திங்கள், 31 அக்டோபர், 2016

விடுதலை வரலாற்றுச் சுவடுகள்


விடுதலை  ஏடு வாரம் இருமுறை ஏடாக ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் டி.ஏ.வி. நாதன் அவர்களை அதிகாரபூர்வ ஆசிரியராகக் கொண்டு அரை யணா விலையில் 1.6.35 முதல் மவுண்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலிருந்து வெளிவந்தது.
(7.6.1935 குடிஅரசு)
அதன்பின் 1.1.1937 முதல் அதே முகவரியில் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை அவர்களை அதிகாரப்பூர்வ ஆசிரியராகக் கொண்டு நாளேடாக காலணா விலையில் வெளிவந்தது.
(10.1.1937 குடிஅரசு)
3.7.1937 முதல் விடுதலை நாளேடு காலணா விலையில் அவரையே ஆசிரியராகக் கொண்டு தந்தை பெரியார் அவர்களின் பொறுப்பில் ஈரோட்டிலிருந்து வெளி வந்தது.
(3.1.1937 குடிஅரசு)
1939இல் அண்ணா அவர்கள் விடுதலை ஏட்டின் பொறுப் பாசிரியராக இருந்து, அதன்பின் 21.12.1941இல் அப்பொறுப் பிலிருந்து விலகிக் கொண்டார்.
விடுதலை ஏட்டில் வந்த ஒரு கட்டுரைக்காக 124எ பிரி வின் படியும் விடுதலை வெளி யீட்டாளர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்மீதும், ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளை மீதும் ராஜ கோபாலாச்சாரியார் அரசு வழக்குத் தொடுத்து அதன் காரணமாக இருவரும் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டனர்.
அதன் காரணமாக அ.பொன் னம்பலனார் விடுதலை யின் அதிகாரபூர்வ ஆசிரியர் பொறுப் பை 9.1.1939 முதல் ஏற்றுக் கொண்டார்.
விடுதலை ஏடுயுத்தப் பிரச் சாரத்திற்காக தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் குத்தூசி குருசாமி அவர்கள் 12.9.1943 முதல் 30.9.1945 வரை பொறுப் பாசிரியராக இருந்தார். என்.கரி வரதசாமி அதிகாரப்பூர்வ ஆசிரி யராக இருந்தார்.
விடுதலை
விடுதலை ஈரோட்டிலிருந்து வெளிவருவது இந்த இதழோடு  நிறுத்தப்பட்டிருக்கிறது.
இனி வெகு விரைவில் குடிஅரசுப் பத்திரிகை வாரப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கும். வாசகர்கள் ஆத ரிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்ளப்படு கிறார்கள்.   
(18.09.1943 விடுதலை)
யுத்தப் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட விடுதலை மீண் டும் தந்தை பெரியாரின் பொறுப் புக்கு 6.6.1946 முதல் வந்தது.
அதன் அதிகாரப்பூர்வ ஆசி ரியராக கே.ஏ.மணி (அன்னை மணியம்மையார்) இருந்தார். 20.06.1943 முதல் குத்தூசி குருசாமி விடுதலை பொறுப்பா சிரியராக இருந்தார். 2.01.1962 வரை அவர் அப்பொறுப்பில் இருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் தேதியன்று திராவிட நாடு பிரிவினை நாள் கொண்டாடுமாறு தோழர்களுக்கு தந்தை பெரியார் விடுதலையில் அறிக்கை விட் டார்.
சென்னை மாகாணஅரசு வாளா இருக்குமா? விடுதலை மீது பாய்ந்தது.
ரூ.2000 விடுதலைக்கு ஜாமீன் கட்ட வேண்டும் என்று ஏட்டின் பதிப்பாசிரியரும், வெளியீட் டாளருமான அன்னை மணி யம்மையார் அவர்களுக்கு அரசு ஆணை பிறப்பித்தது.
இந்தப் பிரச்சனையை பொது மக்களிடத்தில் தந்தை பெரியார் வைத்தார்! விடுதலையின் ஈடு இணையற்ற தொண்டின் அவசி யத்தை உணர்ந்த பொதுமக்களோ ரூ.15,200 அள்ளித் தந்தனர்.
எஸ்.குருசாமி அவர்களைத் தொடர்ந்து கி.வீரமணி அவர்கள் விடுதலை பொறுப்பாசிரியாக  (ணிஜ்மீநீutவீஷீஸீ ணிபீவீtஷீக்ஷீ) இருந்து வந்தார்.
அன்னை மணியம்மையார் அவர்களது மறைவுக்குப் பிறகு 24.03.1978 முதல் கி.வீரமணி அவர்கள் அதிகாரபூர்வ ஆசிரிய ராகவும், பிரசுரதாரராகவும் இருந்து வருகிறார்.
-விடுதலை,1.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக