செவ்வாய், 21 மே, 2019

பண்டிமணி ஜி.அப்பாதுரையார்(1890-1962)

பண்டிமணி ஜி.அப்பாதுரையார்(1890-1962)

இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து,வரலாறு உணர்ந்து தர்க்க ரீதியில் ஆதரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக்குறைவு.அவர்களின் சிறந்தவர் பண்டிமணி  ஜி.அப்பாதுரையார்.அவர் வாதத்தில் அன்றைய காலத்து தமிழ்நாடு தூயத்தமிழ் இணைந்தோடும்,கருத்தில் தரம் தெரியும்,திறன் பேசும்,அறன் ஔிரும்,சிந்தனையிலே வீரத்தை காட்டி வாழ்ந்தவர் அப்புலவர் பெருமகனார்.

இவர் 1890 கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளரந்தவர். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார்.இளமையிலேயே கழைக்கூத்து,மாந்தரீகம்,பில்லி,சூனியம் போன்றவைகளில் நாட்டாங்கொண்டிருந்தார் என்பார்கள்.

1907ல் இவர் வாழ்க்கையில்  பெரும் மாறுதல் ஏற்பட்டது.இதற்க்கு சென்னை ராயபேட்டையிலிருந்து தமிழகத்து முதல் பகுத்தறிவுவாதியான அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் வெளியிடப்பட்டுவந்த தமிழன் பத்திரிக்கையும்,அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்க கூட்டங்களே காரணமாகும்.சமயம்,சமுதாயம்,இலக்கியம் ஆகிய துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றி காணுவது இவருக்கு கைவந்த கலையாக இருந்தது.1912லிருந்து திராவிடன்,நவசக்தி,விலாசினி,குடியரசு போன்ற பத்திரிகைகளில் சிறப்பான தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகையான அரிய கட்டுரைகளை எழுதி புகழ்பெற்றார்.

ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றிருந்த இவர் 1911ல் தமது 21வயதில் பௌத்தம் தழுவினார் . இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு  இளைஞர் பௌத்த சங்கத்தை கோலார்,வேலூர்,சென்னை,செங்கல்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார்.சிறுநூல்கள் பல எழுதினார்.எண்ணிலடங்கா அரியக்கூட்டங்களை நடத்தினார்.இவரது நீத்தார் நினைவு நாளில் எங்களுக்குகெல்லாம் முன்பே பகுத்தறிவு பிரச்சாரம் செய்து மக்களை திருத்தியவர் இவர் என்று பெரியார் ஈவெரா அவர்களால் புகழப்பட்டது இங்கு குறிப்பிடதக்கதாகும்.

1917 ல் மாண்டேகு -செம்ஸ்போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கியது.1924 ல் காந்தியோடு சமுதாயச் சீர்திருத்தத்தை பற்றி வாதிட்டது ஆகியவை இவரது தொண்டின் சிறப்புகாகும்.1926லிருந்து பள்ளி ஆசிரியராகவும்,கோலார்,தமிழன், பத்திரிக்கை ஆசிரியராகவும் பணியாற்றினார்.புத்தர் அருளறம் என்ற நூலினை படைத்துள்ளார்.1930லிருந்து 1955வரை அவர் செய்த தொண்டு மக்த்தானதாகும்.1962ல் உடல் நலங்குன்றி பஞ்சகந்த பிரிவினையடைந்தார்..

இந்த பெருமகனாரின் வரலாற்றை பதிவு செய்த ஐயா அன்புபொன்னோவியம் அவர்களுக்கு நன்றி..

ஏப்ரல் தலித் வரலாற்று மாதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக