ஆசிரியர் அவர்களைப்பற்றி ஒன்றை நான் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கவிஞன் டென்னிசன் பாடினான்,
Made weak by time and fate but strong in will
to strive, to seek, to fight
காலமும், விதியும் மனிதனை பலகீனமாக ஆக்கி விடும். ஆனால், மனத்தளவில் உறுதியாக இருக்க வேண்டும். தேடு தலிலும், சண்டையிடுதலிலும், போராடுதலிலும் தொடர்ந்து செல்லவேண்டும். அப்படி தொடர்ந்து செல்லுகின்ற முன்னணி வீரர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
ஒரு பெரும் பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான் உண்டு
அவர் ஒரு மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல, பேச்சாளர் மட்டுமல்ல, சிந்தனையாளர் மட்டுமல்ல, இவற்றைக் காட் டிலும் மிகச் சிறந்த நிர்வாகி. மிகமிகச் சிறந்த நிர்வாகி.
பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்கூட அவரிடத்தி லிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அதனால் தான் அவர் ஆசிரியர். அவர் மிகச்சிறந்த சிந்தனையை நமக்குப் புகட்டுகிறார் என்பதல்ல - தந்தை பெரியார் அவர்களால், செடியாக இருந்த ஒரு திராவிடர் கழகத்தை மரமாக ஆக்கி, கனி தருகின்ற பெருமரமாக ஆக்கிய ஒரு பெரும் பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான் உண்டு.
இன்று பெரியார் அவர்களின் மறைவிற்குப் பின்பு, நூற்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, முதியோர் இல்லம் இன்னும் பல்வேறு இல்லங்கள், நூலகங்கள், அரங்குகள், பொது விளையாட்டுத் திடல்கள், இப்படி பல்வேறு அறக்கட்டளை களை நிறுவி, ஒரு பெரிய மலர்ச்சியை உருவாக்கிக் கொண்டி ருக்கிறார்கள். இதுதான் அவரு டைய பெரிய சிறப்பு.
எவ்வளவோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன; அந்த அரசியல் கட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான சொத்துகள் இருக்கின்றன. எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத, ஒரு பெரும் சாதனையை, தந்தை பெரியார் அவர்கள், ஒரு ஒரு காசாக சேர்க்கப்பட்ட சொத்தை, அப்படியே காப்பாற்றி வைத்ததை, காப்பாற்றி - அதனை இன்னும் பன்மடங்காக - பெரியாருடைய சிந்தனைகளை, இந்தியா விற்கு மட்டுமல்ல - உலக நிலைக்கு எடுத்துச் செல்லுகின்ற ஒரு பெரும் பேராசிரியராக ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள்.
130-க்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியிருக்கிறார்
விடுதலை நாளிதழை நீங்கள் பார்த்தீர்களேயானால் புரிந்துகொள்ளலாம், எப்பொழுது பார்த்தாலும் அவர்க ளுக்கு நிகழ்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும். இந்த சூறாவளிகளுக்கு இடையில், இந்த வயதில், 130-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
ஒரு பேராசிரியரால் கூட செய்ய முடியாத - ஏன் செய்ய முடியவில்லை என்று சொல்கிறேன் என்றால், பேராசிரியர்களுக்கு ஓய்வு இருக்கிறது - நேரமிருக்கிறது - பல நிலையில் சிந்தனையை ஒருமுகப்படுத்துகின்ற நேரம் அவர்களுக்குக் கிடைக்கும். எழுதுதல் என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.
ஆனால், ஆசிரியர் அவர்கள், இவ்வளவு சிக்கல்க ளுக்கு இடையில், இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடை யில் 130 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தந்தை பெரியாரு டைய எழுத்துகளை மிகச் சிறந்த முறையில், தமிழகத்தில் எந்தப் பல்கலைக் கழகமும் கொண்டுவரப்பட முடியாத அளவில், அவருடைய சிந்தனைகளையும், எழுத்துகளையும் 49 தொகுதிகளாக, உயர்ந்த தாளில், மிகச் சிறந்த அச்சுடன், மிகச் சிறந்த பைண்டிங் செய்யப்பட்டிருக்கிறது அந்தப் புத்தகங்கள்.
வாழ்வியலைப்பற்றி 12 நூல்கள்
அதற்கடுத்த முறையில், அரசியல், சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு இவற்றை மட்டுமல்லாமல், வாழ்வியலைப் பற்றி 12 நூல்களை எழுதியிருக்கிறார்.
அவர் பல நூல்களை எழுதியிருந்தாலும்கூட, அதனு டைய தாக்கம் சமூகத்தில் ஏற்பட்டாலும்கூட, வாழ்வியல் சிந்தனைகளைப்பற்றி அவர் எழுதிய நூல்களில், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய ஒரு பரபரப்பை, ஒரு கிளர்ச் சியை ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த அளவிற்கு அவர் எழுதிக் கொண்டே இருக் கிறார். அவர் நமக்கு ஒரு பெரிய முன்னோடியாக இருக் கிறார். அந்த முன்னோடி, தந்தை பெரியாரைப்பற்றியும், சிங்கார வேலரைப் பற்றியும் பேச வந்திருக்கிறார்கள்.
-விடுதலை,1.3.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக