சனி, 21 டிசம்பர், 2019

இசையுலகில் வடமொழி ஆதிக்கம் -35

டாக்டர் சேலம் எஸ். ஜெயலட்சுமி

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9.3.1985,  10.3.1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், டாக்டர் சேலம் எஸ்.ஜெயலட்சுமி  அவர்கள் உரை வருமாறு.

பொதுவாக உலகெங்கும் வடமொழியே இந்தியக் கலை கலாசாரங்கள் சமயம் முதலியவற்றிற்கு அடிப் படை என்ற கருத்துப் பரவியுள்ளது. இது எப்படி ஏற்பட்டது என்றால் சென்ற இரு நூற்றாண்டுகளாக பல அய்ரோப்பிய அறிஞர்கள் மாக்ஸ்முல்லர் உட்பட சமற்கிருத மொழியில் உள்ள அத்துணை நூல்களையும் ஆங்கிலத்திலும் ஜெர்மன் முதலிய அய்ரோப்பிய மொழிகளிலும் பெருவாரியாக மொழிபெயர்த்துள்ளார் கள். இதன் காரணமாக சமற்கிருத மொழியும் வேத நெறியும் ஆரியர் நாகரிகமுமே இந்தியாவின் சிறப்பான கலாச்சாரங்களுக்குக் காரணமாக நின்றன என்ற கருத் தும் இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் பரவியது.

ஆயினும், சிந்துச் சமவெளி நாகரிகம் போன்ற உண் மைகள் வெளிவந்ததும் இந்தியாவில் ஆரியர் வரு கைக்கு முன்னரே ஒரு பெரும் கலாச்சாரமும் நாகரிக மும் வளர்ந்திருந்தமை உலக அறிஞர்களுக்குத் தெரிய வந்தது. வடமொழி நூல்களைப் பயிலும்போதும் அவை மூல நூல்கள் அல்ல, முழு நூல்களும் அல்ல என்ற அய்யப்பாடுகள் தோன்றுவதும் ஆராய்ச்சியா ளர்களுக்கு ஏற்படும் பொதுவான அனுபவம். வட மொழியில் காணப்படும் வேதங்கள் முதல் பிற துறை களில் காணப்படும் அனைத்து நூல்களிலும் அவை வேறு எதையோ தழுவி வந்துள்ளன. முழு உண்மை களையும் வெளிப்படுத்தவும் இயலாத நிலையில் உள்ளன என்ற நிலை நமக்குப் புரிகிறது. வேதங்களே நமக்கு ஆதாரமான மூல நூல்கள் என்னும் கருத்து நமது தமிழ் வழக்கிலும் காணப்படும் ஒன்று. வேதங் களில் அடங்காத பொருளே இல்லை என்பது நமது கோட்பாடு. ஆனால், வடமொழி வேதங்களில் காணப் படுவது ஒரு பண்பாடற்ற ஆரம்ப நிலையில் உள்ள சமூகத்தின் நிலைதான். வடமொழி வல்லுநர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட, வேதங்கள் மனித நாகரிகத்தின் ஆரம்ப நிலையையே (Primitive) காண்பிக்கின்றன என்று கூறுகிறார்கள். அவற்றின் செய்யுள்நடை(Poetic Form)  குறையுள்ளதாகவே காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்கள்.

தமிழில் பிற்காலத்தில் வேதங்களின் புதிய உருவாய் விளங்கும் (Reversion of Vedas) தேவாரத்திருமுறை, திவ்ய பிரபந்தங்களில் நான்மறைகளைப் பற்றிக் குறிப் பிடும்போது தமிழ் நான்மறை நான்மறை ஆறங்கம், தமிழ் ஞானசம்பந்தன் என்று அந்த ஆசிரியர்கள் குறிப்பிடுவது தமிழில் நான்மறைகள் இருந்தன என் பதை உணர்த்துகின்றது. சாமவேதம்தான் இசைக்குப் பிறப்பிடம் என்ற பொதுவான கருத்து அன்றும் இன்றும் என்றும் நிலவுகிறது. சாமவேதம் என்பது இப்போது ரிக்வேதத்தின் அடிகளையே மேலும் இழுத்தாற்போல் இசைப்பதேயாகும். வடமொழி சாமவேதத்தில் எவ்வித இசைக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியாவிற்கு ஆரியர்கள் முதன்முதலில் வந்த போது தங்களுடைய இசை மூலம் இந்நாட்டின் ஆதி குடிகளைத் தங்கள்பால் ஈர்க்க முயன்றபோது, தேசியம் என்று சொல்லப்பட்ட இந்நாட்டுப் பழங்குடியினரின் இசை ஆரியர்களின் இசையைக் காட்டிலும் மேம்பட்ட தாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.

வேத காலத்து இருடிகள் தங்கள் மந்திரங்களை இசை நயமில்லாமல் ஓதியது காதுக்கு நாராசமாகத் தவளை கத்துவதுபோல் இருந்தது என்று வேத ஆசிரி யர் ஒருவரே கூறுவதாக ரிக்வேதம் கூறுகிறது.

(ரிக்வேதம் VIII 10, 3, 5)

அதேபோன்று சாம வேத இசையும் அதன் இசையின்பம் இல்லாத தன்மைபற்றித் தாழ்வாக எண்ணப் பட்டது என்று மனு என்ற நீதி நூலாசிரியர் குறித்திருக் கின்றார்.

(மனு சம்ஹிதை, IV. 124)

வேதங்களைப்பற்றி தேவாரம் முதலிய தீஞ்சுவைத் தெய்வத் தமிழ்ப்பாக்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்போம்.

சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவார்

என்று ஞானசம்பந்தரும்,

எடுத்தனன் எழிற்கைலை யிலங்கையர் மன்னன் தன்னை

அடுத்தொரு விரலாலூன்ற அலறிப்போயவனும் வீழ்ந்து

விடுத்தனன் கைந ரம்பால் வேதகீதங்கள் பாடக்

கொடுத்தனர் கொற்றவாணாள் குறுக்கைவீரட் டனாரே

என்று நாவுக்கரசும் பாடினார்கள்.

ஆயிரம் நரம்பிற்றே ஆதியாழ் என்றபடி இராவ ணன் பேரியாழை இசைத்த வரலாறு இங்ஙனம் நமக்குக் கூறப்படுகிறது.

இந்திய இசையின் வரலாறு (The Story of  Indian Music)  என்ற நூலை எழுதியுள்ள கோசுவாமி என்ற வங்காள ஆசிரியர் கூறுவது:

இந்திய இசையின் வரலாறு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை இந்நாட்டின் ஆதிகுடிகளின் (Indigenous) கலைப்பண்பாட்டின் வளர்ச்சியும் கலைக் கருவூலங்களின் சிறப்புமேயாகும்

“The history of Indian Music frame the earliest times to our own days has been the history of the evolution of an indigenous musical tradition and musical lore” p. 69 Goswami. The Story of Indian Music, Asia Publishing House, 1957.

இந்தியப் பண்பாட்டின் பிற துறைகளைப்போல் இசைத்துறையிலும் ஆரியரல்லாதாரின் கலைச் செல் வங்கள் நெசவில் உள்ள பாவுபோலவும் ஆரியருடைய அறிவுத் திறமை ஊடு போலவும் கலந்துள்ளது. ஆரியர் கள் இவ்விதம் பல வடிவங்களில் பூர்வீகக் குடிகளின் கலைகளைத் தம் வசமாக்கிக் கொண்டனர். பெரும் பாலும் தங்களுடைய சொந்தப் பண்பாடாகக் காட்டும் நோக்குடன் ஆரியர்கள் இக்கலைகளை உருமாற்றி அமைத்தனர். இவை முற்றிலும் ஆரியருடையதே என்பதை நிலைநாட்டும் பொருட்டு இக்கடன் வாங்கும் கலையை முற்றிலும் திறமையாகச் செய்தனர்.

“As in the case of other branches of Indian Culture in Music too non-Aryan threads have been interwomen with the woof of Aryan genius. This assimilation and hermonisation have taken different shapes and forms. Often the elements borrowed have been re-shaped beyond recognition to fit into the Aryan culture-pattern to make the usurpation complete Aryan colour was given to them in such a manner as to seem original Aryan contribution”    “Krivantu Vishvam Aryam” (Ibidm p. 69)

மேலும் அவர் கூறுவது: இவ்வாறு ஒரு பகுதியி னரான பிராமணர் அவ்வப்போது பண்டைய பெயர் வழக்குகளை வடமொழிமயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டதால் பல வழக்குகள் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டன.

“During the puritan i.e. Brahmanical, revivals from time to time, the urge for the sanskritization of names become a passion with a section of the Hindus and in this process many indigenous traces were wiped out” - p. 78. The Story of Indian Music by Goswami.

ஆரியர்கள் வடமொழி தமிழைவிடச் சிறந்தது என்றும், தமிழின் பெருமையை அடியோடு அழித்து விட்டோம் என்றும் பல நூல்களில் பறைசாற்றுகிறார்கள். இந்தப் பெருமை அவர்கள் தமிழ்மொழியை நன்கு ஆழ்ந்து ஆராயாத வரைதான் கொள்ள முடியும் என்பதையும் தமிழையும் வடமொழியையும் ஒத்திட் டுப் பார்த்த அறிஞர்களுக்குத் தெரியும். தமிழை மட் டுமோ அல்லது வடமொழியை மட்டுமோ படித்து ஆராய்ந்தவர் களுக்கு இவ்வுண்மை தெரிய வழியில்லை. இரண்டு மொழியையும் தக்கவாறு ஆராய்ந்து பார்த்த பல துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் இவ்வுண் மையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சான்றாக மொழியியலில் (Linguistics)  ஒலியியல் (Phonemes) என்ற துறையில் பல மொழிகளை ஆராய்ந்த பெரிய வல்லுநர்கள் சில பொதுவான முடிவு களைக் கண்டறிகிறார்கள். அம்முடிவுகளை ஒத்திட்டுப் பார்க்கும்போது தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் அவர்களுடைய முடிவை ஒத்திருப்பதோடு மேலும் தெளிவான முறையில் ஒலியியலை விளக்குகின்றது. சி.ஆர். சங்கரன் என்ற பூனே ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த மொழி வல்லுநர், தொல்காப்பியரின் கொள்கை களைப் பார்க்கும்போது வடமொழி இலக்கண ஆசிரி யரான பாணினி மிகவும் பின்தங்கிவிடுகிறார் என்று கூறியிருக்கிறார்.

தமிழ்மொழி அன்றும் இன்றும் என்றும் இளமை குலையாமல் இறந்துபடாமல் இருப்பதற்கு அதன் அடிப்படையான மயங்கா மரபே காரணமாகும். வடமொழி இத்துணை ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னும் இன்று இறந்த மொழியாகவே காண்கிறது. செயற்கை ஒலிகளால் நிரப்பப்பட்டு மக்கள் இயல்பாகப் பேசுவ தற்கு ஒத்துவராததாகக் காண்கிறது. வடமொழி மற்ற இந்திய மொழிகளைத் தன் ஆதிக்கத்துள் கொண்டு வந்துவிட்டது. ஆனால், தமிழ் மொழியின் ஆணிவேர் திடமாக இருந்ததால் சொற்களை மட்டும் வடமொழி மயமாக்க முற்பட்டது. மேலும் பல பெயர்களை மாற்று ஒலியால் நாம் வடமொழி என்று கருதினாலும் உண்மை யில் அவை தமிழ்ச் சொற்களே என்பதை இப்போது சொற்பிறப்பியல் ஆய்வு மூலம் அறிஞர்கள் நிலை நாட்டி வருவது மகிழத்தக்க ஒன்று.

- தொடரும்

-  விடுதலை நாளேடு, 17.12.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக