1924 இல் சேரன்மாதேவி குருகுலம் நடக்கிறது. நம்மைப் போன்றவர்கள் பிறக்காத ஒரு காலகட்டத்தில்.
வ.வே.சு.அய்யர் அவர்கள் இங்கிலாந்திற்குச் சென் றெல்லாம் புரட்சி செய்துவிட்டு வந்தவர். அப்படிப்பட்ட புரட்சி வீரர், தேசிய குருகுலம் நடத்தினார். பார்ப்பன மாணவர்களுக்கு தனி சாப்பாடு; நம்முடைய மாணவர் களுக்கு திண்ணையில் பழைய சோறுதான்.
நயினா, நயினா எங்களையெல்லாம் கேவலப்படுத்துகிறார்கள்''
இதையெல்லாம் பார்த்துவிட்டு, ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியாருடைய அண்ணார் மகன், அழுதுகொண்டே வந்து, நயினா, நயினா எங்களையெல்லாம் கேவலப் படுத்துகிறார்கள்'' என்றார்.
இதைப்பற்றி யாரிடம் சொல்வது? பெரியாரிடம் சொல்லுங்கள் என்றார்.
இராஜகோபாலாச்சாரியாரிடம் சென்று, என்னங்க, நாமெல்லாம் தேசியம்பற்றி பேசுகிறோம்; நாம் பணம் கொடுக்கிறோம்; இதுபோன்று நடக்கிறதே?'' என்று சொல்ல,
உடனே இராஜாஜி, அப்படியெல்லாம் இருக்குமா? என்று தெரியவில்லை. அதுபற்றி விசாரிப்போம்'' என்றார்.
அந்தப் பிரச்சினையால் பார்ப்பனர் - பார்ப்பன ரல்லாதார் கோடு விழுந்துவிட்டது.
பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத பிரச்சினையை வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று
பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை, பெரியாரோ, திராவிடர் இயக்கமோ உண்டாக்கவில்லை. முழுக்க முழுக்க வருணாசிரம தர்மம்தான் உண்டாக்கிற்று. அதுதான் அந்தப் பேதத்தை உருவாக்கியது.
நாங்கள் ஒத்துப் போகவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் ஒத்துப் போவதில்லையே. படித்தவன், படிக்காதவன், லவுகீக பார்ப்பான், வைதீகப் பார்ப்பான் என்று வித்தியாசம் இருக்கும். அதிலேயும் இரண்டு தலைவர்களுக்கும் வேறு வேறு கருத்து. அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கடைசியாக சமரசம் செய்வதற்காக தேசப் பிதா காந்தியாரிடம் செல்கிறது.
பெரியாரைவிட மிகக் கடுமையாக இருந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் மென்மையானவர். காந்தியாரிடம் போய் சொன்னார்கள்,
காந்தி, வருணாசிரம தர்மத்தில் நம்பிக்கைக் கொண்டவர். எப்பொழுது அதை தவறு என்று நினைத் தார் என்றால், கடைசி காலத்தில்தான்.
அதனால்தான் பெரியார் சொன்னார், வாழ்ந்த காந்தி வேறு; சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி வேறு. இரண்டு காந்திகள். காரணம் பின்னாளில்தான் அவர் பார்ப்பனர்களைப்பற்றி உணர்ந்தார் என்று.
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் தகராறு ஏற்பட்டு, கடைசியாக காந்தியாரிடம் சென்றது.
இந்து' பத்திரிகையின் நூற்றாண்டு மலர்
இன்றைய இளைய தலைமுறையினரும், தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் - என்னுடைய கைகளில் இருக்கின்ற ஆதாரம், One hundred years of the Hindu இந்து' பத்திரி கையினுடைய நூற்றாண்டு மலர் இது. இப்பொழுது அதற்கு வயது 140. பெரியாருடைய வயதும், இந்து நாளித ழுனுடைய வயதும் ஒன்று.
40 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட புத்தகம் இது. இதை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பி நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அதில் உள்ள ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்கிறேன்.
A Social reform question which figured in the columns of The Hindu in April, 1925, was the controversy over the functioning of the Tamil Gurukula Vidyalaya at Shermadevi in Tinnevelly District conducted by V.V.S.Aiyer, onetime revolutionary and associate of Bharati. Dr.Varadarajulu Naidu and other non-Brahmin leaders had objected to non-Brahmin boys of the institution being asked to take their meals separately. The matter went to Gandhiji who advised interdining but employment of Brahmin cooks. Dr.Varadarajulu Naidu was not satisfied with this arrangement as he did not like the condition about employing Brahmin cooks. He asked for the return of money subscribed to the funds of the Gurukula.
In a letter published in The Hindu on April 15, V.V.S. Aiyer said, that except in the case of two Brahmin boys in the case of all other Brahmin and non-Brahmin students there was common dining, and the made it clear that no Brahmin taken into the Gurukula thereafter would be given any exemption from the general mess
இதன் தமிழாக்கம் வருமாறு:
சமூகப் புரட்சியின் ஒரு குரலாக ஏப்ரல் மாதம் 1925 இந்து ஆங்கில இதழில் வெளியான ஒரு செய்தி முக்கியமானதாகவும் விவாதப்பொருளாகவும் மாறியது, சேரன்மாதேவியில் உள்ள தமிழ் குருகுல வித்யாலயா என்ற பள்ளியில் ஒரு தீண்டாமை கொடுமை அரங்கேறியது தொடர்பான செய்தியாகும். அந்த பள்ளியை நடத்தியவர் வ.வே.சு அய்யர் இதன் புரவலராக சுப்பிரமணிய பாரதி, டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர் உள்ளனர். அந்தப் பள்ளியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வெளியில் உள்ள திண்ணையில் வைத்து அவர்கள் கொண்டுவந்த இலையிலேயே உணவு உண்ணவும், அவர்களுக்கு பார்ப்பனர்கள் பரிமாறாமல் அவர்களே உணவை எடுத்துக் கொள்ளவும் கூறப்பட்டனர். அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி அறையில், பார்ப்பனர்களால் சுவையான உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பாக காந்தியாரிடம் புகார் கூறப்பட்டது, உடனடியாக காந்தியார் பள்ளிக்குக் கொடுத்த நிதியை திருப்பிக் கொடுக்குமாறு கூறினார். இதற்கு விளக்கமளித்த வ.வே. சுவாமிநாத அய்யர், சில காரணங்களுக்காக இரண்டு பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமே தனியாக உணவு படைக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட நாளில் மட்டும்தான். மற்றபடி பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றாகவே ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்டு வருகின்றனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
காந்தியாருடைய சமரசம் தோல்வி
இந்தப் பிரச்சினை காந்தியாரிடம் சமாதானத்திற்காக வந்தது.
அப்பொழுது காந்தியார் என்ன சொல்கிறார் என்றால்,
அங்கேயும் ஜாதியைத்தானே கொண்டு வருகிறீர்கள். நான் ஒத்துக்கொள்ள முடியாது என்றார். இந்தத் தகராறு தீரவில்லை. காந்தியாருடைய சமரசமே தோல்வி அடைந்துவிட்டது.
Speaking at the public meeting at salem E.V.Ramasamy Naicker said, they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called ‘‘Brahmnocracy''.
இதன் தமிழாக்கம் வருமாறு:
இது தொடர்பாக சேலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசும் போது, பார்ப்பனர்களின் ஆதிக்கம் மோசமானது, ஆங்கிலே யர்களின் அரசாங்கம் முடிவதற்குள் பார்ப்பனர்களின் அதிகாரத்தை அடக்கவேண்டும். இல்லையென்றால். ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் சுதந்திரம் குடியரசாக இருக்காது -டெமோக்கரசி அது பார்ப்பனரின் ஆதிக்கம் அதாவது பிராமினோகரசியாக இருக்கும் என்று எச்சரித்தார்.
Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார் பெரியார்
பெரியார் திண்ணைப் பள்ளிக்கூடம்தான் போனவர். இங்கிலீசு மொழிக்கே ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து என்பதுதான் மிக முக்கியம். இதுவரையில் நாம் Aristocracy, Democracy என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். பெரியாருடைய சிந்தனை பாருங்கள், Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார்.
Democracy-க்கு என்ன விளக்கம்? A Government of the People; for the People; by the People என்பதுதான்.
Brahmnocracy-க்கு என்ன விளக்கம்? A Government of the Brahmins; for the Brahmins; by the Brahminsஎன்பதுதான்.
சுதந்திரம் வந்ததும் இதே நிலைதான். இவனிடமிருந்த அதிகாரம் அவனிடம் சென்றிருக்கிறது. அவனாவது கொஞ்சம் நியாயமாக நடப்பவன். ஆனால், அவனைவிட இவன் மோசமானவனாயிற்றே. எதற்கோ பயந்துகொண்டு, எதிலோ காலை வைத்ததுபோல ஆகிவிட்டதே என்று சொன்னார்.
இன்றைக்கு என்ன சூழல்? என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
- விடுதலை நாளேடு, 5.12.18
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய உரையின் ஒரு பகுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக