வியாழன், 6 டிசம்பர், 2018

நாணயத்தின் இரு பக்கங்கள்!



டாக்டர்அம்பேத்கர்அமெரிக் காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து இந்தியாவிற்கு - தனது சொந்த மாநிலமான பம் பாய்க்குத் திரும்பிய பின், தன் பிள்ளை, தன் வீடு, தன் சுற்றம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு சுயநலவாழ்வுவாழாமல்,ஒடுக்கப் பட்ட சமுதாய மக்களின் சமத்துவத் திற்கும், சம உரிமைக்கும், சம வாய்ப் புக்கும் திட்டமிட்டே செயலாற்ற அமைப்புகளை உருவாக்கினார்.

குரலற்ற (ஊமையர்களின்)வர்களின் குரல் (மூக் நாயக்) என்று மராத்தி மொழியில் அவர் நடத்திய ஏட்டில், 1924இல் தெற்குத் திருவிதாங்கூர்ராஜ்யத்தில் இருந்த வைக்கம் என்ற ஊரில், உள்ள மகாதேவர்கோயிலின்நான்குவீதி களிலும், ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப் பட்ட மக்களாகிய ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்ற கீழ் ஜாதியார் என்று ஆக்கப்பட்டவர்கள் தெருக்களில் நடக்கக் கூட உரி மையற்று இருந்த நிலையில், அதனை எதிர்த்து அங்கிருந்த அன்றைய காங்கிரசு தலைவர்கள் சத்தியாகிரகத்தை - மறியலைத் துவக்கினர்; அவர்களை அவ்வரசு கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்; அவ்வறப்போரினை ஒடுக்கி விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் தான், தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் என்ற நிலையில், சிறையில் வாடியவர்களின் கடிதம் கண்டு, உடனே அங்கே சென்று வைக்கம் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துச் சென்று தொடர் போராட்டமாக்கினார். இருமுறை சிறையும் சென்றார் பெரியார். அவர் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய சமூகப் புரட்சி வர லாற்றில்இப்போராட்டம்தான்முதல் பெரும்போராட்டம்.மனித உரிமை களைப்பெறுவதற்குநடத்தப்பெற்ற போராட்டம். காந்தியார் தந்தை பெரியாரின் இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனாலும் தந்தை பெரியார் முன்வைத்த காலை பின் வைக்கவில்லை. தந்தை பெரியார்தம் இப்போராட் டத்தினை அறிந்த டாக்டர் அம் பேத்கர் அவர்கள், அவர் அப்போது நடத்திய மூக் நாயக் ஏட்டில் பின்வருமாறு எழுதினார் என்ற செய்தியை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர் தனஞ்செய்கீர் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

...மிகவும் குறிப்பிடத்தக்க போராட்ட நிகழ்வொன்று 1924-ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில் பார்ப்பனர் அல்லாதார் தலைவரான ராமசாமி நாயக்கர் நடத்திய போராட்டம்தான் அது. வைக்கத்தில் உள்ள கோவி லைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத்தகாதோர் நுழையக் கூடாது எனும் வழக்கத்தினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாகும்; போராட்டம்ஏற்படுத்தியதார்மீக தாக்கமும், சரியானது செய்திடப்பட வேண்டும் என்ற நினைப்பும் வைதீகப் போக்குடைய இந்து மதத்தவரிடம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. குடிமைப் பொறுப் பும், புத்திசாலித்தனமும் இணைந்து உணரப்பட்டதால் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத் தகாதோர் நடந்துசெல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அம்பேத்கர் இத்தகைய நிகழ் வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். மகத் குளம் - இறங்கும் போராட்டத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு தமது பத்திரிகையில் வைக்கம் போராட்டத் தைப்பற்றி மிகவும் உருக்கமாக மன தைத் தொடும் வகையில் தலை யங்கம் தீட்டியிருந்தார். இவை குறிப் பிடத்தக்க நிகழ்வுகளாக அமைந்தன என்று எழுதப்பட்டுள்ளது.

பாபாசாகிப் அம்பேத்கர், தந்தை பெரியார் இருவரது பார்வையும் சமூக விடுதலையை நோக்கியே இருந்தது ஆகையால் தான் இருவரையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறுகிறோம்.

இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் (1956).

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 6.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக