புதன், 24 அக்டோபர், 2018

ஆங்கிலேயர் ஆட்சியில் நலச் சட்டங்கள்

பெரியார் அறிவரசாட்சியில் ஆண்டவனே இல்லை”


மேயோ கூறுவது

சென்னை ராஜதானிதான் பார்ப்பனிய ஹிந்து மதத்தின் இருப்பிடமாகும்! பூர்வீக குடிகளான கருநிறமுள்ள திராவிட மக்க ளின் இருப்பிடமும் சென்னை ராஜதா னியே!! பார்ப்பனிய ஹிந்து மதம் திராவி டர்களை சின்னாபின்னப்படுத்தி, பறையர் கள் எனவும், கீழ் ஜாதியர்கள் எனவும் கூறி அடிமையாக ஒதுக்கி வைத்ததுடன், கல்வி இல்லாதவர்களாயும் செய்து நசுக்கி வைத்தது!!!

அந்தச் சமயத்தில்தான், பிரிட்டிஷார் வந்து இந்த தேசத்தின் ஆட்சியைக் கைப் பற்றி ஆளத் தொடங்கியதால், நாட்டில் ஆழ்த்தப்பட்ட மக்களின் அகத்தினில் சில புண்கள் ஆறுதல் எய்தின! பார்ப்பனிய ஹிந்து மதக் கொடுமைகள் அடங்கி, ஏழைத் திராவிடர்கள் சற்று அமைதி எய்தினர்!! பொதுமக்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாது காப்படையும் படியான சீர்திருத்தச் சட்டங்களைப் பெற்றனர்!!! உதாரணமாக, கீழ்கண்டவற்றைக் கூறலாம்:-

(1) கி.பி. 1802இல், குழந்தைகளை கடலில் எறியும் வழக்கம் தடைசெய்யப்பட்டது -Drowning of Children into sea prohibited by Regulation IV of 1802

(2) கி.பி. 1811இல், அடிமை முறை ஒழிக்கப்பட்டது - Abolition of Slavery by Regulation of 1811.

(3) கி.பி. 1817இல், கொலை செய்த பார்ப்பானுக்கு மரண தண்டனை இல்லை என்ற மனுநீதி நீக்கப்பட்டு, எல்லோருக்கும் மரண தண்டனை உண்டு என விதிக்கப் பட்டது - Criminal law made applicable to all Castes. Exemption of Brahmins done away with by Regulation XVII of 1817 Section XV.

(4) கி.பி. 1820இல், கடன் கொடுத்த பார்ப்பான் உண்மையான, அல்லது பொய் யான கடன்களை வசூலிப்பதற்காக, உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது என்ற மிரட்டல் வழக்கம் தடை செய்யப்பட்டது - Brahmins prohibited by Regulation VII of 1820.

(5) கி.பி. 1829இல், கைம்பெண்களை உயிரோடு எரிக்கின்றதான ‘சதி’ அல்லது, உடன் கட்டை ஏறுதல் என்ற பழக்கம் தடை செய்யப்பட்டது -Burning of Widows alive prohibited by Regulation XVII of 1829.

(6) கி.பி. 1833இல், மதம் - நிறம் - பிறப்பு - இடம் காரணமாக, ஒருவருக்கு உள்ள உரிமைத்தடைகளை நீக்கும் வகையில் சட்டம் செய்யப்பட்டது - Disablities Removal Act - The Government of India Act 1833.

(7) கி.பி. 1840இல், அரசு உத்தியோகங்கள் ஒரே வகுப்பினரால் ஆக்கிரமிக்கப்படக் கூடாது. எல்லா ஜாதியினருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் - Collectors Should be able to see that the Subordinate appointments in their districts are not monopolised. Endeavour Should always be made to divide the principal appointments in each district among the Several Castes-Board Standing order No. 125 of 1840.

(8) கி.பி. 1858இல், முழுவதுமாக பிரிட் டிஷ் அரசாங்கத்தின் செலவில் நிர்வகிக் கப்பட்ட எல்லாப் பள்ளிகளிலும், எல்லா ஜாதியினரும் படிக்க உரிமை உண்டு. இவற் றில் யாரும் எவ்வித பேதமும் பாராட்டக் கூடாது -  British Press Note of 1858.--

(9) கி.பி. 1904இல், "இந்தியப் பல்கலை கழகச் சட்டம்” இயற்றப்பட்டு, பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைக ளும், உயர்நிலைக் கல்வி வரையில் பயில் வதற்குரிய வாய்ப்பையும், வசதியையும் பெறும்படி செய்யப்பட்டது,

(10) கி.பி. 1926இல், பார்ப்பனிய ஹிந்து மதக் கொடிய கொலை பாதகச் சாஸ்திரச் செயலாகிய இளஞ் சிறுமிகளை-முதற் பூப்புக்கூட ஆகாத முன்னரே-திருமணம் செய்து கொடுத்து விடும் கொடுமையைத் தடை செய்யும் படியானச் ‘சாரதாச் சட்டம்' இயற்றப்பட்டது.

(11) கி.பி. 1926 முதல், 1930 வரையில், சென்னை ராஜதானியில், பிரிட்டிஷ் -இந்திய அரச பிரதிநிதியின் கீழ் ஆளுன ராக இருந்தவரின் தலைமையில், நடை பெற்ற சுயேச்சை மந்திரி சபை, கோவில் களுக்குப் பெண்களை பொட்டுக் கட்டி விட்டுத் தாசிகளாக - விபசாரிகளாக -வளர்த்து வந்தப் பார்ப்பனிய ஹிந்து மதத்தின் அசிங்கமான ஒழுக்கக்கேட்டை ஒழித்துக் கட்டும்படியான ‘தேவதாசி தடை' சட்டம் இயற்றப்பட்டது.]

இவற்றால், திராவிட (தமிழ்) மக்களும் காலக் கிரமத்தில், விழிப்புணர்ச்சி பெறத் தொடங்கினர்...”

மேற்கூறியவற்றால், பார்ப்பனச் சாயம் முற்றிலும் வெளியாகவில்லை. இன்னும் சொல்ல வேண்டியவை எத்தனையோ உள்ளன. இவற்றை எல்லாம் சொல்லப் புகின் மிகவும் விரியும். ஆதலால் அதைப் பற்றி நன்றாக அறியவேண்டியவர்கள், தோழர் அய்யாமுத்துவால் எழுதி வெளி யிடப்பட்டுள்ள 'மேயோ கூற்று மெய்யா-பொய்யா?" என்னும் புத்தகத்தில் காணலாம்...

இந்நாட்டில், உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த கல்வி அறிவு பெற்று, உயர்ந்த நிலையில் இருப்பவர் முதல், சாமான்ய ஏழைகள் வரையில் உள்ள பல குடும்பத்தின் பெண்களைப் ... தாசிகளாக இருக்க, இந்து மதம் செய்து விட்டது! நாற்பது- ஐம்பது லட்சம் ஜனத்தொகை கொண்ட தேசத்தைக் கட்டியாளும்... பார்ப் பானேதான் சம்மந்தமாகக் கொள்ள வேண் டும் என்று ஹிந்து மதம் இன்னும் இடங் கொடுத்துக்கொண்டிருக்கிறது!! பெரிய பூபாகத்தை கட்டியாண்டிடினும், மேல்நாடு, பல சென்று கல்வி கற்றிடினும், பாமரரின் பணத்தைத் தன் எடைக்கு எடையாகத் தராசிலிட்டுப் பார்ப்பானுக்கு வழங்கி ராஜ ரிஷி பட்டம் பெறும் ஆள்வார் மகாராஜாக் களையும் ஹிந்து மதம் வைத்துக் கொண் டிருக்கிறது!!! என்னே இம்மதப் பெருமை? என்னே இம் மதத்தால், பார்ப்பனர்க்கு இருக்கும் ஏக போக உரிமை?? என்னே இருபதுகோடி மக்களை, இருபதாம் நூற்றாண்டிலும், இப்பார்ப்பனர் ஏமாற்றி வரும் திறமை???

...பார்ப்பனருடைய திறமைக்குக் காரணமே, திராவிட (தமிழ)ர்களுடைய மூடபக்தியேதான்! உண்மையிலேயே, பார்ப்பனிய ஹிந்து மதம், திராவிடர் (தமிழர்) களுடைய மதம் அன்று. இதை தக்க ஆராய்ச்சிகளுடன் தெளிவாகத் தோழர் விவேகி அவர்கள் இந்நூலில் விளக்கி யுள்ளார்... எனவே, தோழர் விவேகி அவர் களால், இனியும் இப்படிப்பட்ட பல நூல்கள் வெளியாக வேண்டும் என்று ஆசைப்படு கிறோம்.

1946-ஜூலை    1.ஈ.வெ.ராமசாமி

ஈரோடு

குறிப்பு: 1. எல்லா ஜாதியினரும், கல்வி கற்கும் உரிமை, அக்காலத்தில், பார்ப்பனிய ஹிந்து மதத் திமிரால் பாதிக்கப்பட்டிருந்ததால், இந்தச் சீர்திருத்த உத்திரவு பயன்படாது போயிருந்தது.

2. இந்நூலின் பெரும் பகுதிகள், “பெரியார் பஞ்ச சீலம்” என்ற தலைப்பில் கையெழுத்துப் பிரதியாக இருந்தபோதே, பெரியாரிடம் கொடுத்துப் பெற்ற முகவுரையின் சில பகுதிகளாம்.

- எஸ்.டி.விவேகி, பதிப்பு: 1983

- விடுதலை ஞாயிறு மலர், 7.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக