திங்கள், 18 பிப்ரவரி, 2019

தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்

திருச்சி தமிழ்நாடு புரோகித மறுப்புச்சங்கத்தின் நிர்வாகக் கூட்டம் 4.8.1935 மாலை 6 மணிக்கு ''சோஷியல் ஹோமில்'' தலைவர் டி. வி. சோமசுந்தரம் பி.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பெரும் பாலான அங்கத்தினர்கள் அது காலை விஜய்ஞ் செய்திருந்தார்கள். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேறியது.


தீர்மானங்கள்


1. காரியதரிசிகளிலொருவரான தோழர் உறையூர் ச.ம.சி. பரமசிவம் அவர்கள் சங்கக் கொள்கைகளுக்கு விரோதமாக தனது திருமணத்தை வைதீக சமய சாதிச்சடங்குகளுடன் புரோகிதனை வைத்து திருநெல்வேலியில் நடத்திக்கொண்டதைப் பற்றி இக்கூட்டம் வருந்துவதோடு அவர் இதுவரை ராஜிநாமா கொடுக்காத படியால் காரியதரிசி பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தீர்மானிக்கிறது.

2. சங்கத்தை ரிஜிஸ்தர் செய்ய அடியிற்கண்ட தோழர்களைக் கமிட்டியாக ஏற்படுத்தி, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும்படி அதிகாரம் அளிக்கிறது.

கமிட்டியார் 1. டி. வி. சோமசுந்தரனார், பி.ஏ., பி.எல். 2 நீலாவதியார் 3. என், எஸ். எம். செல்வக்கணபதியார்

3. காரியதரிசியாகவிருந்த தோழர் ச.ம.சி.பரமசிவம். அவர்களை சங்க சம்பந்தமான எல்லா ரிக்கார்டுகளையும் கணக்குகளையும் சங்கத் தலைவர் அவர்களிடம் ஒப்புவித்துவிடும்படி தீர்மானிக்கிறது.

4. சங்கத்தின் காரியாலயத்தை தற்காலிகமாக திருச்சி கோட்டை 41 நிர் திப்புரான் தொட்டித்தெரு சோஷியல் ஹோமில் அமைத்துக் கொள்வதென்று தீர்மானிக்கிறது.

4ஏ. இச்சங்க சம்பந்தமாக தோழர்கள் எழுதியனுப்பும் எல்லாக் கடிதப் போக்குவரத்துக்களும், நன் கொடை, சந்தா முதலியவைகளும் ''தலைவர்” தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கம் சோஷியல் ஹோம் 41 திப்புரான் தொட்டித் தெரு

திருச்சி என்ற விலாசத்திற்கே அனுப்ப வேண்டுமெனத் தெரிவிக்கிறது.

5. சங்கத்தின் புதிய வருடத்தேர்தல் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக 25.8.1935 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருச்சி சோஷியல் ஹோமில் ஓர் பொதுக்கூட்டம் நடைபெற வேண்டுமெனத் தீர்மானிக்கிறது.

மேற்படி கூட்டம் இரவு 8 மணிக்கு முடிவு பெற்றது. தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு உள்ளூர் வெளியூர் தோழர்கள் வந்து கலந்து கொள்ள வேண்டுமென தலைவர் டி.வி.சோமசுந்தரம் உபதலைவர் நீலாவதி ஆகியவர்கள் அறிவிக்கிறார்கள்.

-  விடுதலை ஞாயிறு மலர், 16.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக