வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழினத்தின் தலைமகன் அண்ணா

அறிவும், கல்வியும், ஆங்கிலப் பேச்சும்


ஆரிய பார்ப்பனர்க்கே என்ற ஆணவம் தகர்த்து,


கூரிய மூக்கில் விரல்வைத்து அவர்கள் வியக்க,


சீரிய திறங்காட்டி பாரில் உயர்ந்தவர்!


 


சூட்சிக்குப் பெயர் பெற்ற சூத்திரதாரியை


கூட்டு சேர்த்து ‘ஓட்டு’ பெற்ற பின்,


ஆட்சியைப் பிடித்ததும் அவரை ஒதுக்கி


அய்யாவுக்கே காணிக்கையாக்கிய ஆற்றலாளர்!


 


“தமிழ்நாடு’’ பெயர் தந்து சரித்திரம் படைத்தவர்!


சுயமரியாதைத் திருமணச் சட்டம் தந்தவர்!


உலகத் தமிழ் மாநாடு சென்னையில் கண்டவர்!


உலகத் தமிழர்களை உள்ளத்துள் கொண்டவர்!


 


ஏல் பல்கலைக்கழகத்தில் எல்லோரையும் வியக்க வைத்தார்!


நூல் மார்பர் நாண ஆங்கிலத்தை ஆண்டிட்டார்!


புற்றுநோய் பற்றியதால் புகழுடம்பு அடைந்தாலும்


பற்றுகொண்ட தமிழ் இனத்தின் தலைமகனாய் வாழ்கின்றார்!


 


- மஞ்சை வசந்தன்

- உண்மை இதழ், 1-15.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக