ஞாயிறு, 24 நவம்பர், 2024

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

 

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் நவம்பர் 16-30

இயக்க வரலாறான தன் வரலாறு (351)

டி.கே.கைலாசம் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் ஆசிரியர்

அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் நினைவு அறக்கட்டளை (நிறுவனர்: கைலாசம் அவர்களின் மகன் டி.கே.சுப்பிரமணியம்- ஓய்வு பெற்ற ஆசிரியர்)யின் சார்பில் ‘பெரியார் பேருரையாளர்’க்கான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் வரவேற்று உரையாற்றினார்.
திருச்சி- கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் ஆர்.இராசேந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புரையை நிகழ்த்தினார்.
திருச்சி பெரியார் மாளிகை வளாகம் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ டி.டி.வீரப்பா மன்றத்தில் இரண்டாவது சொற்பொழிவுக் கூட்டம் 17.1.2006 செவ்வாய் காலை 10.30 மணியளவில் எமது தலைமையில் நடைபெற்றது.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு (திருச்சி)

 

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அறிமுகவுரை ஆற்றினார். லால்குடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஆல்பர்ட் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு நாம் தலைமை வகித்தோம்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ‘‘தந்தை பெரியார் காணும் உலகம் – நெறிகளும் – தீர்வுகளும்’’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

தொடர்ந்து நாம் தந்தை பெரியார் அவர்களின் உயர் எண்ணங்களை ஆய்வுரையாக நிகழ்த்தினோம்.

எமது தலைமை நிறைவுரைக்கு முன்பாக அருப்புக்கோட்டை டி.கே.கைலாசம் நினைவு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ என்கிற சிறப்புத் தகுதியை அறிவித்துப் பாராட்டி பொன்னாடை போர்த்தி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் ரூ.1,000 வழங்கினோம். இந்தச் சிறப்புக்கு முழு தகுதியுள்ள கலி.பூங்குன்றன் அவர்கள் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிறந்த பெரியாரின் மாணவர் என்று பாராட்டினோம். அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழாவில் மூத்தபெரியார் பெருந்தொண்டர்களுக்கு நினைவுப் பரிசளித்துப் பாராட்டினோம்.

-கட்டுரையின் ஒருபகுதி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக