புதன், 23 டிசம்பர், 2020

வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்!

அமெரிக்காவிலேயே முதன்முதல் நடக்கும் சுயமரியாதை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா

9.9.1990 அன்று அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலம் சிகாக்கோ நகரிலே என் மகள் செல்வி அருள்செல்விக்கும், மலேசியா கே.வேலு_சாரதா ஆகியோரின் செல்வன் பாலகுருவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சியும் அதன் தொடர்பான கருத்தரங்குகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

மணவிழாவிற்கு, என்றும் அன்னை என்று என்னால் மதிக்கப்படும் திருமதி வெர்ஜினியா கிருச்சினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 மணமக்கள் அருள்செல்வி - பாலகுரு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

மணவிழாவிற்கு அருமை நண்பர்கள் பாரிஸ் சுசீலா, இலண்டன் ஜெயராம், நியூயார்க் அமுதா, நியூஜெர்சி ராஜரத்தினம், அட்லாண்டா ஜியார்ஜியா, டாக்டர் நல்லதம்பி குடும்பத்தினர், டெக்ஸ்சாஸ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் திரு.தில்லை ராஜா குடும்பத்தினர், எம்.எம்.ராஜ் குடும்பத்தினர், இ.சாய்.வேதமுத்து, விஸ்கான்சில் பல நண்பர்கள் மற்றும் டாக்டர் திரு.சேனாபதி குடும்பத்தினர், ஒகியோ தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் திரு.ராஜேந்திரன் குடும்பத்தினர், டாக்டர் அரசு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பலரும் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர்.

சோம.இளங்கோவன் ஆசிரியரின் மகள் அருள்செல்வி - பாலகுரு திருமணத்தை நடத்தி வைக்கும் காட்சி உடன் அன்னை திருமதி வெர்ஜினியா கிருச்சினர்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மகள் இணையேற்பு விழாவில் கலந்து கொண்ட இரு குடும்பத்தினர்

இல்லினாய்ஸ் மாநிலத்தின் நீதிபதி மணவிழாவிற்கு வருகைபுரிந்து, மணமக்கள் இருவருக்கும் சம்மதமா என்று கேட்டு, அந்நாட்டு முறைப்படி மணவிழா நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவிலேயே முதன்முதல் நடக்கும் சுயமரியாதை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என்னும் சிறப்பை ஏற்படுத்தி, தாலி அணிவிக்காமல் மாலை மாற்றி மோதிரம் அணிவித்து, தந்தை பெரியார் அவர்களின் ஒப்பந்த விழா உறுதிமொழியை டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் கூற, மணவிழா இனிது நடைபெற்றது.

இணையேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் அன்னை திருமதி வெர்ஜினியா கிருச்சினர் அவர்களுடன் மணமக்கள் மற்றும் ஆசிரியர்.

இம்மண விழாவினை அமெரிக்க தமிழர், அன்பர்கள் அனைவருமே அறிமுகப் படுத்தினார்கள். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அன்பர்களும் மற்றும் டாக்டர்கள், பொறியியல் விஞ்ஞான வல்லுநர்கள், தொழில் அதிபர்கள் வந்து வாழ்த்துக் கூற மணவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அமெரிக்காவில் கடும் உழைப்பால், சிக்கனத்தால், ஈட்டிய பொருளால் எல்லா செலவுகளையும் மணமக்கள் தாங்களே செய்துகொண்ட புதுமை அங்குள்ள தமிழர்களையும், அமெரிக்கர்களையும் பெரிதும் கவர்ந்தது! சிகாகோ இளங்கோவன் அவர்கள் தந்தை பெரியார் போல் உடை அணிந்து நன்றிகூறிட, விழா இனிது நிறைவேறியது.

டாக்டர் சேவியர் ரோஜ் இனிய குரல் படைத்த ஈழத்தமிழர் அய்ங்கரன், ஈழத்திற்குச் சென்று வந்த அவருடைய அண்ணன் திரு.பாஸ்கரன், திருமதி.ரேவதி நடேசன், சிகாகோவின் இசைச் சித்தர் ராமன் ஆகியோரின் இன்னிசை விழாவுடன் மணவிழா இனிதே நடந்தேறியது.

தமிழகத்திலிருந்தும் உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்த வாழ்த்துத் தந்திகள், கடிதங்கள் அனைத்தும் மேடையில் படிக்கப்பட்டன. அமெரிக்காவில் முதல் சுயமரியாதைத் திருமணம் என்பது வரலாற்றில் பதிவானது.

மணமக்களை வாழ்த்தி உரையாற்றும்போது, சடங்கு, சம்பிரதாயம் என்கிற முறையில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதை அறிவாசான் தந்தை பெரியார் அகற்றி, சமமான முறையில் வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொண்டு ஒத்த கருத்துடையவர்களாக -_ நண்பர்களாக வாழ வேண்டும் என்றார். ஆண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் இருக்கின்றதோ அந்த அளவுக்கு பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தேன். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் சிலாங்கூர் மாநிலத் தலைவர் ரே.கோ.ராசு உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தி உரைநிகழ்த்தினார்கள்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ் 1 -15 .11. 19

செவ்வாய், 22 டிசம்பர், 2020

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு 23.7.1990 சென்னை

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு 23.7.1990 அன்று சென்னை பெரியார் திடலில் பம்பாய் தொல்காப்பியனார் அரங்கத்தில் கரூர் பி.கே.அய்யா (இவர் வைக்கம் போராட்ட வீரர்) நினைவுப் பந்தலில் எழுச்சியுடன் தொடங்கியது.

கா.மா.குப்புசாமி

மாநாட்டில், பேரணியும் தந்தை பெரியார் சமூகக் காப்பணி அணிவகுப்பு நடத்திய மாட்சியும் காவல் துறையினரையே கவர்ந்து என்றால் அதன்  சிறப்பைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிற அளவில், பெண்கள் அணி வகுப்பு, குதிரைகள் அணி வகுப்பு, பெரியார் பிஞ்சுகளின் மழலை முழக்கங்கள், மாவட்ட வாரியான அணிவகுப்பு, சென்னையே குலுங்கும்வண்ணம் நடை பெற்றது! இம்மாநாட்டின் வெற்றி மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி, தஞ்சை கா.மா.குப்புசாமி ஆகியோரின் அயராத பணிக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

மாநாட்டில், உரையாற்றும்போது, பி.ஜே.பி. என்றால், ‘பிராமின் ஜனதா பார்ட்டி’ என்று பொருள். எத்தனை ஏடுகளைப் பார்ப்பனர்கள் நடத்தினாலும், எங்கள் கரித்துண்டு எழுத்துகளுக்குமுன் எம்மாத்திரம்?

தந்தை பெரியார் மறைந்து இருக்கலாம். ஆனால், பெரியார் கைத்தடியாக இருக்கக்கூடிய பெரியாருடைய தொண்டர்கள் இந்த நாட்டிலே இலட்சோபஇலட்சம் பேர் இருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1-15.11.19

திங்கள், 21 டிசம்பர், 2020

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம்


இதே நாளில் தான் (19.12.1973) தந்தை பெரியார் சென்னை தியாகராயர் நகரில் தன் இறுதி முழக்கத்தை செய்தார்ஆனால் அதுதான் இறுதி முழக்கம் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது.

ஆனாலும் அய்யாவின் அந்தஉரை எப்படியோ மரண சாசனமாக அமைந்து விட்டது.

சுயமரியாதை இயக்கத்தின்திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளை சாறு பிழிந்து எடுத்தது போல அமைந்தது அந்த அரிய உரை!

1) கடவுளைப் பற்றி கடுமையாக விமர்சிக்கிறேன் என்று நினைக்கலாம்ஆனால் நாலாயிர திவ்யிய பிரபந்தம்தேவாரம் முதலிவை கடவுள் நம்பிக்கையில்லாதவர்களையும்சைவம்வைணவம் அல்லாதவர்களையும் எப்படியெல்லாம் இழிவுப் படுத்துகின்றன - கேவலமாகப் பேசுகின்றன என்பதை எடுத்து விளக்கினார்.

2) மத நூல்களும்அரசமைப்புச் சட்டமும் ஜாதியைப் பாதுகாக்கின்றனநூற்றுக்கு 3 விழுக்காடு உள்ள உயர் ஜாதி பார்ப்பனர் தவிர மற்றவரை சூத்திரர்கள் என்று சொன்னால் அதன் பொருள் என்ன?

பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சொல்லுவதை இந்தக் காலகட்டத்திலும் எப்படி ஏற்க முடியும் என்ற கேள்விதான் தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் பேருரையின் இடியாகவும்மின்னலாகவும் தகித்தன.

3) இந்திய அரசமைப்புச் சட்டம் மதப்பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதியைப் பாதுகாப்பது என்றால் அதன் பொருள் மத சாத்திரங்கள் கூறும் அந்த சூத்திர ஜாதி இழிவைக் காப்பாற்றுகிறது என்று தானே பொருள் என்பதுதான் தந்தை பெரியாரின் முக்கியமான வினாவாக இருந்தது.

4) தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்குமான அர்ச்சகர் உரிமைப் போராட்டம் ஆகும்.

தந்தை பெரியார் கோயில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட் டத்தை அறிவித்த நிலையில் அவரின் முக்கிய சீடரான மாண்பு மிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில் அய்யாவிற்கு போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் அதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்ஆனால் பார்ப்பனர் அதனை எதிர்த்து நேரிடையாகவே உச்ச நீதிமன்றம் சென்று சூத்திரர்கள் கடவுள் சிலையைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

அது தொடர்பான தீர்ப்பில் “ஆபரேசன் சக்சஸ்நோயாளி செத்தான்” என்ற நிலையில் தான் இருந்தது.

கோயிலைக் கட்டிய அரசர்கள் தமிழர்கள்கோயிலைக் கட்ட உழைப்பைக் கொடுத்தவரும் தமிழர்கள்அந்தத் தமிழனை நாலாம் ஜாதி வருணத்தவனாக்கிஅதாவது சூத்திரனாக்கி (வேசி மக்களாக்கிஅவன் கட்டிய கோயில் கருவறைக்குள் அவன் நுழையக்கூடாதுஅவன் நுழைந்தால் கடவுள் தீட்டாகிவிடும் என்று சொன்ன நிலையில்தான் தந்தை பெரியார் கொதித்து எழுந்து தமது இறுதிப் பேருரையில் வெளியிட்ட ஒவ்வொரு சொல்லுமே எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறின.

5) எல்லாக் கட்சிக்காரனும் சேர்ந்து தி.மு.ஆட்சியை ஒழிக்கப் பார்க்கிறான்இந்த தி.மு.ஆட்சி ஒழிந்தால் என்ன நடக்கும்?

இன்றைக்குத் திருட்டுத்தனமாகப் பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாக பேசுவான்அப்படிப் பேசுகிறவனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்பான் - விளம்பரமும் கொடுப்பான் என்று தனது இறுதி மரண சாசனத்தில் தந்தை பெரியார் முழங்கினாரே - அது இப்பொழுது நடைமுறையில் பட்டவர்த்தனமாக உள்ளதாஇல்லையா?

தி.மு.ஏன் ஆட்சிக்கு வரக்கூடாதாம்அது திராவிடர் இன உணர்வுடன் நடந்து கொண்டும்சமூக நீதியில் அக்கறை செலுத்தும்ஜாதி ஒழிப்பிற்கு வழி செய்யும்மதத்துக்கு எதிராக பாலியல் நீதி பேசும் - மகளிர் வளர்ச்சித் திட்டங்களை மிக விரைவாக அறிவிக்கும்.

பண்பாட்டுத் துறையில் பார்ப்பனீயத்துக்கு எதிராக படை வரிசை காட்டும்தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மீண்டும் சட்டம் கொண்டு வரும்சமஸ்கிருதம்இந்தியை எதிர்த்தும்அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை விரிவு படுத்தல்.

மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலிலும்சிறீரங்கம் ரங்கநாதன் கோயிலிலும் கூட பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர்களாக வரும் நிலை ஏற்படும்.

அதுவும் மதவாத ஆட்சி மத்தியில் தொடை தட்டிதோள் தட்டி பொங்கி எழும் நிலையில்தமிழ் நாட்டில் தி.மு.ஆட்சி நிலை பெற்றால் அவை எல்லாம் தவிடுப் பொடியாகாதா?

தமது இறுதி மரண சாசன உரையில்தந்தை பெரியார் சொன்ன தி.மு.ஆட்சி ஒழிக்கப்பட்டால்இன்றைக்கு மறைவாக பேசுகிற பேச்சை நாளைக்கு வெளிப்படையாக பேசுவான் என்றாரே.

அதுதானே இன்று நடக்கிறதுராம ராஜ்ஜியம் என்றும் இந்து ராஜ்ஜியம் என்றும் வெளிப்படையாகப் பேசவில்லையா?

எத்தகைய தொலைநோக்கு.

இன்றைக்கு 47 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் எச்சரித்தது இப்போழுது வந்து விட்டதே.

அந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது நடக்க இருக்கும் தேர்தலில் தி.மு.வெல்ல வேண்டியதும் “திராவிடம்“ தீர்க்கமாக ஒளி வீசித்திகழ வேண்டியதும் அவசியமாகும்.

அதுதான் தந்தை பெரியாரின் மரண சாசனப் பேருரை நமக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடமும்விட்டுச் சென்றுள்ள “திராவிடம்“ என்னும் தத்துவச் சீலரும் ஆகும்.

வாழ்க பெரியார்,

வெல்க திராவிடம்!

 

வெள்ளி, 4 டிசம்பர், 2020

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பக்தர்களைப் புண்படுத்தவா?

ஜெயவர்த்தனா கொடும்பாவி எரிப்பு

25.01.1988 அன்று ஜெயவர்த்தனா இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு ஜெயவர்த்தனாவின் கொடும்பாவி உருவப் பொம்மை எரிக்கப்பட்டது. தோழர்கள் சாரை சாரையாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், என் தலைமையில் பெரியார் திடலிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாகப் புறப்பட்டு ஜெயவர்த்தனாவே ஒழிக என்று முழக்கப்பட்டு கழகத் தோழர்கள் வந்தபோது, திடீரென்ற போலீசு கழகத் தோழர்கள் மீது தடியடி நடத்தியது. இதனைத் தடுக்க நான் கூட்டத்தின் நடுவில் புகுந்து தடுக்க, என் மீது அடித்து அடிபட்டு, தரையில் விழுந்து என் கால் காயம் ஏற்பட்டது. உடனே கழகத் தோழர்கள் என்னைக் காப்பாற்ற சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்பு தோழர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் திடீரென்று இப்படி நடந்துகொண்டது ஏதோ உள்நோக்கத்தோடு எங்கள் மீது தடியடி நடத்தியது. அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த அமைச்சர் முத்துசாமி தடியடி சம்பவத்தை முன்னிட்டு தோழர்களிடத்திலும் என்னிடத்திலும் மன்னிப்புக் கோரினார்.

இலங்கை அதிபர் ஜெயவர்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்டரல் ரயில் நிலையத்தில் ஆசிரியர் தலைமையில் மறியல் செய்யும் கழகத்தினர்.

இந்த தடியடி சம்பவத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.

- உண்மை இதழ், ஜூலை, 1 -15 .2019

வியாழன், 3 டிசம்பர், 2020

ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தம்மம்பட்டி தாக்குதல்

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் 28.8.1987 அன்று இரவு  பொதுக்கூட்டமும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்மம்பட்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்காரர்கள் 27.8.1987 மாலை தம்மம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தக் கூடாது _ அனுமதிக்கக் கூடாது என்று சொல்லியும் உள்ளனர். இதனை காவல்துறை மறுத்து திராவிடர் கழகத்தினர் முறையான அனுமதி பெற்றுத்தான் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள். அவற்றை தடை செய்ய முடியாது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதைக்கேட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்காரர்கள் அடி ஆட்களை தயார் செய்து கொண்டு வந்து மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின் உள்ளே புகுந்து பொதுமக்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வன்முறை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுக்கூட்ட மேடையைத் ‘தீ’ வைத்து எரித்தனர்.

இதற்கிடையில் ஆத்தூரிலிருந்து கார் மூலம் (எம்.எஸ்.எம்.1751) புறப்பட்டு தம்மம்பட்டி பொதுக்கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்தேன். காரில், சிங்.குணசேகரன், தாமோதரன், ஆத்தூர் முருகேசன், அக்கிச்செட்டிபாளையம் செல்லமுத்து உள்ளிட்டோர் என்னுடன் பயணம் செய்தனர்.

6.45 மணிக்கு உடையார்பாளையம் மெயின் ரோட்டிலுள்ள பாலத்தருகே வந்தபோது ஒரு கும்பல் திடீரென்று நான் வந்த காரை மடக்கி கடுமையான ஆயுதங்களாலும், கற்களாலும் தாக்கி, சூழ்ந்துகொண்டு காரை தாக்கினார்கள். “அடி! கொல்லு!’’ என்று ஆவேசமாகச் சத்தம் போட்டுக் கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு குறி வைத்துத் தாக்கினர். “இந்து மதத்தைத் தாக்கிப் பேசுவானுங்கடா! வீரமணியைக் கொல்லுங்கடா!’’ என்று துரத்தியபடியே காரை அடித்து நொறுக்கினார்கள்.

கார் டிரைவர் வெகு சாமர்த்தியமாக வண்டியைப் பின்னாலே கொண்டு வந்து திருப்பி வெகு விரைவாக தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அன்று கார் டிரைவரின் சாமர்த்தியம்தான் என்னை ஆர்.எஸ்.எஸ். காலிகளிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிக்க வைத்தது.

காவல் நிலையத்தில் சேலம் மாவட்ட தி.க. துணைத் தலைவர் ஆத்தூர் முருகேசனும், தம்மம்பட்டியைச் சேர்ந்த தோழர் செயராமனும் புகார் கொடுத்தனர்.

ஊரில் பதட்டநிலையும், பரபரப்பும் ஏற்பட்டது. எப்படியும் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுத்தான் இந்த ஊரை விட்டுப் புறப்படுவேன். மேடை இல்லாவிட்டாலும் ஒலிபெருக்கி இல்லாவிட்டாலும் பேசி விட்டுத்தான் செல்வேன் என்று, மிகத் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே 75 நிமிடம் உரையாற்றிவிட்டு அங்கிருந்து 11.45 மணிக்கு பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டேன்.

என் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்துவது 3ஆவது முறையாகும், இம்முறை உயிருக்குக் குறி வைத்தனர். இதையெல்லாம் முறியடித்துவிட்டுத்தான் இன்றுவரை என் பயணம் தொய்வின்றி பெரியார் போட்டுத்தந்த பாதையில் தொடர்கிறது.

கழகத் தோழர்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும்

என்னைப் பார்த்து, ‘வணக்கம்’ என்று கூறும்போது கத்தியோடுதான் ‘வணக்கம்’ என்று கூறவேண்டும்.

இனி யாரையும் நம்பி நாம் வாழ முடியாது, வாழக் கூடாது! என்று 31.8.1987 அன்று ‘தம்மம்பட்டி கலவரம்’ குறித்து மன வேதனையுடன் கழகத் தோழர்களுக்கு அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்தேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், ஜூன், 15 -30 .19