திங்கள், 9 ஜனவரி, 2017

சாவித்திரிபாய் புலே




இன்று சாவித்திரிபாய்புலே அவர்களின் 186 ஆம் ஆண்டு பிறந்த நாள் (1831). உண்மையில் ஆசிரியர் தினத்தை இன்றுதான் கொண்டாடவேண்டும்

அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு, தன்னுடைய கணவர் மகாத்மா புலே இறந்த பிறகு பார்ப்பனர்களை அழைக்காமல் அவரது உடலை எரியூட்டவேண்டும் என்ற சாவித் திரிபாய் புலேவின் உறுதியான நிலைப்பாட்டை அடுத்து அவரது உறவினர்கள் யாரும் மகாத்மா புலேவின் உடலுக்கு மரியாதை செய்ய வரவில்லை. இதனை அடுத்து சாவித்திரிபாய் புலே மற்றும் அவர் தத்தெடுத்த குழந்தை இருவரும் சேர்ந்து புலேவின் உடலுக்கு எரியூட்டினர்.

புலே, தான் உயிருடன் இருக்கும்போது தன்னுடைய மனைவிக்கு அடிக்கடி சொல் வது,‘‘மனிதன்பிறந்தால்இறப் பது உறுதி; நான் இறந்த பிறகு என்னுடைய உடலுக்கு மதச்சடங்குகள் செய்வதோ, எனது உடலைச்சுற்றி அழுது புரள்வதோ தேவையில்லை. என்னுடைய பணியை நான் இருக்கும் வரை என்னுடையமனசாட்சிப்படிசீரா கச் செய்தேன். எனக்குப் பிறகு நீங்கள் என்னுடைய பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள். அதை விட்டுவிட்டு பிணத்தின் முன்பு அழுவதோ, அதற்கு சடங்குகள் செய்வதோ, பார்ப்ப னரை அழைத்துக்கொண்டு வந்து பூஜைகள் செய்வதோ கூடாது’’ என்று உறுதியாக கூறினார்.

அவரது வார்த்தைப்படியே உடலை அமைதியாக எரியூட்டி னார் சாவித்திரிபாய் புலே. அடுத்த நாளே அவரது ஆசிரியர் பணியைத் துவங்கினார்.

ஆசிரியர் பணியில் அவர் இருந்தபோது அவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவர்மீது சாணி யையும், மலத்தையும் கரைத்து ஊற்றிய கெடுமைகள் எல்லாம் நடந்ததுண்டு.

என்னே ‘அர்த்தமுள்ள’ இந்து மதம்?

சாவித்திரிபாய்புலேஅவர் களின் மராட்டிய கவிதைத் தொகுப்பு மிகவும் பிரபலமா னது.ஆனால்,அதுமொழி பெயர்க்கப்படாமல், புதுப்பிக்கப் படாமல் இன்றளவும் பிரபலமா காமல் உள்ளது.

அவரது கவிதையில் சில வரிகள்

புறப்படு கல்வி கற்றுக்கொள்ள புறப்படு!

தன்னம்பிக்கையுள்ளவராய் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக இருங்கள்!

கல்வி கற்றுக்கொள்ளுங்கள் அதன் மூலம் வேலை தேடுங்கள், செல்வத்தை திரட்டுங்கள்!

கல்வி அறிவு சுயமரியாதை இல்லாதிருந்தால் அனைத்தையும் இழந்து நிற்போம்!

அறிவிழந்து போனால் நாம் விலங்குகளில் ஒன்றாகிவிடுவோம்!

இனியும் தயங்காதீர்கள் கல்வி யைக் கற்றுக்கொள்ளுங்கள்!

எப்பாடுபட்டாவது கல்வி கற்றுக்கொள்ளுங்கள்!

இனியேனும் கல்வியைப் பெறுங்கள், அபலைகள், ஒடுக்கப் பட்டோர், ஆதரவற்றோர் அனை வரின் துன்பத்தை நீக்க,  கல்வி பயிலுங்கள். அவர்களுக்கும் கல்வியைப் புகட்டுங்கள்!

எந்த நாளும் பொன்னான நாள் தான் எந்த நேரமும் சிறப்பான நேரம் தான் ,

உடனே கல்வி பயிலுங்கள், தயக்கத்தை உதறுங்கள், எதிர்ப் பிற்கு அஞ்சாதீர்கள்!

கல்வி கற்றுக்கொள்ள புறப் படுங்கள்!!

- மயிலாடன்
-விடுதலை,3.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக