செவ்வாய், 22 டிசம்பர், 2020

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு 23.7.1990 சென்னை

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு 23.7.1990 அன்று சென்னை பெரியார் திடலில் பம்பாய் தொல்காப்பியனார் அரங்கத்தில் கரூர் பி.கே.அய்யா (இவர் வைக்கம் போராட்ட வீரர்) நினைவுப் பந்தலில் எழுச்சியுடன் தொடங்கியது.

கா.மா.குப்புசாமி

மாநாட்டில், பேரணியும் தந்தை பெரியார் சமூகக் காப்பணி அணிவகுப்பு நடத்திய மாட்சியும் காவல் துறையினரையே கவர்ந்து என்றால் அதன்  சிறப்பைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிற அளவில், பெண்கள் அணி வகுப்பு, குதிரைகள் அணி வகுப்பு, பெரியார் பிஞ்சுகளின் மழலை முழக்கங்கள், மாவட்ட வாரியான அணிவகுப்பு, சென்னையே குலுங்கும்வண்ணம் நடை பெற்றது! இம்மாநாட்டின் வெற்றி மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி, தஞ்சை கா.மா.குப்புசாமி ஆகியோரின் அயராத பணிக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

மாநாட்டில், உரையாற்றும்போது, பி.ஜே.பி. என்றால், ‘பிராமின் ஜனதா பார்ட்டி’ என்று பொருள். எத்தனை ஏடுகளைப் பார்ப்பனர்கள் நடத்தினாலும், எங்கள் கரித்துண்டு எழுத்துகளுக்குமுன் எம்மாத்திரம்?

தந்தை பெரியார் மறைந்து இருக்கலாம். ஆனால், பெரியார் கைத்தடியாக இருக்கக்கூடிய பெரியாருடைய தொண்டர்கள் இந்த நாட்டிலே இலட்சோபஇலட்சம் பேர் இருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக