வியாழன், 26 ஜனவரி, 2017

தமிழர் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது


(06.03.2012)
சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மய்யத்தின் ஆண்டு மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திராவிடர் இயக்கம் பற்றி சிறப்புரையாற்றினார்.
சமூகத் துறையில் பெரும் தொண் டாற்றியமைக்காக தமிழர் தலை வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டப்பட்டார்.
அண்ணா சாலையில் “டாம், டணீம்!”
சென்னை, அண்ணாசாலை யிலுள்ள எல்.அய்.சி. பேருந்து நிறுத்தத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பிள்ளையார் பால் குடிப்பதாகப் பரப்பப்படும் வதந்தியை எதிர்த்து தமுக்கடித்து பிரச்சாரம் செய்தார் (23.9.1995). அப்பொழுது அவர் உரையாற்றுகை யில், பிள்ளையார் சிலை பால் குடிப்பதை நிரூபித்தால், ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும். கொழுக் கட்டை சாப்பிட்டால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
-விடுதலை ஞா.ம.3.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக