சனி, 26 ஜனவரி, 2019

கோவில் பிரவேச மசோதா (2)

சென்ற வாரத் தொடர்ச்சி
30.10.1932 - குடிஅரசிலிருந்து...
டாக்டர் சுப்பராயன் கட்சியினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் அரசாங்கத்தாரும், உண்மையிலேயே எல்லாச் சமுகங்களும் ஒற்றுமை யடைய வேண்டும் என நினைப்பார்களாயின் இந்து மத ஆலயங்களில்., எல்லோரும் அதாவது எல்லா மதத்தைச் சேர்ந்தவர் களும் செல்லலாம் என்பதாகச் சட்டம் செய்ய வேண்டும்.
இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்களால் கொண்டு வரப்போகும் மசோதாவில் இந்துக் களாக இருக்கும் எல்லா வகுப்பினரும் மட்டும் தான் இந்து மத ஆலயங்களுக்குள் செல்ல உரிமை இருக்க வேண்டும் என்று கோருவ தாகத் தெரிகிறது. ஆகையினால் இதை நாம் மேலே கூறியவாறு திருத்தி அமைக்க முயல வேண்டுகிறோம். இவ்வாறு செய்வது எவ் வகையிலும் குற்றமாகாது. இன்று முஸ்லீம் களுடைய மசூதிகளில் முலீம்கள் அல்லாத வர்களும் சென்று தொழுவதற்கு உரிமையுண்டு. முஸ்லீம்கள் அந்நிய மதத்தி னரைத் தங்கள் மசூதிக்குள் வரக் கூடாது என்று தடுப்பதாகத் தெரியவில்லை. அது போலவே கிறிஸ்துவர்களுடைய கோயில்களிலும் யாரும் சென்று வணங்கலாம். அங்கு நடக்கும் ஜபத்தில் கலந்து கொள்ளலாம். கிறிஸ்தவர்களும் அந்நிய மதத் தினர் தங்கள் கோயில்களுக்குள் வரக்கூடாது என்று தடை செய்வதில்லை. இது போலவே புத்தர் கோயில்களிலும், எந்த மதத்தினர்களும் தாராள மாகச் செல்லலாம் இம்மாதிரியே இந்து மதக் கோயில்களுக்குள்ளும் எல்லா மதத்தினரும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் செல்லுவதற்கு உரிமையளிப்பதால் என்ன முழுகிப் போய் விடும்? என்று கேட்கிறோம். இவ்வாறு செய்வ தனால் பல மதத்தினர்க் குள்ளும் சமத்துவம் உண்டாவதற்கும் வழி யாகும். ஆகையால், இம்முறையில் மசோ தாவைத் திருத்தியமைத்து நிறைவேற்றச் சென் னைச் சட்டசபை தைரிய மாக முன்வருமா? என்று தான் நாம் கேட்கிறோம்.
சென்னைச் சட்டசபையில் இத்தகைய மசோதா சட்டமாக நிறைவேறுமானால், இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கும். சென்னைச் சட்டசபைக்கும், இப்பொழுது சென்னைச் சட்டசபையிலிருக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும், அய்க்கிய தேசியக் கட்சிக்கும் என்றென்றும் அழியாத புகழும் உண்டு இதற்கு மாறாக இம்மசோதாவைக் கொலை செய்து விடுவார்களாயின் இக்கொலைக்குக் காரணமாக இருந்த கட்சியினர்களுக்கும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் என் றென்றும் அழியாத வசையே உண்டாகும் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில் நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம் தோழர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமாகும். எல்லோரும் கோயில்களில் சென்று வணங்கவேண்டும், அங்கு தெய்வமிருக்கிறது, அல் லது கடவுளிருக் கிறது என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிர வேசத்தை ஆதரிக்க வில்லை. கோயில் களும் தேசத்தின் பொதுச்சொத்து என்ற முறை யில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவை களுக்குள் நுழையக் கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண் டும் என்னும் எண்ணத் துடனேயே நாம் கோயில் பிரவே சத்தை முழுமனதுடன் ஆதரிக் கின் றோம். இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சி யையும் வரவேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.  (முற்றும்)
- விடுதலை நாளேடு,2  26.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக