வியாழன், 14 ஜூன், 2018

திராவிடர் இயக்க சாதனை ஒப்பீடு

ஜே பி. பிரகாஷ் அவர்களின் அருமையான பதிவு வடஇந்தியாவில் என்கூட தனியார்துரையில்  வேலைபார்ப்பவர் யாரும் பொரியாளர் பட்டியலில் தலித் இல்லை என்பது திடீர் தலித் போராளிகளுக்கு எங்கே தெரியபோகிறது .

திராவிட ஆட்சிகளை, குறிப்பாக திமுக & கலைஞரை குறைசொல்லும் "நியோ தலித்திய போராளிகள் & அமித்ஷாயிஸ்ட் தலித் போராளிகள்" கவனத்துக்கு..

எப்பா அறிவாளிகளே, எந்த ஒரு வளர்ச்சியையும் பிற பகுதிகளோடோ அல்லது ஒரே பகுதியில் பிற காலகட்டத்தோடோ ஒப்புமைப்படுத்தி, ஒப்பிட்டு பார்த்துத்தான் எவ்வாறு முன்னேறியுள்ளது, வளர்ச்சியடைந்துள்ளது என்பதை பார்க்கவேண்டும்... தமிழகத்தில் தலித்களின் நிலை என்ன, வட மாநிலங்களில் உள்ள நிலையென்ன?? ஐம்பதாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் என்ன நிலை, இப்போது என்ன நிலை.. இப்படி கம்பேர் செய்து, வளர்ச்சி அடைந்துளோம்மா இல்லையா என்பதை ஒப்பீட்டளவில் அறிந்துகொள்ளலாம்....

இன்றைய நிலையில் இந்தியாவில், தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில், குறிப்பாக தெற்கை தாண்டி, முன்னேற்றம் அடைந்துள்ளது பெரும்பாலும் உயர் சாதியினர் மட்டும் தான்... அங்கெல்லாம் அதிகம் உள்ள பிற்படுத்தப்பட்ட & மிக பிற்படுத்தப்பட்ட, தலித் & பழங்குடி மக்களின் நிலையானது இன்னும் முன்னேற்றம் அடையாமல், பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது.. உதாரணமாக ஐடி போன்ற தொழில்நுட்ப பணிகளில் உள்ளவர்களை மாநிலவாரியாக எடுத்துக்கொண்டால், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களில், உயர் ஜாதியினரே அதிகமிருப்பர்.. ஆனால், தமிழ் நாட்டினரை எடுக்கொண்டால், அனைத்து பிரிவு மக்களும் இருப்பார்கள்.. வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை எடுத்துக்கொண்டாலும், இதே நிலையத்தான்.. ஏனென்றால், தமிழகத்தில்தான், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இன்-குளூசிவ் வளர்சி மிக அதிகம்..

1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் பொருளாதார சமூக வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.
2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் சமூக பொருளாதார நிலை உயர்வாக உள்ளது.
3. இந்தியாவிலே தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலைமை மிக மேம்பட்டு உள்ளது.
4. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், தலித் வகுப்பை சேர்ந்த தொழில்முனைவோர் (entrepreneurs) மிக அதிகம் உள்ளனர்...

மேலும், சுதந்திர இந்தியாவிலேயே முதன்முதலாக உயர்நீதிமன்ற நீதிபதியாக தலித் வகுப்பை சேர்ந்த திரு. வரதராசனை 1974லில் நியமிக்க வழிவகுத்தது கலைஞர்... இவர்தான் பின்னர் உச்சநீதிமன்றத்தில் முதல் தலித் வகுப்பு நீதிபதியாக பணியாற்றிய சிறப்பு பெற்றவர்..

சென்னை மாநகருக்கு போலீஸ் கமிஷனராக முதன்முதலாக தலித் வகுப்பை சார்ந்தவரை நியமித்தது கலைஞர்.

அண்ணல் அம்பேத்கார் பெயரில் முதன்முதலாக கலை கல்லூரி, சட்ட கல்லூரி, சட்ட பல்கலைக்கழகம் போன்றவற்றை துவக்கியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி..

சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபம் அமைக்கப்பட்டது (2000), வேலூர் அம்பேத்கர் மாவட்டம் (1989) பெயர்சூட்டியது எல்லாம் கலைஞரின் திமுக ஆட்சியில்..

கல்வி & திருமண உதவித்தொகை முதல் தலித் பிரிவிலேயே மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியின மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு கொடுத்து வரை நடந்தது எல்லாம் கலைஞரின் திமுக ஆட்சியில்.. 

நீதிக்கட்சி தமிழகத்தை ஆளும்போதுதான் தாழ்த்தப்பட்டோரின் பொது வீதிகளில் நடக்கலாம், பொதுக் கிணற்றில் நீரெடுக்கலாம் என சட்டமே இயற்றப்பட்டது அதுவும் திராவிட இயக்கம்தான்...

அம்பேத்கர் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சுக்களை அந்த மாநாட்டு நிர்வாகக்குழுவே பதிப்பில் ஏற்ற மறுத்த நிலையில், திராவிட இயக்கம்தான் அதை ஆயிரக்கணக்கில் பதிப்பித்து விற்றது இதெல்லாம் சுதந்திரத்துக்கு முந்தைய வரலாறு.

அண்ணல் அம்பேத்தர்கரின் பெயரை அவர் பிறந்த மாநிலத்தில் ஒரு பல்கலைக் கழகத்துக்கு வைக்க முடியவில்லை - மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. இங்கே கலைஞர் ஆட்சியில் சட்டக் கல்லூரிக்கு பெயரே அம்பேத்தர்கரின் பெயர்தான்.

அம்பேத்கர் பிறந்த மகாராஷ்ட்ராவை விட அம்பேத்கர் சிலைகளும், சாலைகளும் தமிழகத்தில்தான் அதிகம். அம்பேத்கரின் நினைவுச் சின்னங்கள் மராட்டிய மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் அதிகம் இதெல்லாம் நிகழ்கால நிலைமை..

திராவிட இயக்க முன்னோடிகளுக்கும், ஆட்சிப்பொறுப்பில் இருந்து இதை சாதித்த திராவிட கட்சிகளுக்குமே, குறிப்பாக திமுக & கலைஞருக்கு தான் இந்த வெற்றி....

சரி, வட மாநிலங்களில் பிஜேபி ஹிந்துத்துவா கொலோசும் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிரா, மாயாவதி பிஎஸ்பி ஆட்சி செய்த உபி, ராம்விலாஸ் பாஸ்வானின் பிகார் போன்ற தலித் மக்களின் நிலையை கொஞ்சம் பார்ப்போமா???

திருமண அழைப்புக்கு குதிரை மீது தலித் வகுப்பை சார்ந்த மாப்பிளை அமர்ந்து வந்ததால், ஆத்திரம் கொண்டு தலித் மக்கள் மீது கடும் தாக்குதல்..

தலித் வகுப்பை சார்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் பேண்ட் வாத்தியம் வைத்தால், எரிச்சல் கொண்டு, தலித் வகுப்பினர் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெய்யை ஊற்றி பாழ்படுதினர் ஆதிக்க சாதியினர்..

தலித் வகுப்பை சார்ந்த மாப்பிள்ளை அலங்கரிகபட்ட காரில் ஊர்வலமாக வந்ததால், ஆத்திரம் கொண்டு தலித் மக்கள் மீது கடும் தாக்குதல்..

குதிரை வளர்த்த தலித் இளைஞர் எரித்து கொலை.

செத்த மாட்டின் தோலை அகற்றிய தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்..

தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்...

இவைகளெல்லாம் அங்கே தினந்தோறும் சர்வசாதாரணமாக நடப்பவைகள்..

உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தலித் மக்கள் முன்னேறவில்லை, வளரவில்லை என பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்..

தமிழகத்தின் ஒருங்கிணைத்த சமூக, கல்வி & பொருளாதார வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணம், சென்னை மாகாணத்தில் உருவான பார்ப்பனர் அல்லாத இயக்கங்கள், நீதிக்கட்சியின் ஆட்சி, தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கங்கள், குறிப்பாக திமுக ஆட்சி தான்....

தமிழகத்திலும் ஒரு சில சாதிய அடக்குமுறை சம்பவங்கள் எப்போதாவது ஒருசில இடங்களில் நடக்கின்றன... ஆனால், தமிழகத்திற்கு வெளியே போய்ப் பாருங்கள், இங்கே எங்கோ ஒன்றிரண்டு இப்படி நடப்பவைகளெல்லாம், அங்கே எல்லா இடங்களிலும் அடிக்கடி நடக்கும்.....

Prakash JP.

- குமரேசன் தங்கவேல், பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள் முகநூல்பதிவு( 15.6.18)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக