாமி இல்லை என்று சொல்லியிருக்கிறார்களா? அல்ல. சாமி, கடவுள் இல்லை என்று கருதுகிறவர்கள்தான் கழகத்திலே அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படும் என்றா சொல்லியிருக்கிறோம், இல்லையே. திராவிட கழகத்தவர் ஏதாவது சொல்லுவார்கள் என்றால் எது சாமி?’ என்று கேட்பார்கள். நீ சொல்லுகிறாயே குழவிக் கட்டை நீ காட்டுகிறாயே குழவிக் கல் இதுவா சாமி? என்று கேட்கிறோம் இவைகள் சாமிகள் அல்ல வெறும் களிமண், வெறும் கல் என்று கூறுகிறோம். மற்ற மதத்தவர்களுக்குக் கடவுள் இல்லையா? இருக்கிறது. அவர்கள் எல்லாம் ஒரு கடவுளை வணங்குகிறார்கள். இங்கு மட்டும் பல கடவுள் களை வைத்துக் கொண்டிருக்கிறோம் பிள்ளையார் உடைப்பு என்பதனால் இருக்கிற 1000 கடவுள்களுக்கு மேற்கொண்டு இனியாவது புதுக் கடவுள்கள் தோன்றாமல் இருக்கட்டுமே’’
அந்த 1953இல் எல்லாம் பெரியார் கடவுள் மறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிராமணிய எதிர்ப்பை முன்னிறுத்தியே பிள்ளையாரை உடைத்தார். கணிசமான வெகுமக்களின் ஆதரவு இந்தப் போராட்டத்திற்கு கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். தனது கைத் தடியால் பிள்ளையார் உருவங்களைப் பெரியார் உடைத்த போது அங்கு பெரும் கிளர்ச்சி அலை ஏற்பட்டது.
பிராமணியவாதிகளுக்கு பெருங் கோபம் எழுந்தது. அவர்கள் சில இடங்களில் பெரியாரின் படத்தை - கொடும்பாவியைக் கொளுத்தினார்கள். திருச்சியில் பெரியார் வீட்டைக் கொளுத்தவும் முயன்றார்கள். ஆங் காங்கே தி.க.வினர் கடுந்தாக்குதலுக்கு ஆளானார்கள். “என்படத்தைக் கொளுத்தியதாலேயே நான் செத்தா போய்விடுவேன்? கொளுத்தட்டுமே, இன்னும் வேண்டு மானால் அந்தக் காரியத்துக்கு நானே பணம் தருகிறேன்” என்றார் பெரியார்.
குலக்கல்வி அமுலாக்கம் தீவிரம் இதற்கிடையில் குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்துவதில் தீவிரமாக இருந் தார் ராஜாஜி. காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ ரையோ, தனது கல்வி மந்திரியையோ, காங்கிரஸ் எம். எல்.ஏ க்களையோ அவர் கலந்து கொள்ளவில்லை. தானடித்த மூப்பாக இது விஷயத்தில் செயல்படத் துவங்கினார். கேட்டால் இப்படி பதில் சொன்னார்- “இந்தக் கல்வி முறையைப் புகுத்தியதற்கு நானே பொறுப் பாளி, யாரையும் நான் கேட்கவில்லை. ஏனென்றால் சங்கரரும், ராமானுஜரும் யாரையும் கேட்டு எந்தக் காரியத்தையும் செய்ததில்லை. கேட்க ஆரம்பித்தால் நாலு யுகமானாலும் செய்ய முடியாது” (விடுதலை 31-5-53). பிராமணியத்தின் அகந்தையை இதில் தெளிவாகக் காணலாம். ஜனநாயக காலத்திலும் ராஜாக்கள் காலத்து நடைமுறையைப் பின்பற்ற மாகாண முதல்வர் நினைத் தார்.
ஏற்கெனவே தொழிற்கல்வியில் பிராமணர்களுக்கு ஏற்றம் தந்து, பிராமணரல்லாதாருக்குத் துரோகம் செய்கிற வேலையைச் செய்திருந்தது ராஜாஜி அரசு. இது பற்றிய சில விபரங்களை வெளியிட்டு “விடுதலை” (6653) முக்கிய மானதொரு தலையங்கத்தை எழுதியது “கம்யூனல் ஜிஓ என்ற வகுப்புரிமை முறையானது அல்லாடிஇனத்தினால் அரசியல் சட்டம் மூலமாகவும், பிறகு நீதிமன்றத்தின் மூலமாகவும் தூக்கிவிடப்பட்டவுடனே இங்கிருந்த திரா விட காங்கிரஸ் மந்திரிகள் ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். எஞ்சினியரிங் - மெடிக்கல் எனும் இருவிதத் தொழிற் கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பொறுக்கி எடுக்கும் போது நேர்முக உரையாடல் (பேட்டி தேர்வுக்கு 150 மார்க் என்று கொண்டு மாணவர்கள் இன்டர்வகுப்பில் வாங்கு கின்ற மார்க்கை இந்த மார்க்குடன் கூட்டி வகுத்துச் சராசரி கண்டுபிடித்து அதன் மூலம் பொறுக்கியெடுத்தனர். ஜாதி வெறியரான ஆச்சாரியார் முதலமைச்சராக வந்ததும் தமிழரின் உயர்தரத் தொழிற்கல்விக்குத் தூக்குப் போட்டு விட்டார். அதாவது மேற்கண்ட பேட்டி (Interview) மார்க்கை 150லிருந்து 50 ஆகக் குறைத்துவிட்டார்’.
சென்னை மாகாணத்திலிருந்த வகுப்புரிமை அர சாணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன வுடன் பிராமணரல்லாதார் நலனைக் காப்பாற்ற நேர் காணல் முறைக்கு அதிக மதிப்பெண் கொடுத்து அந்தப் பகுதி மாணவர்களுக்கு ஓரளவு நியாயம் வழங்கியது மாகாண அரசு. ராஜாஜி மந்திரிசபை அமைத்ததும் அதிலும் கை வைத்தார். அந்த மதிப்பெண்ணை அதிரடி யாய்க் குறைத்தார். இதன் விளைவு என்னவென்றால் பிராமணப் பிள்ளைகளுக்கு கூடுதல் இடங்களும், பிராம ணரல்லாதார் பிள்ளைகளுக்கு குறைந்த இடங்களும் கிடைத்தன. அந்த விபரத்தையும் கொடுத்தது தலை யங்கம். அது -
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக