பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் போஸ்ட், தென் சருக்கை கிராமத்தி லிருக்கும் திரு. கெ. பக்கிரிசாமி ஆசாரி என்பவர் கீழே விவரித்தபடி ஒரு கடிதம் எழுதி இருக்கின்றார்: ''நான் சில நாள் ஜலப்பிரதேசம் சென்று வருவது வழக்கம். அதனால் நல்ல உடையும், குடையும், பூட்சும் சதாபோட்டுக் கொள்வது வழக்கமாயிருந்து வருகிறேன். மேற்படி ஊரில் உள்ள ‘பிராமண' வம்சத்தினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து 'டிரஸ்'' செய்து கொள்ளக்கூடாது, குடைபிடிக்கக் கூடாது. பூட்ஸ் போடக்கூடாது, மீறி போட்டுக் கொண்டு தெருவழி வந்தால் பறையனிடம் சொல்லி அடிக்கச் சொல்வேன் என்று சொன்னதன்பேரில் உடனேகும்பகோணம் சப்டிவிஷனல் மேஜிஸ்டிரேட் அவர் களுக்கு மனு செய்திருக்கிறேன்."
- ‘குடிஅரசு' 30.8.1931
- விடுதலை ஞாயிறு மலர், 18.8.!8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக