ஞாயிறு, 3 டிசம்பர், 2023

வைக்கம் போராட்ட வெற்றி விழாக்கள்!

  

 12

வைக்கம் போராட்ட பொன்விழா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25,26 தேதிகளில் வைக் கம் சத்தியாகிரக ஆசிரமப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டு பொன்விழா நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்தார். 

வைக்கத்தில் சத்தியாகிரகத் தலைவர் களை நினைவு கூர்ந்திடும் வகையில் அலங் கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்ததன. பெரியார் மறைந்து 14 மாதங்கள் ஆன நிலை யில் பெரியார் இல்லாத ஒரு விழா! வைக்கம் வீரரை மறக்க முடியுமா? நன்றி யுணர்ச்சியோடு திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம் மையாரை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத் திருந்தார்கள் கேரளத் தலைவர்கள்! அன்னை யார் அவர்கள் முதல் நாளே வைக்கம் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று, இரண்டாம் நாள் மாலை நடைபெற்ற பெண்கள் மாநாட்டைத் தொடங்கி வைத் தார்கள். அன்னையாருடன் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீர மணி அவர்க ளும் மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை 1979 இல் தமிழ்நாடு அரசு கொண்டாடியது. நூற்றாண்டு விழாக் குழுவின் பரிந்துரையின்பேரில் வைக்கத்தில் பெரியாருக்கு நினைவு மண்டபம் எழுப்ப எம்.ஜி.ஆர் அரசு முடிவு செய்தது. அதன்படி 1985 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வைக்கத்தில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தமிழ் நாடு அரசின் சார்பில் மாண்புமிகு நிதிய மைச்சர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், கேரள அரசின் சார்பில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச் சர் பி.ஜே.ஜோசப் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் நினைவகம் மற்றும் சிலை திறப்பு விழா வைக்கத்தில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்றது. நினை வகத்திற்கு அடிக்கல் நாட்டிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே இந்த விழாவி லும் கலந்து கொண்டு பெரியார் நினைவி டத்தையும், சிலையையும் திறந்து வைத்தார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். தமிழ்நாடு செய்தி - விளம்பரத் துறை அமைச்சர் மு.தென்னவன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், நிருவாக இயக்குநருமான ஈ.வெ.கி. சுலோசனா சம்பத் மற்றும் பலர் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத் தோழர் கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

13
வைக்கம் போராட்ட 85 ஆம் ஆண்டு விழா, தந்தை பெரியார் 132 ஆவது பிறந்த நாள் விழா, மற்றும் ஜாதி ஒழிப்பு மாநாடு 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி வைக்கம் என்.எஸ்.எஸ் அரங்கத்தில் சிறப் பாக நடைபெற்றது. தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, கேரள அமைச்சர் இராமச்சந்திரன், வைக்கம் சட்டமன்ற உறுப்பினர் கே.அஜீத், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன், மற்றும் பலர் பங்கேற்றனர். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரா விடர் கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் கார், வேன், பேருந்து மற்றும், ரயில்கள் மூலம் திரளாக வருகைதந்து கலந்து கொண்டனர்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழா கேரள அரசு சார்பில் வைக்கத்தில் 1.4.2023 அன்று நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டிருந் தனர். வைக் கத்தில் அமைக்கப்பட்டிருந்த சத்தியாகிரகி களின் நினைவுப் பதாகைகளும் ஓவியங்களும் சிற்பங்களும் பார்வையாளர் களை உணர்ச்சிப் பிழம்பில் உறைய வைத் தன. காணும் இடமெல் லாம் வரவேற்பு வளைவுகளும் தோரணங்களும் கண்கொள்ளா காட்சியாய் இருந்தன. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களும், தமிழ்நாடு  முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் மற்றும் பல்வேறு அமைச்சர் பெரு மக்களும் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக