வியாழன், 31 ஜனவரி, 2019

வடக்கே பெரியாரின் புரட்சிப் பெண்!

முகத்தை மூட மறுத்த மணமகளின் உறுதியாலும், மணமகன் குடும்பத்தாரின் பழைமைவாத பிடிவாதத்தாலும் திருமணம் நின்று போனது.

மத்தியப்பிரதேசமாநிலத் தில் மத்திய அரசுப் பணியி லுள்ளவர் வர்ஷா சோனவா. இவருக்கும்கட்டடப்பொறி யாளராகியவல்லப் பஞ்சோலி என்பவருக்கும்ரட்லம்பகுதி யில் திருமணம்  நடத்த திட்ட மிடப்பட்டு, இருசாராரின் குடும் பத்தினரும் திரண்டிருந்தார்கள்.

முகத்தை மூடுகின்ற பல்லா எனும் சேலையை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளார் மணமகள். அதனால் மணமகன் வீட்டார் பெரும் பிரச்சினையை எழுப் பினார்கள். மணமகள் குடும் பத்தினரிடம் கடும் வாக்கு வாதத்தில் மணமகன் வீட்டார் ஈடுபட்டனர். அதனையடுத்து, இருகுடும்பத்தினரிடையே மோதல் சூழல் ஏற்பட்டது.

இப்பிரச்சினையில், மண மகள் குடும்பத்தார்மீது மண மகன்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினரின் சமரச முயற்சியும் தோல்வி அடைந்தது. இரண்டு குடும் பத்தாருக்குமிடையே மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகன் வீட்டார் மணமகளுக்கு விதித்த ஆடைக் கட்டுப்பாட்டினை மணமகள் விரும்பவில்லை. பழைமையான வழக்கம் என்கிற பெயரில் மணமகள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்கிற மடமையை மணமகள் கடுமையாக எதிர்த்தார். திரு மணமே நின்றாலும் தன்னு டைய உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்தார். பலே! பலே!!

மணமகன் குடும்பத்தாரின் பழைமைவாதத்தால் திருமணம் நின்று போனது.

ஆம், தந்தை பெரியார் வடமாநிலங்களிலும் வேர்ப் பிடித்து விட்டார் - பெரி யாரின் புரட்சிப் புயல் வீசத் தொடங்கிவிட்டது என்பதற் கான எடுத்துக்காட்டு இது.

வயது அடைந்த ஆண் - பெண் இருவர் இணைவது இயல்பானது. மனிதர்களிடத்தில் மட்டுமல்ல, மற்ற உயிர் களிடத்திலும் இயற்கை உணர்வு இது. இதில் மூன்றாவது மனிதனுக்கு வேலை இல்லை என்பார் தந்தை பெரியார்.

இது நியாயம் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும், ஊறித் திளைத் துப்போன ஊத்தைப் புத்திக்கு இதெல்லாம் ஒவ்வாமையாகத் தான் தோன்றும்.

வருணக் கலப்பை எதிர்க் கும் சனாதனவாதியான காந்தி யார் மகனுக்கும், ராஜாஜி மக ளுக்கும் கல்யாணம் நடந்த போது வாலைச் சுருட்டிக் கொண் டதே - வைதீகமும், சனாதனமும்!

பெரியவர்கள் செய்தால் பெருமாள்' செய்த மாதிரி என்று வைதீகர்கள் விழிப்பாக''த்தான் சொல்லி வைத்துள்ளார்கள் போலும்!

- மயிலாடன்

-  விடுதலை நாளேடு, 29.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக