வைக்கம் விழா அழைப்பிதழ்
31.01.1994 கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் ‘வைக்கம் வீரர்’ எனபோற்றப்பட்டு நடைபெற்ற சிலை திறப்பு விழா திராவிட கழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதால், அப்போது ஆற்றிய தலைமை உரையில்.
நினைவிட வளாகத்தை திறந்து வைக்கும் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியன் உடன் தமிழர் தலைவர் ஆசிரியர்.
“இந்தியாவின் சமூக நீதிக்களத்தில் நடைபெற்ற முதல் மனித உரிமை போரான வைக்கம் சத்தியாகிரகத்தில் போராடி அவ்வறப்போர் முழு வெற்றிபெறுவதற்கு உழைத்த வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களுக்கு தக்கதோர் நினைவுச் சின்னத் திறப்பு விழாவாகிய இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் இந்த அரிய வாய்ப்பினை தந்தை பெரியார் அவர்களால் துவக்கப்பெற்ற சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டனான எனக்கு அளித்த தமிழக அரசுக்கு குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி மாண்புமிகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலைவெளியிட்டு அவர்களைச் சிறப்புச் செய்தது மாண்புமிகு எம்.ஜி.ஆரின் தமிழக அரசு அதனை ஓர் ஆண்டு முமுவதும் கொண்டாடி பல்வேறு வகையில் அவர்களுக்கு வரலாற்று பெருமை மிக்க சிறப்புகளைச் செய்தது.
அப்போது தமிழக அரசால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு விழாக்குழுவினர் முடிவுக்கேற்ப இந்த நினைவுச் சின்னம் சிலை பூங்கா ஏற்பாடுகள் உருவாகின.
அதன்படி 3.11.1985 அன்று வைக்கம் நகரில் வைக்கம் வீரருக்கு நினைவகம் அடிக்கல் நாட்டு விழா தமிழக அரசு சார்பில், கேரள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் சீரிய பகுத்தறிவுச் செம்மல் தமிழக நிதியமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு, கேரள அரசின் சார்பில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் அவர்களும் முக்கிய பங்கேற்று விழா நடத்தினார்.
நினைவிட வளாகத்தின் குறிப்பேட்டில் கையெழுத்திடம் நாவலர் இரா.நெடுஞ்செழியன்,
ஆசிரியர் மற்றும் விழாச்சிறப்பு அழைப்பாளர்கள்
மீண்டும், இன்று எழிலுடனும் ஏற்றத்துடனும் சிறப்பு விழா நிகழ்ச்சி அதே நிதியமைச்சர். அதே அ.தி.மு.க. அரசின் சார்பில் நடைபெறுகிறது. அமைச்சர் தென்னவன் வரவேற்றார்.
வைக்கம் போராட்டத்தின் வரலாறு எப்படிப்பட்ட தலைச் சிறந்த மனித உரிமைப் போரின் வரலாறு என்பது பலருக்கும் தெரியாது!
கேரளத்தில் தலைசிறந்த, சமூகநீதிப் புரட்சியினை உருவாக்கிய பெருமைக்குரிய ஸ்ரீ நாராயணகுருவின் தொண்டாலும் மற்றும் பல்வேறு காலகட்ட எழுச்சிகளாலும் இன்று சமூக நிலைமை பெரிதும் மாறிவிட்டதால், இளைய தலைமுறைக்கும் இனிவரக்கூடிய தலைமுறைக்கும் எப்படிப்பட்ட நெருப்பாற்றை “கீழ் ஜாதி மக்கள்’’ நீந்தினர் என்பது புரியாது!
மலபார் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வசித்த கள்ளிறக்குவோர், ஈழவர்கள், “சாணார்’’, குடை எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது; செருப்பு அணியவோ, தங்க நகைகளை அணியவோ கூடாது.
பசு மாடுகளைக் கறக்க உரிமையற்றவர்கள், சாதாரண மொழியைக்கூட அவர்கள் பயன்படுத்தக்கூடாது.
உயர் ஜாதி ஒரு பார்ப்பனர்முன்பு 24 அடிகளுக்குள் சென்னையைச் சேர்ந்த கள்ளிறக்கும் சாணார் வந்தால், அவரைத் தீட்டாக்கி விடுகிறார்!
நம்பூதிரிப் பார்ப்பனர் அருகில் நாயர் வரலாம்; தொடக்கூடாது. ஆனால் அந்த பார்ப்பனரிடமிருந்து தீயன் 36 அடி தள்ளியே நிற்கவேண்டும். புலையன் 96 அடிகள் தள்ளி நிற்கவேண்டும்.
நாயரிடமிருந்து தீயன் 12 அடிகள் தள்ளி நிற்க வேண்டும். மற்ற ஜாதிக்காரர்களை நெருங்காலாம்; ஆனால் தொடக்கூடாது. இப்படிப்பட்ட கொடுமை இந்த வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈழவர்கள், நாடார்கள், தீயவர்கள் நடந்து செல்லவும் உரிமையற்றவர்கள் என்ற நிலை இருந்தது! இது சிணீstமீ ஜிஷீபீணீஹ் என்ற நூலில் தயா சின்கின் (ஜிணீஹ்ணீ ஞீவீஸீளீவீஸீ) என்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் எழுதியுள்ளார்.
தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே, டி.கே.மாதவன், ஜார்ஜ்சோசப், குரூர், நீலகண்டன், கே.பி.கேசவமேனன் போன்ற தலைவர்கள் அதனை துவக்கி உரிமைக் குரல் கொடுத்ததை நசுக்கும் வகையில் அவர்களை சிறையில் அடைத்துவிட்டது. அன்றைய அரசு.
போராட்டம் பிசுபிசுத்து விடும் என்று நம்பிய நேரத்தில்தான் தந்தை பெரியார் “இராமசாமி நாயக்கர்’’ என்று அன்று கேரள மக்களால் அழைக்கப்பட்டவர் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஒரு புதுத் திருப்பத்தை அந்த சத்தியா கிரகத்திற்கு உருவாக்கி தந்தார்கள்.
தந்தை பெரியார் அவர்களோடு முதல் முறையாக மகளிர் அப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்களில் தந்தை பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையாரும், பெரியாரின் சகோதரியார். எஸ்.ஆர்.கண்ணம்மாளும் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை அப்புறப்படுத்தியது.
இருமுறை சிறை சென்ற தந்தை பெரியார் அவர்கள் இரண்டாவது ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையை எப்படி அனுபவித்தார் என்பதை திரு. கே.பி.கேசவ மேனன் அவர்கள் அவரது சுயசரிதையில் வர்ணித்துள்ளார்.
வைக்கம் சத்தியாகிரகம் இதுபோன்ற உணர்வுகளை மடைதிறந்த வெள்ளமாக ஆக்கிவிட்டதற்கும் பயன் பட்ட ஒரு முன்னோடி சமூக நீதிப் போராட்டமாகும்! சாதி ஒழியும் வரை ஜாதியால் ஏற்பட்ட கல்விக் கேடு பாடுகளை அகற்ற சமூக ரீதியான இடஒதுக்கீடுகள் தொடருவதும், மக்களை சமப்படுத்துவதும் முக்கியம்’’ என எனது தலைமை உரையில் எடுத்துரைத்தேன்.
தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து தமிழக நிதிஅமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் ஆற்றிய உரையில்:
“வீழ்ச்சியுற்றுக் கிடந்த நாட்டிற்கு எழுச்சியூட்டியவர். விசை ஒடிந்து கிடந்த உள்ளங்களுக்கு எல்லாம் வலிமையை ஊட்டியவர். சூழ்ச்சிதனை - வஞ்சகதனை பொறாமைதனை தொகை தொகையாக எதிர் நிறுத்தி தூள்தூளாக ஆக்கிக் காட்டிய பெருமை பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு. அவர் 95 ஆண்டு காலம் வரையிலும் தலை தாழாச் சிங்கமாக இருந்து நாடெங்கும் வீறுநடை போட்டு -எடுத்த செயல்களில் எல்லாம் வெற்றி காண்கின்ற அளவுக்கு தம்முடைய நேரத்தையும், நினைப்பையும் தம்முடைய உழைப்பையும், அறிவையும், ஆற்றலையும் தம்முடைய செயலாற்றும் திறனையும், செய்து முடிக்கின்ற திறனையும் மிகச் சிறப்பாக செய்துகாட்டினார் என்ற காரணகாரிய சிறப்புகளை நாம் அனைவரும் நன்கு உணர்வோம்.’’ எனப் பல கருத்துகளை நாவலர் தனது உரையில் குறிப்பிட்டார்.
வைக்கம் விழாபற்றி மலையாள ஏடுகள்
தந்தை பெரியார் நினைவிடத்தின் திறப்பு விழாவும், சிலை திறப்பு விழாவும் தமிழ்நாட்டிலிருந்து வந்த திராவிடர் கழகத் தொண்டர்கள் முழங்கிய முழக்கங்களின் உணர்ச்சி போதையோடு நடந்தது. தமிழ்நாடு நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனே சிலையைத் திறந்து வைத்தார்.
ஜாதிக்கெதிராக போராட வேண்டுமென்ற விருப்பமே வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற ஈ.வெ.ரா. வைத்தூண்டியது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் நெடுஞ்செழியன் கூறினார்.
வாழ்நாள் முழுவதும் ஜாதியை ஒழிக்க அவர் முயன்றார். ஆனால், இன்றுவரை அதற்கு முடியவில்லை. இன்றைய தலைமுறை ஈ.வெ.ரா. வின் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவேண்டும்.
எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்த சிலை அமைப்பை இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதித்த 15 லட்சத்தை செலவாக்கியே பூர்த்தி செய்ததாக அவர் கூறினார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி, தமிழ்நாடு செய்தி - விளம்பரத் துறை அமைச்சர் மு.தென்னவன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஈ.வெ.கி.சுலோசனா சம்பத், ரமேஷ் சென்னிதாலா எம்.பி., கே.கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் அய்யேரி கருணாகரன் நாயர், முன்னாள் தலைவர் எஸ்.நரசிம்ம நாயக், வைக்கம் கார்த்திகேயன் நாயர், தமிழ்நாடு, செய்தி - மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் பா.ஜெயப்பிரகாசம், துணை இயக்குநர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றினர்.
ஈ.வெ.ரா. சிலையைத் திறப்பதற்காக சத்தியாக்கிரகம் செய்த பாரதீய சாமுஹ்ய நீதிவேதியின் தலைவர் வைக்கம் கார்த்திகேயன், நாயர் நினைவு ஜோதியை நெடுஞ்செழியனிடம் கொடுத்தார்.
- ‘மலையாள மனோரமா’ நாளேடு - 1.2.1994.
தமிழ்நாடு நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் அடிக்கல் நாட்டிய நினைவிடத்தின் திறப்பு விழாவையும் அவரே நடத்தியது யதேச்சையானது.
வைக்கம் வலிய கவலையில் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நினைவை உணர்த்துகின்ற இரண்டாவது சிலையே ஈ.வெ.ரா.வுடையது. சுதந்திரப் போராட்ட வீரரும், வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத் தலைவருமான டி.கே. மாதவனின் சிலை முன்பே இங்கு நிறுவப்பட்டுள்ளது. வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற்ற மன்னத் பத்மனாபனின் சிலை நிறுவுவதற்கான இடம் இதற்கருகே என்.எஸ்.எஸ்.ஸால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனே ஈ.வெ.ரா. நினைவிடம் அமைக்க முதலில் முன் வந்தவர். தமிழ்நாட்டிற்கு வெளியேயுள்ள ஈ.வெ.ரா. நினைவிடம் இது ஒன்றுதான்.
ஈ.வெ.ரா.வின் வெண்கலச் சிலை, நூலகம், குழந்தைகள் பூங்கா, வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்ட வீரர்களின் பெயர்களடங்கிய கல்வெட்டு ஆகியவையே நினைவிட வளாகத்தில் அமைந்துள்ளவை. கல்வெட்டில் கே.பி.கேசவமேனன், தேசாபி மானி டி.கே.மாதவன், ஏ.கே.பிள்ளை, கே.கேளப்பன், கண்ணன் தொடத்து வேலாயுதமேனன், டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், ஜார்ஜ் ஜோசப், கரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், சிற்றேழத்து சங்குபிள்ளை, ராமன் இளயத் ஆகியோரின் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈ.வெ.ரா.வின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படத் தொகுப்புள்ள மண்டபமும் இங்கே உள்ளது. பெரியார் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் முதலிய நிறுவனங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் நாட்டினர் விழாவில் கலந்துகொண்டனர்.
- ‘மங்களம்’ நாளேடு - 1.2.1994
மஞ்சள் நிறப்பட்டால் அலங்கரிக்கப்பட்ட சிலையின் திரைச்சீலை கீழ். நோக்கி வீழ்ந்தபோது தமிழ் மக்கள் தம் நாட்டின் வரலாற்று நாயகனை - உற்சாகத்தோடு வரவேற்றனர். ‘பெரியார் வாழ்க’ என்ற வாழ்த்தொலி காற்று மண்டலத்தில் அலையடித்தது.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் சீருடை அணிந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். வைக்கத்தில் தீண்டாமைக்கும், ஜாதிக்கும், மதத்திற்கும் எதிராக கூட்டுச்சேரா போராட்டம் நடத்திய வரலாற்று நாயகனே பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியன் தமது உரையில் நினைவு கூர்ந்தார்.
நீதிக்காக அன்று நிலவியிருந்த கருப்புச் சட்டங்களை உடைத்து நீக்கிவிடவும், தீண்டாமையையும், நீசத் தன்மையையும் முளையிலேயே ஒழித்து விடுவதும்தான் பெரியாரின் லட்சியம், தொடாமை, தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிரான முதல் போராட்டத்திற்கு துவக்கம் குறித்த வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈ.வெ.ரா.களத்தில் இறங்கியதால் அவருக்கு தமிழ் மக்கள் ‘வைக்கம் வீரர்’ என்று பெயர் சூட்டி ஆதரித்தனர் என்று நெடுஞ்செழியன் தன் உரையில் குறிப்பிட்டார்.
‘மாத்ரு பூமி’ ஆசிரியர் கே.பி.கேசவமேனன், மன்னத் பத்மனாபன், ‘மாத்ரு பூமி’யின் பொறுப்பாசிரியராக இருந்த கரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், கே.கேளப்பன், தேசாபிமானி டி.கே.மாதவன் ஆகியோரின் தீரம்மிக்க தலைமையில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஈ.வெ.ரா. புத்தெழுச்சியை ஊட்டினார்.
மாநாட்டிற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
கேரளத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த தொண்டர்கள் தமிழ்நாடு அமைச்சர்களுக்கும், கேரளத் தலைவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை காட்டினர். ஜனவரி 30 ஆம் தேதி ஈரோட்டிலுள்ள தந்தை பெரியார் பிறந்த வீட்டிலிருந்து ஆரம்பித்த வைக்கம் கார்த்திகேயன் நாயரின் நினைவுச் சுடர் பயணம் மாநாட்டு மேடையை அடைந்தது. நினைவுச் சுடரை தமிழ்நாட்டு அமைச்சர்களான,- நெடுஞ்செழியனும், மு.தென்னவனும் சேர்ந்து பெற்றுக்கொண்டனர். -
- ‘மாத்ரு பூமி’ நாளேடு - 1.2.1994
- உண்மை இதழ், 16-31.7.20
துளு படையெடுப்பு
பதிலளிநீக்குகி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசரின் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.
நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.
துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலாத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலாத்திரி வம்சத்தை நிறுவினார்.
இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது. கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.
கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.
கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
அவை
1. கண்ணூரின் கோலாத்திரி வம்சம்
2. கோழிக்கோடு சாமுதிரி வம்சம்
3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்
தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.
துளு பிராமணர்கள் கி.பி 1335 க்குப் பிறகு தம்மை நம்பூதிரிகள் என்று அழைக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேபாள இராச்சியங்களைப் பாதுகாத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மிஷனரிகள் மலையாளத்தில் சுமார் மூவாயிரம் நேபாள வார்த்தைகளைச் சேர்த்தனர். நாடார்கள் அடக்கப்பட்டனர். அவர்களின் மொழியாகிய மலயாண்மை மொழி அழிக்கப்பட்டது. அவர்களின் பெண்கள் தோளுக்கு மேலே துணி அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்குடி பெண்கள் மட்டுமே தோள் சீலை அணிய முடியும். நாடார் பெண்கள் 1600 வரை தோள் சீலை அணிந்திருந்தனர்.
கேரள நாடார்கள் ஒரு நில பிரபு வர்க்க மக்கள். ஆனால் பத்து ஏக்கருக்கு மேல் நிலங்களை நாடார்கள் சொந்தமாக்க முடியாத வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் கி.பி 1807 இல் நாடார்களுக்காக ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். தெக்கன் களரி என்னும் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடார்கள் இரட்டைக்குழல் கைத்துப்பாக்கிகளை பதிநேழாம் நூற்றாண்டிலும் பயன்படுத்தினர்.
பிரிட்டிஷ் காரர்கள் திருவாங்கூரின் பாதுகாவலர்களாக மாறிய பின்னரே, திருவிதாங்கூர் மன்னர்களுக்கு திமிர்பிடித்தது.
1696 ஆம் ஆண்டில் பேப்பூரிலிருந்து ஒரு குறுநில மன்னரின் இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.
அனந்த பத்மநாபன் நாடார் 1729 ஆம் ஆண்டில் மார்த்தாண்டா வர்மா என்ற ஒரு ராஜாவைக் காப்பாற்றினார். அனந்த பத்மநாபன் நாடார் சுமார் முப்பது குறுப்பு மற்றும் நாயர் வீரர்களை ஒற்றைக்கு கொன்றார். ஆனால் நன்றியற்ற மார்த்தாண்ட வர்மா ராமைய்யன் என்ற பிராமண மந்திரியின் ஆலோசனைப்படி அனந்தபத்மநாபன் நாடாரை விருந்துக்கு அழைத்து கொன்றார். மார்த்தாண்ட வர்மா நாடார்களை இராணுவ சேவையில் இருந்து நீக்கிவிட்டார். தர்மராஜா என்று அழைக்கப்படும் அடுத்த மன்னர் நாடார்களை ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்.
நாயர்கள் துளு- நேபாள வம்சாவளியைக் கொண்டுள்ளனர் மற்றும் இன ரீதியாக தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அவர்களின் நேபாள தோற்றம் காரணமாக நாயர்கள் ஒரு வெள்ளை - மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளனர். மற்றும் நாயர்கள் சற்று மங்கோலிய முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.
வில்லவர் மற்றும் பாணர்
பதிலளிநீக்குபாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.
இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.
பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.
சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.
மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
வில்லவர் பாணர்
பதிலளிநீக்குநாகர்களுக்கு எதிராக போர்
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு
வில்லவர் பாணர்
பதிலளிநீக்குபாணா மற்றும் மீனா வம்சங்கள்
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். மீனா ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.
பாண இராச்சியம்
பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.
திக்கம்கரின் பாண்டிய வம்சம்
பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.
பாண வர்த்தகர்கள்
இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர். பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு). பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.
முடிவுரை
இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர்.
பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை. பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.
சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.
________________________________________________________________________________________
சங்ககால நாணயங்களில் வில்லவர், மலையர், வானவர் குலங்களின் சின்னங்கள்.
மலையர்= மலை சின்னம்
வில்லவர்= வில் அம்பு சின்னம்
வானவர்= மரம் சின்னம்
https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png
பாண்டிய நாட்டை பலிஜா நாயக்கர்கள் கி.பி 1377ல் ஆக்கிரமித்தனர்.
பதிலளிநீக்குபாண்டியன் சிம்மாசனத்தில் தெலுங்கு பாண வம்சம் வைக்கப்பட்டது. வாணாதி ராயர்களுக்கு தமிழ் ராஜ்யங்கள் வழங்கப்பட்டன. பலிஜா நாயக்கர்கள் பாண்டியர்களை நாடுகடத்தினர். வில்லாவர்கள் தங்கள் சொந்த மூதாதையர்களின் கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மதுரை மற்றும் ராம்நாட் கோயில்களுக்குள் நாடார்கள் நுழைய முயன்றபோது, பலிஜா நாயக்கர்களிடமிருந்து எந்த ஆதரவும் இருக்கவில்லை. கோயில்களுக்குள் நுழைவதற்கு நாடர்களை முதலில் தடைசெய்ததே பலிஜா நாயக்கர்கள் ஆகும். கேரளாவின் துளு வம்சங்கள் அதற்கு அடுத்ததாக நாடார்கள் மற்றும் வில்லவர்களை தங்கள் மூதாதையர் கோவில்களில் நுழைவதை தடைசெய்தன.