திங்கள், 13 மார்ச், 2017

வீரர் தாலமுத்து

வீரர் தாலமுத்து (நாடார்) மறைவு

இடுகாட்டில் தலைவர்களின் துக்கம்



இந்தி எதிர்ப்பிலீடுபட்டுச் சிறையிலிருந்த தோழர் தாலமுத்து நாடாரின், பிரேத ஊர்வலம் நேற்று (12.03.1939) மாலை 5 மணிக்கு ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டது. அலங்கரித்த பாடையில் தோழர் நாடார் கிடத்தப்பட்டிருந்தார். ஏராளமான மலர் மாலைகள் போடப்பட்டன.

தொடக்கத்தில் சர்வாதிகாரி எஸ். சம்பந்தமும், மற்றும் மூவரும் பாடையைத் தூக்கி வந்தனர். தோழர் நாடாரின் வயதான பெற்றோர்களும், இளம் மனைவியும் சவத்தின் மீது விழுந்து புரண்டு அரற்றிய காட்சி கல் மனதையும் கரைத்து விட்டது. வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், தோழர்களும் கண்ணீர் விட்டனர். 10000 பேர்கட்கு மேற்பட்ட மக்கள் கொண்ட மாபெரும் கறுப்புக் கொடிகளுடன் கூடிய பிரேத ஊர்வலம் தங்கசாலை வழியாக மெதுவாய்ப் புறப்பட்டு வந்தது. கறுப்புச் சட்டையணிந்த சிலர் முன்னே பாண்டு வாத்தியம் முழக்கிச் சென்றனர். ஊர்வலத்தின் இரண்டு பக்கங்களிலும் பல நூற்றுக்கணக்கான போலீஸ்களும், சார்ஜண்டுகளும், இன்ஸ்பெக்டர்களும், பந்தோபஸ்து செய்து வந்தனர். டிப்டி கமிஷனரும் வந்திருந்தார்.

-விடுதலை,11.3.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக