வியாழன், 12 டிசம்பர், 2019

இசை, ஆடற்கலைகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை- 34

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி இசை ஆராய்ச்சியாளர் ப.தண்டபாணி அவர்கள் உரை வருமாறு.

10.12.2019 அன்றைய தொடர்ச்சி...

இது குறித்து மேனாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் மிகவும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்:

“There seems to have been no doubt that this name Vina or this word was applied to the arched harp represented on the bas-reliefs, contemporary with the texts that used the word... This arch harp disappears from the instrumental stock of India towards, the 8th century”.(9)

எனவே, ஆரியர் வீணை என்றழைத்தது தமிழரின் யாழையே என்பது தெளிவாகின்றது. இதே கருத்தி னைப் பெரும்புலவர் க. வெள்ளைவாரணர் தாம் எழுதி யுள்ள தேவாரத்திற் பயின்ற பண்களும் இசைக் கருவி களும் என்னும் நூலில் வலியுறுத்திச் செங்கோட்டி யாழினை அடியொற்றி அமைத்தது வீணை என்னும் இசைக் கருவியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.(10)

பெரும்பான்மையாய்ப் பழக்கத்திலுள்ள நால்வகை யாழ்களுள் கடைசியாகக் கூறப்பட்டதும், மிகச் சிறியதும், ஏழு நரம்புகளையுடையதுமான செங்கோட்டி யாழொன்றே முதற் சங்க காலந் தொடங்கி இன்று வரை வாழையடி வாழையாய் நம் தமிழகத்தில் நிலை பெற்றிருக்கின்றது. இச் செங்கோட்டி யாழையே தற் காலம் நாம் வீணையென வடமொழிப் பெயரால் வழங் குகிறோம் என யாழின் சிறப்பு என்னும் கட்டுரையில் (11) டாக்டர் வரகுணபாண்டியன் குறிப்பிட்டுள்ளதும் இவண் ஒப்பு நோக்கத்தக்கதாம்.

இனி, இன்று கருநாடகச் சங்கீதம் என்றழைக்கப்படும் இசை முறையில் முறைப்படி எழுதப்பட்ட அடிப்படை நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் சாரங்கதேவரால் எழு தப்பட்ட சங்கீத ரத்னாகரம் என்னும் நூல்தான் என்பது யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும் உண்மையாகும். அவர் தக்கணத்தில் தவ்லதாபாத்து என்னும் ஊரில் வாழ்ந்தவர். அவர் தமிழ்நாட்டில் சுற்றித் தேவாரப் பண் கள் முதலியவற்றின் இசை முறையைக் கேட்டறிந்து அன்று தென்னிந்தியாவில் பரவியிருந்த தமிழிசை இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அந்த நூலை எழுதினார் என்பதற்கான ஆதாரமும் அந்த நூலிலேயே உள்ளது. ஏனெனில், அவர் தம் நூலில் தமிழ்ப் பண்களைப்பற்றியெல்லாம் எடுத்துக் கூறியுள்ளார். எனவேதான், தமிழில் திருஞான சம்பந் தருடைய பாடல்களுக்கு இசைக்கப்பட்டிருந்த 19 தமிழ்ப் பண்களுக்கும் சாரங்கதேவரின் 19 மேள கர்த் தாக்களுக்கும் ஏதோ இயைபு இருந்ததென்று நினைக்க இடமுண்டு. அப் பண்களே அம் மேளகர்த்தாக்களின் அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று தமிழிசையும் கர்னாடக சங்கீதமும் என்னும் கட்டுரையில்(12) இசைத் தமிழ்ச் செல்வர் தி. இலக்கு மணப்பிள்ளை கூறுகின்றார். ஆகையால், தென்னிந்தியாவில் அக்காலத்தில் வழக்கி லிருந்த தமிழ்ப் பண்களைத்தாம் ஆரியர் மேளகர்த்தாக் களாக்கி உள்ளனர்.

பண், பண்ணியல் திறம், திறம், திறத்திறம் முதலிய தமிழ்ப் பெயர்களைத்தாம் சம்பூர்ணம், ஷாடவம், அவ் டவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயர்களாக்கினர். சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் கூறுவதிலிருந்து இது நமக்குத் தெரியவருகிறது. அதுபோலத்தான் ஆளத்தியையும் ஆலாபனையாக்கி விட்டனர்.

இது சம்பந்தமாக டி.கே. சிதம்பரநாத முதலியார் செய்துள்ள ஆராய்ச்சியும் நமக்கு வெளிச்சத்தைத் தருகிறது. ஓதுவார் தனித் தமிழ்ப் பண்களை இயைத்துத் தேவாரம் முதலிய தோத்திரப் பாட்டுகளைப் பாடுவோர், நட்டுவர் நட்டுவாங்கமும் சங்கீதமும் கோயிற் பணி யிலும் மற்ற நடைமுறைகளிலும் தொழிலாக எடுத்துக் கொண்டவர். மேளக்காரரும் அப்படியே. வடமொழி யில் இயற்றப்பட்டிருக்கும் சைவாகமங்களைச் சரிவரப் பொருள் கூறிக் கோயிற் காரியங்களை நடத்துவதற்கு வடமொழி பயின்ற தீட்சிதர்களே (இவர்களும் தமிழ்ப் பிராமணரே யாவர்) ஏற்பட்டனர். இத்தீட்சிதர்களில் சங்கீத ஞானமுடைய சிலர் மேளக்காரரின் சங்கீதம், நட்டுவர் முகாந்திரம் சங்கீதம் கற்றும் கர்னாடக சங்கீத சாத்திரத்தை எழுதப் புகுந்தனர். அப்போது தனித் தமிழ்ப் பண்களுக்கு வட இந்திய இராகங்களோடு அவை பொருந்துமாறு வடமொழிப் பெயர்களைக் கொடுத்தார்கள். தமிழ்ப் பண்கள், கர்நாடக ராகங்கள் இவை தம்மிலுள்ள மிகுந்த ஒற்றுமைப் பாட்டுக்குக் காரணமும் இதுவே என்று உய்ந்துணர்ந்து கொள்ள லாம்(13) வேங்கடமகி என்பவர் தாம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் அவற்றையெல்லாம் வரிசைப்படுத்திச் சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலை எழுதினார். அதில் வரும் 72 மேளகர்த்தாக்களுக்கும் இராகமாலிகை பாடிய மகா வைத்தியநாதய்யரும் தமிழைத் தாய்மொழி யாகக் கொண்டிருந்தும் வடமொழியில்தான் அந்த இராகமாலிகைக்குப் பாட்டு இயற்றினார்.

பண்டைக்காலத்தில் கைகளினால் கொட்டினால் அது பாணி எனப்பட்டது. கால்களினால் தட்டினால் அது தாளம் எனப்பட்டது. முற்காலத்தில் குழல், யாழ்க் கருவிகளை இசைத்தவர்கள் முதலில் இயற்கையாகப் பாதங்களினால் தட்டினர். எனவே, பாதத்தின் ஒலி என்ற பொருளில் தாள் + அம் = தாளம் எனத் தமிழர் பெயர் வைத்தனர். ஆரியர் அதையும் வடமொழிச் சொல்லாகத் திரிக்க முயன்றுள்ளனர்.(14)

பதப்படுவது பதம் என்றும் அத்தகைய பாட்டுகளை நாட்டியக் கலையுடன் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்றும் டி.கே. சிதம்பரநாத முதலியார் கூறுகிறார். ஆனால், அந்தப் பதத்தையும் ஆரியச் சொல்லாகக் காட்ட  முற்பட்டுவிட்டனர்.

ஆரியரின் புரட்டுகளைக் குறித்து ஆபிரகாம் பண்டிதர் பின்வருமாறு   கூறுகின்றார்.

பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடி வந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையி லுதித்த இராகங்களும் பாடப்பட்டும் வேறு பெயர் களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற் களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வரு கின்றன (15)

தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக் கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும் புராணங்களும் கட்டுக் கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள்.... அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்ட பின் சமற்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்கத் தலைப் பட்டன. இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியமில்லை. இயல், இசை நாடக மென்னும் முத்தமிழிலுள்ள இசைத் தமிழாகிய சங்கீ தத்தைத் தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்களென்பது பற்றியும், வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டினின்றே இசைத் தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டுமென்பதுபற்றியும் இங்கு எழுத நேரிட்டது.(16)

ஆபிரகாம் பண்டிதரின் நூலுக்குப் பாயிரம் எழுதிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்துச் சிவசண் முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளும் கூறு கிறார்:

பண்டைத் தமிழர்களிடமிருந்துதான் இசையின் நுணுக்கங்களும் பாகுபாடுகளும் தோன்றி வளர்ந்து ஆரியர் கைப்படலாயின என்பது யான் நெடுநாட்க ளுக்கு முன்னரே ஆராய்ந்து கண்டமுடிவு. பல சிறந்த மேற்கோள்களோடும் அறிவு நுணுக்கத்தோடும் இந் நூலுள் விளக்கப்படுதல் கண்டு இந்நூலாசிரியரின் ஆராய்ச்சித் திறத்திற்கு மிக மகிழ்ந்தேன்.(17)

சிலப்பதிகாரத்தில் பொழுதுபோக்குக்காக அல்லி யம் முதல் கொடுகொட்டி ஈறாக 11 வகையான ஆடல் கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒன்பது வகைச் சுவைகள் கூறப்பட்டுள்ளன. இருபத்து நான்கு வகையான அவிநயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பஞ்ச மரபு நூலில் அவிநய மரபு பகுதியில் 33 ஒற்றைக் கை முத்திரைகளும் 15 இரட்டைக் கை முத்திரைகளும் தரப்பட்டுள்ளன. அவ்வாறெல்லாம் சிலப்பதிகாரம், பஞ்சமரபு முதலிய நூல்களில் விவரிக்கப்படும் தமிழரின் ஆடலையும் அவிநயத்தையும்தாம் நாட்டிய சாத்திரம், அபிநயதர்ப் பணம் முதலான வடமொழி நூல்கள் கையாண்டுள்ளன. அவிநயம் என்னும் தமிழ்ச் சொல்லையே அபிநயம் என வடமொழியில் மாற்றிவிட்டனர். தமிழரின் ஆடற் கலையை இசை வேளாள மரபினர் தொடர்ந்து பயின்று வந்தனர். அதைத் தாசியாட்டம் என்று நாடு இழிவு படுத்தி வந்தது. ஆனால், இந்த நூற்றாண்டில் 1930ஆம் ஆண்டு வாக்கில்தான் அதற்குப் பரத நாட்டியம் என்று புதுப்பெயர் சூட்டிச் சமற்கிருதமயமாக்கி அதையும் ஆரியம் அபகரித்துக் கொண்டது. அது காசுமீரத்திலி ருந்து வந்த கலை என்று கூடக் கூறத்துணிந்தது.

எனினும், நாட்டியத்தைப்பற்றி நூலொன்று எழுதிய சி.ஆர். சீனுவாச அய்யங்கார் கூறுகிறார்:

இசை, நாட்டியம் முதலிய கலைகளெல்லாம் தமிழ் நூல்களிலிருந்துதான் வடமொழிக்குக் களவாடப் பட்டன என்று மறைந்த என் நண்பர் ஆபிரகாம் பண்டிதர் கூறுவதுண்டு. அது உண்மைதானோ என இன்று யானே கருதவேண்டியுள்ளது. ஏனெனில், இப் பொழுது நாட்டியத்தில் கையாளப்படும் பல சொற்கள் ஆரியச் சொற்கள் அல்ல. அவற்றின்மூலம் சந்தேகத்துக் கிடமின்றித் திராவிடமே(18)

பண்டைத் திராவிடரின் இசைக் கலையும் ஆடற் கலையும்தான் பின்னாள் ஆரியரால் சமற்கிருத மய மாக்கப்பட்டன என்பதற்கு இனியும் ஆதாரம் வேண் டுமோ?

- ப. தண்டபாணி,B.E., M.Sc., (Engg.)

இசை ஆராய்ச்சியாளர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி

- விடுதலை நாளேடு 12 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக