திங்கள், 8 ஜூலை, 2019

கோவில் நுழைவு உண்மை நிலை என்ன?

*கோவில் நுழைவு: மதுரை வைத்தியநாதய்யர்தான் முன்னோடியா?...................*

உண்மை நிலை என்ன?*

1921 ஆம் ஆண்டிலேயே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆலய நுழைவை நடத்திக் காட்டியது சுயமரி யாதை இயக்கம் - இதைப்பற்றி எல்லாம் ஊடகங்கள் வெளிப்படுத்துவது இல் லையே ஏன்?

1939 சூலை 8 அன்று வைத்திய நாத அய்யர், அமைச்சர் டி.எஸ்.எஸ். ராஜன் வருவதாகச் சொல்லி, குருக்களை இரவு இருக்கச் சொல்லியிருந்தார்.

இரவு 8.45 மணிக்கு 5 ஆதிதிராவிடர்களையும், ஒரு நாடாரையும் வைத்தியநாத அய்யர் அழைத்துச் சென்றார். *(ஆதாரம் : "தமிழ் நாட்டில் காந்தி' பக். 624).*

அதற்குப் பிறகு வெளியில் வந்து "அரிசன ஆலயப் பிரவேசம்' நடந்து விட்டதாக அறிவித்தார். இதை அறிந்த பட்டர்கள், கோயிலைப் பூட்டி விட்டுச் சென்றனர். அங்கு அறங்காவலராக இருந்த ஆர்.எஸ். நாயுடு, நீதிக் கட்சிக் காரர்.

எனவே, அவர் மறுநாள் பூட்டை உடைத்து கோயிலைத் திறந்து விட்டார். "இரவு 8.45 மணிக்கு மந்திரி வருகிறார் என்று சொல்லி கோயில் பட்டரை ஏமாற்றி கூட்டிக் கொண்டு, கோயிலுக்குள் நுழைந்த வைத்தியநாதய்யரிடம் பட்டர் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு தீபா ராதனை காண்பித்து விபூதி கொடுத்தார். அதன் பின்னரே அவருடன் வந்தவர்கள் - அய்ந்து பஞ்சமரும் ஒரு நாடாரும் எனத் தெரிந்தது என வர்ணாசிரம சங்கம் சார்பில் துண்டறிக்கை விநியோ கிக்கப் பட்டது'' *("விடுதலை' - 13.7.1939).*

கோயில் நுழைவை பகிரங்கமாக நடத்தும் நோக்கமும் துணிவுமின்றி, இரவு 8 மணிக்கு மேல் கோயில் நுழைவு நாடகமாடியதற்குக் காரணம் என்ன என்பதை பெரியார் விளக்குகிறார் : "தேர்தல் வந்தது, கதவும் திறந்தது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதிற்கொண்டே வைத்தியநாதய்யர் நாடகமாடினார். இது, ராஜாஜியின் சூழ்ச்சி. இதனால் ஆதிதிராவிடர்களுக்கு நிரந்தரப் பயன் எதுவும் இல்லை. செய்கிற சட்டத்தை ஒழுங்காகவும் நன்றாகவும் செய்ய வேண்டும் என பெரியார் வேண்டுகோள் விடுத்தார்'' *("விடுதலை', 12.7.1939).*

1921லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பார்ப்பனரல்லாதாரை அழைத்து கொண்டு ஜே.என் இராமநாதன், டி.வி. சுப்ரமணியம், ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன் றனர். பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள்மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

1929ஆம் ஆண்டிலேயே ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தவரால் ஆலய நுழைவு செய்யப்பட்டது. சுயமரியாதை இயக்கத் தோழர்கள் ஈசுவரன், கருப்பன், பசுபதி ஆகியோர்மீது இபிகோ 295,299, 109 பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப் பட்டதுண்டே!

திருச்சி தாயுமானவர் மலைக்கு ஜே.என். இராமநாதன் தாழ்த்தப்பட்டவர் களை அழைத்துக் கொண்டு நுழைந்த போது ரவுடிகளால் தாக்கப்பட்டு மலை யில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ் பதிவு செய்திருக்கிறது. திரு வண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ். கண்ணப்பரை கோவிலுக்குள் ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது.

1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவி லில் 1000-க்கும் மேற்பட்ட பார்ப்பனரல் லாதாருடன் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர் களால் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்மைகளை ªல்லாம் இனி மேலாவது ஊடகங்கள் வெளியிடுமா? 1922ஆம் ஆண்டில் திருப் பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆலய நுழைவுக்கு வைத்தியநாதய்யர் எதிர்ப்புத் தெரிவித்தார் மதுரை வைத்திய நாதய்யர் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

- *கருஞ்சட்டை*
-  விடுதலை நாளேடு, 8.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக