வியாழன், 22 டிசம்பர், 2016

நீதிக் கட்சியின் 100 ஆண்டு நிறைவு நாள்’ சிறப்புக்கூட்டம்


நீதிக் கட்சியின் சாதனைகளைப் பாரீர்!
’பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை - 
100 ஆண்டு நிறைவு நாள்’ சிறப்புக்கூட்டம்

சென்னை, டிச.22 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் "பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை" - 100 ஆண்டு நிறைவு நாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏ.டி. பன்னீர்செல்வம் குறித்த நூல் வெளியிடப்பட்டது.-

பார்ப்பனர் அல்லாதாரின் நலனுக்காக பாடுபட்டுவந்த தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் சார்பில் சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் 20.12.1916 அன்று பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார் உள்ளிட்ட தலைவர்களால் ’பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை’ வெளியிடப்பட்டது. அதன் நூற்றாண்டு நிறை வையொட்டி, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில்  20.12.2016 அன்று மாலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நடத்திய ’பார்ப்பனர் அல்லதார் கொள்கை அறிக்கை நூற்றாண்டு நிறைவு நாள்’ சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.

நூல் வெளியீடு

சிறப்புக்கூட்டத்தில் ஏ.டி.பன்னீர்செல்வம் குறித்த நூல் வெளியிடப்பட்டது. பேராசிரியர் அ.இராமசாமி வெளியிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்துணைத் தலைவர் பேராசிரியர் ஜானகி பெற்றுக் கொண்டார்.

’பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை இன் றைக்கும் தேவைப்படுகிறது’ என்கிற தலைப்பில் நடை பெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொருளாளர் வீ.குமரேசன் அறிமுக உரையாற்றி னார். பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை இன் றைக்கும் பல மடங்கு தேவைப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டும் வண்ணம், தி இந்து ஆங்கில இதழில் வெளி யான கட்டுரையில் நீதிக்கட்சித் தலைவர் களை ஜாதி இந்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி யும், அதை மறுத்தும் விளக்கமாக அறிமுக உரையில் குறிப்பிட்டார்.

பேரா.அ.இராமசாமி

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரு மாகிய பேராசிரியர் அ.இராமசாமி தலைமை வகித்து அனுபவரீதியில் பல்வேறு தகவல்களை  எடுத்துரைத்தார்.

பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை டாக்டர் டி.எம்.நாயர், பிட்டி தியாகராயர் இணைந்து வெளியிட் டார்கள். பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று பத்திரிகை, கட்சி, கல்வி, வேலைவாய்ப்பு வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

பார்ப்பனர் அல்லாதார் பத்திரிகை ஆங்கிலம், தமிழ் தெலுங்கு மொழிகளில் தொடங்கப்பட்டன. பார்ப்பனர் அல்லாதார் கட்சியாக நீதிக்கட்சி உருவானது. மாநிலக் கல்லூரியில் அப்போது 80 விழுக்காடு பார்ப்பனர்களாக இருந்தார்கள். 50 விழுக்காடு பார்ப்பனர் அல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்தையும் செய்தது நீதிக்கட்சி அரசு. பார்ப்பன நாகம் படம் எடுத்துக்கொண்டு இருக்கும்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தபோது, ஆளுநர் பார்ப்பனர். அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  டாக்டர் பட்டம் அளிக்க முடிவு செய்தபோது, பார்ப்பனர்களின் எதிர்ப்பை சந்தித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதில்  உறுதியாக இருந்தேன். சிண்டிகேட் தீர்மானம் போட்டு ஷீலா நாயரிடம் கண்டிப்பாக டாக்டர் பட்டம் அளித்தே தீரு வோம் என்றேன். அதன்படியே அளித்தோம். எப் போதும் பார்ப்பனர்கள் எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். திமுக தேசியக்கட்சிகளுடன் கூட்டு சேரக் கூடாது என்பது என் கருத்து.

1967இல் பெரியார் திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். ராஜாஜியை வைத்துக்கொண்டு திமுகவால் என்ன செய்ய முடியும்? என்று பெரியார் எதிர்த்தார்.

அண்ணா வெற்றி பெற்றதும் பெரியாரை சந்தித்தார்.    சட்டமன்றத்தில் பெரியாருக்கு பென்சன் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, அண்ணா கூறும்போது, இந்த அரசே பெரியாருக்குக் காணிக்கை என்றார். அதன்பிறகு ராஜாஜி தேனிலவு முடிந்தது என்றார்.

அண்ணா வாழ்க்கை தொடர்கிறது என்றார். அண்ணாவுக்குப்பிறகு வந்த கலைஞர் கல்விக்கூடங்களில் கடவுள் வாழ்த்து இனி இல்லை என்றார். பெரியார் போராட்டம் அறிவித்த போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டுவந்தார்.

மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த பார்ப்பனர் கேதன் தேசாய் என்பவர் வீட்டில் தங்கம் மூட்டை மூட்டையாக எடுத்தார்கள். ஆ.ராசா வீட்டில் 10 காசாவது எடுத்தார்களா? பார்ப்பனர் என்றால் ஒரு நீதி, பார்ப்பனர் அல்லாதார் என்றால் வேறு நீதிதான். இன்றைக்கும் பார்ப்பனர் அல்லதார் கொள்கை அறிக்கை அதிகம் தேவைப்படுகிறது-. இவ்வாறு தலைமையுரையில் பேரா சிரியர் அ.இராமசாமி குறிப்பிட்டார்.

பேரா.அ.கருணானந்தன்

விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர் அ.கருணானந்தன் வரவேற்புரையில் பல் வேறு தகவல்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார். 1946ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்த விவேகானந்தா கல்லூரியில் சமூக நீதிக்கு எதிரான பார்ப்பனர்களின்  சூழ்ச்சிகள் குறித்து அனுபவ உரையாக எடுத்துக்காட்டிப் பேசினார்.

கல்லூரி தொடக்கத்தின்போது மதக்கருத்துகள் என்கிற பெயரால் ரிக் வேதம் குறிப்பிடும் ’புருஷசுத்தம்’ என்கிற பெயரில் வருணாசிரமத் திணிப்பு நடைபெற்றதை தடுத்து நிறுத் தியதையும் குறிப்பிட்டார். 3000 ஆண்டு கால பிரச்சினை பார்ப்பனர்களின் ஆதிக்கப்பிரச்சினை. பார்ப்பனர்களைக் கடுமையாக எதிர்த்த பவுத்தம் சுமார் 800 ஆண்டுகாலத்துக்கு பார்ப்பனியத்தை ஒதுக்கியது.

பார்ப்பனிய எதிர்ப்புகளைத் தாண்டி, அவ்வப்போது பார்ப்பனியம் தலை தூக்கி வருகிறது. வரலாறு இந்துத்துவா நோக்கில் திருத்தப்பட்டு எழுதப்படுவதை  தடுத்து நிறுத்தவேண்டும். முகலாயர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் ஆட்சியாளர்களுக்கு அடுத்த நிலையில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் பார்ப்பனர்கள்.

ஆரியர் இனம் என்பது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தாலும், இந்தியாவில் பார்ப்பனியமாக ஆதிக்க மனப்பான்மையுடன் இருந்து வருகிறது.

பார்ப்பனர்களை எதிர்த்த சித்தர்களின் பாடல்களை திரித்துள்ளார்கள். பார்ப்பனர்களை தோலுரித்த சித்தர் இலக்கியங்களை சோழ, பாண்டிய அரசர்கள் ஆதரிக்க வில்லை. பார்ப்பனர்களையே ஆதரித்து வந்தனர்.

1890ஆம் ஆண்டில் நிலமற்றவர்களுக்கு நிலம் பங் களிப்பு சட்டம் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை இருந்தபோது, பஞ்சமர்களுக்கு நிலம் வழங்கும் அச்சட்டத்தை  பார்ப் பனர்கள் நடைமுறைப்படுத்த மறுத்தார்கள். இந்தியா விலேயே  சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியால் மட்டும்தான் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

விவேகானந்தா கல்லூரியில் 40 ஆண்டுகளில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட முதல்வராக வர முடியாத நிலை யில் 1986ஆம் ஆண்டில்தான் வரமுடிந்தது. அதற்கும் பார்ப்பனர்கள் கடுமையாக முட்டுக்கட்டைகளைப் போட்டார்கள். கல்லூரி அலுவலகத்துக்குள் செருப்புடன் செல்ல முடியாத நிலை இருந்தது மாற்றப்பட்டது. விவேகானந்தா கல்லூரிக்கு இடம் கொடுத்தவர் ஒரு குயவர். கட்டடத்தை வழங்கியவர்கள் நகரத்தார். ஆனால், பார்ப்பனர்களின் கல்லூரிபோல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

1991இல்தான் மதவழிபாடு என்கிற பெய ரில் ரிக் வேதம் Ôபுருஷ சுத்தம்Õ என்பது நிறுத்தப்பட்டது. விவேகானந்தர் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள், விவே கானந்தா 60ஆம் ஆண்டு விழாவின்போது,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்   விவேகானந்தரின் பார்ப்பன எதிர்ப்பு குறித்த கட்டுரை விடுதலையில் வெளியிடப்பட்டது என்று பேராசிரியர் அ.கருணானந்தம் வரவேற்புரையில் பேசும்போது குறிப்பிட்டார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

நூறாண்டுகள் நிறைவை எட்டியுள்ள ’பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை’ இன்றைக்கும் தேவைப் படுகிறது என்பதை விளக்கி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றினார்.

அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

கேதன் தேசாய் என்கிற பார்ப்பனர் முறைகேடுகள் செய்தார் என்று டன் டன் ஆக தங்கம் எடுக்கப்பட்ட நிலையில், அகில இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தலைவராக இருந்த அவர் தற்போது உலக மெடிக்கல் கவுன்சில் தலைவராக ஆகிவிட்டார்.

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை அளித்தார். அவர் அளித்த பல்வேறு கோரிக்கைகளில் நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி யுள்ளார் என்பது விடுதலையில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. தமிழக முதல்வர் பிரதமரிடம்  முன்வைத்த கோரிக்கைகள் குறித்து தினமணியும் வெளியிட்டது. ஆனால், ’நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படவேண்டும்’ என்பதை விட்டுவிட்டு  நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கோரியுள்ளதாக போட்டுள்ளது.

19.12.1973 அன்று தந்தை பெரியார் கடைசியாகப் பேசினார். அன்று அவர் பேசிய பேச்சு மரண சாசனமாக ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பேச்சில் உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு சாகப்போகிறேனே என்று சொல்லிவிட்டு, பூணூல் போட்ட பார்ப்பான் எதிரே வந்தால், வாடா என் தேவடியாள் மகனே என்று நீ கூறு. அவன் கேட்பான் இப்படிப்பேசுகிறாயே என்று. நீதானடா பூணூல் போட்டு எங்களைச் சூத்திரன் என்று சொல்கிறாய் என்று பதில் சொல்’’ என்றார். இது மரண சாசனம்.

இன்றைக்கு எதில் பார்ப்பனர்கள் பார்ப்பனர்களாக இல்லை என்று சொல்லுங்கள்? இந்துக்களே ஒன்று சேர் என்று சொல்கிறான். சரி. நீயும்¢ இந்து, நானும் இந்து. நீ ஏன் கபாலீசுவரர் கோயிலில் அர்ச்சகன்? நான் ஏன் வெளியில் நிற்கவேண்டும்?

தந்தை பெரியார் கடைசியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கான போராட்டம்தான். கலைஞர் இரண்டு முறை சட்டம் கொண்டுவந்தார். எதிர்ப்பவர்கள் பார்ப் பனர்கள்தான். தீர்ப்பு எழுதியவர்கள் யார்?   அத்துணை பேரும் பார்ப்பனர்கள். அரசு வழக்கரைஞர் யார்? அவரும் பார்ப்பனர். இன்றைக்கும் சட்டப்படி, சாத்திரப் படி நாம் அனைவரும் சூத்திரர்கள்தான். பார்ப்பனர்களின் வைப்பாட்டிப் பிள்ளைகள்தான். இந்த நாளில் அது குறித்து நாம் சிந்திக்கவேண்டும்.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியனார். இரண்டு துணைத்தலைவர்களில் ஒருவர் ஏ.டி.பன்னீர் செல்வம். மற்றொருவர் தந்தை பெரியார். இன்றைக்கெல் லாம் பதவிக்காக எப்படி எல்லாம் இருக்கிறார்கள்? ஆனால்,  பெரியார் அப்படி இருக்கவில்லை.

திருவையாறில் சரபோஜி ராஜா கொண்டுவந்த கல்லூரி, சமஸ்கிருதக் கல்லூரி என்று பார்ப்பனர்கள் ஆக்கிக் கொண்டார்கள்.

சரபோஜி ராஜாவின் உயில் சமஸ்கிருதத்தில் இருந்தது. தந்தை பெரியார் தொடங்கிய போது குடிஅரசு ஏட்டை தொடங்கி வைத்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சாமிகள் சமஸ்கிருதம் அறிந்தவர். அவரிடம் உமாமகேஸ்வரன் உயிலைக் காண் பித்து விவரம் கேட்டபோது, சமஸ்கிருதத்துக்கு என்று குறிப்பிடப்படவில்லையே. கல்விக்கு என்றுதானே குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

அப்போது டிஸ்டிரிக்ட் போர்டு சேர்மேனாக பன்னீர்செல்வம் இருந்தார். பார்ப் பனர்கள் அதுகுறித்து கூறும்போது, கல்வி என்றாலே சமஸ்கிருதம்தானே என்றார்கள்.

நீதிக்கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் துணைவேந்தர் பேசியபோது 95 விழுக்காடு பார்ப்பனர் அல்லதாரே படிக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களை கொடுத்தார்.

தலைநகர் சென்னையில் உணவு விடுதிகளில் நாய்கள், குஷ்டரோகிகள், பறையர்களுக்கு அனுமதி இல்லை என்று அந்தக்காலத்தில் போர்டு போட்டிருந்தது. ரயில்வேயில் பார்ப்பனர்களுக்கு தனியே பிராமணர்கள் சாப்பிடுமிடம், பிராமணர் அல்லாதவர்கள் சாப்பிடுமிடம் என்று இருந்தது. இதையெல்லாம் மாற்றியது யார்? தந்தை பெரியார். நீதிக்கட்சித் தலைவர்கள்.

மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டுமானால் சமஸ்கிருதம் கட்டாயம் என்று இருந்தது. அதை மாற்றி யவர் பானகல் அரசர். கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கு அதற்கு முன்பு   முதல்வரே என்று இருந்த நிலையை மாற்றி, பார்ப்பனர் அல்லாதாரும் படிப்பதற்காக தனியே மாணவர் சேர்க்கைக்கு கமிட்டி போடப்பட்டது.

மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதம் பண்டிதர் ஊதியம் ரூ.300, தமிழ்த் துறை  தலைவருக்கு ஊதியம் ரூ.81 என்று இருந்தது. தந்தை பெரியாரால் அந்நிலை மாறியது.

இன்று ஆர்எஸ்எஸ் கூலிப்படைகள் யார்? பார்ப் பனர்களா? இல்லை. நம்முடைய ஆட்கள்தான். பார்ப் பனர்களின் பலமே நம்முடைய இனத்தவர்கள்தான்.

மருத்துவக் கல்லூரியில் திறந்த போட்டியில் 884 இடங்களில், பிற்படுத்தப்பட்டவர்கள் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 159, கலைஞர் ஆணையின்படி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட வகையில் முசுலீம்கள் 32, தாழ்த்தப்பட்டவர்கள் 23, பழங்குடியினத்தவர்கள்

1 மற்றவர்கள் பார்ப்பனர் மட்டுமல்லாமல் முன்னேறிய வகுப்பினர் 68. அந்த 68லும் அத்துணை பேரும் பார்ப் பனர்கள் அல்லர். 884 இடங்களில் பொதுப்போட்டி நிலை யில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சி வேறு எங்கு நடக்கிறது?

தகுதி, திறமைகுறித்து காமராசர் பேசியபோது, நான் ஒரு பறையனை படிக்கவைத்தேன் டாக்டர் ஆனான். ஊசி போட்டு யார் செத்துப்போனார்கள் சொல்லு? பறை யனை  படிக்கவைத்தேன் எஞ்சினியரானான். பாலம் கட்டினான். எந்த பாலம் இடிந்து விட்டது சொல்லு? உன் தகுதியும் தெரியும், திறமையும் தெரியும். என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தை கழற்றிவிடுவேன். பேசியவர் பெரியாரா? காமராசரா? என்று விடுதலையில் தலைப்பு செய்தியாக வந்தது.

234 சட்டமன்ற உறுப்பினர்களில் 2 பேர் மட்டுமே பார்ப்பனர்கள். அதில் ஒரு பெண் இறந்துவிட்டார். ஒருவர் மட்டுமே உள்ளார். அதிமுக அமைச்சரவை பார்ப்பனர் அல்லாத அமைச்சரவையாக உள்ளது.

1967இல் காங்கிரசு கட்சி தோல்வி அடைந்தபின்னர் தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சியின் தலைவர் பொறுப்புக்கு யாரைப்போடுவது என்று டில்லியில் இந்திரா காந்தி வீட்டில் கூடினார்கள். அப்போது வெங்கட்ராமனைப் போடலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டபோது, மெட்ராஸ் ஸ்டேட்டில் பார்ப்பனரா? என்று கேட்டு பார்ப்பனர் சென்னை ஸ்டேட்டில் தலைவராக முடியாது என்று என்று இந்திரா காந்தியே கூறிவிட்டார். இத் தகவலை பின்னாளில் மூப்பனார் தெரிவித்தார்.

எந்த காலத்திலாவது துக்ளக் பத்திரிகைக்கு ஒரு பார்ப்பனர் அல்லாதவர் ஆசிரியர் ஆக முடியுமா? ஒரு முறை கலைஞரை நோக்கி சட்டமன்றத்தில் இந்த ஆட்சி மூன்றந்தர அரசு என்று எச்.வி.ஹண்டே சொன்னபோது, கலைஞர் உடனே சொன்னார் இது மூன்றாந்தர அரசல்ல. தந்தைபெரியார் வழியில் சொல்கின்றேன் இது நாலாந்தர சூத்திர அரசு என்று கலைஞர் கூறினார்.

அண்ணா அரசுப் பொறுப்பேற்றதும் அரசே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்றார். இன்னொரு இடத்தில் கொள்கை அடிப்படையில் இது சூத்திர அரசு என்று வறினார். 1967 தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் நல்லுறவு இல்லாதநிலையில் பெரியார் சொன்னார், இனி வருங் காலத்தில் திமுக நடமாட வேண்டும் என்றால், பார்ப் பனர் எதிர்ப்பு என்ற கொள்கையை ஸ்தாபனத்தில் கைக் கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் என்னை அவர்கள் அணுகக்கூடும். நானும் உதவலாம் என்று கூறினார்.

1967முதல் திராவிட இயக்க ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி குறித்த பாடத்திட்டத்தில் வைக்கவில்லையே. சமூகநீதி சட்டவிரோதம் அல்ல. அரசமைப்புச்சட்டத்தில் உள்ளதுதானே. இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் சமூகநீதி, இடஒதுக்கீடு வரலாறுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். வௌ¢ளுடை வேந்தர், டி.எம்.நாயர், நடேசனார் உள் ளிட்ட நீதிக்கட்சித் தலைவர்கள் செய்த பணிகள் குறித்து பாடத்திட்டத்தில் வைக்கப்படவேண்டும்.

திருவாரூரில் நடைபெற்ற கழக மகளிர் மாநாட்டில் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் பெருந்திரளாக திரண்டிருந்தார்கள். திருச்சியில் புதிய கல்வித்திட்டத்துக்கு, நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு மாநாட்டில் ஏராளமான ஆசிரியர்கள் வந்திருந்தார்கள்.

ஆசிரியர்கள் அனைவரை யும் ஓரிடத்தில் ஒன்றுசேர்த்த பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான் உள்ளது. அவரால்தான் முடிகிறது என்றார்கள். நம்முடைய வரலாற்றினைத் தெரிந்து கொள்ளும் வகையில் இளைஞர்கள், மாணவர் களைத் தயார் செய்யவேண்டும். இல்லையென்றால், எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும்.

இவ்வாறு திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையில் குறிப்பிட்டார்.

கூட்ட முடிவில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய இணை செயலாளர் ஏ.தானப்பன் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய இணை செயலாளர் ப.இரா.அரங்கசாமி, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,  பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், பொருளாளர் கு.மனோகரன், புலவர் வெற்றியழகன், பேராசிரியர் திருக்குறள் க.பாசுகரன், திருக்குறள் இளங்கோவன், வடசென்னை  மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஆ.வெங்கடேசன்,  கு.சோமசுந்தரம், இராவணன், செஞ்சி ந.கதிரவன், பார்த்திபன், க.தமிழினியன், கும் மிடிப்பூண்டி செ.உதயக்குமார், பெரியார் மாணாக்கன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
-விடுதலை,22.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக