வியாழன், 2 ஜூலை, 2020

சிவகங்கை இராமச்சந்திரனார்



#தேவர் சமூகத்தில் பிறந்து ஜாதியை மறுத்து, பெரியாரின் படைத் தளபதிகளாக செயல்பட்டவர்களில் ராமச்சந்திரர் குறிப்பிடத்தக்கவர். சிவகங்கை சீமையிலே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த தீண்டாமை வன்கொடுமைகள் நடந்தாலும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு களத்திற்கு செல்லும் வழக்கறிஞர்.

ஜாதிவெறியர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, சிவகங்கையின் #முதல் ஆதிதிராவிடர் மாநாட்டை நடத்தி காட்டியவர். மாநாட்டு மேடையிலும் துப்பாக்கியோடு அமர்ந்திருந்தவர். 1929 இல், தன் பெயருக்கு பின்னால் இருந்த ஜாதிப் பெயரை பெரியார் நீக்கியபோது, இவரும் தன் பெயருக்கு பின்னால் இருந்த "#சேர்வை" என்ற வாலை வெட்டிக்கொண்டார். இறுதிவரை, ஒடுக்கப்பட்ட நாடார்களுக்கும் தலித்களுக்கும் கள்ளர்களுக்கும் பிறருக்கும் பக்கபலமாக இருந்தார். இன்றைய தேவை பல ராமச்சந்திரன்கள்.
#பெரியாரின்_தளபதி
#சுயமரியாதை_வீரர்
- எட்வின் பிரபாகரன், முகநூல் பதிவு, 22.6.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக