ஞாயிறு, 30 அக்டோபர், 2016

கருநாடக மாநிலத்தில் “சுயமரியாதை நதி” இயக்கம்

 தாழ்த்தப்பட்டவர்கள் ஊர்வலத்தால் தீட்டாகி விட்டதாம்


உடுப்பிக் கோயில், சுற்றுப்புறங்களை சுத்திகரித்தது ஆர்.எஸ்.எஸ்.
கொதி நிலையில் கருநாடக மாநில ஒடுக்கப்பட்டோர்!
தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் மடத்துக்குள் செல்வதற்கான உரிமை கோரும் சலோ உடுப்பிப் பேரணி
உடுப்பி, அக்.30 உடுப்பியில் உள்ள மடத்தின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தாழ்த்தப்பட்டவர் கள் மீதான தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து, உடுப்பிக்கு செல்வோம் (சலோ உடுப்பி) எனும் தலைப்பில் 4.10.2016 அன்று பெங்களூருவில் தொடங்கி 9.10.216 உடுப்பி வரை தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள்.
உடுப்பியில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊர்வல மாகச் சென்றதால், தீட்டாகிவிட்டதாகக்கூறி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் உடுப்பி கிருஷ்ணன் கோயிலில்   தீட்டிலிருந்து உடுப் பியைப் புனிதப்படுத்துவதாகக் கூறி தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளனர்.
கருநாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு வந் துள்ள நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் கிளர்ந் தெழுந்து போராட்டத்தில் குதித்தார்கள்.
குஜராத் உனா பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஊர்வலம் நடத்தியவர்களை வழிநடத்தியவரான ஜிக் னேஷ் மேவானி உடுப்பி உள்பட ஏனைய நகரங்களின் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதி யாக உடுப்பியில் 9.10.2016 அன்று நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.
பழைமையின் பெயரால் தாழ்த்தப்பட்ட வர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் கவ் ரக்ஷாக்கள் என்போரின் வன்முறைகள் முடி வுக்கு வரவேண்டும் என்று தலைவர்கள் ஆவேசமாகப் பேசினர்.
உடுப்பியில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக 9.10.2016 அன்று  கண்டன ஊர்வலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பெருந் திரளாகப் பங்கேற்றதைத் தொடர்ந்து, உடுப்பி நகரமே தீட்டாகிவிட்டது என்று கூறி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் புனிதப் படுத்துவதற்கான அழைப்பு விடுத்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் கனகா நாடிகே

தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப் படாமல் உள்ள கிருஷ்ண மட கோயில் முகப்பு.
ஆர்.எஸ்.எஸ்- இளைஞர் பிரிவைச் சேர்ந்த தலைவரான சக்ரவர்த்தி சுலிபேலே என்பவர் கனகா நாடிகே எனும் பெயரில் புனிதப்படுத் தலுக்கு அழைப்பு விடுத்தார். புனிதப்படுத்தல் என்கிற பெயரில் முதலில் உடுப்பி நகரின் தெருக்களை கழுவுவதற்கான அறிவிப்பு வெளி யிட்டனர்.
தாழ்த்தப்பட்டவர்களின் சுவபிமான் நாடிகே
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் புனிதப்படுத் தல் செயலால் கொதிப்படைந்துள்ள தாழ்த்தப் பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் அமைப் பைத் தடை செய்ய வலியுறுத்தி, சுவபிமான் நாடிகே (சுயமரியாதை நதி) என்கிற பெயரில் 23.10.2016 அன்று மீண்டும் தாழ்த்தப்பட்டவர் களின் சுயமரியாதைப் பேரணி நடைபெறுமென அறிவித்தனர். உடுப்பி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் கே.டி.பாலகிருஷ்ணன் உடுப்பி யில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கனகா நாடிகே மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் சுவபி மான் நாடிகே ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கும் அனுமதி அளிக்கவில்லை. அதனால், தாழ்த்தப் பட்டவர்களின் சுவபிமான் நாடிகே ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் புனிதப்படுத்தல்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் புனிதப்படுத் தல் நிகழ்வாக கடந்த 23.10.2016 அன்று ஆர். எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் உடுப்பி கிருஷ்ணன் கோயில் வளாகம் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை தண்ணீர் ஊற்றிக் கழு வினார்கள். கோயிலைச் சுற்றியுள்ள கழிவறைப் பகுதிகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், சமையற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கழுவியுள்ளார்கள்.
பிஜாவர் மடாதிபதி விஷ்வேஸ்வரா தீர்த்தா மாநில அரசு அலுவலர்களிடம் புனிதப்படுத்தல் நிகழ்வு குறித்து கூறும்போது, புனிதப்படுத்தும் சடங்கினைச் செய்ய வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ். இளைஞர் அமைப்பினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டார்கள். “நமக்கு உள்ளும், புறமும் துய்மைப்படுத்த வேண்டியுள்ளது. இது குறிப்பிட்ட வகுப்பினருக்கு எதிரானதல்ல’’ என்றார்.
சுவபிமான் நாடிகே அமைப்பாளர் சியாம்ராஜ் பிர்தி
தாழ்த்தப்பட்டவர்கள் அமைப்பின் சார்பில் புனிதப்படுத்தல் நிகழ்வுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன், அதில் பங்கேற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
சுவபிமான் நாடிகே அமைப்பாளர் சியாம்ராஜ் பிர்தி கூறும்போது, “கனகா நாடிகே என்கிற நிகழ்வு குறிப்பாக  மடத்தின் வளாகத்து பகுதியில் நடைபெறவில்லை. அரசின் உத்தரவை மீறியதற்காக அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் என்ன கூறினாலும், அவர்களின் புனிதப்படுத்தல் செயலானது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டதாகும்’’ என்றார்.
ஜிக்னேஷ் மேவானி
தாழ்த்தப்பட்டவர்களின் சுயமரியாதை பேரணியாகவே சலோ உடுப்பி ஊர்வலம் நடைபெற்றது. நாடுமுழுவதும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களை, சிறுபான்மையரை ஒருங்கிணைக்கின்ற வகையிலேயே நடத்தப்பட்டது.
சலோ உடுப்பி பேரணியில் தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் குஜராத் ஜிக்னேஷ் மேவானி முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றாக உடுப்பி கோயிலில் உணவு அளிக்கப்படுகின்ற இடத்தில்  (பங்கிடி பேடா) தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனியே இடத்தை ஒதுக்கிவைத்துள்ளதை மாற்றி எல்லோருக்கும் சமமான இடத்தை அளித்திடவேண்டும் என்றும், கருநாடக மாநில அரசு கோயில் நிர்வாகிகளுக்கு இந்த முறையை மாற்றுமாறு  உத்தரவிடவேண்டும் அல்லது கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜிக்னேஷ் மேவானி குறிப்பிட்டார்.
-விடுதலை,30.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக