வியாழன், 18 அக்டோபர், 2018

ராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு

மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம்




ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் சார்பில் ஆட்சி புரியும் முதல்வராக மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்ற வசுந்தரா ராஜே பொறுப்பில் உள்ளார். தொலைக்காட்சி பேட்டியில் மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசமைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக் கப்பட்டுள் மநு சிலைமீது  8.10.2018 அன்று கருப்பு நிற பெயிண்டை வீசி தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் அம்மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்.

பெண்களின் ஆவேசம்!


அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் களான ஷீலாபாய், காந்தா ரமேஷ் அயாரி ஆகிய இருவரும் மநு தத்துவத்தை எதிர்த்தே கருப்பு மையை மநு வின் சிலைமீது தெளித்ததாகக் கூறியுள்ளனர். மநுஸ்மிருதியுடன் கூடிய மநுவின் சிலையை அகற்றவேண்டும் என்று உரத்த குரலில் முழக்கமிட்டனர்.

நீதிமன்றத்தில் மநுவின் சிலைமீது கருப்பு மை பூசியதை கண்டித்து வழக் குரைஞர்கள் சிலர் நீதிமன்றத்துக்கே பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள்மீது வழக்கு - கைது


ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவின் சிலைமீது கருப்பு மை பூசிய பெண்கள்மீது பொதுச்சொத்துக்கு கேடு விளைவித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டு அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து ஷீலாபாய், காந்தா ரமேஷ் அயாரி இருவரையும் கைது செய்தது.

'மநு' சிலை அகற்றிட நீதிமன்ற உத்தரவு


ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத் தில் மநுவின் சிலை 28 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து, நீதிமன்ற வளாகப் பகுதியில் அமைக்கப்பட்ட மநுவின் சிலையை அகற்றிட நீதி மன்றம் உத்தரவிட்டது. விசுவ இந்து பரிஷத் தலைவர் ஆச் சார்யா தர்மேந்திரா நீதிமன்ற ஆணைக்கு இடைக்காலத் தடையைப் பெற்றார்.

வழக்குரைஞர் பஹ்லத் சர்மா


அதன்பிறகு, ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று சிலை நிறுவப்பட்டதாக வழக்குரைஞர் பஹ்லத் சர்மா கூறினார். அவர் கூறியதாவது: மநு சிலை அமைக்கப்பட்ட போது சமுதாயத்தின் சில சக்தியால் எதிர்ப்பு ஏற்பட்டது. மநு இந்துக்களுக்கு முக்கி யத்துவம் மிக்கவராக கருதப்படுகிறார். மனித குலத்தின் தந்தையாகவும் கருதப் படுகிறார். உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் நுழைந்து இதுபோன்று செயல்படுவது ஏற்கமுடியாதது. இனியும் அதுபோல் நடைபெறாமல் முடிவுக் கட்ட வேண்டும். முக்கியத்துவம் மிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு கேள்விக் குரியதாகிவிட்டது என்றார்.

பரத் மெக்வான்ஷி


தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை களுக்கான செயற்பாட்டாளர் பரத் மெக் வான்ஷி கூறியதாவது:

மநுவின் கொள்கை பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரானது. வேத காலத்திலிருந்து இன்றுவரை சமு தாயத்தில் சமத்துவம் இல்லை. ஆகவே, அவற்றை நீக்குவதற்கான அவசரமான  நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த போராட்டத்துக்கு ஆதரவாக மிகப்பெரிய அளவு மக்கள் இயக்கம் திரட்டப்பட வேண்டும் என்றார்.

-  விடுதலை நாளேடு, 14.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக