ஞாயிறு, 21 மார்ச், 2021

கீழ் வெண்மணி -தந்தை பெரியார் மீதும்-திராவிட இயக்கங்கள் மீது கூறப்படும் அவதூறுகளுக்கு-சில விளக்கங்கள்

* கீழ் வெண்மணி -தந்தை பெரியார் மீதும்-திராவிட இயக்கங்கள் மீது கூறப்படும் அவதூறுகளுக்கு-சில விளக்கங்கள்

1968-டிசம்பர் 25ஆம் நாள்-தாக்குதலுக்கு பயந்து
வீட்டை பூட்டி
 வீட்டுக்குள் ,உள்ளிருந்த ஆதி திராவிட விவசாயத் தொழிலாளத் தோழர்கள் -வீட்டு உயிர்கள் பெண்கள் 25-பேர்கள்,பிஞ்சுகள்-14-பேர்,ஆண்கள் 3பேர்
மொத்தம் 42-உயிர்கள் 

ஆதிக்க வெறியர்களின்,நிலப் பிரபுக்களின் ,கோரத் தாண்டவத்திற்கு உயிரோடு கொளுத்தப் பட்டு பலியானர்கள்.

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த
அண்ணா உடல் நலிவுற்றிருந்த நேரம். (அதன் பிறகு அண்ணா 35-நாட்களில் நம்மை விட்டு பிரிந்தார்)

வெண்மணிக்கு -கலைஞர் ,அமைச்சர் மாதவன்,சத்தியவாணிமுத்து,சாதிக்பாட்சா மற்றும்
ஓ.பி.இராமன் முதலியோரை அனுப்பி வைத்தார்.
கலைஞரும் அமைச்சர்களும் வரும் வரை அண்ணா
உணவருந்தவில்லை உறங்கவில்லை.

144-தடைஉத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.
தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துவோம் என்றனர் கம்யூனிஸ்ட் மார்க்கிஸ்ட் அணியினர்.
முதல்வர் அண்ணாவே தலையிட்டு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

எர்ணாகுளம் மாநாட்டிற்கு சென்றிருந்த மார்க்கிஸ்ட் தலைவர் இராமமூர்த்தியை ,அண்ணா
சென்னைக்கு வர அழைத்தார்.

அண்ணாவிடம் பி.இராமமூர்த்தி அங்குள்ள விசாரணை காவல் துறை அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை நியமித்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்
அண்ணா ஏற்றுக் கொண்டார்.

கணபதியாபிள்ளை தலைமையில் விசாரணை கமிஷனையும் அமைத்தார்.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண  நாயுடு (மிராசுதாரர்)மற்றும் 30-பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கியது.சட்டமன்றத்தில் மூன்று நாள் விவாதம் நடந்தது.கலைஞர் சட்டமன்றத்திலே
கோபாலகிருஷ்ண நாயுடுவை ‘கொடும்பாவி ‘என்று
விழித்து பேசினார்.

தலைவர் பெரியார்  சம்பவம் நடந்தபோது உடல் நலிவின்றி சென்னை மருத்துவமனையில் இருந்தார்.மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அறிக்கை வெளியிட்டார்.

மத வெறியர்களால் காந்தி கொலை செய்யப்பட்டதும்,காமராசர் மீது டெல்லியில் நடந்த கொலைமுயற்சி எப்படி கொடுரமானதோ 
அதை விட கொடுரமானது கீழ் வெண்மணி நிகழ்வு என்றார்;தந்தை பெரியார்.

மேலும் இந்த ஆட்சியால்,இந்த சட்டங்களால் இந்த நீதிபதிகளால் இந்த நீதிமன்றத்தால் 
இக் கொடுமைகளை தடுக்க முடியாது;என்றார் பெரியார்.

தலைவர் பெரியாரின் இந்த உரை வீச்சின் வீரியம்தான் நிகழ்வில் சம்பந்தப்பட்ட
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்ட பின்னரும் -சம்பவம் நடந்த 12-ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் அழித்தொழிப்பில் முடிவுற்றது.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
சிறையில் இருத்து வெளிவந்து நாகை பயணியர்
விடுதியில்,தந்தை பெரியாரை சந்திக்க மூன்று மணி நேரம் காத்திருந்தார்.

அவர் ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?எனக்கு சம்மதமில்லை.அவரை நான் பார்க்க விரும்பவில்லை.வெளியே போகச்சொல்லு என்று நாகை எஸ் எஸ் பாட்சாவிடம் சொல்லியனுப்பினார்.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொலையுண்டார் என்பதிலிருந்து கீழ் வெண்மணி வெங்கொடுமைக்கு எப்படி பதில் கூறப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார் கலைஞர்.

கோபாலகிருஷ்ண நாயுடுவின் கொலை சரியான ஒன்றே என்று துணிச்சலாக எழுதியவர் கலைஞர்.

இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடுவின் கொலை வழக்கில் நேரடியாக பங்கேற்ற புரட்சிகர இடதுசாரி அமைப்பினைச் சார்ந்த ஏழு பேர் தலைமறைவாகினர்.

பிறகு இதில் தொடர்பில்லாத சந்தேகத்தின் பேரில்  என்று கைது செய்யப்பட்ட 11 பேரில் 9பேர் திராவிடர் கழகத் தோழர்கள்.வழக்கு
எண்254/80.

இவர்களில் திராவிடமணி அப்ரூவராக
மாறினார். ஒருவர் வழக்கு நடந்துகொண்டிருக்கும்
பொழுதே மரணமடைந்தார்.

10-5-82-அன்று நாகை நீதிமன்றத்தில் திராவிடமணியைத்
தவிர்த்து மற்ற அனைவருக்கும் தண்டனை வழங்கப் படுகிறது.

மேல் முறையீட்டில் உயர் நீதி மன்றம் மார்ச் மாதம் 1985-ஆம் ஆண்டு அனைவரையும் விடுதலை
செய்தது..
- பன்னீர்செல்வம் முகநூல் பதிவு, 22.3.21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக