திங்கள், 9 டிசம்பர், 2019

அய்யாவின் அடிச்சுவட்டில் கடந்துவந்த பாதை

அய்யாவின் பொய்யாத நம்பிக்கையாய் ஆரிய ஆதிக்கத்தை கலங்கவைக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வு புரட்சி மணம் வீசும் பொதுவாழ் வாகும். ஒரே இலட்சியம் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைவர் என்று 87 ஆண்டு வாழ்நாளில் 77 ஆண்டு பொதுவாழ்க்கை இவரது சிறப்பாகும். பவள விழா காணும் திராவிடர் கழகத்தில் பவளவிழா கண்ட தொண்டர் இவர்.

10 வயதில் மேடையேறி பேசிய கொள்கைகளை 86 வயதிலும் பட்டிதொட்டியெல்லாம், பாரெங்கும் பரப்பி வருகிறார். இவரது தன்வரலாறு (Auto Biography) தான் அய்யாவின் அடிச்சுவட்டில். இது தன் வரலாறானாலும் இயக்க வரலாறு, 75 ஆண்டுகால தமிழக அரசியல் சமூக வரலாற்றின் முக்கிய கூறுக ளைப் பதிவு செய்வதாகும்.

புதிய பார்வை ஏட்டில் அதன் ஆசிரியரான தோழர் முனைவர் மா.நடராசன் அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு 1995 செப்டம்பர் முதல் தொடராக வெளிவந்தது. அது தொகுக்கப்பட்டு முதல் பாகம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்பாகத்தில் ஆசிரி யர் அவர்களின் பிறப்பு, இளமைக்கால கல்வி, தந்தை பெரியாருடன் இணைந்து பயணித்த தொடக்க கால கொள்கை பயணம் அவரது திருமணம், வழக்குரைஞர் பணி ஆகியவையும் இயக்க வரலாற்றின் முக்கிய கூறு களான இயக்க மாநாடுகள், பெரியார் மணியம்மை திருமணம், ஜாதி ஒழிப்புப் போராட்டம், இந்திய யூனியன் பட எரிப்பு போன்ற இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன. அறிஞர் அண்ணா மீண்டும் பெரியாருடன் இணைந்து பங்கேற்ற நிகழ்வு களும் அண்ணா மறைவு வரையிலான திராவிடர் கழக முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.

பின்னர் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் உண்மை ஏட்டில் தோழர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் எழுதத் தொடங்கினார் தமிழர் தலை வர். இவை முழுமையாக தொகுக்கப்பட்டு இதுவரை 6 பாகங்கள் வெளிவந்துள்ளன.

இரண்டாம் பாகத்தில் அண்ணா மறைவிற்குப் பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராகவும், தி.மு.கழ கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். அவரது காலத்தின் முக்கிய நிகழ்வுகளில், பகுத்தறிவாளர் கழக தொடக்கம், 1971 சேலம் மாநாடு, பொதுத் தேர்தல் மற் றும் இயக்க முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்தது.

மூன்றாம் பாகத்தில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் சிலைத் திறப்புகள், தி.மு.க.விலிருந்து எம்.ஜி. ஆர். நீக்கம் போன்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளும் இயக்க மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் போன்றவையும் தந்தை பெரியார் மறைவு வரையிலான இயக்க முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.

நான்காம் பாகத்தில் தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்கு பின் இயக்கத்தின் தலைமைப் பொறுப் பேற்று வீறுநடைபோட்ட வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்களுடன் பயணித்த கொள்கை பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, இயக்கத்தில் துரோகம், அவற்றை முறி யடித்த அன்னையாரின் துணிவு, இந்தியாவே மிரண்ட இராவண லீலா இருண்ட கால ஹிட்லரின் நாஜி கொடு மைகளை நினைவூட்டும் அவசர நிலை பிரகடனம் (மிசா), அதன் கொடுமை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

அன்னையாரின் மறைவுடன் இப்பாகம் நிறை வடைந்தது.

பின்னர் அடுத்த அய்ந்தாம் பாகத்தில் அன்னை யாரின் மறைவுக்குப் பின் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடக்க கால நிகழ்வுகளுடன் தொடங்கியது.

இதில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாக்கள், மத்திய மாநில அரசுகள் பெரியார் நூற்றாண்டையொட்டி செய்த பணிகள், அன்னை நாகம்மையாரை வரம்புமீறி விமர்சித்த கண்ணதாசனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், எம்.ஜி.ஆர். அரசின் நுழைவு தேர்வு திணிப்பு, சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணை அதனை எதிர்த்த போராட்டங்கள் இறுதியாக ஈட்டிய வெற்றி போன்றவை இடம்பெற்றிருந்தன.

அந்த வரிசையில் வந்த ஆறாம் பாகம் 1984 வரையிலான சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அளவு 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டதன் வெற்றி விழாவு டன் தொடங்கியது. 1984ஆம் ஆண்டு வரையிலான கொள்கை பயணச் சுவடுகள் இடம் பெற்றன.

மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்தக்கோரும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடுகள், ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள், இந்து ராஷ்டிர எதிர்ப்பு மாநாடு என்று பல்வேறு மாநாடுகள் மற்றும் திராவிடர் கழக மாநாடுகள் பற்றிய செய்திகளும் உயிருக்கு குறிவைத்து மம்சாபுரத்தில் நடைபெற்ற கொலைவெறி தாக்குதலும் இடம்பெற்றன. தமிழர் தலைவர் ஆசிரியரின் அமெ ரிக்கா, இங்கிலாந்து பயணத்துடன் நிறைவடைந்தது.

அந்த வரிசையில் இது ஏழாம் பாகமாகும். தந்தை பெரியாருக்கு பின் சமூகநீதி கொள்கைகள் மண்ணிற் குள் சென்றுவிடும் என்று எண்ணி மனப்பால் குடித்த ஆரிய ஆதிக்க மனப்பான்மைக்கு சாவு மணியாக வந்த ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை சாசனமாம் மண்டல் அறிக்கை அமலான காலக் கட்டம் இது என் பது குறிப்பிடத்தக்கதாகும். மண்டல் குழு பரிந்துரைகள் சட்டமாக்கப்பட ஆசிரியர் மேற்கொண்ட வடநாட்டுப் பயணங்கள், பிரதமர் இந்திராகாந்தி வீட்டின் முன் மறியல் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் வடநாட்டு தலைவர்களை தொடர்ந்து சந்தித்தும். குடியரசுத் தலைவரிடம் விளக்கியும் செய்த அளப்பரிய பணிகளும், வி.பி.சிங் பிரதமரானவுடன் அவரைச் சந்தித்து விளக்கி மண்டல் அறிக்கை அமலான வரலாற்றைக் கூறுகிறது.

ஈழத்தமிழர் இன்னல் துடைத்திட மேற்கொண்ட போராட்டங்கள், நிதியுதவி கூட்டங்கள், விடுதலை புலிகளுக்கு செய்த உதவிகள், மேற்கொண்ட அயல் நாட்டு பயணங்கள் ஆகியவற்றை விளக்கும் பாகமாக இது அமைந்துள்ளது.

மேலும் இந்தி எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், நீதித்துறையில் சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக நடத்திய போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பார்ப்பனர்களின் கொலை மிரட்டல்கள், பார்ப்பன கைகூலி, ஆர்.எஸ்.எஸ்சின் கொலை வெறித்தாக்குதல் கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

வாசகர்களும், ஆய்வாளர்களும் இப்பாகத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளை ஊன்றிப்படித்து அன் றைய காலக்கட்ட அரசியல் சூழலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். எத்துணை மிரட்டல்கள், இடஒதுக் கீட்டை ஒழிக்க எவ்வளவு சூழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை கவனத்தில் கொண்டு ஆசிரியரின் எதிர் வினை இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும் என் பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தலைவரும் இயக்கமும் செய்த அளப்பரிய பணிகளை காலக் கட்டத்துடன் எண்ணிப்பார்க்க வேண்டும். ஈழத்திற்கும் திராவிடத்திற்கும் என்னத் தொடர்பு என்று கேட்பவர் களுக்கு பதில் சொல்கிறது இந்த ஏழாம்பாகம்.

- திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம்


- விடுதலை நாளேடு, 1 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக