சனி, 31 டிசம்பர், 2016

நீதிக்கட்சியின் நூற்றாண்டுச் சிந்தனை ‘இந்தியன் எக்ஸ்பிரசில்’ சிறப்புக் கட்டுரை

"தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏட்டில்  22.11.2016 அன்று வழக்குரைஞரும், திமுகவின் செய்தித் தொடர்பாளரு மான மனுராஜ் சண்முகசுந்தரம் ‘சீர்திருத்தத்தின் நூற்றாண்டு’ என்று தலைப்பிட்டு "தமிழ்நாட்டின் முன் னேற்றங்களில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்" என்று கட்டுரை வடித் துள்ளார். அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாடு, தமிழ்நாட்டு அரசியல், தமிழ்நாட்டின் வரலாறு, தமிழ் நாட்டின் முன்னேற்றம், தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள், தமிழ்நாட்டில் பார்ப்பனியம், ஜாதியம், மெட்ராஸ் பிரசிடென்சி எனும் சென்னை மாகாணம், தமிழ்நாட்டின் ஜாதியம் உள்ளிட்ட இவைபோன்றவைகளில்  குறிப்பிடத்தக்க அளவில் திராவிடர் இயக்கம் பங்களிப்பை ஆற்றியுள்ளது.

முதல் கூட்டம்

20.11.1916 அன்று சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் சர் பிட்டி.தியாகராயர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாகாணத்திலிருந்து முன்னணியில் இருந்த பார்ப்பனர் அல்லாத வணிகர்கள், வழக்குரைஞர் கள், மருத்துவர்கள், நில உடை மையாளர்கள் மற்றும் அரசியல்வாதி கள் ஒன்றிணைந்து அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

அந்தக் கூட்டத்தின் மூலமாகவே திராவிடர் இயக்கம் பிறந்ததாக வரலாற்றாசிரியர்களில்  பெரும்பான் மையோர் குறிப்பிடுகின்றனர். தமிழ் நாட்டின் அரசியலில் நூறாண்டு களுக்கு உரிய செயல்திட்டத்தை அமைத்துக்கொடுத்த கூட்டமாக திகழ்ந்ததுடன், விளிம்புநிலையில் உள்ள மக்களை நாடுமுழுவதுமிருந்து ஒன்றிணையச் செய்தது.

பிரிட்டிஷார் ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்கள்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவர்களுக்கு உரிய விகிதாச்சாரத்தைவிட அதிக அளவில் இடம்பெற்றிருந்தார்கள். அதன்மூல மாக கீழ்ஜாதியினர் என்று ஒதுக்கும் முறைக்கு வழிவகுக்கப்பட்டது.

தென்னிந்திய நல உரிமைச்சங்கம்

பிற்படுத்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி 1916ஆம் ஆண்டில் அரசியல் அதி காரங்களைப் பெற வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதேநாளில், பின்னாளில் நீதிக்கட்சி என அறியப் பட்ட சவுத் இந்தியன் லிபரல் பெட ரேசன் (தென்னிந்திய நல உரிமை சங்கம்) தோற்றுவிக்கப்பட்டது.

1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் தேர்தலில் புதிய இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுததப்பட் டது. அப்போது நீதிக்கட்சி பெரும் பான்மை பெற்று வெற்றி பெற்றது.

நீதிக்கட்சி ஆட்சி  சாதனைகள்

நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, அரசு வேலைவாய்ப்புகளில் நாட்டி லேயே முதல்முறையாக  பல்வேறு வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு அளிக் கும் ஆணையாக  1921ஆம் ஆண்டில் வகுப்புரிமைக்கான அரசாணை எண் 613 நிறைவேற்றப்பட்டது.

அரசாணை நிறைவேற்றப்பட்ட தோடு, பெண்கள் சட்டமன்ற வேட் பாளராக நிற்கும் உரிமையை வலி யுறுத்தி, நீதிக்கட்சி அரசால் இந்திய அரசு சட்டம் 1919 இல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்ட மன்ற உறுப்பினராக டாக்டர் முத்து லட்சுமிரெட்டி தேர்ந்தெடுக்கப்பட் டார்.

மதத்தின் பெயரால் உள்ள ஜாதிய வேறுபாடுகளுக்கு முடிவு கட்டும் வகை யில், மற்றுமொரு சட்டம் இயற்றப் பட்டு இந்து கோயில்கள் அரசின் கட் டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

நீதிக்கட்சி அரசின் முதல் காலக் கட்டத்தில் இதுபோன்று தொலை நோக்குடன் முன்னேற்றங்கள்,  அடக் கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் பெறுவதற்கான வழிவகை காணப் பட்டது.

நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற நேரத்தில் அதே கருத்துகளுக்கு இணை யாக, ஆனால், தனியே பெரியார் ஈ.வெ.இராமசாமி அடக்குமுறைகளைக் கையாளும் சக்திகளுக்கு எதிராக போராடிவந்தார்.

பெரியாரின் வைக்கம் போராட்டம்
சுயமரியாதை இயக்கம் தோற்றம்

1925ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சிவன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தெருவில்  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்வதற்கு உரிமை கோரி போராட்டம் நடை பெற்றது. அப்போராட்டத்தை நடத்திய தந்தை பெரியார் வெற்றி பெற்றார். நாடுமுழுவதும் தந்தை பெரியாரின் வெற்றி குறித்து பேசப்பட்டது.

மேலோட்டமாக இல்லாமல் ஆணிவேரை நோக்குகின்ற சிந்தனை, செயலுடன் தந்தைபெரியார் தொடங் கிய சுயமரியாதை இயக்கம் நிறுவப் பெற்றது.

ஜாதிமறுப்பு (கலப்பு மணம்) மணத்தை பெரியார் "ஜாதியற்ற திருமணம்" என்று குறிப்பிட்டு அதற்காக பாடுபட்டார்.   பெண்கள் கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் விதவைத் திருமணம் ஆகிய வற்றுக்காக பாடுபட்டார். அவருடைய கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பும், தீவிர ஆதரவும் இரு வகைகளிலும் இருந்தன.

1937ஆம் ஆண்டில் இந்தியை சென்னை மாகாண அரசு திணித்தது. அப்போது நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்த்தன.

ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த பிரபலமான தலைவரான தந்தை பெரியார் 1938ஆம் ஆண்டு டிசம்பரில் நீதிக்கட்சியின் தலைவ ரானார்.

திராவிடர் கழகம் பெயர் மாற்றம் 

21.8.1944 அன்று நீதிக்கட்சியின் 16ஆவது மாநாடு சேலத்தில் நடை பெற்றது. அம்மாநாட்டில் நீதிக்கட் சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தென்னிந்திய மொழிகளைப் பேசக் கூடியவர்களை உள்ளடக்கி, இன அடையாளத்துடன் திராவிடர் கழகம் என்று அமைப்பின் பெயர் மாற்றப் பட்டது. மேலும், திராவிட நாடு பிரிவினைக்கான கோரிக்கையும் வலுப்பெற்றது.

சமூக மாற்றங்களுக்கான அளப்பரிய பணியை திராவிடர் கழகம் ஆற்றிவந்த நேரத்தில், திராவிடர் கழகத்திலிருந்து தனியே ஒரு குழு சி.என்.அண்ணா துரை தலைமையில் பிரிந்தது.

திமுக தோற்றம்

விடுதலை பெற்ற இந்திய நாட்டின் அரசியலில் நேரடியாக ஈடுபட்டது. அரசியலில் ஈடுபட்டு, ஆட்சி நிர் வாகத்தைக் கைப்பற்றி சமூக சீர்திருத் தங்களை செய்யும் வகையில்  1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

1967ஆம் ஆண்டில் திமுக அரசு அமைத்ததிலிருந்து இன்றுவரையிலும் தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்த திட்டங்கள் மாநில அரசின் நிர்வாகத் தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

திமுக அரசின் சாதனைகள்

1967ஆம் ஆண்டில் திமுக அரசால்  ஜாதி ஒழிப்பு மற்றும் மத சடங்கு களின்றி நடைபெற்றுவந்த சுயமரி யாதை திருமணங்களுக்கு சட்டப்படி யான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணம் என்பது "தமிழ்நாடு" என மாற்றம் பெற்றது.

1989ஆம் ஆண்டில் பெண்களுக்கு சம உரிமை  (சொத்துரிமை) வழங்க சட்டம் இயற்றப்பட்டது.

1998ஆம் ஆண்டில் பல்வேறு ஜாதி யினரையும் இணைத்த குடியிருப்பு களாக "சமத்துவபுரங்கள்" அமைக்கப் பட்டன.

2006ஆம் ஆண்டில் கோயில்களில் அர்ச்சகர்கள் ஆவதில் உள்ள ஜாதியத் தடைகளை அகற்றும் வண்ணம் சட்டம் இயற்றப்பட்டது.

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், மகப்பேறு உதவித்திட்டங்கள், பெண் கள் சுய உதவிக்குழுக்கள் என பல்வேறு திட்டங்கள் திராவிடர் இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுத்தப்பட்டன.

இன்று திராவிடர் இயக்கம் அதன் நூற்றாண்டில் உள்ளது. திராவிடர் இயக்கத்துக்கு அனைவரும் நன்றி செலுத்திட கடமைப்பட்டவர்கள் ஆவோம்.

நாட்டில் உள்ள பிற மாநிலங்க ளிடையே ஒப்பிடும்போது,  தமிழ்நாடு மனித வளர்ச்சிக்கான அடையாளத் துடன் திகழ்ந்து வருகிறது.

நூறாண்டு சாதனைகளின் சாட்சி

திராவிடர் இயக்க சாதனைகள் அடுத்த 100 ஆண்டுகளுக்கும் மாபெரும் மாற்றங்களுக்கான சாட்சியங்களாக இருக்கும்.

ஜாதி மற்றும் கவுரவம் என்கிற பெயரால் நடைபெறுகின்ற குற்றங்கள், மத வெறி மற்றும் சமூக வேற்றுமைகள் அண்மைக்காலமாக தலைதூக்கி வருகின்றன.

திராவிடர் இயக்கத்தின் எதிர்காலம் செழிப்பாக இருந்திட, இன்றைய  தலைவர்கள் சமுதாயத்தின் பொது நன்மை கருதி கொள்கைகளை முன்னிறுத்திட வேண்டும்.

இன்னமும் திராவிடர் இயக்கம் அதன் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு காரணம், நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினர் (பார்ப்பனர் அல்லாதார்)  ஒன்றி ணைந்து சமூக மாற்றங்கள் மற்றும் அரசியல் அதிகாரங்களுடன் வரலாறு படைத்துள்ளார்கள் என்பதுதான்.
-விடுதலை ஞா.ம.,26.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக