செவ்வாய், 14 நவம்பர், 2017

தமிழ்நாட்டில் மத மோதல்கள் குறைவுக்குக் காரணம் தந்தை பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்வின் தாக்கமே! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் கணிப்பு

கோவை, நவ. 13 தந்தை பெரியாரின் கருத்துக்கள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய தாக்கம்தான் மற்ற மாநிலங்களை காட்டி லும் மதரீதியிலான மோதல் கள் நடக்காமல் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது என கோவை விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் கூறினார். கோயமுத்தூர் வழக்குரை ஞர்கள் சங்கம் சார்பில் வழக்குரைஞர்கள் எழுதிய படைப்புகள் குறித்த அறிமுக விழா மற்றும் எழுத்தாளர் களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை யன்று கோவையில் நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோயமுத்தூர் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் கே.எம்.தண்டபாணி தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாஸ்கரன் உரையாற்றுகையில், சமூக அறிவு சார்ந்த சிந்தனைகள் உருவாகும்போது தான் நமது பண்பாடு, கலாச்சாரம் உயர்கிறது. இதன் மூலம் தான் சிறந்த தத்துவ ஞானிகளும் உருவாக்கப் படுகின்றனர். கோவையில் நீதி பதிகளும், வழக்கறிஞர் களும் சிறந்த புத்தகங்களை படைத்துள்ளது பெரும் வரவேற்புக்குரியது. பாரதி யாரின் கவிதைகள் தேசப் பற்றை நமக்கு ஏற்படுத்தி யது போல, தந்தை பெரியாரின் கருத்துக்கள் தான் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத் தியது.

இதன் காரணமாகத்தான் மற்ற மாநிலங் களைக் காட்டிலும் மதரீதியிலான மோதல் கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டு வளர்ச்சி யடைந்த மாநிலமாக உருவாக பெரியாரின் விழிப்புணர்வு கருத்துகள் பயன்பட்டது.  விஞ்ஞான தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இச்சூழலில் சமூக வலை தளங்கள் மூலம் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். அத்தகைய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் சமூக வலைத் தளங்களை பயன் படுத்தி நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வு கருத்துக்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
- விடுதலை நாளேடு-13.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக