செவ்வாய், 14 நவம்பர், 2017

ஈ.வெ.ராவுக்கு "பெரியார்" என்ற பட்டம்


13.11.1938



13.11.1938 இந்நாள் மறக்கவே முடியாத எழுச்சித் திருநாள்! அது இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலம் - களமும்கூட! அன்று பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை - பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து பெண்களே பெருமை யோடு பங்கு கொண்ட மாபெரும் பேரணி" "வீரத்தமிழ் நாடு - எம் நாடு" என்று மங்கையர் போர் முரசம் கொட்டப் புறப்பட்டது. திருவாட்டி திருவரங்க நீலாம் பிகை அம்மையார் (மறைமலை யடிகளாரின் மகள்) டாக்டர் தரு மாம்பாள், மூவலூர் இராமா மிர்தம் அம்மையார், மீனாம்பாள் சிவராஜ், பண்டித நாராயணி அம்மையார் முதலியோர் முன் னெடுத்துச் செல்ல, "ஒழிக, ஒழிக! இந்தி ஒழிக!" "விழித்தெழுந்தோம் பெண்கள்யாம் - வீணாக இந்தித் திணிப்பு ஏன்?" என்று விண் ணைக் கிழிக்கும் முழக்கங்களை வீரப்பெண்கள் சென்னையின் முக்கிய வீதிகளிலே முழங்கி வந்தனர்.

ஊர்வலம் ஒற்றவாடை நாடகக் கொட்டகையை வந்த டைந்தது. தோழர் மீனாம்பாள் சிவராஜ், தமிழ்க் கொடியை உயர்த்தினார் தோழர் வ.பா. தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரையாற்றினார். தோழர் நீலாம்பிகை அம்மையார் தலைமையேற்றார்.

மறைந்த அன்னை நாகம் மையார் உருவப் படத்தினை, தோழர் பார்வதி அம்மையார் திறந்து வைத்தார்.

அந்த மாநாட்டில் தான் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம். ஈ.வெ.ராவுக்கு "பெரியார்" என்ற பட்டம் சூட் டப்பட்டது!

ஆகா! எத்தகைய பெருமை யுடையது அந்நாளும் அம் மாநாடும்!.

"இந்தியாவில் இதுவரை தோன்றிய சீர்திருத்தத் தலை வர்களால் செய்ய இயலாமற் போன வேலைகளை நம் மாபெருந் தலைவர் ஈ.வெ.ரா. செய்து வருவதாலும் தென்னாட் டில் அவருக்கு மேலாகவும், ஒப்பாகவும் நினைப்பதற்கு வேறு ஒருவரும் இல்லாமையாலும், அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போது பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்க வேண்டும்" என்பதுதான் வரலாற்றை வென் றெடுக்கும் வெண்தாடி வேந்த ருக்குப் பெண்களே மாநாடு கூட்டி பெரியார் என பட்டம் அளித்து மகிழ்ந்த அரும்பெரும் தீர்மானமாகும்.

தீர்மானத்தை விளக்கிப் பேசியவர்களுள், அண்ணாவின் துணைவியார் இராணி அம்மை யாரும் ஒருவர் என்பது கூடுதல் தகவலாகும்.

- மயிலாடன்

- விடுதலை நாளேடு,13.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக