செவ்வாய், 14 நவம்பர், 2017

வைக்கத்தில் பெரியார் நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியது

பெண்கள் உரிமைக்காகவும் போராடினார்

வர்க்கப் போராட்டத்துக்கு ஜாதி ஒழிப்பு மிக அவசியம்

கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் முழக்கம்



மதுரை, நவ.7 வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய தீண்டா மைக்கு எதிரான போராட்டம் நாட் டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியது. வர்க்கப் போராட்டத்துக்கு ஜாதி ஒழிப்பு மிக அவசியம் என்றார் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்.

தாழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் 2-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று(திங்கட்கிழமை) மாலை காளவாசலில் இருந்து பழங்காநத்தம் வரை ஜாதி ஒழிப்பு சமத்துவ பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக் கானேர் கலந்து கொண்டனர். அத னைத் தொடர்ந்து பழங்காநத்தத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, 'இந்தியா வில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பல காலமாக இருந்து வருகிறது. ஜாதிய ரீதியான ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது. பாஜக அரசு ஜாதிய ஒடுக்குமுறையை உயர்த்திப் பிடிக்கிறது. நாடு முழு வதும் இந்த ஒடுக்குமுறை பரப்பப் பட்டு வருகிறது.

"வர்க்கப் போராட்டம் வெற்றி பெற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை நடத்த வேண்டும். கேரளாவில் ஜாதி ஒழிப்பிலும், தீண்டாமை அகற்றும் நடவடிக்கையிலும் இடது முன்னணி செயல்பட்டுவருகிறது. அதன் ஒரு நடவடிக்கைதான் அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகும் திட்டமாகும். அண்ணல் அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், நாராயண குரு போன்றோரின் வழியில் இடது சாரிகள் இயக்கம் ஜாதி ஒழிப்பில் செயல்பட்டுவருகிறது. ஜாதி ஒழிப் புக்காக எந்த அமைப்பு போராட்டம் நடத்தினாலும் நாங்கள் இணைந்து போராடுவோம்"

ஜாதி ஒழிப்பில்

தந்தை பெரியார்!

ஜாதி ஒழிப்புப் பணியில் தந்தை பெரியாரின் செயல்பாடுகள் இன்றிய மையாதவை. பெண்களுக்குச் சம உரிமை தர வேண்டும் எனப் பெரியார் போராடினார். ஜாதி ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக பெரியார் இறுதிவரை போராடினார் என்பது நினைவு கூரத்தக்கது. அதன் வெளிப் பாடாகவே திராவிடர் கழகம் உரு வாக்கப்பட்டது. கேரள மாநிலம், வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக் களுக்கான அவரது போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜாதி வேறுபாடுகள் நாட்டில் வித்தியாசமாக உள்ளது. இந்தியாவில் 18 நிமிடத்துக்கு ஒருமுறை ஜாதி ரீதியான ஒடுக்குமுறை நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 3 தாழ்த்தப்பட்ட வர்கள் பாலியல் ரீதியான தொந் தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். 2 பேர் கொல்லப்படுகின்றனர்.

நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு எதிரான தாக்குதல்கள் அதி கரித்து வருகின்றன. புதுடில்லியில் கடந்த ஒரு மாதத்தில் 13 துப்புரவுப் பணியாளர்கள் இறந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித் துள்ளன. சமீபத்திய புள்ளிவிவரப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 163 சதவீதம் அதிகரித் துள்ளது. ஆண்டு தோறும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் கள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண பதிவேடு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2012-இல் 33 ஆயிரமாக இருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 2015இ-ல் 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2016இ-ல் தாக்குதல் எண்ணிக்கையை வெளியிடாமல் மூடி மறைக்க முயற்சி நடக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதி ரான தாக்குதல் குறித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் 23 சதவீதம் பேருக்கு மட்டுமே தண் டனை வழங்கப்பட்டுள்ளது. தற் போது  எழுத்தாளர்களை, சங் பரி வாரங்கள் மிரட்டி வருகின்றன. தாழ்த்தப்பட்ட சமூகம் பின் தங்கி யுள்ள நிலையில் எழுத்தறிவு, வேலைவாய்ப்பிலும் பின்தங்கியே உள்ளது. 15 வயது முதல் 59 வயது வரையுள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் 18 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஒரு வயது நிரம்பாத தாழ்த்தப்பட்ட குழந்தைகளில் 1000 பேருக்கு 83 பேர் இறக்கின்றனர். 5 வயதுக்குள் 119 பேர் உயிரிழக் கின்றனர். 41 சதவீதம் பேருக்கு மின்சார வசதி இல்லை. 66 சதவீதம் பேருக்கு கழிப்பிட வசதி இல்லை. 35 சதவீதம் பேருக்கு மட்டுமே குடிநீர் வசதி உள்ளது என அதிகார பூர்வ அறிவிப்பு கூறுகிறது. 37 சதவீதம் பேர் பட்டினியாக உள்ளனர். 54 சதவீதம் பேர் ஊட்டச்சத்து இல் லாமல் உள்ளனர் என புள்ளி விவ ரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம்.

கிராமப்புறங்களில் 80 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் சொந்த நிலம் இல்லாமல் உள்ளனர். தாழ்த்தப்பட்ட வர்களின் பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி தீர்க்கும் என நம்பினர். ஆனால், பிரச்சினை எதுவும் தீரவில்லை.  இந்த நிலை முன்பு இருந்ததை விட தற்போது பாஜக ஆட்சியில் மோச மாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி ஒதுக்கீடே குறைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக் கீடு தேவையில்லை என மத்திய அரசு நினைக்கிறது.

ஜாதிய அமைப்பு முறையை ஒழிப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நோக்கம். ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் வர்க்கப் போராட்டம் சாத்தியம் இல்லை. எனவே மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு எதிராக போராட் டம் நடத்தும் அதேவேளையில் ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டும். போராடும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். முற்போக்குவாதிகள் ஜாதி ஒடுக்குமுறையை எதிர்க்கின் றனர். ஆர்.எஸ்.எஸ். ஜாதி அமைப் புகளை வலுப்படுத்தி வருகிறது. இடஒதுக்கீடு தேவையே இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலய  அர்ச்சகராகலாம் என்ற நிலையை உருவாக்கியதன் மூலம் பெரியாரின் கனவு நினைவாகி யுள்ளது. ஜாதியத்தை ஒழித்து மனிதநேயத்தை வலுப்படுத் துவது மட்டுமே தற்போதைய முக் கிய தேவையாக உள்ளது. தாழ்த்தப் பட்டவர்களுக்கு கேரளத்தில் மட் டுமே அதிக நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

அனைவருக்கும் மின்சாரம், இணையதள இணைப்பு வசதி, தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, வீடில்லாதவர் களுக்கு வீடு, குடும்பத்தில் ஒருவ ருக்கு வேலைவாய்ப்பு, வயதானவர் களுக்கு சிகிச்சை, பொதுக் கல்வித் திட்டம், நல்ல குடிநீர், இயற்கை வேளாண்மை உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன என்றார்

- விடுதலை நாளேடு,7.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக